கடந்த ஒரு மாதமாக ஆந்திரா எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டம் என்பது எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பது மீண்டுமொரு முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் போராடியவர்களின் நோக்கம்...? தெலுங்கானா தனிமாநில கோரிக்கை அண்மையில் எழுந்ததல்ல. சந்திரசேகர ராவ் பதினோரு நாள் உண்ணாவிரதமிருந்ததால் தெலுங்கானா கிடைத்ததாக அவரது பக்தர்கள் புளகமடைந்து கொண்டிருந்தபோது, பிற மாநிலங்களிலும், ஆந்திராவின் பிற பகுதிகளிலும் தனிமாநில கோரிக்கைகள் திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டன. ஆந்திராவில் பின்னர் அதுவே தெலுங்கானாவிற்கு எதிர்ப்பாகவும், ஒருங்கிணைந்த ஆந்திரா என்றும் மடைமாற்றப்பட்டது. மக்கள் ஒரு பிரச்சனையை உணர்ந்து … தெலுங்கானா: அன்றோடு இன்று பொருந்துமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: திசெம்பர் 2009
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்
கம்யூனிசம் என்றாலே ஏகாதிபத்திய எடுபிடிகளுக்கும், மதவாதிகளுக்கும் வேப்பங்காயாய் கசக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சியை சாதிப்பதற்கும் சமத்துவத்தை கொண்டுவருவதற்கும் கண்ட இழப்புகளும் அதைக்கண்டு கலங்காத லட்சிய வேகமும் சாதாரணமானவையல்ல. அவர்கள் மீது தூற்றப்படும் அவதூறுகளும் கட்டப்படும் கட்டுக்கதைகளும் கொஞ்சமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவை அத்தனையும் மீறித்தான் மக்கள் மத்தியில் கம்யூனிசம் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சுரண்டலின் வேகமும் தீவிரமும் மக்களை கம்யூனிசத்தை நோக்கி திருப்பியுள்ளது. முதலாளியம் வீழ்ந்தே தீரும், கம்யூனிசம் நிச்சயம் வெல்லும். இது வெற்று முழக்கமல்ல … ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 10 நாம் வசிக்கும் பூமியில் முக்கால் பகுதி கடலாகவும் கால்பகுதி மட்டுமே நிலமாகவும் இருக்கிறது. முக்கால் பாகமுள்ள கடலை நம்முடைய வசதிக்காக கடல்களாகவும், பெருங்கடல்களாகவும் பிரித்திருக்கிறோம். சில கடல்கள் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு எல்லைகளுடைய தனிக்கடலாக இருக்கும் மத்திய தரைக்கடலைப்போல. இன்னும் சில கடல்கள் மூன்றுபுறமும் நிலங்களாலும் ஒருபுறம் மற்றொரு கடலாலும் சூழப்பட்டிருக்கும் வங்காள விரிகுடா போல. பொதுவாக கடல்களின் எல்லை என்றால் நிலப்பரப்பு தான். நிலப்பரப்பு அல்லாமல் கடல்களுக்கு … கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.
குடை என்றதும் நமக்கு மழைதான் நினைவுக்கு வரும் ஆனால் குடையை 'ஸம்சியாஹ்' (வெயில் தாங்கி)என அழைக்கும் சௌதியின் பண்பாடு மழைக்கும் அவர்களும் உள்ள உறவை நமக்கு விளக்கும். கடந்த நவம்பர் இறுதியில் சௌதியின் வணிகத்தலைநகரான ஜித்தாவில் மழை கொட்டித்தீர்த்தது. கிடைக்கும் இடங்களிலெல்லாம் மழைநீர் புகுந்தது. ஜித்தாவின் புறநகர்ப்பகுதியில் அந்த இடத்தையே தலைகீழாக புறட்டிப்போட்டதுபோல் உருக்குலைந்து கிடந்தது. பல வீடுகள் இடிந்து சரிந்தன, சாலைகள் இருந்த சுவடின்றி அரித்துச்செல்லப்பட்டன. மழைவெள்ளத்தில் சருகைப்போல் அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள் குப்பையைப்போல் குவிந்து கிடந்தன. … சௌதியின் மழைக்கொலைகளை விட யெமனின் எல்லைக்கொலைகள் அடர்த்தியானவை.-ஐ படிப்பதைத் தொடரவும்.
பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 9 குரான் அறிவியல் என்ற சொற்களை நாம் கேட்டவுடன் பூமி உருண்டையா? தட்டையா? எனும் வாதம் தான் நம்முள் எழும். அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு விளக்கம் விளக்கமாக தந்துகொண்டிருக்கிறார்கள். பூமி உருண்டை என்பது அண்மைக்கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் பூமி தட்டையானது என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் பூமி உருண்டை எனக்கூறியிருப்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள ஒரு மனிதனால் … பூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா? மனிதனா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அனைவருக்கும் அருள் பாலித்த லிபரான் அறிக்கை
மாட்சிமை தாங்கிய ஆட்சிமை வழங்கும்(!) பெருமை மிகு பாராளுமன்றத்தில் வெளியிடும் முன்பே நாளிதழ்களில் வெளியாகி விட்டது லிபரான் அறிக்கை. அடுக்குமா இது, இந்தியாவுக்கே தலைகுனிவல்லவா எகிரிக்குதிக்கின்றன ஓட்டுக்கட்சிகள். காட் ஒப்பந்தம் முதல் இப்போதைய அணு ஒப்பந்தம் வரை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே நடப்புக்கு வந்தபோதெல்லாம் அடங்கியிருந்த கோபம் லிபரான் அறிக்கையில் பொங்கி வழிகிறது. 17 ஆண்டுகள் 48 முறை கால நீட்டிப்பு சற்றேறக்குறைய 8 கோடி ரூபாய் செலவு இவ்வளவையும் செரித்துவிட்டு லிபரான் அறிக்கை தந்திருக்கும் சாறு வாஜ்பாய், … அனைவருக்கும் அருள் பாலித்த லிபரான் அறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.