இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 12
கீழ்காணும் குரானின் வசனங்களை கூர்மையாக படித்துப்பாருங்கள்.
(திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக… குரான் 86:11
……..வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான். குரான் 6:125
இவைகளெல்லாம் விண்வெளி குறித்து குரானில் கூறப்படும் வசனங்களில் சில. மேற்கண்ட இந்த வசனங்களிலெல்லாம் மிகப்பெரிய அறிவியல் உண்மை சொல்லப்பட்டிருப்பதாக உங்களுக்கு தெரிகிறதா? ஆனால் இன்றைய அறிவியல் கண்டுபிடித்துள்ள அரிதான பல உண்மைகளை இந்த வசனங்கள் உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக மதவாதிகள் கூறுகிறார்கள்.
வசனம் 86:11 ஐ எடுத்துக்கொள்வோம் ‘பொழியும் மழையை உடைய’ என்பதில் ஒன்றுமில்லை. அதற்கு விளக்கமாக அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் திரும்பத்திரும்ப என்பதில் தான் மதவாதிகள் கண்டுபிடித்த அறிவியல் ஒழிந்துகொண்டிருக்கிறது. மழை திரும்பத்திரும்ப வருகிறது, இதில் என்ன அறிவியல் இருக்கிறது? ஆனால் பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பில் இது திரும்பத்தரும் வானம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் எதை திரும்பத்தருகிறது? மழையை திரும்பத்தருகிறது. ஆயிரத்து நாநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாருக்காவது தெரியுமா? ஒருவருக்கும் தெரியாது. மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது.
அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான். ஆனால் வானம் திருப்பி அனுப்புவதாக கூறிக்கொண்டு அதையே மாபெரும் அறிவியல் உண்மையாக கூறுவதை என்னவென்பது. பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின் பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ.
வசனம் 55:33 ல் ‘வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல’ என்று வருவதை இன்று மனிதன் விண்வெளிக்கு சென்றுவருவதோடு பொருத்தி இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குரான் கூறிவிட்டது என்று இன்னொரு அறிவியலை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வசனத்தில் அதிகாரம் என வரும் சொல்லை ‘வல்லமையும் என் அனுமதியும்’ என்று விளக்குகிறார்கள். அதாவது அல்லா அனுமதிக்கும் காலத்தில் ஒரு குறிப்பிட்ட வல்லமையை பெற்றபிறகு தான் செல்லமுடியும் என்று பொருளாம். இந்த வல்லமை தான் விடுபடு வேகம் என்று கூறுகிறார்கள். பூமியின் புவியிர்ப்பு விசையை மீறி நாம் விண்ணில் செல்லவேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் மட்டுமே புவியை தாண்டிச் செல்லமுடியும். அதற்கு குறைவான வேகத்தில் சென்றால் புவியின் காற்று மண்டல எல்லைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்க வேண்டியது தான். இந்த விடுபடு வேகம் குறித்த அறிவியலைத்தான் அந்த வசனம் சொல்கிறது என்று சத்தியம் செய்கிறார்கள். இந்த வசனத்தில் வானங்கள் என்றும் வருகிறது. ஒருவேளை நம்முடைய பிரபஞ்சத்தைப்போல் இன்னும் பல பிரபஞ்சங்கள் இருந்து அவைகளுக்கும் மனிதன் போய்வருவான் என்று குரான் கூறுகிறதோ. நம்பமுடிந்தவர்கள் நம்பிக்கொள்ளலாம்.
அடுத்த வசனமான 6:125 ல் அல்லா ஐன்ஸ்டினுக்கு முன்பே சார்பியல் கோட்பாட்டை கற்றுத்தருகிறார். இந்த வசனம் ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதும் மறுப்பதும் என்னுடைய விருப்பமின்றி நடைபெற இயலாது என அல்லா கூறுவதாக வருகிறது. அல்லா ஒருவனின் இதயத்தை விரித்துவிட்டால் அவன் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வான். அவனின் இதயத்தை சுருக்கிவிட்டால் அவனால் இஸ்லாத்தை ஏற்கமுடியாது. இது தான் இந்த வசனம் கூறும் செய்தி. இதில் இதயத்தை சுருக்குவதற்கு ஒரு உவமை கூறப்படுகிறது, வானத்தில் ஏறிச் செல்பவனைப்போல என்று. இந்த உவமையில் தான் விஷயம் இருக்கிறது. ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாட்டில் ஒரு விதி வருகிறது. ஒரு பொருளின் விரைவைப் பொருத்து அதன் உருவம் சுருங்கும் ஆற்றல் கூடும். உருவம் சுருங்குவடையும் ஆற்றல் கூடுவதையும் சாதாரண வேகத்தில் உணரமுடியாது. ஒளியின் வேகத்திற்கு (ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிமி) அருகில் விரையும்போது தான் அதை உணர முடியும். இதுதான் ஐன்ஸ்டினின் பொது சார்பியல் கோட்பாடு. இந்த அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா? சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார். இதில் சுருங்குதல் என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நெஞ்சு அல்லது இதயத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லை. இதயம் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு உறுப்பு எனும் அறிவியல் தெரியாமல் இறக்கப்பட்ட வசனமல்லவா இது? ஒரு பாதியை மட்டும் எடுத்துக்கொண்டு சார்பியல் கோட்பாடாக்கி விட்டார்களே, மறு பாதியையும் எடுத்துக்கொண்டால் இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஆற்றல் கூடிவிடும் என்றாகிறதே. ஒருவேளை அல்லா அப்படித்தான் கூறியிருப்பாரோ.
புதிதாக வெளிவரும் குரானின் மொழிபெயர்ப்புகள் அறிவியல் கூறுகளை உள்ளடக்கிய வசனங்களாகவே வெளிவருகின்றன. பழைய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் புதிய மொழிபெயர்ப்புகளை செய்பவர்கள் அறிவியல் இல்லாமல் வெறும் ஆன்மீக குரானை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யவியலாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.
எல்லா மயிரையும் திருப்பி அணுப்பும் வானம், ராகட்ட மட்டும் ஏன் வெளிய போக விட்டுருதாம் ??? அதுக்கு இன்னும் வசனம் இல்லையா ?
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான்
http://www.wrongdiagnosis.com/symptom/recurring-swollen-heart.htm
இதயம் வீங்கினால், உடனே முஸ்லீம் ஆகிவிடலாம் என்று அல்லாஹ் இறக்கியுள்ளார்.
ஆனால் மடத்தனமான விஞ்ஞானிகள் அதனை ஏதோ பிரச்னை என்று கூறுகிறார்கள்.
மருத்துவ விஞ்ஞானிகள் கூறுவதை நம்பவேண்டாம்.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான்
இதயம் வீங்கினால் உடனே முஸ்லீம் ஆகிவிடலாம் என்று அல்லாஹ் இறக்கியுள்ளார்.
ஆனால் மடத்தனமான விஞ்ஞானிகள் அதனை பிரச்னை என்று சொல்கிறார்கள்.
http://www.wrongdiagnosis.com/symptom/recurring-swollen-heart.htm
மரபணு பரிணாமவியலை நம்பும் மடத்தனமான விஞ்ஞானிகள் சொல்வதை நம்பவேண்டாம்.
“முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு. ஒருவேளை அல்லா முகம்மதுவுக்கு கொடுக்கும் முன்பே நப்பூதனாருக்கு கொடுத்துவிட்டாரோ”
உங்கள் கணிப்பு தவறு செங்கொடி அவர்களே. அல்லாவினால் அனுப்பப்பட்ட ஒரு லட்சம் தூதர்களில் ஒருவராக நப்பூதனார் இருக்கக்கூடாதா என்ன!ஏன் சிவன் கூட ஒரு தூதராக வந்திருக்கலாம், பார்ப்பனர்கள் சதிசெய்து அவரைக் கடவுளாக மாற்றியிருக்கலாமே! கூட்டி கழித்துப் பாருங்கள் எல்லாம் சரியாக வரும். ஆனால் சிந்திப்பதை மட்டும் நிறுத்திவிடாதீர்கள். நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு புலப்படும் நேர்வை மார்க்கம் இஸ்லாம் என்று.
செங்கொடி
வாதத்திற்கு வருகிரேன் என்று சொல்லிவிட்டீர்கள் பின் எதற்கு எழுதுகிரிகள்? எல்லாவற்றையும் சகோதரர் pj விடம் கேட்டுக்கொள்ளக்குடதா?
அன்புள்ள செங்கொடிக்கு,
நண்பர் அப்துல் காதர் சொல்வதும் ஒருவகையில் ஏற்று கொள்ளக்கூடியதே.
நீங்கள்தான் விவாதத்துக்கு செல்வதாக ஒப்புகொண்டுவிட்டீர்களே பிறகு ஏன் இன்னும் குரான் பற்றி கட்டுரைகள் எழுதிகொண்டிருக்கின்றீர்கள்.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் விவாதம் செய்வதாக ஒப்புகொண்டு விட்ட பிறகு மீண்டும் குரான் பற்றி கட்டுரைகள் எழுதிவருவது நாகரீகமற்ற செயலாக எமக்கு படுகின்றது.
நேரடி விவாதம் மட்டும்தான் செல்லும்னா, கடவுள் நேரடியா வந்து சொன்னாதானே செல்லும். குரான் கடவுளால் அருளப்பட்ட எழுத்துதானே. அது போல இதுவும் ஒரு வகையான கருத்துதானே.
நேரடி விவாதம் என்பது முரண்பாடாக விதண்டாவாதமாகப்படுகிறது.
பீஸ் சொன்னது
“”நேரடி விவாதம் மட்டும்தான் செல்லும்னா, கடவுள் நேரடியா வந்து சொன்னாதானே செல்லும். குரான் கடவுளால் அருளப்பட்ட எழுத்துதானே. அது போல இதுவும் ஒரு வகையான கருத்துதானே.
நேரடி விவாதம் என்பது முரண்பாடாக விதண்டாவாதமாகப்படுகிறது.”””””””””
என்னே ஒரு கண்டுபிடிப்பு.
குரானை கடவுள் எழுதி நேரடியாக முகம்மதுவிடம் கொடுக்கவில்லையே.அதனால் நேரடி விவாதம் முரண்பாடாகாது.
//எல்லாவற்றையும் சகோதரர் pj விடம் கேட்டுக்கொள்ளக்குடதா?//
ஏன் அவரு இங்கே வந்து பதில் சொல்ல மாட்டாரா!?
ஹலோ செங்கொடி,
நீங்க எமகாதக கில்லாடிய்யா. நான் என்னமோ சாதாரணமா நினச்சிபுட்டேன்.
விவாதத்துக்கு ஆறு மாசம் டயம் சொல்லிட்டு அதுக்குள்ளார உங்கள் கற்பனை கோட்டையை முழுசாய் கட்டி(எழுதி)முடித்து விடலாம் என்ற உங்க மாஸ்டர் பிளான் சூப்பருங்க. செங்கொடியா கொக்கா. இது பிஜேக்கு செம கோக்குமாக்குதான் போங்க.
என்ன இது சுத்த பேத்தலாக இருக்கிறது. உங்களிடம் விவாதத்திற்கு வருவதென்றால் அதற்குமுன் எதையும் எழுதக்கூடாதா என்ன. என்ன சொல்வார் உங்கள் pj, வசனங்களுக்கு முலாம் பூசுவதைத் தவிர. எதை கேட்பது pj விடம். என்ன கேட்பது pj விடம். கால்கள் கருகி கைகள் காய்த்து ஈரல் வெந்து குருதி சிந்தி இவ்வுலகை இயக்கிய இயக்கொண்டிருக்கின்ற எம் உழைக்கும் மக்களின் துயரத்தையா? மதவாதிகளே இதற்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்? மறுமையில் சொர்க்கம். அங்கு யார் செல்ல முடியும்? முஸ்லீமா? காபிரா? உழைக்கும் மக்களில் இப்புதிய வேறுபாட்டை புகுத்தியிருப்பதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறது உங்கள் மதம். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்துபோன காபிருக்கு என்ன சொல்கிறது உங்கள் மதம். ஜகாத்தா. யாருக்கு கொடுப்பது? முஸ்லீமுக்கா? காபிருக்கா? உழைப்பவனிடத்தில் ஏனிந்த வேற்பாட்டை காட்டுகிறது உங்கள் மதம்? வேறென்னதான் கொடுக்கச் சொல்கிறது, காபிருக்கு? தருமமா. யாருக்கு யார் கொடுப்பது பிச்சை. அவர்களின் உழைப்பைச் சுரண்டி அவனின் பிச்சையில் வாழ்வது நீங்கள்தான். அவன் போட்ட பிச்சையிலேயே அவனுக்கு பிச்சை போடும் கனவான்களே! கருத்து அவர்களை பற்றிக்கொள்ளும் வரை உங்களுக்கும் உங்கள் கடவுளுக்கும் நல்லகாலம்தான்.
.
குரான் சரியா தவறா என்று குரானை அருளிய இறைவனிடம் மட்டுமே உரையாட முடியும்.
இறைத்தூதர் முகம்மது உட்பட அனைவரும் குரானின் வாசகர்களே , தவிர உருவாக்கியவர்கள் இல்லை.
ஒரு மனிதன் குரானை சரியென்றோ, தவறு என்றோ, எப்படி யாரிடம் போய் நிரூபிப்பது?
செங்கொடியின் கருத்து தவறு என்றால் அவரின் கருத்தை மாற்றிக்கொள்ளும் அதிகாரம் சுதந்திரம் அவருக்கு உண்டு.
குரான் அறிவியல் கருத்துகள் சரியா தவறா என்று அறிவியலார்களிடம் விவாத்திக்க அல்லது ஆராட்சி செய்ய குரானை மாற்றும் அதிகாரம் உள்ள ஒருவரே வாதடமுடியும்.
ஏன் என்றால் தவறு என்று நிரூபித்துவிட்டால் குரானை மாற்றும் அதிகாரம் அவருக்கு வேண்டும்.
இறைவனைத்தவிர யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை எனும்போது பேசி எந்தப்பிரயோசனமும் இல்லை.
ஏன் என்றால் இறைவன் தூதர் முகம்மதுவிற்குப்பிறகு இறவைன் யாரிடமும் பேசவில்லை. இப்படியிருக்க யாரிடம் போய் , அய்யா இது தப்பு என்று சொல்வது?
சவால் விட்டவர் களத்தில் இருக்க வேண்டாமா? அவரின் தொண்டர்களிடம் பேசி என்ன பயன்?
**
குரான் சொன்னதை சரி என்று சப்பைக்கட்டு கட்ட முனைவதற்கு பெயர் ஆராய்ச்சி அல்ல. அது சரியா? தவறா ?
“தவறு என்றால் மாற்றலாம்” என்று மாற்றும் அதிகாரம் உள்ளவர் மட்டுமே அறிவியலார்களிடம் பேச முன்வர வேண்டும். அப்படி குரானை மாறும் அதிகாரம் உள்ளவர் நேரடியாக அடுத்த நோபல் மாநாட்டில் உலக அறிவியலார்களுக்கு சவால் விடலாம்.
மற்றவர்கள் அனைவரும் தங்கள் ஆதரவு எதிர்ப்பு கருத்துகளை பாப்பையா பட்டிமன்றம் போல் பேசலாம். பொழுதுபோகுமே தவிர ஒன்றும் மாறாது.
.
அய்யா கார்த்திக் செங்கொடி போன்ல சொல்லட்டும் நீங்க பதிவா எழுதி போடுங்க.லாஜிக் சரியா இருக்கா
செங்கொடியின் நண்பர் ஷேக் தாவூத் தளத்தில் படித்தது. இதற்கு செங்கொடியின் பதில் என்ன?
ஆனால் கம்யூனிசத்தை வாழ்வியல் சித்தாந்தமாக ஏற்றுக் கொண்ட பதிவர் செங்கொடி (ம.க.இ.க வை சார்ந்தவர்) இத்தகைய நேரடி விவாதத்திற்கு வருவதற்கு சம்மதித்திருக்கின்றார். http://onlinepj.com/vimarsanangal/vivathakalam// . வெளிநாட்டில் இருப்பதால் விவாதத்திற்கு வருவதற்கு குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவதாகுமென சொல்லியிருக்கின்றார். இது ஏற்கத்தக்க காரணம் என்றாலும் இத்தகைய காலக்கெடுவை செங்கொடி தான் விதித்திருக்கின்றார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். செங்கொடி உண்மையாளராக இருப்பின் இஸ்லாத்தைப் பற்றிய தமது விமர்சனத்தை நேரடி விவாதத்தில் தான் வைக்க வேண்டும். அது தான் கொள்கை பிடிப்புள்ளவர்களுக்கு அழகு. ஒரு வேளை அத்தகைய இஸ்லாமிய விமர்சனம் பண்ணித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் செங்கொடிக்கு இருக்குமேயானால் அவர் முதலில் நேரடி விவாதத்தில் கலந்து கொண்டு விட்டு பிறகு எழுதட்டும். இது தான் உண்மையாளர்களுக்கு அழகு செங்கொடி.
கம்யூனிசமே உலகை உய்விக்க வந்த சித்தாந்தம் என்று போற்றி கொண்டாடுகின்ற ம.க.இ.க வின் புதிய ஜனநாயகமும் வினவு இணையதளமும் அவ்வப்போது இஸ்லாமிய கோட்பாடுகளை எந்த அடிப்படையுமின்றி விமர்சனம் செய்து வருகின்றன. இவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டைக் குறித்து முஸ்லிம்கள் எந்த ஒரு உரையாடலுக்கும் முன்வராத போது தான் இவர்கள் வெளியில் விமர்சிக்க வேண்டும். இவர்களுடன் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விவாதிக்க தயார் (விவாத விபரம்) என்ற நிலையில் அவர்களுடன் விவாதிக்க வேண்டும் அல்லது இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனத்தை செய்யாமல் இருக்க வேண்டும். இது தான் பிழைப்புவாதமற்ற குழுவிற்கு அழகாகும். கோழைகள் போன்று நேரடி விவாதத்திற்கு வராமல் வெளியில் நின்று விமர்சனம் செய்வது சங்கபரிவார்களுக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமுமில்லை என்ற எண்ணத்தை வலுப்படுத்தவே செய்யும். ஒருவேளை செங்கொடி விவாதத்திற்கு வரும் போது தான் நாங்களும் வருவோம் என்ற பதிலை புதிய ஜனநாயகமும் வினவு இணையதளமும் சொல்லுமேயானால் நேரடி விவாதத்திற்கு வரும் வரை எத்தகைய விமர்சனத்தையும் வைக்காமல் இருப்பதே நேர்மையான செயலாக இருக்க முடியும். பலரை நேர்மையற்றவர்களென்றும் பிழைப்புவாதிகளென்றும் முத்திரை குத்தும் புதிய ஜனநாயகம் இதழும் வினவு இணையதளமும் தங்களை நேர்மையானவர்களென்றும் பிழைப்புவாதிகளல்ல என்றும் நிரூபிப்பார்களா?
அவர்களுடைய கற்பனை கோட்டைகளை எவ்வளவு தூரம் எழுப்புகிரார்களோ எழுப்பட்டுமே. பின்பு ஒரு நாள் அந்த விவாத நாள் நொறுங்கி தூள் தூளாவதை அவர்கள் காணத்தானே போகிறார்கள். அதை நிச்சயம் இந்த உலகம் அறியும், அறியச் செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
சகோதரர்களே, தோழர் செங்கொடி விவாதத்திற்கு வருவதாக ஒத்துக் கொண்டுள்ளார். இந்த தொடரை நிறுத்துவதாக சொல்லவில்லை தான். நாம் ஏன் அதை தடுப்பானேன். அவர் எல்லா தலைப்பிலும் இந்த தொடரை முடிக்கட்டுமே. இஸ்லாமிய வரலாற்றில் இதுபோல் பன்மடங்கு எதிர்ப்பாளர்களை காணத்தானே செய்கிறோம். இஸ்லாம் ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களை கொண்டே அதிகம் வளர்ந்தது என்பது வரலாறு. இவர்கள் வீழும் அந்த நாள் இஸ்லாமிய வரலாற்றில் மற்றொரு பொன்னாளாக பொறிக்கப்பட போவது திண்ணம்.
யாஅல்லாஹ், அந்த விவாத நாள் கம்யூனிசத்திற்கு சாவுமணி அடிக்கும் நாளாக ஆக்கியருளுவாயாக.
தோழர் செங்கொடி அவர்களே நீங்கள் தொடருங்கள். இன்னும் கொஞ்சம் நாளைக்கு.
இனிமை.
காமெடி பீஸ்களா!. கோழைகளைப் போல் ஏன் பிதற்றுகிறீர்கள். pj உடன்தான் நேரடி விவாதம் என்று முடிவாகிவிட்டதல்லவா, மற்ற சில்லறைகள் இங்கு எழுத்துவிவாதத்தில் கலந்துகொள்வதுதானே! ஏன் சரக்கில்லையா? ஏன் பயப்படுகிறீர்கள்? தைரியம் இருந்தால் இங்கு விவாதத்தில் கலந்துகொள்ளுங்களேன் பார்ப்போம்!
தோழர் செங்கொடி,
விவாதத்திற்கு ஒற்றுக் கொண்ட ஒரு விசயத்தில் அதிகப்படியான உங்கள் கேள்விகளை வெளியிட்டுக் கொண்டு இருந்தால், அது எதிர் அணிக்கு நல்ல வாய்ப்பாக அமையாதா?
உங்கள் கேள்விகளை விவாதத்தில் வைக்கும் பொழுது அதற்கு ஒரு வலிமை கிட்டுமே?
இஸ்லாத்தை கேள்விக்கு உட்படுத்தும் உங்களின் உக்தி நன்றாகத்தான் இருக்கின்றது. அதில் உங்களின் அறியாமையும் வெளிப்பட்டு விடுகின்றது. அதனால் தான் சொல்கின்றேன். விவாதத்தில் கேள்விகளை அடுக்குவது நலமாக இருக்கும். மற்றும் விவாதத்தை ஆவணப்படுத்துங்கள்.
நன்றி,
அப்துல் குத்தூஸ்.
//PJ உடன்தான் நேரடி விவாதம் என்று முடிவாகிவிட்டதல்லவா..//
அறிவுக்கொழுந்துகளா யார் காமடி பண்ணுகிறது. இங்கு யாராவது விவரமாத்தான் பின்னூட்ட இடுவார்கள் என்று எதிர்பார்கிறேன்…. ம் பாப்போம்.
சில்லரைகளிடமிருந்து எதிர்பார்க்க கூடாது தான். தப்பு தான்.
விவாதம் முடிவாகிவிட்டபோது இங்கு தொடர்வது சரியா என்று தான் சகோதரர்களின் கேள்வி. ஏன் என்றால் கம்யூனிசம் என்கிற கற்பனை கோட்டை நொறுங்கி தூள் தூளாவதை உலகம் அறியத்தரனும் என்று தான். இந்த சில்லறைகளை வீழ்த்துவதில் எமக்கு என்ன பெருமை?
//செங்கொடி விவாதத்திற்கு வரும் போது தான் நாங்களும் வருவோம் என்ற பதிலை புதிய ஜனநாயகமும் வினவு இணையதளமும் சொல்லுமேயானால்…//
சகோதரர் ஷாஜகான் எழுதியது.
தொடை நடுங்கிகளா, ஏன் அவர் வரை தான் காத்திருக்கனுமோ? உங்கள் யாரிடமும் சரக்கு இல்லையோ?
கீழ்காணும் குரானின் வசனங்களையும் அதற்கு செங்கொடியின் தெளிவுரையையும் கூர்மையாக படித்துப்பாருங்கள்.
(திரும்பத்திரும்ப) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக… குரான் 86:11
===>>>//மழையை மட்டுமா திருப்பித்தருகிறது? தொலைபேசி தொலைகாட்சி அலைவரிசைகள் வானத்திற்கு அனுப்பப்பட்டு மீண்டு நமக்கு திரும்பக்கிடைக்கிறது. வானத்தை திருப்பித்தரும் தன்மையோடு படைத்திருப்பதால் தான் இவைகளெல்லாம் சாத்தியமாகின்றன. இந்த அறிவியல் உண்மையை குரான் அன்றே கூறிவிட்டது//
……..வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெருவீர்களாயின் ஆனால் அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்கமுடியாது குரான் 55:33
===>>> (இதற்கு செங்கொடியின் சுயமான தெளிவுரை ஏதுமில்லை)
.
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் யாரை அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான். குரான் 6:125
===>>>///சாதாரணமாக உயரத்தில் ஏறி நின்று பார்த்தால் மனிதனுக்கு ஒரு அச்சம் வரும், இந்த அச்ச உணர்வைத்தான் இதயம் சுருங்குதல் நெஞ்சு சுருங்குவது என்று முகம்மது விவரித்திருக்கிறார்///
படித்தீரகளல்லவா? அருமையான அற்புதமான விளக்கமல்லவா? அம்புட்டுதான். பிஜே காலிதான். புதிய பின்நவீனத்துவ முற்போக்கு ஆலிம்சா செங்கொடி பட்டய கிளப்புமா..!
ஐயா ஊசிப்போன கருவாடுகளா?
ரெம்பத்தான் குதிக்கிறிங்களே விவாதம் விவாதம்னு.
ஆ ஊ ன்னா பிஜே கூட டிஎன்டிஜே கூட ன்னு சொல்றிங்களே. முஸ்லிம்களுக்கு அவங்க என்ன அத்தாரிடியா? அவங்க கூட மட்டுந்தான்னா வேற யார் மண்டையிலும் ஒன்னுமில்லையா? அப்படின்னா ஒன்னுமில்லாத மண்டைங்க என் இப்படி குதிக்கனும்? கேக்கிற கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்ல. இதுக்கு பேத்தல் வேற கேடா?
விவாதத்திற்கு முன்னர் எப்படியாவது கற்பனை கோட்டையை கட்டி முடித்தி விட வேண்டும் என்ற குற்றச்சாட்டு குறித்து செங்கொடியே உங்களின் பதில் என்ன? உங்களுடைய “மக்கு இ க” (ம.க.இ.க) தோழர்களிடம் சரக்கில்லையா நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு? இங்கு கருத்து தெரிவிக்கும் அரைவேக்காடு மருதன் உட்பட எல்லோரும் டம்மி பீஸ் தானா? சரிதான் “செம்புரட்சி”க்கு அறிவிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லையே. மரமண்டையாய் இருந்தாலே போதும்.
மக்கு மருதா உனக்கு உண்மையிலேயே கொஞ்சமாவது அறிவிருந்தால் அல்லது உன் தலைவன் மருதைய்யனுக்காவது அறிவிருந்தால் நேரடி விவாதத்திற்கு அழைத்துக் கொண்டு வா. செங்கொடி வரும்வரை காத்துக் கொண்டிருக்காதே. நேரடி விவாதத்தில் கம்யூனிசக் கற்பனை கோட்டை சரிவதை கம்யூனிஸ்ட்டுகளின் சிவப்பு டவுசர் அவிழ்ந்து கம்யூனிசம் அம்மணமாய் நிற்பதை சீக்கிரமே பார்க்க போகிறாய்.
// இங்கு யாராவது விவரமாத்தான் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர்பார்கிறேன்…. ம் பார்ப்போம்.
சில்லரைகளிடமிருந்து எதிர்பார்க்க கூடாது தான். தப்பு தான்.
விவாதம் முடிவாகிவிட்டபோது இங்கு தொடர்வது சரியா என்று தான் கேள்வி. ஏன் என்றால் கம்யூனிசம் என்கிற கற்பனை கோட்டை நொறுங்கி தூள் தூளாவதை உலகம் அறியத்தரனும் என்று தான். இந்த சில்லறைகளை வீழ்த்துவதில் எமக்கு என்ன பெருமை?//
அரவேக்காடுகளா, இத நான் திரும்ப திரும்ப எத்தன தடவ தான் சொல்றது?
விவாதம் களம் இரண்டும் ஒன்று தான். ஆனால், நேரடி விவாதத்தால் ஏற்படும் விளைவு பாமர மக்களையும் சென்றடையும். உலகளவில் ஏற்பட்ட கம்யூனிச வீழ்ச்சியை இன்னும் அதிகளவில் எடுத்துச் செல்லனும் என்றுதான்.
//தொடை நடுங்கிகளா, ஏன் செங்கொடி வரும் வரை தான் காத்திருக்கனுமோ? உங்கள் யாரிடமும் சரக்கு இல்லையோ?//
நான் கேட்ட இந்த கேள்விக்கு, யாருக்கும் பதில் தர திராணி இல்லையோ?
அரைவேக்காடுகளால் எப்படி முடியும்.
மறுபடியும் மறுபடியும் காமெடி பண்றீங்களப்பா. செங்கொடியின் கட்டுரைகள் எதிர் அணிக்கு வாய்ப்பாக அமையும் என்றால் அதற்கு பயப்பட வேண்டியது அவர். நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு இறைவனின்!வசனங்கள் மீது முழுமையான ஈமான் இருந்தால்,தைரியம் இருந்தால், இங்கு விவாதியுங்களேன் பார்ப்போம். வினவில் மார்தட்டி நின்ற மேலூர்காரரே! நீங்கள் உருப்படியாக விவாதம் செய்ய முயற்சி செய்யுங்கள்.(அப்படின்னா என்னன்னு கேட்கிறீங்களா!) பிறகு, மகஇகவில் மருதையன் தலைவரெல்லாம் இல்லீங்கோ.
அய்யா மருதன் உண்மையிலயே உங்களுக்கு சிந்திக்க கூடிய மூளை இல்லையோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு வலுவாக ஏற்பட்டிருக்கிறது. நேரடி விவாதம் மூலம் பாமரர்களும் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றிருக்கும் போது அதில் நீங்களும் உங்கள் இயக்கமும் கலந்து கொள்வது தானே முறை.
ஏன்யா விவாதத்தைக் கண்டு டவுசர் அவிழ ஓடுகின்றீர்கள்? ஒரு வேளை கம்யூனிச டவுசர் பாமர்கள் முன்னாடியும் கிழிஞ்சு விடுமோ என்ற பயமா? அப்புறம் மருதய்யன் மக்கு இ க விலே இல்லை என்று சொல்லாமல் விட்டதுக்கு நன்றி. அவர் மக்கு இ க வின் பொது செயலாளரோ அல்லது வேற ஏதாவது ஒன்றாக இருந்துவிட்டு போகிறார். அவருக்கு அறிவிருந்தால் நேரடி விவாதத்திற்கு அழைத்துக் கொண்டு வாருமய்யா.
செங்கொடி தளத்தில் எழுதியுள்ள கருத்துக்களை எதிர்த்து இங்கு எழுதுங்கள், வாதம் செய்யுங்கள் முதலில். ஜைனுலாபுதீன் கூட வாதம் செய்யும் போது அங்கு நேரிடையாக பேசி கொள்ளாலாம். அதை விடுத்து உனக்கு அறிவில்ல தொட நடுங்கி இதெல்லாம் என்ன ..? ஜைனுலாபுதீன் வாதம் பண்றதாக சொல்லி விட்டால் ,செங்கொடி தன் தளத்தில் இஸ்லாமை விமர்சிக்க கூடாதா? மாற்று கருத்துக்களை கேட்கவே சகிப்புத்தன்மை இல்லாத நீங்கள் எல்லாம் நியாயம் பேசுகிறீர்களே? உங்கள் இஸ்லாம் என்ன அவளவு பலவீனமானதா? முடிந்தால் வாதம் செய்ய முன்வாருங்கள்.
//எல்லா மயிரையும் – ஜே . பி, சுத்த பேத்தலாக – மருதன், தொடை நடுங்குவது – அப்துல் நஸிர், காமெடி பீஸ்களா! – மருதன், ஊசிப்போன கருவாடுகளா? – அறிவீலிகள்……//
ஐயா நியாயவான்களே யார் ஐயா இதையெல்லாம் ஆரம்பித்துவைத்தது.
யார் முதலில் சொன்னார்கள் என்று பார்த்து வெட்டி ஒட்ட நேரமில்லை எனக்கு. இங்கு செங்கொடி வைக்கும் இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு ஆக்கபூர்வமாக பதில் அளிக்க முன்வாருங்கள். விவாதிக்கலாம் ..!
ஒன்றை அவதூறாக சொல்லவேண்டியது அதற்கு பதில் சொன்னால் அத உட்டுபுட்டு இதுக்கு பதில் சொல்லு இத உட்டுபுட்டு அதுக்கு பதில் சொல்லுன்னு ஓடவேண்டியது.
என்ன இப்படி தானே எழுத்து வாதம் பன்னுவியே.
நேரடி வாதத்தில் கலுத்த பிடிச்சி இருக்க வசிருவோம்ல.
நேரடி விவதாம் என்று முடிவாகிவிட்டது. சில்லரை எல்லாம் ஏன் கடந்து துள்ளுது.
இனிமை, நாகரீகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள். குரானின் வசனங்களை போலவே இருக்கிறது உம்முடைய பேச்சும். சாவல் விடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. ஜைனுலாபுதீன் ரசிகர் மன்ற தலைவாரக பேசாமல் ஒரு வாசகராக வந்து வாதம் செய்யுங்கள் .
இங்கேயே இப்படி களுத்த நெரிசிடுவன்னு மிரட்டல் விடுகிறீர்களே அங்கு கொலை செய்தாலும் செய்வீர்கள். மதம் எப்படி அறிவை முடமாக்கி விடும் என்பதற்கு இதுவே உதாரணம். ஏற்கனவே இஸ்லாமுடைய கழுத்தை பிடித்தாகிவிட்டது. இல்லையென்றால் பிறகு ஏன் பயபடுகிரீர்கள் செங்கொடி விவாதத்திற்கு ஒத்துகொண்ட பிறகு இஸ்லாமை பற்றி எழுத கூடாதென்று.
கம்யூனிஸ்டுகளின் இன்றைய நிலை மிகவும் வருத்தமானது. பாப்பாத்தி உப்பு கண்டத்தை பறி கொடுத்ததைப் போன்று கம்யூனிஸ்டுகள் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே கருத்து சொல்லுகின்ற மக்கு இ க வினரின் எழுத்துக்களே காட்டி கொடுத்து விடுகின்றன. நேரடி விவாதம் தான் சிறந்தது என்பதை மிகத் தெளிவாக எடுத்து சொல்லி விட்டோம். இதற்குப் பிறகும் எழுத்து விவாதத்திற்கு வா என்று அழைப்பதை பார்த்தால் கம்யூனிஸ்ட்டுகள் அரை மடையர்களல்ல, மாறாக முழு மடையர்கள் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றது.
நேரடி விவாதத்திற்கு வராமல் மக்கு இ க வினர்கள், மருதைய்யன் போன்ற அரை அல்லது முழு மடையர்கள் வெளியில் நின்று வீர வசனம் பேசிக் கொண்டு திரிவது காமெடி நடிகர் வடிவேலு விடும் உதாரை விட பல மடங்கு உதாராகும். இங்கு கருத்து சொல்லும் முஸ்லிம் சகோதரர்கள் கவனிக்க பாவம் கம்யூனிஸ்ட்டுகள் அவங்க செட்டுலயே கொஞ்சம் படித்தது செங்கொடி மட்டுமே.அதனால் தான் அவர் வரும் வரை இவர்கள் நேரடி விவாதத்திற்கு கத்திருக்கின்றார்கள். செங்கொடியே அரையாக இருக்கும் போது மற்றவர்கள் எல்லாம் முழுசு தான். பாவம் பிஜே எப்படித்தான் இந்த மிகப் பெரிய அறிவாளி(???)களுடன் விவாதம் செய்யப் போகின்றாரோ?
@ ஷாஜகான்!
நேரா சொன்னாலும், எழுத்துல சொன்னாலும் நீங்க சொல்ல போற விசயம் ஒண்ணு தானே!, அதை நேரா தான் பண்ணனும்னு அடம் பிடிக்கிறிங்க, அப்படி நேரா தான் சொல்லுவோம்னு ஒத்த கால்ல நிக்கிற பிஜேவை கொஞ்சம் செங்கொடி இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி வையுங்களேன், இல்லைனா நான் ஈரோட்டுல இருக்கேன் இங்க வாங்களேன்!
//வால்பையன், மேல் ஜனவரி 20th, 2010 இல் 11:22 AM சொன்னார்:
@ ஷாஜகான்!
நேரா சொன்னாலும், எழுத்துல சொன்னாலும் நீங்க சொல்ல போற விசயம் ஒண்ணு தானே!, அதை நேரா தான் பண்ணனும்னு அடம் பிடிக்கிறிங்க, அப்படி நேரா தான் சொல்லுவோம்னு ஒத்த கால்ல நிக்கிற பிஜேவை கொஞ்சம் செங்கொடி இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி வையுங்களேன், இல்லைனா நான் ஈரோட்டுல இருக்கேன் இங்க வாங்களேன்! //
வால் பையன் அவர்களே!
இஸ்லாம் பற்றி உஙகளுக்கு என்ன அறிவு உள்ளது ? உங்களிடம் விவாதாம் பண்ணுவதற்கு?
முதலில் விவாதத்திற்கான தலைப்பு கொடுக்க முடியுமா?
தலைப்புக்கு ஏற்றவாறு குறைவாக 10 கேள்விகள் கேட்க முடியுமா?
முதலில் அதற்கு முயற்சியுங்கள்.
1.இபிலீஸை ஏன் அல்லாவால் அழிக்கமுடியவில்லை!?
2.எல்லாம் தெரிந்த கடவுளுக்கு ஏன் ஒரே வேத புத்தகத்தில் விசயத்தை சொல்ல முடியவில்லை!?
3.சகல சக்தி வாய்ந்த கடவுளுக்கு உலகை படைக்க ஏன் ஏழு நாட்கள் ஆயிற்று!?
4.இந்த உலகை படைத்தது கடவுள் என்றால், அந்த கடவுளை படைத்தது யார்!?
5.கடவுள் தான் தோன்றி என்றால் இந்த உலகம் ஏன் தான் தோன்றியாக இருக்கக்கூடாது!?
*****
இதுல அஞ்சு கேள்வி இருக்கு, பதில் சொல்லுங்க, வரிசையா கேட்டுகிட்டே இருக்கேன்!
Matt,
ஒரு வார்த்தையை புரிந்துகொள்வதும் அதை திரித்து எழுதுவதும் அவரவர்களுடைய அறிவையும் விகார புத்தியையும் அறிந்துகொள்ள போதுமானது.
நான் என்ன சொன்னேன் ” கழுத்தை புடித்து இருக்க வைத்துவிடுவோம்ல” என்று எழுதினேன். இதில என்ன மரியாதைக் குறைவு இருக்கு என்று தெரியல.
அதாவது புரிந்து கொள்வதற்கு மேலே என்னமோ வேனும்னு சொல்லுவாங்களே அது இல்ல என்றால் நான் என்ன செய்ய.
எழுத்து விவாதத்தில ஓடி ஒழியிரமாதிரி நேரடி விவாதத்தில் ஓட முடியாமல் அதாவது எங்களுடைய கேள்விகளாலும் விவாதங்களாலும் உங்களை நகர முடியாமல் செய்து விடுவோம் என்று தான் அதன் வாசக அமைப்பின் பொருள்.
இதையும் விட்டுபுட்டு நான் சொல்லாத வார்த்தையையும் திரித்து எழுதிகிறீர்கள்.
கழுத்தை நேரிச்சிபுடுவேன் என்றா சொன்னேன்.
இதுக்கே நீங்கள் எல்லாம் இந்த மாதிரி மாய்மாலம் செய்பவர்கள் வேறு என்னவெல்லாம் செய்யமாட்டீர்கள்.
இதுமாதிரி செய்ய நேரடி விவாதத்தில் வழி இருக்காது என்று தான் சொல்கிறோம்.
வால்பையன்,
உம்ம கேள்விகளெல்லாம் ஏற்கனவே எல்லாரும் கேட்டது தான். பதில் உண்டு ஐயா. இங்கு சொல்லாத காரணம் மேலே சொன்னதுதான்.
மறவாமல் நேரடி விவாதத்தில் செங்கொடிக்கு இந்த மாதிரி அசட்டு கேள்விகளை கேட்க உதவியாக இருங்கள்.
//வால்பையன்,
உம்ம கேள்விகளெல்லாம் ஏற்கனவே எல்லாரும் கேட்டது தான். பதில் உண்டு ஐயா. இங்கு சொல்லாத காரணம் மேலே சொன்னதுதான்.
மறவாமல் நேரடி விவாதத்தில் செங்கொடிக்கு இந்த மாதிரி அசட்டு கேள்விகளை கேட்க உதவியாக இருங்கள்.//
இது தான் உங்கள் பதிலாக வரும் என்று நான் எதிர்பார்த்தேன்!
என் போன் நம்பர் 9994500540
அட்ரஸ் வேணுமா!?
நான் கழுத்தையெல்லாம் பிடிக்க மாட்டேன், நேரில் வர்றிங்களா விவாதத்திற்க்கு!
வாள்பையா,
ரொம்ப சந்தோசம்.
நான் இப்போது இந்தியாவில் இல்லை.
நீரும் உம்மை சேர்ந்தவர்களும் TNTJ தலைமையகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
நீர் மட்டும் வந்தால் போதாது. ஏனென்றால், உம்மை மட்டும் வீழ்த்தி ஆகப்போறது ஒன்றுமில்லை. உம்மை சேர்ந்தவர்கள் என்றால் கம்யூனிச, லெனினிய மற்றும் ம.க.இ.க. பெரிய பெரிய தலைகள் எல்லாம் இருக்குல்ல எல்லாரையும் கூட்டிகிட்டு வாங்க. கம்யூனிசம் அடியோடு மன்னை கவ்வனும். அதை உலகம் அறியச்செய்யணும் அது தான் முக்கியம்.
பையா, இந்த தைரியத்தை நான் மெச்சுகிறேன்.
முகவரி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226
முகவரிக்கு நன்றி!
சந்திப்பு நடக்கும் சமயம், எனக்கும் தகவல் அளித்தால் கலந்து கொள்கிறேன்!,
நாத்திகர்கள், ஆத்திகர்களிடம் யார் பெரியவன் என்று சண்டையிடுவதில்லை, அனைவரும் சமம் என்று தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள்!
நான் எந்த குழுமத்துடனும் என்னை இணைத்து கொள்வதில்லை, நான் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை விட என்னை மனிதன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்படுகிறேன்!
உங்களுடய ம.க.இ.க சண்டைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
பையா,
இல்லை அவர்களை TNTJ அல்லது PJ அவர்களை நான் உம்மிடம் வரச்சொல்லவா?
//அவர்களை TNTJ அல்லது PJ அவர்களை நான் உம்மிடம் வரச்சொல்லவா?//
தாராளமாக, தனி ஒருவனாக அவர்களிடம் விவாதிக்க நான் தயார்!
பையா,
முகவரி பெயருடன்.
பையா,
//நான் எந்த குழுமத்துடனும் என்னை இணைத்து கொள்வதில்லை, நான் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை விட என்னை மனிதன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்படுகிறேன்!
உங்களுடய ம.க.இ.க சண்டைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை!//
ம.க.இ.க வை மனிதர்கள் இல்லை என்றா சொல்கிறீர்?
பெயர்:அருண்ராஜ்
ஈரோட்டுக்கு வந்து போன் செய்தால் பொது இடத்தில் சந்திக்கலாம்!, அல்லது ஈரோட்டில் இருக்கும் உங்கள் ஜமாத்தில் கூட!
வீட்டில் தான் விவாதிக்க வேண்டும் என கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!
//ம.க.இ.க வை மனிதர்கள் இல்லை என்றா சொல்கிறீர்?//
ம.க.இ.க என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள்!
நீங்கள் இஸ்லாமியர்!
அவர்களை அப்படி சொல்வதென்றால் உங்களையும் அப்படி தான் சொல்ல வேண்டும் பரவாயில்லையா!?
//ஷாஜஹான், மேல் ஜனவரி 20th, 2010 இல் 9:38 AM சொன்னார்:
கம்யூனிஸ்டுகளின் இன்றைய நிலை மிகவும் வருத்தமானது. பாப்பாத்தி உப்பு கண்டத்தை பறி கொடுத்ததைப் போன்று கம்யூனிஸ்டுகள் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்கிறார்கள்//
அய்யா
இந்த விவாதத்துக்கும் பாப்பாத்திகளுக்கும் என்ன சம்பந்தம்?
உங்களது வெறுப்பு கக்கும் பேச்சுக்களை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளக்கூடாதா? இப்படித்தான் பொது அரங்கில் உங்களது வக்கிரங்களை பட்டியல் போடவேண்டுமா?
இதையே “பன்றிக்கறியை தொலைத்த துலுக்கச்சி” என்று எழுதியிருந்தால், செங்கொடி அனுமதித்திருப்பாரா?
வால்,
தங்களின் ஒரு கேள்விக்கு பதில்
இப்லீஷை ஒழிக்க் முடியவில்லை என்பதல்ல. அவனை சுய அறிவுள்ள மனிதனுக்கு சோதனையாக வைத்து தன்னையும் தன்னைப் படைத்தவனையும் உணர மனிதன் முற்பட வேண்டுமென்பதே இறைவனின் நாட்டம்.
இப்படி எல்லா கேள்விகளுக்கும் இங்கேயே பதில் சொல்ல முடிந்தவர்கள் இருக்கின்றனர். ஆனால் ஆதாரத்துடன் கூடிய விவாதங்கள் பதிவு அரங்கத்தில் சாத்தியமல்ல. கிளைக் கேள்வி கேட்கிறேனஎன்று குதர்க்கம் பேசிவிட்டுப் போவது இங்கு சுலபம்.
நேரடி கலந்துரையாடலில் விவாத நாகரீகம், மற்றும் பண்புகள் கடைப்பிடிக்க முடியும்.
மேலும் இங்கே நாத்திகர்கள், பிறமத நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையில் சந்தேகம் கொண்டவர்கள் என்று பலர் உள்ளனர். எல்லோருக்கும் தக்கவாறு ஒரே பதில் சொல்ல முடியாது.
உ. ம்.
செங்கொடிக்கும் தாங்களும் உள்ள வேறுபாட்டைப் போல. அவர் கம்யூணிசத்தில் நம்பிக்கை கொண்டு இறைவனை மறுப்பவர். நீங்கள் இரண்டையுமே மறுப்பவர் என்று நினைக்கிறேன். இருவருக்கும் ஒரே பதில் திருப்தி தருமா என்பது சந்தேகம்.
நேரடி விவாதம் நடத்திப் பாருங்கள். திருப்தி அளிக்கவில்லையானாலும் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாழ்த்துகள்
வால்பையன் கேட்டது உங்களுக்கு புரியவில்லை.
நான் விளக்க முயல்கிறேன்.
இந்த கேள்விகளை நெத்தியடி முகம்மது என்பவரிடம் இதே பதிவில் கேட்டேன். பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்.
https://senkodi.wordpress.com/2009/11/13/islam-7/
இந்த பதிவுக்கு சென்று அவர் பதில் கூறியிருக்கிறாரா என்று பார்த்துகொள்ளலாம்.
—
அல்லாஹ் ஆதாம் ஏவாளை உருவாக்கினார். பிறகு மரத்தை வைத்து அந்த கனியை சாப்பிடக்கூடாது என்று சொன்னார். சாத்தான் சாப்பிட சொன்னான்.
ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டார்கள்.
சரி இப்போது கேள்விக்கு வருவோம்.
ஆதாமும் ஏவாளும் சாப்பிடுவார்கள் என்பது மரத்தை வைக்கும்போதே அல்லாஹ்வுக்கு தெரியுமா தெரியாதா?
தெரிந்திருக்கவேண்டும் இல்லையா? ஏனெனில் அல்லாஹ் முக்காலமும் உணர்ந்தவர் இல்லையா?
ஆகவே மரத்தை வைக்கும்போதே ஆதாமும் ஏவாளும் இதனை சாப்பிடப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் ஏன் மரத்தை வைத்தார்?
நீங்கள் சொல்கிறீர்கள், அல்லாஹ் பரிசோதிக்கிறான் என்று.
அல்லாஹ் அந்த மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், அல்லாஹ்வுக்கு ஏற்கெனவே அந்த மரத்தின் கனியை அவர்கள் சாப்பிடப்போகிறார்கள் என்று தெரியும். இல்லையா? பிறகேன் மரத்தை வைக்கவேண்டும்?
சரி, அந்த மரத்தின் கனியை ஆதாம் சாப்பிடவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது அல்லாஹ் ஏற்கெனவே நிச்சயம் செய்து வைத்திருந்த “ஆதாம் அந்த கனியை சாப்பிடுவார்” என்ற எதிர்காலத்தை உடைக்கிறது. அல்லாஹ் ஏற்கெனவே நிச்சயம் செய்து வைத்திருக்கும் எதிர்காலத்தை ஆதாமால் உடைக்க முடியுமா? முடியாது. ஆகவே வேறு வழியின்றி ஆதாம் அந்த கனியை சாப்பிடுகிறார். ஆதாம் சுயமாகவே சென்று அந்த கனியை சாப்பிடுவதாக நினைக்கிறார். ஆனால், ஏற்கெனவே அல்லாஹ் எதிர்காலத்தை நிச்சயம் செய்துவிட்டதால், அவர் கனியை சாப்பிடுகிறார்.
ஆதாமால் கனியை சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஏனெனில் அதுதான் அல்லாஹ் நிச்சயம் செய்துவைத்த எதிர்காலம். ஆகவே ஆதாமின் சுய விருப்பம் என்று ஒன்றும் இல்லை.
–
இந்த பிரச்னையுடன் பள்லிக்கூடம், போலிஸ் ஆகியவற்றை ஒப்பிடமுடியாது. ஏனெனில், பள்ளிக்கூட வாத்தியார் பரிட்சை வைப்பது போன்றதல்ல அல்லாஹ் வைக்கும் பரிட்சை.
பள்ளிக்கூட வாத்தியாருக்கு ஒரு மாணாக்கன் என்ன மதிப்பெண் வாங்குவான் என்று தெரியாது. ஆனால், அல்லாவுக்கு ஏற்கெனவே இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்று தெரியும்.
இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்பது முன்பே தெரிந்தால் பரிட்சையே தேவையில்லை.
இரண்டாவது ரிமோட் கார் பிரச்னைக்கு வருவோம்.
ரிமோட் கார் தானாகவே ஓடும்படியும் சில நேரங்களில் விடப்படுகிறது சில நேரங்களில் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று சொல்கிறீர்கள். அது போலத்தான் சில நேரங்களில் மட்டுமே அல்லாஹ் இடையூறு செய்கிறான் என்று சொல்கிறீர்கள்.
இதில் இருக்கும் பிரச்னையும் பழைய பிரச்னைதான். சில நேரங்களில் நம்மிடமே விட்டுவிடும் சமயங்களில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று அல்லாஹ்வுக்கு தெரியுமா? அபப்டி நாம் என்ன செய்யப்போகிறோம் என்று ஏற்கெனவே அல்லாவுக்கு தெரியும்போது நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதும் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது என்று பொருள். அப்படியானால், நம்மால் அதனை மீறி வேறு சாய்ஸை எடுக்க முடியுமா?
பாபர் மசூதி இடிப்பை எடுத்துக்கொள்வோம்.
பாபரி மசூதி இடிப்பை அல்லாஹ் விரும்பவில்லையா? அப்படி அல்லாஹ் விரும்பாத ஒரு விஷயம் நடக்கமுடியுமா? ஆகவே இன்ஷா அல்லாஹ்தானே அல்லாவின் விருப்பப்படிதானே அது நடந்தது? அப்படி அல்லாவின் விருப்பப்படி நடந்ததை நீங்கள் எதிர்க்கலாமா?
ஆகவே பாபரி மசூதி இடிப்புக்கு தூக்கிலிட வேண்டியது அல்லாதான்!
//பதிவேட்டில் எழுதப்பட்ட விதியை இறைவன் தான் நாடியதை தேவை ஏற்படின் தான் நாடுவோர்க்கு மாற்றி அமைப்பான். (குரான் 13 :39.)//
இந்த வரியில் உள்ள முட்டாள்த்தனத்தை அலசுவோம்
தான் நாடுவோருக்கு தகுந்தாற்போல பதிவேட்டில் எழுதுவதை மாற்றியமைப்பது என்பதுஅல்லாஹ்வின் பாரபட்சத்தை காட்டுகிறது.
பாரபட்சத்தையும் விட்டுவிடுவோம்.
தான் எதிர்காலத்தில் இப்படி பதிவேட்டை மாற்றப்போகிறோம் என்று அல்லாஹ்வுக்கு தெரியுமா தெரியாதா?
முக்காலும் உணர்ந்த அல்லாஹ் அதனையும் அறிந்தே இருக்கவேண்டும், இல்லையா?
பதிவேட்டை மாற்றப்போகிறோம் என்று தெரிந்த அல்லாஹ் ஏன் ஏற்கெனவே தவறான பதிவேட்டை எழுதவேண்டும்?
முழு குரானும் சுத்த உளறல்தான். ஆகவே இந்த குரானை அல்லாவோ அல்லது வேறெந்த கடவுளுமோ எழுதியிருக்கவே முடியாது. இதனை எழுதியது முகம்மது. குரானை அல்லாஹ் கொடுத்தார் என்று நன்றாக பூசுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.
//இப்லீஷை ஒழிக்க் முடியவில்லை என்பதல்ல. அவனை சுய அறிவுள்ள மனிதனுக்கு சோதனையாக வைத்து தன்னையும் தன்னைப் படைத்தவனையும் உணர மனிதன் முற்பட வேண்டுமென்பதே இறைவனின் நாட்டம்.//
பிறகு எதற்கு இபிலீஸை சைத்தான் என்று அழைக்க வேண்டும்! அவனும் அல்லாவுக்கு தானே வேலை செய்து கொண்டிருக்கிறேன்!
குதர்க்க கேள்விகள் கேட்பது நாங்கள் புரிந்து கொள்வதற்காக அல்ல! நீங்கள் புரிந்து கொள்வதற்காக
இங்கே அல்லாவும் கிடையாது, இபிலீஸும் கிடையாது! நீங்களும் நானும் மட்டும் தான்!, உங்களுடய நம்பிக்கையும், மனிதத்தின் உண்மையும் தான் விவாதம் புரிந்து கொண்டிருக்கிறது!
நேரில் விவாதிக்க எனக்கு எந்த தடையும் இல்லை! ஆனால் நீங்கள் எல்லாம் அல்லாவின் கட்டளை, அப்படியே நம்பு என்பீர்கள், இந்த லூசுகிட்ட என்னான்றா விவாதிக்கிறதுன்னு நாங்க வந்துருவோம்!
எழுத்து விவாததில் உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது, எல்லாம் இருக்கும் குரானில் இருந்து காப்பி,பேஸ்ட் பண்ணலாம்!
குரானில் ஏன் யானையை பற்றி ஒன்றும் சொல்லலைன்னு கேட்டா மட்டும் காணாம போயிரலாம்!
***
உங்களின் கேள்விகள் அருமை ”எஸ்”!
சென்ற பின்னூட்டத்தில் கேள்வியே கேட்காத எஸ்க்கு அருமைன்னு சொல்லிட்டேன், மன்னிக்கவும்!
உண்மையில் அருமை ரவுசு தான்!
தவறுக்கு மன்னிக்கவும். வழக்கத்தில் உள்ள ஒரு தவறான வார்த்தையை (……… உப்புக் கன்டத்தை பறி கொடுத்தது போல ) பயன்படுத்தியதற்கு அனைத்து சகோதரர்களும் மன்னிக்கவும். சகோதரர் “தமிழன்” எண்ணை மன்னிக்கவும். எவர் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. கம்யூனிஸ்ட்டுகளின் பரிதாப நிலைமையை குறிப்பதற்கே அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். தவறான வார்த்தையை பயன்படுத்தியதற்கு எண்ணை மன்னிக்கவும்.
.
// S,…….
இப்லீஷை ஒழிக்க முடியவில்லை என்பதல்ல. அவனை சுய அறிவுள்ள மனிதனுக்கு சோதனையாக வைத்து தன்னையும் தன்னைப் படைத்தவனையும் உணர மனிதன் முற்பட வேண்டுமென்பதே இறைவனின் நாட்டம்.//
????????
கடவுளே இப்லீஷை படைச்சு , இப்லீஷை வைத்தே மனிதனைச் சோதித்து , தன்னை வணங்க மனிதனை கடவுள் கட்டாயப்படுத்துகிறாரா?
இது ஏதோ சினிமாவில், பிகரை கரெக்ட் பண்ண, நண்பனை வைத்தே பிகரின் பர்ஸை திருட வைத்துவிட்டு, டமால் என்று பறந்து வந்து அதே பிகரைக் காக்கும் கேரக்டர் போல் அல்லவா கடவுளின் கேரக்டர் உள்ளது?
கடவுளும், இப்லீசும் ஒரே டீமா?
என்ன கொடுமையிது?
நீங்க உண்மையில் கடவுளை புகழ்றீங்களா இல்ல சேம் சைட் கோல் போட்றீங்களா?
.
ரவுசு பார்ட்டி அய்யா நீங்கள்..! இவையெல்லாம் இஸ்லாமிக் பேசிக்ஸ்.
//இந்த கேள்விகளை நெத்தியடி முகம்மது என்பவரிடம் இதே பதிவில் கேட்டேன். பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்.//
—ஓடவெல்லாம் இல்லை. ஆங்காங்கே வேறு பல தளங்களில் பின்நூட்டிக்கொண்டுதானே இருக்கிறேன். சொன்னாலும் புரிந்து கொள்வதில்லை என்றபிறகு சொல்வதற்கே அலுப்பாக இருக்கிறது, அய்யா வேறொன்றுமில்லை.
//நீங்கள் சொல்கிறீர்கள், அல்லாஹ் பரிசோதிக்கிறான் என்று.//
என்று பதிலை எழுதி விட்டு அதற்கான கேள்வி கேட்பவர் நீங்கள்தானய்யா.
//அல்லாஹ் அந்த மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால், அல்லாஹ்வுக்கு ஏற்கெனவே அந்த மரத்தின் கனியை அவர்கள் சாப்பிடப்போகிறார்கள் என்று தெரியும். இல்லையா? பிறகேன் மரத்தை வைக்கவேண்டும்?//
நான் என்னதான் செய்யட்டும்?
அல்லாஹ் தன் விருப்பமான மனித தலைமுறைகளை பூமியில் படைக்கும் எண்ணத்தை கூறும்போதே வானவர்கள் கேட்டனராம், “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில்(பூமி) படைக்கப்போகிறாய்?”, என்று…
பின்னர் முதல் மனிதனை படைத்தபின்னர், அனைத்து வானவர்களுக்கும் ஜின்களுக்கும் ஆதமுக்கு பணிய சொன்ன அல்லாஹ்வின் இறைகட்டளைக்கு இப்லீஸ் என்ற ஒரு ஜின் மரியாதை செய்ய மறுத்தது. (இங்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டுயுள்ளது. ஜின் என்றால் எந்த இறைகட்டளையையும் நிறைவேற்றும். இப்லீஸ் என்ற ஜின் மாறு செய்கிறது என்றால் அதுதான் அதற்கு இறைவனால் இடப்பட்ட ‘ப்ரோக்ராம்’ என்று அறிக.) இந்த இடத்தில், அது மீண்டும் இறைவனிடம் கேட்கிறது, மனித இனத்தை வழிகெடுக்க தனக்கு வாய்ப்பளித்தால் முடியும், என்று. (இதில் ஒன்று புரிகிறதா- இப்லீஸ் தானாக ஒன்றை முடிவெடுத்து இறை அனுமதி இன்றி செய்ய முடியாது என்று?). வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எப்படி? மனித உள்ளங்களுக்குள் ஊடுருவி தீய எண்ணங்களை தோற்றுவித்து வழிகெடுக்க முடியும். ஆனால், உறுதியான இறை நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழி கெடுக்க முடியாது. இறைகட்டளைக்கு மாறாக வழிகேடுப்பதே இப்லீசுக்கு இடப்பட்ட பணி. மனித இனம் போலவே ஜின்களும் பல்கிப்பெருகும். இப்லீசிலிருந்து அப்படிப்பல்கிப்பெருகியவை ஷைத்தான் தலைமுறை. இவர்களால் தான் இங்கே நாம் விவாதித்துக்கொண்டுள்ளோம்.
ஆதம்/ஹவ்வா இருவருக்கும் அன்று தரப்பட்ட இறைகட்டளை ரொம்ப சிம்பிள். “சொர்க்கத்தில் இருவரும் தாராளமாய் விரும்பியவாறு உண்ணுங்கள்; இந்த மரத்தை நெருங்காதீர்கள்”. இந்த இப்லீஸ் தன் வேலையை முதன் முதலில் இவரிடம் ஆரம்பித்தான். எப்படி அவரை வீழ்த்தினான்? நடந்த சம்பாஷனைகள் என்ன? இதேபோல அதன் பிறகு நடந்ததையும் குர்ஆனில் ரொம்ப அழகாக கூறப்படுகிறது. உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். இது தொடர்பாக படித்துப்பார்க்கவும்: குரான்: 2:30 முதல் 2:39 வரை. மற்றும் குரான் 7:10 முதல் தொடர்ந்து 7:32 வரை. மேலும், 20 :115 முதல் 20 :123 வரை.
இவை போல இச்சம்பவங்கள் பற்றி இன்னும் உள்ளன. இவற்றில் உங்களுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.
//ஆதாமால் கனியை(மரம் என்றுதான் குர்ஆனில் உள்ளது)தான் சாப்பிடாமல் இருக்கமுடியாது. ஏனெனில் அதுதான் அல்லாஹ் நிச்சயம் செய்துவைத்த எதிர்காலம். ஆகவே ஆதாமின் சுய விருப்பம் என்று ஒன்றும் இல்லை.// –சரிதான்.
எதற்கு இந்த செட்டப்?
//// S,…….
இப்லீஷை ஒழிக்க முடியவில்லை என்பதல்ல. அவனை சுய அறிவுள்ள மனிதனுக்கு சோதனையாக வைத்து தன்னையும் தன்னைப் படைத்தவனையும் உணர மனிதன் முற்பட வேண்டுமென்பதே இறைவனின் நாட்டம்.// — என்பதற்காகவே.
அன்புள்ள நெத்தியடி முகம்மது,
//// S,…….
இப்லீஷை ஒழிக்க முடியவில்லை என்பதல்ல. அவனை சுய அறிவுள்ள மனிதனுக்கு சோதனையாக வைத்து தன்னையும் தன்னைப் படைத்தவனையும் உணர மனிதன் முற்பட வேண்டுமென்பதே இறைவனின் நாட்டம்.// — என்பதற்காகவே.
திருப்பி குட்டையில் விழுந்துவிட்டீர்களே..
இதனைத்தான் முன்னரே எழுதியிருந்தேன்.
இந்த பிரச்னையுடன் பள்லிக்கூடம், போலிஸ் ஆகியவற்றை ஒப்பிடமுடியாது. ஏனெனில், பள்ளிக்கூட வாத்தியார் பரிட்சை வைப்பது போன்றதல்ல அல்லாஹ் வைக்கும் பரிட்சை.
பள்ளிக்கூட வாத்தியாருக்கு ஒரு மாணாக்கன் என்ன மதிப்பெண் வாங்குவான் என்று தெரியாது. ஆனால், அல்லாவுக்கு ஏற்கெனவே இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்று தெரியும்.
இந்த மாணாக்கன் இந்த மதிப்பெண் தான் வாங்குவான் என்பது முன்பே தெரிந்தால் பரிட்சையே தேவையில்லை.
புரியவில்லை என்றால் நான் எழுதியதை திருப்பி படித்துப் பாருங்கள்.
அன்புள்ள ரவுசு கண்ணூ,
நீங்கள் ஏன் நான் சொன்ன குரான் பகுதிகளை படித்து பார்க்கக்கூடாது? கேள்வி கேட்க அவசியமே இல்லாமல் பல விஷயங்களை தானாகேவே புரிந்து கொள்ளலாமே, ரவுசு சார்? ஆனாவுக்கு அடுத்து என்னா?, ஆவன்னாவுக்கு அடுத்து என்னா? என்று கேட்டு கேட்டு பதில் பெற்றுக்கொண்டு ஒரு கட்டத்தில் “எனாவுக்கு அடுத்து என்னன்னு சொல்லத்தெரியாம நெத்தியடி முஹம்மது ஓடியேபுட்டார்”… என்று பகடி பண்ணவேண்டாமே ரவுசு கண்ணா…
ஆசிரியருக்கு தெரியும்தான்…ஆனால், மாணவனுக்கு தெரிய வேண்டாமா தன் மதிப்பெண்? பரீட்சை இல்லாமல் மதிப்பெண் எப்படி வரும் ரவுசு சார்?
ஆதம் தவறு செய்யப்போவது இறைவனுக்கு தெரியும் தான். ஆனால், தான் இன்ன தவறு செய்தோம் என்று ஆதம் எப்படி அறிந்து கொள்வது? பின் இந்த அல்லாஹ்-இப்லீஸ்-ஆதம்-மரம்-தவறு என்ற இந்த செட்டப் எல்லாம் எதற்காம்? அதற்கு, நான் சொன்ன இடத்தில் இருந்து குரானை கூர்ந்து விளங்கி படித்துப்பாருங்களேன் ரவுசு சார்… உங்கள் ஐயங்களுக்கு விடை புரியுமே!
//குரானை கூர்ந்து விளங்கி படித்துப்பாருங்களேன்//
எப்படி கூர்ந்து படித்து பார்த்தாலும் மேஜிக்கல் ரியலிச கட்டுகதைகள் மாதிரி தான் எங்களுக்கு தெரியுது!
உண்மையில் எதை சொன்னாலும் நம்புறதுக்கு ஒரு தகுதி வேணும் தான், அந்த தகுதி உங்களுக்கு இருக்கு!, அதனால தான் இல்லாத ஒன்றை நடக்காத ஒன்றை இவ்வளவு திடமாக நம்புகிறீர்கள்!
கடவுள் இந்த பூமியை படைத்து எத்தனை வருடங்கள் ஆகிறது? ஆதாமை படைத்து எத்தனை வருடங்கள் ஆகிறது என்று குரானில் இருக்கா!?
வால்பையன் கேட்ட கேள்விகளுக்கு ஆன்லைன்பிஜே இணையதளம் மூலம் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கொடுத்த பதில். இதற்குப் பிறகாவது வால்பையன் நேரடி விவாதத்திற்கு வருவாரா அல்லது கம்யூனிஸ்ட்களைப் போல டிமிக்கி கொடுப்பாரா? பதிலுக்கு பலரைப் போல நானும் காத்திருக்கின்றேன்.
———————————————————————-
நாத்திகர்கள் அனைவரின் கோளாறும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது. அதாவது எதையும் அரை குறையாக புரிந்து கொள்வது தான் அந்தக் கோளாறு.
மேற்கண்ட கேள்விகள் அனைத்திலும் அது தான் தெரிகிறது.
இப்லீஸை அழிக்கவில்லை என்பதற்கும் அழிக்க இயலவில்லை என்பத்ற்கும் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை. நமக்கு இயலுமான் அனைத்தையும் நாம் செய்ய மாட்டோம். நமக்கு இயலுமான விஷயத்தில் நமக்கு எது விருப்பமோ அதைத் தான் செய்வோம். இப்லீஸை அல்லாஹ்வுக்கு அழிக்க முடியவில்லை என்று குர் ஆன் எந்த வசந்த்தில் கூறி இருக்கிறது என்பதற்கு அவரிடம் ஆதாரம் கேளுங்கள். நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகு. அதைத் தான் அரை குறை என்கிறோம்.
இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. ஒரே வேதப்புத்தகத்தில் என்னால் சொல்ல முடியாதத்தால் பல வேதங்களில் சொல்லி இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறினால் தான் இப்படி கேட்க முடியும். இவர் ஐந்து கேள்வி கேட்டால் மக்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக் வாரம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?
இங்கேயும் அதே அறை குறை தான் வெளிப்படுகிறது. நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?
நாலாவது மற்றும் ஐந்தாவ்து கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்ல்வும். அதில் நாம் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்லவும்.
கடவுள் படைக்கவில்லை என்று கூறும் இவர்க்ளும் ஒரு இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். ஒரு அணு வெடித்து இந்த உலகம் எப்படி உண்டானது என்று கூறுகிறார்கள். அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள். ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மேபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப் பூர்வமானது.
எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.
அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நமது தலைமையைச் சந்தித்து அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.
//நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகு. அதைத் தான் அரை குறை என்கிறோம்.//
ரொம்ப வருசமா விட்டுபிடிப்பார் போல,
இபிலீஸ் என்றால் அல்லாவுக்கு ரொம்ப பிடிக்குமோ!?
//இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. //
பதிலாவது முழு வேக்காடோடு கொடுங்களேன்!
//இவர் ஐந்து கேள்வி கேட்டால் மக்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக் வாரம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?//
மக்கள் மனதில் நன்றாக பதிவ வேண்டுமென்றால் அது ஏன் அரபி மொழியில் இருக்கிறது, அல்லது ஏன் மக்கள் பலதரபட்ட மொழிகள் பேசுகிறார்கள்!
எப்படி சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியாத கடவுள் எப்படி கடவுளாவார்,
அதனால் தான் ஒவ்வோரு வேதமும் பல முரண்பாடுகளுடன் உள்ளதோ!
//நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?//
எல்லாம் வல்ல கடவுளுக்கே 50 கீலோவை தூக்க முடியாது போல, அதனால் தான் 7 நாட்கள் ஆற அமர உலகை படைத்திருக்கிறார்!
மனிதனுக்கு சக்தி குறைபாடு இருக்கலாம், ஆனால் கடவுளால் சொடுக்கிடும் நேரத்தில் உலகை படைக்க முடியவில்லை என்றால் அவரும் மனிதனை போல தானே பலகீனமாக ”படைக்கப்பட்டிருக்கிறார்”
//நாலாவது மற்றும் ஐந்தாவ்து கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்ல்வும். //
சுட்டி கொடுக்கவும்!, கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிலெல்லாம் வர சொல்லமாட்டேன்!
//ஒரு அணு வெடித்து இந்த உலகம் எப்படி உண்டானது என்று கூறுகிறார்கள். அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள்.//
அணு உண்டானது பற்றி திரு திரு என்று நாங்கள் முழுக்கிறோம், கடவுளை படைத்தது யார் என்று நீங்கள் திரு திரு என்று முழிக்காமல் பதில் சொல்லுங்கள்!
//ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மேபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப் பூர்வமானது.//
ஓ! இம்புட்டு தான் உங்க அறிவுபூர்வமா!?
//எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.//
அடடே! பகுத்தறிவுக்கு புது விளக்கமெல்லாம் கொடுக்கிறாரே!
//அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நமது தலைமையைச் சந்தித்து அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.//
தலைமைன்னா யாரு அல்லாவா!?
நாமும் சந்திக்க தயாராக இருக்கிறோம்!
வர சொல்லுங்கள்!
வால்பையனின் உளறல்களுக்கு (அவரின் பாஷையில் கேள்விகள்) இங்கே வழவழா என்றெல்லாம் நான் பதில் கொடுக்கப் போவதில்லை. ஏனெனில் இது நீண்ட சங்கிலி போல தொடர்ந்து கொண்டேயிருக்கும். அவரின் ஒரு வார்த்தையிலிருந்தே இதற்கு தீர்வு சொல்லிவிடலாம். ஆனால் வால்பையன் இதற்கு தயாராக வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் போல டிமிக்கி கொடுத்து ஓடி ஒழிய கூடாது.
/* ரொம்ப வருசமா விட்டுபிடிப்பார் போல,*/ வால்பையன் நீங்கள் ஒத்துக் கொண்டால் பொது மக்கள் (நாத்திகர்களையும் சேர்த்து தான்) முன்னிலையில் பகிரங்க விவாதத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவே இருக்கின்றது. இந்த நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளுகின்ற தில் அல்லது நெஞ்சுரம் வால்பையனிடம் இருக்கிறதா? ( டிஸ்கி: அப்புறம் தலைமைனா சென்னை மண்ணடியில் அரண்மனைக்காரன் தெருவில் இருக்கின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை தான் குறிக்கின்றது. )
நெத்தியடி,
திரும்பவும் உங்களுக்கு புரியவில்லை அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீர்கள்.
ஒரு மாணவன் என்ன மதிப்பெண் வாங்குவான் என்பது ஆசிரியருக்கு குத்துமதிப்பாகத்தான் தெரியும். அந்த மாணவன் என்ன மதிப்பெண் வாங்குவான் என்பதை ஆசிரியர் நிர்ணயம் செய்வதில்லை.
ஆனால் முகம்மது உருவாக்கும் அல்லாஹ், ஆசிரியரை விட அதிகமான ஆற்றல் உள்ளவர். ஒரு மாணவனுக்கு என்ன மதிப்பெண் கிடைக்கும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார். பிறகெதற்கு பரிட்சை?
முகம்மதால் உருப்படியாகக்கூட அல்லாஹ்வை உருவாக்கமுடியவில்லை. ஒரு இடத்தில் அல்லாஹ்வே காபிர்களை வழிகேடர்களாக பண்ணுகிறேன் என்று சொல்லவைக்கிறார். மற்றொரு இடத்தில் அவர்களுக்கு சுயசிந்தனை கொடுத்திருக்கிறேன் இருப்பினும் வழிகேடர்களாக ஆகிறார்கள் என்று புலம்ப வைக்கிறார்.
அல்லாஹ் எல்லாம் அறிந்தவராக இருந்தால் (omniscient) யாருக்கும் freewill சுயசிந்தனை கிடையாது. சுயசிந்தனை இல்லாத மனிதர்களை ஏற்கெனவே நிச்சயம் செய்துவிட்ட அல்லாஹ் அவர்களை தண்டிப்பதாக சொல்வது மூடத்தனம்.
இந்த பிரச்னை எல்லா ஆபிரஹாமிய மதங்களுக்கும் உண்டு. அது இஸ்லாமுக்கு மட்டுமல்ல.
—
நீங்கள் கவனிக்க மறுக்கும் இன்னொரு வசனத்தையும் திரும்பத்தருகிறேன்
//பதிவேட்டில் எழுதப்பட்ட விதியை இறைவன் தான் நாடியதை தேவை ஏற்படின் தான் நாடுவோர்க்கு மாற்றி அமைப்பான். (குரான் 13 :39.)//
இந்த வரியில் உள்ள முட்டாள்த்தனத்தை அலசுவோம்
தான் நாடுவோருக்கு தகுந்தாற்போல பதிவேட்டில் எழுதுவதை மாற்றியமைப்பது என்பதுஅல்லாஹ்வின் பாரபட்சத்தை காட்டுகிறது.
பாரபட்சத்தையும் விட்டுவிடுவோம்.
தான் எதிர்காலத்தில் இப்படி பதிவேட்டை மாற்றப்போகிறோம் என்று அல்லாஹ்வுக்கு தெரியுமா தெரியாதா?
முக்காலும் உணர்ந்த அல்லாஹ் அதனையும் அறிந்தே இருக்கவேண்டும், இல்லையா?
பதிவேட்டை மாற்றப்போகிறோம் என்று தெரிந்த அல்லாஹ் ஏன் ஏற்கெனவே தவறான பதிவேட்டை எழுதவேண்டும்?
முழு குரானும் சுத்த உளறல்தான். ஆகவே இந்த குரானை அல்லாவோ அல்லது வேறெந்த கடவுளுமோ எழுதியிருக்கவே முடியாது. இதனை எழுதியது முகம்மது. குரானை அல்லாஹ் கொடுத்தார் என்று நன்றாக பூசுத்தியிருக்கிறார். அவ்வளவுதான்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் வால் பையன் அவர்களுக்கு,
குரானில் யானையைப் பற்றி ஒன்றுமே சொல்லப் படவில்லை எனக் கூறியுள்ளீர்கள். இதில் உங்கள் அறியாமை தான் வெளிப்படுகிறது.
ஏனெனில் குரானின் 105 வது அத்தியாயத்தின் தலைப்பே ” யானை ” தான். அந்த அத்தியாயத்தில்
” யானைப் படை”யைப் பற்றி கூறுவதால் அந்த அத்தியாயத்தின் பெயர்
” யானை “. இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
//மக்கள் (நாத்திகர்களையும் சேர்த்து தான்) முன்னிலையில் பகிரங்க விவாதத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவே இருக்கின்றது. இந்த நேரடி விவாதத்தில் கலந்து கொள்ளுகின்ற தில் அல்லது நெஞ்சுரம் வால்பையனிடம் இருக்கிறதா? ( டிஸ்கி: அப்புறம் தலைமைனா சென்னை மண்ணடியில் அரண்மனைக்காரன் தெருவில் இருக்கின்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தை தான் குறிக்கின்றது. )//
ஆமாங்க,
இப்போ இஸ்லாம் ஒரு டுபாக்கூர் மதம்னு நிறுபிச்சிட்டா எனக்கு கோடி கோடியா பணம் வரப்போகுது பாருங்க!
எனக்கு எப்போ டைம் இருக்கோ அப்போ தான் நான் போக முடியும், இல்லைனா ஈரோடு வாங்கன்னு போன் நம்பர் கொடுத்திருக்கேன்!
உங்கள் உளறல்களை(உங்கள் பாசையில் பதில்கள்) நாங்கள் பொறுமையாக கேட்கும் அளவுக்கு உங்களுக்கு பதில் சொல்ல பொறுமை இல்லை எனும் பொழுது உங்கள் மேல் பரிதாப உணர்ச்சி தான் வருகிறது!
புத்தகத்தை நம்பும் உங்களிடம் பேசி என்ன பண்ண!
என் நம்பர் திரும்பவும் சொல்கிறேன்
9994500540
”அல்லா”த்தையும் ஈரோடு வரச்சொல்லுங்க!
இல்லைன்னா நீங்க சொல்ற நெஞ்சு உரத்தை நான் வாங்கி பார்சல் அனுப்புறேன், எம்புட்டு செலவானாலும் சரி!
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் வால் பையன் அவர்களுக்கு,
குரானில் யானையைப் பற்றி ஒன்றுமே சொல்லப் படவில்லை எனக் கூறியுள்ளீர்கள். இதில் உங்கள் அறியாமை தான் வெளிப்படுகிறது.
ஏனெனில் குரானின் 105 வது அத்தியாயத்தின் தலைப்பே ” யானை ” தான். அந்த அத்தியாயத்தில்
” யானைப் படை”யைப் பற்றி கூறுவதால் அந்த அத்தியாயத்தின் பெயர்
” யானை “. இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
//நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?//
நிச்சயம் கேட்பார்கள்தான்.
ஒரு கிலோ அரிசியை ஒரு சிறுவனிடம் கொடுத்து கொண்டு போய் அங்கு வை என்ற் சொன்னால்,
அவன் ஒவ்வொரு அரிசியாக எடுத்து போய் வைத்தால் என்ன சொல்வீர்கள்?
தலையில் தட்டமாட்டீர்கள்?
பொத்தியடி,
நீங்கள் சொன்ன குரான் வசனத்தில் சில வார்த்தைகள் தவறி இருக்கின்றன.
சரியானது:
குரான் 13 :39 => அல்லாஹ் தான் நாடியதை அழிப்பான்; அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.
இதில், தான் நாடுவோர்க்கு புதிதாய் எதுவும் மாற்றி எழுதப்படும் என்பது இல்லை. மேலும், இறைவனிடம் இறைஞ்சுவோரின் இறைஞ்சல் சம்பந்தமாக இவ்வசனம் முக்கியம். இறைஞ்சல் மூலம் எந்த அளவு விதியில் மாற்றம் இருக்கும் என்பதை 92 : 5, 6, 7 மற்றும் 8, 9, 10 ஆகிய வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
மேலும், இதே கேள்வியை சகாக்கள் அன்றே நபிகளாரிடம் கேட்டுள்ளனர். புஹாரி ஹதீஸ் # 6605 -இல் மேல்விளக்கங்களுக்கு படித்துக்கொள்ளவும்.
பின்குறிப்பு:
பதில் சொல்லிக்கொண்டிருப்பது என் பிழைப்பல்ல. நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க இது என் பிளாகும் அல்ல. நீங்கள் என்னை கேள்வி கேட்க நான் இப்பிளாகின் பிளாக்கரும் அல்ல. இது நம் பதிவு கூட இல்லை. இஸ்லாம் பற்றி அறிய ஆர்வம் இருந்தால் குரான் தமிழாக்கம் மற்றும் ஹதீஸ் தமிழாக்கம் (புஹாரி-ஏழு வால்யூம், முஸ்லிம், திர்மிதி…) படிக்கவும். அதில் ஏதும் புரியவில்லை என்றால் அதை தமிழாக்கியவரிடம் கேட்கவும். நானும் படிப்பவன்தான். இஸ்லாத்தில் எல்லாம் கற்ற அறிஞர் அல்ல.
[[[[[வால்பையன், மேல் ஜனவரி 22nd, 2010 இல் 4:11 மாலை சொன்னார்:
//நம்மால் ஒழிக்க முடிந்தாலும் சிலரை நாம் விட்டுப் பிடித்தால் ஒழிக்க முடியவில்லை என்று எப்படி அர்த்தமாகு. அதைத் தான் அரை குறை என்கிறோம்.//
ரொம்ப வருசமா விட்டுபிடிப்பார் போல,
இபிலீஸ் என்றால் அல்லாவுக்கு ரொம்ப பிடிக்குமோ!?
//இரண்டாவது கேள்வியும் இதே அரைவேக்கட்டுத் தனத்துடன் தான் உள்ளது. //
பதிலாவது முழு வேக்காடோடு கொடுங்களேன்!
//இவர் ஐந்து கேள்வி கேட்டால் மக்கள் மனதில் நன்றாக பதிய வேண்டும் என்பதற்காக் வாரம் ஒரு கேள்விக்கு பதில் சொன்னால் ஐந்துக்கும் ஒரே நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை என்று ஆகுமா? அதை நான் விரும்பவில்லை என்று ஆகுமா?//
மக்கள் மனதில் நன்றாக பதிவ வேண்டுமென்றால் அது ஏன் அரபி மொழியில் இருக்கிறது, அல்லது ஏன் மக்கள் பலதரபட்ட மொழிகள் பேசுகிறார்கள்!
எப்படி சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியாத கடவுள் எப்படி கடவுளாவார்,
அதனால் தான் ஒவ்வோரு வேதமும் பல முரண்பாடுகளுடன் உள்ளதோ!
//நமக்கு ஐம்பது கிலோ எடையுள்ள பொருலைத் தூக்க முடியும். ஆனால் தேவை கேற்ப சிறிது சிறிதாக் தூக்கினால் நம்க்கு ஐம்பது கிலோ தூக்க முடியவில்லை என்று அர்த்தமா? ஐமபது கிலோ தூக்க உனக்கு சக்தி இருந்தால் ஏன் கொஞ்சம் கொஞ்சமாக தூக்க வேண்டும்? என்று எந்த மனிதரிடமாவது கேட்பாரா?//
எல்லாம் வல்ல கடவுளுக்கே 50 கீலோவை தூக்க முடியாது போல, அதனால் தான் 7 நாட்கள் ஆற அமர உலகை படைத்திருக்கிறார்!
மனிதனுக்கு சக்தி குறைபாடு இருக்கலாம், ஆனால் கடவுளால் சொடுக்கிடும் நேரத்தில் உலகை படைக்க முடியவில்லை என்றால் அவரும் மனிதனை போல தானே பலகீனமாக ”படைக்கப்பட்டிருக்கிறார்”
//நாலாவது மற்றும் ஐந்தாவ்து கேள்விகளுக்குத் தான் நாத்திகர்களுடன் நடந்த விவாதத்தில் நிரூபித்துள்ளோம். அதை பார்க்கச் சொல்ல்வும். //
சுட்டி கொடுக்கவும்!, கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரிலெல்லாம் வர சொல்லமாட்டேன்!
//ஒரு அணு வெடித்து இந்த உலகம் எப்படி உண்டானது என்று கூறுகிறார்கள். அந்த அணு எப்படி உண்டானது என்று கேட்டால் திரு திருவென முழிக்கிறார்கள்.//
அணு உண்டானது பற்றி திரு திரு என்று நாங்கள் முழுக்கிறோம், கடவுளை படைத்தது யார் என்று நீங்கள் திரு திரு என்று முழிக்காமல் பதில் சொல்லுங்கள்!
//ஒரு அணு தான் அனைத்துக்கும் மூலம் என்று முடித்துக் கொள்வதை விட மேபெரும் ஆற்றல் மிக்கவன் படைத்தான் என்று முடிப்பது தான் அறிவுப் பூர்வமானது.//
ஓ! இம்புட்டு தான் உங்க அறிவுபூர்வமா!?
//எந்த ஒன்றையும் ஒரு இடத்தில் முடிப்பது தான் பகுத்தறிவு. இது கூட விளங்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.//
அடடே! பகுத்தறிவுக்கு புது விளக்கமெல்லாம் கொடுக்கிறாரே!
//அவர் தனி நபராக இருந்தாலும் அவர் நமது தலைமையைச் சந்தித்து அவர் கேட்ட ஐந்து கேள்விகள் குறித்து முதலில் விவாதிக்க வரச் சொல்லுங்கள். நாம் தயாராக இருக்கிறோம்.//
தலைமைன்னா யாரு அல்லாவா!?
நாமும் சந்திக்க தயாராக இருக்கிறோம்!
வர சொல்லுங்கள்!]]]]]]
பையா,
என்னை மன்னித்துவிடுங்கள். உம்மை நான் பெரிசா நினைத்ததற்கு.
உம்மிடம் ஏதாவது கொஞ்சம் விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்த என்னை இப்படியா மோஷம் செய்வீர்கள்.
நாத்திகர்கள் கூட PJ அவர்களிடம் நேரடி விவாதத்தில் கொஞ்சமாவது போக்கு காட்டினார்கள். ஏதாவது சமாளிக்க முயற்ச்சித்தார்கள்.
ஆனால் நீர் கொஞ்சங்கூட என்னிடம் ஒண்ணுமில்லை நான் வெத்துவேட்டு என்று இப்படியா உம்மை நீர் வெளிபடித்திக் கொள்வீர்.
என்னா…… ஒரு உளறல்!
நீர் யாரோ சொன்னதையும் படித்ததையும் வைத்து ஒரு சில கேள்வி கேட்டதை வைத்து உம்மை நான் தப்பாக நினைத்து விட்டேன். இங்கு (இஸ்லாத்திற்கு எதிராக) பின்னூட்டம் இடுபவர்களும் இப்படிதானோ?
நான் உண்மையில் நம்புகிறேன் செங்கொடி அவர்களின் பதில் விவாதத்தின் போது இப்படி இருக்காது என்று.
//நெத்தியடி முஹம்மத், மேல் ஜனவரி 22nd, 2010 இல் 9:19 மாலை சொன்னார்:
பொத்தியடி,
நீங்கள் சொன்ன குரான் வசனத்தில் சில வார்த்தைகள் தவறி இருக்கின்றன.
சரியானது:
குரான் 13 :39 => அல்லாஹ் தான் நாடியதை அழிப்பான்; அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது. //
அதுநான் சொன்ன குரான் வசனமல்ல.. அது நீங்கள் சொன்ன குரான் வசனம்.
https://senkodi.wordpress.com/2009/11/13/islam-7/
பதிவில் நீங்கள் எழுதியதிலிருந்து மேற்கோள் காட்டி விவாதித்திருக்கிறேன்.
ஆகவே உளறியது நீங்கள்தான்.
நீங்கள் சொல்லும் இந்த வசனத்திலும் உளறல் குறையவில்லை.
குரான் 13 :39 => அல்லாஹ் தான் நாடியதை அழிப்பான்; அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.
ஏன் நாடியதை அழிக்கவேண்டும்? ஏன் நாடியதை அழிக்காது வைக்கவேண்டும்? தான் அழிக்கப்போகிறோம் என்று முகம்மது உருவாக்கும் அல்லாவுக்கு தெரியாதா?
அழிக்கபோகிறோம் என்று தெரிந்தே ஏன் முட்டாள்தனமாக தவறான ஒன்றை முதலில் எழுதவேண்டும்?
இது முகம்மது ஒன்று கூறிவிட்டு அதன் பின்னால் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு் மாற்றி எழுதிகொள்வதை சப்பைக்கட்டு கட்ட முகம்மதே உருவாக்கிய வசனம் என்றுதான் தெரிகிறது. இந்த உளறலுக்கு கடவுள் மேல் பழி!
—
இதுதான் நீங்கள் சொல்லும் ஹதீஸ்
6605. அலீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில்
ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி
(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி
(ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் ‘சொர்க்கம் அல்லது
நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’
என்றார்கள்.
அப்போது மக்களில் ஒருவர் ‘அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட
விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து
விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்)
அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று
கூறிவிட்டு பிறகு ‘(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து,
நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’
எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக்
காட்டினார்கள். 14
—
எங்கே பதில் கூறுகிறார் முகம்மது? சப்பை கட்டு கட்டுகிறார். சொர்க்கம் நரகம் என்று எழுதியிருந்தாலும் விடாமல் செயலாற்று . சொர்க்கத்துக்கு போகும் வழியை எளிதாக்குவேன் என்று அல்லா மேல் பழியை போட்டு சொல்கிறார்.
எதுக்காம்? சும்மா இருந்தாலும் நரகமோ சொர்க்கமோ மாத்த முடியாது என்றால் எதுக்கு செயலாற்றனும்? அந்த கேள்விக்கு பதில் உண்டா முகம்மதிடம்? அல்லது முகம்மது உருவாக்கும் அல்லாவிடம்?
முகம்மது இதுதான் கடவுள் என்று கடவுளைத்தான் கேவலப்படுத்துகிறார்.
சகோதரர் இனிமை அவர்களுக்கு ,
உங்களுடைய போன் நம்பர் தரவும்
அ rf1984@rediffmail.com என்ற மைலுக்கு அனுப்பவும்
நன்றி
ரபிக் , பவானி , ஈரோடு .
மிக அழகாக பதில் கொடுத்த இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. ஜெசக்கல்லாஹூ ஹைரன்.
வால் பையனிடம் கேட்டிருந்தேன், விவாதம் சம்பந்தமாக ஒரு தலைப்பு கொடுக்க முடியுமா? அந்த தலைப்பின் அடிப்படையில் குறைவாக 10 கேள்விக்ள கேட்க முடியுமா? என்று கேட்டிருந்தேன். என்னுடைய கேள்விக்கான அர்த்தமே புரியாமல் விவாதத்திற்கு வருகிறேன் என்கின்றார்.
விவாதம் என்றால் என்னவென்று அறிவாரா இந்த வால் பையன் என்ற கேள்விதான் எழுகின்றது?
ஏதோ நண்பர்களுடன் கூடி அரட்டை அடிப்பது போன்றோ? மேடைப் பேச்சில் எழுப்பப்படும் கேள்வி போன்றோ நினைத்துவிட்டார் என நினைக்கின்றேன்.
முதலில் விவாதம் என்றால் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வால்பையன் தெரிந்துக் கொள்வது நல்லது.
விவாதத்திற்கு முன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இவர் அறிவாரா?
வால் பையன் அவர்களே! உங்களின் சிறிது நேரம் ஒதுக்கி கீழ்கண்ட வலைத்தளத்தில் நடைபெறும் விவாதத்தை பார்த்து வாருங்கள். பிறகு உங்களிடம் உங்களுருலிலேயே செய்யும் விவாதம் பற்றி முடிவு செய்யலாம்.
http://www.onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/
http://www.onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama/
http://www.onlinepj.com/bayan-video/vivathangal/nathikarin_moodanambikai/
வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன்.
ரவுசு…..
///அதுநான் சொன்ன குரான் வசனமல்ல.. அது நீங்கள் சொன்ன குரான் வசனம்.
https://senkodi.wordpress.com/2009/11/13/islam-7/
பதிவில் நீங்கள் எழுதியதிலிருந்து மேற்கோள் காட்டி விவாதித்திருக்கிறேன்.
ஆகவே உளறியது நீங்கள்தான்.///
வெறும் விதண்டாவாதத்துக்கு மட்டுமே விவாதிகிறீர்கள் என்று புரிகிறது. அதனால் ரொம்ப அலுப்பாக இருக்கிறது பதில் எழுத. அந்த மறுமொழியில் அதை எக்சாக்ட் குரான் வசனமாக நான் சொல்லவில்லை. அவாறு நீங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக அது அமைந்துவிட்டதற்கு வருந்துகிறேன். அதில் உள்ள பொருளாகத்தான் கூறி உள்ளேன். அதற்கு மேலேயும் ஒரு பொருள் தலைப்பில் அது போன்ற பல வசனங்கள் உள்ளன என்று கூறியுள்ளேன். அந்த வார்த்தைகளே அந்த அனைத்து வசனங்களிலும் ரிபீட் ஆகி இருக்காது.
//நீங்கள் சொன்ன குரான் வசனத்தில் சில வார்த்தைகள் தவறி இருக்கின்றன.// என்று தான் கூறியுள்ளேன். நீங்கள் உளறுகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. //ஆகவே உளறியது நீங்கள்தான்.// என்கிறீர்கள். கொடுமை.
ஆக, புஹாரி உங்களிடம் இருக்கிறது. மகிழ்ச்சி. அதை சற்று புரிந்துகொள்வதில் உங்களுக்கு பிரச்சினை உள்ளது. தெளிவாகவே சொல்கிறேன். நீங்கள் கூட ஒரு காலத்தில் இறைவன் நாடினால்-அதாவது பதிவேட்டில் உங்களைப்பற்றி கீழ்கண்டவாறு இறைவன் எழுதி இருந்தால், ‘வணக்கத்துக்குறிய இறைவன் ஒருவனே, முஹம்மது அவ்விறைவனின் தூதர்’ என்று கூறி முஸ்லிம் ஆகலாம். அதன் பின் முஸ்லிமாக வாழ்ந்து மரணித்து சொர்க்கம் செல்பவராக இருக்கலாம். அல்லது மீண்டும் தடம் மாறி நரகம் செல்பவராகவும் இருக்கலாம். இவ்வாறில்லாமலும் போகலாம். இறைவனுக்குமட்டுமே என்ன எழுதி இருக்கிறது என தெரியும். என்ன… அதற்கான வழிகள் எளிதாக அல்லது கஷ்டமாக ஆக்கப்படலாம். தட்ஸ் ஆல்.
பையா,
என்னை மன்னித்துவிடுங்கள். உம்மை நான் பெரிசா நினைத்ததற்கு.
உம்மிடம் ஏதாவது கொஞ்சம் விஷயம் இருக்கும் என்று எதிர்பார்த்த என்னை இப்படியா மோஷம் செய்வீர்கள்.
நாத்திகர்கள் கூட PJ அவர்களிடம் நேரடி விவாதத்தில் கொஞ்சமாவது போக்கு காட்டினார்கள். ஏதாவது சமாளிக்க முயற்ச்சித்தார்கள்.
ஆனால் நீர் கொஞ்சங்கூட என்னிடம் ஒண்ணுமில்லை நான் வெத்துவேட்டு என்று இப்படியா உம்மை நீர் வெளிபடித்திக் கொள்வீர்.
என்னா…… ஒரு உளறல்!
நீர் யாரோ சொன்னதையும் படித்ததையும் வைத்து ஒரு சில கேள்வி கேட்டதை வைத்து உம்மை நான் தப்பாக நினைத்து விட்டேன். இங்கு (இஸ்லாத்திற்கு எதிராக) பின்னூட்டம் இடுபவர்களும் இப்படிதானோ?
நான் உண்மையில் நம்புகிறேன் செங்கொடி அவர்களின் பதில் விவாதத்தின் போது இப்படி இருக்காது என்று.
சகோதரர் அப்துல் குத்தூஸ் அவர்கள் சொன்னதையே நான் இங்கு வழிமொழிகிறேன். அவர் கொடுத்த சுட்டிகளை பார்த்து விவாதம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள முற்சிக்கவும் வால்பையன் அவர்களே.
சகோதரர் இனிமைக்கு உங்களின் மீது ஏக இறைவன் என்றென்றும் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்தவனாக, இவ்விவாதம் சம்பந்தமாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. நீங்கள் செங்கொடியிடம் நிறைய எதிர்பார்க்குரிங்க ஆனால் வால்பையனை விட மிகவும் அறிவுப்பூர்வமான(???) வாதத்தையே அவர் விவாதத்தில் எடுத்து வைப்பார். மீண்டும் ஒரு முறை நீங்கள் ஏமாற போகிறீர்கள் என்றே எண்ணுகின்றேன்.
விவாதம் எப்படி இருந்தாலும் கம்யூனிச டவுசர் அவிழ்ந்து அவமானப்பட போகும் அந்த நன்னாளை,பலரைப் போன்று நானும் எதிர் பார்த்து காத்திருக்கின்றேன்.
சகோதரர் ஷாஜஹான்,
உங்களின் மீதும் நம் சகோதரர்கள் அனைவர்மீதும் ஏக இறைவன் என்றென்றும் அருள் புரிவானாக என்று பிரார்த்திக்கிறேன்.
சும்மா இருந்தாலும் நரகமோ சொர்க்கமோ மாத்த முடியாது என்றால் எதுக்கு செயலாற்றனும்? அந்த கேள்விக்கு பதில் உண்டா முகம்மதிடம்? என்று பொத்தியடி கேட்டார்.
அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார் நெத்தியடி? //அதற்கான வழிகள் எளிதாக அல்லது கஷ்டமாக ஆக்கப்படலாம். தட்ஸ் ஆல்..//
என்று முகம்மது சொல்வதாக நெத்தியடி சொல்கிறார்.
கேட்ட கேள்வி என்ன? கொடுத்திருக்கும் பதில் என்ன?
ஏன் செயலாற்ற வேண்டும்? என்பது கேள்வி. இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் என்றால், எதாவது உளற வேண்டியது.
அரிசி இருக்கா என்று கேட்டால், காக்கா பறக்குது என்று சொல்வது போல சம்பந்தமில்லாத ஒரு பதில்.
இது விளக்கமாம்.
//நீங்கள் சொல்லும் இந்த வசனத்திலும் உளறல் குறையவில்லை.
குரான் 13 :39 => அல்லாஹ் தான் நாடியதை அழிப்பான்; அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.
ஏன் நாடியதை அழிக்கவேண்டும்? ஏன் நாடியதை அழிக்காது வைக்கவேண்டும்? தான் அழிக்கப்போகிறோம் என்று முகம்மது உருவாக்கும் அல்லாவுக்கு தெரியாதா?
அழிக்கபோகிறோம் என்று தெரிந்தே ஏன் முட்டாள்தனமாக தவறான ஒன்றை முதலில் எழுதவேண்டும்?
இது முகம்மது ஒன்று கூறிவிட்டு அதன் பின்னால் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு் மாற்றி எழுதிகொள்வதை சப்பைக்கட்டு கட்ட முகம்மதே உருவாக்கிய வசனம் என்றுதான் தெரிகிறது. இந்த உளறலுக்கு கடவுள் மேல் பழி! //
என்று பொத்தியடி நச்சென்று அடித்துவிட்டார். இவர்கள் கம்யூனிஸத்தின் டவுசரை கழட்ட போகிறார்களாம். முகம்மதின் டவுசரே கழண்டு போய் கிடப்பது தெரியவில்லை.
ஏ அப்துல் நஸிர் ………………………………….யே எப்படி இருக்க?
எப்படி நேரடி விவாதம் போகும் என்பதற்கு “கார்த்திக்”க்கின் பதில்கள் ஒரு உதாரணம்.
இக்கட்டுரையை எழுதுவதன் மூலம் இறைவனிலும் குரானிலும் அசையாத நம்பிக்கை வைத்துள்ளவர்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதிக்கலாமேயொழிய அவர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியாது. உலக ரீதியாக தொழிலாளர் வர்க்க புரட்சியை ஆதரித்து அதை நிலைநாட்டி தொழிலாளர் வர்க்க சர்வாதிகார வழி நடத்தல் மூலமாகவே உலகில் நிலவும் சகல மூட நம்பிக்கைகளையும் வேறோடு பிடுங்க முடியும். இப்படியான வீணடிப்புகளை விட்டு ஆக்கபூர்வமான படைப்புகளை உருவாக்கலாமே.
ஏ அப்துல் நஸிர் ………………………………….யே நீ என்னை “தீவிரவாதி” என்று சொன்னதால்தாண்டா உன்னை குடையறேன்.நீயேண்டா விவாதத்தைப்பற்றியே அலறிக்கொண்டிருக்கிறாய்.உனக்கு என்ன வந்தது செங்கொடியாச்சு பீஜேயாச்சு உனக்கு என்ன இதில் நோகுது.இன்னும் அசிங்கசிங்கமாக பேசிடுவேன் சபை நாகரீகம் கடைபிடிக்கனும்னுதான் அடக்கி வாசிக்கிறேன்.
பைபிள், குரான், மகாபாரதம், இராமாயணம், கீதை போன்ற சகல படைப்புகளையும் யதார்த்த பூர்வமான சிந்தனைகளுடன் படிப்பவர்களுக்கு புரியும் இவைகள் மனித நாகரீகம் வளர்ந்த பின்னரே எழுதபட்டிருக்கின்றன என்பது. பிழையான காரியங்களில் மூழ்கியிருந்த மக்களை மீட்டு நல்ல பாதையில் இட்டு செல்வதற்கான நோக்கமாகவும் இருக்கலாம். ஆனபடியால் மக்கள் இவற்றில் சொல்லபட்டுள்ள முரண்பாடுகளை கருத்தில் கொள்ளாது இவற்றில் கூறபட்டுள்ள போதனைகளை கடைபிடிப்பது தவறில்லை.
எப்படி நேரடி விவாதம் போகும் என்பதற்கு “கார்த்திக்”க்கின் பதில்கள் ஒரு உதாரணம்.
தோல்வி அடைந்தாலும் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
இப்படிப்பட்டவர்களிடம் விவாதம் செய்யமுடியுமா?
தவறாக எழுதுகிறோம் என்று தெரிந்தே தவறாக எழுதி பின்னால் அதனை மாற்றுபவர் ஒரு கடவுளாக இருக்கமுடியுமா?
ஆகவே இப்படி அடிக்கடி திருத்தி எழுதியிருப்பதை வைத்து குரானை எழுதியது முகம்மதுவே என்று பொத்தியடி நிரூபிக்கிறார்.
அதனை ஒன்று மறுக்கவேண்டும். அல்லது அந்த வாதம் சரிதான் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். இரண்டும் இல்லாமல் வன்முறையாக பதில் எழுதுவதை என்ன என்று சொல்வது?
Mr.அப்துல் நஸிர்
“””””””இன்றைக்கு அவர்களிடம் உங்களைப்போன்ற தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துவிடலாம். ஆனால் நாளைக்கு இன்னொரு ஒஸாமாவோ, ஜவஹருல்லாஹ்வோ அவர்களை மூளைச்சலவை செய்ய வாய்ப்பு இருந்துகொண்டே இருக்கும். “””””””””””””””””
அப்துல் நஸீர்தான் என்னை முதன்முதலில் தீவிரவாதியென்று தகாத வார்த்தையை உபயோகித்தார்.
அவருக்கு நானளித்த பதில்
“இது உங்களுக்கும் உங்கள் சமுதாயத்திற்குமுள்ள பிரச்சினை அதில் நான் தலையிடப்போவதில்லை. என்னை நீங்கள் எப்படி தீவிரவாதியென்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது.இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும்.”
என்று பலமுறை கூறியும் அவர் மன்னிப்பு கேட்கவேயில்லை.அதனால்தான் அவர் பின்னூட்டமிடும்போதெல்லாம் அவரை வசைப்பாடுகிறேன்.
ஆனால் அவரோ பிரச்சினையை வேறு திசையில் திருப்பி கொண்டிருக்கிறார்.
பெரிய தலைங்களே விவாதம் செய்வதாக ஒப்புகொண்டுவிட்டார்கள் டேய் “அள்ளக்கை அப்துல் நஸீரே” உனக்கு என்ன நோவுதுன்னு தெரியலையே.
//குரானின் 105 வது அத்தியாயத்தின் தலைப்பே ” யானை ” தான். அந்த அத்தியாயத்தில்
” யானைப் படை”யைப் பற்றி கூறுவதால் அந்த அத்தியாயத்தின் பெயர்
” யானை “. இதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.//
ஒரு இஸ்லாமிய நண்பர் தான் இல்லைன்னு சொன்னார்!
அதில் யானையை பற்றி என்ன சொல்லியிருக்குன்னு தெரிந்து கொள்ளலாமா நண்பரே!
வால்பையன், மேல் ஜனவரி 25th, 2010 இல் 10:39 AM சொன்னார்:
//ஒரு இஸ்லாமிய நண்பர் தான் இல்லைன்னு சொன்னார்!
அதில் யானையை பற்றி என்ன சொல்லியிருக்குன்னு தெரிந்து கொள்ளலாமா நண்பரே! //
அதில் யானையைப் பற்றி விரிவாக எதுவும் இல்லை. ஒரு வேளை அதற்கென்று எந்த சிறப்பும் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஏன் அது இந்துக்களின் கடவுள் என்பதற்காக கேட்கின்றீர்களா? செய்தியின் ஓட்டத்தில் கூறப்பட்ட யானைப்படையைப் பற்றி கீழ் உள்ள வலைதளத்தில் போய் பார்க்கலாம். எந்த ஒரு முன் முடிவுடன் செல்லாமல் அதை படிக்கவும். அதை நீங்கள் படித்தவுடன் உங்களின் புரிதலைக் கூறுங்கள்.
பிறகு அந்த அத்தியாயத்தில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வை கூறினாலும், அதில் உள்ள கருத்தை இப்பொழுது உள்ள நடைமுறை வாழ்கையுடன் எப்படி ஒப்பு நோக்குகின்றோம் என்பதை விளக்குகின்றோம்.
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/alfeeel/
http://www.tamililquran.com/quran.asp?sura=105&line=0
சகோதரர் வால் பையன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
யானையைப் பற்றி…
அத்தியாயம் : 105
அல் ஃபீல்- யானை
(இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்
பெயரால் …
1. யானைப் படையை உமது இறைவன்
எப்படி ஆக்கினான் என்பதை நீர்
அறியவில்லையா?
2. அவர்களின் சூழ்ச்சியை அவன்
தோல்வியில் முடிக்கவில்லையா?
3. அவர்களுக்கு எதிராகப்
பறவைகளை கூட்டம் கூட்டமாக
அனுப்பினான்.
4. சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள்
மீது அவை வீசின.
5. உடனே அவர்களை மெல்லப்பட்ட
வைக்கோல் போல் ஆக்கினான்.
//யானைப் படையை உமது இறைவன்
எப்படி ஆக்கினான் என்பதை நீர்
அறியவில்லையா?//
இது மட்டும் தானா!?
அதனால் தான் அந்த நண்பர் மறந்துவிட்டார் போல!
சகோதரர் வால் பையன் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் .
உங்களின் வாடிக்கையான கிண்டலே பதிலாக வந்துள்ளது, சிந்திக்கும் சக்தி உள்ளவர்களுக்கு இந்த வசனங்கள் எப்பேற்பட்ட விஷயத்தை கூறுகிறது என்று புரியும்.
அப்படி சிந்தித்தும் உங்களுக்கு விளங்காவிட்டால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/355/
@ அப்துல்
அரேபியாவில் யானைகள் இருக்கின்றனவா!?
இந்த அடிப்படையை முதலில் சிந்தித்து பிறகு கூஜாவை தூக்கப்போவோம்!
.
105 இம்புட்டுத்தான் வால்
[105:1] بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
[105:1 In the name of Allah, the Gracious, the Merciful.
[105:2] أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَـٰبِ ٱلۡفِيلِ
[105:2 Hast thou not seen how thy Lord dealt with the People of the Elephant?
[105:3] أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِى تَضۡلِيلٍ۬
[105:3 Did He not cause their plan to miscarry?
[105:4] وَأَرۡسَلَ عَلَيۡہِمۡ طَيۡرًا أَبَابِيلَ
[105:4 And He sent against them swarms of birds,
[105:5] تَرۡمِيهِم بِحِجَارَةٍ۬ مِّن سِجِّيلٍ۬
[105:5 Which ate their carrion, striking them against stones of clay.
[105:6] فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ۬ مَّأۡڪُولِۭ
[105:6 And thus made them like broken straw, eaten up
.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர் வால் பையன் அவர்களே,
மீண்டும் உங்கள் அறியாமை தான் வெளிப்படுகிறது.
அந்த சம்பவத்தில் அரபு நாட்டில் யானை இருக்கிறது என்று கூறவே இல்லை யானைப் படையை வேறொரு நாட்டிலிருந்து கொண்டு வந்து மக்காவின் காபா பள்ளியை இடிக்க வந்தான் என்று தான் கூறுகிறது .
//யானைப் படையை வேறொரு நாட்டிலிருந்து கொண்டு வந்து மக்காவின் காபா பள்ளியை இடிக்க வந்தான் என்று தான் கூறுகிறது .//
அது நடப்பது எத்தனையாவது நூற்றாண்டில் என குறிப்பிட பட்டுள்ளதா!?
//ஏன் அது இந்துக்களின் கடவுள் என்பதற்காக கேட்கின்றீர்களா?//
இந்துவுக்கு எது தான் கடவுள் இல்லை!,
ஜுரான் அரேபிய வாழ்க்கைமுறையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது, அதில் மற்ற நாடுகலீன் வாழ்க்கைமுறையும், பழக்க வழக்கங்களும் பதிவு செய்யப்பட வில்லை என நண்பர் ஒருவர் கூறினார்!
ஒரு இஸ்லாமிய நண்பரும் அதை ஆமோதித்தார், அதனால் கேட்டேன்!
அந்த முதல் வசனம் நபியை பார்த்து யாரோ சொல்வது போல் இருக்கிறதே! அது தான் அல்லாவா!?
யானைகாரர்கள் என்றால் அன்னிய நாட்டில் இருந்து படையெடுத்து வந்தவர்களா!?
இந்தியர்களாக இருக்குமோ!?
.
//வால் பையன்…
அந்த முதல் வசனம் நபியை பார்த்து யாரோ சொல்வது போல் இருக்கிறதே! அது தான் அல்லாவா!?/
வால் எது முதல் வசனம்?
இதுவா?
…1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர்
அறியவில்லையா?….
தமிழில் மொழி பெயர்த்து இருப்பது அதீத கற்பனை வளம் கொண்ட புனைவு.
இதுதான் 105:1 முதல் வசனம்.
[105:1] بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
[[105:1 In the name of Allah, the Gracious, the Merciful.
“கடவுளின் பெயராலே, அன்பு , சாந்தம்” என்று தான் முதல் வசனம் சொல்கிறது. அதற்கு மேல் முதல் வசனத்தில் ஒன்றும் இல்லை. அதுதான் உண்மை.
யானையைப் பற்றி இவ்வளவுதான் உள்ளது.
[105:2] أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَـٰبِ ٱلۡفِيلِ
[105:2 Hast thou not seen how thy Lord dealt with the People of the Elephant?
“கடவுள் எவ்வாறு யானை மக்களை (பீப்புள்ஸ் ஆப் எலிபெண்ட்) கையாண்டார் என்று தெரியாதா?”
என்று கடவுள் முகம்மதுக்கு சொல்கிறார். இதில்தான் யானை வருகிறது. மற்றபடி 105 இல் யானையின் பிறப்பு, வளர்ப்பு, இடம், ஏதும் இல்லை.
.
//“கடவுள் எவ்வாறு யானை மக்களை (பீப்புள்ஸ் ஆப் எலிபெண்ட்) கையாண்டார் என்று தெரியாதா?”//
இதை தான் சொல்லியிருந்தேன்!
யானை மக்கள் என்பது யானையை போரில் பயன்படுத்தியர்வர்கள் என கொள்ளலாம் தானே!
இந்தியர்கள் அரேபியாவிற்கு படையெடுத்து சென்றதாக வரலாறு இல்லையே!
யாரை சொல்லியிருப்பார்கள்!,
அல்லது குண்டான மனிதர்களை யானை மனிதர்கள் என்கிறார்களோ!?
🙂
வசனம் 105க்கு pj தரும் விளக்கம்
“மனிதர்களே! நீங்கள் முயற்சித்தால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தியை சிறிய பொருளுக்குள் அடக்க முடியும். அப்பொருளை வெடிக்க வைத்து எதனையும் அழிக்க இயலும். உங்களுக்கு அழிவு ஏற்படாத வகையில் இதைச் செய்ய முடியும். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள் என்று சொல்வது போல இந்த (105வது) அத்தியாயம் அமைந்துள்ளது.”
என்ன சொல்ல வருகிறார் pj . இவ்வசனத்தின் மூலமே அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாரா? அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் மூலம் மக்களை அழித்துக்கொள்ளுங்கள் என்று கடவுள் உணர்த்துகிறார் என்கிறாரா? அவ்வாறு அழிப்பவன் அழியாதவாறு கடவுள் காப்பாற்றுவார் என்கிறாரா? அவ்வாறு காப்பாற்றப்பட்டவர் சொர்க்கவாசிதான் என்கிறாரா?
அடங்கொய்யாள,உங்க கடவுள் எல்லா இடங்களிலும் ஆளும்வர்க்கம் சார்பாகத்தான் பேசுவாரா!
.
வால்,
எலிபெண்ட் பீப்புள் என்று கடவுள் சொல்வது சுல்தான் ஆப் அப்ரகா ( people of the Elephant was Sultan Abraha )
http://en.wikipedia.org/wiki/Al-Fil
.
//வால்,
எலிபெண்ட் பீப்புள் என்று கடவுள் சொல்வது சுல்தான் ஆப் அப்ரகா//
கடவுளின் எதிரிகள் அரேபியாவை சுற்றியே இருப்பார்கள் போல!
குரானில் யூதர்களுக்கு எதிராக எதையும் அல்லா சொல்லவில்லை என்கிறார்கள், ஆனால் யூதர்களுக்கு முதன்மை எதிரியாக வர்களே இருக்கிறார்கள், அதை பற்றி எதாவது தெரியுமா!?
நம்மால் காபிர்கள் போல சிந்திக்கத்தெரியாது என்பதற்கு உதாரணமாக பீஜேவின் கருத்துக்களை கூறலாம்.
பீலா விட்டாலும் கொடுத்த காசுக்கு நன்றாக பீலா விடுபவர்கள் காபிர்களே.
யாராவது இந்த 105 அத்தியாயத்தில் எங்கே வெப்பம் என்ற வார்த்தைஇருக்கிறது? எங்கே “சிறிய பொருளுக்குள் அடக்குவது” பற்றிய வார்த்தைஇருக்கிறது? ”அழிவு ஏற்படாத வழியில் செய்வது” பற்றி எங்கே இருக்கிறது என்று கேட்டால் பீஜே எங்கே மூஞ்சியை வைத்துக்கொள்வார்? யானையின் பின்னால்தான் வைத்துகொள்ளவேண்டும்.
சவுதியிலிருந்து காசு வாங்கும் மூஃமின்கள் கொஞ்சம் மரை கழண்டவர்களாக இருப்பதால்தான் ஆளாளுக்கு நம்மளை கிண்டல் செய்கிறார்கள்.
இந்த பணத்தை காபிர் விஞ்ஞானிகளிடமோ காபிர் அறிவுஜீவிகளிடமோ கொடுத்திருந்தால் நம்பும் விதத்தில் அருமையாக பூச்சுத்துவார்கள்.
அமார்க்ஸ் போன்ற காபிர் அறிவுஜீவிகள் எப்படி நன்றாக பூச்சுத்துவது என்று பீஜே போன்றோர்களுக்கு பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும்
//சவுதியிலிருந்து காசு வாங்கும் மூஃமின்கள் கொஞ்சம் மரை கழண்டவர்களாக இருப்பதால்தான் ஆளாளுக்கு நம்மளை கிண்டல் செய்கிறார்கள்.//
கொஞ்சமல்ல, இஸ்லாமியர்கள் அனைவருமே மறை கழன்ற முட்டாள்கள் தான். முட்டாளாக இருப்பவன்தான் இஸ்லாமிய அடிப்படைவாதியாக இருக்க முடியும். முட்டாள்களை மட்டும் தான் மூளை சலவை செய்து தீவிரவாதியாக மாற்ற முடியும். உலகில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமிய நாடுகள் கல்வி அறிவில் பின்தங்கி இருப்பதில் இருந்து இஸ்லாம் எவ்வளவு உயர்ந்த, சிந்திக்க தூண்டும் மார்க்கம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முகமதுவிற்கு எப்படி குரான் வந்தது என்பதற்கு புகாரி ஹதீஸ் நமக்கு தெளிவாக கூறுகிறது
(ஹதீஸ், புகாரி 4483
உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார்:
‘மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது ‘என் இறைவன் மூன்று விஷயங்களில் என்னுடன் உடன்பட்டான்.
1 .’ நான் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!” என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும்,
2 .நான், (அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னயரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!” என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.
3 .நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, ‘நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ளவேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்” என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, ‘உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், ‘இறைத்தூதர் உங்களை விவாக ரத்து செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்” எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான். )
புத்தி உள்ளவர்கள் இந்த ஹதீஸ்களை படித்தாலே குரான் எப்படி வந்திருக்கும் என்று புரிந்து கொள்வார்கள். பஷீர் அவர்களே, இந்த ஹதீஸ்களை நீங்களும் படித்திருப்பீர்களே.
Do any one, including the author of this article, know what earth’s atmosphere and its layers are??? Do any of you know how Rain forms and comes back as water? Do any of you know what electro magnetic waves are? Do any of you know how electro magnetic waves and sound waves travel???
Pls go and read your secondary/higher secondary school science books. I request you all including the author, Pls.
Even with slightest change in ratio of gas molecules in the layers of atmoshphere there is a chance that clouds and rain drops wont form. Its no sicentist or communist who made it like that. Nobody could prove that it came by itself (at least logically), if thats the case one should have seen such phenomenon in all/some of other planets which formed in similar ways. In Quranic terms Atmosphere is part of first sky.
“அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான்”
So, do you know whats the function of satellite??? I really doubt. So before satellite channels, how did indian people watched Doordarshan? By connecting a wire to delhi station??? Or by having dish antenna straight to INSAT?? Pls go and read how electro magnetic waves of different wavelength can be reflected by different layers of atmosphere.
I saw some comment asking why not everything comes back from sky, why not rockets???. So if some body says, humans eat, will you say, oh! i see humans shitt, work, sleep they are not eating all the day and night, so its bullshit? The term Humans eat means Humans will eat, it didint say they will do only eating. The same way if Quran says that God created a sky that sends back things, it means it sends back things, it doenst need to send back everything to prove this term.
I can understand the hatred you guys have towards Quran and Islam, i strongly encourage you guys to ask and argue, but pls ask questions on things you really know well or at least which can with stand some logical scrutiny, because you yourselves can check it out that part of the quran is answers to questions people asked, till now.
வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான்….
I don’t know who equated this quran ayah with relativity theory? Is it just you to hype up your article? But whats scientifically wrong in telling this example as it is. Its true and proven that when you go up against gravity you feel squeezed.
No body asked anyone to become Einstein by reading Quran. But the question is why the verses of the book is not against proven scientific theories, like any other book known to Human?
With the way of your argument regd satellite and rain I can understand how scientific you are and your knowledge is. Good luck next time.
Am really sorry, that i couldnt type this in Tamil, i can try if you think my questions need to be understood and answered
இந்த பதிவிற்கு பின்னூட்டமிட்டவர்கள் அறிவியல் பாடங்களை படித்துள்ளர்களா அல்லது குறைந்த அளவு பூமியும் அதன் மேல் உயர்ந்திருக்கும் கற்று மண்டலத்தை தெரிந்துள்ளார்கள என்பது சந்தேகமாக உள்ளது. உங்களில் யாருக்காவது மழை எவ்வாறு உருவாகி மீண்டும் பூமிக்கு திரும்புகிறது என்று தெரியுமா? மின்காந்த, ரேடியோ அலைகள் என்றால் என்னவென்று உங்களில் யாருக்காவது தெயர்யுமா? அவளைகள் ஈறு பரவுகின்றன அன்று தெரியுமே? தயவுசெய்து உங்கள் 10th அல்லது 12th இயற்பியல் படங்களை புரட்டுங்கள், இந்த பதிவின் ஆசிரியர் உட்பட. கற்று மண்டலத்தி இருக்கும் மூலக்கூறுகளில் அதன் விகிதாச்சாரங்களில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அதன் அழுத்தமும் வேப்பமும் மாறி மேகமும் உருஅகத்து அது மழையாகும் மாறாது. மேகம் என்றல் என்ன மழை என்றல் என்ன ஆந்திரா கால கட்டத்தில் ‘திருப்பி அனுப்பும் ஆனம்’ ஆந்திரா சொல்லாடல் எதற்காக? அது அந்த காலகட்டத்தின் அறிவியல் தேட்டத்தின் வலிகட்டுதலாகவும், இக்காலகட்டத்தின் அறிவியலுக்கு முரனாகாமலும் இருப்பது ஏன்? “அனுப்பப்படும் அலைவரிசைகளை வானம் திருப்பி அனுப்புகிறதா அல்லது நிலைநிருத்தப்பட்டிருக்கும் செயற்கைக்கோள்கள் திருப்பி அனுப்புகின்றனவா என்பது எலோருக்கும் தெரிந்தது தான்”….இந்த அறைகளில் உங்கள் அறயியல் திறமையால் அனைரையும் மிகைத்து விட்டீர்கள் போங்கள். Sattellite என்றல் என்ன அதன் வரலாறு என்ன என்பதை அறிந்து தான் இவ்வாறு சொல்கிறீர்களா? அப்படியானால் மக்கள் ஆள் இந்திய ரேடியோ கேட்டதும், தூர்தர்சன் பார்த்தும் எப்படி? டிஷ் antenna வைத்து இன்சாட்க்கு connection கொடுத்துத்தான் பார்த்தார்களா? அல்லது டெல்லிக்கு நேரடியாக வயர் connection கொடுத்து பார்த்தார்கள? தயவு செய்து மின்காந்த அலைகள் என்றால் என்ன அதன் பல்வேறு அலைநீளங்கள் எவ்வாறு கற்று மண்டலத்தின் வெவ்வேறு நிலைகளால் திருப்பி (reflect ) அனுப்பபடுகின்றன என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்த குரான் அசனம் சமீபத்திய எந்த நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியலுக்கும் முரண் பட வில்லை. பின்னூட்டமிட்ட ஒருவர் கேட்கிறார் ” எல்லா மயிரையும் திருப்பி அணுப்பும் வானம், ராகட்ட மட்டும் ஏன் வெளிய போக விட்டுருதாம் ??? அதுக்கு இன்னும் வசனம் இல்லையா ?” ஆர்கலாக இடைச்செருகி பின் அதையே கேள்வியாக கேட்பது விந்தை தான். மனிதர்கள் சப்பிடுபார்கள் என்று சொன்னால் இவர் இல்லை இல்லை மனிதர்கள் மலம் கழிக்கிறார்கள், உறங்குகிறார்கள் அது ஏன் நீ பொய் சொல்லி இட்டை என்று சோலார் போலும். திருப்பி அனுப்பும் வானம் என்றல் அது திருப்பி அனுப்பும் avvalavuthaan. Ithai niroobikka அது ellavattrayum திருப்பி anuppa vendum என்று avasiyamillai. “வானத்தில் ஏறுபவரை போல இறுகிச்சுருங்கும் படி செய்கிறான்….” Ithil என்ன உங்கள் vaatham என்று puriyavillai. yaar இந்த vasanththirkku Einstein relativity theory yay oppittaarkal என்று theriyavillai. Ayinum ஒருவர் povieerppu sakthikku ethiraaga meele sendral irukkappattavaraippola (squeezed) unarvathu thinnam. Itharkku neengal rocket ellam eduththu kilamba vendaam. oru ratchatha rattinaththil (roller coaster) sendralae pothum. Ithai rattinamum illatha, rockettum illatha kaalaththil utharanamaga solliyathuthaan quranin sirauppu. அது எந்த vithathilum அறிவியலுக்கு muranaana utharanam alla. kuraanai படித்து vingani agunkal enrellam குரான் kooravillai, sinthikka solgirathu அந்த sinthanaiyin oodaaga iraivanin attralai ariya solkirathu. Appadipatta oru puththagam நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியல் unmaikkum முரண் padaamal ஏன் உள்ளது enbathuthaan kelvi? manithan arintha எந்த puththagamum oru nootrandukullagae kalaathiyagividungindra patchaththil kuran mattum ஏன் முரண் பட marukkirathu அல்லது murnapaadu illamal vilakkamalikka uthavum vagayil அதன் vaarthai thervugal இருப்பது ஏன்?
நண்பர் மி,
உங்களின் உணர்ச்சிவயப்படல்களை ஒத்திவைத்து விட்டு உண்மைகளை அணுகலாம்.
திரும்பத்தரும் வானம் எனும் வசனம் சொல்வது மழை குறித்து மட்டும்தான். புவியிலிருந்து நீரைக்கொண்டு மழையாக திருப்பித்தருகிறது, என்பதை விடுத்து அதில் ஒன்றுமில்லை. ஆனால் குரானை மெய்ப்பிக்க அதுமட்டும் போதாது என்பதால் அதன் பொருள் விரிக்கப்படுகிறது. மின்காந்த அலைகள் அயன மண்டலங்களிலிருக்கும் கட்டுறா எலக்ட்ரான்களில் பட்டு எதிரொலிக்கின்றன. இதனைக்கொண்டு சில அலைவரிசைகள் பயணப்பட்டாலும், எல்லா அலைகளுக்கும் இது பொருந்துவதில்லை. குறு அலைகள் அயன மண்டலங்களையும் கடந்து செல்கின்றன. இவைகளை செயற்கைக்கோள்களால் மட்டுமே திருப்பி அனுப்ப இயலும். கட்டுறா எலக்ட்ரான்களில் எதிரொலிக்கும் அலைகளையும் வானத்திற்கு மட்டும் பொறுத்த முடியாது, ஏனென்றால் உலோகங்கள் ரேடியோ அலைகளை எதிரோளிப்பதற்குக் காரணமும் இதே கட்டுறா எலக்ட்ரான்கள் தான். வானத்தில் மட்டுமல்ல பூமிக்குள் இருக்கும் உலோகங்களுக்கு அனுப்பினாலும் இந்த கட்டுறா எலக்ட்ரான்கள் திருப்பி அனுப்பும். ஆக திருப்பி அனுப்பும் தன்மை வானத்திற்கு இல்லை, அதன் எலக்ட்ரான்களில் இருக்கிறது. இப்போது நீங்கள் சொல்லுங்கள் அந்த வசனம் இது போன்ற அலைகளை குறிக்கிறது என்பதற்கு என்ன சான்றிருக்கிறது?
அறிவியல் உண்மை என்று எடுத்து வைக்கப்படும் அனைத்து வசனங்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றன. சாதாரணமாக கூறப்பட்ட ஒன்றை புனிதமாக்கும் தேவையின் நெருக்கடிகள் தான் இதற்கு காரணமாக இருக்கின்றனவேயன்றி அறிவியல் கூறுகள் அல்ல.
பொருத்தமான வாசக அமைப்புகள் என நீங்கள் கருதுவது அதற்கியைந்த நம்பிக்கையினால் தான். உறுதிப்படுத்தப்பட்ட பரிணாமக் கொள்கையை அறிவியலல்ல யூகம் என்று பரப்புபவர்கள் யூகமான பெருவெடிப்புக் கொள்கையை அறிவியல் உண்மை என்பது இதனால் தான். தேனீ கனிகளை உண்கிறது, ஆதி மனிதன் மொழி பேசியது, ஜின்கள் எனும் உயிரினம் இருப்பது இவைகளெல்லாம் அறிவியலோடு நேரடியாக மோதுவது உங்களுக்கு தெரியவில்லையா?
செங்கொடி
நேரம் ஒதுக்கி என் கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி சகோதரரே. உணர்ச்சிவசப்பட்டிருந்தால் நான் உங்கள் பதிவிற்கு பதிலளித்திருப்பேனா என்று தெரியவில்லை. சரி அதை விடுங்கள். அறிவியல் பூர்வமாக அல்லது காரண காரியதுடனாவது (Logic ) பதிலளிப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன். அதுவுமில்லை என்கிறீர்கள்.
//”திரும்பத்தரும் வானம் எனும் வசனம் சொல்வது மழை குறித்து மட்டும்தான். புவியிலிருந்து நீரைக்கொண்டு மழையாக திருப்பித்தருகிறது, என்பதை விடுத்து அதில் ஒன்றுமில்லை.”// புவியிலிருந்து செல்லும் நீர் தான் மழையாக வருகிறது என்பது எந்த காலத்து விஞ்ஞானம்? ஆறாம் நூற்றண்டு விஞ்ஞானமா? பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டு விஞ்ஞானமா? முஹம்மது நபியோ அல்லது குரானை எழுதிய வேறு எவரோ மிகப்பெரிய அறிவியல் வித்தகர் என்று சொல்கிறீர்கள? நீர் சுழற்சியை பற்றி ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்கிறார்களே. அன்றைய காலகட்டத்தின் சொல் வழக்கான மழை தரும் வானம் என்று சொல்லாமல் “திரும்பத்தரும் வானம்” என்று ஏன் சொல்ல வேண்டும். அது மழையைத்தான் குறிக்கிறது என்று நீங்கள் அடம்பிடிப்பதை ஒரு வாதத்துக்கு ஒத்துக்கொள்வோம், அதை முஹ்ஹமது நபி எவ்வாறு கண்டு பிடித்தார்?
//”ஆனால் குரானை மெய்ப்பிக்க அதுமட்டும் போதாது என்பதால் அதன் பொருள் விரிக்கப்படுகிறது.”// மழையை மட்டும் தான் அந்த குரான் வசனம் சுட்டுகிறது என்று கொண்டாலும் அது அறிவியல் விந்தை என்பதும் முஹம்மது நபி அதன் எழுத்தர் அல்ல என்பதையுமே அது உணர்த்தும்.
அறிவியலுக்காக குரான் வசனங்களுக்கு இல்லாத விளக்கம் தேவையில்லை என்பது எனது பார்வையாக இருந்தாலும் “திரும்ப அனுப்பும் வானம்” என்ற சொல்லாடலை இன்றைய அறிவியிலான மின் காத அலைகளுக்கும் அதன் எதிரொலிக்கும் பொருத்துவது எந்த தவறுமில்லை என்றே தெரிகிறது.
“எல்லா மயிரையும் ஏன் திருப்பி அனுப்ப வில்லையாம்” என்று கேள்வி கேட்டு பின்னூட்டமிட்ட அன்பர் போலவே நீங்களும் வாதம் செய்கிறீர்கள். “திரும்ப அனுப்பும் வானம்” என்பது மின் காந்த அலைகளுக்கும் அது எதிரொலிக்கப்படுவதருக்கும் உரியதல்ல என்பதை நிரூபிக்க நீங்கள் வைக்கும் வாதம் — வானம் திருப்பி அனுப்ப வில்லை ‘அதன்’ கட்டுறா எலக்ட்ரான்கள் தான் திருப்பி அனுப்புகின்றன, இல்லை இல்லை இரும்பும் தான் எதிரொலிக்கிறது என்கிறீர்கள். அதனால் வானமும் திருப்பி அனுப்பும் என்ற வார்த்தை எந்த விதத்தில் பொய்யாகும் என்பதை என்னால் எந்த மொழியிலும்/சிந்தனையிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. “சிற்றுந்து ஓடுகிறது” என்று நான் சொன்னால். நீங்கள் அதீதமாக கோபப்பட்டோ உணர்ச்சிவசப்பட்டோ “இல்லை இல்லை சிற்றுந்தில் ஊற்றப்படும் பெட்ரோல் இல் இருக்கும் கார்பன், hydrogen மற்றும் oxygen மூலக்கூறுகளால் தான் சிற்றுந்து ஓடுகிறது” என்பதும் “நாயும் தான் ஓடுகிறது” என்பதும் எந்த விதத்தில் நான் சொன்னதை பொய்யாக்கும்? இது எந்த (மூட) அறிவியல் வாதம்? உண்மையை மூடும் வாதமே தவிர வேறில்லை.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு இது எந்த விதத்தில் நியாயமான வாதமாகும்? உங்களது கோபம் குரான் வசனத்திலோ அல்லது அதன் ஆசிரியர் (அல்லாஹ்வோ அல்லது ஒரு மனிதரோ) மீதோ இல்லை போலவே தெரிகிறது. குரான் வசனங்களை வளைத்து இன்றைய அறிவியலுக்கு முடிச்சுப்போடுபவர்களின் குறையைத்தான் பதிவிலும் பதில்களிலும் சுட்டுகிறீர்கள் போலும், அதற்க்கு நீங்கள் வேறு தலைப்பு தான் வைக்க வேண்டும். நீங்கள் கோபப்படுவது யூகமான பெருவெடிப்புக் கொள்கையை அறிவியல் உண்மை என்று பரப்புபவர்கள் என்றால் நீங்கள் குரானின் மீதோ அல்லாஹ்வின் மீதோ காழ்ப்பு கொண்டு இடும் தலைப்பு எதற்கு? ஒன்று உங்கள் தலிப்புகளையும் முடிவுரையும் மாற்றுங்கள் அல்லது உங்கள் வாதங்களி குரான் வசனத்தை பொய்ப்பிப்பதர்க்கான தகுந்த அதாரம் வையுங்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு போகிற போக்கில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து satellite மட்டுமே திருப்பி அனுப்பும் என்று அடித்து விடாதீர்கள்.
நீங்கள் சொல்லும் தேனீ, ஜின் போன்ற விசயங்களுக்கு என்னால் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி எனக்கு தெரிந்த மறுப்புரைகளை இடுகிறேன் இன்ஷா அல்லாஹ.
நண்பர் மி,
மழை பற்றிய அறிவு ஆறாம் நூற்றாண்டு அறிவியலா? பதினேழாம் நூற்றாண்டு அறிவியலா? என்று கேட்பதற்கு முன்னால் கட்டுரையின் இந்தப்பகுதியை படித்திருக்கலாம்.
\\பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின் பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. முல்லைப்பாட்டின் காலம் கிபி இரண்டாம் நுற்றாண்டு.//
அயனமண்டலங்களிலுள்ள கட்டுறா எலக்ட்ரான்கள் மின்காந்த அலைகளை எதிரொலிக்கின்றன. மட்டுமன்றி எதிலெல்லாம் அந்த கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் மின்காந்த அலைகளை எதிரொலிக்கும். இப்படி இருக்கையில் அயனமண்டலங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவையென்ன?
நான் ஏன் எழுதுகிறேன்? எதற்கு எழுதுகிறேன் என்பதை அறிய இத்தொடரின் முதல் பகுதியை படியுங்கள்.
தேனீ, ஜின் பற்றிய உங்களின் விளக்கத்திற்கு காத்திருக்கிறேன்.
செங்கொடி
//முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள்// என்று அழைத்த உங்கள் நிலைமை இவ்வாறு இருக்கும் என நான் எதிர்பர்க்கவில்லைதான். குரானை பொய்ப்பிக்க வேண்டும், இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை (மதவாதிகளை) கேவலப்படுத்த வேண்டும் என்ற முன் முடிவுடன் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. சரி சுய விமர்சன/தம்பட்டங்களை விட்டு விட்டு வாதத்திற்கு வருவோம். அல்லாஹ்வையும் குரானையும் நம்பிக்கயளர்களையும் பொய்ப்பிக்க (பதிவுத் தமிழில் – கிழித்து தொங்க விட) நீங்கள் பல வாதங்கள் அறிவியலின் பெயரால் வைத்துள்ளீர்கள், அவற்றில் நான் என் பிரதிவாத பொருளாக எடுத்துக் கொண்டது இது வரை ஒன்றை மட்டும் தான். “திரும்பத்தரும் வானம்” என்பதே அது
முதலில் வானம் திரும்பத்தராது என்றே உங்கள் வாதத்தை பதித்த நீங்கள் பின் வானத்திலுள்ள எலெக்ட்ரான்கள் தான் திருப்பி அனுப்புகின்றன என்றீர்கள். தற்பொழுது //எதிலெல்லாம் அந்த கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் மின்காந்த அலைகளை எதிரொலிக்கும். இப்படி இருக்கையில் அயனமண்டலங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய தேவையென்ன?// என்ற கேள்வி மட்டுமே உங்களுக்கு மிஞ்சியிருக்கிறது. உங்கள் சுய மரியாதையை சீண்டி பார்க்கும் எண்ணம எல்லாம் இல்லை ஆயினும் உங்களின் நிலை மாறுதலை இங்கே சுட்டி காட்ட வேண்டியிருக்கிறது. உங்களின் இந்த இறுதிக்கேள்வியும் எந்த விதத்தில் உங்களுக்கு உதவுவதாக நீங்கள் நினைகிறீர்கள்? அந்த கேள்வியில் அறிவியலும் இல்லை லாஜிக்கும் இல்லை என்று உதாரணம் முதறக்கொண்டு சொன்னேன். விமானம் பறக்கும் என்று சொன்னால் இல்லை இல்லை அது வடி கட்டிய பொய் ஏனென்றால் பறவையும் தான் பறக்கிறது என்கிறீர்கள். வானம் மட்டுமே திரும்ப தரும் என்று குரான் சொல்லி இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த கேள்வியை கேட்கலாம். உங்களின் கேள்வி, “திரும்பத்தரும் வானம்” என்ற அந்த உவமைக்கு மதவாதிகளாக நீங்கள் சித்தரிப்பவர்களின் வாதத்திர்க்கே வழு சேர்க்கிறது, உங்களுக்குக்கோ அல்லது நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிறக்கோ அல்ல.
அடுத்ததாக நீங்கள் வைத்திருக்கும் வாதம் தான் சங்க காலமும் முல்லைப்பாட்டும். முதல் வாதத்தில் உங்கள் தவறை ஒப்புக்கொண்டு அடுத்து வந்ததற்கு நன்றி. நீங்கள் இந்துத்துவ கும்பலுக்கு வேலை பார்பவரா அல்லது RAW போன்ற உளவு அமைப்பிற்கு வேலை பார்ப்பவரா எனபது தெரியவில்லை. அவர்கள் தான் வழித்து திரித்த வாதங்களையும், வெத்து பெருமைகளையும் தாங்களாகவே விக்கிபீடியா வில் போட்டுக்கொண்டு அதையே ஆதாரமாக கட்டுவார்கள். அவற்றிர்க்கு அதிக அறிவியல் முக்கியத்துவம் தர முடியாது. அல்லது நீங்கள் அப்படியில்லாமல் உண்மையாகவே கடவுள் நம்பிக்கையில்லாமல் (திருமால் பெருமையை உதாரணம் காட்டுகிறீர்களே?) குரானை தரம் தாழ்த்த கிண்டலுக்காக தான் சொன்னீர்களா என்பதும் தெரியவில்லை. இதன் காரணமாகவும் அது உங்கள் இரண்டாவது வாதமாக இருப்பதாலும் அந்த பாடல் பற்றி முன்பு பேச வில்லை. நீர் சுழற்சியின் தீர்க்கமான் அறிவு பதினெட்டாம் நூற்றண்டிலேயே மனிதர்களுக்கு கிடைத்தது எனபது இன்றைக்கு நாம் படிக்கும் வரலாறு.
“பூமியிலுள்ள நீர்நிலைகளின் நீர் தான் மேகமாகி மழையாகிறது என்பதை பத்துப்பாட்டில் வரும் முல்லைப்பாட்டின் பாடிமிழ் பனிகடல் பருகி எனத்தொடங்கும் பாட்டு தெரிவிக்கிறது. ” இதில் எந்த அளவு அறிவியல் உண்மை இருக்கிறது என்று நீங்கள் மனதார நம்புகிறீர்கள்? குரானை விமர்சிக்க வேண்டும் என்ற உங்களின் முன் முடிவு தான் உங்களை இந்த பாடலை மேற்கொள காட்ட தூண்டியிருக்கிறது.
பனிக்கடல் என்பது திருமால் எழுந்தருளியிருக்கும் (வானத்தில் இருக்கும்) பார்கடலையும் குறிக்கும் என்று ஒரு தமிழறிஞர் கூறுகிறார். (http://www.tamilvu.org/slet/l3600/l3600urp.jsp?id=239) ) உங்கள் சூதிரப்படி அக்கால மக்களின் நம்பிக்கை படி தான் அந்தக்கால ஆக்கங்களை பொருள் கொள்ள எண்டும் என்றால் இந்த பாடலுக்கு வான் கடலை தான் அர்த்தம செய்ய வேண்டும். அதனால் தான் திருமாலின் கரு மேனியையும் கார் மேகங்களையும் ஒன்றாக பார்த்தே பல்லாயிரம் பாடல்கள் சங்க காலம முதல் சமீப காலம் வரை இருக்கின்றன.
ஆயினும் மதவாதிகள் குரானுக்கு வைத்துள்ள சூதிரத்தையே இங்கு நாம் பயன் படுத்துவோம். பனிக்கடல் என்பதற்கு பூமியுலுள்ள கடல் என்றும் பொருள் இருப்பதால் உங்களின் வாதத்திற்காக அவ்வாறே வைத்துக்கொவோம். ஆயினும் இன்றைய அறிவியலுக்கு கொஞ்சமும் பொருந்தாததையே அந்த பாடல் சொல்கிறது. மேகம் என்ற ஒன்று தனியாக இருப்பதாகவும். அது வெண்ணிறமாக(கருமயற்று) இருப்பதாகவும். கடல் நீரை ஆது (தானாக) வந்து அருந்தியதால் திருமாலை போன்ற கரு நிறமாக மாறி பின் மழையாக பொழிவதாகவும் அந்த உவமானப்பாடல் கூறுகிறது. இதை வைத்து மேகம் நீரை அறுந்து/உறிஞ்சுகிறது என்ற அறிவு அவர்களுக்கு இருந்தது என்று புலப்படுமா நீர் சுழற்சியை அறிந்திருந்தார்கள் என்று புலப்படுமா? நீர் இல்லாத மேகம் என்ற ஒன்று இருக்கிறதா? பின் நீரை அருந்துவதால் தான் அது மழை பொழிவிக்கும் கார் மேகமாக மாறுகிறதா? கடல் நீர் தான் மழை நீர் என்றால் மழை நீர் ஏன் மதுரமாகவும், கடல் நீர் உப்பாகவும் இருக்கிறது என்பதை விளக்கும் அறிவியல் பத்துப்பாடல்கள் உள்ளனவா? பெண்ணை மானாகவும், மீனாகவும், இன்னும் என்ன என்னவோ வாகவும், கல்லை கடவுளாகவும் உவமை கூறியவர்கள். மேகத்தை கடல் நீராக ஏன் உவமை சொல்ல மாட்டர்கள்? அதற்கு எந்த அறிவியல் தேட்டம் அவர்களுக்கு தேவை?
அரசர்களுக்கு சொம்பு தூக்கி இல்லாத பொல்லாத பொய்யை பெருமையாக கூறி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த,, உடல் வேட்கையையும் காதல காமராசங்க்ளையும் மட்டுமே மையமாக கொண்டு இன்றைய தமிழ் சினிமாக்களை மிஞ்சும் அளவிற்கு ‘ஓடிப்போலாமா’ கதை சொல்லி மிட்டா மிராசுதாரர்களிடம் கையேந்தி நின்ற புலவர்களின் பாடல்களை நீங்கள் குரானுக்கும் அறிவியலுக்கும் ஒப்பிடுவது விந்தை தான்.
இப்பொழுது குரான் சொன்ன உவமைக்கு வருவோம். “திரும்பத்தரும் வானம்”— இன்று வரை நிறுவப்பட்டுள்ள எந்த அறிவியல் உண்மைக்கும் முரண படாத, மேலும் உண்மை படுத்துகின்ற உவமை. வானத்தின் திரும்பத்தரும் தன்மையாலேயே நீராவி மேகமாக மாறி அதை மழையாக திரும்பத்தருகிறது.. இந்த உவமை நீங்கள் கொடுத்த முல்லை பட்டை போல நீர் சுழற்சியின்/அறிவியலின் எந்த விதிக்கு முரண படுகிறது. அந்த தன்மையாலேயே மனிதன் பயன் படுத்தா காலங்களிலும், இன்றைய காலங்களிலும், மின் காந்த அலைகள் மற்றும் இன்ன பிற தேவையான விசயங்களை அது திருப்பி அனுப்புகிறது. அப்படி பட்ட தன்மையுடன் வானத்தை படைத்த இறைவனுக்கே எல்லா புகழும். அந்த வசனம் வானத்தின் மீது சத்தியமிட்டு இது இறைவனின் வேதம் என்ற கருத்தையே முன் வைக்கிறது என்றாலும் அதன் உவமை ஏன் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கும் முரண படவில்லை என்பது தான் மதவாதிகளின் கேள்வி. அதை மறுக்கப் புறப்பட்ட உங்கள் வாதம் அறிவியலுக்கு முற்றிலும் முரணான வாதமாகவே, குறைந்த பட்சம் “திரும்பத்தரும் வானம்” விசயத்தில், உள்ளது என்பதையே நான் சுட்டி கட்ட விரும்புகிறேன்.
உங்களின் இந்த பதிவிலிருந்து “திரும்பத்தரும் வானம்” என்ற குரானின் உவமை அறிவியலுக்கு மாற்றமானதாக நீங்கள் காண்பிக்க முயன்றதை நீகிவிடுவதே சாலச்சிறந்தது.
//நான் ஏன் எழுதுகிறேன்? எதற்கு எழுதுகிறேன் என்பதை அறிய இத்தொடரின் முதல் பகுதியை படியுங்கள்.//
உங்கள் குறிக்கோளுக்கிணங்க குரானை கிழித்து தொங்க போடவும், இஸ்லாத்தின் இருப்பையும், புண்ணியமான மார்கசிய வாழ்க்கை திட்டத்தை விவரிக்கவுமே உங்களை வேண்டுகிறேன்.. ஆயினும் நான் படித்த வரை நீங்கள் குரானுக்கு விளக்கம் சொல்பவர்களை மட்டுமே விமர்சித்து இருக்கிறீர்கள் அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகளுடன்.
நண்பர் மி,
முதலில் உங்களுக்கு நன்றி, இணையப்பரப்புகளில் மேய்ந்து, மேற்கோள்கள் கொண்டு விரிவான ஒரு வினைபுரிந்ததற்காக. வரவேண்டும், தொடரவேண்டும். அவ்வாறேயான விரிவான மறுவினை தரவேண்டும் என்றாலும் நேரமின்மையால் சுருக்கமாகவே தருகிறேன்.
முல்லைப்பாட்டின் பாட்டுடைதலைவன் யார்? அவனின் தகுதிகள் குரான் கூறும் அல்லாவின் தகுதிகளோடு பொருந்துவனவா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தபின்னரே அச்செய்யுள் வரிகளின் அறிவியல் தீற்றல்களை கையாளல் வேண்டும் என்றெல்லாம் வரம்பு விதித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவை பொருந்திப்போகும் களங்கள் தான் ஒப்புமைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன. இவைகுறித்து இத்தொடரின் ஒரு பகுதியில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன். \\இவைகளையெல்லாம் அவர்களின் கற்பனைத்திறனுக்கு சான்றாக கூறமுடியுமேதவிர சம்பந்தப்பட்டவர்களின் தெய்வீகத்தொடர்புகளுக்கு சான்றாக ஆகாது// (குரான் கூறுவது அறிவியலாகுமா?) இங்கு குரானின் திரும்பத்தரும் வானம்(இது தான் அந்த வசனத்தின் சரியான பொருளா? பல்வேறு மொழிபெயர்ப்புகள் பல்வேறு பொருள்கள்) எனும் சொல்லாட்சியை அறிவியல் என்று கொண்டால் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே வேறொரு கடவுளை துணைக்கழைத்து அதுபோன்றதொரு கற்பனையை அறிவியலில்லை என ஒதுக்கமுடியாது. அல்லது முகம்மதுவுக்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள ஒருவராலேயே இவ்வாறு கற்பனை செய்யமுடியும் என்றால் நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு முகம்மதுவினால் ஏன் முடியாது?
அடுத்து அந்த வசனத்தின் பொருத்தப்பாடு குறித்து பேசுவதாயின், எது வானம்? அது எதை திருப்பி அனுப்புகிறது? என்பது தெளிவாகவேண்டும். அப்படியான தெளிவு குரானில் இல்லை என்றானபின், மேற்பூச்சு விளக்கங்களுக்கு அறிவியல் வண்ணமடிக்கவா இத்தனை ஆர்ப்பாட்டம்? சோதிடக்காரனின் மொழியில் வடக்கு திசையிலிருந்து வேலை வரும் என்பது போலான வசனங்களை அறிவியலுக்குள் பொருத்திவிட்டால் அறிவியல் என்று வேடங்காட்டலாம், அறிவியலாக்க முடியாது.
கட்டுறா எலக்ட்ரான்கள் குறித்த விபரங்களில் மெய்யாகவே உங்களுக்கு விளங்கவில்லையா? இல்லை விளங்கமறுக்கிறீர்களா? புரியவில்லை. நீங்கள் உதாரணம் சொல்கிறீர்கள் ஆனால் உண்மைக்கு வரவில்லை. திரும்பத்தரும் வானம் எனும் சொல் வானம் எனும் பொதுத்தன்மையிலிருந்து அயனமண்டலம் எதிரொலிக்கும் மின்காந்த அலைகள் வரை நுணுகி பொருள் புரிந்து கொள்வதில் தயக்கம்காட்டாத நீங்கள் கட்டுறா எலக்ட்ரான்கள் என்றால் மட்டும் விமானம் பெட்ரோல் என்று உதாரணங்களின் பின்னே ஒளிவது ஏன்? ஏற்கனவே சொன்னது தான், கட்டுறா எலக்ட்ரான்கள் மின்காந்த அலைகளை எதிரொலிக்கின்றன, அவை எந்தப்பொருளில் இருந்தாலும். இதில் வானம் திருப்பித்தருகிறது என்பதன் சிறப்புத்தன்மை என்ன? என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். மான் ஓடுகிறது, மயில் ஓடுகிறது, சிங்கம் ஓடுகிறது, புலி ஓடுகிறது, கரடி ஓடுகிறது எல்லாமும் ஓடுகிறது இதில் புலி ஓடுகிறது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு சிறப்புக்காரணம் வேண்டுமல்லவா? (பாருங்கள், உங்களைப் போலவே நானும் உதாரணத்திற்கு வந்து விட்டேன்)
\\ ஆயினும் நான் படித்த வரை நீங்கள் குரானுக்கு விளக்கம் சொல்பவர்களை மட்டுமே விமர்சித்து இருக்கிறீர்கள்//
குரான் மனிதகுலம் முழுமைக்குமானது என்பது உங்கள் நம்பிக்கை. அரபு மொழி தவிர்த்த எனையோர்களுக்கு எது குரான்? மொழிபெயர்ப்புகள் தான் என நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அந்த மொழிபெயர்ப்புகளைவைத்து என்னுடைய ஐயங்களை எழுப்பினால் அது குரானை விமர்சித்ததாகாது என்றால், கொஞ்சம் விளக்குங்களேன். (அண்மை இடுகைகளில் சிலர் இதுபோல் கருத்துக்கூறி வருகின்றனர்)
\\ குரானை பொய்ப்பிக்க வேண்டும், இஸ்லாமிய நம்பிக்கையாளர்களை (மதவாதிகளை) கேவலப்படுத்த வேண்டும் என்ற முன் முடிவுடன் நீங்கள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது// ஆதாரமற்ற குற்றச்சாட்டு, மறுக்கிறேன்.
முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் எனும் என் அழைப்பில் செயற்கைத்தனம் இல்லை.
செங்கொடி
நன்றி
நன்றி செங்கொடி அவர்களே. நீங்கள் எடுத்து வைத்த மூல வாதத்திலிருந்து எத்தனை சுதி குறைந்துள்ளிர்கள் பாருங்கள். இப்பொழுது நீங்கள் பிடித்திருப்பது, வானத்தை மட்டும் ஏன் சொல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்ட கடைசி கேள்விக்கு நான் மறுத்துரைத்த உதாரனத்தை. நன்றாக கவனியுங்கள், உங்களின் மூல வாதமான் “திரும்பத்தரும் வானம்” என்று குரான் சொன்னது அறிவியலுக்கு மாற்றமானது,அல்ல, முல்லை பாட்டு அறிவியலுக்கு முற்றிலும் மாற்றமானது என்று நிரூபித்து நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களிடமிருந்து எந்த மறுப்பு வாதமும் இல்லை.
உதாரணமும் ஒளிதலும்
நான் சொன்ன உதாரணத்தில் இருந்தும் உங்களுக்கு விளங்கவில்லயாயின், என் மீதும் என் தமிழ் மீதும் தான் ஏதோ பிழையுள்ளது. அந்த வசனம் வானத்தின் மீதுதான் சத்தியம் இட்டு பேசுகிறது, அதற்க்கு மட்டும் தான் அடை மொழியிட முடியும். ஆசிரியர் புலி பாடம் எடுத்தால் புலி ஓடுகிறது என்று தான் சொல்ல முடியும். ஆசிரியர் பொல்லாதவராக இருக்கிறார், எல்லா மிருகங்களும் ஓடுகின்றன ஆனால் இவர் புலி ஓடுகிறது என்று மட்டும் தான் சொல்கிறார் என்று ஒரு முட்டாள் மாணவன் சொன்னால் அதற்கு வாத்தியார் ராஜினாமா செய்ய வேண்டுமா? வானதிலிருக்கும் காற்று மண்டலத்தின் ஏலேக்ட்ரான்கள் தான் திருப்பி அனுப்புகிறது என்று சொல்லும் நீங்கள், வானம் திருப்பி அனுப்பும் என்ற வாதம தவறு என்று எந்த மொழியியல் இலக்கணத்தின் படி சொல்ல வருகிறீர்கள்? எனக்கு தெரிந்த தமிழிலோ ஆங்கிலத்திலோ அப்படி ஒரு மொழி இலக்கணம் இல்லை.
நான் சொன்ன உதாரனத்தை போல நீங்கள் பேசவில்லையா? கார் ஓடுகிறது என்றால், இல்லை இல்லை petrolல் தான் கார் ஓடுகிறது இவர் சும்மா கற்பனையில் தான் சொன்னார் அவர் சொன்னது பொய், என்றால் இது எந்த விதத்தில் 21 ஆம் நூற்றாண்டு அறிவியல் வாதமாகும்? நான் சொன்னது கற்பனையாகவே இருந்தாலும் அது எப்படி பொய்யாகும்? இந்த உதாரனக்கேள்வியில் நான் எங்கு ஒளிந்திருக்கிறேன் என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன். இதில் ஒளிவது நானா நீங்களா?
முல்லைப்பாட்டு
முல்லை பாட்டில் இருப்பது முதலில் அறிவியல தானா? என்று நான் கேட்டதற்கு பதிலில்லை. அதை தான் நீங்கள் அறிவியல் என்று கொண்டால் அதை தான் நபிகள் நாயகம் எப்படியோ துப்பறிந்து தன அரபி மொழியில் சொன்னார் என்றால்? ஏன் முல்லை பாட்டு போல கேனத்தனமாக கடல் நீரை அருந்தும் மேகத்தயுடைய வானம் என்றோ, அல்லாஹ்வின் நிறம் கொண்ட மேகம் கொண்ட வானம் என்றோ சொல்லவில்லை. அதை விட்டு விட்டு திரும்ப தரும் வானம் என்று சொல்வது ஏன்? “திரும்பத்தரும் வானம்” எனபது கற்பனையாக சொன்னதாகவே உங்களுக்காக வைத்துக்கொள்வோம் . அதில் என்ன அறிவியல் முரண் கண்டீர்கள் என்பதே கேள்வி? ஏனெனில் அது தான் உங்களின் தலைப்பு, மூல வாதம்.
//முல்லைப்பாட்டின் பாட்டுடைதலைவன் யார்? அவனின் தகுதிகள் குரான் கூறும் அல்லாவின் தகுதிகளோடு பொருந்துவனவா? என்றெல்லாம் ஆராய்ந்து..// என்னுடைய வாதம் அதுவல்ல, யார் சொன்னதாயினும் அது உண்மையாக இருப்பின் ஏற்றுக் கொள்வதில் சிறிதளவும் தயக்கமில்லை, உங்களின் முல்லைப்பாட்டில் எந்த அறிவியலும் இல்லை எனபது தான் என் வாதம். அது அறிவியல் சார்ந்ததில்லை என்பதை நிரூபித்துவிட்டு, அவர்களின் “உவமை சேர்க்கும்”(உண்மைக்கு மாற்றமாக உவமை சேர்ப்பது இலக்கணத்தில் தவறில்லை) பண்பு எந்த விதத்திலும் குரானிற்கு இணையில்லை. அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் எனபது என்னுடைய கிளை வாதம். வைரமுத்து வாலி வகையறாக்களின் காதல காமரச துள்ளல் பாடல்களின் “உவமான பண்பு” கொண்டு திருக்குறளின் அறத்துப்பாலின் உவமானங்களை சீர் பார்ப்பது/மறுத்துரைப்பது நியாயமில்லை என்கிறேன்.
கற்பனை
உங்களின் வாதங்களில்/முன் முடிவுகளில் இதுவும் ஒன்று, அதாவது அன்றைக்கே தெரிந்த ஒன்றைத்தான் குரான் கூறுகிறது இதில் சிறப்பு ஒன்றும் இல்லை, அப்படியாயின், ஏன் குரானின் கற்பனைகள் மற்ற மனித ஆக்கங்களைப் போல காலம் மாற அறிவியலுக்கு முரண் பட வில்லை? (இந்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லப்போய் தான் “திரும்பத்தரும் வானம்” என்பதற்கு வழித்து திரித்து சொன்ன அறிவியலற்ற வாதம்.) ஏன் திருக்குர்ஆன் மற்ற வேதங்கள் போலல்லாமல் ஒவ்வொரு கால கட்டத்திலும் அந்தக்கால மக்களின் அறிவின் தேட்டத்துக்கு தீனி போடுவதாகவும், அதை ஊக்கபடுத்துவதாகவும், மூடப்பழக்கத்தை தீ மூட்டி எரிப்பதாகவும் உள்ளது என்பதும் மதவாதிகளின் கேள்விதான். மனித இயல்புக்கு மீறி ஒரு மனிதர் சொல்லும் எல்லா கற்பனை விசயங்களும் பின்னாளில் அறிய வரும் உண்மைகளுக்கு மாற்றம் இல்லாமல் இருந்தால் அதன் பெயர் என்ன? அதை மதவாதிகள் தெய்வாதீனம் என்கிறார்கள் அவ்வளவுதான். அந்த மனிதர் கூறியதில் ஒன்றோ பலாவோ பொய்யாகும் வரை அவரை தெய்வாதீனமாக நினைப்பதில் பகுத்தறிவில்/Logic எந்த இடையூறும் இல்லை.
சோசியக்காரன்
அது சோசியக்காரன் சொல்வது போல இருக்கிறது என்கிறீர்கள். அதற்கென்ன? வடக்கிலிருந்து வேலை வரும் என்று ஒரு சோசியக்காரன் சொல்லி வடக்கிலிருந்து உங்களுக்கு வேலை வந்தால் அந்த சோசியக்காரன் சொன்னது பொய்யா உண்மையா என்பதே கேள்வி? அது தான் நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு. பொய்தான் என்று அறிவியலுக்கு மாறாக பேசியது நீங்களே. ஆயினும் நான் உங்களின் மனதை தொட்டு கேட்கிறேன்,, சோசியக்காரனை போல தான் முஹம்மது நபி சாதனை புரிந்துள்ளார? அவர் தனி மனிதராக எடுத்த வந்த கோட்பாடுகள் உலக வரலாற்றில் எத்தகைய மாற்றத்தையும், தாக்கத்துயும் ஏற்படுத்தியது என்பதை நீங்கள் வரலாற்றை மீண்டும் ஒரு முறையேனும் புரட்டி நிதானித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். . வெறுமனே கற்பனையான உவமைகள் தான் குரானில் உள்ளது என்றிருந்தால் முல்லை பாட்டுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் கூட யாரும் தரப்போவதில்லை. அதிலிருக்கும் சமூக சம நீதி, சமூக குற்ற பிரிவு சட்டங்கள், குடும்ப வாழ்க்கைக்கான தீர்வுகள் இவையெல்லாம் சோசியக்காரன் சொன்னதாகத்தான் இருக்கிறது என்கிறீர்களா?
மொழிபெயர்ப்பு
//அந்த மொழிபெயர்ப்புகளைவைத்து என்னுடைய ஐயங்களை எழுப்பினால் அது குரானை விமர்சித்ததாகாது என்றால்// எந்த மொழி குரான் மொழிபெயர்ப்பில் ஐன்ச்டீன் பற்றி எல்லாம் இறைவனின் வார்த்தைகளில் மொழி பெயர்த்தார்கள். ஆயினும் என்னுடைய அந்த வாதத்தை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நீங்கள் குரானையும் விமர்சனம் செய்கிறீர்கள் என்று கொள்கிறேன். என்னை போல பலரும் அதற்க்கு பதிலலிப்பாதாகவே நான் நினைக்கிறேன். ஆயினும் நீங்கள் அதில் கிளை வாதங்கள் செய்து தப்பித்துக்கொலாமல் இருந்தால் சரி தான். மீளும் உங்களின் மார்க்சிய வழக்கை திட்டத்தை குரனோடு ஒப்பிட்டு விவரிக்கவும் வேண்டிக்கொள்கிறேன்.
சந்த்திப்போம்
“திரும்ப தரும் வானம்” என்பதில் உங்கள் வாதம் தோற்றது என்றும உங்களின் மூல வாதத்தை தூக்கி பிடிக்க உங்களிடம் ஆதாரம் இல்லை என்றுமே நான் நம்புகிறேன். இதற்க்கு மேல் நீங்கள் உங்கள் மூல வாதத்துக்கும், அதற்கான என் மறுப்புரைக்கும் பதிலளித்தல் நான் மீண்டும் இங்கு பதிலளிக்கிரேன், அதுவல்லாமல் கிளை கேள்விகளுக்கும், உதாரனகளுக்குமாக இருந்தால் நான் பதிலளிக்க தார்மீக கடமை இல்லை என்பதால், உங்களை உங்களின் வேறு பதிவுகளில் சந்திக்கிறேன், இறைவன் நாடினால்.
Me : மாஷா அல்லாஹ். இக்காலத்தில் இவ்வளவு பொறுமை கொண்ட ஒருவரா…!!! அதுவும் பின்னூட்டமிடுவதில்…!!!
பொறுமைசாலி Me, தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.
தங்கள் பதில்கள் மற்றும் வினாக்கள் அருமை. ஒருகாலத்தில் இதுபோன்ற எல்லாவற்றுக்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தேன்… இவர்கள் நிறைய கேட்பார்கள். கேட்க மட்டும் தான் தெரியும். நாம் இவர்களைப்பற்றி — இவர்களின் ‘கொள்கைகளை'(?)ப்பற்றி கேட்டால் மட்டும் பதில் வராது. பதிலளிக்காமல், நிறைய கிளைக்கேள்விகள் கேட்பார்கள். கடைசியாக சமீபத்திய ஒரு உதாரணம்…. https://senkodi.wordpress.com/2010/01/21/mao-3/ –இங்கே பதிவையும் என் மருமொழியையும் அதற்கான பதிவரின் மவுனமும் மற்றவரின் எள்ளலும்….காண்க.
‘கம்யூனிசம் சொல்வது என்ன?’ ‘அது வந்தால் நாடு எப்படி இருக்கும்?’ ‘இப்போதுள்ள பல கொலகைகளிளிருந்து எவ்வாறு அது மேம்படுகிறது?’ ‘அதன் அமலாக்கத்தினால் மக்களுக்கு விளையும் நன்மைகள் என்ன?’ ‘புரட்சி என்றால் என்ன?’ ‘அது எப்போது?’ ‘அதன் நோக்கம் என்ன?’ ‘அப்புரட்சிக்குப்பின் ஆட்சிமுறை, சட்டம், தண்டனை, நடைமுறை வாழ்க்கை, கல்வி, வேலை, சம்பளம், தனிமனித உரிமை எல்லாம் எப்படி இருக்கும்?’ என்பன போன்ற பல கேள்விகளை ‘பல செங்கொடிகளிடம்’ பலமுறை பலர் கேட்டாயிற்று. பதிலில்லை. பதில் சொல்லுங்கள் என்றால் “சரணடைந்த இஸ்லாம்…கற்பனைக்கோட்டை விரிசல்…” என்றுதான் பதில் அளிக்கிறார்கள்.பின்னர், இதுபோன்ற பலரின் ‘முன்முடிவுகள்’ பற்றி தெளிவாக அறிந்து கொண்டபின்னர் அவ்வளவாக இதையெல்லாம் சீரியசாய் எடுத்துக்கொள்வதில்லை, நான்.
ஆனாலும், Me, உங்களின் பொறுமை மகத்தானது. முயற்சிக்கு நன்றி. ‘இன்னல்லாஹ மஹஸ்ஸாபிரீன்’.
நண்பர் மி,
ஏமாற்றம் தருகிறீர்கள்.
நான் நிலைமாறியிருப்பது போலவும், தடம்மாறுவது போலவும் போக்குக்காட்டி தீர்ப்பும் அளித்து விட்டீர்கள், பக்கத்தில் சொம்பும் வைத்துக்கொள்ளுங்கள் பொருத்தமாக இருக்கும்.
நான் சொல்வதென்ன?
திருப்பித்தரும் வானம் என்பதில் அறிவியல் உண்மை ஒன்றுமில்லை, ஒரு அந்தக்கால மனிதரின் சாதாரணமான வாசகம், இதில் அறிவியலை திணிக்கிறார்கள். இல்லை, பின்னர் அறிந்த மழையின் சுழற்சி, மின்காந்த அலைகளின் மீட்சி போன்றவைகளைத்தான் ஆண்டவன் அதில் கூறியிருக்கிறான் என்றால்; நிலத்தின் நீர்தான் மேகமாகி மழையாகிறது என்று அதற்கு முந்திய காலத்திலேயே மனிதர்களால் கற்பனை செய்திருக்க முடிந்திருக்கும் போது முகம்மதுவும் அவ்வாறு கற்பனை செய்வதொன்றும் இயலாததல்ல என்றும், மின்காந்த அலைகளுக்கும் அந்த வசனத்தை பொருத்தினால் பரந்துபட்ட வானம் எனும் சொல்லை அயனமண்டலம் வரை நுணுகி புரிந்துகொள்ளும் நீங்கள் கட்டுறா எலக்ட்ரான்கள் வரை நுணுகினால் அதை கார் ஓடுவது பெட்ரோல் என்று உதாரணம் மூலம் எள்ளுகிறீர்கள் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
முல்லைப்பாட்டில் அறிவியல் இல்லை என்று அருஞ்சொற்பொருள் விளக்கி அதற்கு நான் பதில் சொல்லவில்லை என ஆதங்கப்படுகிறீர்கள். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே முல்லைப்பாட்டில் சொல்லப்பட்டுவிட்டது என்று நான் கூறுவதாக எண்ணிக்கொண்டு. கவனிக்கவும் முல்லைப்பாட்டை அறிவியலாக முன்வைக்கவில்லை, மனிதனின் கற்பனைக்குச் சான்றாகவே வைத்திருக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும் முல்லைப்பாட்டிலாவது படிம வடிவிலாவது சொல்லப்பட்டிருக்கிறது, அது அறிவியலா இல்லையா என ஆராய்வதற்கு, குரானின் அந்த வசனத்தில் என்ன இருக்கிறது ஆராய்வதற்கு என்பதை கூறியிருக்கிறீர்களா நீங்கள்?
சோசியக்காரன் வார்த்தை ஒரு பொதுத்தன்மை கொண்டதாக இருக்கும், வடக்குத் திசையிலிருந்து வேலை கிடைக்கும் என்பான். கிடைக்காதபோது யாரும் கவனம் கொள்வதில்லை. எந்த இடத்திற்கு வடக்குத்திசை என்று தெளிவான விபரம் ஏதும் அவன் சொல்லில் இருக்காது. ஒரே இடத்தை நான்கு திசையாலும் குறிப்பிடலாம் அல்லவா? அது போல எது வானம்? எதை திருப்பி தருகிறது? என்று ஒரு விபரமுமில்லாமல் திருப்பித்தரும் வானம் என்றொரு வசனம் (திரும்பத்திரும்ப வரும் மழை என்றும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்) இதை அறிவியல் உண்மை என நம்பும் நீங்கள் விளக்கம் தர வேண்டாமா? உதாரணங்களிலேயே நின்றுவிட்டால் எப்படி, உண்மைக்கு வரவேண்டாமா?
\\அன்றைக்கே தெரிந்த ஒன்றைத்தான் குரான் கூறுகிறது இதில் சிறப்பு ஒன்றும் இல்லை, அப்படியாயின், ஏன் குரானின் கற்பனைகள் மற்ற மனித ஆக்கங்களைப் போல காலம் மாற அறிவியலுக்கு முரண் பட வில்லை?// ஏற்கனவே அப்படி நேரடியாக முரண்படும் இடங்களை சுட்டிக்காட்டினேன். பின்னர் பதிலளிப்பதாக கூறினீர்கள் இபோது மீண்டும் அதே கேள்வியா?
மீண்டுமொரு முறை அமைதியாக முதலிலிருந்து படித்துப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்கு விளங்கும் என நான் எதிர்பார்க்கிறேன். அல்லாவிட்டாலும் பரவாயில்லை, சென்று வாருங்கள். அடுத்த முறையாகிலும் கொஞ்சம் தெளிவோடு வாருங்கள்.
செங்கொடி
**********************************************************
நண்பர் நெ முகம்மது,
மாவோவின் வரலாறு குறித்த பதிவில் உங்கள் கேள்விகள் முதிர்வின்றி இருந்ததாலேயே பதில் தரப்படவில்லை. சாதாரணமாக எல்லாச் சிறுவர்களும் செய்யும் செயல்களே மாவோவின் சிறுவயதிலும் இருந்தன, அது எப்படி முதிர்ச்சியுற்ற ஆளுமையாக, கொள்கையாக பதிலீடு செய்கிறது என்பதில் தான் வழிகாட்டுதலும் படிப்பினையும் இருக்கிறது.
உங்களின் மார்க்சியம் குறித்த கேள்விகளுக்கு, ஆர்வத்திற்கு நன்றி. விரைவில் தொடர்ச்சியாக பதிவிடுகிறேன். அதற்கான முன்னோட்டமாகத்தான் நூல்களை தொடராக வெளியிடுவது, நூலகம் பகுதியை தொடங்கியிருப்பதெல்லாம். நூலகம் பகுதியில் ஆணாதிக்கமும் மார்க்சியமும் எனும் நூலை வைத்திருக்கிறேன். தரவிறக்கி படித்துப்பாருங்கள். இன்னும் நிறைய நூல்கள் வரும் படித்துப் பார்க்கலாம்.
செங்கொடி
முஹம்மது அவர்களுக்கு நன்றி. உங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டுமாக. உங்களின் பிரார்த்தனைக்கும் அறிவுரைக்கும் நன்றி. இறைவனின் பரக்கத் உங்கள் மீது உண்டாக நானும் பிரார்த்திக்கிறேன். நான் இங்கு அமெரிக்காவில் குப்பை கொட்டுகிறேன் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள்?
இங்கிருக்கும் என் வேலை பளுவில் செய்திகளும் பதிவுகளும் படிப்பதோடு சரி. செங்கொடி என்பவர் பிஜே உடன் விவாதம் செய்யபோகிறாராம் என்ற செய்தி அறிந்து, பெரிய அறிவார்ந்தவராக இருப்பார் போல என்று இங்கு வந்து பார்த்தல் Satellite மட்டுமே திருப்பி அனுப்பும், முல்லைப்பாட்டிலேயே இந்த அறிவியல் இருக்கிறது என்றெல்லாம் சுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆயினும் வார்த்தை தடிக்காமல் மற்ற பதிவர்கள் போல வசை மொழி மட்டுமே பேசாமல் அவர் தன வாதங்களை வைத்ததாலும், இந்த பதிவில் அவர் வைத்திருந்த அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான விசயங்களை யாரும் பின்னூட்டத்தில் விவாதிக்கவில்லை என்பதாலும் கொஞ்சம் (தட்டு தடுமாறி தமிழில்) முயற்சி எடுத்தேன்.
ஆயினும் நீங்கள் சொல்வது சரி தான் போல இருக்கிறது. முற்றிலும் அறிவியலுக்கு புறம்பாகவும், காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டும் பேசி விட்டு என்னை வேறு அவருக்கு சொம்பு தூக்க சொல்லுகிறார். அழகு தான் போங்கள். நீங்கள் சொல்வது போல கண்டுகொள்ளாமையே இந்த நோய்க்கு சரியான மருந்து போலும்.
Allah Suffice,
Syed.
நான் சொல்லுவது அல்லா என்பதெ அரிவியல் தான் முகம்மது சொன்னதும் அது தான் இப்பொது படிங்க குரானை தெலிவாக புரியும். அது மட்டும் அல்ல குரானில் எந்த மந்தரம் மாயமும் இல்லை. மூசா தடிய்ய போட்டு கடலை கடக்கவும் இல்லை ஏசு பார்வைஅட்ரவனை பார்வை தெரியவைக்கவும் இல்லை.இது உன்மை
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க : http://www.ihsasonline.tk
அன்புள்ள செங்கொடிக்கு,
நீங்கள்தான் விவாதத்துக்கு செல்வதாக ஒப்புகொண்டுவிட்டீர்களே பிறகு ஏன் இன்னும் குரான் பற்றி கட்டுரைகள் எழுதிகொண்டிருக்கின்றீர்கள்.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் விவாதம் செய்வதாக ஒப்புகொண்டு விட்ட பிறகு மீண்டும் குரான் பற்றி கட்டுரைகள் எழுதிவருவது நாகரீகமற்ற செயலாக எமக்கு படுகின்றது.
அல்லா பக்ஷ்,
உங்களுக்கு என்ன படுகிறதோ அது மட்டுமே நாகரீகம் எனும் உயரிய கருத்தில் இருக்கிறீர்கள். இந்தக் கட்டுரைக்குப் பிறகு நிறைய கட்டுரைகள்வந்து விட்டன. நிறைய விவாதங்கள் தெளிவுகள் வந்து விட்டன. கொஞ்சம் நிகழ் காலத்துக்கு வாருங்கள். இன்னமும் இந்திரா காந்தி செத்து விட்டாரா என்று அதிர்ச்சியடையாதீர்கள்.