மீண்டும் குஜராத் போலி மோதல் கொலைகள் இந்திய ஊடகங்களில் வலம் வருகிறது. ஒரு அலையைப் போல் சில நாட்கள் பேசப்படுவதும், அடங்கிவிடுவதும் பின் வேறொரு நாளில் மீண்டும் எழுவதும் என இதன் ஏற்றவற்றங்களினால் பெறப்படவேண்டிய உண்மை ஆழ்கடலில் மூழ்கிப் போயுள்ளது. தேர்தல் லாபத்திற்காக நடத்தப்பட்ட கொலைகள் என்று காங்கிரசும், நாட்டில் ஆயிரக்கணக்கில் போலி மோதல் கொலைகள் நடந்திருக்கும் போது குஜராத்தை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என்று பாஜக வும் மெய்யான அதன் கிடக்கையை பேசுபொருளாக்குவதில் இருந்து … போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: ஜூலை 2010
பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே
இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது … பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்
தி.மு.க ஆட்சியின் நிறைவுக்காலம். பல்வேறு இலவசத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆட்சியின் மீது பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை, விலை வாசி உயர்வு, மின்சாரத்தட்டுப்பாடு ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் டிசம்பரில் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதால் அப்போது மின் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும், விலைவாசி உயர்வு பிரச்சனையை பணபலம் சமாளிக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி, பாமக சேரும் எனும் நம்பிக்கை இவற்றோடு அதிமுக விலிருந்து தொடர்ந்து தாவல்கள் நடைபெறுவது என்று எல்லாவற்றையும் … ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
செஞ்சேனையின் வளர்ச்சி ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௩ தனது வாழ்க்கை வரலாறு என்ற பகுப்பாய்விலிருந்து மாசேதுங் வெளியேறி, ஒரு பாரிய இயக்கத்தில், தமது கடமை என்ற ஓரளவு தெளிவுற்ற, இயல்பான விருப்புடைய மாற்றத்துனுள் மாசேதுங் மாற்றமுற்றார். மேலதிகமான கடமையில் அவர் இருந்த போதிலும் அவரை ஒரு தனித்துவமான மனிதர் என்ற அடிப்படையில் எங்களால் உணரமுடியவில்லை. அவரது வரலாற்று விளக்கம் தற்போது "நான்" என்ற அடிப்படையில் அல்லாது "நாங்கள்" என்ற அடிப்படையிலேயே இருந்தது. அந்த "நாங்கள்" என்ற திஓற்ற வெளிப்பாடு … செஞ்சேனையின் வளர்ச்சி ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொச்சை படுத்தப் பட்ட ராவணன்
வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் "ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் "நமக்கு' ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்" என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் … கொச்சை படுத்தப் பட்ட ராவணன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.
கடந்த ஏழாம்தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் என்பவர், இலங்கை கடற்படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் நாநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். படகுகளை சேதம் செய்வதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கருணாநிதி 3 லட்சம் கொடுத்தர், கண்டனக் கூட்டம் நடத்தினார், கடிதம் எழுதினார். வைகோ 25 ஆயிரம் கொடுத்தார். ஜெயலலிதா பதவி விலகச் சொன்னார். நாளிதழ்கள் இரண்டு நாள் … தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்
"இன்டர்நேஷ்னல்" திரை விமரிசனம் உலகளாவிய சந்தையைக்குறிவைத்து இயங்கும் ஹாலிவுட்டிலும் கோடம்பாக்கத்தைப்போல ஃபர்முலா கதைகள் தான் புதிய மொந்தைகளில் வெளியிடப்படும். கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள் - அரேபியர்கள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவர்கள் தான் அலுப்பூட்டும் விதத்தில் திரும்பத்திரும்ப விலான்களாக வருவதைப் பார்த்திருப்போம். என்னதான் வெண்திரையில் புனைகதைகளைக் கட்டியமைத்தாலும் வாழ்க்கை என்ற பெரிய உண்மை ஒன்று இருக்கிறதே! முதலாளித்துவ பொருளாதாரம், இந்த உலக மக்களைக் காக்கும் அருகதையை இழந்துவருவதை அமெரிக்காவில் தொடங்கி இப்போது கிரீஸ் வரையிலும் 21ஆம் நூற்றாண்டு வெளிச்சம் போட்டு … ஹாலிவுட்டின் புதிய வில்லன்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குரானின் காலப்பிழைகள்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௨ குரான் என்பது எல்லாவற்றின் மீதும் அனைத்துவித ஆற்றலையும் கொண்டிருக்கும் மீபெரும் சக்தியான அல்லா முகம்மதுவுக்கு வழங்கியது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. அதனால்தான் அதில் எந்தஒரு முரண்பாடும் இருக்கமுடியாது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைப் பாத்திரமான குரானிலிருந்து சில வசனங்கள், .........உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன் என்று கூறினான். குரான் 7:124 ........ மற்றவரோ, சிலுவையில் அறையப்பட்டு அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித்திண்ணும் ........... குரான் 12:41 நிச்சயமாக … குரானின் காலப்பிழைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி
உணர்ச்சிகளைத் தூண்டும் வாசகங்களுடன், ஒரு மிகப்பிரமாண்டமான ஒரு மாநாட்டை (15 லட்சம் பேர் (...?...) கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு சென்னை தீவுத்திடலில் ஜூலை நாலாம் தேதி நடத்தவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் உரிமையுடன்(!) அழைக்கும் குழும மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கக் கோரி நடப்படவிருக்கும் மாநாடு என்பதாக அனுப்பப்பட்ட விளம்பரங்கள் கூறுகின்றன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் மீண்டும் குரலெழுப்பி வருவதன் நோக்கம் என்ன என்பது … தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி-ஐ படிப்பதைத் தொடரவும்.