கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௩

பொதுவாக காலம், வெளி இரண்டும் தனித்தனியானது என அறியப்பட்டிருந்தாலும், இரண்டும் பிரிக்கவொண்ணாதபடி பிணைந்திருப்பவை. காலம் என்பதை வெளியில் இருக்கும் பருப்பொருளின்றி முற்றறிந்து கொள்ள முடியாது. அதன் படி ஒரு நாள் என்பதின் முழுமையான பொருள் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம். ஒரு ஆண்டு என்பது சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம்.

இப்போது குரானின் சில வசனங்களைப் பார்க்கலாம்.

வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். குரான் 22:47

வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான். ஒரு நாள் அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். குரான் 32:5

ஒருநாள் மலக்குகளும், அவ்வான்மாவும் அவனிடம் ஏறிச் செல்வார்கள். அதின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் இருக்கும் குரான் 70:4

இந்த மூன்று வசனங்களும் பூமியின் ஒரு நாளின் அளவு தன்னிடத்தில் அல்லது தான் இருக்கும் கோளின் சூழலில் எத்தகைய அளவாக இருக்கும் என்பதை ஒப்பிட்டுக் காட்டும் விதமாக அல்லா கூறுவதாக அமைந்த வசனங்கள். முதல் பார்வையிலேயே இதன் கால வித்தியாசம் முரண்பாடு காட்டும், அதாவது முதலிரண்டு வசனங்களில் ஆயிரம் ஆண்டுகள் என்றும் மூன்றாவது வசனம் ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்றும் குறிப்பிடுகிறது.

ஆனால் இவைகள் காலம் காட்டும் வசனங்களல்ல வேகத்தைச் சுட்டும் வசனங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி?

முதலிரண்டு வசனங்களில் ஆண்டவனின் கட்டளை பூமிக்கு வந்தடையும் வேகத்தை குறிப்பதாக விளக்கம் கொடுக்கிறார்கள். உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் நியாயத் தீர்ப்பு நாளில் ஒன்றாக எழுப்பப்பட்டு விசாரித்து செய்த தவறுகளுக்கு தண்டனை தரப்படும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைகளில் முக்கியமானது. அது எப்போது வரும்? இன்னும் வரவில்லையே என்று அக்கால மனிதர்கள் முகம்மதுவிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு அல்லா பதில் கூறுவதாகத்தான் முகம்மது இந்த வசனத்தை அமைத்திருக்கிறார். அதாவது அவசரப்படாதீர்கள், அந்த நாள் நிச்சயம் வந்து சேரும் என்பது அந்த வசனத்தின் சுருக்கமான பொருள். இதில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டு என்று தேவையில்லாத ஒரு ஒப்பீடு ஏன்? அல்லா மிகப்பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்பது இஸ்லாத்தில் பிரபலமான ஒரு முழக்கம். இதை வலியுறுத்தும் விதமாகத்தான் முகம்மது அந்த ஒப்பீட்டை செய்திருக்கிறார். மனிதர்களது நாளின் நீளத்தைப் போல் அல்லாவின் நாளின் நீளத்தை சாதாரணமாக நினைத்துவிடாதே உன்னுடைய நாளைவிட அல்லாவின் நாள் ஆயிரம் ஆண்டு அளவுக்கு பெரியது என்று வியப்பாக எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால் இப்போது அந்த வசனத்தின் பொருளை நேரடியாக எடுத்துக்கொண்டால் ஒரு சிக்கல் வருகிறது. 22:47, 32:5 வசனங்களில் ஒரு நாளுக்கு இணையாக ஆயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடும் குரான் 70:4ம் வசனத்தில் ஒரு நாளுக்கு இணையாக ஐம்பதாயிரம் ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. இதில் 22:47ம் வசனமும் 70:4ம் வசனமும் ஒரே கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள், அதாவது யுகமுடிவு நாட்கள் எப்போது வரும் எனும் கேள்விக்கு பதிலாக கூறப்படும் வசனங்கள். எனவே இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காகத்தான் இரண்டு வசனங்களும் வேறு வேறு விசயத்தைக் கூறுவதாக பிரித்துப் பொருள் கொண்டு சமாளித்திருக்கிறார்கள். 22:47ம் வசனத்தில் அல்லாவின் கட்டளை பூமிக்கு வந்து சேரும் வேகத்தைக் குறிப்பதாகவும் அதாவது யுகம் முடியட்டும் என்று அல்லா கட்டளையிட்டுவிட்டால் அது மனிதர்களின் வேகத்தைவிட 365000 மடங்கு அதிக வேகத்தில் பூமியை வந்தடையும் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும்; 70:4ம் வசனத்தில் வானவர்கள் (அல்லாவின் உதவியாளர்கள்) பூமிக்கு வந்து செல்லும் வேகத்தைக் குறிப்பதாகவும் அதாவது பல்வேறு வேலைகளுக்காக பூமிக்கு வந்து செல்லும் வானவர்கள் மனிதர்களின் வேகத்தை விட 18250000 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கிறார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும் அவ்வசனங்களுக்கு வியாக்கியானங்கள் அளிக்கிறார்கள்.

மதவாதிகளின் வியாக்கியானங்களின்படியே அவற்றை வேகங்களாக பொருள் கொண்டாலும் அந்த வேகங்களின் மனிதர்களின் வேகம் ஒப்பிடப்பட்டு மடங்குகளாகக் கூறப்படுகிறது. அன்றைய மனிதர்கள் பயணிக்கும் வேகம் என்றால் ஒட்டக வேகம் அல்லது குதிரை வேகம். இந்த வேகங்களோடு ஒப்பிட்டு ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்று குரான் கூறியிருக்குமானால் இன்று மனிதர்களின் வேகம் 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட பல மடங்கு அதிகரித்துவிட்டது. இன்றைய மனிதனின் விரைவுப்படி ஆயிரம் ஆண்டு, ஐம்பதாயிரம் ஆண்டு என்பதை குறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மட்டுமல்லாது மனிதனின் வேகம் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும், அப்படி அதிகரித்துச் செல்லச் செல்ல இந்த குரான் வசனங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் மதக் கொள்கையோடு மிகப் பலமாக மோதக் கூடிய ஒரு விசயமல்லவா? எப்படிச் செய்வார்கள்? இஸ்லாமியர்கள் விளக்கம் கூறுவார்களா?

இந்த வசனங்களோடு ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டையும் கட்டிவைத்திருக்கிறார்கள். ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு அல்லது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்பது கடந்த நூற்றாண்டுவரை யாருக்கும் புரியாமல் இருந்தது சார்பியல் கோட்பாட்டை கண்டடைந்த பிறகுதான் அதன் பொருள் புரிந்தது என்று கூறிக்கொள்கிறார்கள். (அப்படியானால் குரானை புரிந்து கொள்வதற்காக சுலபமாக ஆக்கிவைத்திருக்கிறேன் என்று அல்லா கூறுவதன் பொருள் என்ன? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்)

ஒளியின் வேகத்தை ஒட்டி ஒரு பொருள் பயணம் செய்யும் போது அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது சார்பியல் கோட்பாட்டின் ஒரு பகுதி. இதைப் பயன்படுத்தித் தான் அந்த வசனங்களுக்கு வேகம் எனும் பொருளைக் கொண்டுவருகிறார்கள். அதாவது, அதிவிரைவாகச் செல்லும் போது வாழ்நாள் அதிகரிப்பதால்தான் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமானதாக ஆகமுடிகிறது என்பது அவர்கள் முடிபு. ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான் மற்றொரு பகுதி உருவம் சுருங்கும் என்பது. எடுத்துக்காட்டாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும் என்றால் அதன் நீளம் அரை மீட்டராகும்.

இதன்படி, இந்த விரைவில் உயிரினங்கள் பயணிக்க முடியாது அல்லது பயணித்தால் உயிருடனிருக்கமுடியாது என்றாகிறது. ஏனென்றால் அளவு குறைந்தாக வேண்டும். இந்த சமன்பாடைக் கொண்டுதான் ஒருவிதத்தில் கணக்கிட்டு ஒளியின் வேகத்தை விட அதிக வேகம் பிரபஞ்சத்தில் இருக்கமுடியாது என்கிறார்கள். ஆனால் அல்லாவின் உதவியாளர்களான வானவர்களால் எப்படி ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டு உயிருடன் இருக்கமுடிகிறது எனும் கேள்வி  இங்கு தவிர்க்கவியலாமல் எழுகிறது. அடுத்து ஒளியை மிகைத்த வேகம் என்பது பிரபஞ்சத்தில் இல்லை. ஆனால் வானவர்கள் சர்வ சாதாரணமாக ஒளியைவிட மிகைத்த வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்களே எப்படி?

மேற்கூறிய அந்த மூன்று வசனங்களையும் வேகம் குறித்த வசனங்களாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு முகாந்திரமும் இல்லை. இறைவன் பெரியவன் என்பதைக் காட்டும் ஒரு சொல்லாடல்தான் அந்த வசனங்களில் இடம் பெற்றிருக்கிறது. இறைவனின் வார்த்தைகளை கடல்களை மையாக கொண்டாலும் எழுதிமுடிக்க முடியாது என்று குரானில் வேறொரு இடத்தில் குறிப்பிடப்படுவதையும் இதனுடன் இணைத்து புரிந்து கொள்ளலாம். வேகம் குறித்து கூறுவதாக அர்த்தப்படுத்திக்கொண்டால் மட்டுமே இங்கு முரண்பாடு எழுவதை தவிர்க்கமுடியும் என்பதால் அவ்வாறாக பொருள் படுத்தப்படுகிறது.

அதே நேரம் இது கால அவகாசம் வழங்குவதை குறித்த வசனம் தான் இதில் வேகம் குறித்த குறிப்பு ஒன்றுமில்லை என்பதை இதற்கு அடுத்து வரும் ஒரு வசனம் மிகத் துல்லியமாகவே விளக்கி விடுகிறது.

அநியாயங்கள் செய்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன். பின்னர் அவறைப் பிடித்துக்கொண்டேன். மேலும் என்னிடமே மீண்டும் வரவேண்டும். குரான் 22:48

இப்படி பலவிதமாக வித்தைகள் செய்து முலாம்பூசி குரானை நிலைநிறுத்த முயல்வதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம், குரானில் போர்த்தப்பட்டிருக்கும் புனிதப் போர்வை போலியானது என்பதை மதவாதிகளும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

122 thoughts on “கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

  1. இதுக்கு பதில் சொல்ல முடியாதுங்களா?.அல்லாதான் ஒளி,வேகம் ஆற்றல் எல்லாம் படைத்தார்.அதனால் அல்லாவின் விருப்பப்படிதான் அனைது அறிவியல் விதிகளும் இயங்கும்.எனவே அல்லாவினால் எல்லாம் கூடும்.

  2. 1.இப்போது அல்லாவிற்கு உருவம் உண்டு என்பதை பி ஜே அவர்கள் விளக்கி கொன்டு இருக்கிறார்.அவர் அதற்கு ஹதீஸில் இருந்து ஆதாரம் காட்டுகிறார்.இத்ற்கு குரானில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?.

    2.க‌லிமா சொல்லும் போது முக‌ம‌து நபி இறைவ‌னின் தூத‌ர் என்று மட்டுமே கூறுகிறார்க‌ள் ஏன் இறுதி தூத‌ர் என்று கூறுவ‌தில்லை?

    3. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) “நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக). (16:43)

    தூத‌ர்க‌ளில் பெண் இன‌ம் இருக்கிற‌தா?

  3. continue sengodi.please keep going. I also read manytimes kuran and keeping still in my personal library.It is having so many contradictions like these. everything will be revealed and take into consideration for the debate. All relegious books are fictions and conceptual thinkings. there is no doubt in it. kavinjar thanigai.

  4. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான் மற்றொரு பகுதி உருவம் சுருங்கும் என்பது. எடுத்துக்காட்டாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும் என்றால் அதன் நீளம் அரை மீட்டராகும்.//

    உங்களின் அறிவியல் ஞானத்தை படிக்கும் போது என்னக்கு உடம்பெல்லாம் புல் அறிக்கிறது (இதுல வேற வாழ்த்தி நிறைய ஜிங் ஜாக்)…….முதலில் relativity theory என்ன சொல்கிரார்கள் என்று படியுங்கள் அதன் பிறகு விமர்சனம் எளுதலாம்….

    முதலில் relativity theoryஇல் time clock என்று எதை சொல்கிறார் என்று படியும்!!!!!
    அதற்கு பிறகு நீயே சொல்லும் மனிதனின் வாழ்நாள் அதிகறிக்கிறதா என்று!!!!!!
    otherwise please study it from here http://library.thinkquest.org/C008537/relativity/math/math.html#GR

  5. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    And they urge you to hasten the punishment. But Allah will never fail in His promise. And indeed, a day with your Lord is like a thousand years of those which you count.
    உதாரணத்துக்கு செங்கொடி வீட்டிலிருந்து கல்லூரிக்கு பொகும் தூரம் 1மணிநேரம் என்று வைத்துக்கொள்வோம்
    திங்கள் : கம்யூனிச பாடம் செங்கொடி சரியாக 1மணிநேரத்தில் வந்தடைகிரார்

    He arranges [each] matter from the heaven to the earth; then it will ascend to Him in a Day, the extent of which is a thousand years of those which you count.
    செவ்வாய் : ஜெயசுரனின் பரினாமம் பற்றிய பாடம் செங்கொடி சரியாக 1மணிநேரத்தில் வந்தடைகிரார்

    A supplicant asked for a punishment bound to happen.To the disbelievers; of it there is no preventer.[It is] from Allah , owner of the ways of ascent. The angels and the Spirit will ascend to Him during a Day the extent of which is fifty thousand years.
    புதன் : அறிவியல் பாடம் செங்கொடி வகுப்பு முடியும் தருனத்தில் வந்து கடைசி வார்தயைய் கேட்கிறார் (2 மணிநேரத்தில் வந்தடைகிரார்)

    இப்பொ புரியுதா? நீங்கள் கூறிய
    70:4 “”””ஒரு நாள்””””( இது ஒரு குறிப்பிட்ட நாள் நீங்கள் அறிவியல் பாடத்திற்கு செல்வது போல‌) மலக்குகளும்,அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; “”””அ(த்தினத்)தின் அளவு”””” ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

  6. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    kavinjar Thanigai personal libraryla book இருந்தா மட்டும் பொதாது அத ப‌டிக்கனும் செங்கொடி முயலுக்கு மூணு கால்னு சொன்னா!! அப்படியே நம்பிரக்கூடாது. library எல்லாம் வச்சிருக்கிரவங்க செங்கொடியோட relativity அறிவியல் ஓட்டைகளை அடைக்காதது ஏன்?

  7. பாவம் செங்கொடி ஸ்கூல் பையன் பாடம் நடத்தி புரிய வைக்க
    வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டார்

  8. மீண்டும் சொல்கிறேன், நான் உளரல்களை பொருட்படுத்துவதில்லை.

    இந்தக்கட்டுரையில் தவறு உள்ளதாக கருதுபவர்கள் முடிந்தால் சுட்டிக்காட்டலாம் தங்களுக்கு ஞானமிருந்தால்

    செங்கொடி

  9. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    i know you dont know anything about relativity concept…i am damn sure about that ….
    ஏனென்றால் தாங்கள்
    1.ஒளியின் வேகத்தை ஒட்டி விரைகையில் வாழ்நாள் அதிகரிக்கும் என்பது ஒரு பகுதிதான் மற்றொரு பகுதி உருவம் சுருங்கும்.
    2.ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது அதன் வாழ்நாள் இரண்டு மடங்காகும்
    இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் எந்த அளவு relativity theory புரிந்து வைத்துள்ளீர்கள் என்று!!!
    //இந்தக்கட்டுரையில் தவறு உள்ளதாக கருதுபவர்கள் முடிந்தால் சுட்டிக்காட்டலாம் தங்களுக்கு ஞானமிருந்தால்//செங்கொடி அவர்களே நான் ஏற்கனவே என்னுடைய வாததத்தை கூறிவிட்டேன் (sappa)logic(u)
    தெறிந்த‌ எவ‌ரும் என்னுட‌ய‌ வாத‌த்தில் த‌வ‌று க‌ண்டுபிடிக்க‌மாட்டார்கள் ஆத‌லால் தாங்க‌ள் anyway u are not going to accept what i want to explain so தாங்கள் எந்த ஒரு நாத்திக‌ relativityதெறிந்த அறிவியல் மாணவரிடமும் விளக்கம் கேட்க்கலாம்…
    first find out the diffirence between “paradox and real measurement”.
    தங்களுடைய சவூதி விலாசத்தை எனக்கு தர முடியுமா? முடிந்தால் வந்து பாடம் நடத்துகிரேன்.
    தாங்ளுக்கு அறிவியலில் என்ன தெரியுமோ சொல்லுங்கள் அதைப் பற்றி விரிவாக விவாதம் செய்யலாம். ஏனென்றால் எனக்கு தெரிந்த வரைக்கும் இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் குராஆன்னை மட்டுமே விளக்குகிறாற்கள், உங்களின் அறி(று)வியல் ஓட்டைகளை ஒருவரும் சுட்டிக்காமிக்கவில்லை!!??

  10. schoolboy அவர்களுக்கு நன்றி, ///செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍/// அருமையான தலைப்பு இந்த யோசன எனக்கு தோனாம போச்சு

  11. //இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்//.
    சந்திரன் பிளந்துவிட்டது. மறுமை நாளும் நெருங்கிவிட்டது என்று முஹம்மதால் கதைக்கப்பட்ட பிறகு அந்நாளைப் பற்றி மக்கள் முஹம்மதிடம் மீண்டும்மீண்டும் கேட்க இவரோ ’இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்’ என்று அவர்களை ஆசுவாசப்படுத்துகிறார்.
    இது போன்று மிகைப்படுத்திக் கூறப்பட்டது இங்கு மட்டுமல்ல. முஹம்மது சுவர்க்கத்தைப் பற்றித் தனது தோழர்களிடம் கூறும்போது கூட இதே முறையையே கையாள்கிறார்.
    சுவனத்தில், கண்கள் பார்த்திராத அளவு, காதுகள் கேட்டிருக்க முடியாத அளவு, எந்த மனிதரின் உள்ளத்தின் சிந்தனைகளிலும் தோன்றிராத அளவு உயர்ந்த எல்லாப் பொருள்களும், உன்னதமான இன்பங்கள் அனைத்தும் உள்ளன. சுவர்க்கத்தில் ஒரு மரமுண்டு, நூறு வருடம் பிரயாணம் செய்யும் ஒரு பிரயாணி அதன் நிழலை கடக்க முடியாது.
    அதாவது பூமியில் உள்ளது போன்றே சுவர்க்கத்திலும் இருக்கும் என்று கூறினால் இணைந்தவர்களுக்கு சுவராஸ்யம் போய்விடும் என்பதற்காக இவ்வாறு மிகைப்படுத்தி கூறுயிருக்கிறார் என்பதைத் தவிர இதில் எந்தவொரு வெங்காய அறிவுமில்லை,அறிவியலுமில்லை.

  12. //உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம்
    ஆண்டுகளைப் போலாகும். குரான் 22:47//

    முதலில் இந்த வரியை அறிவியற்பூர்வமாக ஆராயலாம். நாள் என்பது அறிவியற்பூர்வமாக என்ன? அல்லாவின் ஒரு நாள் என்பது மனிதர்களின் ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்றால் என்ன பொருள்? முதலில் நாள் என்றால் என்ன என்று ஆராயவேண்டும். ஒரு கிரகம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றும் காலமே நாள். அந்த கிரகம் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வந்தால், அந்த கிரகம் அந்த நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றிவரும் காலமே ஒரு வருடம். சரி இப்போது இந்த வரியை ஆராயலாம். இறைவனின் ஒரு நாள் என்பது மனிதர்களின் ஆயிரம் வருடத்துக்கு சமானமென்றால், இறைவன் இருக்கும் கிரகம் தன்னைத்தானே சுற்றிவரும் காலம் பூமி ஆயிரம் முறை நமது சூரியனை சுற்றிவரும் காலத்துக்கு சமம் என்று பொருள். அல்லாஹ் எங்கே இருக்கிறார் என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம். வானவெளியில் எதோ ஒரு கிரகம், தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள நமது கணக்கில் ஆயிரம் வருடங்களாக ஆகிறது. அந்த கிரகத்திலேயே ஒரு அர்ஷ் போட்டு அல்லா உக்காந்திருக்கிறார்.

    முதலில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்
    070.004
    YUSUFALI: The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is (as) fifty thousand years:
    PICKTHAL: (Whereby) the angels and the Spirit ascend unto Him in a Day whereof the span is fifty thousand years.
    SHAKIR: To Him ascend the angels and the Spirit in a day the measure of which is fifty thousand years.


    a day the measure of which is fifty thousand years
    இதில் ஒரு நாளின் அளவு 50000 வருடங்கள். அதாவது அல்லாவின் கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் 50000 வருடங்கள்.

    022.047
    YUSUFALI: Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.
    PICKTHAL: And they will bid thee hasten on the Doom, and Allah faileth not His promise, but lo! a Day with Allah is as a thousand years of what ye reckon.

    SHAKIR: And they ask you to hasten on the punishment, and Allah will by no means fail in His promise, and surely a day with your Lord is as a thousand years of what you number.

    Day with Allah is as a thousand years of what ye reckon.

    இங்கே அல்லாவின் கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் பூமியின் அளவில் 1000 வருடங்கள்.

    -கலை நீங்கள் நன்றாக முகம்மதின் டுபாக்கூரை போட்டு உடைத்துவிட்டீர்கள். நன்றி

  13. நண்பர் ஸ்கூல் பாய் சொல்வதை சரி என்று எடுத்துக்கொன்டால் 1.அல்லாவும் ,ஆன்மாக்கள் ,ம்லக்குகள் கூட அறிவியல் விதிகளுக்கு கட்டுப் பட்டவர்களா?.
    2.அல்லா ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கிறார்.அப்பொழுதுதானே அவரிடம் செல்ல இயலும்.அப்ப‌ அவ‌ருக்கு உருவ‌ம் இருக்கா இலல்லையா?
    3.அல்லாவின் ச‌க்தியை நிரூபிக்க‌ ஐன்ஸ்டீன் என்ற‌ யூத‌ரின்( வழி கேடர்கள்) கொள்கை உப‌யோக‌ப் ப‌டுகின்ற‌து.அவ‌ர் 1940க‌ளில்தான் இந்த‌ கோட்பாட்டை கூறினார்.ஏன் குரானை படித்த அறிஞர்களால்( அல்லாவின் உதவியோடுதான்)இந்த கொள்கையை முதலில் கூற முடியவில்லை

  14. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    சந்தானம் எப்போதும் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு வெள்யேதான் பேசுவார்
    முதல் இரண்டு கேள்விகள் out of topic

    குரானை விடுங்க‌ள் யாராவுது செங்கொடியின் அறிவிய‌ல் ஓட்டைக‌ளை ப‌ற்றி ஏன் வின‌வாம‌ல் இருக்கிறீர்க‌ள். இதில் இருன்தே தெறிகிர‌து நீங்க‌ள் பொதுந‌ல‌ விரும்பிக‌ள் கிடையாது shortஆக‌ சொல்ல‌வேண்டுமானால் தாங்க‌லெல்லாம் ஜிங்ஜாக்

    //அல்லாவின் ச‌க்தியை நிரூபிக்க‌ ஐன்ஸ்டீன் என்ற‌ யூத‌ரின்( வழி கேடர்கள்) கொள்கை உப‌யோக‌ப் ப‌டுகின்ற‌து.அவ‌ர் 1940க‌ளில்தான் இந்த‌ கோட்பாட்டை கூறினார்.ஏன் குரானை படித்த அறிஞர்களால்( அல்லாவின் உதவியோடுதான்)இந்த கொள்கையை முதலில் கூற முடியவில்லை//

    1.)முதலில் ஒரு சிறு திருத்தம் ஐன்ஸ்டீன் he didnt told in 1940s relativity கோட்பாட்டை 1901இல் he submitted his paper on relativity not 1940
    2.)he is not the first man who did research on relativity. it was started from galileo (actually not also from galileo i had a long history before him!!)

    உங்களின் அடுத்த முயற்சி : கலிலியோ என்ன மதத்தை சார்ந்தவர் என்று கூகிள் ஆண்டவரிடத்தில் தேடி என்னிடம் வரும் கேள்வி‍‍‍‍‍‍‍‍‍‍— கோடிட்ட இடங்களை நிறப்புக :
    அல்லாவின் ச‌க்தியை நிரூபிக்க _______ என்ற __________ ( வழி கேடர்கள்) கொள்கை உப‌யோக‌ப் ப‌டுகின்றது!!??

    முத‌லில் ஐன்ஸ்டீன் என்ன‌ சொன்னார் என்று செங்கொடி கூறினால் ந‌ன்றாக‌ இருக்கும்.

    பின்குறி(ரை)ப்பு:
    உங்களின் கேள்விகள் அனைத்தும் உளரல்களின் குவியல்களாகவே இருக்கிறது ‍‍‍‍இதே சங்கை திரும்ப ஊதாதீர்கள்

  15. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    அப்துல் அஜீஸ் அவர்களே….ரொம்ப யோசிக்காதீங்க
    செங்கொடி கூறிய அந்த மூன்று வரிகளும் புரிவதற்கு மிகமிக‌ எழிமையான வரிகள் நான் நான் ஏற்க‌ன‌வே உதார‌ண‌ம்: செங்கொடியும் க‌ல்லூரியும் ப‌ற்றி எழிமையாக‌ கூறியுள்ளேனே உங்க‌ளுக்கு புரிய‌வில்ல‌யா?
    in a Day the “measure” whereof ===just like a scale we can convert to any physical terms (why u are going for revolution rotation and all) ஒளி ஆண்டுகளையும் தாங்கள் “ஏதொ ஒரு கிரகம் நட்சத்திரதை இப்படி சுற்றிக்கொண்டிருக்கும்” இப்படித்தான் பொருள்கொள்வீரோ!!!!!
    நெப்ட்டூயூனில் நீங்கள் இப்பொது போய் வாழ்ந்தால் உங்கள் வயது தள்ளிப்போகும் அதானே உங்கள் logic (செங்கொடியும் relativityயைய் இப்படித்தான் விளங்கிக்கொன்டிருக்கிரார் என்று நினைக்கிறேன்)

    பேசவந்துட்டானுங்க‌

  16. நண்பர் ஸ்கூல் பாய்,

    நான் எழுதிய சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் விளைவுகளில் என்ன தவறு? சரியானது என்ன? என்று ஏன் உங்களால் தெளிவாக எடுத்துவைக்க முடியவில்லை. ஒரு பொருள் ஒளியின் வேகத்தில் விரைகையில் அதன் உருவம் சுருங்கும் வாழ்நாள் அதிகரிக்கும் (இயல்பான வாழ்நாளுடன் ஒப்பிடுகையில்) என்பது அப்பொருளின் வேகத்தினால் ஏற்படும் விளைவுகள். இதை நீங்கள் தவறு என்கிறீர்களா? எப்படி விளக்குங்கள்.

    ஆனால், \\இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் எந்த அளவு relativity theory புரிந்து வைத்துள்ளீர்கள் என்று// \\உங்களின் அறிவியல் ஞானத்தை படிக்கும் போது என்னக்கு உடம்பெல்லாம் புல் அறிக்கிறது முதலில் relativity theory என்ன சொல்கிரார்கள் என்று படியுங்கள் அதன் பிறகு விமர்சனம் எளுதலாம்// என்று எழுதுவதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அல்லது எதை விளக்க முற்படுகிறீர்கள்?

    ஒன்று நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீகள் அது தவறு என்று நேரடியாக சுட்டிக்காட்டி விளக்க வேண்டும், இரண்டு நீங்கள் பொருந்தாத விளக்கத்தை அளித்துள்ளீர்கள் என்று கூறி அதற்கான மறுப்பை தெளிவாக எடுத்துவைக்க வேண்டும் இரண்டையும் செய்யாமல் இதிலிருந்தே புரிகிறது, முதலில் படியுங்கள் பின்னர் விமர்சிக்கலாம் என்று எழுதுவதன் மூலம் தவறாக எழுதப்பட்டிருப்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்க முயல்கிறீர்கள்.

    இதில் உங்கள் விமர்சனம் என்ன? அதை முதலில் சொல்லுங்கள். பின்னர் எனக்கு அறிவியல் பாடம் எடுப்பதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது குறித்து ஆலோசிக்கலாம்.

    செங்கொடி

  17. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    நான் தங்களுக்கு ஏற்கனவே ஒரு வலைப்பதிவை முதலில் கொடுத்தேனே நீங்கள் அதை படிக்க வில்லையா??? http://library.thinkquest.org/C008537/relativity/math/math.html#GR
    அதன் பிறகு வந்த பின்னூட்டங்களில் வித்தியாசம் கண்டுபிடிக்க சொன்னே…..
    \
    \\வாழ்நாள் அதிகரிக்கும் (இயல்பான வாழ்நாளுடன் ஒப்பிடுகையில்) என்பது அப்பொருளின் வேகத்தினால் ஏற்படும் விளைவுகள். இதை நீங்கள் தவறு என்கிறீர்களா? எப்படி விளக்குங்கள்\\

    well good to ask this question படத்துடன் விளக்க நான் தயாராக உள்ளேன் தங்கலுடைய emailid கொடுத்தால் நலமாக இருக்கும்………

    நான் நீங்கள் சொன்னது தவறு என்று நிறூபித்து விட்டால் தாங்கள் தவறான கருத்துகளை எடுத்துசொன்னதற்காக மண்ணிப்பு கேட்பீர்களா??? உங்கள் வலைப்பதிவில் என்னுடைய விளக்கத்தையும் உங்களுடைய மண்ணிப்பையும் இடல் வேண்டும் சவாலுக்கு தயாரா?????

  18. answer this first.
    நண்பர் ஸ்கூல் பாய் சொல்வதை சரி என்று எடுத்துக்கொன்டால் 1.அல்லாவும் ,ஆன்மாக்கள் ,ம்லக்குகள் கூட அறிவியல் விதிகளுக்கு கட்டுப் பட்டவர்களா?.
    உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். குரான் 22:47
    அப்படி என்றால அல்லாவிற்கும் கால(அறிவியல்) விதிகள் உண்டா?
    2.அல்லா ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கிறார்.அப்பொழுதுதானே அவரிடம் செல்ல இயலும்.அப்ப‌ அவ‌ருக்கு உருவ‌ம் இருக்கா இலல்லையா?
    பி ஜேவின் அல்லாவிற்கு உருவம் இருக்கிறது.ஸ்கூல் பாயின் அல்லாவிற்கு உருவம் உன்டா இல்லையா?
    4.ஐன்ஸ்டீனின் உதவி இல்லாமல் குரானின் இந்த வசனங்களை விளக்க முடியாது.சரி 1900 .அப்ப அதுக்கு முந்தி குரானின் இந்த வசனங்களை படித்தவர்களுக்கு புரிந்து கொள்ள வாய்பு இருக்குமா?

  19. 1.அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன. தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்;. அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்;. (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (5:64)
    அல்லாவின் இரு கைகள் என்று தெளிவாக கூறப்ப‌ட்டு இருக்க்ற‌து.

    2.(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (4:164)
    here it is the talk

    3.நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். (7:143)

    இந்த‌ வ‌ச‌ன‌ம் அல்லாவை பார்க்க‌ முடியும் என்று கூறுகிற‌தா?

  20. நண்பர் ஸ்கூல் பாய்,

    இந்த விசயத்தில் மட்டுமல்ல எதிலும் நான் கொண்டிருக்கும் ஒரு நிலைபாடு தவறு என நீங்கள் நிரூபித்து விட்டால், தவறு என ஒத்துக்கொள்வதிலும், தவற்றிலிருந்து நீங்கிக் கொள்வதிலும் என்னிடம் எந்தத் தயக்கமும் இருக்காது. அதே வேளை கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பவை தவறு என உங்களால் நிரூபிக்க முடியாமல் போனால் நீங்களும் உங்களின் தவறுகளிலிருந்து நீங்கிக் கொள்ள முன்வந்தால் மகிழ்ச்சி.

    என்னுடைய மின்னஞ்சல் முகவரி இடது பக்கப்பட்டையில் தொடர்புக்கு என்ற தலைப்பில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கிறது. ஆனால் உங்கள் கருத்துக்களையும் வாதங்களையும் நேரடியாக நீங்கள் பின்னூட்டத்திலேயே வைப்பது சிறப்பு.

    உங்கள் வாதங்களை தமிழிலேயே தாருங்கள். நாம் தொடர்வோம்.

    செங்கொடி

  21. நன்பர் செங்கொடி,
    /////இந்த விசயத்தில் மட்டுமல்ல எதிலும் நான் கொண்டிருக்கும் ஒரு நிலைபாடு தவறு என நீங்கள் நிரூபித்து விட்டால், தவறு என ஒத்துக்கொள்வதிலும், தவற்றிலிருந்து நீங்கிக் கொள்வதிலும் என்னிடம் எந்தத் தயக்கமும் இருக்காது//// அப்புடி நீங்க எதையும் ஒத்துக்கொண்டாதாக தெரியவில்லை (சும்மா பொய் சொல்லப்பிடாது)நீங்க விவாதம் பண்ணிகிட்டு இருக்கும் போதே ஒங்க ஜல்ராக்கள் வந்து விவாதத்துக்கு சம்பந்தமில்லாமல் புன்னூட்டம் இட்டு திசை மற்றி விடுவார்கள்

  22. எழுத்து மூலமாக எடுத்துக்கூறுவது மிக‌மிகக் கடினம்.
    //அதே வேளை கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பவை தவறு என உங்களால் நிரூபிக்க முடியாமல் போனால் நீங்களும் உங்களின் தவறுகளிலிருந்து நீங்கிக் கொள்ள முன்வந்தால் மகிழ்ச்சி// முதலில் நான் அறிவத்தேடும் ஒரு மாணவன். ஒரு மாணவன் தன்னுடைய தவறை திருத்திக்கொள்ளாமல் இருந்தால் பல புதிய எண்ண்ங்கள் அவனுக்குள் தோன்றுவது மிகக்கடினம்…………
    அத‌ன் பிற‌கு நான் த‌மிழ் வ‌ழியில் அரிவிய‌லை ப‌டிக்க‌வில்லை ஆத‌ல்லால் என்னுடைய‌ வாத‌த்தை முடிந்த‌ அள‌வுக்கு த‌மிழில் கூறுகிறேன்……..

  23. நண்பர் ஸ்கூல் பாய் வாதங்களுக்கு செங்கொடியின் பதில்கள் தடுமாற்றங்கள் என தெரிகிறது .ஸ்கூல் பாயோடு விவாதத்திற்கு ஒப்பு கொண்ட செங்கொடி பி.ஜே யோடு
    விவாதம் செய்ய பச்சை கொடி காட்டுவது எப்போது?

  24. //நண்பர் ஸ்கூல் பாய் வாதங்களுக்கு செங்கொடியின் பதில்கள் தடுமாற்றங்கள் என தெரிகிறது .ஸ்கூல் பாயோடு விவாதத்திற்கு ஒப்பு கொண்ட செங்கொடி பி.ஜே யோடு விவாதம் செய்ய பச்சை கொடி காட்டுவது எப்போது?//
    பி ஜேவின் அல்லாவிற்கு உருவம் இருக்கிறது.
    அல்லாவிற்கு உருவம் உன்டா இல்லையா?

  25. ஸ்கூல்பாய்,
    ஸ்கூல் பாய் லெவலில் கூட இல்லாத வசனங்களுக்கு ஏன் ஒளி ஆண்டுகள் விளக்கங்கள் எல்லாம்?
    மனிதன் இருக்கும் பூமியின் ஆயிரம் ஆண்டுகள் அல்லாஹ்வின் ஒரு நாள் என்று சொல்லுகிறது. இதில் நெப்டியூன், ஆயுள் அதிகரிப்பது குறைவது எல்லாம் ஏன்? நாள் என்றால் என்ன? ஆண்டு என்றால் என்ன? நாள் என்பதற்கு பூமியை பொறுத்துதான் காலத்தை கணக்கிடமுடியும். பூமி தன்னைத்தானே சுற்றி வரும் காலம்தான் மனிதனின் ஒரு நாள். இவை இரண்டும் பிரிக்கமுடியாதவை. அதே போல இன்னொரு கால அளவு வருடம் என்று சொன்னால், அதுவும் ஒரு கிரகம் அதன் சூரியனை சுற்றிவரும் காலம்தான். இரண்டு காலத்துக்கும் இங்கே ஒப்புமை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். அல்லாஹ் இருக்கும் கிரகம் , அது தன்னைத்தானே சுற்றி வருகிற காலம் அதன் ஒரு நாள் எனபதையோ அந்த காலம் பூமியின் கணக்கில் ஆயிரம் வருடங்க்ள் என்பதையோ நீங்கள் மறுக்கிறீர்களா? மறுத்தால் ஏன் மறுக்கிறீர்கள் என்பதை விளக்குங்கள்.

  26. Dear Mr. சிறகொடிந்த செங்கொடி(தவறுகளுக்கு அப்பாற்பட்ட)

    /////இந்த விசயத்தில் மட்டுமல்ல எதிலும் நான் கொண்டிருக்கும் ஒரு நிலைபாடு தவறு என நீங்கள் நிரூபித்து விட்டால், தவறு என ஒத்துக்கொள்வதிலும், தவற்றிலிருந்து நீங்கிக் கொள்வதிலும் என்னிடம் எந்தத் தயக்கமும் இருக்காது////
    நீங்க எங்க சார் உங்க தவற ஒப்புகொண்டிருக்கீங்க ? ஒரே ஒருருரு …….. நீங்க ஒப்பு கொண்ட தவறை காண்பீங்க பார்க்கலாம்.? ஓஒ…. சாரி நான் மறந்துட்டேன் நீங்க தான் தவறுக்கு அப்பாற்பட்ட மனிதன் ஆயிட்டே.
    விஞ்ஞானம் கண்டுபிடித்தது கொஞ்சம் தான். அதையே பூமிய மட்டும் அனுபவத்தில் அறிந்து வைத்து இராயகரனுடைய விஞ்ஞானத்தை ! மட்டும் படிக்கிற உங்களுக்கு புரிய முடியல. இனி உங்க காலத்துல வர போறதை எல்லாம் எப்படித்தான் நீங்க புரிய போறீங்களோ…. தெரியல . எதுக்கும் ஒரு நல்ல ஸ்கூல் பாய பார்த்து ஆரம்ப கல்வி கத்துகுங்க. சொல்ல மறந்துட்டேன் நேத்திக்கு ஒரு science exbition போயிருந்தேன் . அங்க பிரபஞ்சம் விரிவடைவது எப்படி ? ஒவ்வொரு கோள்களில் பொருட்களின் எடை எவ்வளவு மாறுகிறது என்பதை பற்றி (நாமே அங்கு தூக்கி பார்த்து புரிந்து கொள்ள முடியும் ), மனிதனின் ஒரு குரோமோசோமுக்குள்ளே இருக்கிற நம் பரம்பரை வரலாறு பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்கள் பற்றி விசுவல் ஆக பார்த்தோம். .
    நான் எதுக்கு இத சொல்றேன்னா ஒரு நூறு வருசத்துக்கு முன்னாடி இந்த விசயங்களெல்லாம் அன்றைக்கு வாழ்ந்த நம்ம மக்கள் மூளைக்கு எட்ட்டியிருக்குமா ? மறந்துட்டேன் உங்களுக்கு இன்னைக்கும் விஞ்ஞானம் தலைக்குள்ள ஏற மறுக்குதே. அதுக்கு ஒரு மருந்து இருக்குது. உங்க கம்யுநிஸ
    களிமண்ண மண்டைக்குள்ள இருந்து எடுத்தா உங்களுக்கு விஞ்ஞானமும் ஏறும் .இஸ்லாமும் ஏறும் .
    சரி விஞ்ஞானம் முற்று பெறாதது … நாளைக்கே ஓன்று மாறி இன்னொரு புது விஞ்ஞானம்(கருத்து) உருவாகலாம் . அதனால குர்ஆனில் உள்ள விஞ்ஞான கருத்த விவாதிக்க வேண்டாம்னு தான் இஸ்லாமும் ,கம்யுநிஸமும் கூறும் வாழ்க்கை திட்டத்தில் எது சிறந்தது என்று விவாதிக்க வந்தாங்க சிலபேர் . அங்க மட்டும் என்ன வாழ்ந்துதாம். உங்க விசிலடிச்சான் குஞ்சுகளா வைச்சு திசை திருப்பி விட்டது எங்களுக்கு தெரியாத என்ன ? எங்கையாவது நீங்க உங்க அறிவ வைத்து ஒண்டிக்கு விவாதம் பண்ணிருக்கீங்களா ? இதுல அறிவு கொழுந்து. தவற ஒப்பு கொள்வாரமே ? இப்படி எத்தன பேர் கிளம்பிருக்கேங்க ? போங்க போய் முதல்ல ஸ்கூல் பாயிடம் அறிவியல் படிங்க . அப்புறம் வாங்க

    இப்படிக்கு

    காரல் மார்க்ஸ்

  27. santhanam, மேல் ஆகஸ்ட்7, 2010 இல் 6:44 AM சொன்னார்:
    //நண்பர் ஸ்கூல் பாய் வாதங்களுக்கு செங்கொடியின் பதில்கள் தடுமாற்றங்கள் என தெரிகிறது .ஸ்கூல் பாயோடு விவாதத்திற்கு ஒப்பு கொண்ட செங்கொடி பி.ஜே யோடு விவாதம் செய்ய பச்சை கொடி காட்டுவது எப்போது?//
    பி ஜேவின் அல்லாவிற்கு உருவம் இருக்கிறது.
    அல்லாவிற்கு உருவம் உன்டா இல்லையா?//

    mr.சந்தானம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதை குர்ஆன் ஹதீஸ் மூலம் சகோ :பி.ஜே ஆதாரத்தோடு நிரூபித்தார் .நீங்கள் வேண்டுமானால் உங்கள் துருபிடித்த கடவுளில்லா கொள்கையை
    அவோரோடு விவாதம் செய்து நிருபியிங்கள்..அதை விட்டு பி ஜே யின் அல்லாஹ்விற்கு உருவமிருக்கிறதா?அல்லாவிற்கு உருவம் உன்டா இல்லையா ?என்று புத்திசாலிதனமாக கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு மல்லாக்க படுத்துக்கொண்டு உங்கள் மீதே துப்பிக்கொள்ள வேண்டாம்

  28. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    யாருக்கெல்லாம் செங்கொடிக்கு நான் அனுப்பிய DOC வேன்றுமோ அவர்கள் e-mail id பதிவிடவும்…..

  29. “mr.சந்தானம் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதை குர்ஆன் ஹதீஸ் மூலம் சகோ :பி.ஜே ஆதாரத்தோடு நிரூபித்தார்”

    ஹா..ஹா..ஹா…அல்லாவிற்கு உருவமிருக்கு என்று நாங்கள் சொல்லும்போது நம்பாத ரசிக பெருமக்கள் பீஜே சொன்னவுடன் நம்பிவிடுகிறார்கள், இதிலிருந்து என்ன தெரியுது பீஜேவிடம் விசிலடிச்சான் குஞ்சுகள் அதிகம் இருக்கின்றனர் என்று. என்ன இருந்தாலும் அவுரு அவுலியா இல்லையா! ஒருவேளை பீஜே, நான்தான் ஈசா நபின்னு சொன்னாக் கூட விசிலடிப்பார்கள் இவர்கள். பீஜே புச்சுபுச்சா அறிவியல் விளக்கம் கொடுக்கிறேன் என்று இப்போது அவுருதான் மல்லாக்க படுத்து துப்பிக்கொண்டிருக்கிறார் என்ற விசியம் நம்ம tntjரபீக்குக்கு இப்போ புரியாது. ஆனாலும் லேட்டா புரிஞ்சுக்குவாறு அல்லது நம்ம பீஜே புரியவைப்பாரு.

  30. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    செங்கொடிக்கு என்னுடைய வாதங்கள் அனுப்பியாகிவிட்டது……நண்பர்களே பொறுத்திருங்கள் செங்கொடி தவறை ஒப்புக்கொள்கிறாரா என்று பார்போம்….அப்படி செய்யவில்லை என்றால் தயவு செய்து எவரும் இந்த வலைப்பதிவிற்கு வராதீர்கள் பிண்ணூட்டம் இடாதீர்கள்…

  31. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    யாருக்கெல்லாம் செங்கொடிக்கு நான் அனுப்பிய DOC வேன்றுமோ அவர்கள் e-mail id பதிவிடவும்…..

  32. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    நான் நாளை சவூதி செல்ல இருப்பதால் என்னால் நாளை இனையதளத்திற்கு வர இயலாது(may be it may take five days due to work)

  33. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    கலை i mailed to you

  34. ///////////செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍–schoolboy, மேல் ஆகஸ்ட்7, 2010 இல் 6:15 மாலை சொன்னார்:
    யாருக்கெல்லாம் செங்கொடிக்கு நான் அனுப்பிய DOC வேன்றுமோ அவர்கள் e-mail id பதிவிடவும்…..////////////////////
    என்னுடைய மின்னஞ்சல் முகவரி shah_jshafi@yahoo.co.in

  35. நண்பர் ஸ்கூல் பாய்,

    நீங்கள் உங்கள் விளக்கங்களை, வாதங்களை பின்னூட்டமாக வைப்பதே சிறப்பு என கூறியிருந்தேன். அதன் காரணம் இது தான், நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு நான் எனக்கு கிடைக்கவில்லை எனக் கூறிவிடுவேனோ அல்லது அதில் மாறுதல்கள் செய்துவிடுவேனோ என அஞ்சியதால் தானே, நான் செங்கொடிக்கு என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன் என்றும், வேண்டுபவர்கள் ஐடி யை தந்தால் அனுப்பிவைக்கிறேன் என்றும் கூற நேர்கிறது. இதை தவிர்ப்பதற்க்குத்தான் நீங்கள் பின்னூட்டமாகவே வைப்பது சிறப்பு எனக் கூறியிருந்தேன். படம் போட்டுத்தான் விளக்கமுடியும் என்றால் படங்களை கூகுள் டாக்ஸ் போன்றவற்றில் பதிவு செய்து அதற்கான சுட்டியை இணைக்கலாம். பரிசீலிக்கவும்.

    ஸ்கூல் பாயின் விளக்கத்தை காண விரும்புபவர்கள் இந்த சுட்டியில் சென்று காணலாம்.

    http://docs.google.com/document/edit?id=1oJEuIecqOegBmghQVheieXZVXMUiyAzwA8OnIbq2v5M&hl=en&authkey=CMrL4LsB

    இனி உங்கள் விளக்கத்திற்கு வருவோம். நீங்கள் உங்கள் விளக்கத்தை முழுமையாக வைக்கவில்லை எனக் கருதுகிறேன். வேகம் என்பது நோக்கர்களை பொருத்து மாறுபடும். உங்கள் எடுத்துக்காட்டில் நீங்கள் இரண்டு நோக்கராக இருந்து வேகத்தை அளவிடுகிறீர்கள் அதாவது ஒளி ஒரு இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து மீண்டும் எதிரொளித்து வந்தடையும் நேரத்தை கணக்கிடுகிறீர்கள் இரண்டு நோக்கராக இருந்து. அதாவது நிலையான ஒரு இடத்திலுள்ள நோக்கராக ஸ்கூல் பாய் கடிகாரத்தின் நேரத்தையும், அதேநேரம் அசையும் நோக்கராக செங்கொடியின் கடிகாரத்தின் நேரத்தையும் கணக்கிடுகிறீர்கள். இந்த நேரத்தில் செங்கொடியாகிய நான் அசையும் பொருளாக இருந்தாலும் விண் ஓடத்தின் உள்ளே இருந்து நிலையான நேரத்தை அளவிடுகிறேன். இப்போது நான் அளவிட்ட நேரமும், நீங்கள் அளவிட்ட ஸ்கூல் பாய் நேரமும் ஒரே மாதிரியே பதிவாகி இருக்கிறது. காரணம், இரண்டுமே நிலையான நேரம். ஆனால் நீங்கள் அளவிட்ட செங்கொடியின் நேரமும், நான் அளவிட்ட நேரமும் வித்தியாசப் படுகிறது. இது ஏன்? இதற்கு காரணமாக நீங்கள் ஒளியானது எதிரொளித்து திரும்பும் தூரம் அதிகம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\இதை உங்களால் உணர முடியாது அப்படியே நீங்கள் அளந்து பார்தாலும் 2ள் தான் வரும்// என்று நீங்கள் குறிப்பிடக் காரணம் ஒளி ஒரு மாறிலி என்பது தான். ஆனால் உங்களின் இந்த விளக்கம் முழுமையானதாக இல்லை.

    நானும் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். செங்கொடியாகிய நான் கிழக்கிலிருந்து மேற்காக அறுபது கிமி வேகத்தில் செல்லும் ஒரு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். சாலையோரம் இருக்கும் திடலில் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஓரத்தில் அமர்ந்து ஸ்கூல் பாயாகிய நீங்கள் விளையாட்டை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது கிழக்கிலிருந்து மேற்காக நூறு கிமி வேகத்தில் ஒருவன் பந்து வீசுகிறான். விளையாட்டைக் கவனித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு பந்தின் வேகம் மணிக்கு நூறு கிமி. அதேநேரம் பேருந்திலிருக்கும் எனக்கு பந்தின் வேகம் நாற்பது கிமி தான், ஏனென்றால் நான் அறுபது கிமி வேகத்தில் செல்லும் பேருந்தில் இருக்கிறேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் வேறொரு பேருந்தில் மேற்கிலிருந்து கிழக்காக பயணிக்கிறேன். அதே திடல், அதே விளையாட்டு இப்போதும் ஒருவன் கிழக்கிலிருந்து மேற்காக நூறு கிமி வேகத்தில் பந்து வீசுகிறான். உங்களுக்கு பந்தில் வேகம் மாறவில்லை நூறு கிமிதான். ஆனால் எனக்கு பந்தின் வேகம் நூற்று அறுபது கிமி. ஏனென்றால் நான் அறுபது கிமி வேகத்தில் செல்லும் பேருந்தில் இருக்கிறேன். பந்தின் வேகம் ஒன்றுதான், அதை அளவிடும் நான் கிழக்கிலிருந்து மேற்காக போகும் போது நாற்பது கிமி ஆகவும் மேற்கிலிருந்து கிழக்காக போகும் போது நூற்று அறுபது கிமி ஆகவும் இருக்கிறது. ஏன் இப்படி வேகம் மாறுபடுகிறது? ஏனென்றால் வேகம் என்பது நோக்கர்களை பொருத்து மாறுபடும்.

    இப்போது ஒளிக்கு வருவோம். அந்த கிரிக்கெட் பந்துக்குப் பதிலாக ஒளியைக் கொள்வோம், கிழக்கிலிருந்து மேற்காகவோ, மேற்கிலிருந்து கிழக்காகவோ, அல்லது எந்த திசையிலிருந்து எந்த திசைக்கு செல்லும் போது அளந்தாலும் ஒளியின் வேகம் மாறவே மாறாது. இது ஏன்? என்பதுதான் பதிலளிக்கப் படவேண்டிய கேள்வி இதுவரை நாம் பார்த்தது 1880 களின் நிலை ஒளியின் வேகம் மாறாது என்பது தெரிந்துவிட்டது. அது ஏன்? என்பது தான் பிரச்சனை. இதற்கு பதிலாகத்தான் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டை முன்வைக்கிறார். ஒளியின் வேகம் மாறதிருப்பதை விளக்க வேண்டுமென்றால் ஒளியின் வேகத்தில் செல்லும் பொழுது உருவம் சுருங்கும் ஆயுள் நீளும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். இது தான் சிறப்பு சார்பியல் கோட்பாடு.

    உங்கள் எடுத்துக்காட்டு ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்பதை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. உங்கள் எடுத்துக்காடு சரியானது என நீங்கள் நினைத்தால் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.
    ௧) உணர முடியாத அளவில் இருக்கும் என நீங்கள் குறிப்பிடுவது எப்போது உணரும் அளவிற்கு மாறும்?
    ௨) ஒளி எதிரொளித்து திரும்பும் தூரம் குறைவாக இருக்கும் உங்கள் நேரத்தை விட எதிரொளித்து திரும்பும் தூரம் அதிகமாக இருக்கும் என்னுடைய நேரம் குறைவாக இருப்பதை எப்படி விளக்குவீர்கள்?
    ௩) எந்த நோக்கரிலிருந்து அளவிட்டாலும் ஒளியின் வேகம் மாறாது என்பது என்பதை எப்படி விளக்குவீர்கள்?
    ௪) உங்கள் பார்வையில் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் சாராம்சம் என்ன?

    செங்கொடி

  36. செங்கோடிக்கு ஜிங் ஜாக் போடும் சில்லறைகள் இதை சொல்ல கூடாது.பி.ஜே எதை சொன்ன்னாலும்
    கண்ணை மூடி ஏற்று கொள்பவர்கள் நாங்கள் இல்லை .நாளேயே பி. ஜே இஸ்லாத்தை விட்டு விட்டு
    கம்முநியூசத்தை பேசினால் செங்கொடியை எதிர்ப்பது போல் பி.ஜே வேயும் எதிர்ப்போம் .நாங்கள் உறுதியாக நம்புவது குரானையும் ஹதீசையும் மட்டும்தான் பி. ஜே வை அல்ல .குரானையும் ஹதீசையும் முடிந்தால் பொய்படுததீ பாருங்கள் .ஆனால் முகமூடியை போட்டு கொண்டு அல்ல .நேருக்கு நேராக வாருங்கள் .இதை உங்களால் சிய முடியவே முடியாது .குர்ஆன் விடக்கூடிய
    சவாலை பாருங்கள்
    இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)

    فَإِن لَّمْ تَفْعَلُواْ وَلَن تَفْعَلُواْ فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ

    (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (2:24)

  37. //பீஜே சொன்னவுடன் நம்பிவிடுகிறார்கள், இதிலிருந்து என்ன தெரியுது பீஜேவிடம் விசிலடிச்சான் குஞ்சுகள் அதிகம் இருக்கின்றனர் /கலை, மேல் ஆகஸ்ட்7, 2010 இல் 5:55 மாலை சொன்னார் / / செங்கோடிக்கு ஜிங் ஜாக் போடும் சில்லறைகள் இதை சொல்ல கூடாது.பி.ஜே எதை சொன்ன்னாலும்
    கண்ணை மூடி ஏற்று கொள்பவர்கள் நாங்கள் இல்லை .நாளேயே பி. ஜே இஸ்லாத்தை விட்டு விட்டு
    கம்முநியூசத்தை பேசினால் செங்கொடியை எதிர்ப்பது போல் பி.ஜே வேயும் எதிர்ப்போம் .நாங்கள் உறுதியாக நம்புவது குரானையும் ஹதீசையும் மட்டும்தான் பி. ஜே வை அல்ல .குரானையும் ஹதீசையும் முடிந்தால் பொய்படுததீ பாருங்கள் .ஆனால் முகமூடியை போட்டு கொண்டு அல்ல .நேருக்கு நேராக வாருங்கள் .இதை உங்களால் சிய முடியவே முடியாது .குர்ஆன் விடக்கூடிய
    சவாலை பாருங்கள்

    இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)
    فَإِن لَّمْ تَفْعَلُواْ وَلَن تَفْعَلُواْ فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ
    (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (2:24)

  38. அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (2:18)
    அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)

    وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُواْ بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُواْ شُهَدَاءكُم مِّن دُونِ اللّهِ

    நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)
    இவ் வசங்களை சிந்தித்து இனியாவது நேர்வழிபெருங்கள்

  39. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    தலை வலிக்கிறது செங்கொடி அவர்களே
    //கிரிக்கெட் பந்துக்குப் பதிலாக ஒளியைக் கொள்வோம், கிழக்கிலிருந்து மேற்காகவோ, மேற்கிலிருந்து கிழக்காகவோ, அல்லது எந்த திசையிலிருந்து எந்த திசைக்கு செல்லும் போது அளந்தாலும் ஒளியின் வேகம் மாறவே மாறாது. இது ஏன்? என்பதுதான் பதிலளிக்கப் படவேண்டிய கேள்வி இதுவரை நாம் பார்த்தது 1880 களின் நிலை ஒளியின் வேகம் மாறாது என்பது தெரிந்துவிட்டது. அது ஏன்? என்பது தான் பிரச்சனை. இதற்கு பதிலாகத்தான் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டை முன்வைக்கிறார்// —-A
    எனக்கு என்னமோ இந்த வரியை ஒரு புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதியது மாதிரியும்.
    //ஒளியின் வேகம் மாறதிருப்பதை விளக்க வேண்டுமென்றால் ஒளியின் வேகத்தில் செல்லும் பொழுது உருவம் சுருங்கும் ஆயுள் நீளும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். இது தான் சிறப்பு சார்பியல் கோட்பாடு// ——-B
    இந்த வரியை நீங்களே யூகித்து சொல்வது மாதிரியும் தெரிகிரது!!!!????
    A&B நீங்களே equation எழுதி முடிச்சி போட்டால் நன்றாக இருக்கும்!!!!!! i dare u none of the scientist told like this………hurray we got one scientist in india……………….
    நீலம் சுருங்குதல் ஓரம் தள்ளுங்க அந்த காமெடிக்கு அப்புரம் வர்ரேன். மண்ணிக்கவும் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நான் தமிழ் வழியில் அறிவியல் படிக்கவில்லை ஆதலால் words like மாறிலி மற்றும்
    ௧) உணர முடியாத அளவில் இருக்கும் என நீங்கள் குறிப்பிடுவது எப்போது உணரும் அளவிற்கு மாறும்?
    ௨) ஒளி எதிரொளித்து திரும்பும் தூரம் குறைவாக இருக்கும் உங்கள் நேரத்தை விட எதிரொளித்து திரும்பும் தூரம் அதிகமாக இருக்கும் என்னுடைய நேரம் குறைவாக இருப்பதை எப்படி விளக்குவீர்கள்?
    ௩) எந்த நோக்கரிலிருந்து அளவிட்டாலும் ஒளியின் வேகம் மாறாது என்பது என்பதை எப்படி விளக்குவீர்கள்?
    யாராவுது நண்பர்கள் மொழிப்பெயர்த்து தந்தால் நன்றாக இருக்கும் குறிப்பாக (உ) சுத்தமாக புரியவில்லை மற்றும் (௪) பதில் என்னுடைய படித்தாலே விளங்கும் பரவாயில்லை நான் திரும்பவும் விலக்குகிரேன் (௧)(௨)(௩)சேர்த்து

  40. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    நீங்கள் சவூதியில் வேலை பார்பவரா??

  41. 1. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)//

    விரிப்பு என்றால் பூமி த‌ட்டையாக‌ இருக்கிற‌து என்று குரான் கூறுகிற‌தா?
    சரி என்று வேறு ஆங்கில மொழி பெயர்ப்புகளை பார்த்தேன்

    Ahmed Ali :Who made the earth a bed for you, the sky a canopy, and sends forth ரைன் from the skies that fruits may grow — your food and sustenance. So, do not
    make another the equal of God knowingly.

    The Noble Qur’an : Who has made the earth a resting place for you, and the sky as a canopy, and sent down water (rain) from the sky and brought forth therewith fruits as
    a provision for you. Then do not set up rivals unto Allâh (in worship) while you know (that He Alone has the right to be worshipped). []

    Pickthal : Who hath appointed the earth a resting-place for you, and the sky a canopy;and causeth water to pour down from the sky, thereby producing fruits as
    food for you. And do not set up rivals to Allah when ye know (better).

    Shakir : Who made the earth a resting place for you and the heaven a canopy and (Who) sends down rain from the cloud then brings forth with it subsistence
    for you of the fruits; therefore do not set up rivals to Allah while you know.

    Yusuf Ali: Who has made the earth your couch, and the heavens your canopy; and sent down rain from the heavens; and brought forth therewith Fruits for your
    sustenance; then set not up rivals unto Allah when ye know (the truth).

    ஒருவர் பூமியை படுக்கை என்கிறார் ,இன்னொருவர் ஓய்வு எடுக்கும் இடம் என்கிறார்.நீங்க சொல்லுவது விரிப்பு என்பது.விரிப்பில் படுத்து ஓய்வு எடுப்பதா?
    ————————
    2.//நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (2:28)//

    AA Then how can you disbelieve in God? He gave you life when you were dead.He will make you die again then bring you back to life: To Him then you will return.

    NQ How can you disbelieve in Allâh. Seeing that you were dead and He gave you life. Then He will give you death, then again will bring you to life (on the Day of Resurrection) and then unto Him you will return.

    PK How disbelieve ye in Allah when ye were dead and He gave life to you! Then He will give you death, then life again, and then unto Him ye will return.

    SH How do you deny Allah and you were dead and He gave you life? Again He will cause you to die and again bring you to life, then you shall be brought back to Him.

    YU How can ye reject the faith in Allah?- seeing that ye were without life, and He gave you life; then will He cause you to die, and will again bring you to life;and again to Him will ye return.

    உயிரற்றோராக(without life) என்ப‌து யுசுப் அலியின் மொழி பெயர்ப்பு
    ஆனால் அனைவரும் உபயோகிக்கும் பதம் இறந்த போது(dead).
    இதை சரி என்று கொண்டால் இறக்க வேண்டுமென்றால் முதலில் நான் உயிரோடு இருக்க இருக்க வேண்டும்.
    இன்னோரு விஷயம்.அஹமதியாக்களின் குரான் பத்தா அல் பக்ரா சுராவில் 287 வசனம் இருக்கு.மற்ற எல்லா குரானில் அல் பக்ரா சுராவில் 286 வசனம் தான் இருக்கு.

    3//செங்கோடிக்கு ஜிங் ஜாக் போடும் சில்லறைகள் இதை சொல்ல கூடாது.பி.ஜே எதை சொன்ன்னாலும்
    கண்ணை மூடி ஏற்று கொள்பவர்கள் நாங்கள் இல்லை .நாளேயே பி. ஜே இஸ்லாத்தை விட்டு விட்டு
    கம்முநியூசத்தை பேசினால் செங்கொடியை எதிர்ப்பது போல் பி.ஜே வேயும் எதிர்ப்போம் .நாங்கள் உறுதியாக நம்புவது குரானையும் ஹதீசையும் மட்டும்தான்
    //.
    குரானில் எதை எடுதாலும் குழப்பமாகவே இருக்கு.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி அர்த்தம் விளங்குது.பி ஜேவுக்கு அல்லா உருவம் உடையவர் என்றால் ஜமாலிக்கு உருவம் இல்லாதவர். இருவரும் மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞர்கள் என்ற போதும் இந்த குழப்பங்கள்.பி ஜேவின் கருத்துகளுக்கு பிற நாட்டில்(அரபு) நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்ன?.
    இதில் ஒரு சாதாரண முஸ்லிமுக்கு குரான் எப்படி புரியும்? .பி ஜேவிற்கு ஆய்வு செய்ய தேவை இருக்கும் போது நமது அப்பாவி முஸ்லீம்கள் யர்ராவது பி ஜெ அல்லது ஜமாலி சொல்லை அப்படியே நம்புகிறார்கள்(ஜிங் ஜாக் ) என்று நான் கூறுகின்றேன்

  42. நன்பர்கள் சந்தானம் மற்றும் tntjrafik அவர்களுக்கு, விவாதம் சரியான திசை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது (செங்கொடி VS school boy) தேவையில்லாமல் திசை மாற்றுகீறீர்கள் உதராணத்திற்கு உங்கள் பின்னூட்டங்கள் சில ///// tntjrafick, மேல் ஆகஸ்ட்7, 2010 இல் 6:33 AM சொன்னார்:
    நண்பர் ஸ்கூல் பாய் வாதங்களுக்கு செங்கொடியின் பதில்கள் தடுமாற்றங்கள் என தெரிகிறது .ஸ்கூல் பாயோடு விவாதத்திற்கு ஒப்பு கொண்ட செங்கொடி பி.ஜே யோடு
    விவாதம் செய்ய பச்சை கொடி காட்டுவது எப்போது?////// இப்படி தேவையில்லாமல் பி. ஜெ வோடு விவாத அழைப்பு கொடுத்து நீங்கள் முதன்முதலில் திசை திருப்பினீர்கள் அதற்கு பதிலாக சந்தானம் அவர்களின் பின்னூட்டம் ///////santhanam, மேல் ஆகஸ்ட்7, 2010 இல் 6:44 AM சொன்னார்:
    //நண்பர் ஸ்கூல் பாய் வாதங்களுக்கு செங்கொடியின் பதில்கள் தடுமாற்றங்கள் என தெரிகிறது .ஸ்கூல் பாயோடு விவாதத்திற்கு ஒப்பு கொண்ட செங்கொடி பி.ஜே யோடு விவாதம் செய்ய பச்சை கொடி காட்டுவது எப்போது?//
    பி ஜேவின் அல்லாவிற்கு உருவம் இருக்கிறது.
    அல்லாவிற்கு உருவம் உன்டா இல்லையா?////>> இப்படி ஆரம்பித்து விட்டார் உங்களுடைய குழப்பத்தில் school boy அவர்களின் வழுவான விவாதங்கள் கவனிப்பற்று திசை திருப்படாலம் அதனால் இந்த பதிவிற்க்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்கும் மாறு தயவு செய்து கேட்டு கொள்கிறேன்

  43. நண்பர் ஹைதர் அலி கருத்துக்களுக்கு மதிப்பளிக்கேரன் .விவாதத்தை நான் திசை திருப்ப விரும்ப வில்லை .ஸ்கூல் பாய் வாதங்களுக்கு செங்கோடியிடம் பதிலை எதிர்ப்பாக்கிறேன் .நன்றி

  44. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றுதான் குரான் சொல்லுகிறது.

    இதனைத்தான் பீ ஜெவும் சொல்லுகிறார். குரானை மறுக்க பீஜெயால் முடியாது.

    அர்ஷில் உட்கார்ந்திருக்கிறார் என்று ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது.

    மலக்குகள் அந்த அர்ஷை தூக்கி வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

    அப்படியானால் அல்லாஹ்வை தூக்க முடிகின்ற இந்த மலக்குகள்

    பலசாலிகளாகத்தான் இருக்கவேண்டும். சரி அர்ஷில் உட்கார்ந்திருக்கிறார்

    அல்லாஹ். எப்படி உட்காரமுடியும்? அப்படியானால் அல்லாஹ்வுக்கு பட்டக்ஸ்

    இருக்கவேண்டும். சரி பட்டக்ஸின் முன்னால் என்ன இருக்கும்? அவருக்கு

    ஆண்குறி இருக்குமா இருக்காதா? இருக்கிறது என்று சொன்னால், அது எதற்கு

    என்று கேள்வி வரும். இல்லை என்று சொன்னால், பிறகேன் அவரை அவன்

    என்று ஆண்பாலாக சொல்லுகிறீர்கள் என்று கேள்வி வரும்?

    நபும்ஸகராகத்தானே இருக்கவேண்டும்? அல்லாஹ் பிறகு ஒம்போதா என்று

    கேள்வி வரும். இருக்கிறது என்று சொன்னால், அது எதற்கு? மூச்சா போவதற்கா

    அல்லது உடலுறவு கொள்வதற்கா? எதையாவது குடித்தால்தானே மூச்சா வரும்?

    அப்படியென்றால் எதை குடிப்பார்? உடலுறவுக்கு என்றால் யாருடன்

    உடலுறவு கொள்வார்? சரி அவரது உறுப்பு சுன்னத் செய்யப்பட்டிருக்குமா

    செய்யப்பட்டிருக்காதா? செய்யப்பட்டிருந்தால், யார் செய்து விட்டது?

    அவருக்கு அவரே செய்துகொண்டாரா? செய்யவில்லை என்றால், ஏன்

    செய்யவில்லை? விவிலியத்தில் கர்த்தர் தன் உருவத்தில் ஆணை படைத்தார்

    என்று சொல்லுவார்கள். இதே கேள்விகள் அந்த கர்த்தருக்கும் உண்டு.

    ஒரு முக்கியமான விஷயம் சொல்லுகிறேன். எல்லா முஸ்லீம்களும் சுன்னத செய்யவேண்டும் என்று முகம்மது நபி கட்டளையிட்டிருக்கிறார் அல்லவா? ஆனால் ஹதீஸிலோ அல்லது குரானிலோ எங்குமே முகம்மது சுன்னத் செய்தார் என்று கண்டுபிடிக்கவேமுடியாது. முகம்மது சுன்னத் செய்ததை ஆதாரப்பூர்வமாக யாரேனும் காட்டட்டுமே. பார்க்கலாம்.

  45. “”””””ஹுமாயுன்,etc etc etc”””””””””””””””””
    இங்கே வந்து சம்பந்தமேயில்லாமல் பின்னூட்டமிடும் பரதேசிகளே
    உங்களுக்கு வேறு வேலையில்லைன்னா எங்காவது போயி புடுங்கவேண்டியதுதானே இங்க வந்து என்னாத்த புடுங்கறீங்க.இன்னும் மோச மோசமா திட்டனும்னு தோணுது பொது இடம்னு கருதி என் நாவை அடக்கி கொள்கிறேன். விவாதத்தில் பங்குபெற்று ஒழுங்கான முறையில் விவாதிக்க திராணி இருப்பவர்கள் மட்டும் விவாதத்தில் கலந்துகொள்ளுங்கள்.விருப்பமில்லாதவர்கள் ஒதுங்கி வேடிக்கை பார்க்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
    விவாதத்தை திசை திருப்பும் கயவர்களே தயவுசெய்து குறைந்த பட்சம் உங்களுடைய வாயையும்,”—–” பொத்திக்கொண்டு இருக்குமாறும் எச்சரிக்கிறேன்.
    தோழர் செங்கொடிக்கு நீங்கள்தான் விவாதத்துக்கு சம்பந்தமில்லாத மறுமொழிகளையெல்லாம் நீக்கி விடுவீர்களே இந்த கயவன் ஹுமாயுனுடைய மறுமொழி உங்களுக்கு விவாதத்தை திசை திருப்பும் மறுமொழியா தெரியலையா?

  46. நன்பர் லெனின், ////தோழர் செங்கொடிக்கு நீங்கள்தான் விவாதத்துக்கு சம்பந்தமில்லாத மறுமொழிகளையெல்லாம் நீக்கி விடுவீர்களே இந்த கயவன் ஹுமாயுனுடைய மறுமொழி உங்களுக்கு விவாதத்தை திசை திருப்பும் மறுமொழியா தெரியலையா?/// அதேப்படி தெரியும் கால வெளியில் சிக்கிக்கொண்ட செங்கொடியை காப்பற்ற இது இதைவிட மேசமான வழிமுறையை பின்பற்ற இவர்கள் தயங்க மாட்டார்கள் விவாதத்தில் பதில் சொல்ல முடியாமல் முட்டு சந்தில் நின்று மாட்டிக்கொண்டு முழிக்கும் போது இவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அல்லாஹ்வை திட்டுவது அல்லது முஹம்மது நபியை திட்டுவது இத்தனை அட்டுழியாங்களுக்கு பிறகும் அழகிய முறையில் விவாதிக்க காத்திருக்கும் சகோதரர்களை நினைத்து பெருமைப் படுகிறேன் இதுதான் இஸ்லாம்

  47. ஹுமாயுன் போன்ற சாக்கடைகளின் மறுமொழியை பதிவு செய்வதின்
    மூலம் செங்கொடி தன்னை யார் என்று அடையாளம் காட்டிக் கொண்டார் . நிஜமாகவே செங்கொடி நேர்மையாளராக இருந்தால் அந்த பதிவை நீக்க வேண்டும் .இங்கே இஸ்லாம் பொய்யா ?குரான் பொய்யா ?என்பதை அறிவிப்பூர்வமாகவும் நாகரீகமாகவும் விவாதித்து கொண்டிர்க்கும் போது அந்த சாக்கடையின்(ஹுமாயுன் ) கழிவுகளை பதிய வேண்டிய அவசியம் என்ன ?இதன் மூலம் உங்களுடன் நேர்மையாக விவாதித்து கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை நோகடிப்பதுதான் உங்கள் நோக்கமா?உங்களிடம் எங்கள் வாதங்களுக்கு பதில் இல்லை என்று சொன்னால் ,
    உங்கள் கைத்தடிகளை தூண்டிவிட்டு விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்.

    இஸ்லாமிய சகோதரர்களே இவர்கள் இந்த பதிவை நீக்க வில்லை என்று சொன்னால் இவர்களுடன் விவாதம் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் .

  48. அண்ணே செங்கொடி ,
    நீங்க எப்போதுமே வெற்றிவீரர்தான் அண்ணே. இந்த இஸ்லாம் மண்ணுகேற்ற மார்க்கம் தலைப்புல அன்பு அயோக்யன் அபு அனாரை களத்திலே இறக்கி விட்டு பின்னி புட்டீங்க. இப்ப அதே அயோக்யன் ஹுமாயூனா மாறி ஸ்கூல்பாய குதறிபுட்டான் . எப்படியும் நீங்க வெற்றி வீரர்தான் அண்ணே. அது எப்படி அண்ணே உங்களாலே மட்டும் இவ்வளவு வெற்றியையும் தாங்க முடியுது. ஆமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன். நீங்க ஏதாவது தப்பு பண்ணா உடனே ஒப்பு கொண்டுருவீங்க . அது தான் உங்க தனித்தன்மை. அத பாராட்டாம இருக்க முடியாது . அண்ணே அப்புறம் இந்த வீணா போன துலுக்க பயலுவ நேரடி விவாதம் நேரடி விவாதமுன்னு சொல்லி நம்மள தொந்தரவு பண்றானுங்க . எதுக்குண்ணே நம்ம நேரடி விவாதம் போவணும். ஆமா அங்க போன அவனுங்க இஸ்லாம் தெரிஞ்சவனையும் , அறிவியல் தெரிஞ்சவனையும் கூட்டிவந்து ஆதாரம் கீதாரமுன்னு எதையாவது கேட்டு தொலப்பானுங்க . அதெல்லாம் நமக்கு ஒத்து வராதுன்ணே. இவனுங்களுக்க அறிவியலும் அவியலும் …. நம்ம என்னைக்கும் வெற்றி வீரனா இருக்கணும் அண்ணே ! அண்ணே அப்புறம் உங்க டிரவுசர் நாலு மாசத்துக்கு முன்னாடி கிளிஞ்சது இது வர தைக்கலியா அண்ணே. ஆமா அப்புறம் இந்த லொள்ளு ஸ்கூல் பாய் கொஞ்சம் கூட கிளிச்சிருவான் . ஜாக்கிரதையா இருந்துக்குங்க . இந்த லொள்ளு பையன் மகா கெட்டவன் அண்ணே. அப்புறம் ஓங்க ஜட்டியையும் உருவிட்டு போயிடுவான். அப்புறம் எத்தன மாசம் அண்ணே நாம சவுதில இருக்கிரோமுன்னு சொல்லி சமாளிக்கிறது. அதுக்கு ஏதாவது ஐடியா வச்சிருக்கேங்கள அண்ணே. ஏதாவது பிரச்சன உண்டுன்ன என்ன கூப்பிடுங்க அண்ணே. இந்த காரல் மார்க்ஸ் என்னைக்கும் உங்க பக்கம் தான்.

    இப்படிக்கு ,

    உங்கள் அன்பு தம்பி காரல் மார்க்ஸ்

  49. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    senkodi i want your saudi address..i want to meet you

  50. ஹுமாயுன் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கிடந்து குதிப்பதில் என்ன பயன்?

    இதற்கும் அறிவுப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக பதில் சொல்லவேண்டியதுதானே?

    முகம்மது சுன்னத் பண்ணதற்கு ஆதாரம் கிடையாது என்பது நான் இதுவரை கேள்விப்படாதது. அதனையாவது மறுக்கலாமே?

  51. “வேதனையை அவர்கள் அவசரமாகத் தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.” குரான் 22:47

    இவ்வசனம் எங்கே மறுமை என்று தொனத்திய கேள்விக்கு பதிலாக கொடுக்கப்பட்டது. இதில் இஸுலாமியர்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா!
    எப்பொழுதுவரும் என்று கேட்டதற்கு ”இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்” என்று முஹம்மது பதிலுரைக்கிறார். அதாவது 10 நாட்களில் மறுமை நாள் வரும் என்று இறைவன் கூறினால் மனிதர்களாகிய நமது கணக்குப் பிரகாரம் இன்னும் பத்தாயிரம் நாட்கள் இருக்கிறது என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் இவ்வசனம் உணர்த்தும் கருத்து.

    ஆனால் மதவாதிகள் என்னா சொல்லுகிறார்கள் என்டால், இது வேகத்தை உணர்த்துகிறதாம். எப்படி! ”இறைவன் கட்டளை பிறப்பித்து விட்டால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகத்தில் அக்கட்டளை வந்து சேரும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது” – இது பீஜே சொன்னது. அதாவது மறுமைநாள் வந்துவிட்டது உலகம் அழியட்டும் என்று இறைவன் கூறிவிட்டால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகத்தில் அக்கட்டளை நிறைவேறும் அல்லது உலகை வந்தடையும் என்று கூறுகிறார். மதவிஞ்ஞானிகளின் கூற்றின்படியே இவ்வசனத்தில் காலத்திற்குப் பதில் வேகத்தை பொருத்தினால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகம் என்பது அது மனிதனுடைய வேகத்தையே குறிக்கிறது. மனிதனுடைய வேகம் இறைவனுடன் ஒப்பிடும்போது குறைவானது. இறைவனுடைய கட்டளை மனிதனுடைய வேகத்தில் வரும்போதுதான் இறைவன் ஒருநாளில் பிறப்பித்த கட்டளை உலகை வந்தடைய ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இறைவன் ஒருநாளில் பிறப்பித்த கட்டளை உலகை வந்தடைய ஆயிரம் ஆண்டுகள் ஆகும் எனும்போதுதான் 22:47 வசனத்தின் பொருளை புரிந்துகொள்ளமுடியும். இல்லை அக்கட்டளை இறைவனுடைய ஒருநாள் வேகத்தில் வருகிறது என்றால் உலகம் உடனடியாக அழியவேண்டும். அழிந்திருக்கவேண்டும். ஆனால் சந்திரன் பிளந்துவிட்டது. மறுமைநாளும் நெருங்கிவிட்டது என்று கூறியதற்குப் பிறகு மக்கள் வேதனையை அவசரமாக தேட முஹம்மதோ ”உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.” என்கிறார். அதாவது அன்றே இறைவன் கட்டளையிட்டிருந்தாலும் அக்கட்டளை நிறைவேற இன்னும் ஆயிரம் ஆண்டுகள் இருக்கிறது. பொறுத்திருங்கள் என்கிறார்.(இதுதான் அவ்வசனத்தின் உண்மையான பொருள்). மதவிஞ்ஞானி பீஜே கூறுகிறபடி எடுத்துக்கொண்டால் மற்ற இரு வசனங்களிலும் (70:4; 32;5) வாம்மா மின்னல் என்ற நகைச்சுவைக்காட்சியில் வருவது போல ஒளி வேகத்தில் கட்டளைகளை உலகிற்கு அனுப்பும் இறைவனின் வேகம் 22:47 ல் குறைந்துவிடுகிறது. அது ஏன் என்றுதான் புரியவில்லை.

    இங்கு அல்லாவிடம் ஒரு நாள் என்பது மனிதர்களின் ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்ற காலவிளக்கம் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மதவிஞ்ஞானிகளோ இங்கு சார்பியல் கோட்பாட்டை தங்களது அறிவியல் அறிவின் உதவியுடன் இடைச்செருகல் செய்து இவ்வசனத்தின் கருத்தையே திசைமாற்றுகிறார்கள். ஹூமாயூன், விவாதத்தை திசைமாற்றுவதாக புலம்பும் ரசிகபெருமக்கள் தங்களது அவுலியா பீஜே, குரான் வசனத்தின் கருத்தையே திசைமாற்றியிருப்பதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்கள் விசிலடிப்பதைத் தவிர.

  52. நன்பா கலை, ஸ்ஸ்ஸ் தங்கமுடியால ஒருபக்கம் பி,ஜெ கூட விவாததத்துக்கு வா அப்புடியின்னு ஒரே கூக்குரல் மறுபக்கம் நீங்க பி ஜெ அப்புடி சொல்லியிருக்காரு இப்புடி சொல்லியிருக்காரு அவுலியா அவருட்ட கேளு அப்புடியின்னு ஒரே புலம்பல் இன்ன ஆச்சு ஒங்களுக்கு ஆமா செங்கொடி எங்கே இங்கே பி ஜெ வா கேள்வி எழுப்பினார் நம்ம schoolboy தானே கேள்வி கேட்டுகீனு கேடக்காரு அவருக்கு பதில் சொல்ல துப்பில்ல நானும் இரண்டு நாளா வேயிட் பன்னி காத்து கேடக்குறேன் செங்கொடி வந்த மாதிரி தெரியால நம்ம கலைதான் சும்மா பி ஜெ விசிலு குருவின்னு புலம்பிகீனு கேடக்காரு

  53. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    senkodi i think it is good to meet u in saudi and discuss our thoughts……otherwise u will just give me the answers by ssimply searching from the web without understanding the theory part….thats why face to face discussion is good and best……….i will be saudi for the next two months and i will get ten day leave at the end of ramadan,,,,,may we plan to meet at that date????

  54. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    kalai avargalay PJ enna islaththukku authoritiya??? eppovum PJ vaalayaee pudichitu irukkeenga?????
    இன்னும் சொல்லனும்னா…நான் பிஜெ வும், நாத்திக சங்கமும் நடத்துன விவாதத்த பார்தேன் காதுல இருந்து இரத்தம்தான் வந்தது!!!!!!pj வுடுங்க அவருக்கு அறிவியல் தெரியாதுன்னு அவரே ஒத்துக்கிட்டாரு……ஆனா டாக்டர் எழிலன் அவர்களுடைய பேச்சை கேட்டுட்டு என்னக்கு ஒரு சந்தேகம் வங்துருச்சு அவரு உன்மயாகவே டாக்டருக்கு படிச்சாரான்னு???? யாரு அவருக்கு டாக்டர் போஸ்ட் கொடுத்தாங்கன்னு தெரியல????……
    உதாரனத்துக்கு பிஜெ/எழிலன் பன்றி இதயம் பத்தின பிஜெ/டாக்டர் பேச்ச கேலுங்க????

    இன்னொரு உதாரனம்: Doctor ezhilan : arabia was advanced in science and technolgy (golden age of arabia) before coming of islam…….after the spread of islam everything got vanished…….
    இந்த மாதிரி வெட்டி விவாதம் பன்னுவதர்கு செங்கொடி ஒரு தனி இடத்தை வலைப்பதிவில் ஆரம்பிக்கலாம்……..திசை திருப்பிகலுக்கு உபயோகமாக இருக்கும்

  55. நண்பர் ஸ்கூல் பாய்,

    நான் கூறியது தவறு என நிரூபிக்கப் போவதாக கூறினீர்கள். உங்களின் வாதத்திற்கு நான் பதிலளித்ததும், நேரில் சந்திக்கலாமா எனக் கேட்கிறீர்கள். நான் பதிலளித்துவிடக் கூடாது என எதிர்பார்த்தீர்களா?.

    நாம் இருப்பது சௌதியில் என்பதால் செங்கொடியாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில் இருக்கும் சிரமங்களை உணர்வீர்கள் என நம்புகிறேன். ஆனாலும் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்கிறேன். நோன்புப்பெருநாளை ஒட்டி எனக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுப்பு கிடைக்கும், அதுபோது உங்கள் விபரங்களை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

    நண்பர் ஹைதர் அலி,

    \\அவருக்கு பதில் சொல்ல துப்பில்ல நானும் இரண்டு நாளா வேயிட் பன்னி காத்து கேடக்குறேன் செங்கொடி வந்த மாதிரி தெரியால// நீங்கள் எழுதிய இவ்வாசகம் உங்கள் உளக்கிடக்கையை நன்றாகவே காட்டுகிறது. நான் எடுத்துவைத்த விளக்கங்களுக்கு பதில் கூறுகிறேன் என்றுதான் ஸ்கூல் பாய் கூறியிருக்கிறார். அவர் பதில் கூறிய பிறகு தான் நான் என்னுடைய விளக்கங்களை கொடுக்க முடியும். இதற்குக் கூடவா நான் விளக்கம் கொடுப்பது.

    செங்கொடி

  56. இதனைப் படிக்கும் சாமானியர்களுக்கு அதாவது சார்பியல் கோட்பாடு மற்றும் குர்ஆன் இது பற்றி என்ன கூறுகிறது எனபது பற்றி தெரியாதவர்கள் மிரண்டுபோயிருக்கலாம். அல்லது குழப்பமாயிருக்கலாம். அல்லது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கியிருக்கலாம். அவர்களுக்காகவே இந்த கட்டுரை.
    இந்த விவாதப் பிரச்சனைக்கு சார்பியல் கோட்பாடு தெரிந்திருக்க வேண்டுமா?
    குர்ஆன் கூறுவதுபற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டுமா?
    எதும் தேவையில்லை. குர்ஆனின் இது குறித்தான வசனத்திற்கும் சார்பியல் கோட்பாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனை http://www.onlinepj.com வில் உள்ள கட்டுரைக்குள் சில கேள்விகளை எழுப்பி பதில் தேடினாலேபோதும். விடை எளிதாக கிடைத்துவிடும்.
    ‘ஒரு நாள்’ என்றால் என்ன?
    24 மணி நேரம் ஒருநாள் என்று முதல் வகுப்பில் படிக்கும் குழந்தைகூட சொல்லிவிடும்.
    கலிலியோ கடிகாரத்தையும், பூமி தன்னைத்தானே சுழற்றிக்கொள்வதையும் கண்டுபிடிப்பதற்குமுன் ‘ஒரு நாள்’ என்பதற்கு என்ன வரையரை வைத்திருந்தார்கள்?
    சூரிய உதயத்தைக்கொண்டு கணக்கிட்டார்கள். அதாவது சூரியன் உதிப்பதைப் பார்த்ததிலிருந்து அது மறைந்து மீண்டும் உதயமாகும் நேரம்வரை ‘ஒரு நாள்’ என கணக்கிட்டார்கள்.
    காலத்தை சிறுசிறு சம அளவாக பிரிக்கக் கூடிய கருவியான கடிகாரத்தை கலிலியோ கண்டுபிடித்த பிறகு, ஒரு சூரிய உதயத்திற்கும் மறு ஒரு சூரிய உதயத்திற்கும் இடையிலான நேரத்தை 24 மணி நேரமாகப் பிரித்து இப்பொழுது கணக்கிடுகிறோம்.
    24 மணி நேரங்கொண்டு பிரித்தது போல 20 மணி நேரம் ஒருநாள் என்றோ 10 மணி நேரம் ஒருநாள் என்றோ 100 மணி நேரம் ஒருநாள் என்றோகூட பிரித்துக்கொண்டு இந்த ‘ஒரு நாளை’ கணக்கிடலாம். பொதுவாக நாம் 24 மணிநேரத்தைப் பயண்படுத்துகிறோம்.

    அடுத்ததாக ஆண்டு என்றால் என்ன?
    ஒரு ஆண்டு என்பதை 1000 நாட்கள் என்றோ 500 நாட்கள் என்றோகூட கணக்கிடலாம். ஆனால் அதிலும் கலிலியோ இவ்வுலகிற்கு மாபெரும் அர்பணிப்பை செய்துவிட்டுச் சென்றுள்ளார். பூமி, சூரியனை முழுதாக ஒருமுறைச் சுற்றிவரும் நாட்களை கணக்கிட்டு அது 365 1\4 நாட்கள் என்றார். அந்த 365 1\4 நாட்களில் முறையாக பருவகாலங்களின் சுழற்சி நடைபெறுவதால் அதனை நாம் ஒரு ஆண்டாக கணக்கிடுகிறோம்.
    கால் நாள் என்பதை அட்டவணைப் படுத்துவதில் அதாவது நாட்காட்டியாக வடிவமைப்பதில் ஏற்படும் சிக்கலைத்தவிர்க சாதாரண ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்றும் நான்காண்டுக்கு ஒருமுறை லீப் ஆண்டு என்று 366நாட்களாகவும் கூறுகிறோம்.
    வயது என்றால் என்ன?
    ஒருவயது எனபதையும் 1000 நாட்கள் என்றோ 500 நாட்கள் என்றோகூட கணக்கிடலாம். ஆனால் ஒரு முழு பருவ சுழற்சியையும் மனிதன் சந்தித்து கடந்த, 365 1\4 நாட்களை ஒரு ஆண்டு என்று கூறுவதைப்போல, ஒரு வயது என்று வரையறுப்பதும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்.
    ஒருவரின் பயணவேகம் கொண்டு அவரது நாட்கணக்கு மாறும் என்றால் என்ன?
    பூமியில் 40,000 கி.மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நேர் கோட்டுப்பாதையில் 10,000 கி.மீட்டர் வேகத்தில், சூரியன் உதிக்கும் நேரத்தில் கிழக்கு நோக்கி பயணம் செய்வதாக எடுத்துக்கொள்வோம். அவர் 4 மணி நேரத்தில் பூமியை முழுதாக ஒருமுறை சுற்றி தான் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடுவார். அதனால் 4 மணி நேரத்தில் மறுபடியும் சூரிய உயத்தைப் பார்த்துவிடுவார். எனவே அவருக்கு சூரிய உயத்தைப் பார்த்த கணக்கின்படி 4 மணி நேரம் ‘ஒருநாள்’ என்றாகிறது.
    24 மணி நேரத்தில் 6 முறை பூமியைச் சுற்றி வந்து 6 முறை சூரிய உயத்தைப் பார்த்துவிடுவார். பயணம் செய்யாத நாம் 24 மணி நேரத்தை ஒருநாள் என்று சொல்லும்போது பயணம் செய்த அவர் 24 மணி நேரத்தை 6 நாள் என்று சொல்லவார். அதுபோல பயணம் செய்யாத நாம் 365 1\4 நாட்களை 1 ஆண்டு என்று சொல்லும்போது பயணம் செய்த அவர் 365 1\4 நாட்களை 6 ஆண்டு என்று சொல்லவார்.
    பயணம் செய்த அந்த கோமான் தனது 1 வயதில் பயணத்தை தொடங்கி 1 ஆண்டு பயணம் செய்துவிட்டு தரை இறங்கியதும் தனது வயது (1+1) 2 என்று சொல்வாரா? (1+6) 7 என்று சொல்வாரா? அவர் 7 என்று சொன்னால் அவருக்கு கிறுக்கு பிடித்துவிட்டது என்று நாம் சொல்லமாட்டோமா?
    ஏன்?
    6 ஆண்டுகளுக்கான உடல் வளர்ச்சியை அவர் அடைந்திருந்தால் மட்டுமே அந்த கோமான் தனக்கு 7 வயது என்று சொல்வதை ஏற்றுக்கொள்வோம். 1 வயது குழந்தையாக பயணத்தை தொடங்கிய அவர் 7 வயது சிறுவனாக வளர்ந்திருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு அவர் வளர்ச்சி யடைந்திருப்பாரா?
    ஒருக்காலும் முடியாது.
    அவர் தனது சக்தியை அதிகம் இழந்து வளர்ச்சி குன்றித்தான் இருப்பார்.
    அப்படியானால் அவர் 6 ஆண்டு என்று சொல்வதை வேறு எப்படி சொல்ல முடியும்?
    இதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். அவர் ஒளியின் வேகமான 1
    வினாடிக்கு 3 இலட்சம் கி.மீட்டர் வேகத்தில் 40 ஆயிரம் கி.மீட்டர் சுற்றளவுள் நேர் கோட்டில் பூமியை சுற்றி வருவதாக எடுத்துக்கொள்வோம். 1 வினாடியில் 7 1\2 முறை பூமியை முழுதாக சுற்றிவிடுவார். 1 நிமிடத்திற்கு 450 முறை பூமியை முழுதாக சுற்றிவிடுவார். 1 மணி நேரத்தில் 27,000 முறை பூமியை முழுதாக சுற்றிவிடுவார். 24 மணி நேரத்தில் 6,48,000 முறை பூமியை முழுதாக சுற்றிவிடுவார். அதாவது நாம் 1 நாள் என்று சொல்வதை 6,48,000 நாள் என்று சொல்வார். அதாவது 1777 ஆண்டுகளாகிவிட்டது என்று சொல்வார். 1 வயதில் பயணத்தை தொடங்கிய அந்த கோமான் ஒருநாள் பயணம் செய்துவிட்டு தரையிறங்கியதும் தனக்கு எத்தனை வயது என்று சொல்வார்?

    அந்த கோமான் பூமியைச் சுற்றாமல் விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். தன் பயணப்பாதையில் சூரிய உதயத்தையோ, மறைவதையோ பார்க்கமுடியாது. நிரந்தரமாக சூரினை பார்த்துக்கொண்டே இருப்பார். அப்படி என்றால் அவர் தான் எத்தனை நாள் பயணம் செய்ததாக கூறுவார்? தன்னுடைய வயது எத்தனை என்று கூறுவார்?

    (இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது பக்கத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் தோழர் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கிறார். என்னால் அவரது சிரிப்பை அடக்கமுடியவில்லை. உங்களுக்கு?)
    அந்தக் கோமான் என்னதான் சொல்ல முடியும் ?

    ஒரு ஆலையில் நீங்களும் நானும் வேலை செய்கிறோம். நான் கம்யூனிஸ்ட் என்பதால் முதலாளியை ஏமாற்றுவதற்காகவும் என்னிடமுள்ள பொறுக்கித்தனத்தாலும் நான் குறைவாக வேலைசெய்து முதலாளி நிர்ணயித்துள்ள அளவுக்கு அதிகமாகமல் 1 நாளைக்கு 10 உருப்படிகளே உற்பத்தி செய்கிறேன். ஆனால் நீங்கள் நேர்மையாளராக இருப்பதால் நல்ல பேர் வாங்குவதற்காக 1 நாளைக்கு 1,00,000 உருப்படிகள் செய்கிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள் என்ன சொல்வீர்கள்?
    அந்த கம்யூனிஸ்ட் பேமானியைவிட 99,990 உறுப்படிகள் கூடுதலாக ஒருநாளைக்கு உற்பத்தி செய்கிறேன் என்று கூறுவீர்களா? அல்லது அப்பாடா! 99,990 நாள் வேலை செய்துவிட்டேன் என்று கூறுவீர்களா?

    (இரண்டு பதிலும் மார்க்சிய கோட்பாட்டின்படி ஒன்றுதான். அது உழைப்புச் சக்தியை சுரண்டுதல் என்ற தலைப்பின் கீழ் வந்துவிடும். உங்கள் பார்வையில் நான் ஏமாற்றுக்காரனாத் தெரிந்தாலும் 10 உருப்படி உற்பத்திசெய்வதற்க்காக இழந்த எனது சக்தியை மீட்டுக்கொள்ள மட்டுமே முதலாளி கூலி தருவதால் நான் எனது ஒருநாள் உழைப்புச் சக்தியை ஒருநாளில் விற்றுள்ளேன். நீங்கள் ஒருநாளில் ஒருநாள் கூலிக்கு 99,990 நாள் உழைப்புச் சக்தியை விற்றுள்ளீர்கள். அதனால் 99,990 நாள் வேலைசெய்துவிட்டேன் என்று நீங்கள் சொல்வதுகூடசரியே. அதன் பலன் என்ன? நீங்கள் இழந்த சக்தியை, நீங்கள் பெற்றுக்கொண்ட கூலியால் ஈடு செய்ய முடியாமல் உடல் வளர்ச்சியில் குன்றியிருப்பீர்கள்.)

    ஆனால் காலம் கணக்கில் உங்கள் பதில் ‘ஒருநாள்’ வேலைசெய்தேன் என்பது மாறாது. அதாவது நான் விரைவாக வேலை செய்கிறேன் என்று வேகத்தைக் குறித்தான பதிலாகத்தான் இருக்கும்.

    அதுபோல ஒளி வேகத்தில் பயணம் செய்பவராக இருந்தாலும் எறும்பு வேகத்தில் பயணம் செய்பவராக இருந்தாலும் தனது செயலை வேகத்தை குறித்து மட்டுமே கூறமுடியும். காலக்கணக்கில் கூறமுடியாது.
    http://www.onlinepj.com கட்டுரையாளரும் ‘பூமியில் 50 ஆண்டுகளில் செய்கிற காரியங்களை செய்துவிட்டு அவன் திரும்பிவிட்டால் பூமியில் சிறிது நேரமே கழிந்திருக்கும்” என்று என்று சரியாகவே “காலத்தை” குறிப்பிடாமல் “வேகத்தை” குறிப்பிட்டுள்ளார். 50 ஆண்டுகள் எனக்கு கழிந்துவிட்டது, அதனால் பூமியிலுள்ளவர்களே! உங்களைவிட எனக்கு 50 வயது கூடிவிட்டது என்று சொல்லியிருந்தால்தான் பிரச்சனை.

    அதுபோல மிஹ்ராஜ் பயணம் என்ற முகம்மது நபி வானத்திற்கு சென்ற பயணத்தையும் “பல ஆண்டு செய்துமுடிக்கும் காரியங்களை ஆற்றிவிட்டு வந்தார்கள் என்றே கட்டுரையாளர் எழுதியுள்ளார். அதாவது அவ்வளவு விரைவாக காரியமாற்றியதாக கூறுகிறார். முகம்மது நபிக்கு 20 வயது கூடிவிட்டது என்று கூறியிருந்தால்தான் பிரச்சனை.

    அப்படியானால் பிரச்சனை எங்குள்ளது?

    “ஒருநாள் என்பது ஒருவரின் பயணவேகத்தை பொறுத்து மாறுபடும் என்பதை ஐன்ஸ்டீன் என்பவர் சுமார் நூற்றாண்டுகளுக்கு முன் கண்டுபிடித்தார்” என்ற வரிகளில் உள்ளது.

    காலத்தை குறிப்பிடும் குர்ஆன் வசனங்களுக்கு வேகத்தை குறிப்பிடுவதாக திரிப்பதில் இருக்கிறது பிரச்சனை.

    குர்ஆன் வசனங்கள் 22:47, 32:5, “உங்கள் இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணிக்கின்ற ஆயிரம் வருடங் களைப் போன்றது எனக் கூறுகிறான்.
    அதாவது இறைவன் கட்டளை பிறப் பித்து விட்டால் ஆயிரம் ஆண்டுக்கு நிகரான வேகத்தில் அக்கட்டளை வந்து சேரும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது”
    நமது ஒருநாள் வேகம் என்று மொட்டையாகச் சொன்னால் எதனைக்கொண்டு சரிபார்ப்பது? குதிரையின் வேகமா? ஒட்டகத்தின் வேகமா? நோஞ்சான் குதிரையின் வேகமா? நோஞ்சான் ஒட்டகத்தின் வேகமா? அல்லது பூமி சுற்றும்வேகமா? பூமி சுற்றும் வேகம் என்றால் பூமியின் எந்தப்பகுதி சுற்றும் வேகம்.? ஒரு ஆண்டிற்கான எதனுடைய வேகம் என்று பள்ளிக்கூடத் தம்பி சொல்வாரா?
    ———————————————-ஓரிருநாளில் தொடர்கிறேன்.

  57. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    என்னுடைய வாதத்தை கூறிவிட்டுதான் நான் தங்கலுடைய விலாசம் கேட்டேன்.தாங்கள் என்னுடைய‌ வாத‌த்தை க‌வ‌னிக்க‌வில்லை என்று நினைகிரேன்…..

    தலை வலிக்கிறது செங்கொடி அவர்களே
    //கிரிக்கெட் பந்துக்குப் பதிலாக ஒளியைக் கொள்வோம், கிழக்கிலிருந்து மேற்காகவோ, மேற்கிலிருந்து கிழக்காகவோ, அல்லது எந்த திசையிலிருந்து எந்த திசைக்கு செல்லும் போது அளந்தாலும் ஒளியின் வேகம் மாறவே மாறாது. இது ஏன்? என்பதுதான் பதிலளிக்கப் படவேண்டிய கேள்வி இதுவரை நாம் பார்த்தது 1880 களின் நிலை ஒளியின் வேகம் மாறாது என்பது தெரிந்துவிட்டது. அது ஏன்? என்பது தான் பிரச்சனை. இதற்கு பதிலாகத்தான் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கோட்பாட்டை முன்வைக்கிறார்// —-A
    எனக்கு என்னமோ இந்த வரியை ஒரு புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதியது மாதிரியும்.
    //ஒளியின் வேகம் மாறதிருப்பதை விளக்க வேண்டுமென்றால் ஒளியின் வேகத்தில் செல்லும் பொழுது உருவம் சுருங்கும் ஆயுள் நீளும் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். இது தான் சிறப்பு சார்பியல் கோட்பாடு// ——-B
    இந்த வரியை நீங்களே யூகித்து சொல்வது மாதிரியும் தெரிகிரது!!!!????
    A&B நீங்களே equation எழுதி முடிச்சி போட்டால் நன்றாக இருக்கும்!!!!!! i dare u none of the scientist told like this………hurray we got one scientist in india……………….
    நீலம் சுருங்குதல் ஓரம் தள்ளுங்க அந்த காமெடிக்கு அப்புரம் வர்ரேன். மண்ணிக்கவும் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் நான் தமிழ் வழியில் அறிவியல் படிக்கவில்லை ஆதலால் words like மாறிலி மற்றும்
    ௧) உணர முடியாத அளவில் இருக்கும் என நீங்கள் குறிப்பிடுவது எப்போது உணரும் அளவிற்கு மாறும்?
    ௨) ஒளி எதிரொளித்து திரும்பும் தூரம் குறைவாக இருக்கும் உங்கள் நேரத்தை விட எதிரொளித்து திரும்பும் தூரம் அதிகமாக இருக்கும் என்னுடைய நேரம் குறைவாக இருப்பதை எப்படி விளக்குவீர்கள்?
    ௩) எந்த நோக்கரிலிருந்து அளவிட்டாலும் ஒளியின் வேகம் மாறாது என்பது என்பதை எப்படி விளக்குவீர்கள்?
    யாராவுது நண்பர்கள் மொழிப்பெயர்த்து தந்தால் நன்றாக இருக்கும் குறிப்பாக (உ) சுத்தமாக புரியவில்லை மற்றும் (௪) பதில் என்னுடைய படித்தாலே விளங்கும் பரவாயில்லை நான் திரும்பவும் விலக்குகிரேன் (௧)(௨)(௩)சேர்த்து

    இப்போது பதில் கூறுவீரா? நன்பர் ஹைதர் அலி மேல் தவரேதும் இல்லை தாங்கள் சொன்னதை திரும்ப பெற்றுக்கொள்ளவும்

    //நாம் இருப்பது சௌதியில் என்பதால் செங்கொடியாக என்னை வெளிக்காட்டிக் கொள்வதில் இருக்கும் சிரமங்களை உணர்வீர்கள் என நம்புகிறேன்//
    ஏன் உங்களை வெட்டி விடுவார்களா என்ன‌?இல்லை இஸ்லாமியர் என்று இகாமாவில் பதிவு செய்து இவ்வுளவு நாள் எமாற்றி வருகிரீரா?(இதற்கத்தான் நீங்கள் பயப்பட வேண்டும்.. அது பற்றி எனக்கு கவலைஇல்லை அது உங்கலுடைய தனிப்பட்ட விருப்பம் நான் அதில் தலைடமாட்டேன் ஏனென்றால் எனக்கு நிரைய பேரை தெரியும் என் பழைய வாகன ஓட்டுனர் உட்பட!!)

  58. நண்பர் ஸ்கூல் பாய்,

    நீங்கள் உங்களின் வாதம் என கூறிவற்றில் என்ன இருக்கிறது?

    1. என்னுடைய விளக்கத்திலிருந்து தனித்தனியே இரண்டு பகுதிகளை எடுத்து ஒன்றை ஏதோ நூலிலிருந்து எடுத்ததாகவும் மற்றொன்றை நானே கூறுவதாகவும் கிண்டல் கலந்த உங்களின் யூகக் கருத்து

    2. நான் எழுப்பியிருந்த கேள்விகள் புரியவில்லை யாராவது மொழிபெயர்த்துத் தரவும் என்று ஒரு வேண்டுகோள்.

    3. 1,2,3 ஐயும் சேர்த்து 4ஐ நான் மீண்டும் விளக்குகிறேன் என்று அவகாசங்கோரல்.

    இவைகளில் என்னுடைய வாதத்திற்கு என்ன பதில் இருக்கிறது? நான் மீண்டும் பதில் கூறுவதற்கு. அதனால் தான் நண்பர் ஹைதர் அலிக்கு இப்படி எழுதினேன், \\ நான் எடுத்துவைத்த விளக்கங்களுக்கு பதில் கூறுகிறேன் என்றுதான் ஸ்கூல் பாய் கூறியிருக்கிறார். அவர் பதில் கூறிய பிறகு தான் நான் என்னுடைய விளக்கங்களை கொடுக்க முடியும்// இதில் என்ன தவறு?

    எனவே, தொடருங்கள் தொடருகிறேன்.

    செங்கொடி

  59. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    சரி நான் சொல்லியது தவறு எனக்கு அறிவியல் தெரியாது!!!!
    இப்பொது கேட்கிரேன் வாயில் வடை சுடாமல் நான் என்னுடைய doc விளக்கியது மாதிரி padam போட்டு விளக்கவும்……

    ////அவகாசங்கோரல்//// நான் length contraction நை lorentz tranformation இல்லாமல் எனக்கு சொந்தமாகவே derive செய்தேன் இது வலைப்பதிவிலும்/புத்தகத்திலும் இருக்காது புரிந்த்திருந்தால் உங்கலாலேயும் முடியும் முயற்சி சேய்து பருங்கள் யார் அவகாசம் எடுக்கிரார் என்று இங்கே உல்லவர்கள்க்கு தெரியும்

  60. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //என்னுடைய விளக்கத்திலிருந்து தனித்தனியே இரண்டு பகுதிகளை எடுத்து ஒன்றை ஏதோ நூலிலிருந்து எடுத்ததாகவும் மற்றொன்றை நானே கூறுவதாகவும் கிண்டல் கலந்த உங்களின் யூகக் கருத்து// நான் உங்கலை கிண்டல் செய்தேனா என்று இதை தாங்கள் எழியதாக நிரூபிக்க முடியும்….A&B equation எழுதி முடிச்சு போட்டால்(ஏன் வலைப்பதிவில் கிடைக்கவில்லயா???)

  61. அன்பு தோழர்களே,
    மொத்தத்தில் இந்த விவாதம் வேஸ்ட் போல தெரிகிறது . இப்போது எல்லோரும் விஞ்ஞானி ஆயிட்டாங்க. ஸ்கூல் பாய் முதல் விஞ்ஞானி !. இரண்டாவது விஞ்ஞானி செங்கொடி !. சாகித் ஒரு மகா விஞ்ஞானி !.
    வேலை வெட்டியில்லாத நாசுவன் (பார்பர்) எருமைய சேரச்சாராம் (முடி வெட்டினாராம் ) . அப்படி ஒரு பழ மொழி உண்டு. அது தான் இங்க நடந்துகிட்டிருக்கு.

    முதலில் செங்கொடிக்கு,

    உங்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் சும்மா சவுதில இருக்கிறேன்னு உடான்ஸ் உட்டுகிட்டு நீங்க உங்களுக்கு தெரியாத புரியாத விசயங்கள எழுதி நீங்களும் குழம்பி மற்றவங்களையும் குழப்ப முயற்சி செய்றீங்க. இதன் மூலமா நீங்க இரண்டு விசயத்த எதிர்பார்கிறீங்க . உங்களை அறிவாளியா காட்டிக்கணும் .இரண்டாவது உங்கள் வலை தளம் பிரபலம் அடைய வேண்டும்.

    இரண்டாவது ஸ்கூல் பாய்க்கு,

    நீங்க வாதம் பண்றீங்களா ? ஜம்பம்(affectation) பண்றீங்களா? . முதலில் காது வலிக்குது , காதுல இரத்தம் பாயுதுன்னு சும்மா உங்களை நீங்க தூக்கி விடுறத விட்டுட்டு விவாதம் மட்டும் வைங்க . அது தான் உபயோகமா இருக்கும். செங்கொடிய பத்தி எங்களுக்கு தெரியும். அவரு நெருங்கி வந்தா யாரையாவது இறக்கி விட்டு சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது எழுதி குழப்பிவிடுவார். அது தான் அவருடைய கடைசி ஆயுதம். உங்களுடைய சவுதி விபரம் கொடுத்தால் அவர் உங்களை சந்திப்பதாக சொல்கிறார். ஆனால் நீங்களோ அதற்க்கு ஒரு படி மேலே போய் சம்பந்தம் இல்லாத என்னெமோ பதில் சொல்றீங்க . நீங்கள் உங்க முகவரிய கொடுத்தாலும் அவர் உங்களை சந்திக்க போவதில்ல. காரணம் அவர் இங்க இருந்தா தானே ? அடுத்து டாக்டர் எழிலன் எப்படி டாக்டர் பட்டம் வாங்கினார்னு கேக்கிறீங்க . அந்த ஆராய்சி எல்லாம் உங்களுக்கு எதுக்கு . அவர் சில வேளை ஒரு வாதத்துக்காக சில பொய்களையும் சேர்த்து கூறியிருக்கலாம். அதுக்காக அவர் டாக்டர் பட்டத்தை எல்லாம் நாம் சந்தேக படகூடாது.
    உங்களிடம் திறமை இருந்தால் நீங்கள் போய் எழிலனிடம் விவாதம் பண்ண வேண்டியதுதானே. எதிர்க்கிற அனைவரிடமும் பதில் கொடுக்க
    ஒரு பீஜே மட்டும் தான் உண்டா ? அவர் ஒரு மார்க்க ஆய்வாளர் . சிந்தனையாளர் . அறிவியலை படித்து புரிந்து கொள்பவர் அவ்வளவு தான் அதற்காகத்தான் அப்துல் ரஹ்மான் என்ற பௌதீக பேராசிரியரும் பீஜே அணியில் வாதிட்டார் . அதனால எல்லாரையும் அலட்சியம் செய்றத விட்டுட்டு நீங்க உங்க வாதத்த மட்டும் வைங்க. மொத்தத்தில் வேலை வெட்டியில்லாத செங்க்கொடிக்கு பதில் சொல்றதே வேஸ்ட் தான் .

    இப்படிக்கு ,
    காரல் மார்க்ஸ்

  62. நண்பர்களுக்கு
    சிலர் விவாதிக்கும் போது தேவை இல்லாத கடுஞ்சொற்களை பயன்படுதுகிறார்கள் (உ ம்) ந்ண்பர் ஹுமாயுன் ம்ற்றும் நண்பர் லெனின் அவர்கள் (பதிந்த)சொன்னதெல்லாம் என்னால் வெட்டி ஒட்டக் கூட முடியாது.நானும் இறை நம்பிக்கை இல்லாதவன் என்ற போதிலும் விவாதிகும் போது நாகரிகத்தை கடை பிடிக்க வேண்டும் என்று கருதுபவன்.நான் குரானில் உள்ள‌ வ‌சன‌ங‌க‌ளை புரிந்து கொள்வ‌தில் உள்ள‌ குழ‌ப்ப‌ங்க‌ளை குறித்தே பின்னூட்ட‌ம் இட்டு வ‌ருகிறேன். என்னுடைய எந்த‌ கேள்விக‌ளுக்கும் இதுவ‌ரை ச‌ரியான‌ ப‌தில் யாரும் த‌ர‌வில்லை. ம‌த‌ங்க‌ள் என்ப‌து அர‌சிய‌ல் சித்தாந்தம் என்பது என் கருத்து.

    குரானில் மட்டுமல்ல அனைத்து மதத்தினரின் வேத புத்தகங்களிலும் ஒத்து வராத ,குழ்ப்பமான,இனவெறி மற்றும் வன்முறை சார்ந்த கருத்துகள் இருக்கின்றன. அத‌ற்கு இக்காலத்திற்கு ஏற்ற மதிரி (அறிவியல்+மனோ தத்துவம்+வரலாறு)சிலர் வகை வகையான விளக்கங்கள் அளிக்கின்றனர்.
    //(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு – ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:194)//

    நான் ரமதான் மாதம் முடியும் வரை குரானில் உள்ள கருத்துகளை விமர்சனம் மற்றும் விவாதிப்பது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.ரமதான் முடிந்து சந்திப்போம்.இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய‌ ரமதான் நோன்பு வாழ்த்துகள்.

  63. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    காறா மார்க்ச் அவர்களே நன்றி என்னுடைய தவறை திருத்திக்கொண்டேன்…அவருக்கு ஏற்கனவே எளிதாக சொல்லியகிவிட்டது ஆனால் அவரோ அரிவியல் பூர்வமாக விலக்கம் சொல்லாமல் வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிரார். இவர்களை கையால ஒரு எளிமையான வழியைக்கையாண்டேன் (எப்படியும் நாம் சொல்லுவதர்கு எதிர்மரையாகதான் சொல்லுவர்)அதாவுது இவர்களிடம் தெரியாது என்று சொல்லிவிட்டு வாய் சவாடல் மட்டுமே உடும் அவர்களிடம் விளக்க சொல்ல வேண்டும் அப்போது தெரியும் இவர்கலது உன்மையான திருமுகம்…….

    நான் யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும் ஆதலால்தான் எனக்கு நான் ஸ்கூல் பாய் என்று பெயர் வத்துள்ளேன்.

    நான் கோபாரில் வசிக்கிரேன் இவா அபார்ட்மென்ட்ஸ்..அவர் விலாசத்தை கொடுப்பாரா என்று கேலுங்கள்….ஆனால் அவர் என்ன தெரியுமா சொல்லுவார் “நான் நத்திகன் என்னுடைய திருமுகத்தை காட்டினால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்று”…அவரிடம் தாங்கலாவது சொல்லுங்கள் இங்கே பல நாத்திகர்கலும், கிருத்தவர்களும் இருக்கிறார் என்று. என்னுடைய கோபம் என்னவென்றால் பல திருட்டு நாய்கள் பணத்திற்கும், ப்ரொமொஸனுக்கும் ஆசப்பட்டு அவர்கள் இசுலாமியர் என்று விசாவில் அடயாலப்படுத்திக்கொள்வர்!!!!

    Doctor ezhilzn: ப‌ட்ட‌த்தை வாங்கும் போது எல்லோரும் உருதிமொழி எடுப்பார்க‌ள் இவ‌ர் பேச்சை கேட்ட‌ போது என‌க்கு அந்த‌ ஐய‌ம் வ‌ன்த்த‌து. ச‌ந்த‌ர்ப‌ம் ஏற்ப்ப‌ட்டால் அவ‌ரிட‌மும் விவாத‌ம் செய்வேன் பிஜே நான் குறை கூர‌வில்லை அவ‌ர் உன்மையை ச‌பை முன்னே வெளிப்ப‌டுத்தினார் அவர் ம‌னிதன் அனால் சில‌ பேர் அறிவிய‌ல் என்ற‌ போர்வ‌யை போட்டுக்கொண்டு அவிய‌ல் கூட‌ செய்ய‌தெரியாம‌ல் இருக்கிரார்!!! ப‌ன்றி இத‌ய‌ம் ப‌ற்றி பிஜெ அவ‌ர் மேலோட்ட‌மாக‌ சொன்னார் (ஏனென்றால் அவ‌ருக்குத் தெரியாது) ஆனால் ப‌ட்ட‌ம் வாங்கிய‌ டாக்ட‌ர் அவ‌ர்க‌ளோ பிஜே சொல்வ‌து தவ‌ரு என்றாரே அவ‌ர் உன்ம‌யாக‌வே ம‌ருதுவ‌ம் ப‌யின்ற‌வ‌ரா???!!!

    பின்குறிப்பு: த‌லைப்புக்கும் இந்த‌ பின்னூட்ட‌த்திற்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை

  64. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    pls try to translate in english for 1,2,3points

  65. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    waiting for redflag!!!

  66. சூப்பர். ஸ்கூல்பாய்,
    செங்கொடி,
    எனக்கும் அப்படியே நீங்கள் எழுதுவதை எல்லாம் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்து சொல்லுங்கள். அப்போதுதான் எனக்கு புரிந்து உங்களுக்கு பதில் தர முடியும். ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்து தர முடியவில்லை என்றால் தோல்வியை ஒப்புகொண்டு, இந்த பிளாகை மூடிவிட்டு போங்கள்.

  67. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    யாராவது செங்கொடியை பார்தீங்களா? address கேட்டா ஆளா காணல‌

  68. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    சரி நான் திரும்பவும் ஆரம்பிக்கிறேன்:
    ச‌ரி பூமியில் இருந்து நேர‌த்தை க‌ன‌க்கிட்டால் வான்வெளியில் இருப்ப‌வ‌ர் நேர‌ம் நான் குறைவாக‌ க‌ண‌க்கிடுவேன்…….ஆனா அதுல‌ இன்னு ஒன்னு இருக்கு அதாவுது நீங்க‌ வான்வெளியில் இருந்து என்னுடைய‌ நேர‌த்தை க‌ண‌க்கிட்டால் என்னுடைய‌ நேர‌மும் குறைவாதான் செல்லும் அப்ப‌டீனா? என்னொட‌ ஆயும் குறையுமா?? இதுக்கும் நீங்க சுலபமா வலைப்பதிவில் இருந்து அரகொரயா புரிஞ்சுகிட்டு என்ன பதில் கொடுக்க போரீங்கன்னு எனக்கு தெரியும் ஆனா திரும்பவும் நான் ஒருகேள்வி வச்சுருக்கேன் (அத உங்களால‌ எங்கேயும் தேட முடியாது!!)

    செங்கொடியின் ப‌தில் : நான் உள‌ற‌ல்க‌ளை ச‌ட்டை செய்வ‌தில்லை!!!!

    பிண்ணூட்டமிடும் நண்பர்களுக்கு:
    மண்ணிப்பு கேக்குரேன்னு ஒரு மானஸ்தன் சொன்னான் அவர யாராவது பாதீங்களா?? அவரு கிட்ட address வாங்கி தாங்க சவுதீல எங்க இருந்தாலும் நான் போய் பார்கிறேன்!!

  69. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    இப்னு பஷீர்(2) அவர்களே நான் ஒன்றும் செங்கொடியை மொழிப்பெயர்த்து தர சொல்லவில்லை….செங்கொடிக்கு ஆங்கிலம் தெரிந்த நண்பர்களே கிடையாதா? மற்றும் இங்கு பின்னூட்டம் இடும் நண்பர்களுக்கு ஒருவருக்கும் ஆங்கில மொழி தெரியாதா?? நான் உதவி கெட்கிரேன் ஆனால் தாங்களோ பைத்தியகாரத்தனமாக பதில் சொல்லுகிறீர்கள்.நான் என்னுடைய நிலையில் இருந்து கீழே வந்து எனக்கு தெரிந்த தமிழ் சொற்களை வைத்து அவருக்கு பதில் அனுப்பினேன்…பதிலுக்கு அவரிடம் ஒரு சிரு உதவியை தான் கேட்டேன்……

  70. ஸ்கூல்பாய், உங்களுக்கு ஆதரவாகத்தான் நானும் இறங்கியிருக்கிறேன்.

    பொது சார்பியல் கொள்கையானது காலவெளி அளவீட்டுக்கான (ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாடுகள்) பத்து பகுதி வகைச் சமன்பாடுகளின் தொகுதியை வழங்குகிறது, இவை அண்டத்தின் மொத்த நிறை-ஆற்றல் மற்றும் உந்தம் ஆகியவற்றின் பரவலிலிருந்து தீர்க்க வேண்டியவை. இவை மிகத் துல்லியமாகத் தெரியாதவை என்பதால், அண்டவியல் மாதிரிகள் அண்டவியல் கொள்கைகளின் அடிப்படையில் இருந்தன, இக்கொள்கைகள் அண்டமானது ஒருபடித்தானதும் திசை ஒருமியதாகவும் உள்ளது எனக் கூறுகின்றன. இதன் விளைவாக இந்தக் கொள்கை, அண்டத்திலுள்ள பல்வேறு விண்மீன் திரள்களின் மொத்த ஈர்ப்பியல் விளைவானது அண்டம் முழுவதும் பரவியுள்ள மொத்தத் தூசுப்பொருட்களின் சராசரி அடர்த்திக்குச் சமமாக உள்ளது எனக் கூறுகிறது. ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாட்டைத் தீர்க்கவும் அண்டவியல் கால அளவீடுகளின் அடிப்படையில் அண்டத்தின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைக் கணிக்க, இந்த சீராகப் பரவியுள்ள தூசுப் பொருட்களின் கருத்து உதவுகிறது.
    இதனைத்தான் அல்குரான் அன்றே தெளிவுபடுத்திவிட்டது.

    ஐன்ஸ்டீனின் புலச் சமன்பாட்டில் ஒரு அண்டவியல் மாறிலி (Λ ) பயன்படுத்தப்படுகிறது,[54][55] அது வெற்றிடத்தின் ஆற்றல் அடர்த்தியைக் குறிக்கிறது.[56] அதன் குறியைப் பொறுத்து, அந்த அண்டவியல் மாறிலியானது அண்டத்தின் விரிவாக்கத்தை மட்டுப்படுத்தவோ (எதிர்க்குறி Λ ) அல்லது முடுக்கவோ (நேர்க்குறி Λ ) முடியும். ஐன்ஸ்டீன் உட்பட பல விஞ்ஞானிகள் Λ என்பது பூச்சியம் என நினைத்தனர்,[57] இருப்பினும் சமீபத்திய சூப்பர் நோவா பற்றிய வானியல் ஆய்வுகள் அதிக அளவிலான “அறியப்படாத ஆற்றல்” அண்டத்தின் விரிவாக்கத்தை முடுக்குவதை உறுதிப்படுத்தியுள்ளன.[58] முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி, இந்த அறியப்படாத ஆற்றலானது நேர்க்குறி Λ கொண்டது எனக் கூறினாலும், எதிர்க் கருத்துடைய கோட்பாடுகளையும் புறக்கணிக்க முடியாது.[59] ரஷ்ய இயற்பியலாளரான ஸெல்’டோவிச், Λ என்பது குவாண்டம் புலக் கொள்கையின் மாயத் துகள்களுக்கான பூச்சியப் புள்ளி ஆற்றலின் அளவாகும், இது எங்கும், அதாவது வெற்றிடத்திலும் கூட நிறைந்திருக்கும், வெற்றிட ஆற்றலாகும் எனக் கூறினார்.[60] இது போன்ற புச்சியப் புள்ளி ஆற்றலுக்கான ஆதாரங்கள் காஸ்மிர் விளைவில் காணப்படுகின்றன.

    அதனால்தான் இன்று இஸ்லாமின் விளைவாக காஷ்மீர் விளைவை நாம் பார்க்கிறோம்

    இவ்வளவு தெளிவாக அன்றே அல்குரானும் நபிகள் பெருமானாரும் தெரிவித்து சென்றுவிட்டபிறகு ஏன் இன்னமும் விவாதம்? இஸ்லாமையும் அல்குரானையும் ஒப்புக்கொண்டு இந்த பிளாகை மூடிவிட்டு செல்லுங்கள்.
    காலவெளியில் உள்ள இந்த ஒப்புமையே இரு நிகழ்வுகளுக்கிடையே உள்ள இடைவெளி எனப்படுகிறது; ஒரு நிகழ்வு எனப்படுவது காலவெளியில் ஒரு புள்ளியாகவும், வெளியில் ஒரு குறிப்பிட்ட இடமாகவும் காலத்தில் குறிப்பிட்டக் கணமாகவும் வரையறுக்கப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளுக்கிடையே உள்ள காலவெளி இடைவெளியானது இச்சமன்பாட்டினால் வழங்கப்படுகிறது

    இதில் c என்பது ஒளியின் வேகமாகும். சிறப்பு சார்பியலின் படி, மாற்றத்தின் காலவெளி இடைவெளியான s இன் மதிப்பு மாறாமல் இருக்கும்பட்சத்தில் ஒருவரின் ஆய்வு சட்டகத்தை மாற்றுவதன் மூலம் ஒரு வெளி மற்றும் காலப் பகுப்பை (L 1, Δt 1) மற்றொரு வெளி மற்றும் காலப் பகுப்பாக (L 2, Δt 2) மாற்ற முடியும். ஆய்வு சட்டகத்தின் இப்படிப்பட்ட மாற்றமானது ஒன்றின் இயக்கத்தின் மாற்றத்தைப் பொறுத்தது; நகரும் ஒரு சட்டகத்தின் காலமும் நீளங்களும், நிலையாக உள்ள சட்டகத்தின் காலம் மற்றும் நீளங்களிலிருந்து வேறுபடும். இயக்கத்தைப் பொறுத்து ஆய அச்சுக்களும் கால வேறுபாடுகளும் மாறுவதைத் துல்லியமாக விளக்குவது லாரன்ஸ் நிலைமாற்றமாகும்.

    இதைத்தான் அல்குரான் லாரன்ஸ் ஆப் அரேபியா அன்றே அரேபியாவுக்கு விடுதலை வாங்கித்தந்ததை கூறிவிட்டது அல்குரான். இன்னுமா இந்த பதிவை வைத்திருக்கிறீர்கள்?

  71. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    உங்கள் சரியானதா இல்ல தவரான்னு எனக்கு தெரியல, நீங்க ஆதரவா பேசினாலும் ஒரு புரோயோஜனமும் இல்ல‌ ஏன்னா எனக்கு அறிவியல் சார்ந்த கருத்துகள் தமிழ்ல இருப்பதினால் எனக்கு சுத்தமா புரியல!!!!??? அதனால kashmir, lawrence of arabia எனக்கு முடிஷு போட தெரியல‌

    ஆமா செங்கொடி address தாரேன்னு சொல்லிட்டு எங்க போனாரு சவுதிக்கு விஸா எடுக்கவா????

  72. சகோதரர் ஸ்கூல் பாய் அவர்களே, முடிந்தால் உங்கள் ஈமெயில் முகவரி தரவும்.

  73. செங்கொடி, ஒரே ஒரு கொழப்பம். சவுதி அரேபியாவின் தலைமை முஃப்டி இமாம் இப்னு பாஸ் உலகம் தட்டைன்னு பத்வா போட்டுட்டார். உலகம் சூர்யனை சுத்துதுன்னு சொல்றவனெல்லாம் காபிர்னு வேற சொல்லிட்டார். இப்படி இருக்கிறப்ப, நாம் எப்படி குவாண்டம் பிஸிக்ஸையும் ரிலேட்டிவிட்டியையும் குரான்ல கண்டுபிடிக்கிறதுன்னு தெரியலை. என்னோட ஈமானை அல்லாஹ் சோதிக்கிறான். யா அல்லாஹ் காப்பாத்து.. எது தப்புன்னு தெர்லையே…

  74. சகோதரர் ஸ்கூல் பாய் அவர்களே ,
    இந்த வெத்து வேட்டு இப்னு பஷீர் உங்களுக்கு ஆதரவா எழுதல. நீங்கள் மொத்தத்தில் இந்த வீணா போன ப்ளாக் பத்தி புரியாததால உங்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறீர். இப்னு பஷீர் என்ற பெயரில் உளறுகிற இந்த கயவன் தான் நாளை ஹுமாயூன் என்கிற பெயரில் சிறிது தன்னுடைய நடையை மாற்றி எழுதுவான். இதற்க்கு முன்னால் அபு அனார் என்ற பெயரில் உளறி கொட்டி கொண்டிருந்தான். நம்மை போன்ற மிதவாதிகளெல்லாம் இவர்களுக்கு சரியாகாது. தீவிர வாதிகள் தான் இவர்களுக்கு சரியான மருந்து கொடுப்பார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இஸ்லாத்தை எதிர்பவர்கள் நாத்திகர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் அவர்கள் இது போன்று ஒளிந்திருந்து பிரச்சாரம் செய்வதில்லை. அவர்களை அஹ்மத் தீதாத் , சாகிர் நாயக் போன்றோர்கள் நேரடி விவாதத்திற்கு அழைத்து இஸ்லாத்தின் உண்மைகளை விளக்க முடிந்தது. சமீபத்தில் இஸ்லாமியர்களோடு விவாதம் புரிந்த நாத்திகர்களை கூட பாராட்டலாம். அனால் இந்த வெத்து வெட்டுகள் அடிப்படை அறிவு கூட இல்லாமல் தங்களின் வாதத்தில் சிறுதளவு கூட நம்பிக்கை இல்லாத இவர்கள் ஒளிந்திருந்து உளறி கொட்டி கொண்டிருக்கிறார்கள். செங்கொடி இனி கொஞ்ச நாள் கழித்து மீண்டும் தலை காட்டுவார். நாமெல்லாம் சிறிது தூங்கும் போதுமீண்டும் தலை காட்டுவார் . தங்கள் முகங்களை காட்டி இஸ்லாத்தின் மீது நேரடி விவாதம் நடத்துபவர்களை இது வரை இந்த உலகின் எந்த இஸ்லாமிய தீவிர வாதிகள் கூட தாக்கியதில்லை. அவர்கள் கூட நய வஞ்சகர்களை தான் தாக்குகிறார்கள். நாம் இப்போது செய்ய வேண்டிய காரியம் இந்த கோழை செங்கொடியின் வலை தளத்தை சவுதி மண்ணில் வர விடாமல் தடுக்க வேண்டும். காரணம் இவனிடம் எந்த நேர்மையும் இருப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை. நம்மை எதிர்பவர்கள் மீது நமக்கு உண்மையில் எந்த கோபமும் இல்லை . அதை கருத்து சுதந்திரம் என்று தான் நாம் நினைக்கிறோம். அதேவேளையில் நம்மை எதிர் கொள்ள முடியாமல் நயவஞ்ச்ககமாக ஒளிந்திருந்து அடிப்படை அறிவு இல்லாமல் அறிவியலும் தெரியாமல் ,இஸ்லாத்தை பற்றியும் சிறிதளவு கூட அறிவு இல்லாமல் இஸ்லாமியர்களின் பணத்தை தின்று கொளுத்து விட்டு உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்கின்ற இந்த நயவஞ்சககர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.இந்த செங்கொடி கடந்த காலங்களிலும் பல பேரிடம் விவாதம் செய்து இப்படிதான் முட்டு சந்தில் சிக்கி கொள்ளும் போது விதண்டாவாதம் பேசுவதற்கு பல அயோக்யர்களை களத்தில் இறக்கி விடுவான். இவன் யாரோடும் தனியாக விவாதம் செய்ய மாட்டான் .நம்மை பொறுத்தவரையில் நம்மிடம் கருத்து மோதல் செய்யும் யாரும் நம்முடைய எதிரி அல்ல. ஏனெனில் கருத்து மோதல்கள் தான் மனிதனுக்கு தெளிவை கொடுக்கிறது. ஆனால் இவர்களுடைய நோக்கம் நம்மோடு கருத்து மோதல் செய்வதல்ல. எந்த அடிப்படை அறிவும் இஸ்லாத்தை பற்றி இல்லாத இவர்களால் நம்மோடு கருத்து மோதல் செய்ய முடியாது. அதனால் தான் இந்த வெத்து வெட்டுகள் இஸ்லாத்தின் நல்ல கருத்துகளின் மீது ஒரு தவறான தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நம்மை பொறுத்த வரை இவர்கள் பால் தாக்கரேயை விட இராம கோபாலனை விட மோசமானவர்கள். முடிந்தால் உங்கள் தொலை பேசி தாருங்கள் . உங்கள் மிக அருகாமையில் தான் நான் வசிக்கிறேன். ஆகஸ்ட் 25 th விடுப்பில் ஊர் போகிறேன்.

    இப்படிக்கு

    காரல் மார்க்ஸ்

  75. செங்கொடி வெத்துவேட்டாம். இவுரு (காறாமார்க்ஸ்) கருத்து கந்தசாமியாம்.
    இக்கட்டுரையை மறுத்து ஒரு புண்ணாக்கு கருத்தும் கூற தெரியவில்லை. இதில் செங்கொடியை வெத்துவேட்டு என்ற பிதற்றல் வேறு. உனக்கு தைரியம் , அறிவு இருந்தால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களுக்கு சார்பியல் கோட்பாட்டை பொருத்தி உனது அறிவான கருத்தை கூறேன் பார்க்கலாம்.

    நண்பர் காறாமார்க்சின் எழுத்துக்கள் மிகவும் அநாகரிகமானவைகள். ஒரு மடையனின் பிதற்றல். காறாமார்க்ஸ் போன்றவர்கள் மோடியை ஒத்தக் கேடிகள். இந்தியா இந்துக்களின் நாடு என்று சங்பரிவார் சொல்வது போல சவூதி இஸ்லாமியருக்குத்தான் சொந்தம் என்பதாக பிதற்றுகிறார் இந்த அறிவாளி. உண்மையிலேயே எதிரிகளைவிட இதுபோன்ற தற்குரிகள்தான் இஸ்லாத்திற்கு ஆபத்தானவர்கள். ”இஸ்லாமியர்களின் பணத்தை தின்று கொளுத்து விட்டு உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்கின்றார்களாம்”. யார்யாருடைய பணத்தை தின்பது. சவூதியின் பொருளாதாரம் முழுதும் அந்நியர்களால் நிரப்பப்பட்டவைதான். வேண்டுமானால் முஸ்லீமல்லாதவர்களை வெளியேற்றிவிட்டு மீண்டும் சவூதியை கட்டமைத்துதான் பாருங்களேன்.

  76. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    for kaaraa marx:
    my num is 0508545970 .al-khobar, eva apartments room-308. i will be free on thurs/friday
    //செங்கொடியின் வலை தளத்தை சவுதி மண்ணில் வர விடாமல் தடுக்க வேண்டும்// எனக்கு இருக்கும் முக்கியமான‌ பொழுதுபோக்குகளில் செங்கொடியின் வலப்பதிவிலும் / வினவின் வலப்பதிவிலும் உலா வரும் அறிவியல் காமெடி பீஸ்கள் அதயும் நிருத்திவிட்டால் எனக்கு நேரம் போகாது……………..எனக்கு ஒரு சின்ன சந்தேகம் செங்கொடி இசுலாமியர் என்று வீசா எடுத்து இங்கு வேலை செய்துகொண்டிருக்கிறாரா?

    for jj:
    aneeshabu@gmail.com

    for kalai:
    நான் ஏற்கனவே இதை உங்கள் செங்கொடியிடம் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் உங்கள் இடத்தில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.ஆதலால் நான் திருப்பியும் அரம்பித்தேன்.சரி நேர்ல வாங்க பேசுவோம் சொல்லி என் முகவரியும் கொடுத்தாகி விட்டது ஆனா இந்த அரிவியல் இல்லாத பதிலுக்கும் உங்க தரப்பிலிருந்து ஒரு பதிலும் இல்லை……..நாய் இருக்குல்ல அது எதிரியிடம் போராட முடியாதுன்னா தூரத்துல போய் நின்னு குரைகும் ஆனா சில பேர் அத விட கேவலமானவங்க மூஞ்ச வெளிய்யெ கூட காமிக்கமாட்டான்க……கேட்டா சப்பாதீல இருக்கேன் தட்டுல இருந்து வெளியெ வந்தா குப்பையில தூக்கி பொட்டுருவாங்கன்னு பீலா வுட வேண்டியது…….

  77. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //சவூதியின் பொருளாதாரம் முழுதும் அந்நியர்களால் நிரப்பப்பட்டவைதான். வேண்டுமானால் முஸ்லீமல்லாதவர்களை வெளியேற்றிவிட்டு மீண்டும் சவூதியை கட்டமைத்துதான் பாருங்களேன்//
    விவரம் தெரியாதவந்தான் (half baked) இப்படி பேசுவான்…

    ஏன் இந்தியாவயும் எடுத்துக்கோங்க எந்த தொழிற்சாலை முலுக்க முலுக்க இன்டியன் டெக்னாலஜில வோடுது……டெக்னாலஜிய ப்ரொவைட் பன்ரவங்க குறிப்பிட்ட லாபத்தை சில‌ வருடம் எடுத்துகொள்வார்கள்…….
    உதாரனத்துக்கு அராம்கோ எடுத்துக்கோங்க…….முதல்ல அமேரிக்காவும்,சவூதியிம் கூட்டாகத்தான் ஆரம்பிச்சுது அதுக்கு அப்புரம் சவூதி எல்லா சேர்ஸ்ஸயும் வாங்கிடுச்சு (இதுல சவூதி அரசு ஒரு பேனாபென்சிலுக்கும் கூட விலை நிர்னயம் பன்னி கொத்திருச்சு)அதவுடுங்க அது முடிஞ்சு போன கதை ……இப்போ யான்பூவுல சவுதி அரசும்(சாபிக்/ஆராம்கோ) கொனாக்கோ பிலிப்ஸ்ஸும் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்ய போறாங்க(என்னுடைய க‌ம்பெனியும் வேலைக்காக பிட்டிங்கில் இருக்கு) இதுக்க டெக்னாலஜியை கொடுக்குரதுக்காக ஆராம்கோ அவங்க லாபத்துலேர்ந்து கொடுக்கனும் …….ஒருத்தனும் இங்க ஓசிக்காக வேலை பார்கல!!!!

  78. “இப்னு பஷீர் என்ற பெயரில் உளறுகிற இந்த கயவன் தான் நாளை ஹுமாயூன் என்கிற பெயரில் சிறிது தன்னுடைய நடையை மாற்றி எழுதுவான். இதற்க்கு முன்னால் அபு அனார் என்ற பெயரில் உளறி கொட்டி கொண்டிருந்தான். நம்மை போன்ற மிதவாதிகளெல்லாம் இவர்களுக்கு சரியாகாது. தீவிர வாதிகள் தான் இவர்களுக்கு சரியான மருந்து கொடுப்பார்கள்”

    “நாம் இப்போது செய்ய வேண்டிய காரியம் இந்த கோழை செங்கொடியின் வலை தளத்தை சவுதி மண்ணில் வர விடாமல் தடுக்க வேண்டும்”

    “நம்மை எதிர்பவர்கள் மீது நமக்கு உண்மையில் எந்த கோபமும் இல்லை”

    “தங்கள் முகங்களை காட்டி இஸ்லாத்தின் மீது நேரடி விவாதம் நடத்துபவர்களை இது வரை இந்த உலகின் எந்த இஸ்லாமிய தீவிர வாதிகள் கூட தாக்கியதில்லை”

    pullarikkudhu

  79. “இஸ்லாமியர்களின் பணத்தை தின்று கொளுத்து விட்டு உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்கின்ற இந்த நயவஞ்சககர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்”
    “…….ஒருத்தனும் இங்க ஓசிக்காக வேலை பார்கல!!”
    very good

  80. தோழர் செங்கொடிக்கு
    இந்த இஸ்லாமியர்களின் மறுமொழிகளைக்கண்டவுடன் எனக்கு கண்ணில் தண்ணீரே வந்துவிட்டது.நாம்தான் சுய மரியாதைக்காரர்களாயிற்றே எதுக்காக நாம் இஸ்லாமியரிடம் அண்டி பிழைக்கவேண்டும் வேலையை விட்டுட்டு வந்துடுங்க.
    முதலாளித்துவத்தை எதிர்க்கும் நமக்கெல்லாம் எதற்க்காக முதலாளிகள்.முதலாளித்துவமே ஒழிக ஒழிகன்னு சொல்லி இப்படி ஒரு முதலாளிகளிடம் அண்டியிருக்க தேவையில்லையே.
    தோழரே நீங்கள்தான் கடைநிலை ஊழியனாயிற்றே அங்கே நீங்கள் வாங்கும் வருமானம் உங்களுக்கே பத்தாதே.அப்படி நீங்கள் அங்கிருந்து என்னத்த சேத்துவைக்க முடியும்.கொள்கையிலே இவவளவு பிடிப்பா இருக்கற நீங்க போயும் போயும் ஒரு முதலாளியிடம் கொத்தடிமையா இருப்பது மனதுக்கு கஷ்டமாயிருக்கு.உங்க வேலையை அந்த முதலாளியின் மூஞ்சியிலேயே விட்டெரிந்துவிட்டு வந்திடுங்க.நம்ம நாட்டிலேயே சுயதொழில் செஞ்சாலே அதைவிட அதிக வருமானத்தை ஈட்டலாமே.நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்க முதலாளி உங்களை எப்படியெல்லாம் திட்டி(அடித்தும்கூட)யிருப்பான் அப்படிப்பட்ட முதலாளியிடம் நாம் வேலை பார்த்தேயாகவேண்டுமா.நீங்கள் மட்டும் வந்துடாதீங்க உங்ககூட வேலை பார்க்கும் தோழர்களையும் அழைத்து முதலாளித்துவத்தின் கொடுமையை எடுத்துரைத்து அவர்களயும் வேலையை விட்டு வரசொல்லுங்கள்.(அப்படி நீங்க சொல்லும்போது நிச்சயமாக அவர்கள் உங்களிடம் அப்புரம் சோத்துக்கு என்ன வழி என்றவொரு கேள்வியை வைப்பார்கள் அப்படி கேட்டால் ஈகுவலிஸம், கம்யூனிஸம்,சோஷலிஸம்னு பதில் சொல்லுங்க).வீரியம் கொண்டு எழுங்கள் வெலையை தூக்கிபோட்டு வாருங்கள்.

  81. அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

    ஒரு சிறு விளக்கம் ஒன்றை தருவது இந்த இடத்தில் இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.

    ஸ்கூல்பாய் என்பவர் சில இடுகைகளில் அண்மை நாட்களில் பின்னூட்டங்கள் இட்டு வருகிறார். பரிணாமம் குறித்து, யாரும் அதை நிரூபிக்கவில்லை என்றார் அதற்கு எதிராக முன்னர் எழுதிய கட்டுரையின் சுட்டி ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் பரிணாமத்திற்கான நிரூபணங்கள் சில இருந்தன. அவறை அவர் மறுக்கவோ வேறு விபரங்களையோ வைக்கவில்லை மாறாக அதற்கான ரெபரன்ஸ்கள் வேண்டும் எனக் கேட்டார். அதற்கு இரண்டு நூல்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. அப்போதும் அதுகுறித்த விமர்சனம் எதையும் முன்வைக்காமல், அந்த புத்தகத்தை எழுதியவர் என்ன படித்திருக்கிறார்? உங்கள் நண்பரின் தாயார் வேசி என அந்த நூலில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என தன் தரத்தைக் காட்டினார். பரிணாமம் குறித்த ஆய்வுக்கட்டுரைகளையெல்லாம் படித்திருக்கிறேன் என்று கூறிய அவரிடம் நீங்கள் பரிணாமம் குறித்து படித்தது என்ன? என்பதை சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு அவர் அது குறித்து எழுதவில்லை.

    இந்தக் கட்டுரையிலும் சார்பியல் கோட்பாடு குறித்து சில குழப்பமான பின்னூட்டங்களை பதிவு செய்து கொண்டிருந்தவரிடம் உங்கள் விமர்சனம் என்ன என்பதை தெளிவாக கூறுங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டவுடன் அது குறித்து தன்னுடைய விளக்கத்தை எனக்கு மின்னஞ்சல் செய்தார். அதற்கு சுட்டி கொடுத்து பொதுவில் வைத்துவிட்டு அதற்கான பதிலும் கொடுக்கப்பட்டது. அதில் அவரின் விளக்கம் குறைபாடாக இருக்கிறது எனும் விமர்சனத்தை வைத்து பதிலளிக்குமாறு நான்கு கேள்விகளையும் கேட்டிருந்தேன். பதிலளிக்கிறேன் என்றவர் இதுவரை பதிலளிக்கவில்லை. மாறாக வேறொரு புதுக் கேள்வியை பின்னூட்டமாக வைத்தார். அவர் பதில் கூறட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நான் அமைதியாக இருந்தேன். எழுத்தில் பதில் சொல்வது சிரமம் நேரில் வாருங்கள் என அழைத்தார். அதில் எனக்கு சங்கடங்கள் இருந்தாலும் விடுப்பு நேரத்தில் எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள் நாம் சந்திப்போம் என்று பதில் கூறியிருந்தேன். இதற்கு எந்த ஏற்பும் கூறாத அவர். அட்ரஸ் கேட்டேன் ஆளைக் காணோம் என புலம்ப ஆரம்பித்தார். இப்பொது அதே பாணியில் தோழர் கலைக்கான பதிலில் \\நான் ஏற்கனவே இதை உங்கள் செங்கொடியிடம் விவாதித்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் உங்கள் இடத்தில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை.ஆதலால் நான் திருப்பியும் அரம்பித்தேன்.சரி நேர்ல வாங்க பேசுவோம் சொல்லி என் முகவரியும் கொடுத்தாகி விட்டது ஆனா இந்த அரிவியல் இல்லாத பதிலுக்கும் உங்க தரப்பிலிருந்து ஒரு பதிலும் இல்லை……..நாய் இருக்குல்ல அது எதிரியிடம் போராட முடியாதுன்னா தூரத்துல போய் நின்னு குரைகும் ஆனா சில பேர் அத விட கேவலமானவங்க மூஞ்ச வெளிய்யெ கூட காமிக்கமாட்டான்க……கேட்டா சப்பாதீல இருக்கேன் தட்டுல இருந்து வெளியெ வந்தா குப்பையில தூக்கி பொட்டுருவாங்கன்னு பீலா வுட வேண்டியது…….// என்று தன் முகத்தைக் காட்டியுள்ளார்.

    இப்படி அவர் கிண்டலாகவும் வன்மமாகவும் பின்னூட்டமிடுவது இது முதல் முறையல்ல

    \\ஆமா செங்கொடி address தாரேன்னு சொல்லிட்டு எங்க போனாரு சவுதிக்கு விஸா எடுக்கவா????//
    \\மண்ணிப்பு கேக்குரேன்னு ஒரு மானஸ்தன் சொன்னான் அவர யாராவது பாதீங்களா?? அவரு கிட்ட address வாங்கி தாங்க சவுதீல எங்க இருந்தாலும் நான் போய் பார்கிறேன்!!//
    \\வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிரார்//
    \\hurray we got one scientist in india//
    \\பேசவந்துட்டானுங்க‌//
    \\பின்குறி(ரை)ப்பு: உங்களின் கேள்விகள் அனைத்தும் உளரல்களின் குவியல்களாகவே இருக்கிறது ‍‍‍‍இதே சங்கை திரும்ப ஊதாதீர்கள்//
    \\ செங்கொடி முயலுக்கு மூணு கால்னு சொன்னா!! அப்படியே நம்பிரக்கூடாது//
    \\உங்களின் அறிவியல் ஞானத்தை படிக்கும் போது என்னக்கு உடம்பெல்லாம் புல் அறிக்கிறது (இதுல வேற வாழ்த்தி நிறைய ஜிங் ஜாக்)//
    \\நான் உங்க‌ளிட‌ம் இந்த வ‌ல‌ வ‌ல‌ கொல‌கொல‌ ப‌தில்க‌ளை எதிர்பார்க‌வில்லை//

    ஆக சிறந்த முறையில் விவாதம் செய்வது இவரின் நோக்கமல்ல என்பதும், விவாதம் என்பதற்கான குறைந்தபட்ச வேட்கை கூட இவரிடம் இருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது. எனவே நான் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாகவும் ஒழுங்காகவும் பதில் சொன்னாலும் கூட இனி இவருக்கு பதிலளிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன். ஏனென்றால் ஏற்கனவே நான் உளரல்களை பொருட்படுத்துவதில்லை என்பதை இவருக்கு தெரிவித்தாகிவிட்டது.
    நன்றி

    தோழமையுடன்
    செங்கொடி

  82. அண்ணே கலை(அஸ்கர் ),
    நீங்க என்ன இருந்தாலும் உங்க குல தெய்வம் காரல் மார்க்சை திட்டுற அளவுக்கு வந்திருக்க கூடாது. பாவம் அவரு . சரி அவரு பாழாப்போன ஒரு கொள்கையை தன்னுடைய வயித்து பிழைப்புக்காக அந்த காலத்தில சொன்னது உண்மை தான் . ஆரம்பத்தில குடிகாரர்கள் சங்கத்தில் உறுபினராக இருந்து பிறகு அதனுடைய தலைவர் ஆகி ஏன் அதற்க்கு அடிமையும் ஆகி கண்ணதாசன் கவிதை எழுதினது போல் மூலதனம் புத்தகம் எழுதினதும் உண்மை தான் . ஆனாலும் நீங்க காரல் மார்சை திட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது. அட நம்ம செங்கொடி அண்ணனுக்கே அரைவேக்காடுகளின் புத்தகங்களை காப்பி அடித்து சார்பியல் கோட்பாட்டை எழுத முடியும் போது ஏன் வலை தளத்துல சார்பியல்னு ஒரு வார்த்தையை அடிச்சாலே கொட்டோ கொட்டுன்னு சார்பியல் பத்தி விபரங்கள் கிடைக்கிற இந்த காலத்துல நீங்க சார்பியல் பத்தி இந்த காரல் மார்சுக்கு எழுத முடியாதுன்னு நீங்க நிஜ மாலுமே நம்புறீங்களா ? சார்பியல் பத்திய பாடம் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் சென்கொடிக்கு நடத்திவிடுவான் .
    சரி அத விடுவோம் … நீங்க காரல் மார்க்சை மோடியை ஒத்த கேடின்னு எதுக்கு சொன்னீங்க . ஓஒ … ரோசம் வந்தா இப்படி எல்லாம் பேசுவீரோ ? சூடு சொரணை இல்லாத உங்களுக்கே இப்படி கோபம் வரும் போது பாவம் இந்த துலுக்கன்மாருக்கு மட்டும் கோபமே வரக்கூடாதுன்னு எப்படி அண்ணே எதிர்பார்த்தீங்க .
    ஆமா செங்கொடி மெதுவா விவாதத்த விட்டு நழுவீட்டாராமே. பாவம் நம்ம ஸ்கூல் பாயிடம் அவர் சரணடைந்ததிலே எனக்கு நிஜமாவே வருத்தம் தான்!. பாவம் அவர் என்ன பண்ணுவார் . காப்பி அடிச்சி எழுதினா இப்படிதான் பதிலும் எழுதினவர்கிட்ட கேட்டு தான் எழுத முடியும். அப்புறம் கலை ராசா நீங்க உங்க அண்ணன் கிட்ட கேட்டு சொல்லுங்க உங்க அண்ணன் இஸ்லாத்தை பற்றி விவாதிக்க தனியா வருவாரான்னு. அப்புறம் நமக்கு தலைப்பை தீர்மானிக்கலாம். பயந்துர வேண்டாம் எழுத்து விவாதம் தான்.
    அப்புறம் ஸ்கூல் பாய்க்கு இருக்கிற ஒரே டைம் பாஸ் உங்க செங்கொடியின் அறிவியல் ஓட்டை வலைத்தளம் தானாம் !
    சவுதியின் பொருளாதாரம் அவங்களுக்கு கிடைத்த இயற்கை வளம் தான். அத ஓசியில எவனும் எடுத்து கொடுக்கல. கூலிக்கும் மேல கூலி வாங்கி தான் எடுத்து கொடுக்கிறான்.

    \\\\\\உண்மையிலேயே எதிரிகளைவிட இதுபோன்ற தற்குரிகள்தான் இஸ்லாத்திற்கு ஆபத்தானவர்கள்\\\\\\

    செங்கொடியும்,இவரும்,அபு அனாரும் நம்முடைய உற்ற நண்பர்களாம்! நாம் இஸ்லாத்திற்கு ஆபத்தானவர்களாம் . இவர் இஸ்லாத்தின் பாது காவலராம். “நய வஞ்சகன்” அப்படின்னா அர்த்தம் தெரியுமா ? அதன் அர்த்தம் உங்களுக்கு தெரியலன்னா யாருக்கு தெரிய போவுது . ஏன்னா அத மொத்த குத்தகைக்கு செங்கொடியும் நீங்களும் தானே எடுத்திருக்கீங்க.

    இப்படிக்கு

    உங்கள் அன்பு தலைவர் காரல் மார்க்ஸ்

  83. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    அன்பார்ந்த மடையர்களே, முட்டாள்களே ஒரு சிறுபிள்ளைதனமான‌ விளக்கம் ஒன்றை தருவது இந்த இடத்தில் இன்றியமையாதது எனக் கருதுகிறேன்….

    நான் குரான் ஹதீஸ் பேசும்பொது மட்டும் ஒழுங்காக அது என்ன சொல்லுகிரது என்று புரிந்து கொள்ளாமல் அதில் இருந்து ரெபரென்ஸ் எடுத்து கொடுப்பேன் அதை முட்டாள்கள் ஆகிய நீங்கள் எந்த கேள்வியும் கேட்காமல் நம்ப வேண்டும்!!! ஆனால் பரினாமத்தை பற்றி பேசும்போது எதொ ஒரு அரைவேகாடு எழுதிய புத்தகத்தை ரெபரென்ஸாக கொடுப்பேன் அதையும் நீங்கள் நம்ப வேண்டும் தமிழ்த்தாய் பெற்றடுத்த பிள்ளையான நான் எந்த ஒரு ஆறிவியல் சார்ந்த ஆங்கில புத்தகத்தையும் படிக்க மாட்டேன் காரல் மார்க்ஸ் எழுதிய தாஸ் காபிடல் புத்கத்தையும் ஒரு அரைவேகாடு எழுதினாதான் படிப்பேன்!!!! யாராவாது என்னிடம் எதிர்த்து வாதிட்டால் அரைவேக்காடு புத்தகத்தை படித்த முழுவேக்காடாகிய நான் எழுதிய இடுகைகளைத்தான் சாலச்சிரந்து என்று கூறுவேன்.மேலும் ஸ்கூல் பாய் பரினாமத்தை யார் நிரூபித்தார்? என்று கேட்டால் நான் அதை சொல்லாமல் நியான்றதால் காலத்துக்கு போய் பரினாமவியலை பற்றி பேச ஆரம்பித்து விடுவேன்..அவர் “இன்று காலை குளித்தாய?”என்று கேட்டால் நான் “கருவரையில் இருந்து மனிதன் எப்படி வந்தான்” என்று விளக்குவேன்………….

    நான் யார‌வ‌து அறிவிய‌ல் ச‌ம்ப‌ந்த‌மாக‌ வினா எழுப்பினால் வ‌லைப்ப‌திவில் தேடிப்பித்து அவ‌ர்க‌ள் என்ன‌ சொல்ல‌வ‌ருகிரார்க‌ள் என்று புரிந்து கொள்ளாம‌ல் முழுவேக்காடாகிய‌ நான் ப‌ட‌ம்,சூத்திர‌ங்க‌ள் மூல‌மாக‌ விவாத‌ம் புறியாம‌ல் என்னுடைய‌ வாயிலேயே அவ‌ர்க‌ளுக்கு வ‌டை சுட்டுகொடுப்பேன் , அவ‌ர்க‌ளுக்கு கேள்வியையும் கேட்பேன்…‍ஆனால் அவ‌ர்க‌ளுக்கு த‌மிழ் தெரியாத‌ பட்சத்தில் என‌க்கு மிக‌வும் எழிமையாக‌ போய்விடும் –இந்த‌ உரையாட‌ல் நிலைக்காது என்று…………..இன்னும் என்னிட‌ம் யார‌வ‌து முக‌வ‌ரி கேட்டால் என‌க்கு ப‌ய‌ம் வந்து மூச்சா போய் விடுவேன் ஏனென்றால் நான் ச‌வூதியில் முசுலீம் என்ற முகமூடியோடு (என்னிடம் கம்யூனிசவாதி என்ற முகமூடியும் உண்டு) ப‌ண‌த்துக்காக‌ ஏமாற்றி அலைப‌வ‌ன் எங்கே இவ‌ர்க‌ள் முத்த‌வாவிட‌ம் பிடித்து கொடுத்து என் வேலைக்கு வேட்டு வைத்து விடுவார்க‌ளோ என்று ப‌யம் என்னிடம் உண்டு………………….

    திருநெல்வேலி அல்வாவுட‌ன்,
    செமெகாமெடி.

  84. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    வெக்கங்கெட்டவனே யாருக்கு விவாதம் செய்ய நோக்கமில்லை…..என்னுடைய விலாசம் கொடுத்தாகி விட்டது தைரியம் இருந்தால் நேரில் வா அல்லது உன் விலாசமாவது கொடு……..

    Note: i wont show ur profile to anyone

  85. அடி பின்னுங்க.. ஸ்கூல்பாய்,.. நானும் வர்ரேன்.

    மரியாதை கெட்டவனே, மடையனே, யாரிடம் கேட்கிறாய் பரிணாமத்துக்கு நிரூபணம்? எனக்கு என்ன மூளை இருக்கு என்று நினைத்துவிட்டாயா?என்னைப்போல ஆங்கிலம் படித்திருகிறாயா? நான் எலமண்டரி ஸ்கூலில் ஆங்கிலம் படித்துகொண்டிருக்கிறேன். நீ படித்திருக்கிறாயா? எனக்கு ஏ பி சி டி தெரியும். உனக்கு தெரியுமா? ஏ பார் ஆப்பிள் எனக்கு தெரியும். உனக்கு தெரியுமா? எஃப் பார் பார்ட்.. அது தெரியுமா உனக்கு? உன்னுடைய விலாசத்தை கொடு. நான் உடனே முத்தவாவிடம் கொடுக்கணும்

  86. //வெக்கங்கெட்டவனே யாருக்கு விவாதம் செய்ய நோக்கமில்லை…..என்னுடைய விலாசம் கொடுத்தாகி விட்டது தைரியம் இருந்தால் நேரில் வா//

    முத்தவா கிட்ட புடிச்சி கொடுத்துடுறோம்

    //அல்லது உன் விலாசமாவது கொடு//

    முத்தவாவை வீட்டுக்கே கூப்டுனு வந்துடுறோம்
    இதில் ஏதோ பெரிய சூழ்ச்சி இருக்கு போல பார்த்துகோங்க செங்கொடி

  87. எங்கள் அண்ணன் கஞ்சாநெஞ்சன் இப்னு பஷீர்(2) மன்னிச்சுக்கப்பா டங் சிளிப் அயிடுச்சு அஞ்சாநெஞ்சன் இப்னு மசிரு(2) ச்சே மறுபடியும் டங் சிளிப் அயிடுச்சு மன்னிச்சுக்கப்பா அஞ்சாநெஞ்சன் இப்னு பஷீர்(2) அண்ணன் கலத்துல இறங்கிட்டாரு இனிமே கலவரம்தான் இஸ்கூலு பையா ஓடிபொயிடு இஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு
    அடி பின்னுங்க.. இப்னு பஷீர்(2) பாய்,.. நானும் வர்ரேன்.ஸ்கூல் பாயைப்பார்த்து நாக்க புடிங்கிக்கற மாதிரி 4 வார்த்தை கேக்கறேன்

    ஏய் ஸ்கூல பையா எங்க அண்ணன இப்னு பஷீர்(2) யாருன்னு நினைத்தாய் நீயெல்லாம் அவருடைய கால்தூசிக்கு வருவியா
    எங்க அண்ணனைப்போல கலகம் உண்டு பண்ணிருக்கியா? இல்லை நல்லா இருக்கற இடத்துல கலவரம்தான் செய்ய தெரியுமா? ஒரு குடியை எப்படி கெடுக்கனும்னு எங்க அண்ணன் இப்னு பஷீர்(2)-கு தெரியும். உனக்கு தெரியுமா?
    எங்க பெரிய அண்ணனைத் தொடர்ந்து எங்க சின்ன அண்ணன்கள் அபு அனார்,அப்துல் நசிர்,அப்துல் அஜீஸ்,ஹூமாயுன் எல்லோரும் வரிசையா வர இருக்கறாங்க.ஸ்கூல் பையா நீ தாங்க மாட்டப்பா ஓடிபோயிடுடா செல்லம்.

  88. தோழா செங்கொடி ,
    நான் உங்க தலைவர் காரல் மார்க்ஸ் பேசுறேன். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு பசியிலும் பட்டினியிலும் வாடியதால தொழிலாளர் விடுதலைக்காக மூல தனம் என்ற வேத புத்தகத்தை உங்களுக்கெல்லாம் தந்திருக்கேன். ஆனால் நீங்களெல்லாம் என் பேர சொல்லி போலி கம்யுநிசம் பேசி ஊரையெல்லாம் ஏமாத்தி விட்டு முதலாளி ஆகலாம் என்ற அல்ப ஆசையில அரபு மண்ணுல வேல பார்த்திக்கிட்டு இருக்கிறீங்க . உண்மையிலே எனக்கு உங்களையெல்லாம் நினைத்தால் அழுகை அழுகையா வருது . ஆனாலும் அடக்கிபுட்டேன். உங்களை ஒப்பிடும் பொது அந்த துலுக்கர்கள் எவ்வளவோ பரவாயில்ல. வட்டி வாங்காம , வரதட்சன வாங்காம , சம்பாதித்த பணத்துக்கு சக்காத்து கொடுத்து ஏழைகள் மேல உண்மையிலேயே பாசம் வைத்து அவங்க தலைவர் முகமது மேல உண்மையான பிரியம் வைத்து அவர் வழியில பெரும்பான்மையான பேர் நடக்கிறாங்க. விதி விலக்குகள் இருக்கலாம். இப்ப பார்த்தா எல்லா பயலுவளும் நோன்பு இருந்து ஐம்புலன்களையும் அடக்குகிற பயிற்சி எடுக்கிறானுங்க. ஆனால் நீங்களெல்லாம் என் பேர சொல்லி ஒரு பக்கம் ஊர ஏமாத்தி விட்டு மறுபக்கம் அரபிகள் கொடுக்கிற நோன்பு சாப்பாடுகள முஸ்லிம் பேருல அடிச்சிகிறீங்க. வயிர நிறைஞ்ச உடன் போலி கம்யுநிசம் பேசி ஊர ஏமாத்த ஆரம்பிசிடுறீங்க. அட போங்கப்பா கம்யுநிசமும் வெங்காயமும் !. எனக்கு அன்னைக்கு இந்த முகமதுடைய மார்க்கம் தெரிஞ்சிருந்திருந்தா பேசாம அதையே பின்பற்றியிருக்கலாம். கஷ்டப்பட்டு உங்களுக்காக மூல தனத்தை உருவாக்காம இருந்திருக்கலாம். நீங்களெல்லாம் என்னைக்கு பணத்துக்கு ஆசைபடாமல் ஏழைகள் மேல் அன்பு வைக்கிறீங்களோ அன்னிக்கு தான் என் ஆத்மா சாந்தி அடையும். எனக்கு….. நீ செங்க்கொடின்னு பேர் வைச்சத நினைத்தால் வெறியா வருது. ஏன்னா இது என் இரத்தத்தில் உருவான கொடி. அதனால தான் அதன் கலர் கூட சிவப்பா இருக்கு. அரபு மண்ணுல உண்டு கொளுத்து வாழுற உங்களுக்கெல்லாம் என் கொடியின் பேர பயன் படுத்த என்ன தகுதி இருக்கு. நான் பட்டினியா கிடந்தாலும் போலியா வாழல . ஆனா என் பேர சொல்லி நீங்க எல்லாம் போலியா வாழுறீங்க. இதுல வேற எனக்கு ரெம்ப விருப்பப்பட்ட தொழிலாளிகளை அரவணைக்கிற துலுக்கர்கள வேற பகைக்கிறீங்க . போங்கப்பா நீங்களும் உங்க போலி கமயுநிசமும். தொழிலாளர்களின் தலைவர் முகமது வாழ்க ! லால் சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும்.

    இப்படிக்கு உங்கள் மதிப்பிற்குரிய எதிரி ,
    சிவப்பு கலர்ல இரத்த கண்ணீர் வடிக்கும் காரல் மார்க்ஸ்

  89. அடேங்கப்பா!
    என்ன ஒரு வெளக்குமாறு அறிவு நம்ம காறாமார்க்ஸுக்கு. தம்பி முழு முக்காடு! நான் ஒன்ன சார்பியல் கோட்பாட்ட ஏத சொல்லலப்பா. அந்த… அந்த சார்பியல ஒங்க.. ஒங்க விஞ்ஞானி கரீம் சொன்ன வசனங்களுக்கு பொருத்தி ஒரு விளக்கம் எழுதேன். தெரிஞ்சிக்கிறோம். புண்ணியமாப்போவும்.

    தம்பி முழு முக்காடு! ஆமா ஒங்க கரீமு ”குன்” னுன்னு சொன்னா எல்லாமே அட்டடைமுல வந்துருமாமே! எதுக்கு இந்த ”ஒருநாள்” கூத்தெல்லாம். எனக்கு புரியலப்பா. கொஞ்சம் அதயும் வெளக்குப்பா!

  90. அன்பு கலை தோழா,
    சார்பியல் கோட்பட்டுல உனக்கு அவ்வளவு ஈர்ப்பா ! கலை ,அஸ்கர் ,செங்கொடி , அபு அனார், இப்னு பஷீர் இப்படி எல்லாரும் வலைதளத்துல புரியாமலே வெட்டி ஓட்டும் போது உங்க காரல் மார்க்ஸ்சும் அப்படி வெட்டி ஓட்டினா அவங்களுக்கும் உங்க தலைவர் காரல் மார்க்சுக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும் தொண்டா ! அதான் நம்ம பொடி பைய்யன் ஸ்கூல் பாய் விளக்கின சார்பியல் கோட்பாட்டுக்கு பதில் சொல்ல முயற்சி பண்ணு . திசை திருப்பாம. ஏதோ அறிவியல் முழுதும் முடிஞ்சு போயிட்டது போல கத்துறியே. இனியும் எத்தனையோ அறிவியல் வந்து உன்னால நம்ப முடியாதத எல்லாம் நம்ப வைக்க போவுது. எங்க அண்ணன் ஐன்ஸ்டீன் சொன்னாரு ஒளியை மிஞ்சுற வேகம் உலகத்துல இல்லைன்னு. ஆனா இந்த நூற்றாண்டுல வாழ்ந்து கொண்டிருக்கிற தம்பி ஸ்டீபன் ஹாவ்கின்ஸ் சொல்றாரு பிரபஞ்சம் விரிவடைகிற வேகம் அதை விட வேகமுன்னு. இப்படி தான் இனி அடுத்து ஒரு தம்பி வந்து இத பொய்பிப்பான். அதனாலத்தான் தோழா உங்களை மாதிரி கால் வேக்காடா இல்லாம இருக்கிற(Today’s )அறிவியலின் உச்சத்தை தொட்ட நம்ம அறிவியல் மேதைகளில் பலபேரும் உன்ன மாதிரி நாத்திக நிலையை எடுக்காமல் Agnostic நிலையை எடுத்திருக்கனுங்க. புரியலையா ! person who believes that the existence of God is not provable . இன்னும் புரியலையா ? அதான் கடவுள் இல்லைன்னு உறுதியா சொல்ல முடியாம இதுவரைக்கும் கடவுள் இருப்பது நிரூபிக்க படலைன்னு சொல்றானுங்க. அதன் அர்த்தம் என்னன்னா இது வரை யாரும் பார்க்கல . அதை தான் முகமது நபியும் சொன்னாரு. கடவுளை இது வரை யாரும் பார்த்ததில்லை. நான் உட்பட. அவரும் நான் பார்த்தேன்னு உடான்ஸ் விடல்ல . மறுமையில தான் எல்லோரும் இறைவனை பார்ப்பார்கள் .இது தான் துலுக்கன்மார்களின் நம்பிக்கை. உங்களை போல் கால் வேக்காடு நாத்திக நிலையை ஏன் அந்த அறிவியல் மேதைகளில் பலரும் எடுக்கல தெரியுமா? அவங்க பல ஏன்(?) களுக்கு விடை தேடி அலையும் போது அது விஞ்ஞான விதிகளுக்கு கட்டுபடலை . உதாரணமா இந்த பெரு வெடிப்பு(Big bang ) நிகழ்ந்த பின்னால நடக்கிற இந்த பிரபஞ்ச்கத்தின் விரிவடைதல் ஒரு கட்டுப்பட்ட கட்டளையின் அடிப்படையில் நிகழ்வது போல் இருப்பதாக கண்டு பிடிக்கிறாங்க. அந்த சக்தி(கட்டளை) எதுன்னு அறிஞர்களால கண்டு பிடிக்க முடியல அதனால தான் அவுங்க அந்த சக்தி எதுன்னு எங்களுக்கு தெரியல்ல .எங்களால நிரூபிக்க முடியலை அது கடவுளாக கூட இருக்கலாமுன்னு அடக்கமா ஒப்பு கொள்கிறானுங்க. மனதுக்குள் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், பயம் இருந்தாலும் விஞ்ஞானிகளால அத நிரூபிக்காம வெளிப்படையா சொல்ல முடியாது. ஒரு அறிவியலும் தெரியாத கால் வேக்காடு உங்களால எதையும் ஈஸியாக சொல்ல முடியும் . அப்புறம் உங்க தலைவர் காரல் மார்சின் மானத்த வாங்கிறிங்க நீங்க. உங்களை எனக்கு புடிக்கவே புடிக்கல . என்னுடைய உண்மையான தோழர்களெல்லாம் இஸ்லாதில இணைந்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும்.

    இப்படிக்கு ,
    இரத்த கண்ணீர்வடிக்கும் உங்கள் மரியாதைக்குரிய எதிரி காரல் மார்க்ஸ்.
    லால் சலாம் . அஸ்ஸலாமு அலைக்கும்.

  91. என்னங்கய்யா நீங்க, அந்த டியுப் லைட் ராஜன் தான் ஒரு மொக்க போட்டுக்கிட்டு இருக்கான்னு இங்க வந்தா, இது அதவிட ஒரு பெரிய மொக்கைய இருக்கு.

    இந்த மாதிரி சொத்தை விசயத வச்சி இஸ்லாத விமர்சனம் பண்ணி இஸ்லாத்தோட பேர கேடுக்குரிங்க,

  92. நான் எழுதியதும் இப்படி கொந்தளிக்கிறீர்களே? ஏன்? இதே வாதங்களைத்தானே ஒவ்வொரு கூட்டத்திலும் ஏகத்துவ பிரச்சாரத்தின் போதும், இந்து கடவுள்களை பற்றி பேசினோம்? கிருஷ்ணன் கோவிலுக்கு முன்னால் ஏகத்துவ பிரச்சாரத்தின் போது நானும் இதே பேச்சுக்களைத்தான் கிருஷ்ணனை கும்பிட வருபவர்களிடம் கேட்டோம். கிருஷ்ணனுக்கு புட்டம் இருக்குமா? அவன் ஆய் போவானா என்றெல்லாம் ததஜ சகோதரர்களுடன் இணைந்து கேட்டோம். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறோம். அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கு என்றால், இதே கேள்விகளை இந்துக்கள் திருப்பி கேட்க எவ்வளவு நேரமாகும்? தமுமுக தலைவர் பேராசிரியருடன் பேசும்போது இதே மாதிரி அவரும் கிண்டலாக சொன்னார். இப்போது வாயை மூடிக்கொண்டிருக்கிறார்.

  93. நான் சொல்லலை எங்க பெரிய அண்ணன் இப்னு பஷீரை(2)வை தொடர்ந்து எங்க சின்ன அண்ணனுங்களெல்லாம் ஒவ்வொருத்தரா வர இருக்காங்கன்னு சொன்னேனுல்ல.இப்ப பார்த்தீங்களா எங்க கடைசி அண்ணன் ஹூமாயுன் பெரும்படையுடன் தாக்குதலுக்கு ஆயத்தமாயிட்டாரு.
    அடுத்த தாக்குதலும் ஆரம்பமாயிடுச்சு.அப்புரம் என்ன இஸ்லாமியர்களே மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு கெலம்ப வேண்டியதுதானே.

  94. செங்கொடி என்ற உறையூர் கார அண்ணாச்சி பி. ஜே கூட விவாதம் பண்ண போறேன்னு சொன்னது என்னாச்சி ? செங்கொடி அண்ணாச்சி நீங்க ஜென்மம் அழிஞ்சாலும் விவாதத்துக்கு வர மாடிங்கன்னு நல்ல தெரியும், பேடி தனமா கம்ப்யூட்டர் எலி பொந்துக்குள்ள உக்காந்துகிட்டு வாய் சவுடால் மன்னிக்கவும் கை சவடால் விட்டுகிட்டு இன்னும் எத்தனை காலம் தான் எமாத்துவன்னு பாக்கலாம். எலி வலைல யுருந்து வரதுக்கு பயம்மா இருந்த உன் காதை கொடு ஒரு ஐடியா சொல்றேன் இந்த முஸ்லிம் பயலுங்க எப்ப பாத்தாலும் விவாதத்துக்கு வா விவாதத்துக்கு வா ன்னு குப்பிட்டுகிட்டே இருப்பானுங்க, உனக்கும் சவுதி காச விட்டுவிட்டு போக மனசு கிடையாது (எங்க ஊருள்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க காச பாத்த தேவர் அடியால் (மருவாதய தான் சொல்லி இருக்கேன்னா) பாய் ல படுக்க மாட்டலாம் ) அப்படி நீ விவாதத்துக்கு போனா உன் முஞ்சி எல்லாத்துக்கும் தெரிஞ்சு போய்டும் அப்புறம் நீ சவுதி குள்ள வர முடியாம போய்டும் அதுனால ஒரு நல்ல ஐடியா சொல்லறேன் எவனாவது கலை என்கிற அஸ்கர் மாதிரி பாண்டிச்சேரில செவப்பு சட்டை போட்டுகிட்டு சுத்திகின்னு இருப்பன் அவன கூட்டி வந்து விவதம் செய்றமாதிரி செஞ்சு தோத்து போயிட்டா கோயில் படத்துல வர்ற வடிவேலு கம்பு சண்டைல தோத்த ஒடனே வெற்றி வெற்றி ன்னு சொல்லி கிட்டே வர்ற மாதிரி உன்னோட அல்ல கைகள வச்சி கத்திகிட்டே ஓடி போய்டு மாமு, இது தான் இப்ப இருக்கிற ஒரே வழி– இத நீங்க கண்டிப்பா வெளி இட மாட்டிர்கள் என்று நன்றக தெரிந்தும் எழுதி இருக்கிறேன். என்ன உங்களுக்கு தான் எங்களை பார்த்து பயம்மா இருக்குதே வேற என்னத்த சொல்றதுக்கு இருக்குது.

  95. எங்க அண்ணன் ஹூமாயுன் ரொம்ப அறிவாளிங்க.இந்த மாதிரி யாராலும் சிந்திக்கவே முடியாது.அவருடைய எழுத்துக்களை நன்றாக கவனியுங்கள் எப்படி கலகம் உண்டாக்க்குறாருன்னு பாருங்க.வேறு எந்த பயலாலையும் இப்படியெல்லாம் சிந்திக்க முடியாது.
    ததஜ-வுக்கு எதிரா முஸ்லிம்களையும்,முஸ்லிம்களுக்கெதிரா இந்துக்களையும் எப்படி கிளப்பிவிடுகிறார்னு பாருங்க.இதுபோல வேறு யாரலயாது டெக்னிக்கா சிந்திக்கமுடியுமா?
    நாங்களெல்லாம் ஒரு சின்ன துறும்பு கிடைக்காதான்னு காத்துகிட்டு கிடக்கறோம்.அதையே பெரிய பூகம்பமா மாத்திடுவோம்ல.தம்பிகளா இஸ்கூலு பையா,ஹைதர் அலி,ஜேஜே etc.etc.,எங்ககிட்டல்லாம் பகச்சிக்காதீங்கப்பு அப்புரம் உங்களுக்கெல்லாம் ஆப்புதாண்டியோய்

  96. தம்பி ஹுமாய்ஹூன்

    \\\\கிருஷ்ணன் கோவிலுக்கு முன்னால் ஏகத்துவ பிரச்சாரத்தின் போது நானும் இதே பேச்சுக்களைத்தான் கிருஷ்ணனை கும்பிட வருபவர்களிடம் கேட்டோம். கிருஷ்ணனுக்கு புட்டம் இருக்குமா? அவன் ஆய் போவானா என்றெல்லாம் ததஜ சகோதரர்களுடன் இணைந்து கேட்டோம். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறோம்\\\\\

    அட ட ட ……..சும்மா டாவ் அடிக்காதடா கண்ணா …… நீ ஏகத்துவ பிரச்சாரம் செய்தியா… தாதாஜா மட்டுமல்ல எந்த முஸ்லிம் அமைப்பும் உன் அளவுக்கு கீழ இறங்கி மூன்றாந்தர பிரச்சாரம் செய்ய மாட்டங்க. நீ சும்மா கதைக்காதடா கண்ணா …. உன் கதைய கேட்ட ஒரு பல மொழி தான் நினைவுக்கு வருது இரும்பு அடிக்கிற இடத்துல ஈ க்கு என்ன வேலைன்னு சொல்லுவானுங்க . ஏகத்துவ பிரசார இடத்துல உனக்கு என்ன வேலை. அமாவாசைக்கும் அப்துல்காதிருக்கும் முடிச்சு போடா பாக்கறியா ? இதுல வேற அது எவ்வளவு தவறுன்னு இப்ப உணர்கிறாயாமே? உங்க ஊர்ல ஏதாவது குளம் இருக்குன்னா அங்க துணி துவைக்கிற கல் இருக்கும் அதுல போய் தலையை முட்டிக்க உன் பாவம் தீரும். உன்னையெல்லாம் என் தொண்டன்னு சொல்றதுக்கே கேவலமா இருக்கு. நான் கஷ்டப்பட்டு உருவாக்குன மூல தனத்த படிச்சிட்டும் நீ மூளை கேட்டு போயிட்டியேடா தோழா.

    இப்படிக்கு ,

    உன்னமாதிரி தொண்டர்களை நினைத்து அழுது புலம்பும் காரல் மார்க்ஸ்

  97. நண்பர்களே,

    நீங்கள் வெட்டி அரட்டை அடிக்க இது சந்தை மடமல்ல.
    நிருத்திக்கொள்ளுங்கள் அல்லது நிருத்தப்படுவீர்கள்.

    செங்கொடி

  98. தனக்கு அறிவு அதிகம் இருப்பதாக நம்பிக்கொள்ளும் ஜே ஜே அவர்களுக்கு,

    விவாதப் பகுதி விவாதம் முடிந்ததும் நூலகத்தில் மின்னூலாக இருக்கும். இது குறித்த அறிவிப்பு பல நாட்களாக தொடர்புடைய பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. தெரியாத ஒன்றை கேட்டுத் தெரிந்து கொள்ளும் குறைந்த பட்ச நேர்மைகூட இல்லாத நீங்கள் அறிவு குறித்து பேசுவது வேடிக்கைதான்.

    செங்கொடி

  99. ஏழ்மையும் அதன் காரணமும், என்ற தலைப்பில் இருக்கிறது

  100. பிஜே அவர்கள் “ஒருநாள் என்பது ஒருவரின் பயணவேகத்தைப் பொறுத்து மாறுபடும்” என்று சார்பியல் கூறுவதாகவும் அதனையே குர்ஆன் கூறுவதாகவும் கூறுகிறார். அதாவது பூமியை 10,000 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிய கோமான், நாம் “ஒருநாள்” என்றுச் சொல்லும்போது நான்கு முறை சூரிய உதயத்தைப் பார்த்ததால் நான்கு நாட்கள் என்று சொல்லுவதுபோல.
    நமது 1000 ஆண்டுகள் அல்லாவுக்கு 1 நாள் என்றால் நாம் மிக விரைவாகவும் அல்லா (365 * 1000) 3,65,000 மடங்கு நம்மைவிட மெதுவாகவும் பயணம் செய்வதாக பொருளாகிறது. அதாவது பூமி சுழல்வதால் அதனுடன் சேர்ந்து நாமும் சுழல்வதாக அல்லாவுக்கு தெரியும் என்று எடுத்துக்கொண்டால் நமது பயண வேகத்துடன் (பூமி சுழலும் வேகத்துடன்) ஒப்பிட்டு நமது பூமி 3,65,000 முறை சுற்றினால், அப்துல் அசிஸ் சொல்லியுள்ளதுபோல (பின்னூட்டம்) அல்லாவுடைய கோள் பூமியின் அளவுக்கு சமமாக இருந்தால் 3,65,000 மடங்கு மெதுவாக சுழலும். அதாவது நமது 3,65,000 சுழற்சி அல்லாவுக்கு ஒரே ஒரு சுழற்சி மட்டுமே. நாம் அல்லது பூமி சழலும் வேகத்தைவிட அல்லாவுடைய வேகம் மிகக் குறைவு என்றாகிறது இதனை அப்படியே குர்ஆன் வசனங்களுக்கு பொறுத்தினால் ”ஒருநாளில் உங்களை வந்தடையும்” என்றால் நம்மிடம் அது வர 3,65,000 நாள் ஆகும். இன்று அனுப்பும் கட்டளை அல்லது இன்று புறப்படும் மலக்கு(தேவர்) ஏறக்குறைய 1000 ஆண்டுகள் கழித்தே பூமியை வந்தடைவர். அதாவது இஸ்லாமிய விஞ்ஞானி பிஜே சொல்லுவதுபோல சார்பியலுடன் ஒப்பிட்டோமானால் அல்லாவுக்கு 1நாள் நமக்கு 3,65,000 நாள் என்றால் நாம் தான் அல்லாவைவிட விரைவாக பயணம் செய்வதாக பொருள்படும். “கோமான்” பூமியைச் சுற்றிவந்ததுபோல.

    மிக வேகமாக பயணம் செய்பவர்களுக்குத்தானே நாள் குறைவதாக சார்பியல் கூறுகிறது. (நாளின் அளவு குறைவதால் வாழ்நாளின் கணக்கு கூடும்)

    வினாடிக்கு வினாடி அல்லா தனது கட்டளையால் இந்த பூமியை இயக்குவதாகச் சொல்லுவது இதனால் பொய்யாகிவிடுவதால், தான் சார்பியலை துணைக்கு அழைத்ததற்கு நேர் முரணாக இக் குர்ஆன் வசனங்களை “வேகம் என்ற கணக்கிற்கு மாற்றி பிஜே தனது கட்டுரையை தொடருகிறார். அதுவாவது பொருந்துதா என்று பார்ப்போம்.

    ஒரு காற்று பூமியை எந்த வேகத்தில் சுற்றி வருகிறது என்று பெரிய பெரிய விஞ்ஞானிகளிடமெல்லாம் கேட்டும் பதில் சொல்ல தெரியாமல் முழித்ததால் தாமே பல காற்றுகளின் வேகங்களையும் கூட்டிக்கழித்து ஒரு காற்றின் வேகத்தை கண்டுபிடித்தது போல “பூமியில் உங்களுடைய வேகத்தைப்போல” என்று சொல்வதை மொட்டையாக எடுத்துக்கொண்டு சராசரி வேகத்தைக்கொண்டு நாம் கணக்கிடமுடியாது. அதனால் பூமி, நிலநடுக்கோட்டுப் பகுதியில் சுழலும் வேகத்தை கணக்கில் எடுத்துக்கொள்வோம். நிலநடுக் கோட்டுப் பகுதியின் வேகமே பூமியைப் பொறுத்தவரை இயற்கையான அதிகபட்ச வேகம் அது….
    மணிக்கு = 1669.79 கி.மீட்டர்.
    24 மணி நேரத்திற்கு ( 1 நாளிற்கு) = 1669.79 X 24 = 40075
    365 நாட்களுக்கு ( ஒரு ஆண்டிற்கு) = 40,075 X 365 = 1,46,26,280
    1000ஆண்டுகளுக்கான வேகம் = 1,46,26,280 X 103
    1,46,26,280 X 103 இது நம்முடை 1000 ஆண்டுகளுக்கான அதாவது அல்லாவுடைய 1 நாள் வேகம்.

    அல்லாவுடைய 1 நாள் வேகம்
    (24 மணிநேரத்திற்கு) = 1,46,26,280 X 103 கி.மீட்டர்
    1 மணி நேரத்திற்கு = 6,09,428 X 103

    முகம்மதுநபி இந்த வேகத்தில் அல்லாவை சந்திக்க விண்ணில் பயணம் செய்ததாக எடுத்துக் கொள்வோம். குர்ஆன் வசனம் 17: 1 “ஒரு இரவில்”சென்று வந்ததாக கூறுகிறது. ஒரு இரவு என்றால் அதிகபட்ச நேரம் 12 மணி நேரம். அப்படி என்றால்…
    12 மணி நேரம் பயணம் செய்த தூரம் = 6,09,428 X 103 X 6
    73,13,136 X 103கி.மீட்டர்.

    விண்ணியல் அறிஞர்கள் நட்சத்திரங்களின் தொலைவு பற்றிய தமது ஆய்வில்
    எப்சிலான் இண்டி என்ற நட்சத்திரத்தின் தொலைவு 11.9 ஒளி ஆண்டுகள் என்று கூறுகின்றனர்.

    ஒளி ஒரு வினாடியில் கடக்கும் தூரம் = 3,00,000 கி.மீட்டர்
    ஒரு நிமிடத்தில் கடக்கும் தூரம் = 3,00,000 X 60 = 1,80,00,000
    = 18,000 X 103
    ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரம்.= 18,000 X 60 X 103
    = 10,80,000 X 103
    எட்டு மணி நேரத்தில் கடக்கும் தூரம் = 86,40,000 X 103

    அதாவது முகம்மதுநபி 12 மணிநேரத்தில் பயணம் செய்த தூரம் ஒளி எட்டு மணி நேரத்தில் கடந்த தொலைவைவிட குறைவு. ஒளியின் 8 மணி நேர பயண தூரமே முகம்மதுநபியின் 12 மணி நேர பயண தூரத்தைவிட கூடுதலாக உள்ளபோது எப்சிலான் இண்டி என்ற நட்சத்திரம் 11.9 ஒளி ஆண்டு தொலைவு என்றால்….ஓரியானிஸ் என்ற நட்சத்திரம் 1200 ஒளி ஆண்டுகள் என்றால்…. அம்மாடியோவ்…. சாதார எண்களால் கூறமுடியாது. அப்படி என்றால் வானம் .. அதையும் தாண்டி புனிதமான ஏழாவது வானம் எவ்வளவு தூரம் இருக்கும்?

    எனக்குத் தெரிந்தவரை பிஜே சொல்வதுபோல 1000 ஆண்டு வேகத்திலோ அல்லது 50,000 ஆண்டு வேகத்திலோ முகம்மதுநபி பயணம் செய்திருந்தாலும் 100ல் ஒரு பங்கு கிணற்றைக்கூட தாண்டியிருக்க மாட்டார்.

    அதுபோலவே அல்லாவுடைய கட்டளைகளும் பூமியை வந்தடைய பல ஆண்டுகள் ஆகும்.

    இரண்டு நாளில் பூமியைப் படைத்தான், இரண்டு நாளில் மரஞ்செடி கொடிகளைப் படைத்தான், இரண்டு நாளில் பூமியோட ஒட்டியிருந்த வானத்தைப் பிரித்து அடுக்கடுக்காக ஏழு வானங்களாகப் படைத்தான் என்று குர்ஆன் கூறுகிறது. அதாவது அல்லாவின் காலக்கணக்குப்படி 6000 ஆண்டுகள் அல்லது ஆறு 50,000 = 3,00,000 ஆண்டுகள் என்றும், வேகக் கணக்குப்படி 1,46,26,280 X 103 X 2 வேகத்தில் படைத்தான் என்றும் பொருளாகிறது. பூமியின் மேற்பரப்பு குளிர்ந்து உயிரினர் வாழும் தகுதிக்கேற்ப மாற்றமடைய பல இலட்சம் ஆண்டுகளும், உயிரினங்கள் தோன்றி பல இலட்சம் ஆண்டுகளும் ஆகிவிட்டன என்று அறிவியல் கூறுகிறது.

    எனவே, எதுவானாலும் குர்ஆன் அறிவியலைக் கூறவில்லை எனபதே உண்மை.

    அது சரி! “குன்” என்றால் எல்லாம் உண்டாகிவிடும் என்று அல்லா சொல்லும்போது இந்தக் காலக்கணக்கும், வேகக் கணக்கும் எதற்கு?

    குர்ஆனின் வசனங்கள் 1 நாள், 6 நாள், 1000 ஆண்டு என்றெல்லாம் சொல்வதேன்? செங்கொடியும், கலையும், அஜீசும் சொல்வதுபோல் எல்லாம் “ஒரு பேச்சுக்கு” சொல்வதுதான்.

  101. ஒரு டவுட் எனக்கு!

    ஒரு சொடக்கு போட்டால் ஒரு நொடி!, அது மாதிரி அறுபது போட்டா ஒரு நிமிடம்! இது தான் கால அளவு, உங்களை பொறுத்தவரை உங்களுக்கு கடவுளால் கொடுக்கபட்ட ஒரு நாள் இவைகளாலே கட்டமைக்கபட்டுள்ளது!

    ஒரு சொடக்கிட நமக்கு ஒரு நொடி என்றால் அல்லா சொடக்கிட 1000 நொடிகள் ஆகுமா? அம்புட்டு மெதுவாவா சொடக்கு போடுவாரு?

    நமக்கு ஆயிரம் வருடம் அல்லாவுக்கு மட்டும் எப்படியய்யா, ஒரு வருடம் ஆகும்!?

    அல்லாவுக்கு தனி காலண்டர் இருக்கா? பின் நமக்கு மட்டும் ஏன் இந்த காலண்டர், நாமெல்லாம் கேனப்பயலுகன்னு இதை கொடுத்துட்டாரா?

  102. பிழை இருந்தால் மன்னிக்கவும்
    வால் பையன் அவர்களே நீங்கள் முதலில் ஐன்ஸ்டீன் தியரியை புரிந்து கொள்ளுங்கள் புரிவதற்கு ஒரு எளிய உதாரணம்
    இரண்டு நண்பர்கள்(a , b ) அவர்கள் இருவருக்கும் வயது 5 என்று வைத்து கொள்வோம் ஒரு நண்பர் ஒளியின் வேகத்தில் சூரியனுக்கு சென்று அங்கு ஒரு போட்டோ எடுத்து கொண்டு திரும்பி வருகிறார் என்று வைத்து கொள்வோம் ( சூரியனுக்கு போக முடியுமா என்று கேட்காதிர்கள் உதாரணதிற்கு). அவர் ஒளியின் வேகத்தில் அங்கே சென்றதால் சில வினாடிகளில் திரும்பி வந்த விட முடியும் ஆனால் இங்கு பூமியில் இருக்கும் நண்பர்க்கு பலவருடங்கள் கடந்து இருக்கும். உங்காளால் நம்ப முடியாவிட்டாலும் இது தான் உண்மை . பூமிக்கு வந்த பிறகு அவருக்கு வயது 5 தான். 5 வயதுக்காரர் எந்த உடலமைப்பில் இருப்பாரோ அப்படிதான் அவர் இருப்பார். ஆனால் பூமியில் இருந்த அனைவருக்கும் (பூமியில் இருந்த நண்பருக்கு ) பலவருடங்கள் கடந்து வயது முதிர்ந்து இருப்பார்கள்.
    நம்ப முடியாவிட்டால் இந்த லிங்கை காணவும் http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050207_einstein.ஷ்த்ம்ல்
    இதன் மூலம் காலம் என்பது அனைவருக்கும் சமம் கிடையாது வேகத்தை பொருத்து அது மாறுபடும்( வேகம் மிக அதிகமாக இருக்கும்போது மட்டுமே அதன் மாறுபாட்டை புரிய முடியும்) இப்போது அந்த வசனத்தை படித்து பாருங்கள் புரியும் அப்படியும் புரியவில்லை என்றால் . சுட்டி டிவியில் வேர்ல்ட் அஹோய் என்று ஒரு நிகழ்ச்சி அடிகடி போடுவார்கள் அதில் ஐன்ஸ்டீன் தியரி பற்றி கார்ட்டூன் வடிவத்தில் விளக்குவார்கள் பார்க்கவும் . நன்றி

  103. சாகித்
    நண்பர் சாகித் போட்ட கணக்கு சூப்பர். அத்தோடு இதையும் சேர்த்துக்குங்க. நண்பர் ஃபரீத் சொன்ன அதாவது இன்றைய‌ இறையியல் விஞ்ஞானி பி.ஜெ.கணக்குப்படி பார்த்தால் ஒளியின் வேகத்தில் முகம்மது மிஃராஜ் என்ற விண் பயணம் சென்றதாக ஒரு கதையிருக்கிறதே,அதில் அவர் திரும்பி வந்ததும் அவருடைய மனைவி மக்கள் யாவரும் வயது முதிர்ந்தோ அல்லது மரணித்தோ இருக்க வேண்டும், மற்றும் முகம்மது மட்டும் அதே வயதில் இருந்ததைக்கண்டு தன் மனைவிமக்கள்,பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கவேண்டும். அப்படி ஏதாவது சங்கதி ஹதீசில் உண்டா?????.

  104. உலகம் படைக்கப் பட்டது ஆறு காலங்க‌ளில்(குரான் 7:54)
    “7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில்()yaum) வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்…”
    அதாவது உலகம் ஆறு நாட்களில் படக்கப் பட்டது என்று கிறித்தவர்கள் கூறுவதை இவர் குரானில் சொல்லப்பட்டது ஆறு காலங்கள் என்று கூறுகிறார்.மேலும் ஒரு காலம் என்பது சில குரான் வசன‌ங்களில் வரையறுக்கப் படுகிறது.
    குரான் 32:5 காலம் என்பதை 1000 வருடங்கள் என்று கூறுகிறது.(1)
    32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள்(yaum) (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
    குரான் 70:4 காலம் என்பதை 50,000 வருடங்கள் என்று கூறுகிறது.(2)
    70:4. ஒரு நாள் (yaum)மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்
    * * *
    இப்பதிவை படிக்கும் நீங்கள் என்ன மேற்கூறிய இரண்டு வசனங்களும் முரண்படுகிறதே என்று யோசிக்க கூடாது. யோசித்தால் அறிவியல் தெரியாதுஅரபி வார்த்தையான யாம்(yaum) என்பது நாள் மற்றும் காலத்தை குறிக்கும். காலம் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளமலாம்,1000 ,50,000 அல்லது 1 பில்லியம் ஆண்டுகள்.
    பெரு வெடிப்பு கருத்தாக்கத்தின் படி பிர பஞ்சம் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. சூரியக் குடும்பம் 8 பில்லியன்,பூமி 4.6 பில்லியன் ஆண்டுகள். ஒரு செல் உயிர்கள் தோன்றியது 3.8 பில்லியன் ஆண்டுகள்,பரிணாம வளர்ச்சி அடந்த மனிதன்(ஹோமோ சேபியன்) தோன்றியது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.
    ஆகவே நாட்கள் என்பது பொருந்தாது ஆகையால் ஆறு காலங்கள் என்று பொருள் கொண்டு ஒவ்வொரு காலத்தையும் எவ்வளவு வேஎண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வைத்தால் அறிவிய‌ல் கூறும் அளவிற்கு பக்கத்தில் கொண்டு வந்து விடலாம் அல்லவா?

  105. நண்பர் கார்பன் கூட்டாளி என்பவர் தம்முடைய தளத்தில் இந்த இடுகைக்கான மறுப்பை எழுதியுள்ளார். வேறொரு நண்பர் அந்த சுட்டியை எனக்கு அனுப்பி படித்துப் பார்க்கக் கூறியிருந்தார். அதனை விளக்கவே இந்த பின்னூட்டம்.

    காலவெளியில் சிக்கிக் கொண்ட அல்லா எனும் இந்த இடுகையின் சாரம் என்னவென்றால், குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி எப்போது நிகழும் எனும் கேள்விக்கு பதிலாக பூமியில் ஒரு நாளின் அளவை விட அயிரம் மடங்கு ஐம்பதாயிரம் மடங்கு அல்லாவின் காலம் அதிகம் எனவே அவசரப்படாதே என்று கூறப்படுகிறது. இந்த வசனங்களில் ஆயிரம், ஐம்பதாயிரம் என வித்தியாசமான இரண்டு காலங்கள் குறிப்பிடப்படுவது 14 நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த ஒருவர், மனிதனின் காலத்திற்கும் அல்லாவின் காலத்திற்குமான வித்தியாசத்தைச் சுட்டுவதற்காக பயன்படுத்திய உயர்வு நவிற்சிதான் என்பது என்னுடைய நிலைபாடு. இல்லை அது அறிவியல் முன்னறிவிப்புதான். சார்பியல் கோட்பாடுதான் அந்த வசனங்களில் சுட்டப்படுகிறது என்பது மதவாதிகளின் நிலைப்பாடு. நண்பர் கார்பன் கூட்டாளியும் இதையே அறிவியல் கலைச் சொற்களின், சமன்பாடுகளின் துணையுடன் நிருவ முயல்கிறார்.

    முதலில், அந்த வசனங்கள் என்ன பொருளில் கூறப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி எப்போது நடக்கும்? அவசரப்படாதே தாமதமாகும். இதற்கு மாறான ஒரு பொருள் அந்த வசனங்களுக்கு இருந்திருந்தால், இதனைத்தொடர்ந்து வேறு கேள்விகளும் அதற்கான பதில்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் குரானிலோ, ஹதீஸ்களிலோ பதிவு செய்யப்படவில்லை. அதாவது, விரைந்து வரும் என்பது அதற்கான பதிலாக இருந்திருந்தால் ஒரு எல்லை நிர்ணயிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முகம்மதுவுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் ஏற்படவில்லை. மட்டுமல்லாது அது அல்லாவுக்கு மட்டுமே தெரியும் என்று பட இடங்களில் குரான் குறிப்பிடுகிறது. ஆனால் இது போன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் “என்னுடைய வாழ்வும் மறுமையும் இப்படி இருக்கிறது” என்று தன் கையின் இரண்டு விரல்களை முகம்மது காட்டியதாக ஹதீஸ்களும் இருக்கிறது. இரண்டு விரல்களைப் போல் நெருக்கமாக மறுமை இருக்கிறது என்று முகம்மது சுட்டிக்காட்டி 14 நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அந்த மறுமை வந்துவிடவில்லை. இவைகளையெல்லாம் அவதானிக்காமல் குறிப்பிட்ட அந்த வசங்களுக்கு பொருள் கொள்ள முடியாது.

    ஆனால் தற்போது, ஆயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பதை எடுத்துக் கொண்டு பொருட்களின் விரைவை ஒப்புநோக்கினால் சார்பியல் கோட்பாட்டுக்கு பொருத்தமாக வருகிறது எனவே அந்தவசனங்கள் சார்பியல் கோட்பாட்டைத்தான் முன்னறிவிக்கின்றன என்கிறார்கள். இதை மூன்று விதங்களில் மறுக்கலாம்.

    ஒன்று, ஒரு வாதத்திற்காக அந்த வசனங்கள் சார்பியல் கோட்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன என்றால் அந்த வசனத்தின் பொருள் என்ன? குறிப்பிட்ட அந்த முன்று வசனங்களிலும் ஒரு ஒப்பீட்டு முறை கையாளப்பட்டிருக்கிறது. உங்களின் காலம் அதாவது மனிதர்களின் காலம், உங்கள் இறைவனின் காலம் அதாவது அல்லாவின் காலம். மனிதர்களின் ஒரு நாள் என்பது ஆண்டவனிடம் பல ஆண்டுகளின் அளவை ஒத்தது என்பதை சார்பியலின்படி பார்த்தால் அந்தக் கேள்விக்கு பதிலாகுமா? எப்போது எனும் கேள்விக்கு இப்போது அல்லது பின் எப்போதாவது என்று தான் பதில் கூறப்பட்டிருக்க முடியும். இஸ்லாமிய இறையியலின் படி இப்போது என்று யாராலும் கூறமுடியாது பின்னர் ஒரு காலம் என்பது தான் அந்தக் கேள்விக்கு பதில். இது மெய்யானால், அந்த வசனங்களின் சார்பியல் பொருத்தப்பாடு குரான் கூறும் பொருளில் இல்லை என்பது உறுதியாகிறது. குரான் கூறும் பொருள் வேறு அது இப்போது கூறும் சார்பியல் வேறு என்பதை நண்பர் கார்பன் கூட்டாளி உள்ளிட்டு அது அறிவியல் முன்னறிவிப்பு என்று கூறுபவர்கள் ஒப்புவார்களா?

    இரண்டு, அந்த வசனங்கள் காலத்தை குறிப்பிடுவனவே அன்றி, விரைவைக் குறிப்பிடுவன அல்ல. இதை குறிப்பிட்ட அந்த வசனங்களின் அடுத்துள்ள வசனங்கள் (குரான் 22:48, 70:5,6,7) மிகத் தெளிவாகவே உறுதி செய்கின்றன. எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன். அதேபோல் உங்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறேன். காலம் வரும்வரை பொருத்திருங்கள் என்றும்; அழகிய பொறுமையுடன் பொருப்பீராக, அவர்கள் தூரமாக காண்கிறார்கள் நாம் அருகில் காண்கிறோம் என்பதும் வெகு நிச்சயமாக காலத்தை குறிப்பிடுகிறதேயன்றி விரைவையல்ல. மெய்யாகவே முக்காலமும் அல்லாவுக்கு தெரியும் என்றால், சார்பியல் பொருத்தப் பாடுகளுடன் குறிப்பிட்ட அந்த வசனங்களை அமைத்திருந்தால், அதற்கு அடுத்த வசனங்களிலேயே காலத்தை மட்டும் பிரித்துக் காட்டும் வசனங்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா? நண்பர் கார்பன் கூட்டாளி உள்ளிட்டு அதை அறிவியல் முன்னறிவிப்பு என்று கூறுபவர்கள் இதை ஒப்புவார்களா?

    மூன்று, நண்பர் பூமியை அடிப்படையாகக் கொண்டே இரண்டு காலங்களையும் சார்பியலுக்குள் கொண்டுவருகிறார். இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால், பூமியை அடிப்படையாகக் கொண்டு பயணத்திற்கு ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் ஒரு தூரத்தில் உள்ள ஒரு கோளில் இறைவன் இருக்கிறான் என்பதாக கணக்கிட்டுக் கூறினால் கார்பன் கூட்டாளி உட்பட குரானில் அறிவியல் முன்னறிவிப்புகளைக் கண்டுபிடிப்பவர்கள் ஒப்புவார்களா?

    என்னதான் இருந்தாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவருக்கு ஆயிரம் ஐம்பதாயிரம் என்று எப்படி துல்லியமாக கூறமுடிந்தது? இப்படி வியப்பது இஸ்லாமியர்களின் கடைசிக் கட்ட வாதமாக இருக்கும். இதை அவர் தோராயமாகத்தான் கூறியிருப்பார். அல்லா பெரியவன் எனும் பதத்தின் வியக்கவைப்பதற்கான மிகை ஒப்பீடு என்பதைத்தாண்டி இதில் வேறொன்றுமில்லை. முற்றும் உணர்ந்த அல்லா கொடுத்தது என்பதால்தான் இப்படி துல்லியமாக கூறமுடிந்தது என்றால் அதே அல்லா தேனீ பழங்களை உண்ணுமா என்பது கூட தெரியாமல் இருந்திருக்கிறார் என்றும் நூறு விழுக்காட்டுக்கு அதிகமாக பாகம் பிரிக்கச் சொல்லும் விசயத்தில் கணக்கு தெரியாமலும் இருந்திருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியது வரும்.

    குரானில் அறிவியல் இருப்பதாகக் கூறப்படும் வசனங்கள் அறிவியலின் சுவடுகளின்றி வெகு சாதாரணமானவை என்பது வாசிப்பவர்களுக்குத் தெரியும். மதப்பிரச்சாரகர்களுக்கு மட்டுமே அதிலிருந்து அறிவியலை வடித்தெடுக்கும் வித்தை வாய்த்திருக்கிறது. இப்படி சொற்களுக்கு இடையில் அறிவியலைத் தேடுவதற்கு இரண்டு காரணங்களுக்காக. இது அறிவியலால் வழக்கொழிக்கப்படாத மதம் என நிருவுவது. எப்படி புரிந்து கொண்டால் இதற்கு முரண்பாடில்லாமல் விளக்கமளிக்கலாம் என ஆய்வது. மற்றப்படி அறிவியலும் மதமும் ஒன்றுக்கொன்று முரணானது. நியூட்டனின் இயக்க விதிகள் அறிவியலுலகில் பாரிய செல்வாக்கு செலுத்துபவை என்றாலும் கோள்களின் இயக்கத்திற்கு ஈர்ப்புவிசை என்பதைவிட ஐன்ஸ்டீனின் கோள்களின் நிறையால் வெளி வளைகிறது என்பது புரட்சிகரமான கருத்து. நாளை ஐன்ஸ்டீனின் சார்பியலைவிட சிறந்ததாக வேறொரு கோட்பாடு வரும்போது இந்த வசனங்களுக்கு எப்படி விளக்கம் கொடுப்பது என்பதை இவர்கள் இப்போதே சிந்தித்து வைத்துக் கொள்வது நலம்பயக்கும்.

  106. சகோ. செங்கொடி.

    // காலவெளியில் சிக்கிக் கொண்ட அல்லா எனும் இந்த இடுகையின் சாரம் என்னவென்றால், குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி எப்போது நிகழும் எனும் கேள்விக்கு பதிலாக பூமியில் ஒரு நாளின் அளவை விட அயிரம் மடங்கு ஐம்பதாயிரம் மடங்கு அல்லாவின் காலம் அதிகம் எனவே அவசரப்படாதே என்று கூறப்படுகிறது. இந்த வசனங்களில் ஆயிரம், ஐம்பதாயிரம் என வித்தியாசமான இரண்டு காலங்கள் குறிப்பிடப்படுவது 14 நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த ஒருவர், மனிதனின் காலத்திற்கும் அல்லாவின் காலத்திற்குமான வித்தியாசத்தைச் சுட்டுவதற்காக பயன்படுத்திய உயர்வு நவிற்சிதான் என்பது என்னுடைய நிலைபாடு. //

    இந்த பதிலை எழுதி வைத்துவிட்டுத்தான் என்னுடைய பதிவை படித்தீர்கள் போலும். உங்களுடைய இந்த கேள்விக்கே நம்முடைய பதிலை தந்துள்ளோம். சரி விளக்கமாக பாப்போம்.

    முதலில் அதிகபடுத்தி கூற வேண்டுமெனில், எவ்வாறு மூன்று வசனங்களில் அதுவும் பிரயாணத்தை பற்றிய வசனங்களில் கூற முடியும்.

    இந்த வசனங்கள் மறைமுகமாக ஒன்றும் கூறவில்லை, நேரான பொருளிலேயே உள்ளது.

    // நண்பர் கார்பன் கூட்டாளியும் இதையே அறிவியல் கலைச் சொற்களின், சமன்பாடுகளின் துணையுடன் நிருவ முயல்கிறார்.//
    சாதரணமாக இஸ்லாம் சார்பியல் கொள்கையை அறிவிக்கிறது என்று கூற அதை மறுத்தீர்கள் தற்போது சமன்பாடுகள் வைத்து கூறி ஆகிவிட்டது. சமன்பாடுகள் தவறு என்று நிரூபிக்க முடியுமா?

    // முதலில், அந்த வசனங்கள் என்ன பொருளில் கூறப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பிடப்படும் ஒரு நிகழ்ச்சி எப்போது நடக்கும்? அவசரப்படாதே தாமதமாகும். இதற்கு மாறான ஒரு பொருள் அந்த வசனங்களுக்கு இருந்திருந்தால், இதனைத்தொடர்ந்து வேறு கேள்விகளும் அதற்கான பதில்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் குரானிலோ, ஹதீஸ்களிலோ பதிவு செய்யப்படவில்லை.//

    நாம் குறிப்பிடும் வசனத்திற்கு பிந்திய வசனத்தில் அநீதி இளைத்தர்களுக்கு கொடுத்த அவகாசத்தை பற்றியே கொடுக்க பட்டுள்ளது. அதனால் முந்தைய வசனம் எந்த வகையிலும் பாதிக்காது.

    //அதாவது, விரைந்து வரும் என்பது அதற்கான பதிலாக இருந்திருந்தால் ஒரு எல்லை நிர்ணயிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முகம்மதுவுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் ஏற்படவில்லை. மட்டுமல்லாது அது அல்லாவுக்கு மட்டுமே தெரியும் என்று பட இடங்களில் குரான் குறிப்பிடுகிறது.//

    தண்டனை விரைந்து வரும் தாமதமாகும் என்று அந்த வசனம் குறிப்பிடவே இல்லை.

    //ஆனால் இது போன்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் “என்னுடைய வாழ்வும் மறுமையும் இப்படி இருக்கிறது” என்று தன் கையின் இரண்டு விரல்களை முகம்மது காட்டியதாக ஹதீஸ்களும் இருக்கிறது. இரண்டு விரல்களைப் போல் நெருக்கமாக மறுமை இருக்கிறது என்று முகம்மது சுட்டிக்காட்டி 14 நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அந்த மறுமை வந்துவிடவில்லை. இவைகளையெல்லாம் அவதானிக்காமல் குறிப்பிட்ட அந்த வசங்களுக்கு பொருள் கொள்ள முடியாது.//

    ஹாஹா தங்களே இஸ்லாத்தை உறுதிபடுத்துவதில் உதவியாக இருப்பது சந்தோசமாக இருக்கிறது. லட்சகணக்கான வருடங்கள் பூமி உருவாகி மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்கிறபோது 14 நூற்றாண்டுகள் என்பது இரண்டு விரல்கள் போல நெருக்கமாக இருக்கிறது என்று கூறுவது சரியான கூற்றகத்தான் இருக்கிறது. 35 நூற்றாண்டுகள் சென்றாலும் உலக ஆதி மனித இனத்துடன் ஒப்பிட்டு பார்கையில் சரியாக தான் இருக்கும்.

    நம்முடைய பதிவின் கருவிற்கு சம்பந்தமில்லாத நீங்கள் குறிப்பிட்ட நபி மொழியை வைத்து உலக தோற்றத்தையே கணிக்கலாம். (நன்றி அடுத்த பதிவிற்கு க்ளு கொடுத்ததற்கு)

    // ஒன்று, ஒரு வாதத்திற்காக அந்த வசனங்கள் சார்பியல் கோட்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன என்றால் அந்த வசனத்தின் பொருள் என்ன? குறிப்பிட்ட அந்த முன்று வசனங்களிலும் ஒரு ஒப்பீட்டு முறை கையாளப்பட்டிருக்கிறது. உங்களின் காலம் அதாவது மனிதர்களின் காலம், உங்கள் இறைவனின் காலம் அதாவது அல்லாவின் காலம். மனிதர்களின் ஒரு நாள் என்பது ஆண்டவனிடம் பல ஆண்டுகளின் அளவை ஒத்தது என்பதை சார்பியலின்படி பார்த்தால் அந்தக் கேள்விக்கு பதிலாகுமா? எப்போது எனும் கேள்விக்கு இப்போது அல்லது பின் எப்போதாவது என்று தான் பதில் கூறப்பட்டிருக்க முடியும். இஸ்லாமிய இறையியலின் படி இப்போது என்று யாராலும் கூறமுடியாது பின்னர் ஒரு காலம் என்பது தான் அந்தக் கேள்விக்கு பதில். இது மெய்யானால், அந்த வசனங்களின் சார்பியல் பொருத்தப்பாடு குரான் கூறும் பொருளில் இல்லை என்பது உறுதியாகிறது. குரான் கூறும் பொருள் வேறு அது இப்போது கூறும் சார்பியல் வேறு என்பதை நண்பர் கார்பன் கூட்டாளி உள்ளிட்டு அது அறிவியல் முன்னறிவிப்பு என்று கூறுபவர்கள் ஒப்புவார்களா? //

    நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இப்போது அப்போது என்றெல்லாம் இல்லை, பொதுவாகவே அந்த வசனம் கூறுகிறது, அந்த கூற்றில் உள்ள அந்த ஆயிரம் ஐம்பதாயிரம் என்ற ஒப்பீட்டை மனிதர்கள் அறியாமல் இருந்துள்ளனர். சகோ. பின்னர் ஒரு காலம் என்றெல்லாம் தேவை இல்லாமல் குழப்பி கொள்ளாதீர்கள். 100 % சார்பியலையே குறிப்பிடுகிறது என்பதை சார்பியலை சரியாக புரிந்தவர்களிடம் சென்று ஆய்வு செய்து கொள்ளுங்கள்.

    // இரண்டு, அந்த வசனங்கள் காலத்தை குறிப்பிடுவனவே அன்றி, விரைவைக் குறிப்பிடுவன அல்ல. இதை குறிப்பிட்ட அந்த வசனங்களின் அடுத்துள்ள வசனங்கள் (குரான் 22:48, 70:5,6,7) மிகத் தெளிவாகவே உறுதி செய்கின்றன. எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன். அதேபோல் உங்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறேன். காலம் வரும்வரை பொருத்திருங்கள் என்றும்; அழகிய பொறுமையுடன் பொருப்பீராக, அவர்கள் தூரமாக காண்கிறார்கள் நாம் அருகில் காண்கிறோம் என்பதும் வெகு நிச்சயமாக காலத்தை குறிப்பிடுகிறதேயன்றி விரைவையல்ல. மெய்யாகவே முக்காலமும் அல்லாவுக்கு தெரியும் என்றால், சார்பியல் பொருத்தப் பாடுகளுடன் குறிப்பிட்ட அந்த வசனங்களை அமைத்திருந்தால், அதற்கு அடுத்த வசனங்களிலேயே காலத்தை மட்டும் பிரித்துக் காட்டும் வசனங்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா? நண்பர் கார்பன் கூட்டாளி உள்ளிட்டு அதை அறிவியல் முன்னறிவிப்பு என்று கூறுபவர்கள் இதை ஒப்புவார்களா?//

    இதை தான் பதிவு முழுவதும் சொல்லி இருக்கிறேன் சகோ. வேகத்தை தெரிந்தாலே கால மாறுதல்களை தெரிந்து கொள்ளலாம். கால மாறுதல்கள் தெரிந்தால் வேகத்தை தெரிந்து கொள்ளலாம்.
    இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள், கால மாறுதல்கள் என்றாலே இரண்டு நேரங்களில் மட்டுமே ஏற்படும், ஒன்று நீங்கள் பயணிக்க வேண்டும். மற்றொன்று அதிக அதிகபடியான ஈர்ப்பு விசையில் நீங்கள் சிக்கி இருக்க வேண்டும். இதை தான் சார்பியல் கூறுகிறது. நாம் குறிப்பிட்ட வசனங்கள் எதை பற்றி பேசுகின்றன பயணத்தை பற்றி அப்படியெனில் அந்த கால மாறுதல்களால் அங்கு பயணமே நடந்திருக்க வேண்டும்.

    மேலும் அதற்கு அடுத்த வசனத்தை பற்றி ஏற்கனவே நாம் குறிப்பிட்டு விட்டோம். அது முன்னொரு காலத்தில் அநீதி இளைத்து கொண்டிருந்தவர்களுக்கு கொடுத்த அவகாசத்தை பற்றி குறிப்பிடுகிறது. தொடர்புடைய முதல் வசனம் வேறு செய்தி அடுத்த வசனம் வேறு செய்தி. புரியும் என நினைகிறேன்.

    // மூன்று, நண்பர் பூமியை அடிப்படையாகக் கொண்டே இரண்டு காலங்களையும் சார்பியலுக்குள் கொண்டுவருகிறார். இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால், பூமியை அடிப்படையாகக் கொண்டு பயணத்திற்கு ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் ஒரு தூரத்தில் உள்ள ஒரு கோளில் இறைவன் இருக்கிறான் என்பதாக கணக்கிட்டுக் கூறினால் கார்பன் கூட்டாளி உட்பட குரானில் அறிவியல் முன்னறிவிப்புகளைக் கண்டுபிடிப்பவர்கள் ஒப்புவார்களா?//

    சார்பியலை நன்றாக படித்துவிட்டு வந்திருந்தாள் எனக்கு விளக்கம் கொடுக்கும் நேரம் மிச்சம் ஆயிருக்கும். ஒரு நாள் ஆயிரம் வருடம் என்பது ஒரு அளவுகோல், பிரயாணத்தில் ஒரு நாளில் இறைவனை அடைந்து விடலாம் என்று எங்காவது கூறி இருக்கிறதா. பிறகு எப்படி நீங்களே ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இறைவன் இருக்கிறான் என்று கூறுவீர்கள்.

    அதற்கு அடுத்த தாங்கள் குறிப்பிட்டவைகள் அனைத்தும் உங்களுடைய எண்ணங்கள் பதிவிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள்.

    // நாளை ஐன்ஸ்டீனின் சார்பியலைவிட சிறந்ததாக வேறொரு கோட்பாடு வரும்போது இந்த வசனங்களுக்கு எப்படி விளக்கம் கொடுப்பது என்பதை இவர்கள் இப்போதே சிந்தித்து வைத்துக் கொள்வது நலம்பயக்கும்.//

    கொடுத்த விளக்கத்தை முடிந்தால் பொய் என நிரூபியுங்கள்.

  107. நண்பர் கார்பன் கூட்டாளி,

    என்னுடைய பதிவின் உள்ளீடு குறிப்பிட்ட அந்த வசனங்கள் சார்பியலை பேசவில்லை என்பது தான். ஆயிரம், ஐம்பதாயிரம் எனும் எண்ணிக்கைகள் சார்பியல் கூறுகளுக்கு நெருக்கமாய் இருக்கின்றன என்பதைத்தவிர வெறு எந்த தொடர்பும் அதில் இல்லை. மாறாக சார்பியலின்படி பார்த்தால், அந்த வசனங்கள் எதற்காக கூறப்பட்டனவோ அதற்கு மாறான பொருளைத் தருகின்றன.

    \\ தண்டனை விரைந்து வரும் தாமதமாகும் என்று அந்த வசனம் குறிப்பிடவே இல்லை// வேறு அந்த வசனங்கள் என்ன தான் கூறுகின்றன? குறிப்பிடப்படும் அந்த வசனங்கள் ஒரே கேள்விக்கு பதிலாக கூறப்பட்டவைகள் தான். கேள்வி: நியாயத் தீர்ப்பு நாள் எப்போது வரும்? இதற்கான பதில் தான் அந்த வசனங்கள். அவற்றின் உள்ளீடு சார்பியல் தான் என்றால், அந்தக் கேள்விகளுக்கான பதில் என்னாவது?

    \\ சமன்பாடுகள் தவறு என்று நிரூபிக்க முடியுமா? // தேவையில்லை, அது என் நோக்கமும் இல்லை. அந்த வசனங்கள் அறிவியலைப் பேசவில்லை என்பது தான் என் வாதம். அந்த வசனங்களுக்குள் சம்மட்டியால் அடித்து அறிவியலை இறக்குவதற்குப் பதிலாக, அந்த வசனங்கள் எப்படி அறிவியலைப் பேசுகின்றன என விளக்கலாம். கவனிக்கவும், அறிவியல் விளக்கமல்ல, அந்த வசனங்கள் எப்படி அறிவியலைப் பேசுவதாக இருக்கின்றன என்பதற்கான விளக்கம்.

    \\ அந்த கூற்றில் உள்ள அந்த ஆயிரம் ஐம்பதாயிரம் என்ற ஒப்பீட்டை மனிதர்கள் அறியாமல் இருந்துள்ளனர்// அதாவது நீங்கள் அறிந்து கொள்வதற்காக எளிமையாக இதை ஆக்கிவைத்திருக்கிறோம் எனும் அல்லாவின் வாக்குமூலத்தை பொய்ப்பிக்கும் விதமாக மனிதர்கள் அறியாமல் விட்டுவிட்டார்கள். அப்படியா?

    \\ கொடுத்த விளக்கத்தை முடிந்தால் பொய் என நிரூபியுங்கள்// நீங்கள் அறிவியலை அல்லவா எழுதியிருக்கிறீகள். அதை எப்படி பொய் என்று நிரூபிப்பது. ஆனால் நீங்கள் கூறும் அறிவியல் அந்த வசனத்தில் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்.

    ஒருநாள் மலக்குகள் அவனிடம் ஏறிச் செல்வார்கள் அதின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள். இதுதான் வசனம். இது சார்பியலுக்கு நெருக்கமாக இருக்கிறதா? அல்லாவின் அட்ரஸ் கண்டு பிடிப்பதற்கு உதவியாக இருக்கிறதா?

    நண்பரே, வாய்ப்புள்ள வசனங்களுக்கு அறிவியல் வண்ணம் பூசுவது தான் உங்களைப் போன்றோரின் வேலை. நான் எடுத்துக் கொடுக்கவில்லை என்பதற்காக விட்டுவிடப் போகிறீர்களா? ஆனால் அதன் உள்ளீடு? என்னுடைய வாழ்வும் மறுமையும் என்பதை மனித வாழ்வும் மறுமையும் என்று எடுத்துக் கொண்டு அவசரப்பட்டு அறிவியல் பெயிண்ட் அடிப்பதற்கு முன்னால் தூசுகளை தட்டிவிட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் கூறப்போவதற்கு எதிரான ஹதீஸ்களும் இருக்கின்றன. அவற்றின் அறிவிப்பாளர் விரிசையில் பிழையிருப்பதாக முதலிலேயே தட்டிவிடாமல் விட்டுவிட்டால், பெயிண்ட் அடித்தபின்னர் கரையாகத் தெரியும். கவனித்துக் கொள்ளுங்கள்.

  108. குரான் வசனத்துக்கு இணையாக ஒரு திருக்குறளை சொல்லி இருந்தீர். உங்கள் கருத்துப்படி திருக்குறள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது குரான் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது என்று எந்த அடிப்படையில் சொல்லுகிறீர் . சரி . சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள தமிழ் எழுத்துக்கள் படிக்க முடியாத வாசிக்க முடியாத படி தான் கல்வெட்டுகளில் உள்ளதற்கு நீங்கள் அடிக்கடி கூறும் தொல்லியல் ஆராய்ச்சியே சாட்சி. அப்படி இருக்க இந்த அளவிற்கு அழகு தமிழிலில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவருக்கு யார் கற்று கொடுத்தார் என்று சொல்லமுடியுமா? அல்லது திருவள்ளுவர் என்ற ஒரு நபர் இருந்ததற்கு ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா.? முயற்சி செய்து பாருங்கள்..

    ஆண்டவன் ஒருவன் இருக்கிறான் என்று நாங்கள் நம்பி வாழ்கிறோம். மறுமை ஒன்று உள்ளது என்று நம்புகிறோம். ஒரு வேளை நாங்கள் இறந்த பிறகு ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டால் நாங்கள் செய்த அனைத்தும் ஒன்றும் நஷ்டமாகி விடாது.. இறைவன் இருந்து விட்டால் தான் பிரச்னை. நாங்களாவது நாங்கள் செய்த பாவத்திற்காக சிறிது காலம் நரகத்தில் தங்கிவிட்டு சொர்கத்திற்கு செல்ல இறைவன் கிருபை செய்வான். காரணம் பெரும் பாவமாகிய இனைவைப்பதையோ அல்லது நிராகரிபதையோ நாங்கள் செய்யவில்லை . ஆனால் உங்களின் நிலை? சற்று யோசித்து பாருங்கள்.. செங்கொடி அங்கே கருங்கொடி ஆகி இருக்கும்.
    உங்கள் கருத்துக்களை படிக்கும் போது நீங்கள் ஈமான்னோடு குரானை படித்து இருந்தால் நிச்சயம் நீங்கள் முஸ்லிமாகி இருப்பீர்கள் . காரணம் உங்கள் அளவிற்கு நாங்கள் படித்திருக்க வாய்ப்பிலை. நீங்கள் செய்த தவறு இது ஒன்று தான்.
    எங்கள் இறைவனுக்காக நாங்கள் இதுவரை எதுவும் செய்தது இல்லை. அவனுக்கு எதுவும் தேவையும் இல்லை . இந்த உலகத்தில் மனித சமுதாயம் ஒழுக்கமுடையதாக நடந்துக்கொள்ள அவன் தன்னை தானே கட்டுபபடுதிக்கொள்ள , மன இச்சைகளில் இருந்து விடுபட தான் இறைவனுக்கு நன்றி (தொழுகை) செலுத்துகிறோம். இறையச்சம் இல்லாவிட்டால் நிச்சயம் நாடு தாங்காது. உங்களை போல் சிலர் அதிமேதாவிகள் யாராவது ஒழுக்கமாக நடந்துகொள்ளலாம் .

    ஒன்று மட்டும் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மட்டுமல்ல. உங்களை போன்ற எத்தனை அதிமேதாவி வந்தாலும். இஸ்லாம் வளர்ச்சியை தடுக்க முடியாது. முயற்சித்து பாருங்கள். கடைசியில் தோல்வி அடைத்து நீங்களோ அல்லது உங்கள் வாரிசோ இஸ்லாத்திற்கு வருவீர்கள்.
    இந்த உலகத்தில் எல்லாமே ஒரு நம்பிக்கை தான் தோழரே. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி அடைவதற்கு முன் உள்ளதை எல்லாம் எப்படி நம்பிவந்தீர்கள்.
    உதாரணமாக உங்களை உங்கள் தாய், உங்கள் அப்பாவிற்கு தான் பெற்று இருப்பார் என்பதை எப்படி அறிந்து கொண்டீர் . உங்கள் அம்மா சொன்னதால் தானே. அதை உங்கள் அப்பா ஒத்துகொண்டதால் தானே. சந்தேகம் இருந்தால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மூலகூற்றை கொண்டு சொல்லிவிடலாம். அன்றைய நிலை நம்பிக்கை தானே.
    அதுபோலதான் 100 வருடங்களுக்கு முன்னால் வயர் இல்லாமல் டெலிபோன் பேசலாம் , மைக்கில் பேசலாம் என்று யாராவது சொன்னால் நம்புவிர்களா? இன்றைய காலகட்டத்தில் கண்முன்னால் பேசுவதால் நம்புவிர்கள். ஆக நம்பிகை தான் வாழ்க்கை தோழரே . – Mubarack rasvi

  109. வணக்கம்

    கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், …. இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    tamildotvallalyaardotcom/?page_id=80

    blogs

    sagakalvidotblogspotdotcom
    kanmanimaalaidotblogspotdotin

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s