இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி - 2 ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௫ நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை … நிலவை உடைத்து ஒட்டிய அல்லா-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் … அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

நண்பர்களே, தோழர்களே, தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய "ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்" எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் "இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்" எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது. முத‌லாளித்துவத்தை ஆராதிப்பவர்கள், நடப்புலக வாழ்வின் போக்கிலேயே அதன் சொகுசுகளை அனுபவித்துச் செல்வதுதான் வாழ்க்கை என்பவர்கள், மதவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?

கடந்த சில மாதங்களாக 'காஷ்மீரில் வன்முறை' 'வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழப்பு' என்று செய்தி ஊடகங்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. இராணுவத்தை எதிர்த்து காஷ்மீரிகள் கல்லெறியும் காணொளிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு அதை பயங்கரவாதச் செயல் போல் சித்தரிக்கின்றன. யார் வன்முறையாளர்கள்? யார் எதிர்கொள்பவர்கள்? என்பதற்கு தேசியம் எனும் சொல்லே அளவுகோலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காஷ்மீரில் எறியப்படும் கற்கள் இவர்களின் தேசியக் கேடயத்தையும் துளைத்துக்கொண்டு செல்லும் வீரியத்தை நாளுக்கு நாள் பெற்றுவருகிறது. காஷ்மீர் விவகரத்தில் மூன்றாவது நாட்டின் … காஷ்மீரில் கல்லெறிந்தால் தில்லியில் விழுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: யாரை எதிர்த்து யார்?

நாடு மறுகாலனியாக்கத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இதை நேரடியாக மறுக்கும் முதலாளித்துவவாதிகளைத் தவிர ஏனைய அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். மறுகாலனியாக்கம் எனும் சொல்லில் பேதம் கொண்டிருப்போரும் அதன் உள்ளார்ந்த சாரத்தில் பேதமேதும் கொண்டிருக்க மாட்டார்கள். நாட்டின் அனைத்துத் துறைகளும் தனியார்மயப் படுத்தப்பட்டிருக்கின்றன, படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் அனைத்துத் தரப்பு மக்களின் முதுகுகளிலும் அடையாளமாய் பதிந்திருக்கிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டச் செய்திகள் என்றாலே கசந்து காததூரம் போகும் செய்தி ஊடகங்களிலும் தவிர்க்கவே முடியாமல் தினசரி ஏதேனும் போராட்டச் செய்திகள் … தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: யாரை எதிர்த்து யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாசேதுங்குடன் சில செவ்விகள்

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௫ நூலின் இடஒதுக்கீடு வரையறை காரணமாக 1936 ஆம் ஆண்டில் மாசேதுங்குடனான் எனது செவ்வியின் மூலப்பிரதிகள் "சீனாவின் மீது செந்தாரகை"யில் முழுமையாக இடம்பெறவில்லை. கீழே இடம்பெறும் பகுதிகள் தற்போதைய காலகட்டத்தில் கருத்தைக் கவர்வனவாக அமையலாம். பாவ் அன் 1936 ஜூலை 23 கம்யூனிஸ்ட் அகிலம், சீனா, வெளி மங்கோலியா பற்றி ஸ்னோ: நடைமுறைச் சாத்தியத்தில் சீனப்புரட்சி வெற்றிபெரும் பட்சத்தில், சோவியத் சீனாவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார அரசியல் நட்புணர்வு மூன்றாவது … மாசேதுங்குடன் சில செவ்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆரியவதியும் சில ஆணிகளும்

நடப்பு வாரத்தில் மிகவும் அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வாக ஆரியவதி உலகெங்கும் பேசப்பட்டாள். சௌதியில் பணிபுரியச் செல்லும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளும், கொடூரங்களும் மனித உரிமை மீறல்களாக உலக அரங்கில் தொடர்ந்து எழுப்பபட்டே வந்திருக்கிறது. அடித்தல் உதைத்தல் காம இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவைகளிடையே உடலில் ஆணியை அடித்து ஏற்றுதல் என்பது மக்களிடையே ஒரு கொந்தளிப்பான மனோநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடுதல் போன்ற சின்னச்சின்ன தவறுகளுக்கான தண்டனையாக ஆணிகள் உடலில் ஏற்றப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது … ஆரியவதியும் சில ஆணிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.