இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

நண்பர்களே, தோழர்களே,
தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.
முத‌லாளித்துவத்தை ஆராதிப்பவர்கள், நடப்புலக வாழ்வின் போக்கிலேயே அதன் சொகுசுகளை அனுபவித்துச் செல்வதுதான் வாழ்க்கை என்பவர்கள், மதவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என அனைவரும் ஸ்டாலின் எனும் புள்ளியிலிருந்துதான் தங்களின் கம்யூனிச வெறுப்பைத் தொடங்குகிறார்கள். அந்த அளவுக்கு தோழர் ஸ்டாலின் குறித்த அவதூறுகள் எல்லா வடிவங்களிலும் நிறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அவதூறுகளை விலக்கி உண்மைகளை கண்டுணர்ந்து கொள்வது கடினமானதாக தோற்றமளித்தாலும், மிகவும் அவசியமானதாகும். இந்த அவதூறுகளை அடித்துத்துவைத்து சுத்தம் செய்வது அந்த அவதூறுகள் வீழ்படிவுகளாக எஞ்சியிருக்கும் வரையில் ஒவ்வொரு தோழருக்கும் கடமையாகும்.
அந்த வகையில் இரயாகரனின் இந்த நூல் தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை மிகத்துல்லியமான முறையில் புள்ளிவிபரங்கள், தரவுகளுடன் ஆதாரபூர்வமாக உடைத்து உண்மையைக் காட்டுகிறது. மட்டுமல்லாது சோவியத் யூனியனின் மீதான புரட்டல்வாதங்களையும் அவை என்ன நோக்கத்திற்காக கட்டியமைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
தோழர்கள் இதை விரிவாக எடுத்துச்செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
தோழமையுடன்
செங்கொடி
*****************************************************************************************
ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

தூற்றுவதலோ, திரிப்பதலோ, திருத்துவதலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை

வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ளமறுப்பது, அதைத்திரிப்பது, மார்க்சியத்தை மறுப்பதில் போய்முடிகின்றது. மனிதகுலம்அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்துநிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும்தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுக்கிறது.

இதற்கு எதிரான போராட்டத்தை மார்க்சியம் நெறிப்படுத்துகின்றது. மார்க்ஸ் “சாரம்சத்தில்விமர்சனக்கண்கொண்டுபார்ப்பவைபுரட்சிகரமானவை” என்றார். இந்தநிலையில் மார்க்சியம் மீதான அவதூறுகள், சேறடிப்புகளை சமுதாயத்தின் மாற்றாககாட்டமுற்படுகின்றனர்.

இப்படி கட்டமைக்கும் அரசியல் தளத்தில்தான் உலகமயமாதல் என்றும் இல்லாத மனித அவலத்தை உலகமயமாக்கிவருகின்றது. இதை எதிர்த்த போராட்டத்தையும், சமுதாயத்தை மாற்றுவது பற்றிய எந்தவிதமான அக்கறையுமற்ற மாற்றையே, சமூகமற்றத்தின் ஒரு போக்காக பூச்சூட்டுகின்றனர். இந்த வகையில் மார்க்சியத்தைதிரித்தல், சேறடித்தல், மறுத்தல், இன்று முற்போக்காக காட்டப்படுகின்றது.

உலகமயமாதலை எதிர்த்து, உலகத்தை மாற்றி அமைக்ககோரும் ஒரேயொரு போராட்ட மார்க்கமான மார்க்சியத்தை எதிர்த்துநிற்கின்றனர். மார்க்சியத்தைகோணல்படுத்தி, தம்மை ஒரு “முற்போக்கு” அணியாககாட்ட முனைகின்றனர். இதன்மூலம் உலகமயமாக்கல் விரிவாக்கும் போக்குகளை உயர்த்திப்பாதுகாக்கின்றனர்.

இந்த “முற்போக்கு”கள், உலகமயமாக்கலுக்கு எற்ப தேசங்களை மறுக்கின்றனர். தேசங்கள் சார்ந்த மேற்கட்டுமான வடிவங்களுக்கும், உலகமயமாதல் திணிக்கும் மேற்கட்டமானத்துக்குமாக முரண்பாட்டில், தேசிய வடிவத்துக்கு எதிரானதையே முற்போக்கானதாக காட்டுகின்றனர். அடிக்கட்டுமானத்தை பூசிமொழுகி, மேற்கட்டுமானத்தில் நடக்கும் மற்றங்களை புரட்சிகரமானதாககாட்டி, மார்க்சியத்துக்கு எதிரான ஒரு மாற்றாக அதை முன்தள்ளுகின்றனர்.

மார்க்சிய உண்மைகள் மீது அவதூறு செய்வதே இவர்களின் அரசியல் அடிப்படையாகும். மார்க்சியம் மீதான அவதூற்றை, பெரும்பாலும் ஸ்டாலின் மீதான அவதூறில் இருந்து தொடங்குகின்றனர். ஸ்டாலின் 1936-37 களில் நடத்திய உள்நாட்டு களையெடுப்பை அடிப்படையாகவும், தனிமனித உரிமை என்ற உள்ளடகத்தை அடிப்படையாகவும் கொண்டு, அனைத்தையும் மறுக்கின்றனர். ஸ்டாலின் காலத்தில் என்ன நடந்தது என்ற அடிப்படை ஆய்வு எதுவுமின்றி, ஏகாதிபத்தியம் எதை எல்லாம் அவதூறாக கட்டமைத்ததோ, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுவது ஒரு அரசியல் வடிவமாக தொடருகின்றது.

இதை நுட்பமாக பார்த்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கியெறிய முயன்று தோற்றுப் போனவர்களைச் சார்ந்து நிற்கின்றனர். இவர்கள் யார் என்றால், சோவியத்தின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்கும் சதிகளில் தோற்றுப்போன நிலையில் தண்டனைக்குள்ளனவர்கள். இந்த சதியாளர்கள் அக்காலத்தில் என்னசெய்தார்கள்?, எப்படி ஆட்சியை கவிழ்க்க முனைந்தார்கள்?, என்ற எந்த அடிப்படை உண்மையையும் ஸ்டாலினை தூற்றுவதற்காக கண்டுகொள்வதில்லை. இதன் மீதான நேர்மையான ஆய்வை, ஸ்டாலினை தூற்றுவோர் முன்னெடுப்பதில்லை. சதியாளர்கள் என்ன அரசியலை முன்வைத்தனர் என்பதைக் கண்டுகொள்வதில்லை. அதற்காக அவர்கள் என்ன வடிவங்களில் போராடினர்கள் என்பதைபற்றி அக்கறைப்படுவதில்லை. மார்க்சியத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்வோரும், மார்க்சியத்துக்கு திருத்தம் சொல்லி மார்க்சியத்ததை தூற்றுவோர், இவற்றை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. மாறாக மார்க்சியத்ததை தூற்றுவதே அவர்களின் மையக் குறிக்கோளாக உள்ளது.

அன்று சோவியத் மக்கள் எப்படி வாழ்ந்தனர். அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், உடை போன்ற விடையங்கள் மீதான அரசின்கொள்கை என்ன? எதுவும் இவர்களுக்கு அவசியமற்றதாகவே உள்ளது. ஸ்டாலினை மறுத்து முதலாளித்துவமீட்சி நடந்தபின்பு, அங்கு இருந்த சமூகவடிவங்களை அழித்து முதலாளித்துவ அமைப்பு உருவானபின்பு, அந்த மக்களின் வாழ்வுக்கு என்னநடந்தது என்ற அடிப்படை விடையத்தைக்கூடக் கண்டுகொள்வதில்லை. தூற்றுவதற்கு மட்டும் இவர்கள் புலம்பவதும், அதைக்கொண்டு பிழைப்பதும் தொடர்கின்றது. ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் என்பதைவிடவும், சிலரின் நலன்களில் தொங்குபவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

இதில் மற்றொரு விடையம் இவர்களின் வாதங்கள் மறுப்புக்கு உள்ளாகும்போது, பதிலற்றுகிடப்பதும், தூற்றுவதை தொடர்வதுமே பிழைப்பாகிவிடுகின்றது. கடுமையான முத்திரைகுத்தல் ஊடாக சம்பந்தமில்லாத வகையில் அவதூறுகளை கட்டமைப்பதும், ஒரு நடைமுறையாகிவிடுகின்றது. மார்க்சியத்தை உயர்த்தும் எல்லாப் பொதுவானதளத்திலும் இது நிகழ்கின்றது. இந்த போராட்டத்தில் கடுமையான தூற்றுதலை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்த நிலையில் தனிமைப்படுத்தல், இருட்டடிப்பு போன்ற பல்வேறு புறநிலையான நிலைமையில், எதிர்நிச்சல் என்பதும் பல்துறை சார்ந்து கடுமையாகிவிடுகின்றது. மார்க்ஸ் கூறியதுபோல் “கண்டனத்துக்குரிய சமுதாயத்தின் ஏறுவரிசையில் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறவன்தான்” உலகத்தின் உண்மைகளையும், சமுதாயத்தை மாற்றி அமைக்கும் ஒரு சிறந்தபணியை செய்யமுடிகின்றது. சமுதாயத்தின் சுற்றி வளைப்பிலான வலைப்பின்னல் கொண்ட கண்டனங்களை எதிர்கொண்ட நிலையில், இந்த சமுதாயத்தை தலைகீழாக்க ஒரு புரட்சிக்கரமான அறைகூவலை விடும்போது, கடுமையான நெருக்கடிகள் நேரடியாக முகத்துக்கு முன்னாலும், உளவியல் ரீதியாகவும் அச்சறுத்துகின்றது. எதார்த்தம் மீதான விமர்சனம் கடுமையான அச்சுறுத்தலை விடுகின்றது. விமர்சனம் செய்யமறுக்கும் போது, அந்த சமூகத்தின் முதுகில் குத்திவிடுவது நிகழ்கின்றது.

எழுதுவதை நிறுத்தக்கோரும் வேண்டுகோள்கள் அடிக்கடி தொடர்ச்சியாகவிடப்படுகின்றன. உனது உயிர் பறிக்கப்படும் எனமிரட்டியும், மறுபுறத்தில் அன்பாகவும் விடப்படுகின்றது. இந்த மிரட்டலை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்காமல், நாம் உயிர்வாழ்ந்து விடவில்லை. இது ஒருபுறம் நிகழ அதற்கு உறுதுணையாக அக்கம்பக்கமாக கடுமையான அவதூறுகள் அன்றாடம் புனையப்படுகின்றது. அவை எமது காதுகளுக்கு வந்தடையச் செய்கின்றனர்.

ஆத்திரமூட்டும் அவதூறை வெவ்வேறு நபர்களுடன் தொடர்படுத்தி, வன்முறை ஒன்றை புனையவும், அதில் குளிர்காயும் முயற்சிகளையும் செய்கின்றனர். அவதூறுகளுக்கு கைகால் பொருத்தி, வாயில் வந்தமாதிரி புனைகின்றனர். நீ தாக்கப்படுவாய் என்ற மிரட்டல்கள் சொல்லியனுப்பபடுகின்றது. ஜனநாயகவிரோத செயல்கள் மீதான எமது விமர்சனங்கள் கூர்மையாக அம்பலப்படுத்தும்போது, இந்த அவதூறுகள் அவர்களின் அரசியலாகி விடுகின்றது.

இவர்கள் கடந்த காலத்தில் வெவ்வேறு இயக்கங்களில் இருந்தபோது, ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு விமர்சித்தவர்களை அவதூறுகள் மூலம் அழித்தொழித்தவர்கள். அதற்கு வக்காலத்து வாங்கி உறுதுணையாக நின்றவர்கள். இன்று அவதூறுடன் கூடிய மிரட்டல்கள் அனைத்தும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் தொடர்ந்து வருகின்றது. அவர்கள் தமக்கு இடையில் இதுபற்றி ஒன்றுகூடி கதைக்கவும், வம்பளக்கவும் படுகின்றது. இது அனைத்து மட்டத்திலும், அனைத்து தரப்பிலும் இருந்து விடப்படுகின்றது.

சமுதாயத்தின் பொதுப்போக்கில் இருந்து அதை விமர்சித்து, அதற்கு முரணாக தனிமைப்பட்ட நிலையில் போராடும் போது, எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் கடந்தே எம்மால் எழுத முடிகின்றது.

இந்த எதார்த்தம் ஒருபுறம் எம்மை போராடத்துண்டுகின்றது. இந்த நிலையில் ஸ்டாலின் விடையம் மீதான பரஸ்பரம் அனைத்து தொடர்புவிதிகளையும் அடிப்படையாககொண்டு, ஸ்டாலினை பார்க்க முனைகின்றேன். சோசலிச அரசுகள் உருவான போது பழைய சமுதாயத்தின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக மாறிவிடுகின்றது. மீண்டும் பழைய சமுதாயத்தை நோக்கிச் செல்ல, அந்த சமுதாயத்தில் நிலவிய உயர்ந்த வாய்ப்பையும் வசதியையும் பெற்ற பிரிவு தொடர்ந்து போராடத் தொடங்குகின்றது. இது சோசலிச சமூகத்தில் மட்டுமல்ல, எல்லாப் புரட்சிகளிலும் இது பொருந்தும். இது சோசலிச சமுகத்தில் மிககடுமையானதாக மாறிவிடுகின்றது. மற்றைய எல்லா சமூக முரண்பாடுகளையும்விட, பாட்டாளி வர்க்க சமுதாயத்தில் முரண்பாடு கூர்மையான வடிவில் வெடிக்கின்றது. இதை கையாள்வதில் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அதன் மேல் கையாளுகின்றது. எந்த சமுதாயத்தையும் விட, பரந்துபட்ட மக்களின் நலன்களை பாதுகாப்பதில் உயர்ந்தபட்ச நிலையைப் பேணுகின்றது. இதை யாரும் நிராகாரித்துவிட முடியாது. இதன்போது தவறுகள் முன் அனுபவமின்மையில் எற்படுவது நிகழ்கின்றது. லெனின் கூறியது போல் “விசயத்தின் சாராம்சத்தை எடுத்துக் கொண்டோமானால், ஒரு புதிய உற்பத்திமுறை, தொடர்ந்து பின்னடைவுகளையும், தவறுகளையும், தோல்விகளையும் சந்திக்காமல் உடனே வேர்பிடித்து நிலைபெற்றதாக வரலாறு உண்டா?” என்றார். நாம் புதிய அனுபவமற்ற விடையங்களில் முன்னேறும்போது, அதில் தவறுகளை இனம் காணும்போது, அதை களைந்து முன்னேறுவதே பாட்டாளிவர்க்கத்தின் இயங்கியலாகும்.

இந்த வகையில் ஸ்டாலின் காலசரிகளையும், தவறுகளை ஒரு மார்க்சிய ஆய்வாக எடுத்துரைக்க முனைகின்றேன். எதிர்தரப்பின் நிலைப்பாட்டை, அவர்கள் அக்காலத்தில் என்னசெய்தார்கள், அதை அவர்கள் இன்று எப்படி நியாப்படுத்துகின்றனர் என்ற அடிப்படையான ஆதாரங்களுடன், இந்த விடையத்தை ஆராய முனைகின்றேன். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்தபோது, உண்மையில் எதை மறுத்தான் என்பதை ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டியிருகின்றது. ஸ்டாலின் எதை பாதுகாக்க முனைந்தார் என்பதை, இதன் அடிப்படை உள்ளடகத்தின் மீது எடுத்துரைக்க வேண்டியிருகின்றது. குருச்சேவ் என்னசெய்தான், டிட்டோ என்ன செய்தான் என்ற அடிப்படை உண்மைகூட தெரிந்துகொள்ள முனையாதநிலையில், ஸ்டாலின் தூற்றப்படுகின்றார். இதை எடுத்துக்காட்டவும், பாட்டாளிவர்க்கத்தின் சரியான அடிப்படைகளை உயர்த்தி பாதுகாக்கவும், ஆதாரபூர்வமாக விமர்சனத்தை உள்ளடக்கி தர்க்கரீதியாக நாம் போராட வேண்டியிருகின்றது.

ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாககொண்டு எழுப்பும் அவதூறுகளும், கடந்த கால புள்ளிவிபரங்கள் அனைத்தும் தவறனவை என்பதை இக்கட்டுரை ஆதாரபூர்வமாக தகர்க்கின்றது. இன்று ஏகாதிபத்தியங்களின் பொய்யும் புரட்டுடன் கூடிய, புதியதொரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரையில் அது முழுமையாக உள்ளடங்கியுள்ளது. இது முன்னைய புள்ளிவிபரங்களின் கற்பனையான கண்டுபிடிப்புகளையும், இதன் அத்திவாரத்துடன் தகர்த்து விடுகின்றது. ஸ்டாலினால் கொல்லப்பட்டவர்கள் என்று முன்னைய அவதூறுகளின் எண்ணிக்கையை விட, இன்று 100 மடங்கு குறைவாகவே அண்மையில் ஏகாதிபத்தியங்கள் தொகுத்து வெளியிட்டதை இக்கட்டுரை மூலம் அம்பலத்துக்கு கொண்டுவர முனைகின்றேன். இன்றைய ஏகாதிபத்திய புள்ளிவிபரங்கள் 1920 முதல் 1950 வரையிலான காலத்தை முழுமையாக கொண்டு வெளிவந்துள்ளது. உளவாளிகள், சமூகவிரோதிகள், பாசிட்டுகள், கொலைகாரர்கள் எனமொத்தமாக 1921 முதல் 1953 முடிய 7,99,473 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ஏகாதிபத்திய புள்ளிவிபரம் இன்று அறிவிக்கின்றது.

கடந்தகால பொய்கள் புரட்டுகள்கூட இன்று அம்பலமாகிவரும் நிலையில், மார்க்சியத்தின் சரியான ஆய்வுரைகளை ஆதாரபூர்வமாக தர முனைகின்றது. அத்துடன் இதை ஆளமாகவும், விரிவாகவும் புரிந்து கொள்ள மாபெரும் விவாதம், இரு முக்கியமுடிவுகள், மாபெரும்சதி, மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை, இயங்கியல்பிரச்சனைபற்றி, லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் போன்ற நூல்களை படிப்பதை கோருகின்றது

3 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்

  1. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    செங்கொடி அவர்களே முதலில் ஆசிரியரைப் பற்றி சொல்லிவிடுவது நல்லது ஏனென்றால் அவரைப்பற்றி வலைப்பதிவில் தேடினால் “இரயாகரன் போன்ற‌ அரவேக்காடு இந்த உலகத்தில் எவருமில்லை என்று” உலா வருகிறது……
    மேலும் அவர் கொடுக்கும் ஆதாரங்கள் வெறும் வாய்ச்சவாடலா அல்லது நிரூபிக்கப்பட்டதா என்றும் கட்டுரை பதிவூட்டம் செய்யப்படுவதற்கு முன்னால் ஆராய்ந்து கொள்ளுங்கள்…..கண்டிப்பாக அவர் கொடுக்கும் ஆதாரங்களுக்கு தகுந்த ரெஃபெரன்ஸ் தர மறக்காதீர்கள் .நண்பர்கள் எவரேனும் வினா எழுப்பினால் இந்த புத்தகம் அவர் எழுதியது ஆதலால் அவரிடம் போய் கேளுங்கள் என்று தட்டிக்களிக்க முயலாதீர்கள்

    உங்களுடைய பதிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிரேன்

  2. மிகவும் சிறப்பான பணி.. நல்லப் படியாக கட்டுரை தொடர எம் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s