ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்

கடந்த 25 ம் தேதி இஸ்ரோ கடவுள்கள் ஏவிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் சிவகாசி ராக்கெட்டாகிப் போனதில் கடவுளர்களுக்கு மட்டுமல்லாது பக்தர்களுக்கும் ஏக வருத்தம். ஏனென்றால் முன்பு உள்ளூர் தயாரிப்பு என்று ஏழுமலையானையெல்லாம் ஏவலுக்கு கூப்பிட்ட பிறகும் அவன் அழுத்தமாக போட்ட கோவிந்தாவின் இழுப்பு ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரை நீண்டுவிட்டதே. ஒரு செயற்கைக்கோள் ஏவல் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்போது அது ஒரு செய்தியாக முடிந்துவிடுகிறது. ஆனால் அதுவே தோல்வியில் முடியும்போது அதனுடன் தேசபக்தியும் கலந்துவிடுவதால் அதன் பரப்பெல்லை … ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 10 அமெரிக்க முதல் டிராட்ஸ்கிகள் வரை குருசேவ் வாழ்த்த, அவனோ கம்யூனிசத்தை தூற்றினான் 22வது காங்கிரஸ்சில் நடத்திய முதலாளித்துவ மீட்சியை “மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி” என்று கூறி குருசேவை வாழ்த்தியது; ஏன், அமெரிக்கா உள்ளிட்ட டிராட்ஸ்கியவாதிகள் அனைவரும் குருசேவை வாழ்த்தி வரவேற்றனர். டைம்ஸ் என்ற அமெரிக்க இதழ் குருசேவ் பற்றிய குறிப்பில் “மேற்கத்திய நாடுகளின் சிறந்த மாஸ்கோ நண்பர்” என்று புகழ்ந்தது.  ஏகாதிபத்தியவாதியான டபிள்யூ.ஏ.ஹாரிமன் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 10-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்

ஆந்திர ஓட்டுப்பொறுக்கி அரசியலில் அதிரடி நிகழ்வுகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை. ஆனாலும் ராஜசேகரரெட்டியின் மரணத்திற்குப்பின் இந்த கேடுகெட்ட கூத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடுவுக்கு திடீரென விவசாயிகளின் மீது பாசம் பொத்துக்கொண்டு பொங்கியெழ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார், அதிலிருந்து செய்தி ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இடையில் ஜெகன்மோகனும் சேர்ந்துகொள்ள ஆந்திரம் விழி பிதுங்கி நிற்கிறது. ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்காக‌ அன்று அம்பேத்காரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அடாவடியாக உண்ணாவிரதத்தை தொடங்கிய காந்தியைப் போல் அடாவடி … ஆந்திர ஆடுகளத்தில் உண்ணாவிரத கூத்துகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே

கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம். உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் … ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09 அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ் ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் "எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான்.  "அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

  கடந்த ஓராண்டாக "இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.   இந்நிலையில் … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௮ குரான் பலவகையான உயிரினங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. அவைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ௧) கழுதை, தேனீ போன்ற எல்லோருக்கும் அறிமுகமான பூமியில் இருப்பவைகள், ௨) எதிர்காலத்தில் தோன்றவிருப்பதாகவும், பூமியில் இருப்பதாகவும் ஆனால் மனிதர்களுக்கு  அறிமுகமில்லாத இரண்டு உயிரினங்கள். இதில் முதல்வகை  உயிரினங்கள் குறித்து அனைவரும் அறிந்திருப்பதால் விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் இரண்டாவதுவகை உயிரினங்கள் இஸ்லாமியர்கள் கேள்வியாக மட்டுமே அறிந்தது என்பதால் அவற்றை விவரிப்பது அவசியமாகிறது. பூமியில் மனிதன் … குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்

கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. … பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 8

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 08 குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான் முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.