இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி: ௩0
“விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார்?” என்று படிக்கும் குழந்தைகள் யாரிடம் கேட்டாலும் சொல்லும் பதில் ‘யூரி காக்ரின்’ என்பதாகத்தான் இருக்கும். முஸ்லீகளிடம் கேட்டாலும் இதுதான் பதில், ஆனால் அவர்கள் நம்புவது வேறு. தோராயமாக 1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளின் இரவில் முகம்மது விண்வெளியில் பயணம் செய்து தான் பிறப்பதற்கு முன்னரே இறந்துபோன மனிதர்களிடம் பேசி ஆலோசனை செய்து அல்லாவிடம் பேரம் நடத்தி ஐவேளைத் தொழுகையை வாங்கிவந்தார் என்பது அவர்களின் நம்பிக்கை. கல்விக்கு(மெய்யாக) ஒன்று, நம்பிக்கைக்கு(கற்பனையாக) வேறொன்று.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ இதழில் புஷ்பக விமானமும் புராக் விமானமும் ஒன்றுதான், இரண்டுக்கும் அறிவியல் நிரூபணங்கள் இல்லை என்று ஒரு கட்டுரை வெளிவந்தது.அதை எதிர்த்து ‘உணர்வு’ இதழ் தொடற்சியாக பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வரைந்து தள்ளியது, ஆனால் முகம்மது விண்ணில் பறந்ததற்கு என்ன நிரூபணம் என்பதை மட்டும் தொடவே இல்லை. இதன் தொடர்ச்சியாக சென்னையில் நாத்திகர்களுடன் நேரடி(!) விவாதமும் நடந்தது. என்ன காரணமோ தெரியவில்லை அவர்களும்கூட ஏதேதோ பேசினார்களே தவிர மிகக்கவனமாக அந்தக் கேள்வியை மட்டும் தவிர்த்து விட்டார்கள். பின்னர் தனியாக “முகம்மது பூமியில் மட்டுமே புராக்கில் பயணம் செய்தார், விண்வெளிக்கு புராக்கில் செல்லவில்லை” என்றொரு விளக்கம் வைத்தார்கள். அப்போதும் கூட விண்ணில் சென்றது எப்படி என்று விளக்கும் நோக்கில் எதையும் கூறவில்லை.
இந்த விண்வெளி பயணம் குறித்து குரான் இப்படி கூறுகிறது
மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹரமிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்…… குரான் 17:1
ஆனாலும் ஹதீஸ்களில் இன்னும் விரிவாக இந்தப்பயணம் பற்றிய செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.
நான் இறையில்லத்தில் தூக்கமாகவும் விழிப்பாகவும் இருந்தபோது …. தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது ….. என்னுடைய நெஞ்சில் காரையெலும்பிலிருந்து அடிவயிறு வரை பிளக்கப்பட்டது …. புராக் எனும் வாகனம் என்னிடம் கொண்டு வரப்பட்டது …. முதல் வானம் ஆதம் …. இரண்டாம் வானம் ஈசா, யஹ்யா …. மூன்றாம் வானம் யூஸுஃப் …. நான்காம் வானம் இத்ரீஸ் …. ஐந்தாம் வானம் ஹாரூன் …. ஆறாம் வானம் மூஸா …. ஏழாம் வானம் இப்ராஹிம் …. அதன் பின்னர் சித்ரத்துல் முந்தஹா …. வேர்ப்பகுதியில் நான்கு ஆறும் யானையில் காதளவு பெரிய இலைகளும் கொண்ட இலந்தை மரம் …. அல்லாவின் வஹீ, ஒரு நாளுக்கு ஐம்பது வேளைத் தொழுகை …. மூஸாவின் ஆட்சேபம் …. அல்லாவோடு பேரம் …. இதற்குமேலும் குறைக்கவா எனும் முகம்மதின் வெட்கமும் ஐவேளைத் தொழுகை இறுதியாதலும். புஹாரி 3207
குரான் இந்தப் பயணத்தை வெகுசுருக்கமாக முடித்துக்கொள்கிறது. ஆனால் ஹதீஸ்கள் தான் அந்தப் பயணத்தை பேரண்டங்களைக் கடந்து விரித்துச் செல்கிறது. அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் ‘ரன்’ எடுப்பது போல பேரண்டங்களைக் கடந்த ‘சித்ரத்துல் முந்தஹா’ எனும் இடத்திற்கும் மூசாவின் வானமாகிய ஆறாம் பேரண்டத்திற்கும் மாறி மாறி ஓடுகிறார். அதுமட்டுமா? விண்வெளிப் பயணத்திற்கு முகம்மதை ஆயத்தப்படுத்த செய்யப்படும் அறுவைச்சிகிச்சை, புராக்கின் உருவம், எந்தெந்த அண்டங்களில் யாவர் என திரைக்கதையையே அமைத்துக் காட்டுகிறது.
முதலில் வானம் என்பது என்ன? இங்கு ஏழு வானம் ஏழு கதவு என வருகிறது கதவு என்பதை குறியீடாகக் கொண்டாலும் ஒரு தடுப்பு அல்லது ஒவ்வொரு வானமும் தனித்தனி என பொருள் வருகிறது. ஆனால் வானம் என்பது தடுக்கப்பட்டதாகவோ தனித்தனியாகவோ இல்லை. எனவேதான் மதவாதிகள் வானம் என்பதற்கு பேரண்டம் என பொருள் தருகிறார்கள். அதாவது ஏழு தனித்தனியான பேரண்டங்கள். இந்த ஏழு பேரண்டங்களையும் கடந்து சென்றுவிட்டு ஒரிரவுக்குள் திரும்பியும் வந்திருக்கிறார் முகம்மது.
நாம் வாழும் இந்த பேரண்டம் எவ்வளவு பரந்து விரிந்தது என்பது துல்லியமாக இன்னும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை, மட்டுமல்லாது அது விரிந்து கொண்டும் இருக்கிறது. பூமி, சூரியக் குடும்பம், அதை உள்ளடக்கிய ஆகாய கங்கை எனும் பால்வீதி, இன்னும் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான பால்வீதிகள், பலகோடிக்கணக்கான விண்மீன்கள், கருந்துளைகள், நெபுலாக்கள் இன்னும் பலவான விண்வெளி பருப்பொருட்களை உள்ளடக்கிய இந்தப் பேரண்டத்தின் அளவு தற்கால கணக்கீடுகளின்படி தோராயமாக 2500 கோடி ஒளியாண்டுகள். ஒரு ஒளியாண்டு என்பது ஒளித்துகளொன்று தடையாமல் தொடர்ந்து ஓராண்டுகாலம் பயணம் செய்தால் எவ்வளவு தூரத்தைக் கடந்திருக்குமோ அது தான் ஓர் ஒளியாண்டு தூரம். ஒளியின் வேகம் நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். அதாவது நொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தொடர்ந்து நிற்காமல் பயணம் செய்தால் நாம் வாழும் இந்த பேரண்டத்தின் மறுஎல்லையைச் சென்றடைய 2500 கோடி ஆண்டுகள் தேவைப்படும். இது ஒரு பேரண்டத்தைக் கடப்பதற்கு தேவைப்படும் காலம், இதையும், இதுபோல் இன்னும் ஆறு பேரண்டங்களையும் கடந்து சென்று மீண்டு வந்திருக்கிறார் முகம்மது அதுவும் ஓர் இரவுக்குள்.
இந்த பேரண்டத்தின் உச்சகட்ட வேகம் ஒளியின் வேகம் தான். ஒளியைவிட மிகைத்த வேகத்திற்கு ஒரு பொருளை முடுக்கமுடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு. ஒரு வாதத்திற்காக இந்த உச்ச வேகத்தில் பயணம் நிகழ்ந்திருக்கிறது என்று கொண்டாலும், ஓர் இரவு என்பது அதிகபட்சமாக 12 மணி நேரம். இந்த நேரத்தில் உச்சகட்ட வேகத்தில் சென்றாலும் ஒருவரால் அதிகபட்சம் 1296 கோடி கிலோமீட்டர்கள் தான் பயணிக்க முடியும். அதாவது 648 கோடி கிமீ தூரத்திற்கு சென்று வரலாம். ஆனால் முகம்மது சென்று வந்திருக்கும் தூரமும், அப்படி செல்வதற்கு கைக்கொண்ட வேகமும் கற்பனைக்குக் கூட எட்டாததாயிருக்கிறது.
குரானின் சொற்களுக்கும், எழுத்துகளுக்கும் இடையில் இண்டு இடுக்களிலெல்லாம் புகுந்து அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் மதவாதிகள் இந்த விண்வெளிப் பயணத்திற்கு என்ன அறிவியலைக் கொண்டுவருவார்கள்? இதில் வெளிப்படையான சிக்கல் இருக்கிறது எனத் தெரிந்ததால் சில மதவாதிகள், மக்காவிலிருந்து ஜெருசலம் வரையில் தான் பயணம் அதன்பிறகு உள்ளதெல்லாம் கனவு போல ஒரு காட்சி வெளிப்பாடு என நூல் விட்டுப்பார்க்கிறார்கள். ஆனால் குரானின் அது மெய்யான பயணம் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது.
…..அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்……. குரான் 32:23.
ஆக நம்புவதற்குக் கூட துளியும் வாய்ப்பளிக்காத இதுபோன்ற கட்டுக் கதைகளைத்தான் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரே வேதம் என முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களால் முடியாததெல்லாம் கடவுளால் முடியும் என்றெல்லாம் இதை எளிதாக குறுக்கிவிட முடியாது. அறிவியலை திணிக்க எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய அறிவியலை கூறிவிட்டது என ஜல்லியடிப்பதும், வெளிப்படையாக பல்லிளிக்கும் இடங்களில் அல்லாவின் அருள் என பதுங்குவதும் அப்பட்டமான மோசடி. என்ன மோசடியாக இருந்தாலும் எங்கள் மதம் என்பர்கள் விலகிச் செல்லுங்கள், சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்கலாம்.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா
28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?
27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்
26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்
25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா
24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?
23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா
21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?
20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
சிந்திப்பதா,
அப்படின்னா என்னானே மதவாதிகளுக்கு தெரியாதே!
17:1] Yusuf Ali
Glory to (Allah) Who did take His servant for a Journey by night from the Sacred Mosque to the farthest Mosque, whose precincts We did bless,- in order that We might show him some of Our Signs: for He is the One Who heareth and seeth (all things).
[17:1] Pickthall
Glorified be He Who carried His servant by night from the Inviolable Place of Worship to the Far distant place of worship the neighbourhood whereof We have blessed, that We might show him of Our tokens! Lo! He, only He, is the Hearer, the Seer.
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்
____________
முதலில் இந்த வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை அடைப்பு குறி இல்லாமல் தெரிந்து கொள்வோம்.
யூசுஃப் அலி மற்றும் பித்கல் இரு அறிஞர்களின் மொழிபெயர்ப்பை எளிய தமிழாக்கம் செய்தால்.
1.சிறந்த ஒருவர் தன் வேலையாளை(அடிமையை) இரவில் புனித மசுதியில் இருந்து தூரத்தில் உள்ள மசுதிக்கு அழைத்து சென்றார்.
2.அழைத்து சென்றது வேலையாளுக்கு சில அடையாளங்களை காட்ட.
3.அழைத்து செல்பவர் பார்ப்பவர்,கேட்பவர்.
அடைபுகுறிகள் போட்டு
அ) அழைத்து சென்றவர் இறைவன்
ஆ) அழைத்து செல்லப் பட்டவர் முகமது
இ)புனித மசூதி என்பது மெக்கா மசுதி
ஈ) தூர மசூதி என்பது அல் அக்சார் மசூதி ஜெருசலேம்
என்று சொல்கிறார்கள். எப்படி இந்த நான்கு விஷ்யங்களையும் குறிப்பிடுகிறீர்கள்?
.
போனால் போகிறது பார்ப்பவர் கேட்பர் என்றால் இறைவன் என்று எடுத்து கொள்வோம்.
வேலையாள என்பவர் முகமது என்று எப்படி கூற முடியும்.ஏனெனில்
17.2 மூஸா பற்றியும் 17.3 நூஹை பற்றியும் பேசுகிறது.
இந்த வசனம் மெக்காவில் கூறப்பட்டது.
அந்த சமயம் மெக்காவில் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள்(360?) இருந்தன.எப்படி புனித மசூதி ஆக முடியும்.
சென்ற இடம் ஜ்ருசலேம் அல் அக்சார் மசுதி என்றால் அல் அக்சார் மசுதி முகமதுக்கு பிறகே(705 C.E கட்டப் பட்டது. யூதர்களின் ஆலயமும்(சுலைமான் கட்டியது) இடிக்கப் பட்டு அங்கே இல்லை. எந்த மசூதிக்கு சென்றார்?
http://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque
முதலில் மெக்காவில் இருந்து ஜெருசலேம்(எங்காவது தூரத்தில் உள்ள இடம்) வருங்கள். பிறகு விண்வெளி பயணம் எல்லாரும் போகலாம்.
தோழரே சிந்தனைக்கு எட்டாத விடயத்தை கற்பனையில் கண்டு மகிழ்பவர்களே ம(ந்)தவாதிகள். உணர்வில் இதற்காக நேரத்தை வீணடித்து 15 கட்டுரைக்கும் மேலாக எழுதிய ஒரு பெயர்தாங்கி விஞ்ஞானி கண்ட அறிவியல் தத்துவம் என்னவெனில், இது நடந்தது அபவ்திக உலகத்தில் அதனால் இறைவனின் செயல்கள் மனித கண்களுக்குத் தெரியாதாம்! புலப்படாதாம்! நம்புங்கள் அவ்வளவுதான்.
புராக் என்னும் மிருக விமானத்தை பார்த்ததாக ஏதேனும் சான்றுகள் உள்ளனவா என்று கேட்டாலும் மௌனமே பதிலாக வருகின்றது.
test
இதெற்கெல்லாம் ஒரே பதில் நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே…
உங்களிடம் ஆதாரம் காட்டி நிரூபித்து சான்றிதல் பெற்றுவிட்டு அதன் பிறகுதான் நம்பனும் என்கிற எந்த அவசியமோ கடமையோ எங்களுக்கில்லை நம்புகிறவன் நம்பு நம்பாதவன் போயிக்கிட்டேயிரு… யாரையும் நம்பும்படி வற்புறுத்தவில்லை..
செங்கொடி அவர்களே உலகிலுள்ள கோடிக்கனக்கான முஸ்லிமும் சிந்திக்காமல் மூடனாக இருக்கிறார்கள் என்றால் பரவாயில்லை அப்படியேயிருந்து விட்டுப்போகிறோம்… நீங்கள் இல்லை இல்லை என்று சொல்லும் வறை நாங்கள் இருக்கு இருக்கு என்று சொல்லிக்கொண்டேயிருப்போம்..
@கும்மி
//புராக் என்னும் மிருக விமானத்தை பார்த்ததாக ஏதேனும் சான்றுகள் உள்ளனவா என்று கேட்டாலும் மௌனமே பதிலாக வருகின்றது//
யாராவது பார்த்தார் என்று சொன்னாமட்டும் நீங்க நம்பவா போறீங்க அதற்கும் விதண்டாவாதமாக ஏதாவது சொல்வீர்கள் யாரும் பார்க்கவில்லை என்றே வைத்துகொள்ளுங்கள்… எங்கள் மார்க்கத்தின் உண்மைத்தன்மை எங்களுக்கு தெரியும் அது அடுத்தவனுக்கு விளங்கவில்லை எங்களால் ஒன்றும் பன்னமுடியாது,,, நாங்க எங்க வழியில் போயிக்கிட்டேயிருப்போம் புரிகிறவர்களுக்கு புரிந்தால் போதுமானது உங்களைப்போன்ற கேள்வி கேட்பவர்களுக்கெல்லாம் புரிய வைத்துவிட்டுத்தான் தொடர வேண்டியதில்ல,,,
நண்பர் செங்கொடி.. அற்ப சொற்ப மனிதனின் கண்டுபிடிப்புகளை தியரிகளையும் வைத்து எல்லாம் பொய் என்பது உங்கள் நம்பிக்கை.. நீங்கள் சொன்ன அந்த மனிதர்கள் எல்லாம் படைத்ததே இறைவந்தான் என்பது எங்கள் நம்பிக்கை,, மனிதனையே படைத்து உயிர் கொடுத்தவனுக்கு மனிதனின் சக்திக்கு எட்டாத விடயங்களை பண்ணமுடியும் என்று ஏன் நம்பகூடாது….
@ வால்பையன்,,
//சிந்திப்பதா,
அப்படின்னா என்னானே மதவாதிகளுக்கு தெரியாதே//
ஆமாம் வாலு.. இப்படி வெட்டியா விதண்டாவாதமா துவேஷமா சிந்திக்க மதவாதிகளுக்கு தெரியாதுதான்.. சிந்தனை சிகரம் வால் அவர்களே,,
செங்கொடி…
எனக்கொரு சந்தேகம்… குறிப்பாக உங்களின் பார்வைகள் இஸ்லாம் சார்ந்ததாகவே இருக்கின்றது..
@இஸ்லாத்தில் மட்டும்தானா மூடநம்பிக்கைகள் இருக்கிறது
@ ஏனைய மதங்களில் இல்லவே இல்லயா
@இஸ்லாமியர்களால் நீங்கள் ஏதாவது பாதிக்கப்பட்டீர்களா அல்லது துவேஷத்தினாலா
@சமத்துவம் பேசும் நீங்கள் இப்படி பக்கச்சார்பாளராக இருப்பது
@அடுத்த மதங்களின் மேல் உள்ள பயமா
@ உங்கள் பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கிடைப்பதற்கா
@ஏனைய மதங்களின் ஆதாரங்களை திரட்ட முடியவிலலயா…
உங்களிடமிருந்த் நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன்.. இதுவுக்கு பதிவுக்கு சம்பத்தமில்லாதது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்..
@கும்மி..
நண்பர் கும்மி அவர்களுக்கு எவன் இஸ்லாத்த பற்றி கேவலமா பதிவு போட்டாலும் அங்க போய் விளக்கம் கொடுத்து கேள்வி கேட்கும் உங்கள் சமூக சேவை தொடரட்டும் நண்பரே… உங்களைப்போன்ற நிறைய பேரை முஹம்மது நபியின் காலத்திலிருந்து கடந்துவந்ததுதான் இஸ்லாம்.. கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் பயந்து எங்கள் மார்க்கம் நின்றுவிடவில்லை இன்னும் விரிந்துகொண்டுதான் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது உலகெங்கிலும்,, உங்கள் கொள்கைகள் போல் பதிவுகளுக்குள் மட்டும் முடங்கிடவில்லை… உங்கள் கொள்கை வளர வாழ்த்துக்கள் எங்கள் கொள்கையை நாங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருப்போம் யார் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ….
இஸ்லாம் தொடர்பான பல கட்டூரைகள் எழுதிவரும் செங்கொடி
அவர்களுக்கு.
நான் முதலில் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறான்.
என்னுடைய பார்வையில் உங்களின் இந்த செயல் அனைத்தும்
முட்டால் தனமானது, ஏனென்றால் ஒரு விஷயத்தை பற்றி
விவாதிக்க விரும்பினால் முதலில் அதன் அடிப்படை
கோட்பாட்டை பற்றி தான் விவாதிக்க வேண்டும். பிறகு தான்
அதன் உட்பிறிவுகள் அது சார்ந்த விஷயங்களை விவாதிக்க
வேண்டும் இது தான் அறிவுப்பூர்வமான விவாதம்.
வாருங்கள் முதலில் இஸ்லாத்தின் அடிப்படையான
இறைக்(கடவுள்)கொள்கையை பற்றியும் கம்யூனிசத்தில் உள்ள “கடவுள்” கொள்கையை பற்றியும் சேசுவோம்.
இஸ்லாத்தில் உள்ள கடவுள் கொள்கை என்ன என்பது பற்றி பலருக்கு தெரியும் இருந்தாலும் ஒரு முறை சுருக்கமாக செல்கிறேன்.
இந்த பூமி, காற்று, நீர், உயிரிணங்கள், ஆகாயம், அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பாதுகாத்து வழிநடத்துகின்ற அந்த ஓர் இறைவனுக்கே அடிபனிதல், அவனது சொல்லையே செவியுற்று அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல். எப்பொழுதும் தன்னை இறைவனின் அடிமையாக நினைத்தல்.
சரி அது என்ன கம்யூனிசத்தில் கடவுள் கொள்கை அவர்கள் தான் நாத்தீகர்கள் ஆயிட்றே…. மதத்தையும் கவுளையும் கேலி கிண்டல் செய்பவர்கள் ஆயிட்றே…… என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். அதற்க்கு பதில் இதோ நான் மேற்க்கூறியவற்றை இன்னும் ஒருமுறை படித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் அதாவது இஸ்லாத்தை பொருத்தவரையில் கடவுள் கொள்கை என்பது இறைவனை தவிற யாருக்கும் அடிபனிதல் கூடாது அது ஸ்டாலினாக இருந்தாலும் சரி, மா வோ-வாக இருந்தாலும் சரி, கார்ல் மார்க்ஸ் ஆக இருந்தாலும் சரி.
அப்படியே நான் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு கம்யூனிசவாதிகளையும் மற்ற கொள்கை சார்ந்தவர்களையும் பாருங்கள் சிலைகளையோ, உயிரிணங்களையோ, சூரியனையோ அல்லது ஒரு சராசரி நம்மை போல் மலம் – ஜலம் போகும், உணவு உண்ணும், தூங்கும் பலஹீனமான மனிதனையோ கடவுளுக்கு நிகராக மாற்றிவிட்டு அவர் சொல்லுவது அனைத்தும் சரி, அவர் தான் எங்கள் ரோல் மாடல் என்று கூறிகொண்டு வளம் வருகிறார்கள். இப்பொழுது கூறுங்கள் நாதிகவாதிகளோ, கம்யூணிசவாதிகளோ கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்களா??? இல்லை இல்லவே இல்லை
நாத்திக, கம்யுனிசவாதிகளாகிய நீங்கள் மனிதனுக்கு கட்டுபடுகிறீர்கள். இஸ்லாமியர்களாகிய நாங்கள் இறைவனுக்கு கட்டுப்படுகிறோம்.
மனிதனுக்கு கட்டுப்படும் நிலையிலிருந்து உங்கள விடுவித்து இறைவனுக்கு கட்டுப்படும் நிலைக்கு வாருங்கள் பிறகு அந்த இறைவன் வகுத்து தந்த வாழ்க்கை நெரியான இஸ்லாத்தின் உட்பிறிவுகள் பற்றி விவாதிக்கலாம்.
இப்படிக்கு
abdulr829@gmail.com
உண்மையான விண்வெளி பயணம் சென்றுவந்த தினத்தைக் கூட யாரும் உலகில் கொண்டாடுவது இல்லை. ஆனால் ஒரு கற்பனையான டுபாக்கூர் பயணத்திற்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்புத் தொழுகை என கொண்டாடி மகிழ்வதுதான் இவர்களின் பகுத்தறிவாம்(?), அதிலும் கடவுளின் அற்புத வாகனத்தைப் பார்த்தால் பழைய அம்புலிமாமா கதைகளில் வருவதுபோல் ஒரு தோற்றம் சிரிப்பு வருகிறது. மேலும் இந்த உருவத்தின் அளவு குதிரையைவிட சற்று பெரியதும், கோவேறு கழுதையைவிட சற்று சிறிதுமான ஒரு தோற்றமுடையதாம்! இதில் இறக்கை வேறு சூப்பர் கற்பனை!!!
வணக்கம் சங்கர் உங்கள் தலைப்பு மக்கா நகர் என்ற வரலாற்ரை பிழையாக விழங்கி விட்டீர்hகள்
//வெட்டியா விதண்டாவாதமா துவேஷமா//
ஹிஹிஹிஹி
எப்படினா இப்படி சிரிக்காம ஜோக் அடிக்கிறீங்க!
//செங்கொடி…
எனக்கொரு சந்தேகம்… குறிப்பாக உங்களின் பார்வைகள் இஸ்லாம் சார்ந்ததாகவே இருக்கின்றது.//
அதையெல்லாம் எல்லாரும் சேர்ந்து பண்ணிகிட்டு தான் இருக்கோம், செங்கொடியின் தளத்தில் காவியை டார் டாராக கிழித்தது உங்களுக்கு தெரியாமல் போனது அவர் தவறில்லையே!
உங்களிடம் முன் வைத்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் ஏன் அவனை கேட்கலைன்னு சண்டைக்கு வாங்க நண்பரே!
@வால்பையன்..
//உங்களிடம் முன் வைத்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறம் ஏன் அவனை கேட்கலைன்னு சண்டைக்கு வாங்க நண்பரே//
நான் கேள்வி கேட்டது செங்கொடி அவர்களிடம்தான் உங்களை ****************** அல்ல ***************** போறீங்களா,, வாலு
ஆமாமா, நாங்க பொத்திகிறோம், நீங்க திறந்தே வச்சிருங்க, உங்க சைசுக்கு ஏத்தா மாதிரி உங்களுக்கு நித்தியகன்னிகைகள் ஏற்பாடு பண்ணி தருவாரு கடவுள், எங்களுக்கு என்ன தேவை கிடக்கு!
//மக்கா நகர் என்ற வரலாற்ரை பிழையாக விழங்கி விட்டீர்ஹ்கள்//
நண்பர் இம்ரான்,
திரு முகமது கி.பி.630 ல் மதினாவில் இருந்து மக்காவை படையோடு வந்து கைப்பற்றிய போது அங்கே(காபாவில்) இருந்தவற்றை இந்த ஹதிது அறிவிக்கிறது.
______________
2478. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். ‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது” (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.
Volume :2 Book :46
____________
என்ன பிழை என்று கூறினீர்கள் என்றால் இன்னும் விள(ழு)ங்க பார்க்கிறேன்.
இந்த இரவு பயணம்(அல்இஸ்ரா) நடந்தது கி.பி 621.அப்போது அங்கு சிலை இருந்திருக்குமா இல்லையா?.அதனை எப்படி புனித மசுதி என்று கி.பி 6121 ல் கூற முடியும்.
___
காபாவில் சிலைகள் அகற்றப் படுதல்(கி.பி 630)
______
4288. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(மக்கா வெற்றி நாளில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தங்கியவாறு இருந்த (இறைத்தூதர்களான) இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையைவிட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் கூறினார்கள். ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறிவிட்டார்கள்.
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :4 Book :64
_________
நிர்வாண்மாக காபாவை வலம் வருவது வலக்கத்தில் இருந்த்து தடை செய்யப்படுகிறது(கி.பி 630)
__________________
369. ஹஜ்ஜத்துல்வதா’விற்கு முந்திய ஆண்டு அபூ பக்ர்(ரலி) (அவர்களின் தலைமையில் நான் ஹஜ்ஜுக்குச் சென்றபோது) என்னை அறிவிப்புச் செய்பவர்களுடன் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் மினாவில் நின்று, ‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு எந்த முஷ்ரிக்கும் ஹஜ் செய்யக் கூடாது. நிர்வாணமாக யாரும் கஅபாவை வலம் வரக்கூடாது’ என்று அறிவித்தோம்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் (முதல் இருபது வசனங்கள்) விஷயத்தை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.
எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் துல்ஹஜ் மாதம் பத்தாவது நாள் மினாவில் நின்று ‘இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக்கூடாது; கஅபாவை எவரும் நிர்வாணமாக வலம் வரக் கூடாது’ என்று அறிவித்தார்கள்” அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :1 Book :8
_____________
கிபி 621ல் மக்கா ஒரு புனித மசுதியா? ஆம் என்றால் ஏஎன் இந்த மாற்றங்களை செய்ய வேண்டும்?
புனித மசுதி இல்லை என்றால் குரானில்(17:1) ஏன் குறிபிட வேண்டும்?
//ஒரு விஷயத்தை பற்றி
விவாதிக்க விரும்பினால் முதலில் அதன் அடிப்படை
கோட்பாட்டை பற்றி தான் விவாதிக்க வேண்டும். பிறகு தான்
அதன் உட்பிறிவுகள் அது சார்ந்த விஷயங்களை விவாதிக்க
வேண்டும் இது தான் அறிவுப்பூர்வமான விவாதம்////
அருளாளனின் அடிமையே ,நன்றாக சொல்லி யுள்ளீர்கள்.இஸ்லாத்தின் வாழ்வியலை இவர்களால் விமர்சிக்க வக்கற்று இஸ்லாத்தின் அற்புதங்களை தலையில் தூக்கி ஆடுவதை விட்டால் வேறு வழி இல்லை. இவர்களது பண்ணை வாழ்க்கையை விட அது தான் தாங்கள் கொள்கை என்று சொல்லி விட்டு இஸ்லாமிய திருமண வாழ்க்கையை இன்னும் கைவிட துணிவு இல்லாத கொள்கை துணி இல்லாத நிர்வானதாரிகள் இவர்கள். மேலும் இன்சா அல்லாஹ் நாளை பார்ப்போம்
my dear friend u compared kuran with science very well.It really ; naturally shows the myth and the science very well. I am at your side. even in “reality beyond the imagination” in http://www.dawnpages explains about the size of sun and a vy canis majoris star is 2100 size bigger than this sun. follows… thank u . vanakkam.
அருளாளனின் அடிமை,
இறைவனை வழிபடும் அதே நிலையினை வைத்து கம்யூனிஸ்டுகளையும் நோக்கினால் உங்களுக்கு அப்படித்தான் தோன்றும். ரஷயாவின் புரட்சிக்குப் பிறகுதான் சீனாவில் புரட்சி நடந்தது. ரஷ்யப் புரட்சியின்போது லெனின் செய்த ஒவ்வொன்றையும் பின்பற்றியா மாவோ புரட்சி செய்தார்? இல்லியே? ஸ்டாலின் காலத்திலேயே சிலவற்றை மாவோ விமர்சித்திருக்கிறார். கம்யூனிசத் சித்தாந்தங்களை உருவாக்கிய, நடைமுறைப்படுத்திய கம்யூனிசத் தலவர்களின் படங்களுக்கு பொட்டு வைத்துக்கொண்டோ அல்லது Dos Capital புத்தகத்தை புனித நூலாக கருதி முத்தமிட்டுக்கொண்டோ அல்லது லெனின் தாடி வைத்திருந்தார்,ஸ்டாலின் தொப்பி போட்டுக்கொண்டிருந்தார், மாவோ உக்காந்து ஒன்னுக்குப் போனார் என்று எந்த கம்யூனிஸ்டும் பின்பற்றுவதில்லை.
நீங்கள் அனைவரும் கம்யூனிசத்தையும் மதங்களையும் இணைத்துப் பார்ப்பதே தவறானது. கம்யூனிசம் உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டது. மதங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியது, அவைகள் வெற்று நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவைகள்.
கலை அவர்களே
மதம் என்ற கண்ணாடியை அனிந்து கொண்டு கம்யூனிசத்தை பார்க்காதீர்கள் ஏனென்ரால் அது ஒரு உற்பத்தி முறையை அடிப்படையாக கொண்ட ஒரு கொள்கை என்று கூறுகிறீர்கள். நாங்கள் கம்யூனிசத்தை நீங்கள் கூறிவது போல பார்க்கவில்லை அதை அந்த கண்ணாடியாகவே(மதமாகவே) பார்க்கிறோம்.
நான் எனது முந்தைய கருத்திலேயே கூறியது போல, கம்யூனிசம் மனித மூலையில் முலைத்த ஒரு மதம் ஆனால் இஸ்லாம் இறைவன் வகுத்து தந்த வாழ்க்கை நெறி.
நீங்களே மறைமுகமாக கூறுகிறீர்கள் நபிகள் நாயகம் செய்ததால் நாங்கள் தாடி வைக்கிறோம், தொப்பி அனிகிறோம், உட்கார்ந்து சிறுநீர் கழிக்க்றோம் என்று. சரி தான் எங்கள் தலைவர்(நபிகள் நாயகம்) சொல்லித்தந்த வழிமுறையில் எது இந்த 21ஆம் நூற்றாண்டிற்க்கு ஒத்துவராதது ஆதாரத்துடன் கூற முடியுமா உங்களால். மாராக உங்களின் கடவுளான ஸ்டாலிம். கார்ல் மார்க்ஸ் போன்றோர் கற்றுத்தந்த வகுத்துதந்த பொருளாதார கொள்கை இன்று அகல பாதாலத்தில் வீழ்ந்த கிடக்கிறது.
14 நூற்றாண்டிற்க்கு முன் தன் தூதர் வாயிலாக இறைவன் வகுத்து தந்த பொருளாதார கொள்கை(இஸ்லாமிய வங்கியியல்) இன்றுவரை மனித சமுதாயத்ற்க்கு அருமருந்தாக விளங்குகிறது விரைவில் அது இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
1.முகமது விண்வெளி பயணம் சென்றாரா இல்லையா என்று குரான் தெளிவாக கூறவில்லை.
விண்வெளி பயணத்தை குறிக்கும் குரான் வசனம் 17.1 பல அடைப்புக் குறி வார்த்தைகள் இடப்பட்டு விளங்க படுகிறது.அது ஏன் என்றால் பதில் கிடையாது.
2.ஹதிதுகள் வேறு பட்ட விவரங்களை தருகின்றன.
காபாவில் இந்த பயணம் சென்றதாக கூறப்படும் நாளில் பல உருவ் வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருந்துள்ளது. ஜெருசலேமில் மமசுதியோ,யூத ஆலயமோ கிடையாது.
3.இஸ்லமியர்களின் 5 நேர தொழுகை இந்த பயணத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
அதனால் இதனை ஏற்று கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.
___________
இதற்கு விளக்கம் அளிப்பது முடியவில்லை(பிடிக்கவில்லை) அது எங்களது நம்பிக்கை என்றால் சரி.இதுவரை 1400 வருடங்களாக யாரும் அளிக்காத விளக்கத்தை எப்படி இப்போது விளக்க முடியும். நம்ம துல்கர்னைன் கதை மாதிரி இது எங்களுக்கு அவசியமில்லை என்று சொல்ல்லப் போகிறீர்கள்.
_______
குரானில் நிரூபிக்க முடியாத ,விளக்கம் அளிக்க முடியாத, நம்பிக்கக் மட்டுமே சார்ந்த விஷயங்கள் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் அதைத்தான்
நாங்களும் சொல்கிறோம்.
___________
இதனை நீங்கள் சொல்லும் பட்சத்தில் பதிவின் தலைப்பில் இருந்து ஒரு புதிய விவாதமாக
1.ஓரிறை கொள்கையின் உண்மை மற்றும் மகத்துவங்கள்.
2.இஸ்லாமிய வங்கியியலின் தத்துவன்,நடைமுறை சிக்கல்கள்
போன்றவற்றை விவாதிக்கலாம்.
அது கூட விவாதம் பக்கத்ஹ்டில்தான்.இப்பக்கத்தில் அல்ல.இப்பக்கத்தில் கூறுவது பதிவின் நோக்கத்தை திசை திருப்பும் முயற்சியாகும்.
__________________
______________
இதையாவது இப்பதிவை
அருளாளனின் அடிமை,
கம்யூனிசம் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமானால் உங்களுக்கு சமூக வரலாறு, பொருளாதார அமைப்பு, உற்பத்தி முறை இவைகளைப் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இவைகள் பற்றி குரானில் காணக்கிடைக்காது.
மீண்டும் நாளை……..
தோழர் செங்கொடி,
//குரானில் வார்த்தைகளுக்கும் சொற்களுக்கும் இடையில் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து அறிவியலை அள்ளிக்கொண்டு வரும் மதவாதிகள் இந்த விண்வெளிப் பயணத்திற்கு என்ன அறிவியலைக் கொண்டு வருவார்கள்?//
தோழர் கேட்ட கேள்வியை கருவாகக் கொண்டுதான் உண்மை பத்திரிக்கையில் “புஷ்பக விமானமும் புராக் விமானமும்” என்ற கட்டுரை வெளியானது. இதற்கு பதிலடி தருவதாக நினைத்து,ஏதோ அறிவியலிலேயே நிரூபிக்க முடியாத விடயங்கள் நிறைந்திருப்பதாக ஒரு போலி விஞ்ஞானி பக்கம் பக்கமாக எழுதியும்,நாத்திகர்களையும் பெரியாரையும் விமர்சித்து பி.ஜேவும் தங்களின் பக்தி வெறி அரிக்க சொறிந்து கொண்டார்கள். அறிவியலில் இன்று நிரூபிக்க முடியாதது நாளை நிரூபிக்கப்படலாம்,அல்லது நிரூபிக்க முடியாமலும் போகலாம் அதுவல்ல பிரச்சினை. பரிசோதனக்குப்பிறகு தான் அறிவியலில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும், ஆனால் இங்கோ கனவுகன்டதையும், கற்பனையையும் உண்மை என பொய்சொல்ல வேன்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குறிய செயலே! இந்த நிர்பந்தம் தான் கடவுளையும் வேதத்தையும் காப்பாற்றி வருகிறது என்பதே உண்மை.
சங்கர் ///முதலில் இந்த வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை அடைப்பு குறி இல்லாமல் தெரிந்து கொள்வோம்.///
அடைப்புக் குறி பயன் படுத்துவது விளங்கிக் கொள்ளும் வண்ணமாகவே .அரபு மொழி நடைக்கும் பிற நடைக்கும் உள்ள வித்தியாசத்தால் விளக்கமே அடைப்புக்குறிக்குள் கொண்டு வரப் படுகிறது.
///வேலையாள என்பவர் முகமது என்று எப்படி கூற முடியும்.ஏனெனில்
17.2 மூஸா பற்றியும் 17.3 நூஹை பற்றியும் பேசுகிறது///
அந்த வசனத்திற்கு ஹதித்கள் மூலம் விரிவுரையாளர்கள் கூறும் விளக்கத்தை ஆதாரத்தோடு கூறி இருக்கும்போது உமது அறை வேக்காட்டுத்தனத்தை ஒதுக்கி வைப்பதே நல்லது..
///அந்த சமயம் மெக்காவில் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள்(360?) இருந்தன.எப்படி புனித மசூதி ஆக முடியும்///
நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்
///.யூதர்களின் ஆலயமும்(சுலைமான் கட்டியது) இடிக்கப் பட்டு அங்கே இல்லை. எந்த மசூதிக்கு சென்றார்?///
பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது.
சங்கர் \\\விண்வெளி பயணத்தை குறிக்கும் குரான் வசனம் 17.1 பல அடைப்புக் குறி வார்த்தைகள் இடப்பட்டு விளங்க படுகிறது.அது ஏன் என்றால் பதில் கிடையாது///
௨௫ ஹதித்கள் முகம்மது நபி[ஸல்] தான் வின் வெளிபயணம் தான் என்பதை தெளிவாக விளக்கும்போது கோமாளித்தனமாக உளற வேண்டாம்
//தெளிவாக விளக்கும்போது //
🙂
அவ்ளோ தெளிவாஆஆஆஆஆஆஆ இருக்கிங்கன்னு தெரியது!
/மதங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியது, அவைகள் வெற்று நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவைகள்////
கலை,
வெற்று நம்பிக்கைகள் 1400 ஆண்டுகளுக்கு மேலாக கோலாச்சிக்கொண்டு இருக்கின்றன. ஏங்கல்ஸ் ,மார்க்சின் கற்பனை காவியங்களாக சினிமா எடுத்தால்கூட [பண்ணை வாழ்க்கையை ஏ படமாக காட்டினால் கூட] தேறாத கம்யுனிசம் இன்று பரிதாப நிலையில் உள்ளது..
வால் பையன் ,அவளோ /// எவளோ
குரங்கின் பரிணாமமே ஆ வும் வால் போல் நீண்டுள்ளதே அப்படி என்ன தவறு கண்டு விட்டீர்?
நன்றி ரபி,
நீங்கள் மேற்கோள் காட்டிய வரிகளில் “சொற்களுக்கும், எழுத்துகளுக்கும்” என்று எழுத நினைத்துத் தான் “வார்த்தைகளுக்கும் சொற்களுக்கும்” என தவறுதலாக எழுதியிருக்கிறேன். இது நீங்கள் மேற்கோள் காட்டிய பிறகுதான் கவனத்திற்கு வந்தது. திருத்திவிட்டேன்.
நன்றி நண்பர் இப்ராஹிம்
இந்த அடைப்புக் குறிக்குள் உள்ள விவரங்கள் மூல மொழியில் இருக்காது.
அடியார்__முகமது
புனித மசுதி__மெக்கா
தூர மசுதி__ஜெருசலேம்
1. குரான் 17.1 ஐ ஹதிதுகள்(200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப் பட்டவை) துணை கொண்டே முகமது என்று கூற முடியும்.ஹதிதுகளின் நம்பகத் தன்மை பொறுத்தே இவ்விவரங்களை நம்ப முடியும்.
2.//நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்//
யார் அந்த நேர்மையான அதிகாரி?
சகதியில் விழுந்தார் என்றால் என்ன செய்தார்?
கி.பி 621ல் காபாவில் சிலைகள்,அவற்றின் வழிபாடு, இருந்தாலும் புனித மசூதி என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.
கிரி வலம் முகமது நாள் முதல் இன்றுவரை செய்வதால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
_____________
1647. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினார்கள்.
“இதை அறிவித்த பிறகு, ‘நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்னும் இறைவசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதினார்கள்” என அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
Volume :2 Book :25
1649. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாயையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.
Volume :2 Book :25
_____________
3.//பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது//
இன்னொரு கோஷ்டி வேறு பெயர் சொல்லுது.அது வேறு விஷயம்.
ஜெருசலேமில் சுலைமான் கட்டிய ஆலயம் இல்லை.வெற்று இடத்தை பார்த்து மசுதி என்று கூறினார்.
இப்போது சரியான விளக்கம்
அழைத்து சென்றவர்இறைவன்
செல்லப்பட்டவர்_முகமது(ஹதிதின் படி மட்டும்)
புனித மசுதி______சிலைகள் உள்ள காபா
தூர மசூதி____ வெற்று இடம்
உங்களின் விளக்கப் படி அடைப்புக் குறி போட்டால் எப்படி இருக்கும்?
___________
ரபி
///உண்மையான விண்வெளி பயணம் சென்றுவந்த தினத்தைக் கூட யாரும் உலகில் கொண்டாடுவது இல்லை. ஆனால் ஒரு கற்பனையான டுபாக்கூர் பயணத்திற்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்புத் தொழுகை என கொண்டாடி மகிழ்வதுதான் இவர்களின் பகுத்தறிவாம்(?),
விண்வெளி பயணத்தை காட்டி,இஸ்லாம் ஒன்றும் பூச்சாண்டி காட்டவில்லை.விண்வெளி பயணத்தை உறுதி படுத்தும் ஹதித்கள் அதை வருடந்தோறும் கொண்டாடுவதர்க்கோ தொழுகை நடத்துவதற்கோ சான்றாக இல்லை.
கம்யுனிசம்தான் உலகதீர்வு என்று சொல்லிக் கொண்டு அரபு பெயர்களையும் இஸ்லாமிய திருமணமாக பதிவு செய்யப்பட்டதையும் மாற்ற திராநியற்றதொடு புரட்சி திருமணம் என்று கொள்கை புரட்டாக நாங்கள் கொண்டாடி கொண்டு இருக்கவில்ல்லை
ஹதிதுகள்(புஹாரி) கூறும் இரவு பௌஅண தொடக்கம்
__________
1.காபாவில் இருந்து சுத்தம் செய்யப் பட்டு முதல் வானம்
________________________________________________
3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…..
__________________
2 இங்கு படுதத இடம் கொஞ்சம் குழப்பம் காபாவின் அருகில் எங்கோ
__சுத்தம் செய்யப் பட்டு___முதல் வானம்
______________
3887. அப்பாஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்.
நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்… அல்லது ஹிஜ்ரில்… படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), ‘அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), ‘ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது.
_______
3 மூன்று வானவர்கள்.அவர்களுக்கு முகமது யாரென்று தெரியாமல் மற்றவர்களை கேட்கிறார்.
காபாவில் சுத்தம் செய்து பிறகு பைத்துல் முகத்தஸ்(ஜெருசலேம் மசுதி பிறகு முதல் வானம்
______________
7517. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒரு நாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா(ரலி), முஹம்மத்(ஸல்), ஜஅஃபர்(ரலி) ஆகியோரை நோக்கி) ‘இவர்களில் அவர் (முஹம்மத் – ஸல்) யார்?’ என்று கேட்டதற்கு நடுவிலிருந்த(வான)வர் ‘இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்’ என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், ‘இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்’ என்று கூறினார். அன்றிரவு இவ்வளவு தான் நடந்தது. அடுத்த(நாள்) இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் (-உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கமாட்டா. பிறகு அந்த வானவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து ஸம்ஸம் கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஏற்றார்கள்.158
அவர் நபி(ஸல்) அவர்களின் காறையெலும்பிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றிலிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தம் கையால் நபியவர்களின் இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி, அவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதனை நபியவர்களின் இருதயத்திலும் தொண்டை நாளங்களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார்.
_______________
ஏன் இந்த் மூறு புஹாரியின் ஹதிதுகளில் வித்தியாசம்.ஜெருசலெம் போனதாக ஒரு ஹதிது மட்டுமே கூறுகிரது.
எது சரி?
_______________
இன்னும் விண்வெளி பயணம் தொடங்கவில்லை
COMING SOON
_________________
//.யார் அந்த நேர்மையான அதிகாரி?
சகதியில் விழுந்தார் என்றால் என்ன செய்தார்?/////
நேர்மையான அதிகாரி[ புனித மக்கா ]யை சங்கர் தள்ளி விட்டதால் சகதியில் விழுந்தாலும் [குறைஷிகள் சிலை வைத்து வணங்கினாலும் ] அவர் மிஸ்டர் கிளீன் தான் .[புனித மசூதிதான் ]
1647 1648 ஹதித்களை எதற்காக சுற்றி வளைத்துள்ளீர்கள்?
புனித மசுதி______சிலைகள் உள்ள காபா
தூர மசூதி____ வெற்று இடம்
நியாயவான்கள் அவர் சதிகாரர்களால் சகதியில் தள்ளி விடப்பட்டு சகதியுடன் வந்தாலும் மிஸ்டர் கிளீன் என்றுதான் சொல்லுவார்கள்.
நீதிமான்கள் அங்கு பள்ளிவாசல் இடிக்கப்பட்டாலும் அதை பாப்ரி மசூதி என்றே கூறுவார்.சதிகாரர்கள் அதை சர்ச்சைக் குரிய பகுதி என்று ஆக்கிரமிப்பாளர்கள் வேறு பெயரையும் கூறுவார்கள்
sankar///ஏன் இந்த் மூறு புஹாரியின் ஹதிதுகளில் வித்தியாசம்.ஜெருசலெம் போனதாக ஒரு ஹதிது மட்டுமே கூறுகிரது.
எது சரி?////
கலை>சங்கர் மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்றார்
வால்பையன்>சங்கர் சென்னை சென்றார்.
ரபி>சங்கர் மதுரையிலிருந்து சென்னை சென்றார்
எது சரி?
sankar////இன்னும் விண்வெளி பயணம் தொடங்கவில்லை
COMING SOON////
கலகலக்கும் பண்ணை வாழ்க்கை எப்போது வரும்?
// சங்கர் தள்ளி விட்டதால் //
//சதிகாரர்களால் சகதியில் தள்ளி விடப்பட்டு//
நண்பர் இப்ராஹிம்,
என்னை சதி செய்பவன் என்று கூறி விட்டீர்களே இப்ராஹிம்.
ஆனால் சதி செய்பவர்களிலேயெ சிறந்தவர் யார்?
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்..
சங்கர். ////தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்…/////
இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்து விடலாம் .என்று கங்கணம் கட்டிக் கொண்டு சதித்திட்டம் வகுக்கும் சவடால் கம்யுனிச வாதிகளுக்கும் அமெரிக்கரகளுக்கும் அது போன்றே பதிலடி கொடுப்பவன். உங்களது சதிகள் அவனது பதிலடி முன் தூள் தூளாக நொறுங்கி போகும்.
ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட இஸ்லாம் சொல்லித்தரவில்லை.
தோழரே !
முஹம்மதியர் இபுறாஹிமே !
செங்கொடியின்
ஆசிரம சிஷ்யரே !
அனைத்து தவ்ஹீத் ஜமாத்தின்
அருள் பெற்ற அருமை சீடரே !
தமிழக முஹம்மதியர்களின்
ஆஸ்தான அங்குசமே !
அண்ணனின் தம்பியே !!!
கடைப்பக்க குத்தகைக்காரரே
விவாத வித்தகரே
முகப்பின் முப்பது கட்டுரைக்கும்
பதிலாமல் விவாத
தனித்தொகுதியில் சுயேச்சையாக
மக்கள் கூட்டமில்லா
மேடையில் கதைக்கும் தோழரே !
முன்முகப்புப்பக்கத்திற்கு
வருவீரோ !!!
ஜியாரத் செய்வீரோ !!!
உங்கள் படையல் அவியலை
மூட்டைகளை அவிழ்ப்போரோ !!!
வெள்ளைக் குதிரை(?)யில் விண்வெளி பயணம்
தொடக்க பாடல்
திரு நகூர் அனிஃபா அவர்களின் கருணைக் கடலாம் என்ற மெட்டில் பாடவும்.
_________
அருமை நபியாம் அண்ணல் முகமது பயணச் சரிதம் கேளுங்கள்
இணையில்லாத இறைவனின் தூதர் அற்புத பயணம் பாருங்கள்
_________
ஒரு நாள் இரவு புனிதப் பள்ளி பைத்துல் ஹராம் அருகினிலே
இறைவனை தொழுது இனிதே துயின்றார் நல்ல அடியார் முகமதுவே.
வானவர் வந்து ஜம்ஜம் நீரிலே சுத்தம் செய்தார் உள்ளத்தையே
வாகனம் வந்தது ஜிப்ரீலோடு வானம் அழைத்து சென்றிடவே
__
இறைத்தூதராம் நபி
அவர் வாகனம்தான் புராக்
________
முன் கதை சுருக்கம்.
_________________________
ஜம்ஜம் நீரால் இறைத்தூதரின் உடல் இதயம்(உள்ளம்? நன்றி திரு பி.ஜே)சுத்தம் செய்யப்பட்ட்டு விட்டது.ஒரு வழியாக காபாவில் இருந்தோ அல்லது அருகில் இருந்தோ,ஜெருசலேமுக்கு போயும் போகாமலும் ஜிப்ரீலோடு புராக்கில் ஏறி முதல் வானத்தை அடைகின்றனர்.
____________________________
பயணம் தொடங்கியது
காட்சி.1. முதல் வானம்
________
புஹாரி 3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
….
நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்” என்றார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்கள். …..
__________________
புஹாரி 349
…
முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் ‘திற’ என்றார்கள். அவ்வானவர், ‘யார் அவர்?’ என்று வினவியதற்கு ‘நானே ஜிப்ரீல்’ என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
___________
7517
…
(பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், ‘யார் அவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் வந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னுடனிருப்பவர் முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) ‘ஆம்’ என்றார்கள். ‘அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!’ என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.
அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, ‘அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே ‘ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன நதி ஜிப்ரீலே?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்…
________________
காட்சி 2. ல் இரண்டாம் வானம் இன்னும் வியத்தகு சம்பவங்கள் நிறைந்தது.
DONT MISS IT
Under the Law ( ix ) section iii. News Publication & Duplication and Imitation of Articles Act, Mr.Shankar must pay compensation to Indian@Indian.com for above screenplay & script.
FYKI
நண்பர் இபுறாஹிம்
//விண்வெளிப் பயணத்தை உறுதிபடுத்தும் ஹதீதுகள்…….//
குரானோ ஹதீதுகளோ வெறும் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் அது உறுதிபடுத்தப்பட்ட பயணமாகிவிடுமா?புஷ்பக விமானப் பயணம்,முருகனின் மயில் வாகனப் பயணம் இவைகளும் உறுதிபடுத்தப்பட்ட பயணமாக எடுத்துக் கொள்ளலாமா?இப்படித்தானே மாற்று மத நண்பர்களும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்?இதுபோல் ஒன்றுக்கும் உதவாத கற்பனைக் கட்டுக்கதைகளையும் மூட நம்பிக்கைகளையும் களைந்துவிட்டு சுயமாக சிந்திக்கத்தான் சொல்கிறோம். தலைப்பு கற்பனையான விண்வெளிப்பயணத்தைப் பற்றித்தான்.கம்யூனிசத்திலும் இஸ்லாத்திலும் உள்ள நல்ல கொள்கைகளில் எது சிறந்தது என்ற தலைப்பு வரும்போது அது பற்றி சிந்திக்கலாம் நண்பரே! தவிர நல்லவைகள் எங்கிருந்து கிடைத்தாலும் நமதாக்கிக் கொள்வோம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதுபோல் பயன்படாத குப்பைகளைக் களைந்தெரிவதிலும் ஆர்வம் உண்டு.
ஆள் இல்லா வெறும் விண்வெளிக்களம் இன்று பயணம் செய்வதினால் உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே பயன் உண்டு.பல்லாயிரமாண்டுகளுக்கு முன் பயணித்ததாகக் கூறிக்கொள்ளும் விண்பயணத்தால் இன்று யாருக்கு பயன்? முன்னவர்களைப்போல் நாமும் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என சிந்திப்பது அறிவின் வளர்ச்சி,அவர்கள் பயணித்ததையே நினைத்துக் கொண்டிருப்பது அறிவின் வீழ்ச்சி.
அறிவற்ற அரஃபி !
Space Traveல் பற்றி
செங்கொடி/இபுறாஹிம்
space விடாமல் பேசும் போது
disturb பண்ணாம விலகுவீராக !
பூமி எனும் கிரஹ வாகனம்
நம்மனைவரையும்
Without -ல ஏற்றிக்கொண்டு
விண்வெளியில் பயணிக்கும்
விந்தையை இப்போது
விவாத பொருளாக்கி
வித்தை காட்டுவோமா !!!
அன்பரே ரபி,
இஸ்லாமை விமர்சிக்க வேண்டுமென்றால் விமர்சனம் செய்யுங்கள். இதில் எதற்கு முருகன்? முருகன் தட்டையான உலகத்தை சுற்றி வரவில்லை. உருண்டையான உலகத்தைத்தான் சுற்றி வந்தான். (தட்டையான உலகத்தை எப்படி சுற்றி வர முடியும்?) இந்தப் பக்கம் போனால் சூரியன் உதிக்கும் இடத்தையும் நேர் ஏதிர் திசையில் பயணம் செய்து சூரியன் மறையும் இடத்தையும் அலெக்ஸாந்தர் பார்த்ததாக குரான் பீலா விடுவது போலெல்லாம் இந்து மதத்தில் இல்லை. தேவையில்லாமல் இந்து மதத்தை வாருவதை விட்டுவிட்டு வேறு வேலை ஏதும் இருந்தால் பாருங்கள்.
மேலும் இந்து மதத்திலும் புராணங்களும் ஆபிரஹாமிய மதங்களில் இருப்பது போல நேரடியாக பொருள் கொள்ள வேண்டும் என்று எந்த படித்த இந்துவும் சொல்லமாட்டார். தமிழில் பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வேதங்களை மறை என்றுதான் தமிழ் குறிக்கிறது.. மறைந்துள்ள விஷயங்கள். நேரடியாக பொருள் கொண்டு உளறுவதை நிறுத்துங்கள்.
மேலும் முருகன் உலகத்தை சுற்றிவந்ததாக சொல்வது தாய்தந்தையரே உலகத்தை விட முக்கியமானவர்கள் என்ற உண்மையை சொல்ல சொல்லப்பட்ட கதை.
முகம்மது நபி தான் ஏழு வானங்களுக்கு மேல் போய் வந்தேன் என்று சொல்வது அரபி மக்களை ஆ என்று பிரமிக்க வைக்க விட்ட பீலா. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
/ இந்து மதத்திலும் புராணங்களும் ஆபிரஹாமிய மதங்களில் இருப்பது போல நேரடியாக பொருள் கொள்ள வேண்டும் என்று எந்த படித்த இந்துவும் சொல்லமாட்டா/
இந்த வசனங்களுக்கு நேரடியாக பொருள் கொள்ளாமல் சுற்றி வந்து மறைத்து எப்படி பொருள் கொள்வது என்று இந்து மத வித்தகர் நிலா அவர்களை கேட்டு கொள்கிறேன்.
_______________
பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்’ – மனு த.சா.ஆ .1 சு., 100
‘சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்’ (மனு த.சா.அ. 8.சு 270)
‘பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்’ – மனு (த.சா.அ 2 சு,31)
_______________
இன்னும் நிறைய இருக்கு வேண்டுமென்றால் தருகிறேன்.
//மேலும் முருகன் உலகத்தை சுற்றிவந்ததாக சொல்வது தாய்தந்தையரே உலகத்தை விட முக்கியமானவர்கள் என்ற உண்மையை சொல்ல சொல்லப்பட்ட கதை./
/
இந்து மத வித்தகர் நிலாவின் கூற்றுபடி,
முருகன் உலகம் சுற்றிய கதை அன்னை தந்தை பெருமையை கூற இட்டுக்கட்டிய கதை என்றால் இதே போல் இன்னும்ச சில
1.இராமாயணம் என்பது ஒரு தார மணத்தின் அருமை பெருமைகளை எடுத்து சொல்வத்ற்காக கூறப்பட்ட கற்பனை கதை.
ஆகவே இராமஜன்ம பூமி,இராமர் பாலம் என்று கூறுவது தேவையற்றது.
2.அண்ணன் தம்பி ஒற்றுமையாக வாழ வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட கற்பனை கதை மஹாபாரதம்.
ஆகவே கிருஷ்னர் பகவத் கீதை உரைக்க வில்லை.
3.விஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம் பரிணாம்த்தை விளக்கும் வேத உண்மையே தவிர விஷ்னு அவதாரங்கள் அனைத்தும் பொய்.
4.மகர ஜோதி என்பது மனிதனைன் செயலே ஆகவே சென்று உயிரிழக்காதீர்.
5.ஆதி சங்கரர் கூடு விட்டு கூடு பாய்ந்து அடுத்தவன் மனைவியோடு குடும்பம் நடத்தியது கூட தத்துவமே
6.அசுவமேத யாகம் கூட தத்துவமே.
7.இந்திரன பல பெண்களை சீரழித்ததும் தத்துவமே.
8. தேவர் அசுரர் யுத்தம் என்பதும் நன்மை தீமை போராட்டமே
9.சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் செய்வதும் தத்துவத்தின் அரங்கேற்றமே.
10.ஜெயேந்திரன்,நித்யானந்தன்,பிரேமானந்தன் பலரும் கிருஷ்ணன் வழியில் நடத்தியதும் தேவலீலையாம் தத்துவமே
இந்தியன்
வித்தை காட்டுவதும்
வியப்பில் ஆழ்த்துவதும்
புட்டபர்த்திகளின்
விபரீத புத்தி கூர்மை
விலை போகும் வியாபார
விந்தை அறிவு
எனக்கில்லைதான்.
//வித்தை காட்டுவதும்
வியப்பில் ஆழ்த்துவதும்
புட்டபர்த்திகளின்
விபரீத புத்தி கூர்மை
விலை போகும் வியாபார
விந்தை அறிவு
எனக்கில்லைதான்.//
குரானில் வித்தையோ வியப்போ இல்லையானே!
ஓ, இந்தியாகாரன் பண்ணா தான் அது வித்தை, அரேபியாகாரன் பண்ணா அது உண்மையா!?
தோழர் சங்கருக்கு மிக்க நன்றி
நிலா,
//தட்டையான உலகத்தை எப்படி சுற்றிவர முடியும்?…குரான் பீலாவிடுவது போல் இந்து மதத்தில் இல்லை//
எப்படி இரணியாக்ஷ்ன் விஷ்ணுவைத் தேடும் போது தடையாக இருந்த பூமியை பாயாகச் சுருட்டி வைத்துக் கொண்டது போல் பீலா விடுவதா? சுருட்டப்பட்ட பூமியை வராக மூர்த்தி(பன்றி)வெளிக்கொணர்ந்து அதனை நிலைப்படுத்தி வைகுண்டம் அடைந்தாரே அந்தப்பீலாவைவிடவா இது மோசமானது?
//மறைந்துள்ள விசயங்கள்..நேரடியாக பொருள் கொண்டு உளறக்கூடாது//
குளத்தில் பெண்கள் குளிக்கும்போது ஆடைகளைக் களவாடி வைத்துக் கொண்டு கிருஷ்ணன் மறைந்திருந்து பார்த்த அந்த மறைவான விசயங்கள் என்னென்னவோ? ஒரு கடவுள் செய்கிற வேலையா இது?
நிலா
//தாய் தந்தையரே உலகத்தைவிட முக்கியமானவர்கள் என்ற உண்மையை சொல்ல, சொல்லப்பட்ட கதை…//
ஓ..கதையா!ஏதோ எங்க சுயபுத்திய வெச்சு தோழர் செங்கொடி,சங்கர் மற்றும் நண்பர் இபுறாஹிம் போன்ற அறிவாளிகளிடம் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டிருக்கின்றோம்,அதனால கதை கேட்கிற மூடு இல்லை.மேலும் சுட்டி டிவி பார்ப்பதையெல்லாம் விட்டுவிட்டோம்.அம்புலிமாமா கோபித்துக் கொண்டு போய்விட்டார் யாரும் கதை படிப்பதில்லை என்று.வேதாளம் கூட முருங்கை மரத்தில் ஏறிவிட்டது சீண்டுவார் யாருமில்லை என்பதால்,எனவே உண்மையை மட்டும் சொல்லுங்கள் பிறருக்கு பயன் தரும் வகையில்.
வால் பையன்
//ஓ..இந்தியக்காரன் பண்ணாத்தான் அது வித்தை,அரேபியாகாரன் பண்ணா அது உண்மையா?//
இந்தியன் என்கிற ஒரு பயணர் பெயரைத்தொடர்ந்து எழுதியதால் வந்த குழப்பம் என நினைக்கிறேன் தவறுக்கு மன்னிக்கவும். வித்தையில் இந்திய வித்தை அரேபிய வித்தை என்றெல்லாம் இல்லை. வித்தை,அற்புதம் காண்பித்து ஏமாற்றும் புத்தியுடையவர்கள் போல பொய்யறிவு எனக்கில்லை என்பதே அதன் பொருள்.
சில விஷயங்களை தெளிவு படுத்தி விடலாம்.
1.இந்த தொடர் பதிவுகளில் ஒரு பொது உடமை தோழர் செங்கொடி இஸ்லாமின் மத புத்தகங்களான குரான்,மற்றும் ஹதிதுகள் அவற்றில் குறிப்பிடப் பட்ட சில கருத்துகள்,மற்றும் சம்பவங்களை கூறி ,அதன் மீதான தனது கருத்துகளை கூறி வருகிறார்.
2.தமிழில் இஸ்லாம் மீதான முதல் ஆக்க பூர்வமான விமர்சனம் என்று இத்னை கூறலம். ஏனெனில் ஒரு இந்துத்வவாதியோ,ஒரு கிறித்தவ மத வாதியோ இஸ்லாமை விமர்சிக்கும் போது ,முகமது மற்றும் செய்த சில முஸ்லிம் அரச்ர்கள் செயல்களை கூறி எல்லா முஸ்லிம்களும் இப்படித்தான் என்று எளிதாக கூறிவிடுவார்கள்.
3.இப்பதிவு இஸ்லாமிய மதவாதிகள் எப்படி கருத்துகளை திரித்து கூறுகிறார்கள்.சில மத பழக்க வழக்கங்களுக்கு குரானில் ஆதாரம் இல்லை என்பதையெல்லாம் இப்பதிவு புட்டு புடு வைத்தது.(உ.ம். சுன்னத்,ஐந்து நேர தொழுகை,வெள்ளி கிழமை ஜுமா தொழுகை,ஜகத் 2.5%).
4.குரானின் வரலாறு,ஹதிது தொகுக்கப்பட்டது எல்லாம் மனிதர்களால் தங்கள் அரசியல் இலாபத்திற்க்காக செய்யப் பட்ட செயல்கள் என்பதும் இப்பதிவில் கூறப்பட்டது.
5.மதப் புத்தகங்களில் அறிவியல் என்பது ஒரு வார்த்தை விளையாட்டு என்பதும்,குரானில் கூறப்படும் பல சம்பவங்கள்,அத்தாட்சிகள் ஒன்று கூட இப்போது காட்ட முடியாது என்பதும் குறிப்பிட தக்கவை.
6. இஸ்லாமும் பிற மதங்களை போன்ற் நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்பதை விவாதம் செய்த அனைவருமே கூறிவிட்டார்கள்.
7.இது இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும்.எங்கள் மதகுரு மத கருத்துகள் அனைத்தையும் அறிந்தவர்,விவாதத்தில் வ்ல்லவர்,அவர் கூறுவது எல்லாம் சரியானது என்று இப்போது யாரும் சொல்ல மாட்டார்கள்.
______________
எல்லா மதங்களும் ஒரே மாதிரியே இருக்கின்றன. பலர் மதங்களை பற்றி அவர்களின் மத புத்தகத்தில் இருப்பதை கூறினால் ஏன் கூறுகிறாய் என்று கேட்கிறார்கள்.
எல்லா மத புத்தகங்களும் குறைந்த பட்சம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டவை.அக்கால மனிதர்களுக்கு என்ன அறிவு இருக்குமோ அந்த அளவுக்கெ அப்புத்தகத்திலும் இருக்கும்.
இதற்கு எந்த மத புத்தக்மும் விலக்கு இல்லை.
______
விண்வ்ளிப் பயணத்தில் முகமது நைல் மற்றும் யூப்ரடிஸ் நதியின் ஆரம்பம் சொர்க்கத்தில் இருப்பதை பார்க்கிறார்.
கங்கையை பகீரதன் சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வருகிறார்.
_____
இங்கே புராக் என்றால் அங்கே காமதேனும்,கருடன்,ஐராவதம்
______________________
பூமியை அரபி மொழி குரானில் பெண்ணாகவே கூறுகிறார்கள்.
அரபி மொழியில் எல்லா பெயர் சொல்லுக்கும் பால் உண்டு.
இந்து புராணங்களில் பூமி பெண்ணாகவே உருவக படுத்தப்படுகிறாள்.
இஸ்லாமிய எமதர்மன் பெயர் அஜ்ஜையர்.
இஸ்லாமிய அப்சரஸ்களின் பெயர் ஹவுரிஸ்
________
விதி ,எல்லா விஷயங்களும் அடங்கிய குறிப்பெடு இரணடிலும் உண்டு.
இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கும் போது ஒன்றை விமர்சிக்கும் போஒது மற்றொன்றை கூறாமல் இருக்க முடியாது.
_______
நாகரிகமாகவே விமர்சிக்கிறோம் .முடிந்தால் பதில் விமர்சனம் பதிவிடுங்கள் ,
sir nan ar kanavay pj udan vivathathil kalanthu konda anubavam irukirathu nanthan vetri avarkal kurum NADTHIGA vivathm aan Uudanpadikaiyin paril than nadathathu vivatham sanravarudam novambar nadanththu anaku apadi tamilil ADIPATHU ANDRU THARIYAVILAI THAGALIN KURAN VILAKA VIVATHA KADURAI NETIL BARTHA PINBU TWO DAYS THUNGA VILAAI REALY GREAT VALGA VALAMUDAN sanker sir enidam pesa virumbinal my cell no 9171 233422 call panalam
my email vetridan@yahoo.co.in kathiuerkiren
பாவம். இவ்வளவுநாளாக இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி ஒன்றும் தெரியாமல் இவ்வளவு பேர் இருப்பது ஆச்சரியம்தான். என்ன செய்வது? நேரு எழுதியதுதான் சரித்திரம், ராகுல் காந்தி சொல்வதுதான் உண்மை, கார்ல் மார்க்ஸ் சொன்னதுதான் பிரபஞ்ச உண்மை என்று நினைக்கும் கூட்டம். குரான் என்ற ஒரு புத்தகத்தை கட்டி அழும் முஸ்லீம்கள் போல, பைபிள் என்று ஒரு புத்தகத்தை கட்டி அழும் கிறிஸ்துவர்கள் போல, டாஸ் காபிடல் என்று ஒரு புத்தகத்தையும் கார்ல் மார்க்ஸ் என்ற நபியையும் தொழும் கூட்டத்துக்கு இதிஹாசத்துக்கும், புராணத்துக்கும், கதைக்கும் நீதி புத்தங்களுக்கும் வித்தியாசம் தெரியாது.
மனுநீதி விதுர நீதி போண்றவை இந்துக்களின் வேத நூற்கள் அல்ல. அதாவது தெரிந்துகொள்ளுங்கள். மனு நீதியை வைத்து யாரும் வணங்குவதில்லை. மனு நீதி அநீதியான பல விஷயங்களை சொல்லியிருக்கீறது என்பதை எல்லா இந்துக்களுமே ஒப்புகொள்வார்கள். யார் ஒப்புகொள்ளவில்லை என்றாலும் நான் ஒப்புகொள்கிறேன். மனு நீதியை கொளுத்திவிட்டாலும் இந்து மதம் அழியாது. ஏனெனில் அது ஒருபுத்தகத்தில் உட்கார்ந்துகொண்டில்லை. அம்பேத்கார் எழுதியதை இன்றைய நீதி என்றுதான் எல்லா இந்துக்களும் ஒப்புகொள்கிறார்கள். சும்மா மனுநீதிய காட்டி காட்டி உங்களை நீங்களே உருவேற்றிகொள்ளவேண்டாம். நானே சொல்கிறேன். மனுநீதியை கொளுத்துங்கள்,. அது அந்த கால சட்டம், இது இந்த கால சட்டம். சட்ட திருத்தத்தை இன்றைய மத்திய அரசாங்கமும் செய்கிறது. அதுதான் ஒரு முன்னேறும், காலத்துக்கு தகுந்தாற்போல, மாறும் dynamic சமூகத்துக்கு அழகு. என்னாளும் மாறாத சட்டம் என்று பெண்களை பர்தாவுக்குள் திணிக்கும் சட்டத்தை இந்துமதம் சொல்லவில்லை. காலத்துக்கு காலம் சட்டம் மாறும் என்றுதான் கீதையே சொல்கிறது. விமர்சனம் செய்வதற்கு முன்னால் கொஞ்சமாவது படியுங்கள்.
இந்து புராணங்களில் பூமி பெண்ணாக உருவகபப்டுத்தப்படுகிறார் என்றால் எப்படி? பூமியின் முகம் எங்கே இருகிறது மூக்கு எங்கே இருக்கிறது என்று கேட்கலாமே? இன்னும் கேவலமாகக்கூட கேட்கலாமே? நிலமென்னும் நல்லாள் நகும் என்று திருவள்ளுவர் சொன்னால், புமிக்கு எங்கே வாய் இருக்கீறது. பல்லை காடடி சிரிக்குமா என்று திக மாதிரி பேசி, திருவள்ளுவர் ஒரு முட்டாள் அடிமடையன் என்று சொல்லக்கூடிய கிராமத்து நாஸ்திகன் லெவலை தாண்டி சிந்திக்க தெரியாத மடையக்கும்பல் இது.
நீங்கள் நாகரிகம் பேசுவதுதான் விந்தையிலும் விந்தை!
varaha என்று ஆங்கிலத்திலேயே போட்டு இமேஜஸ் தேடிப்பாருங்கல். பாதி பூமியை பெண்ணாக வைத்து வரும். பாதி இமேஜ்கள் பூமியை உருண்டையாக காட்டி பழங்கால சிற்பங்கள் வரும். பூமி உருண்டை என்று தெரியும் பழங்காலத்து இந்துக்களுக்கே.
தசாவதாரம் என்பது உயிரினங்களின் படிபப்டியாக மாறும் நிலையை சொல்வது. நீரில் மீனாக இருந்து, பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமையாகி, பிறகு நிலத்தில் மட்டும் வாழும் பன்றியாகி, பிறகு மிருகமும் மனிதனுமான நரசிம்மாகி, பிறகு வாமனராகி படிப்படியாக மாறும் உயிர்களை பற்றிய புராதன பரிணாம சிந்தனை.
முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். பிறகு தேவைப்பட்டால் விமர்சிக்கவும் தெரியவேண்டும். ஒரு மதநம்பிக்கை அநீதியான விஷயத்துக்கு துணை போகிறது என்றால் விமர்சிப்பதில் ஒரு தவறும் இல்லை. ஜாதியை விமர்சிக்கத்தான் வேண்டும். அது அநீதி. ஆனால், ஜாதி முறையை விட மிகக்கொடுமையான முறை அடிமைமுறை. இன்றும் இஸ்லாமிய நாடுகளில் மௌரிட்டானியா, சூடான், மொராக்கோ, சவுதி அரேபியா என்று பரவிக்கிடக்கும் இஸ்லாமிய அடிமைமுறையை இஸ்லாமே வழிநடத்துகிறது. ஆனால் இஸ்லாம் ஏதோ சமத்துவமான மதம் போலவும் அடிமைமுறை மனித்னுக்கு மிகவும் நல்லது போலவும் ஏதோ ஜாதிமுறைதான் உலகத்திலேயே மிக கெட்டது போலவும் பீலா விடுவது ஏன்? இந்தியாவில் ஜாதிமுறையினால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்புகொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்துக்கள் வழங்கினார்கள். எப்போதாஅது அடிமைமுறையால் கருப்பர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்புகொண்டு அது மாதிர்யான இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்துவர்களோ எந்த நாட்டிலாவது வழங்கியிருக்கிறார்களா?
இளிச்சவாய் கிடைத்தால் ஏறி மிதிக்கலாம் என்ற வாய்ச்சவடால் வீரம் தான் உங்களிடம் தெரிகிறது. அறிவு தெரியவில்லை. நியாயமும் உங்களின் வார்த்தைகளில் இல்லை
அன்புள்ள நிலா
மதத்தின் பாதுகாவலராக கருதிக் கொள்வது நீங்கள் மட்டுமல்ல.உங்களுக்கு உங்கள் நம்பிக்கை உங்கள் உரிமை.அதனை பதிவிடலாம்.ஒருவர் பதிவிற்கு மறுப்பும் சொல்லலாம். ஒருவரை இந்த மாதிரித்தான் பதிவிட வேண்டும்.நீங்கள் மத கொள்கைகளை பார்க்கும் விதமாக எல்லாரும் பார்க்க வேண்டும் என்பது சரியா? இப்பதிவில் இஸ்லாம் மீது ஆய்வு செய்யும் போது ஒத்த கருத்துகள் எங்கு இருந்தாலும் சுட்டி காட்டுவோம்.
____________________
இந்து மதம் பற்றிய பதிவுகளில் (மகர ஜோதி ..) உங்கள் மறுப்புகளை ஏன் காட்டுவது இல்லை.
இராமர் 17.5 இலட்சம் ஆண்டுகளுக்கு அயோத்தியில் பிறந்தான் என்றுசொன்ன ஆள்தானே நீங்கள்?
தசாவதாரம் என்பதை கருத்தாக பார்க்க வேண்டும் என்கிறீர்கள்.
எது சரி?
_________
அறிவியலின் படி மனிதன் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவில் உருவாகி அங்கிருந்தே பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தான்.
இந்து மதத்தின் படி எப்படி?
இன்னும் ஒரு விஷயம்.பல இஸ்லாமிய நண்பர்க்களுடன் இப்பதிவுகளில் விவாதித்து உள்ளேன்.பல்ர் நிலா போலவேஏன் ஆய்வு செய்கிறீர்கள் என்றே கூறினர்.மத வாதிகளில் வித்தியாசம் இல்லை மத விஷயங்களை மறைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.
முதலில் அப்படி இல்லை என்பதும்,அது அந்த கால கட்டத்திற்க்கு சொல்லப் பட்டது என்பதும்,ஒரு குறியீடு என்பதும் ஊரை ஏமாற்றும் வேலைகள்.
_____________
நண்பர் இப்ராஹிம் அவர் முடிந்த வரை விளக்கம் கொடுத்தாரே(கொடுக்கிறார்) தவிர ஒரு தடவை கூட பதிவுகள் இஸ்லாம் குறித்து எழுதாதீர்கள் என்று கூறியது இல்லை.
சூத்திரன் வேதம் கேட்க கூடாது,படிக்க கூடாது என்பது அந்த காலம்.
________
விண்வெளி பயணம் பற்றிய விவாதம் தொடர்கிறது.
முதல் வானத்தின் முதல் பிரச்சினை
_________________________________________________________
முதல் வானத்தில் ஆதம் அவர்களை முகமது சந்திக்கிறார். ஆதமுக்கு வலது இடது புறங்களில் சொர்ர்கம்,நரகம் ஆகியவற்றை பார்த்ததாகவும் அதில் மக்கள் இருந்ததாகவும் ஹதிதுகள் கூறுகின்றன.
_______
புஹாரி 349
முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
_____
1. கியாமத் நாளில்தான் அனைவரையும் உயிராக்குகிறார் இறைவன்
__________
22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
_________
45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
_____
கியாமத் நாளுக்கு முன்பே வானங்களில்,சொர்க்கம்,நரகம் ஆகியவற்றில் மனிதர்கள் எப்படி வந்தார்கள்?
குரானுக்கு முரண்பட்ட ஹதிது வசனங்களை நிராகரிக வேண்டுமல்லவா?
அப்போது விண்வெளி பயணம் குரானுக்கு முரண்பட்டது. சரியா?
___________
அய்யப்பன் கோவிலுக்கு போகிறவர்கள் மகரஜோதிக்காகத்தான் போகிறார்கள் என்று கருதிக்கொள்ளும் உங்களை போன்ற “அறிவுஜீவிகளிடம்” என்ன சொல்லி புரியவைக்க முடியும். மகரஜோதி மனிதன் உருவாக்குவதுதான் என்று 1980இலேயே தெரிந்துவிட்டாலும் அய்யப்பன் கோவிலுக்கு போக்ம் கூட்டம் குறைந்துவிட்டதா?
இப்ராஹிம் ஏன் உங்களை எதிர்க்கப்போகிறார்? கோவிலை இடித்து மசூதி கட்டினாலும் மசூதிதான் இருக்க வேண்டும் கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்லுகிற உங்களை இப்ராஹிம் மட்டுமல்ல, செங்கொடி மட்டுமல்ல, ஜவஹிருல்லா, பின் லாடன் எல்லோருமே ஆதரிக்கத்தானே செய்வாரக்ள்? என்ன ஆச்சரியம் இருக்கிறது?
சங்கர் /////இப்பதிவு இஸ்லாமிய மதவாதிகள் எப்படி கருத்துகளை திரித்து கூறுகிறார்கள்.சில மத பழக்க வழக்கங்களுக்கு குரானில் ஆதாரம் இல்லை என்பதையெல்லாம் இப்பதிவு புட்டு புடு வைத்தது.(உ.ம். சுன்னத்,ஐந்து நேர தொழுகை,வெள்ளி கிழமை ஜுமா தொழுகை,ஜகத் 2.5%////
மதவாதிகள் என்ன கருத்துக்களை திரித்து கூறினார்கள் ,அதை செங்கொடி எப்படி புட்டு,புட்டு வைத்தார்?
சுன்னத்,ஐந்து நேர தொழுகைக்கு ஜும்மாவுக்கு சக்காத்க்கு ஆதாரம் இல்லையா?இதை எங்கே புட்டு,இடியாப்பம் எல்லாம் வைத்தார்
////4.குரானின் வரலாறு,ஹதிது தொகுக்கப்பட்டது எல்லாம் மனிதர்களால் தங்கள் அரசியல் இலாபத்திற்க்காக செய்யப் பட்ட செயல்கள் என்பதும் இப்பதிவில் கூறப்பட்டது////
ஹதிதுகளில் உமது செங்கொடியின் அரைவேக்காட்டுத் தனத்தை தோலுரித்து காட்டியுள்ளோம் பதிலில்லாமல் பாதியோடு ஓடியதை அறிய மாட்டீரா?
////5.மதப் புத்தகங்களில் அறிவியல் என்பது ஒரு வார்த்தை விளையாட்டு என்பதும்,குரானில் கூறப்படும் பல சம்பவங்கள்,அத்தாட்சிகள் ஒன்று கூட இப்போது காட்ட முடியாது என்பதும் குறிப்பிட தக்கவை////
.சிறுநீர் கழித்ததும்,நீரை விட்டு சுத்தம் செய்வது முதல் தேவையற்ற ரோமங்களை நாற்பது நாட்களுக்கு மேற்படாமல் நீக்கவேண்டும் என்பவை மருத்துவ அறிவியலின் அத்தாட்சிகள் இல்லையா? .
6. இஸ்லாமும் பிற மதங்களை போன்ற் நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்பதை விவாதம் செய்த அனைவருமே கூறிவிட்டார்கள்
.விவாதம் செய்யாதவர்கள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் கிடையாது என்றார்களா?
இஸ்லாத்தின் அடிப்படையே ஈமான் என்று சொல்லப்படும் நம்பிக்கையின் அடிப்படையில் தான், குர்ஆனும் வரிக்கு வரி நம்பிக்கையாளர்களே என்று தான் அழைக்கிறது.
7.இது இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நிச்சயமாக கூற முடியும்.எங்கள் மதகுரு மத கருத்துகள் அனைத்தையும் அறிந்தவர்,விவாதத்தில் வ்ல்லவர்,அவர் கூறுவது எல்லாம் சரியானது என்று இப்போது யாரும் சொல்ல மாட்டார்கள்
விவாதத்துக்கு பி.ஜே வுடன் வருவதற்கு இயலாமையை வெளிப்படுத்திவிட்டு இப்படி மானகெட்ட சப்பைக்கட்டு வேறா? இஸ்லாமியர்களுக்கு பயனுள்ளதாக இருக்க முடியும் என்பதை சங்கர் எப்படி கூற முடியும்?
இஸ்லாத்தை நம்புவோர் குரானில் கூறப்பட்ட அற்புதங்களை நம்பட்டும் .இப்போது குரானில் உள்ள அற்புத காட்சிகளை கூறி இஸ்லாத்திற்கு அழைக்க வில்லை.அதனுடைய ஒப்பற்ற சமத்துவம் வாழ்க்கை நெறிமுறைகள் ,தான் இன்று பலரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கின்றன ,அதை பற்றி விமர்சிக்க திராணி இன்றி சாதாரண மான மடையனும் கேட்க கூடிய கடவுள் கறுப்பா? சிவப்பா?என்ற ரீதியிலான விமர்சனகள் பழைய தில்லுதுரையும் இப்போதைய நிலாவுமான ஆட்களை மட்டுமே கவரும் ,மற்றபடி செங்கோயின் கட்டுரைகள் விழலுக்கு இறைத்த நீரே ,நீவிரும் புரிந்து கொள்வீர் .
.
நிலா, /// கோவிலை இடித்து மசூதி கட்டினாலும் மசூதிதான் இருக்க வேண்டும் கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்லுகிற உங்களை ///
கோவிலை இடிக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் ?கோவிலே அங்கே இல்லை என்றும் இல்லாத கோவிலை யாரும் இடிக்கவில்லை ,அங்கு மசூதிதான் இருந்தது என்பதே நியாயவான்களின் வாதம்.
என்னை பொறுத்தவரை அந்த இடத்தில்தான் ராம ஜன்ம பூமி வேண்டும் என்பதும் ;அந்த பள்ளிவாசல்தான் வேண்டும் என்பதும் வீம்பே , இரு சாராரிடமும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லை. சங்க பரிவாரக் கூட்டம் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்தால் இத்தனை பெரியதாக முற்றி இருக்காது
நிலா, ////குரான் என்ற ஒரு புத்தகத்தை கட்டி அழும் முஸ்லீம்கள் போல////,
நிலா ,நீங்கள் இந்து மாதத்திற்கான விமர்சனத்திர்க்குத்தான் பதில் அளிக்கவேண்டும் .குஆன் ஒரு சட்டபுத்தகமாக ,வாழ வழிகாட்டியாக முஸ்லிம்கள் பின்பற்றி வருவதை நாகரிகமற்ற முறையில் நீங்கள் தலையிடுவது நன்றன்று.அல்லது குரானை விட இன்றைய உலகையும் வழி நடத்தி செல்லக் கூடிய ஒரு புத்தகத்தை காட்டுங்கள்.
நிலா .. ///மனு நீதி அநீதியான பல விஷயங்களை சொல்லியிருக்கீறது என்பதை எல்லா இந்துக்களுமே ஒப்புகொள்வார்கள். யார் ஒப்புகொள்ளவில்லை என்றாலும் நான் ஒப்புகொள்கிறேன்.////
இன்று ஒப்புக்கொண்டு ஆகவேண்டும் என்பதே நிர்பந்தம்..
நிலா ///இந்தியாவில் ஜாதிமுறையினால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்புகொண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை இந்துக்கள் வழங்கினார்கள்.///
இந்துக்கள் என்று யாரை சொல்லுகிறீர்கள் என்பது புரியவில்லை.மண்டல் கமிசன் பரிந்துரை அமலாக்கப் படும்போது எதிர்த்து ஆதரவை வாபஸ் பெற்றார்களே ,போராட தூண்டினார்களே அந்த இந்துக்களை சொல்லுகிறீர்களா?
மேலும் தக்க நேரத்தில் தாழத்தப்பட்ட மக்களை தக்க வைக்கவே அந்த இட ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது .
அன்பரே இப்ராஹிம்,
மனுநீதியைப் பற்றி நீங்கள் பேசுவது வேடிக்கை. மனுநீதியை விட மிகக்கொடுமையான அடிமைமுறை சட்டங்களை கொண்டுள்ள குரானை கட்டிக்கொண்டு அழுபவர்கள், மனுநீதியை உதர தைரியம் உள்ள இந்துக்களை பார்த்து உதார் விடுவது கேவலமானது.
குரானில் அடிமைத்தனத்தை நியாயபப்டுத்தும் வசனங்கள் காலத்துக்கு பொருந்தாதவை என்று சொல்ல தரியமுள்லதா?
வணக்கம் நண்பர் இப்ராஹிம்,
//சுன்னத்,ஐந்து நேர தொழுகைக்கு ஜும்மாவுக்கு சக்காத்க்கு ஆதாரம் இல்லையா?//
1.ஐந்து நேர தொழுகை மிராஜ் பயண உண்மையை பொறுத்தே நிஜம்.குரானில் ஐந்து வேளை தொழுகை எங்கே குறிப்பிடப் பட்டு உள்ளது?.மிராஜ் குறித்து ஹதிதுகள் வேறுபட்ட குறிப்புகளை தருகின்றன.அது மனதளவில் நடந்த ஆன்மீகப் பயணம் என்று கூட சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஐந்து வேளை தொழுகை குறித்து இறைவன் முகமதுவிடன் சொன்னார் என்றும் ஹதிது கூறுகிறது.அது நிச்சயமாக அப்படியே குரானில் இடம் பெற்று இருக்க வேண்டும்.காட்டுங்கள்.
புஹாரி 7517
_____
அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான். அப்போது அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது’ என்பதும் அடங்கும். பிறகு நபி(ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா(அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா(அலை) அவர்கள், ‘முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?’ என்று கேட்டான்.
நபி(ஸல்) அவர்கள், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்’ என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் (உங்கள் சமுதாயத்தாரான) அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.
‘நீர் விரும்பினால் ஆகட்டும்’ என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள்.
எனவே, நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். (முதலில் நாம் நின்றிருந்த) அதே இடத்தில் நின்றவாறு நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது’ என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி(ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா(அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியதுழூ ஐந்துக்கு வந்த போதும் மூஸா(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன். ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறினார்கள்.
ஒவ்வொரு முறையும் நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள். அதற்கு சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அல்லாஹ், ‘(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை; அதை (-ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன். மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான்.
_______
இரு வில்லின் முனை அளவு ஜிப்ரீல்(?) வந்ததாக குரானில்(53.9) குறிப்பிட பட்டு உள்ளது.
இந்த ஹதிதின் படி இவ்வசனத்தை பார்த்தால் ஜிப்ரீலா? அடைப்புக்குறிகளை எடுத்துவிட்டு பாருங்கள்.
_____
53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
53:10. அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:11. (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
53:12. ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:13. அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
53:14. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
53:15. அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
53:16. ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,
53:17. (அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
53:18. திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
__________________
மிராஜில் கண்ட இலந்தை மரமும் கூறப்பட்டு உள்ளது.ஆனால் பயணம் பற்றியோ தொழுகை பற்றியோ கூறப்படவில்லை.
பயணம் பூத உட்லோடு நபி குரானின் படி விண்வெளி சென்றாரா? இல்லையா
_____
2.ஜுமா தொழுகை கூட யூதர்கள் குரங்காது பற்றி விவாதித்து உள்ளோம்.சனிக்கிழமை எப்போது வெள்ளி ஆனது(?) என்று குரானில் ஆதாரம் காட்ட வேண்டும்.
3.சகாத் 2.5 % என்று குரானில் குறிப்பிடப் பட்டும் உள்ளதா?
இஸ்லாமியர்களின் எந்த செயலும் குரானில் குறிப்பிடு உள்ளதா என்று பார்ப்பது என்க்கு அவசியமாக படுகிறது.
குரானில் குறிப்பிடப் படாதவைகளை ஹதிதில் இருந்து காட்டுவீர்கள்.இந்த விஷயங்கள் ஹதிதுகளை மட்டுமே மட்டுமே ஆதாரமாக கொண்ப்டது,குரானை அல்ல என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.
______
ஹதிது பற்றியும் அதனை உபயோகப் படுத்துதல்,நம்பகத்தன்மை பற்றியும் விவாதிப்போம்.
____
முதலில் மிராஜ் பற்றி முடிப்போம். ஒவ்வொன்றாக அலசுவோம்.
__________
இன்னும் பேசுவோம் நன்றி இப்ராஹிம்.
இது நண்பர் இப்ராஹிம்
//இஸ்லாத்தை நம்புவோர் குரானில் கூறப்பட்ட அற்புதங்களை நம்பட்டும் .இப்போது குரானில் உள்ள அற்புத காட்சிகளை கூறி இஸ்லாத்திற்கு அழைக்க வில்லை.அதனுடைய ஒப்பற்ற சமத்துவம் வாழ்க்கை நெறிமுறைகள் ,தான் இன்று பலரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கின்றன ,அதை பற்றி விமர்சிக்க திராணி இன்றி சாதாரண மான மடையனும் கேட்க கூடிய கடவுள் கறுப்பா? சிவப்பா?என்ற ரீதியிலான விமர்சனகள் பழைய தில்லுதுரையும் இப்போதைய நிலாவுமான ஆட்களை மட்டுமே கவரும் ,மற்றபடி செங்கோயின் கட்டுரைகள் விழலுக்கு இறைத்த நீரே ,நீவிரும் புரிந்து கொள்வீர் .//
இது எனது உயிர் நண்பர் நிலா,
//இந்து புராணங்களில் பூமி பெண்ணாக உருவகபப்டுத்தப்படுகிறார் என்றால் எப்படி? பூமியின் முகம் எங்கே இருகிறது மூக்கு எங்கே இருக்கிறது என்று கேட்கலாமே? இன்னும் கேவலமாகக்கூட கேட்கலாமே? நிலமென்னும் நல்லாள் நகும் என்று திருவள்ளுவர் சொன்னால், புமிக்கு எங்கே வாய் இருக்கீறது. பல்லை காடடி சிரிக்குமா என்று திக மாதிரி பேசி, திருவள்ளுவர் ஒரு முட்டாள் அடிமடையன் என்று சொல்லக்கூடிய கிராமத்து நாஸ்திகன் லெவலை தாண்டி சிந்திக்க தெரியாத மடையக்கும்பல் இது.
மேலும் இந்து மதத்திலும் புராணங்களும் ஆபிரஹாமிய மதங்களில் இருப்பது போல நேரடியாக பொருள் கொள்ள வேண்டும் என்று எந்த படித்த இந்துவும் சொல்லமாட்டார்.
//
இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? எனக்கு ஒரே மாதிரி தெரிகிறது.
அன்பரே இப்ராஹிம்
//நிலா, /// கோவிலை இடித்து மசூதி கட்டினாலும் மசூதிதான் இருக்க வேண்டும் கோவிலை இடிக்கவேண்டும் என்று சொல்லுகிற உங்களை ///
கோவிலை இடிக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் ?
//
சொன்னது சங்கர். வாயை திறக்காமல் இருந்தது இஸ்லாமியர்கள்.
//சாதாரண மான மடையனும் கேட்க கூடிய கடவுள் கறுப்பா? சிவப்பா?என்ற ரீதியிலான விமர்சனகள் பழைய தில்லுதுரையும் இப்போதைய நிலாவுமான ஆட்களை மட்டுமே கவரும் //
கடவுளுக்கு உருவம் உண்டு, கால்கள் உண்டு கைகள் உண்டு கண்கள் உண்டு பிருஷ்டம் உண்டு, என்றெல்லாம் பிஜே சொல்லும்போது அந்த கடவுள் கருப்பா சிவப்பா என்றுதான் கேட்பார்கள்.
இந்துமதத்தில் பிரம்மம் என்பது நிர்குணப்பிரம்மம். குணங்கள் அற்றது. குணங்களால் வரையறை செய்யமுடியாதது. அதன் பிரதிபலிப்பே சற்குணப்பிரம்மம். இதெல்லாம் படித்தால்தான் தெரியும். எல்லாமே குரானில் சொல்லிவிட்டது, கார்லமார்க்ஸ் சொல்லிவிட்டார். கார்ல்மார்க்ஸுக்கு தெரியாததெல்லாம் உலகத்தில் இல்லை என்று உளறுபவர்களுக்கு சொல்லியும் பிரயோசனமில்லை.
நிலா ///குரானில் அடிமைத்தனத்தை நியாயபப்டுத்தும் வசனங்கள் காலத்துக்கு பொருந்தாதவை என்று சொல்ல தரியமுள்லதா///
இஸ்லாம் தனக்கு முன் இருந்த அடிமைத்தனத்தை படிப்படியாக ஒழிக்கவே செய்தது.,அக்காலத்திலேயே அடிமைகளை விடுவிக்க அறிவுறுத்தியது.முஸ்லிம்கள் செய்யத் தவறிய மத கடமைகள்,மற்றும் குற்றங்களுக்கு அடிமைகளை பரிகாரமாக விடுதலை செய்ய கட்டாயப் படுத்தியது. அடிமைகள் என்ற பெயரில் அவர்கள் அடக்கி ஆளப்படவில்லை.கூலி ,மற்றும் சம்பள அடிப்படை என்றில்லாமல் வேலை ஆட்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள்.மற்றபடி அவர்கள் சக மனிதர்களாகவே மதிக்கப்பட்டார்கள்.நபி[ஸல்] அவர்கள் தனதி அடிமையாக இருந்தவரிடமே அன்பளிப்பு பெற்றுள்ளார்கள்.
///மனுநீதியை விட மிகக்கொடுமையான அடிமைமுறை சட்டங்களை கொண்டுள்ள குரானை கட்டிக்கொண்டு அழுபவர்கள்,////
சகோதரர் நிலாவே , ,மனு நீதி கொடுமைகளால்தான் என் முன்னோர்கள் முஸ்லிம்களாகி இன்று இந்தியாவின் இருபது சதவீதமாகிவிட்டார்கள். அரபு நாடுகளில் குர்ஆன் கூறும் அடிமை முறை சட்டங்களினால் எத்தனை பேர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி உள்ளனர் என்று ஆதாரங்களை கொண்டுவந்து உங்களை வாதத்தை நிலை நிறுத்துங்கள்.
//இஸ்லாம் தனக்கு முன் இருந்த அடிமைத்தனத்தை படிப்படியாக ஒழிக்கவே செய்தது.//
அதென்னங்க படிப்படியா!?
எதிர்காலத்தில் அடிமைத்தனம் முழுமையாக ஒழிக்கப்படும்னு கடவுளுக்கு தெரியாதா? பின் ஏன் குரானில் அடிமைத்தனம் முற்றிலும் ஒழியனும்னு சொல்லல!
அடிமைகளுடன் உறவு கொள்ள எஜமானருக்கு முழு உரிமை கொடுக்கபட்டுள்ளது, கேவலமான சட்டமா இருக்கேம் அப்ப கடவுளும் அப்படி தானா!?
சங்கர் ////இது நண்பர் இப்ராஹிம்///
///இது எனது உயிர் நண்பர் நிலா///
செங்கொடி,என்னதான் பொதூடமைவாதி என்று சங்கர் கதை விட்டாலும் பாசம் எங்கே பொங்கி வடிகிறது என்று பார்த்தீர்களா?
சங்கரின் மற்ற சந்தேகங்களை இன்சா அல்லா நாளை
நண்பர் நிலா ,
உங்களுக்கு எள்ளளவும் எள் முனையளவும் இஸ்லாத்தை பற்றிய அறிவில்லை என்பதற்கு நீங்கள் மேலே கூறிய வார்த்தையை விட மிகச்சிறந்த ஆதாரம் தேட தேவையில்லை.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் அரபு நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளிலும் மனிதனை மனிதன் அடிமை படுத்துகிற முறை இருந்தது. அதன் உருவாக்கமே மனு சாஸ்திரம் போன்ற கையாலாகாத சட்டங்களில் இருந்து வந்தது தான். அனைத்து மதங்களும் அதை ஆதரித்து தான் வந்தது . ஆனால் அதை ஒழிப்பதற்காக மிகச்சிறந்த சட்டத்தை தீட்டியது இஸ்லாம் மட்டுமே. அன்றைய அரபு நாட்டிலே ஒரு மனிதனின் அந்தஸ்து என்பது அவன் கீழ் எத்தனை அடிமைகள் வேலை செய்கிறார்கள் என்பதை பொறுத்து தான் அமைந்திருந்தது . எந்த மனிதனும் தன் அந்தஸ்தை விட்டு கொடுப்பதற்கு தயாராக இருப்பதில்லை.இது தான் அன்றும் இன்றும் மனிதனின் இயல்பு. அடிமைகள் வைத்திருப்பதை தங்கள் அந்தஸ்தாக நினைத்த அரபு நாட்டிலே , அந்த இயல்பான குணத்திலிருந்து மனிதனை விடுவித்து அடிமை தனத்தை ஒழிக்க ஒரேநாளில் சட்டம் இயற்றுவது என்பது பலனளிக்காது. மாறாக எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இஸ்லாம் உணர்ந்திருந்தது . அதன் விளைவாக தான் அடிமை தனத்தை ஒழிப்பது என்பது மக்களின் மனங்களை மாற்றுவதில் தான் வெற்றியடையும் என்பதையும் இஸ்லாம் உணர்ந்திருந்தது
அதனால் தான் ஒவ்வொரு கட்டம் கட்டமாக அடிமை ஒழிப்பு சட்டங்களை அமுல் படுத்தி அதில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டு இன்று வரை ஒரு அடிமை கூட இல்லாத ஒரு மிக சிறந்த நிலையை ஏற்படுத்தியது. அதன் ஒருகட்டம் தான் பாவம் செய்தவர்கள் அதற்க்கு பரிகாரமாக அடிமையை விடுவிக்க சொன்னது. மற்றும் அடிமை பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை அடிமையல்லாத குழந்தை என்று கருத சொன்னது. இப்படி அகங்காரம் பிடித்த அரபுகளின் மனங்களை அழகாக பக்குவபடுத்தி மிகச்சிறந்த சமுதாயத்தை இஸ்லாம் உருவாக்கியது. ஸ்டாலினை போல் அடுக்குமுறையால் மக்களை கட்டுபடுத்தி அரை நூற்றாண்டு கூட நிமிர்ந்து நிற்க முடியாத கொள்கையல்ல இஸ்லாம் . இன்று வரை கள்ளுக்கடை இல்லாத நாடு சவுதி அரேபியா ஓன்று தான். ஏழையும் பணக்காரனும்(ஆணும் பெண்ணும் ) வித்தியாசம் தெரியாமல் ஒரே சீருடை அணியும் நாடும் சவுதி அரேபியா தான். வெட்கம் இல்லாத மனு சாஸ்திரத்தையும் , வெட்கி குனியவைக்கும் ஸ்டாலிநிஷத்தையும் தூக்கி பிடிக்கும் மொட்டைகளுக்கும் , குடுமிகளுக்கும் மத்தியில் அழகாக கிராப் வெட்டியிருக்கும் எங்களை பார்த்தல் உங்களுக்கு கிண்டலாக தெரிகிறதா ?
இப்படிக்கு ,
மீண்டும் மனிதநேயன்
பெண்குழந்தைகளை உயிரோடு புதைக்கும் பழக்கத்தை ஒரே ஒரு குரான் வசனத்தை வைத்து ஒழித்துவிட்டார் என்று பீற்றிக்கொள்ளுபவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அடிமை முறையை மட்டும் ஒழிக்க முகம்மது( அல்லது அல்லாவுக்கு) மனமில்லையா?
உலகிலேயே மிகக்கொடுமையான மனிதனை விற்று மனிதனை வாங்கும் தீய பழக்கத்தை அல்லா மக்களின் மனங்களை மாற்றி, ஒரே நாளில் ஒழித்திருக்கலாமே? ஏன் அல்லாவால் அது முடியாதா?
அப்படி செய்யாமல், அடிமைப்பெண்களை இஷடம் போல உறவுகொள்ளலாம் என்றல்லவா அல்லாஹ் கூறுகிறார்? எந்த இடத்தில் அடிமைமுறை தவறு அதனை செய்யாதீர்கள் என்று குரானில் சொல்லியிருக்கிறது என்று சொல்லமுடியுமா?
ஆமாம் அடிமைப்பெண்களை இஷடம் போல உறவுகொள்ளலாம் என்று இருக்கும் வசனம் இப்போது பொருந்துமா பொருந்தாதா? இன்றைய காலத்துக்கு பொருந்தாமல் இருக்கும் ஒரே ஒரு வசனத்தை குரானில் காட்டுங்கள் என்று இப்ராஹிம் கேட்டாரே? இந்த வசனம் இப்போது பொருந்துமா பொருந்ததா என்று அவர் சொல்லலாமே?
நீங்கள் கடவுளிடமிருந்து நேராக செல்போனில் பேசியதாக சொல்லிகொள்ளும், முகம்மது ஆறு வயது பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொண்டாரே? அது இப்போது பொருந்துமா பொருந்தாதா?
மனுநீதி நிச்சயமாக 1400 வருடங்களுக்கு முற்பட்டது. அதிலேயே அடிமைமுறை பற்றி ஒருவார்த்தை கிடையாது. அப்படி இருக்கும்போது முகம்மதின் காலத்திலேயே அடிமைமுறையை ஒழித்திருக்கலாமே? ஏன் ஐக்கியநாடுகள் சபையின் வற்புறுத்தல் காரண்மாக 1970இல்தான் அடிமைமுறை உங்களது சொர்க்கபூமியான அரபியாவில் ஒழிக்கப்பட்டது? (சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் இன்னமும் சவுதி அரசர்களும் ஷேக்குகளும் அடிமைகளை வைத்திருக்கீறார்கள். அரபிய இளவரசரின் அடிமை ஒன்றை அடித்தே கொன்றதற்காக சமீபத்தில் இங்கிலாந்து அவருக்கு தண்டனை அளித்தது) ஏன் இன்னமும் மௌரிட்டானியாவில் அடிமைமுறை ஒழிக்கப்படாமல் இருக்கிறது?
உங்கள் மனித நேயத்தை மௌரிட்டானியாவில் அடிமைகளாக இன்னமும் இருக்கும் கருப்பினத்தவரிடம் காட்டுங்கள். டார்பரில் கருப்பினத்தவரை அடிமைகளாக பிடித்து சென்று விற்கும் அரபிய முஸ்லீம்களிடம் மனிதநேயத்தை பற்றி விளக்குங்கள்.
“அமைதி மார்க்கம்” என்பது போலத்தான் இந்த “மனிதநேயமும்” என்றால், அய்யா.. சாமி வேண்டவே வேண்டாம்.
சங்கர் ////கியாமத் நாளுக்கு முன்பே வானங்களில்,சொர்க்கம்,நரகம் ஆகியவற்றில் மனிதர்கள் எப்படி வந்தார்கள்?
குரானுக்கு முரண்பட்ட ஹதிது வசனங்களை நிராகரிக வேண்டுமல்லவா?
அப்போது விண்வெளி பயணம் குரானுக்கு முரண்பட்டது. சரியா?///
முகம்மதுநபி[ஸல்]அவர்களுக்கு விண்ணுலக பயணத்தில் சொர்க்கமும் நரகமும் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும் என்று எடுத்து காட்ட பட்டதாகவே நீங்கள் குறிப்பிடும் ஹதித் வருகிறது. ஆயின் இதை முன் மாதிரி காட்சியாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
sankar[முகம்மதே] உமது இறைவன் மனிதர்களை முழுமையாக அறிகிரானஎன்று நாம் உமக்கு கூறியதை நினைப்பீராக உமக்கு நாம் காட்டிய காட்சியையும் குர் ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.அவர்களை அச்சுருத்துகிறோம் .அது அவர்களுக்க் பெரிய வழிகேட்டையே அதிகமாக்கியது குர் ஆன் [17 ;60௦
சங்கர் ///ஐந்து வேளை தொழுகை குறித்து இறைவன் முகமதுவிடன் சொன்னார் என்றும் ஹதிது கூறுகிறது.அது நிச்சயமாக அப்படியே குரானில் இடம் பெற்று இருக்க வேண்டும்.காட்டுங்கள்///
ஹதித்கள் அனைத்தும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள்? குர்ஆனுக்கு செய்முறை விளக்கமாக நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை முறை உள்ளது குர்ஆனில் தொழுகையினை நிறைவேற்றுமாறு கூறப்பட்டுள்ளது .அது எப்படி எத்தனை தடவை என்பதை நபி[ஸல்] அவர்களின் செயலகளிலிருந்து பின்பற்றப் படுகிறது.
சங்கர் மேலும் ஐந்து வேளை தொழுகை குறித்து பீ.ஜே.யின் குர்ஆன் தமிழாக்கத்திலும் 17;78-24;58-மற்றும் குறிப்பு எண்கள் 71,226 .பார்த்துகொள்ளுங்கள்
sankar 2.ஜுமா தொழுகை கூட யூதர்கள் குரங்காது பற்றி விவாதித்து உள்ளோம்.சனிக்கிழமை எப்போது வெள்ளி ஆனது(?) என்று குரானில் ஆதாரம் காட்ட வேண்டும்.
3.சகாத் 2.5 % என்று குரானில் குறிப்பிடப் பட்டும் உள்ளதா?
சனிக்கிழமை என்பது முந்தைய சமுதாயத்திற்கு
முஸ்லிம்களுக்கு குர் ஆன் 62 ;9 வசனம் வெள்ளிக்கிழமை என்பதை உறுதிபடுத்துகிறது.
.சக்காத் இரண்டரை சதவீதம் என்பதை ஹதித்கள் தெளிவுபடுத்துகின்றன.
///குரானில் குறிப்பிடப் படாதவைகளை ஹதிதில் இருந்து காட்டுவீர்கள்.இந்த விஷயங்கள் ஹதிதுகளை மட்டுமே மட்டுமே ஆதாரமாக கொண்ப்டது,குரானை அல்ல என்பது இஸ்லாமியர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்///.
ஹதீதை ஏற்றுக் கொண்டால்தான் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியும் .குர் ஆனில் சிலவிசயங்களில் வழிகாட்டுதல் மட்டுமே இருக்கும் அதன் விளக்கமாக நபி[ஸல்]அவர்களின் செயல்கள் மூலம் விளக்கம் பெற முடியும் .இறைவன் அல்லாவைத் தவிர வேறு யாருமில்லை,முகம்மதுநபி[ஸல்]அவர்கள் அவனின் தூதர் மேலும் அல்லாவுக்கும் கட்டுபடுங்கள் ;அவன் தூதருக்கும் கட்டுபடுங்கள் என்று வற்புறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன.
சங்கர் .///மேலும் இந்து மதத்திலும் புராணங்களும் ஆபிரஹாமிய மதங்களில் இருப்பது போல நேரடியாக பொருள் கொள்ள வேண்டும் என்று எந்த படித்த இந்துவும் சொல்லமாட்டார்.
//
இரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? எனக்கு ஒரே மாதிரி தெரிகிறது////
உங்கள் மூக்கும் எனது மூக்கும் ஒன்றுபோல் இருந்தால் மொத்த உருவமும் ஒரே மாதிரி இருக்குமா?
நிலா அடிமைகள் பற்றி இந்த லிங்கில் படியுங்கள் மற்றவற்றை பிறகு பார்ப்போம்
http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/
இப்ராஹிம்
அந்த சுட்டியை படித்தேன், முகமது காம்பென்ஷேசன் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற நாடுகள் தம் மீது படை எடுக்கலாம் என்பதற்காகவும் அடிமை முறையை ஒரேயடியாக ஒழிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க நினைத்தார் என சொல்கிறது!
அப்படியானால் குரான் முழுவதும் முகமதுவால் திட்டமிட்டு உருவாக்கபட்டது தானே!, அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறீர்கள், எல்லா வல்ல கடவுளால் ஒரு நொடியில் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் எப்படி அவர் எல்லாம் வல்லவர்!
அந்த மாதிரி டுபாக்கூர் கடவுளை எப்படி நம்புவது, அதற்கு முன் வந்த வேதங்கள் ஒரு மாதிரி இருக்கு, அப்புறம் ஒரு மாதிரி இருக்கு, இவ்ளோ குழப்பத்தோட மனிதன் கூட இருக்க மாட்டான்யா!
//முகம்மதுநபி[ஸல்]அவர்களுக்கு விண்ணுலக பயணத்தில் சொர்க்கமும் நரகமும் அவர்களுக்கு எவ்வாறு இருக்கும் என்று எடுத்து காட்ட பட்டதாகவே நீங்கள் குறிப்பிடும் ஹதித் வருகிறது. ஆயின் இதை முன் மாதிரி காட்சியாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.//
முன் மாதிரி காட்சி என்றால(இறைவனால் வெளிப்படுத்தப் பட்ட) மனதில் காணும் காட்சி.சரியா?
சொர்க்கத்தில் பல நபிகள் உட்பட பல்ர்,நரகத்தில் பலர் இருப்பது போல் திரு முகமது பார்த்தது(புஹாரி 349)மனதில் தோன்றிய காட்சியா?.
இது பல தடவை சொர்க்கம் ,நரகம் திரு முகமது பார்த்தாக பல ஹதிதுகள் கூறு கின்றன.
விண்வெளி பயணமே மனதில் கண்ட காட்சியா?
இல்லை பூத உடலோடு வானங்களுக்கு சென்றது நிஜம். சொர்க்கம் ,நரகம் மட்டும் காட்சியா?
நபிகளை பார்த்ததும் காட்சியா?
அல்லது தெளிவாக கூற முடியாதா?
__________
ஐந்து நேர தொழுகைஇகு ஆதாரமாக
நிங்கள் சொன்ன இரு வசனங்களையும் திரு பி.ஜேவின் மொழி பெயர்ப்பிலேயே பார்ப்போம்.
________________
17.78. சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவில் இருள் சூழும் வரையில் தொழுகையையும் பஜ்ரு (தொழுகையில்) குர்ஆனையும் நிலை நாட்டுவீராக! பஜ்ரு (தொழுகையில்) குர்ஆன் சாட்சி கூறப்படுவதாக இருக்கிறது.226
_________________________
24:58. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
________
71. நடுத் தொழுகை எது?
இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப் படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396).நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடுத் தொழுகைக்கு விளக்கம் தந்த பின் மற்றவர்களின் கருத்தை நாம் கவனத்தில் கொள்ளக் கூடாது.
இவ்வசனம் மற்றொரு விஷயத் தையும் கூறுகிறது.முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதையும், இதற்கு ஏராளமான நபிமொழிகள் சான்றாகவுள்ள தையும் நாம் அறிவோம். ஆயினும் குர்ஆனில் ஐந்து வேளைத் தொழுகை என்று கூறப்படவில்லை. எனவே ஐந்து வேளைத் தொழுகை என்பது குர்ஆனுக்கு எதிரானது என்று சிலர் நினைக்கின்றனர்.இவ்வசனம் ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை நேரடியாகக் கூறா விட்டாலும் குறைந்தது ஐந்து வேளைத் தொழுகை இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறது.
தொழுகைகளையும், நடுத் தொழுகை யையும் பேணுமாறு இவ்வசனம் கூறுகிறது.
தொழுகைகள் என்பது பன்மை யாகும். அரபு மொழியில் இரண்டைக் குறிக்க தனிச் சொல் உள்ளதால் பன்மைக்கு குறைந்தது மூன்று இருக்க வேண்டும். மூன்றுக்கும் குறைந்து அரபு மொழியில் பன்மை இல்லை.'(குறைந்தபட்சம் மூன்று) தொழுகை களையும் நடுத் தொழுகையையும்’ என்று கூறும் போது மொத்தம் நான்கு தொழுகைகள் என்றாகி விடுகின்றது.
நடு என்று கூறுவதாக இருந்தால் அது ஒற்றைப் படையாகத் தான் இருக்க வேண்டும். நான்கில் எதையும் நடு எனக் கூற முடியாது. ஐந்து இருந்தால் தான் அதில் ஒன்றை நடு எனக் கூற முடியும். எனவே மொத்த தொழுகைகள் ஐந்து என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
மூன்று தொழுகைகள் என்று வைத்துக் கொண்டாலும் நடுத் தொழுகை என ஒரு தொழுகையைக் குறிப்பிட முடியுமே என்று சிலர் நினைக்கலாம். மூன்றில் ஒன்றை நடு எனச் சொல்ல முடியும் என்பது உண்மையே. ஆனால் தொழுகைகள் என்று பன்மையாகக் கூறப்படுவதுடன் நடுத் தொழுகை பற்றி தனியாகக் கூறப்படுவதால் நடுத் தொழுகையை நீக்கி விட்டுக் குறைந்தது மூன்று இருந்தாக வேண்டும்.
பன்மையையும் கவனிக்க வேண்டும்; நடு என்ற சொல்லையும் கவனிக்க வேண்டும். இப்படி இரண்டையும் ஒரு சேரக் கவனிக்கும் போது ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்பதை அறியலாம்.
அதிக விபரத்திற்கு 226, 361 ஆகிய குறிப்புகளையும், 30:17,18 வசனங்களையும் காண்க!
_________
குரானில் ஐந்து வேளை தொழுகை நேரடியாக குறிப்பிடவில்லை.மறைமுகமாக குறிப்பிடுகிறது என்றே இந்த விளக்கம் கூறுகிறது.தொழுகைகள் பன்மை என்றாலும் ஐந்து என்று ஹதிதின் உதவியின்றி கூற முடியாது அல்லவா?
____
பி.ஜே பல விஷ்யங்களில் என் கருத்துக்கு ஒத்து போகிறார்.குரானில் குறிப்பிடாதவற்ரை ,உங்களின் இன்னொரு புனித நூலாக நீங்கள் கருதும் ஹதிதில் இருப்பதை பின் பற்றுவது உங்கள் உரிமை,விருப்பம்.
______
1.விண்வெளி பயணம் பற்றி இந்த மனதில் கண்ட காட்சி என்று எதை சொல்கிறீர்கள் என்று தெளிவாக சொல்லி விடுங்கள்.
2.வில்லின் இருமுனை அளவு திரு முகமதின் அருகில் வந்தவர் யார்(குரான் அல் நஜிம் 53.9)
புஹாரி 7517
_____
அங்கு சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான (இறை)வன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நெருங்கி வந்தான்…
____________
குரான் 53 அல் நஜிம்(நட்சத்திரம்)
53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:7. அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:8. பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:9. (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
________________________
நாங்க நேர வாயில் சாப்பிட்டு பழக்கமில்லாதவர்கள் என்பது போல் ஐந்து வேளை தொழுகை பற்றிய விளக்கம் இருக்கிறது, ஆனால் குரானில் எல்லாம் தெளிவா இருக்குன்னு புருடா விட்டுகிட்டே இருக்காங்களே ஏன்!?
இஸ்லாத்தில் அய்ந்து அடிப்படை கடமைகளில் அய்வேளை தொழுகையும் ஒன்று, அதக்கூட ஒழுங்காக உறுதியாக குழப்பமில்லாமல் தெளிவாகச் சொல்லத் தெரியாதவன் அனைத்தும் அறிந்தவனா? ஞானமுள்ளவனா? ஞானசூன்யமா?
செருப்பாலடிக்கவேண்டிய ஆள் இந்த ஜெயினுலாபுதீன்.
முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை ஒரே புளுகு மூட்டை.
போரில் பிடிக்கப்பட்டவர்கள் ஆண்களும் இருப்பார்கள் குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள் என்று கூறுகிறார். முகம்மதின் போர்களில் ஆண்களை கொன்றுவிடுங்கள் பெண்களை அடிமைகளாக்குங்கள் என்று அவர் ஆணையிடுகிறார் எப்படி பெண்கள் குறைவாக கிடைப்பார்கள்? பெண்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.
அடிமைகளை ஏற்கெனவே வாங்கியவர்கள் நஷ்டமடைவார்களாம். அதனால் அவர் அடிமைமுறையை ஒழிக்கவில்லையாம். பாவம் அடிமைகளை விட பரிதாபமானவர்கள் அடிமைகளை வாங்கியவர்கள் .. இல்லையா? உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா?ஏன் அவர்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும். ஒரு மனிதனை வாங்கி விற்பது எவ்வளவு பெரிய கொடூரம். இதனை செய்தவனுக்கு எதற்கு நஷ்ட ஈடு? அடிமைமுரை சட்டப்படி இருந்ததாம்? எந்த சட்டத்தில்? யார் போட்ட சட்டத்தில்?
அடிமைமுறையை இவ்வளவு கேவலமாக நியாயபப்டுத்தும் ஒரு நபர் இந்த காலத்தில் இருப்பது கேவலமானது. இவ்வாறு அடிமைமுறையை நியாயப்படுத்தியிருக்கும் ஜெயினுலாபுதீனை கைது செய்யவேண்டும்.
ஒரு அடிமைப்பெண்ணுக்கு பல எஜமான்களா? எந்த காலத்தில் இப்படி இருந்தது? ஒரு அடிமைப்பெண் ஒருவனுக்குத்தான் உடமை. அடிமைப்பெண்களை அனுபவிக்க முகம்மது போட்ட குரான் சட்டத்தை நியாயப்படுத்த பொய் மீது பொய்.
உலகெங்கும் அடிமைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டதால் இதனை நடைமுறைப்படுத்தமுடியாது என்று ஜெயினுலாபுதீன் வருந்துகிறார். ஏன் இன்று நடைமுறைப்படுத்தமுடியத ஒன்றை எக்காலத்துக்கும் உரியதாக பீலா விடும் குரான் உள்ளே வைத்திருக்கிறது என்று சொல்லமுடியுமா?
vaal paiyan ////மற்ற நாடுகள் தம் மீது படை எடுக்கலாம் என்பதற்காகவும் அடிமை முறையை ஒரேயடியாக ஒழிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க நினைத்தார் என சொல்கிறது////
எதிர் மறையில் சிந்திக்காமல் நல்ல நோக்கத்துடன் சிந்தியுங்கள்
//எல்லா வல்ல கடவுளால் ஒரு நொடியில் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியவில்லை என்றால் எப்படி அவர் எல்லாம் வல்லவர்///
///அதற்கு முன் வந்த வேதங்கள் ஒரு மாதிரி இருக்கு, அப்புறம் ஒரு மாதிரி இருக்கு ////
தாங்கள் சொல்லுவதை பார்த்தால் ‘எனது வால் தனத்தை ஏன் இன்னும் உங்கள் கடவுள் நறுக்கவிலை’ என்று
கூட கேட்பீர்கள் .உங்களது அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் பெறு வெடிப்பு கொள்கைக்கு முன் உலகில் என்ன இருந்தது என்பதை சொல்லுங்கள்.அதன் பிறகு மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுவோம்.
sankar ////விண்வெளி பயணமே மனதில் கண்ட காட்சியா?
இல்லை பூத உடலோடு வானங்களுக்கு சென்றது நிஜம். சொர்க்கம் ,நரகம் மட்டும் காட்சியா?
நபிகளை பார்த்ததும் காட்சியா?அல்லது தெளிவாக கூற முடியாதா?////
தெளிவாகவே கூறியுள்ளேன் .மீள் பார்வை [செங்கொடி வாசிப்பதன் விளைவு] செய்க .
ஐந்து நேர தொழுகைஇகு ஆதாரமாக
நிங்கள் சொன்ன இரு வசனங்களையும் திரு பி.ஜேவின் மொழி பெயர்ப்பிலேயே பார்ப்போம்.
////பி.ஜே பல விஷ்யங்களில் என் கருத்துக்கு ஒத்து போகிறார்.குரானில் குறிப்பிடாதவற்ரை ,உங்களின் இன்னொரு புனித நூலாக நீங்கள் கருதும் ஹதிதில் இருப்பதை பின் பற்றுவது உங்கள் உரிமை,விருப்பம்///.
சங்கர் தீடிரென்று கோமாளி வேஷம் போடுவது ஏன்? நாங்கள் எப்போதும் குர்ஆனை மட்டுமே பின் பற்றுவோம் என்று கூறினோம்.?
எங்களது பழைய அமைப்பின் பெயரே குர்ஆன் ஹதீத் இயக்கம் என்பதே
ரபி //// ஒழுங்காக உறுதியாக குழப்பமில்லாமல் தெளிவாகச் சொல்லத் தெரியாதவன் அனைத்தும் அறிந்தவனா? ஞானமுள்ளவனா? ஞானசூன்யமா///
குட்டையை குழப்பி மீன் பிடிப்பவர்களுக்கு மட்டுமே குழப்பமாக தெரியும். ஞானமுள்ளவர்களுக்கு எளிதாக புரியும்
பன்னியை எவ்வளவுதான் குளிப்பாட்டி சுத்த படுத்தினாலும் மீண்டும் சாக்கடையில்தான் விழும்.
பன்னி யார் ?அதை அலைய விட்டு வேடிக்கை பார்ப்பது யார்?
நண்பர் இப்ராஹிம்,
முடிவுக்கு வந்து விடுவோம்.
1.விண்வெளி பயணம் என்பது மனதில் கண்ட காட்சி. இதற்கு மேல் விளக்கம் கிடையாது.
2.குரானில் குறிப்பிடாத அல்லது நேரடியாக கூறப்படாத விஷயங்களை(உ.ம் 5 நேர தொழுகை,வெள்ளி ஜுமா தொழுகை,2.5 % ஜகாத்,சுன்னத்…) ஹதிதில் இருந்து பின் பற்றுகிறீர்கள்.
தோழரின் குரான்,மற்றும் ஹதிது மீதான கட்டுரைகளின் மீள்பார்வையின் போது மீண்டும் உரையாடுவோம்.
நன்றி.
இபுறாஹிம்//குட்டையை குழப்பி மீன் பிடிப்பவர்களுக்கு மட்டுமே குழப்பமாகத் தெரியும்//
நல்லா குட்டையை குழப்பிவிட்டு மீனை பிடிக்கச்சொன்னது நாங்கள் அல்லவே.அது குட்டையை குழப்பியவரின் தவறு.
சங்கர்//விண்வெளி பயணம் என்பது மனதில் கண்ட காட்சி இதற்கு மேல் விளக்கம் கிடையாது//
அதாவது பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகச் சொல்வதென்றால்,விண்வெளிக்குப் பயணம் செய்வதாக முகம்மது அவர்கள் கணவு கண்டார்கள் அவ்வளவுதான் முடிந்தது மிக்க நன்றி…..
இபுறாஹீம்,
////அதனுடைய ஒப்பற்ற சமத்துவம் வாழ்க்கை நெறிமுறைகள் ,தான் இன்று பலரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கின்றன///
வர்க்க முரண்பாடுகள் கொண்ட அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் போன்ற சமுதாய காலகட்டங்களில் நீடித்திருந்த, நீடித்திருக்கும் இஸ்லாம் மட்டும் தனியாக சமத்துவத்தை எப்படி வழங்கியிருக்க முடியும்? வழங்கிவிட முடியுமா? உதாரணமாக அடிமைச் சமுதாயத்தில் தோன்றிய இசுலாம் அடிமைகள் விஷயத்தில் மணமுடித்துக் கொள்ளாமலேயே அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என முஹம்மது கூறியதற்கு விளக்கமளிக்கும் பீஜே அவர்கள், ”இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை விருப்பம்போல் அனுபவிப்பதும் வழக்கத்திலிருந்த ஒன்றுதான். எனவேதான், உலகம் முழுவதிலும் இருந்த இவ்வழக்கத்தை இஸ்லாம் தடுக்கவில்லை,” என்று விளக்கமளிக்கிறார். அதாவது முகம்மது, அன்று நிலவிய சமூகத்தை மாற்ற விரும்பவில்லை. மாறாக சில பரிகாரங்களையே கூறுகிறார்.
மனிதனை மனிதன் சுரண்டும் சமுதாய காலகட்டங்களில் தோன்றிய மதங்கள், வர்க்க முரண்பாடுகளினால் எழும் பிரச்சினையின் மையமான முடிச்சை அவிழ்க்காமல், ஒவ்வொரு மதங்களும் செல்வமுடையோனை தர்மம் செய்யும்படியும், ஏழ்மையானவனுக்கு மறுமை வாழ்க்கையின் சுகபோகங்களை எண்ணி ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், பொறுமையுடனிருக்கவும் போதிக்கின்றன. இவைதான் மதங்களின் பொருளாதார கொள்கைகள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு மேலாகவும், மதங்கள் சொல்ல வருகின்ற கதையின்படி எடுத்துக்கொண்டால் மனிதன் படைக்கப்பட்டதிலிருந்தும் தொடர்ந்து வருகின்ற இப்பொருளாதாரக் கொள்கையினால் இன்றளவும் வெற்றி பெற முடியவில்லை என்பதற்கு நீங்களும் நாங்களும் விவாதம் செய்து கொண்டிருப்பதே சான்று. உற்பத்தி முறையில் மாற்றமின்றி சமத்துவம் சாத்தியமில்லை. உழைப்புச் சாதனங்கள் தனிநபருக்குச் சொந்தமாக இருக்கும் வரையிலும் சமுத்துவம் என்பது கானல் நீர்தான். அது ஒட்டு மொத்த சமூகத்தின் உடைமையாக மாறும்போதுதான் மதங்கள் கூறவருகின்ற சமுத்துவம் என்ற சொல்லிற்கு மெய்யான பொருள் உருவாகும். அதற்கு சோஷலிச உற்பத்தி முறை, சோஷலிச சமுகம் உருவாக வேண்டும். கம்யூனிஸ்டுகள் மதங்களை எதிர்ப்பவர்கள் என்பதற்காக, வீம்புக்காக நீங்கள் கம்யூனிசத்தை எதிர்ப்பீர்களேயானால் உங்களுக்கு சமத்துவத்தில் நம்பிக்கையில்லை, நீங்கள் ஒரு போலி சமத்துவவாதி என்றே பொருள்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல, ஒருநாள் உங்களது போலி சமத்துவ வேடங்கள் வெளிச்சத்திற்கு வரும். மக்கள் உண்மையான சமத்துவத்தை உணர்ந்து கொண்டிருப்பார்கள். அன்று சோஷலிச சமூகம் உருவாகிக்கொண்டிருக்கும்.
கலை ///முகம்மது, அன்று நிலவிய சமூகத்தை மாற்ற விரும்பவில்லை. மாறாக சில பரிகாரங்களையே கூறுகிறார்////
இது போன்ற விமர்சனங்களை வரவேற்கிறேன்.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் மாற்ற விரும்ப வில்லை.என்பதன்று .மாற்றுவதற்கு மாற்று வழி இல்லை. போர்கைதிகளை அடைக்க சிறை இல்லை. அதனால் அவர்கள் தனி நபரின் வீட்டில் வேலையாட்களாக வைத்து கொள்ளப்பட்டனர்.இப்போதைய மனித உரிமை பற்றி வானளாவ பேசும் காலத்தை விட நபி [ஸல்]மிகவும் கண்ணியமாகவே மதிக்கப்பட்டனர்.ஒரு நாட்டிற்குள் கொள்ளை கும்பல் போல் புகுந்து அந்நாட்டு மக்களை முகமூடி அணிந்து கீழே போட்டு மிதித்து புரங்கைகளை கட்டி ,இன்னும் நிர்வாணக் குவியலாக ,இன்னும் சொல்ல முடியாத கொடுமைகள் செய்த ,ஆண்களே இந்த கதி என்றால் பெண்கள் நிலையை நினைத்து கூட பார்க்க முடியாது .மேலும் உங்களது சோஷலிச ரஷ்யா ,இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மற்றும் ஜெர்மன் கைதிகளை எப்படியெல்லாம் படுத்தியது என்பதை சூழவும் முடியுமா?ஆப்கானில் உங்கள் சோஷலிச தோழர்கள் எப்படி நடந்து கொண்டனர் என்று உங்களால் சொல்ல முடியுமா?
///மனிதனை மனிதன் சுரண்டும் சமுதாய காலகட்டங்களில் தோன்றிய மதங்கள், வர்க்க முரண்பாடுகளினால் எழும் பிரச்சினையின் மையமான முடிச்சை அவிழ்க்காமல், ஒவ்வொரு மதங்களும் செல்வமுடையோனை தர்மம் செய்யும்படியும், ஏழ்மையானவனுக்கு மறுமை வாழ்க்கையின் சுகபோகங்களை எண்ணி ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், பொறுமையுடனிருக்கவும் போதிக்கின்றன////
ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் ஏற்பட்டபொருளாதார செழிப்பு ஏற்பட்டது எப்படி ?மனிதனை மனிதன் சுரண்டிய உழைப்பு திருடலா இல்லையா?
உங்களது பொலிட் பீரோக்களும் தெருக் கூட்டுபவனும் ஒரே மாளிகையில் வாழ்ந்தனரா?ஒரே உணவை உட்கொண்டனரா?
///மாறாக சில பரிகாரங்களையே கூறுகிறா ///
அந்த பரிகாரங்கள் மூலம் மாற்றம் வந்ததா,இல்லையா?
///இப்பொருளாதாரக் கொள்கையினால் இன்றளவும் வெற்றி பெற முடியவில்லை என்பதற்கு நீங்களும் நாங்களும் விவாதம் செய்து கொண்டிருப்பதே சான்று.///
நீங்களும் நானும் சவூதி குடி மக்களாக இருந்தால் இந்நிலை வந்திருக்காதோ
////கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல, ஒருநாள் உங்களது போலி சமத்துவ வேடங்கள் வெளிச்சத்திற்கு வரும்///
கலை இது உண்மைதான் மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் புளுகு மூட்டைகள் ஸ்டாலின் செயலாக்கத்தில் ஐம்பது ,அறுபது ஆண்டுகளோடு முடிந்து உங்களது சோசலிசம் வெளிச்சத்திற்கு இப்போது வரவில்லையா?.
புளுகித்தள்ளும் இப்ராஹிம்
//போர்கைதிகளை அடைக்க சிறை இல்லை. அதனால் அவர்கள் தனி நபரின் வீட்டில் வேலையாட்களாக வைத்து கொள்ளப்பட்டனர்.//
ஏன் பழங்காலத்தில் இந்தியாவிலும்தான் சிறை இல்லை. ஆனால் மனிதர்கலை விலைக்கு வாங்கி விலைக்கு விற்று செய்யும் அடிமைமுறை ஏன் இல்லை?
ஏன் இந்தியாவில் போர்க்கைதிகளை சிறையில் போடும் வழக்கம் இல்லை. மகாபாரதபோர் முடிந்து தோற்றவரக்ளை சிறையில் போட்டார்களா? இந்தியாவில் எந்த போர் முடிந்து தோற்றவர்களை சிறையில் போட்டார்கள் என்று காட்டுங்களேன். வெற்றிபெற்றவர் ராஜா ஆனார். தோற்றவர் குடிமக்கள் ஆனார்கள். வெற்றிபெற்றவர் சார்பாக இன்னொரு நாட்டை வேறொவர் ஆண்டார். ராவணனை தோற்கடித்து அதன் இடத்தில் விபீஷனனை மன்னனாக ஆக்கினார் ராமர். அரக்கர்களை எல்லாம் அடிமைகளாகவா ஆக்கினார்?
அடிமைமுறை வேறு வேலையாள் வைத்துகொள்வது வேறு. அடிமையை விலைக்கு வாங்குவார்கள் விற்பார்கள். வேலையாள் ஒரு கூலிக்கு வேலை செய்துகொடுத்துவிட்டு போகிறான். இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை எனப்து போல புளுகுவது ஏனோ?
இன்னும் சொல்லவில்லையே? அடிமைமுறை இன்றைக்கு தவறு என்றால், ஏன் அடிமைமுறையை பற்றிய எல்லா காலத்துக்குமான நீதி கொண்டதாக நீங்கள் பீலா விடும் குரானில் வசனங்கள் இருக்கின்றன?
உலக மக்களின் முன்மாதிரி என்று பீலா விடும் முகம்மது ஆறுவயது குழந்தையை திருமணம் செய்ததை பின்பற்றி உங்கள் ஆறு வயது குழந்தையை 60 வயது கிழவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பிர்களா?
நிலா,
கேவலமான இஸ்லாமிற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்ல கழிசடையான இந்து மதம். ராமரு விபிஷணன அரசனாக்குனது இருக்கட்டும் , ராமரு எப்போ பொறந்தாரு என்று சொல்ல முடியுமா ?
ராமரு எப்ப பொறந்தா என்னங்க உங்களுக்கு? காலையில பொறந்தா கோவிச்சிக்குவீங்களா? இல்ல ராத்திரி பொறந்தா மதம் மாறி இந்துவா ஆயிடுவீங்களா?
இங்க பேசிகிட்டு இருக்கறதுக்கும் உங்க கேள்விக்கும் எதாச்சும் சம்பந்தம் இருக்கா? நீங்க நிச்சயம் முஸ்லீம் முல்லாவத்தான் இருக்கணும். அவுங்கத்தான் இப்படி மத்தவங்க முட்டாள்தனத்தை விட நம்ம முட்டாள்தனம் கொஞ்சம்தான் பெரிசின்னு சந்தோசப்பட்டுக்கிற கேட்டகிரி
மது நிஜத்தை நிழலுடன் ஒப்பிடுவது ‘வரலாற்றை காவியத்துடன் ஒப்பிடுவது சரியா
அட அட..
முகம்மது நிஜமா? தாவூத் இப்ராஹிம் கூடத்தான் நிஜம். அதுக்காக தாவூத் இப்ராஹிம் எப்படி மூச்சா போனார், எப்படி ஆளை போட்டுத்தள்ளினார், எபப்டி ஆறு வயது பொண்ணை கல்யாணம் பண்ணாருன்னு பாத்து அதுமாரியா பண்னமுடியும?
நண்பர் நிலா ,
ராமர் காலையில் பிறந்தாரா? மாலையில் பிறந்தாரா ? என்பதல்ல இங்கு கேள்வி . ராமர் என்று ஒருவர் பிறந்தாரா ?என்பது தான் கேள்வி.. ராமர் என்ற ஒரு கதா பாத்திரம் வால்மீகியின் இராமாயண கதாபாத்திரம் மட்டுமே. மகாபாரத போரில் தோற்ற கைதிகளை அடிமை படுத்தவில்லையாம். மகாபாரதமே கற்பனையாக இருக்கும் போது அந்த போரில் தோற்று போனவர்களை அடிமை படுத்தினார்களா இல்லையா என்பதை பற்றி ஆராட்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை .
அடிமைகள் வைப்பதை அந்தஸ்தாக கருதிய அரபு நாட்டிலே அடிமைகளை விடுவிக்க சொன்னது இஸ்லாம் . ஏதோ குரான் “அடிமை வைப்பது உங்கள் மார்க்க கடமை “என்று கூறுவது போல் எழுதுவதற்கு உங்களுக்கு வெட்கம் இல்லையா.?
இப்படிக்கு ,
மீண்டும் மனிதநேயன்.
இபுறாஹீம்,
///அவர்கள் மாற்ற விரும்ப வில்லை.என்பதன்று .மாற்றுவதற்கு மாற்று வழி இல்லை.///
///ஆண்களே இந்த கதி என்றால் பெண்கள் நிலையை நினைத்து கூட பார்க்க முடியாது///
மதவாதிகள் அனைவரும் தங்களால் சிலாகித்து போற்றப்படும் மாட்சிமைப் பொருந்திய அந்த தூதர்களின், ஆண்டவர்களின் அந்த நாளின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், தனது மூலதனத்தை பெருக்கிக் கொள்ள சீரழிவை தன்னில் பாதியாக வைத்திருக்கும் முதலாளித்துவச் சமூகத்தினூடாகவே ஒப்பிட்டு சிலாகித்துக் கொள்கிறீர்கள். இஸ்லாம் தோன்றி 1400 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அதற்குப் பிறகான,தொடர்ச்சியான மனித உழைப்பின் பயனாக சமூகம் பல மாற்றங்களைக் கடந்து வளர்ச்சிப் பெற்றிருக்கின்ற போதிலும், அடிமை சமூக உற்பத்தி முறையினை விடவும் முதலாளித்துவ உற்பத்திமுறை மனிதர்களுக்கு பல நன்மைகளை அளித்திருக்கிறதென்ற போதிலும், அந்த நாளைப் பற்றிய மதிப்பீடுகளே சிறந்ததென விவாதிப்பது உங்களுக்கெல்லாம் சமூக வளர்ச்சியில் அக்கறையில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. அடிமை சமூகத்தை விடவும் முதலாளித்துவம் முன்னேற்றமானது எனும்போது அதனூடாக மனிதகுல நாகரிகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது மற்றும் அறிவு வளர்ச்சியினை பெற்றிருக்கிறது என்பது தின்னம். வெறும் பாலியல் ரீதியிலான பிரச்சினையில் மட்டும் தங்கி சமூகத்தை மதிப்பிடுவது தவறு. (அன்றும் சீரழிவு இருந்தது என்பதை கணக்கிலெடுக்க தவறுகிறீர்கள்) அடிமை தொட்டு முதலாளித்துவம் வரையிலும் பாலியல் கொடுமைகள் நீடித்திருப்பதற்கு காரணம் நிலவுகின்ற தனியுடைமைச் சிந்தனை, ஏற்றத்தாழ்வான உறவுமுறை, சுரண்டும் அமைப்புமுறை, ஆணாதிக்கச் சிந்தனை ஆகியவைகளே. முதலாளித்துவத்தில் எவ்வாறு தேவைக்கான உற்பத்திமுறை இருப்பதில்லையோ அதுபோன்றே பாலுறவையும் தேவைக்கான ஒன்று என்பதைத் தாண்டி நுகர்வாக மாற்றியிருக்கிறது. இதில் அதனுடைய மூலதனத்தின் ஆதாயமும் அடங்கியிருக்கிறது.
வெறும் நன்னெறி போதனைகள் மட்டுமே சமூகத்தை மாற்றிவிடுவதில்லை. உற்பத்திமுறை மாற்றமடையும் போதுதான் சமூகம் மாற்றமடையும் என்பதே வரலாறு. முஹம்மது சமூகத்தை மாற்றவிரும்பவில்லை என்று நான் கூறியதை விடவும் அது அவருக்குத் தெரியவில்லை என்பதே சரியாக இருக்கும்.
தனியுடைமை வடிவத்தினால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் சோஷலிசத்தில் கலையப்பட்டு கம்யூனிசத்தில் முடிவிற்கு வரும். ஒடுக்கப்பட்டோரின் போராட்டமே சமூகத்தின் வரலாறு. முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள போராட்டங்கள் நிச்சயமாக சமூகத்தை சோஷலிசத்திற்கு இட்டுச் செல்லும்.
நீங்கதானங்க ராமரு கதைய ஆரம்பிச்சிங்க.. அதான் கேட்டேன் யாரு அந்த ராமரு எந்த ஆண்டு பொறந்தாருன்னு..
பகுதறிவாளருடைய இஸ்லாம் எதிர்பிற்கும் ராமகோபாலன் அண்ட் கோ வின் இஸ்லாம் விரோதத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. கேவலமான இஸ்லாமிற்கு மாற்று எது நிலா அவர்களே, கழிசடையான இந்து மதமா.???
கலை மற்றும் மது.,,,,வரவே வராத ,நடக்கவே செய்யாத உங்களது கம்யுனிச கொள்கையின்படி வாழ்ந்து காட்டுங்கள்.
நடைமுறை படுத்த முடியாத கம்யுனிச கொள்கையை வைத்துக்கொண்டு முதலாளித்துவ கொள்கையின் வழியில் வாழும் கம்யுனிஸ்ட்கள் நடைமுறைபடுத்தப் பட்டுள்ள இஸ்லாத்தை விமர்சிக்க தகுதி இல்லை.
அலோ மனிதநேயன் (அமைதிமார்க்கம் மாதிரி இது ஒரு மாதிரி மனித நேயம்)
ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அல்லா என்று ஒரு கடவுள் முகம்மதுவிடம் பேசியது என்பது போன்ற கற்பனை அல்ல இது.
ராமரது வாழ்க்கையை இதிஹாசம் (இதி ஹாசம் என்றால் இப்படி நடந்தது அதாவது வரலாறு என்று பொருள்) அதனை கவிதை ரூபத்தில் எழுதிய்தாலேயே அது வெறுமே காப்பியமாகிவிடாது.
இந்தியர்களில் ஒரு சிலர் பைபிளில் சொன்னதெல்லாம் உண்மை, மற்றதெல்லாம் பொய் என்று சொல்ல மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறீர்கள். மற்றொரு வகை இந்தியர்களோ குரானிலும் ஹதீஸிலும் சொன்னதெல்லாம் உண்மை மற்றதெல்லாம் பொய் என்று சொல்லுகிறீர்கள். இதுதான் உங்களது மதம் உங்கள் கண்களை மறைத்துள்ளதன் விளைவு.
அந்த காலத்தில் உலகெங்கும் அடிமைமுறை இருந்தது என்று பேசிவிட்டு இப்போது அரபியாவில் இருந்தது என்று பேசும் உங்களது வாய், அரபியர்களின் கதைகளை காப்பாற்ற உங்கள் வாய் பொய் பேசுவதன் உதாரணம். கதையாக இருந்தால் என்ன? அடிமைமுறை இந்தியாவில் இருந்தால் அதனை அங்கே எழுத மாட்டார்களா? அந்த கதையை வைத்துத்தானே இந்தியாவில் ஜாதிமுறை இருக்கிறது என்று பேசுகிறீர்கள்?
அடிமைமுறை ஜாதிமுறையை விட பல ஆயிரம் மடங்கு கேவலமானது. கொடுமையானது. குரூரமானது.
ஒருவர் அடிமைகளை வைத்திருப்பவர்களுக்கு நஷ்டமாகிவிடுமே என்று புலம்புகிறார். கடவுள்தானே? ஒரு பக்கெட் தங்ககாசுகளை முகம்மதுவிடம் கொடுத்து அடிமைமுறையை நீக்கியிருக்கலாமே அப்போதே? அப்படி நீக்காததால்தானே அது 1970 வரைக்கும் சவுதி அரேபியாவில் இருந்தது? இப்போதும் மௌரிட்டானியாவில் இருக்கிறது?
உங்களது மதம் கண்களை மறைபப்தால், மனசாட்சியை கொன்று விட்டீர்கள். எங்கோ மூலையில் செத்து கொண்டிருக்கும் மனசாட்சியை எழுப்பி கேளுங்கள். நான் கேட்டிருப்பதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று.
கேவலமான இஸ்லாமுக்கும், நடைமுறை படுத்தமுடியாத கம்யூனிஸத்துக்கும் மாற்று சனாதன தர்மம் தான்.
அது இப்போது புரியாவிட்டாலும் எப்போதாவது உங்களுக்கு புரியும். அதற்குள் கம்யூனிஸ்டுகள் இந்தியாவை சீனாவிடம் விற்காமல் இருக்க வேண்டும். முஸ்லீம்கள் அரபியாவுக்கு இந்தியாவை அடிமையாக ஆக்காமல் இருக்க வேண்டும்.
ஆயிரம் வருடமாக இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றியிருக்கிற அம்மன் இந்துக்களை கைவிட மாட்டாள்.
//ஆயிரம் வருடமாக இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றியிருக்கிற அம்மன் இந்துக்களை கைவிட மாட்டாள்//
ஆயிரம் வருடம்னா ரொம்ப கிழவியாவுல்லனே இருக்கும், எதாவது புதுசா எளசா பிகர புடிச்சிட்டு வந்திங்கன்னா நிறைய பேர் இந்து மதத்தில் சேருவாங்கல்ல
கலை ;அடிமைகளை விடுதலை செய்தல் ,நெருங்கிய உறவுடைய அநாதைக்கும் அல்லது வறுமையில் உழலும் ஏழைகட்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல் ,பின்னர் நம்பிக்கைக் கொண்டு பொறுமையை போதித்து ,இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் செய்வோரே வலப்புறத்தார். நம் வசனங்களை மறுப்போர் அவர்களே இடபபுறத்தார். அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.{குர்ஆன் 20;13 முதல் 20 வரை }
இந்த வசனங்கள் அடிமைகளை விடுதலை செய்யாதவர்கள் குர்ஆனை மறுப்பவர்கள் என்றும் அவர்களுக்கு நரகமே என்றும் கூறப்படுவதை கவனியுங்கள்
////வெறும் நன்னெறி போதனைகள் மட்டுமே சமூகத்தை மாற்றிவிடுவதில்லை.////
நன்னெறி போதனைகள் என்பது உழைப்பையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியதே
.///தனியுடைமை வடிவத்தினால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் சோஷலிசத்தில் கலையப்பட்டு கம்யூனிசத்தில் முடிவிற்கு வரும்////
இது ஒரு வறட்டு வாதமே
இப்ராஹீம் , எது வறட்டு வாதம் ? சுரண்டலற்ற நேர்மையான அனைத்து மக்களுக்கும் பொதுவான சமுதாயம் அமைவதை பற்றி பேசுவது வறட்டு வாதமா.? வெறும் மத வெறி அடிப்படையில் தன் மதத்தவர் பற்றி மட்டும் சிந்திக்கும் , மற்றவர்களை காபிர் என்று மூளை சலவை செய்யும் இஸ்லாம் வறட்டு வாதமா .
நிலா,
உங்க பார்பனிய இந்து வரலாறு படி ராமரு எந்த ஆண்டு பொறந்தாரு.?
இபுறாஹீம்,
நீங்கள் மெச்சத்தக்க அடிமைகளின் விடுதலைப் போராளி முகம்மதின் அந்த வசனத்தை விடவும் கி.பி 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்துவ துறவி பாஸில் என்பவர் செல்வமுடையவர்களுக்கெதிராக உபதேசம் செய்வதைக் கேளுங்கள்.
“ ஈனப்பிறவிகளே சொர்கபுரியில் இருக்கும் நியாயவான் முன்னாலே உங்களை எங்ஙனம் நியாயப்படுத்திக் கொள்ளப்போகிறீர்கள்? எங்களுக்கு உடைமையாக இருக்க்க்கூடியவற்றை நீங்கள் வைத்திருக்கும்போது, இதில் எங்கள் தப்பேது என்று என்னிடம் கூறுகின்றீர்கள். நான் இப்பவும் உங்களிடம் இவற்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உடைமைகள் என்று சொல்லக்கூடியவைகளை எப்படி பெற்றீர்கள். மற்றவர்களுக்கு உடைமையாக இருக்க்க்கூடியவற்றை எடுத்துக்கொள்ளாமல் உடைமையாளர்கள் எப்படி செல்வந்தர்களானார்கள்? தங்களுக்குக் கண்டிப்பாக தேவையாக இருக்கக்கூடியவற்றை மட்டும் ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை பிறருகு கொடுத்துவிட்டால் செல்வந்தர்களோ வறியவர்களோ இருக்கமாட்டார்கள்.”
முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி கிறித்தவர்கள் தங்களது பொருட்களை சமூகத்திற்கு வழங்கி தங்களுக்குள் பொருட்களை பங்கீடு செய்துகொண்டனர். தங்களது சொத்துக்களை பொதுவில் வைத்தனர். பின்னாளில் பொதுவாழ்வில் பங்கீடு என்ற தன்மையை இழந்தது. செல்வந்தர்கள் பொருட்களை சமூகத்திற்கு வழங்குவதை நிறுத்தினர். இதை எதிர்த்தே பாஸில் உபதேசம் செய்கிறார். இதில் செல்வந்தர்களுக்கு சொத்து எப்படி வந்தது என அவர் குறிப்பிடுவது முக்கியமானது.
//ஆயிரம் வருடம்னா ரொம்ப கிழவியாவுல்லனே இருக்கும், எதாவது புதுசா எளசா பிகர புடிச்சிட்டு வந்திங்கன்னா நிறைய பேர் இந்து மதத்தில் சேருவாங்கல்ல//
வால்பையன்,
அம்மன் என்றால் தாய்.
தாயை இப்படித்தான் ”எளசா புதுசா” பாப்பீங்களா?
உங்க அம்மாவுக்கு வயசாயிருச்சின்னா துரத்தி உட்டுடுவீங்களா?
//அம்மன் என்றால் தாய்.//
ஜீனத் அம்மன் உங்க பாட்டியா!?
எப்படி இப்படி?
பொறக்கும்போதே இவ்வளவு அறிவோட பொறந்தீங்களா? இல்லை ஏதாவது தலையில அடிகிடி பட்டு இப்படி அறிவா ஆயிட்டீங்களா?
kalai கணேசர் அம்மாவைப் போல் பொண்டாட்டி தேடினாராமே .
அம்மாவைப்போல கருணையுடன் மனைவி தன்னை கவனித்துகொள்ளவேண்டும் என்று நினைப்பது உங்களுக்கு டார்ச்சராக இருக்கிறதா? அம்மாவைப்போல கருணையுடன் மனைவி இருக்கவேண்டும் என்று தானே நினைத்ததாக புராணக் கதை? புராணக்கதை என்பது கதை. அதில் கதையை தாண்டி ஒரு தத்துவமும் அறிவுரையும் உண்டு. அதனை சிந்தியுங்கள். பஞ்சதந்திரக்கதையை பார்த்து எங்கே முயல் பேசும் என்று கேட்பது போன்றது. எது கதை எது வரலாறு, எந்த வரலாறு இதிஹாசமாக காப்பியமாக பாடப்பட்டது என்பதெல்லாம் இந்தியாவில் இருந்தால், அதுவும் இந்து மதத்தை விமர்சிக்கப்புகுந்தால் தெரிந்திருக்க வேண்டும்.
அது கதைதான். நிஜத்தில் சொந்த மருமகளையே லவுட்டிக்கொண்ட போலி இறைதூதர்கள் மாதிரியா செய்தார்கள்? ஆறு வயது குழந்தையை நண்பனை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கொண்டவரை இறைதூதர் என்று ஏமாந்து கும்பிடும் கூட்டத்து ஏதேனும் வெட்கம் மானம் உண்டா என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
நிலா நான் ஆரம்பித்தால் உங்க கதை சென்கொடியே நாறிவிடும்
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா-சூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்
நிலா– சூரசம்காரத்தில் பிள்ளையார் தன துதிக்கையால் சூர்ப்பனகையின் பிள்ளை பிறக்கும் இடத்தை அடித்த கதையை சொல்லவேண்டுமா
ஒரு அரபிய வழிப்பறி கொள்ளைக்காரன் கடவுளோடு பேசினான் என்று ஏமாந்து போகும் வாஹித் உசேனே,
அது கதை. ஒரு தத்துவத்தை விளக்க சொல்லும் கதை. அதில் என்ன தத்துவம் இருகிறது என்று கேட்டால் கதாகாலாட்சேபம் செய்பவர்களிடம் கேளுங்கள்.
முகம்மதுவின் லீலைகள் கதை இல்லை உண்மை என்று இப்ராஹிமும் நீங்களும்தான் சொல்லுகிறீர்கள். ஆகவே வெட்கப்பட வேண்டியது யார்?
அரபியர்களிடம் அடகு வைத்த மூளையை திருப்ப பெற முயற்சி செய்யுங்கள்.
உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்-ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயி-ருக்-கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்)
ஓர் அழகிய பெண்-ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணு-கிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞான-சூரியன்)unmai january 15 2010
ஆறு வயது குழந்தையை கற்பழித்த ஒரு அரபி கொலைகாரனிடம் கடவுள் பேசினார் என்று ஏமாந்து போகும் வாஹித் உசேனே,
இந்தியாவில் இருந்தவர்கள் இருப்பவர்கள் சொல்லுவதற்கெல்லாம் நான் ஜவாப்தாரி அல்ல. இந்துமதமும் ஜவாப்தாரி அல்ல. நீங்களும் இந்தியாவில்தான் இருக்கிறீர்கள் என்பதால் நீங்கள் உளறுவதற்கெல்லாம் நான் ஜவாப்தாரியா? அல்லது ஆயிரத்தோறு அரபிய இரவுகளில் வரும் ஆபாசத்துகெல்லாம் இஸ்லாம் ஜவாப்தாரியா?
அரபியர்களிடம் அடகுவைத்த மூளையை திரும்பப் பெற முயற்சிக்கவும்.
nilaa////இந்து மத புராண இதிகாசங்களில் புருஷன் தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதாக-வும், புருஷன் குஷ்டரோகியாகி விட்ட-தால் அவனைக் கூடையில் சுமந்து கொண்டு போன-தாக நளாயினி முதலிய கதைகள் சொல்லப்-படுகிறது. எவ்வளவு அக்கரமும் கொடுமையு-மானக் கொள்கை இது என்பதை யோசித்துப் பாருங்கள். என்னுடைய மகள் நளாயினியைப் போல் இருப்-பாளானால் கட்டாயம் அவளை நான் விஷம் வைத்துக் கொன்று விடுவேனே-யொழிய குஷ்ட ரோகியை சுமந்து கொண்டு தாசி வீட்டிற்குக் கொண்டுபோய் விடும்படிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். பெண்கள் விபச்சாரிகள் என்பதை ஆதரிக்க எழுதி வைத்த ஆதாரங்களில் ஒன்று தான் பாரதம் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரவுபதை என்பவள் தனக்கு அய்ந்து புருஷன் மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால்தான் விபாச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லா-மலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அரிச்சந்திர புராணத்தில் தன் பெண் ஜாதியை பல சொத்துகளில் ஒன்றாகக் கருதி வேறு எவனுக்-கோ விலைக்கு விற்றதாகவும், அவளும் தன்னை ஒரு உண்மையான அடிமை என்பதை ஒப்புக் கொண்டு வாங்கப் பட்டவனிடம் தொண்டு செய்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு புண்ணிய புராணங்களில் அடியார்கட்கு பெண்சாதிமார்களைக் கூட்டிக் கொடுத்ததாக-வும் அந்தப் பெண்களும் அப்புருஷர்கள் வாக்கைத் தட்டக்கூடாது என்று கருதி அடியார்-களிடம் போய் படுத்துக் கொண்டதாகவும் சொல்லப்-பட்டிருக்கிறது. மற்றும் சில நீதிக் கதைகளில் தங்கள் புருஷன்மார்களுடைய வைப்பாட்டி-களுக்குத் தொண்டு செய்ததாகவும் சொல்லப் பட்டிருக்கிறது. இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்ட-தாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்-வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கிக் கொண்டு ராஜாவுக்கே கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் நம்முடைய பழைய அரசர்கள் ஒருவராவது ஒரு பெண்சாதியுடன் இருந்த-தாகவோ, பெண்சாதிகளை சமமாகவோ காண் பதற்கில்லை. அப்படி எங்காவது காணப்படுவ-தாயிருந்தாலும் அது ஒருக்காலும் மேற்படி மததர்மங்கட்கு முரணானது என்று தான் சொல்ல வேண்டும். இது வரையிலும் மக்கள் பெண்கள் சுதந்திரம் என்று பேசிக் கொண்டு வந்ததெல்லாம் வெறும் புரட்டும் முன்னுக்குப் பின் முரணுமாய் முடிந் திருக்கிறதே தவிர காரியத்தில் உண்மையாகப் பெண்கள் விடு-தலைக்கு மார்க்கங்கூட கண்டுப்பிடிக்கப்பட-வில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். பெண்கள் விடுதலைக்கு வெளியில் வருபவர்கள் பெண் சம்மந்தமான இந்துமத தர்மத்தையும், சாஸ்திரத்தையும், புராணத்தையும், இதிகாசத்-தையும் நீதிக் கதையையும் ஒதுக்கி வைத்து விட்டுத்தான் வர வேண்டும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு யார் எங்கு போய் பெண்கள் சுதந்திரம் பேசினாலும் அது கட்டுப்பாடு உள்ள அடிமை பிரகாரமாகத்தான் முடியுமே தவிர அது சிறிதும் விடுதலையை உண்டாக்காது. மற்றும் பெண்-களைப் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லி எழுத்து வாசனையுண்டாக்கி அவர்-கட்கு அரிச்சந்திர புராணத்தையும், நளாயினி கதையையும், இராமாயணத்தையும், பாரதத்-தையும் படிக்க வைத்தால் பின்னும் அதிக-மாக அடி-மைகள் ஆவார்களா? சுதந்தர-மடைவார்களா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.
(31.5.1930இல் கள்ளிக்கோட்டையில் நடைபெற்ற S.N.D.P. யோகம் என்று சொல்லப்படும் தீயர் மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது-8.6.1930 குடிஅரசு இதழில் வெளியானது).
பரிதாபத்துக்குரிய சாகித் உசேன்
(சுய புத்தியோடும் சுயமரியாதையோடும் இருந்திருந்தால் நீங்கள் திருநிறைசெல்வன் என்பது போன்ற தமிழ்ப்பெயர் வைத்திருக்கலாம். அதுதான் அரபியர்களிடம் அடகு வைத்தாயிற்றே )
பெரியார் உளறுகிறார் என்றால் அதற்கு நான் எபப்டி ஜவாப்தாரி ? பெரியார் பெயரை வைத்து காசு பண்ணுபவர்களிடம் போய் கேளுங்கள். பெண்கள் விடுதலையை பற்றி அரபு அடிமை பேசுவது வெட்கபப்ட வேண்டிய விஷயம். அது கூட தெரியவில்லையே..
பெண்களை வழிபாட்டுத்தலங்களுக்குக் கூட அனுமதிக்காத அரபிய அடிமைகள், பெண்களை தெய்வமாகவே வணங்கும் இந்துக்களை குறை கூறும் முன்னால், கொஞ்சமாவது யோசிக்க வேண்டும்.
இன்று இந்தியாவில் இந்து பெண்களுக்கு என்ன குறை? அதே நிலையை முஸ்லீம் பெண்களுக்கு கூற முடியுமா?
ஆமா, இந்த பெரியார் சொல்வதை என்னிடம் சொல்லுகிறீர்களே, இதே பெரியார் சொல்லுவதை எல்லாம் நீங்கள் ஒப்புக்கொள் வீர்களா?
இதே மாதிரி ஒவ்வொன்றாக காபி பேஸ்ட் பண்ணூம் முன்னால் கொஞ்சம் யோசியுங்கள்.
மாட்டு மூத்திரம் ஒரு மருந்து என்பது பழங்கால மருத்துவ சாஸ்திரங்களில் இருக்கிறது. அதனை ஒப்புகொள்ளவேண்டும் என்று இந்துவுக்கு கட்டாயம் கிடையாது.
ஒட்டக மூத்திரத்தை முகம்மது குடிக்க அறிவுரை செய்கிறார். அது ஹதீஸ். அதனை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.
ஆகவே அரபு கொலைகாரனான முகம்மதுவிடம் கடவுள் பேசினார் என்று ஏமாறுவது போல, அவர் சொன்ன ஒட்டக மூத்திரத்தையும் குடிக்கலாமா என்று சிந்தியுங்கள்
நிலாவே,பெரியார் சொல்லியுள்ளது மகாபாரதத்தில் இராமயாணத்தில் இருக்கிறதா இல்லையா
பாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான திரவுபதை என்பவள் தனக்கு அய்ந்து புருஷன் மார்கள் உண்டு என்றும் அவ்வளவும் போதாமல் ஆறாவது புருஷன் ஒருவன் மீது தனக்கு ஆசையிருந்தது என்றும், ஆதலால்தான் விபாச்சாரி என்றும் உலகத்தில் பெண் தன் புருஷனைத் தவிர வேறு ஆண்களே இல்லா-மலிருந்தால்தான் பெண்கள் பதிவிரதையாய் இருக்க முடியுமென்றும் ஓர் உயர்குலப் பெண்ணேத் தன் வாயினால் சொன்னதாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
இராமாயணம் என்கிற இதிகாசத்தில் ஒருவன், ஒரு நீதியான சக்கரவர்த்தி அறுபதினாயிரம் பெண்சாதிகளை மணந்து கொண்டதாகவும் பட்டத்துக்கு தன் சொந்த அரண்மனையில் வேறு மூன்று பெண்டாட்டிகளை மணந்து கொண்டிருந்ததாகவும், யாகத்தில் அவர்களைப் பார்ப்பனர்களுக்குத் தன்னுடைய சொத்துவைப் போல கருதித் தருமமாக கொடுத்து விட்ட-தாகவும் அவர்களாலே பெண்களை வைத்து நிர்-வகிக்க முடியாமல் திரும்பவும், பணம் வாங்கிக் கொண்டு ராஜாவுக்கே கொடுத்து விட்டதாகவும், இம்மாதிரி பண்ட மாற்றுதலுக்கு பெண்களை உபயோகப் படுத்தினதாகச் சொல்லப்படுகிறது.
பெரியாருக்குத்தான் மூளை இல்லை, வெள்ளைக்காரன் சொன்னதை எல்லாம் வாந்தியெடுத்தான் என்ரால், நீங்களும் அவர் சொல்லுவதை வாந்தி எடுக்க வேண்டுமா? ஒரு உயர்குலப்பெண் (அவள் யார் என்று தெரியவில்லை) சொன்னால் அது என்ன எல்லா இந்துப்பெண்களும் அப்படித்தான் சொல்லவேண்டும் என்று சட்டமா? அல்லது ராமாயணத்தில் ஒரு சக்கரவர்த்திக்கு அறுபதினாயிரம் பெண்டாட்டி இருந்தால், எல்லா இந்துக்களும் அறுபதினாயிரம் பொண்டாட்டி கட்ட வேண்டும் என்று சட்டமா? தசரதன் ஒரு இந்துவுக்கு உதாரண புருஷன் அல்ல. ராமன் தான் ஒரு இந்துவுக்கு உதாரண மனிதன். ராமன் தன் தந்தை சொல்லை தட்டவில்லை. தந்தை சொன்னார் என்று ராஜ்ஜியத்தை விட்டுவிட்டு காட்டுக்கு போனான். தாய் மீது பாசம் கொண்டவன். தன் மாற்றாந்தாயையும் தாயாகவே கருதியவன். தன் மனைவி மீது பாசம் கொண்டவன். ஓடம் ஓட்டுபவனையும், குரங்கையும், ஒரு அரக்கனையும் சகோதரர்களாக நடத்தியவன். போரில் ஆயுதம் ஏந்தாமல் நின்ற எதிரியையும் ஆயுதம் இல்லாதவனோடு போர் புரிய மாட்டேன் என்று இன்று போய் நாளை வா என்று அனுப்பியவன். அவ்வளவு தன் மனைவிக்காக தனி மனிதனாக இருக்கும்போது போர் புரிந்தவன், அதே ராமன் தான் அரசனாக ஆனதும், மக்களின் கருத்தே முக்கியம் என்று ஆசை மனைவியை தள்ளி வைத்தவன். இதெல்லாம் உங்களூக்கு எங்கே புரியப்போகிறது?
வழிப்பறி கொள்ளைக்காரனை உதாரண மனிதனாக எடுத்துகொள்கிறீர்கள். தன்னை எதிர்த்து எவனாவது கருத்து சொன்னால், ஆளை வைத்து கொல்ல வைக்கிற கொலைகாரன் முகம்மது. (அஸ்மா பின்ந் மர்வான் என்ற கவிஞரை அப்படித்தானே கொல்கிறார் முகம்மது) ஆயுதம் ஏந்தாத ஆண்களை கொல்வது மட்டுமல்ல, பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்ட் முகம்மதை நீங்கள் உதாரண மனிதன் என்று சொல்லுகிறீர்கள். எதிரியின் மனைவியையும் பெண் குழந்தைகளையும் அன்றிரவே கற்பழிக்கும் மனிதனை உதாரண மனிதன் என்று சொல்லி அதே மாதிர் நடந்துகொள்கிறீர்கள்.
இந்த நாட்டில் பிறந்துவிட்டு, அரபி நாட்டு கொள்ளைக்காரன், கொலைகாரன், வழிப்பறி திருடனிடம் கடவுள் பேசினார் என்ரு ஏமாந்து, இந்த நாட்டின் கலாச்சாரத்தின் ஆதாரமான, ராமாயணத்தை விமர்சிப்பதுதான் வெட்கம் கெட்ட செயல்.
//இந்த நாட்டின் கலாச்சாரத்தின் ஆதாரமான, ராமாயணத்தை//
நிலா, இன்னும் நீங்கள் ராமரு எந்த வருடம் பிறந்தார் என்று சொல்லவில்லை.
//இந்த நாட்டின் கலாச்சாரத்தின் ஆதாரமான, ராமாயணத்தை//
நிலா, இன்னும் நீங்கள் ராமரு எந்த வருடம் பிறந்தார் என்று சொல்லவில்லை.
//இந்த நாட்டின் கலாச்சாரத்தின் ஆதாரமான, ராமாயணத்தை//
அப்பன் பல பொண்டாட்டிகளோடு படும் அவஸ்தையை பார்த்து ஒத்த பொண்டாட்டியே போதும் என்றும், அதையே பின்பு காட்டுக்கு துரத்தி விட்டும் எழுத்தாளனின் உளவியல் காட்டியிருக்கும் ராமாயணம் நாட்டின் கலாச்சாரபாடமா!
கொய்யால, இந்தியா விளங்கவே விளங்காதா!?
ராமன்தான் உதாரண புருஷன் என்றால், மனைவி மானை பிடித்துத்தா என்றால் தனி காட்டில் மனைவியை விட்டுவிட்டு மானை விரட்டி ஓடுவதா? இதைபோல் இப்போதைய மனைவிகள் பிளேனை பிடித்துத்தா என்று கேட்டால் உதாரண புருஷனை பின்பற்றுவதா?
குடி மக்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லுவார்கள் அத்தனை கருத்துக் களையும் ஏற்று ஒரு மன்னர் செயல் பட முடியுமா? ராமர் உதாரன் புருஷர் என்றால் யாரோ ஒருவர் சொன்னதற்காக பொண்டாட்டியை தெருவில் [காட்டில்]விடுவதா? அவ்வேறேனின் நிலாவின் மனைவியை பற்றி ஒருவர் ஏதாவது சொன்னால் இதுதான் கதியா? யார் என்ன சொன்னாலும் உண்மையை அறிவதுதானே அறிவு ! குரங்கையே சகோதரனாக ஏற்றுக் கொண்டானே அவரை பின்பற்றும் நீங்கள் எத்தனை பேர் தலித் வீட்டில் திருமணம் உறவு வைத்துள்ளீர்கள்? குரங்கையும் அரக்கனையும் சகோதரன் என்று ஏற்று கொண்டு நடந்திருந்தால் ராமர்க்கு பிறகு லட்சக்கணக்க்கான வருடங்கள் ஆகியும் ஏன் இன்றும் தீண்டாமை இருக்கிறது? ஏன் பார்ப்பனரும் மற்ற மேல் சாதியினரும் இரண்டறக் கலக்கவில்லை.செத்த மாட்டை அறுத்ததற்காக தலித்களை கொன்றார்களே ,ராமர் வழியில் மாட்டை சகோதரனாக ஏற்றுக்கொண்டு தலித்களை குப்பைகளாக கொண்டார்களா?
அப்புறம் மகாபாரதம் பற்றி பெரியார் சொன்னெதெல்லாம் சரியா?
வால்பையன்,
நீங்க பாவம் யார் பெத்த புள்ளையோ… டாக்டர்கிட்ட காட்டிட்டு வாங்க.. அம்மாவை எளசா புதுசான்னு பாக்கிற நீங்களெல்லாம் கருத்து சொல்லன்னு வ்ரலாமா?
—
அரபுகளிடன் மூளையை அடகு வைத்த வாஹித் உசென்,
ராமன் உதாரண புருஷன். உதாரண மனிதன், உதாரண மகன், உதாரண அரசன், அப்படிப்பட்ட உதாரண அரசனின் ஆட்சியில் யாருக்கும் குறையேதும் இல்லை. அப்படிப்பட்ட உதாரண அரசனின் குடிமக்களில் ஒரே ஒருவன் மட்டுமே ராணியை குறைசொன்னான். ராமன் தன் மனைவியை குடிமக்களில் ஒருவன் சொன்னான் என்று அவன் கருத்துக்கு மதிப்பளித்து விலக்கி வைத்தான்.
ஒரே ஒரு மனிதனின் கருத்தாக இருந்தாலும், அது அரசனால் மதிக்க்கப்பட வேண்டும் என்பதே அங்கு தெரியும் உண்மை. அதுவே ராமராஜ்யம். அது ஒரு இலக்கு. அந்த இலக்கை யாரும் எட்டிவிட முடியாது. ஆனால் அந்த இலக்கை வைத்துத்தான் அரசர்கள் ராஜபரிபாலனம் செய்யவேண்டும்.
அதனையும் இன்றையும் சேர்த்து பாருங்கள்.
,
தன் குடும்பத்துக்காக நாட்டையே கொன்ரு தள்ளும் முவம்மார் கடாபி, எகிப்து நாட்டையே சுரண்டி கொளுத்த முபாரக், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவையே சுரண்டி பணக்காரனான கருநாநிதி,
இவர்கள் ராமனை முன்மாதிரியாக கொண்டிருந்தால், இவ்வளவு ஊழல் செய்திருப்பார்களா?
ஆனால், அவர்களுக்கோ முகம்மதுதான் நல்லவர்,. முகம்மது தன்னை விமர்சிப்பவர்களை ஆள்வைத்து தீர்த்துகட்டுகிறார். அதனைத்தான் இவர்களும் செய்கிறார்கள். முகமமது பெண்ணாசையால் பலரை கல்யாணம் பண்ணிகொள்கிறார். ஆறுவய்து குழந்தை என்றும் பார்க்காமல், அதனைத்தான் இவர்களும் செய்கிறார்கள். தன் மக்களது வியாபார வண்டிகளையே வழிப்பறி செய்து பணம் சேர்த்து கொள்ளைக்கரனாகிறார் முகம்மது. அதனைத்தான் இவர்களும் செய்கிறார்கள்.
நாடு நாசமாக போவது எதனால் என்று தெரிகிறதா?
சிந்தியுங்கள். அரபு கொள்ளைக்கூட்ட காரனிடம் கடவுள் பேசினார் என்று ஏமாறாதீர்கள்.
உங்களுக்கு புரிந்துகொள்ள திரணி இருக்கும்போது மகாபாரதம் பற்றி சொல்கிறேன்
//வால்பையன்,
நீங்க பாவம் யார் பெத்த புள்ளையோ… டாக்டர்கிட்ட காட்டிட்டு வாங்க.. அம்மாவை எளசா புதுசான்னு பாக்கிற நீங்களெல்லாம் கருத்து சொல்லன்னு வ்ரலாமா?//
ஜீனத் அம்மன் எளசா இருக்குற வரைக்கும் திரையில் சக்கை போடு போட்டார்!, உங்க ஆயிரம் வருடமாக என்ன செய்து கொண்டிருக்கிறார்!
நீங்க என்னவோ வார்த்தையில் என்னை மடக்குவது போல் அம்மன் என்ற சொன்னதை அம்மா என்றே வைத்து கொள்வோம்!
அது யார் அம்மான்னு நான் சொன்னேனே, என் குழந்தைக்கு அதை பெற்றவள் அம்மா, பக்கத்து வீட்டு குழந்தையை பெற்றவள் அவர்கள் அம்மா! உங்களை பெற்றவள் உங்கள் அம்மா!
இப்படி பல அம்மாக்கள் உலகில் உண்டு, நான் சொல்ல வந்தது, ஆயிரம் வருடமாக கக்குகிறாள் என்ற சொன்ன உங்கள் அம்மனை, நீங்களாக அதற்கு அம்மா பட்டம் கட்டுவீர்களானால் யார் அம்மா என்று நான் இழுப்பேன்!
இனிய நிலா ,ராமயானத்திலுள்ள கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியவில்லை.மகாபாரதத்திற்கு பதிலாவது கத்தரிக்கையாவது?உதாரன புருஷன் உதாரண மனிதன் என்றால் நீங்கள் பதில் சொல்லிய கேள்வியின்படி உங்களது இறைவனாகிய ராமாரை பின்பற்றி உங்கள் மனைவி பற்றி எவனாவது ஏதாவது சொல்லிவிட்டால் பதினாலு வருடங்கள் உங்களை நம்பி உங்களுடன் வாழ்ந்த மனைவியை நம்பாவிட்டாலும் அவன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் காட்டில் அனாதையாக கொண்டு விடுவீர்களா?அப்படிவிட்டால் உங்களை இந்த சமுதாயம் போற்றி புகழுமா
அன்பு நிலா ,
\\\\ முகம்மது தன்னை விமர்சிப்பவர்களை ஆள்வைத்து தீர்த்துகட்டுகிறார். அதனைத்தான் இவர்களும் செய்கிறார்கள். முகமமது பெண்ணாசையால் பலரை கல்யாணம் பண்ணிகொள்கிறார். ஆறுவய்து குழந்தை என்றும் பார்க்காமல், அதனைத்தான் இவர்களும் செய்கிறார்கள். தன் மக்களது வியாபார வண்டிகளையே வழிப்பறி செய்து பணம் சேர்த்து கொள்ளைக்கரனாகிறார் முகம்மது. அதனைத்தான் இவர்களும் செய்கிறார்கள்.\\\\
அறுபதினாயிரம் மனைவிகள் உடைய தசரதனின் மகன் ராமன் மற்றும் உங்கள் லட்சகணக்கான கடவுளர்களை நாங்கள் விமர்சனம் செய்வதற்கு இஸ்லாம் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. உங்களால் முகமது நபியை வேறு எந்த வழியிலும் விமர்சிக்க முடியாதாதால் வழக்கமாக உங்கள் சங்க்பரிவார வெறியர்கள் கையில் எடுக்கும் முகமது நபியின் திருமணத்தை பற்றி விமர்சனம் செய்கிறீர்கள்.
உங்கள் பாட்டியிடம் கேட்டு பாருங்கள் . எத்தனை வயதில் திருமணம் முடிந்தது என்று.? அப்போது உங்களுக்கு புரியும் ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னால் சிறு வயது திருமணம் நடந்ததை உங்களால் அறியமுடியும் .
ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் சிறு வயது திருமணம் நடை முறையில் இருந்த கால கட்டத்திலே ஆயிசா நாயகியை முகமது நபி திருமணம் செய்தது உண்மை தான் . ஆனால் அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தியது ஆயிஷா நாயகி வயதுக்கு வந்த பின்பு தான் என்பதையும் குறித்து கொள்ளுங்கள். இஸ்லாத்தை பொறுத்தவரையில் ஒரு பெண் வாழ்வதற்குரிய பக்குவத்தை அடைவதற்கு முன்னால் திருமணம் செய்ய அனுமதியில்லை என்பதை உணர்த்திய மார்க்கம் . ஆனால் ஆயிஷா நாயகியை முகமது நபி திருமணம் செய்யும் பொது அது சம்பந்தமான சட்டம் அருளப்பாடாததனால் அந்த நாட்டின் கலாச்சாரப்படி முகமது நபியின் வாழ்க்கையிலும் இந்த சம்பவம் நடந்தது. ஆனால் உங்கள் குரூர மனமோ இதை முகமது நபியின் காம இச்சையாக பார்க்கிறது. ஒரு வேளை நீங்கள் அறியாமையால் கூறியிருந்தால் ஒன்றை குறித்து கொள்ளுங்கள் . எந்த மனிதனும் தன்னுடைய இளமை பருவத்தில் தான் காம உணர்வு மிகைத்தவனாக இருப்பான். முகமது நபி தன் இளமை பருவம் முழுவதிலும் அதாவது தன்னுடைய ஐம்பது வயது வரை கதிஜா நாயகி என்ற தன்னை விட இருபது வயது அதிகமான விதவையுடன் மட்டும் தான் வாழ்ந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவர் காம வெறியராக இருந்தால் அந்த கால கட்டத்தில் பல திருமணங்கள் செய்திருக்கலாம்.
ஐம்பது வயது வரை ஒரு மனைவியோடு வாழ்ந்த முகமது அதன் பிறகு சில திருமணங்கள் செய்தார் என்பது உண்மை தான் . அவை அனைத்துமே வாழ்க்கை கொடுப்பதற்காக நடந்த திருமணங்கள் தான். கணவனை இழந்த மற்றும் வயது முதிர்ந்த பெண்களாக தான் அவர்கள் இருந்தார்கள். முகமது நபியின் மனைவிகளில் ஆயிஷா நாயகி மட்டும் தான் கன்னி பெண். அது தன்னுடைய தோழரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த காலத்து கலாசாரத்தின் அடிப்படையில் அவரின் மகளை திருமணம் செய்த நிகழ்வு தான்.
அடுத்து முகமது நபியின் வழிப்பறி பற்றி ஏதாவது ஒரு ஆதாரம் கொடுக்க முடியுமா நண்பரே. பரிசீலிக்கலாம். எதற்காக உங்கள் வெறியை இப்படியெல்லாம் காட்டுகிறீர். பொய்களையும் புரட்டுகளையும் கூறி. இஸ்லாத்தை பற்றி சிந்தித்து பாருங்கள் . இந்த நூற்றாண்டில்உங்கள் மதத்தில் விதவைகள் ஒதுக்கி வைக்க படும் பொது ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் விதவை திருமணத்தை சிரத்து என வலியுறுத்தி தன்னுடைய வாழ்கையிலும் நடைமுறை படுத்தி காட்டிய முகமது நபியின் நீங்கள் சிந்தித்தால் எங்கள் முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீங்களும் மாறலாம் . அதனால் வெறியை விளக்கி வைத்து அறிவு பூர்வமாக சிந்தித்து பாருங்கள்.
உங்களையும் நேசிக்கும் ,
மனித நேயன்
நிலா ,இதற்க்கு மேல் நான் உங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.நிறைய மென்மையான ஹிந்து நண்பர்கள் உள்ளனர் அவர்கள் அவர்கள் மனம் புண்படுமாறு நடந்து கொள்ள நான் விரும்ப வில்லை.
எங்கள தலைவர் பற்றி இறைவன் அருளால் இன்னும் ஓரிரு நாளில் பதில் தருகிறேன்
//ஐம்பது வயது வரை ஒரு மனைவியோடு வாழ்ந்த முகமது அதன் பிறகு சில திருமணங்கள் செய்தார் என்பது உண்மை தான் . அவை அனைத்துமே வாழ்க்கை கொடுப்பதற்காக நடந்த திருமணங்கள் தான். //
ஊருகுள்ள வேற ஆம்பளைங்களே இல்லையா மனிதநேயன்!
கேக்குறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம்,
இறைதூதர்ன்னு ஊரை ஏமாத்துன முகமதுக்கு என்னமா சப்பை கட்டு கட்றிங்க!
அரபிய மடத்தனத்திலிருந்து இன்னும் வெளிவராத வாஹித் உசேன்.
//உங்களது இறைவனாகிய ராமாரை பின்பற்றி உங்கள் மனைவி பற்றி எவனாவது ஏதாவது சொல்லிவிட்டால் பதினாலு வருடங்கள் உங்களை நம்பி உங்களுடன் வாழ்ந்த மனைவியை நம்பாவிட்டாலும் அவன் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் காட்டில் அனாதையாக கொண்டு விடுவீர்களா?//
இஸ்லாமில் இருப்பது போல, முகம்மது நின்றுகொண்டே ஒன்னுக்கு போனார் அதனால் எல்லா முஸ்லீம்களும் நின்றுகொண்டே போகவேண்டும் என்பது போன்ற மடத்தனமான பின்பற்றுதல்கள் இந்து மதத்தில் இல்லை. கொஞ்சம் இறைவன் கொடுத்த மூளையை உபயோகப்படுத்தவேண்டும். மக்களின் நலத்துக்காக சொந்த சுகங்களையும் விருப்பு வெறுப்புகளையும் விட்டுவிட வேண்டும் என்பது ஒரு அரசனுக்கு இலக்கணம். அதுதான் இங்கே சொல்லப்படுகிறது. உங்களது அரபிய மடத்தனத்தை வைத்துகொண்டு இந்தியாவின் பாரம்பரியத்தை மதிப்பிடாதீர்கள்.
புளுகும் மனிதநேயன்,
//ஆனால் ஆயிஷா நாயகியை முகமது நபி திருமணம் செய்யும் பொது அது சம்பந்தமான சட்டம் அருளப்பாடாததனால் அந்த நாட்டின் கலாச்சாரப்படி முகமது நபியின் வாழ்க்கையிலும் இந்த சம்பவம் நடந்தது. //
இதுதான் 60 வயதான முகமமது ஆறுவயது குழந்தையை கற்பழிக்க கடவுளை மாமாவாக்கிய கதை… படியுங்கள்.
அருளவில்லையா? யாரிடம் புருடா? அல்லாஹின் அருளிலால்தான் நடந்தது என்றுதான் முகம்மதே சொல்கிறார்.
//1579. ”நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
//
//இவர்கள் ராமனை முன்மாதிரியாக கொண்டிருந்தால், இவ்வளவு ஊழல் செய்திருப்பார்களா?//
மத பெருமிதவாதிகள் அனைவரும் ஒரே மதிரியாகவே சிந்திப்பார்கள்.
1.என் மதக் கருத்துகள் என்று நினைப்பதை ஆதாரபூர்வமான உண்மைகளா என்று உறுதி செய்ய மாட்டோம்..
ஒரு சின்ன எடுத்துக் காட்டு
இராமன் ஒரு தாரம் உடையவன் என்பதே வால்மீகி இராமயண்த்தில் சில இடங்களில் குழப்பமாக கூறப்படுகிறது.
அயோத்யா காண்டத்தில் சர்கா 8 ல் கைகேயிக்கும்,கூனி மந்தாரைக்கும் நடைபெறும் உரையாடலில் கூனி கூறுகிறாள் “ஒருவேளை இராமன் அரசன் ஆனால் ,உன்(கைகேயி) மகன் பரதன் அவன் வேலைக்காரன் ஆவான்,இராமன் மனைவிகள் மகிழ்வார்கள்” என்று கூறுகிறாள்.
http://www.valmikiramayan.net/ayodhya/sarga8/ayodhya_8_prose.htm
Manthara, becoming indignant with Kaikeyi, threw down the ornament given to her and with anger and distress spoke the following words: “O, foolish one! Not knowing that you are in the midst of an ocean of trouble, what is it that you are so delighted about, in a matter to be grieved? Though stricken with grief, I mentally laugh at you in that you are rejoicing at the time when a great calamity is befalling you.”
“I am lamenting over your foolish mind. Does any intelligent woman feel happy over the prosperity of a stepson who is considered an enemy? Does it not amount to praising a befalling death? Rama has a fear about Bharata because Bharata has equal rights over the kingdom. In thinking about this matter, I am getting anguished. Do we not get disasters from those who are afraid of us?”
“Lakshmana, wielding a great bow, joined Rama with all his heart. Shatrughna is as faithful to Bharata as Lakshmana to Rama. yi! In line with even the proximity of birth; the claim to the throne of Bharata alone can be pressed, that of Lakshmana and Satrughna who are younger is out of question.”
“Rama is a learned man and a political statesman. His actions are timely and appropriate. When thinking of your son’s calamity to be resulted from Rama, I get shaken with fear. Kausalya is very fortunate. Brahmans are going to anoint her son for the great princely kingdom tomorrow on the day of Pushyami star”.
“With folded arms, as a maid-servant, you have to serve that Kausalya who having reached great prosperity, in the height of joy, will dispose of her adversaries (in the person of Bharata and yourself). Thus, if you become Kausalya’s servant-maid along with us, your son Bharata will be Rama’s attendant. Rama’s wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata’s waning position.”
2.அப்படி ஆதாரபூர்வமா கருத்துகள் சர்ச்சைக்குறியதாக இருந்தால் அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவோம்.
இது இராமனுக்கு பெருமையான விஷயமாக இல்லாததால் உடனே ஒரு விளக்கம்.என்னவெனில் ஒருவேளை இராமன் அரசன் ஆனால் அவன் வழக்கப்படி பல மனைவிகளை எதிர்காலத்தில் மணந்து கொள்வான் என்பதை குறிக்கவே இப்படி கூறப்பட்டு உள்ளது. இந்த இதிகாச புசர்களின் ஒழுக்கம் எல்லாம் மொழி பெயர்பாளர்களின் வார்த்தை விளையாட்டு மற்றும்,மத பிரச்சாரகர்களின் விளக்கங்களிலேயே இருக்கிறது. இன்னொரு இடத்தில் இராமன் மது அருந்தினான் என்று வரும். மது என்றால் தேன் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று ஒரு விளக்க குறிப்பும் உண்டு.
.பார்த்தால் திரு பி.ஜே அவர்களின் விளக்கம் போலவே இருக்கீறது.
Comment: The words ‘Rama’s wives’ here do not indicate that Rama had multiple wives. Manathara refers to a possible future where Rama being a King would marry other women. It was a norm then for a king to have more than one wife.
3.என் மத கருத்துகளை கொண்ட அரசியல்வாதிகள்,மதவாதிகள் அனைவரும் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளாதவரை நல்லவர்கள்.
சரி அதுதானே உங்கள் பிழைப்பு.
நண்பர் நிலா தற்காலத்தில் ராமனை முன் மாதிரியாக கொண்டதாக் நீங்கள் நினைக்கும் ஒரு ஆளை காட்டுங்கள்.
__________
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள போராட்டம் சவுதிக்கும் நிச்சயம் வரும்.சவுதியில் ஜனநாயகம் வந்து விட்டால் ,பிறகு சவுதி வஹாபியம் பேசும் இஸ்லாமைய மத பெருமிதம் காணாமல் போய்விடும்.
//யாரிடம் புருடா? அல்லாஹின் அருளிலால்தான் நடந்தது என்றுதான் முகம்மதே சொல்கிறார்//
நீங்கள் கூறிய விஷயம் பல ஹதிதுகளில் கூறப்பட்டு உள்ளது.
3895. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
“நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
Volume :4 Book :63
5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன்.
Volume :5 Book :67
5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன். 65
Volume :5 Book :67
_
நண்பர் நிலா ஜைனப்பின் திருமணம் குரானிலேயே கூறப்பட்டு உள்ளது.
_
33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.
_
இந்துமதத்துக்கு எதிரி என்று காட்டிகொண்டால்தான் இஸ்லாமை விமர்சிக்க முடியும் என்று நினைத்துகொண்டு எதை எதையோ ஆதாரமாக காட்டமுயலும் சங்கர் அவர்களே,
எந்த இடத்திலாவது ராமன் நான் பல பெண்களை மணம் புரிந்தவன் என்று சொன்னாலோ, அல்லது நான் ஏக பத்தினி விரதம் உடையவன் அல்ல என்று சொன்னாலோ நீங்கள் சரியான ஆதாரத்தை காட்டியதாக சொல்லலாம்.
இது கூனி சொல்வது. கூனி ராமாயணத்தில் வில்லி. அவள் சொல்வது சரியானதாக இருக்குமா?
முகம்மது கெட்டவர் என்று முகம்மதின் எதிரி எதாவது ஹதீஸில் சொல்லியிருப்பார். அதனை முகம்மது கெட்டவர் என்பதற்கு ஆதாரமாக சொல்லமுடியுமா?
முகம்மதின் செயல்களை வைத்துத்தான் அவர் கெட்டவரா நல்லவரா என்று சொல்லமுடியும். அது போல ராமர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருந்ததை காட்டுங்கள். அதுதான் ஆதாரம். இது விவாதத்தில் அரிச்சுவடி. இது கூட தெரியாதவரிடம் விவாதிப்பது வீண்.
மனிதநேயன் (மனிதநேயமாம்.. புன்னாக்கு)
//அடுத்து முகமது நபியின் வழிப்பறி பற்றி ஏதாவது ஒரு ஆதாரம் கொடுக்க முடியுமா நண்பரே.//
எவ்வளவு ஆதாரம் வேண்டும்?
இந்தா வச்சிக்கங்க..
/Whenever they heard of a Meccan caravan setting out for Syria, they intercepted it, and killed everyone they could get a hold of. They tore every caravan to pieces and took the goods.
Ishaq:508, See Also Tabari VIII:91/
—
So Muhammad began seizing their herds and their property bit by bit. He conquered home by home. The Messenger took some of its people captive, including Safiyah and her two cousins. The Prophet chose Safiyah for himself.
Tabari VIII:116, See Also Ishaq:511
—
The Banu Sahm of Aslam [newly recruited Muslim militants] came to the Messenger and complained, ‘Muhammad, we have been hurt by drought and possess nothing.’ Although they had fought for the Prophet they found he had nothing [he was willing] to give them. The Apostle said, ‘O Allah, You know their condition—I have no strength and nothing [I want] to give them [from the booty I have stolen]. So conquer for them the wealthiest of the Khaybar homes, the ones with the most food and fat meat.’
Tabari VIII:117
—
Since the Hawazin and Thaqif had marched with their women, children, and flocks, Allah granted them as booty to His Messenger, who divided the spoils among those Quraysh who had recently embraced Islam.
Tabari IX:3
—
Narrated Ibn ‘Umar that the Prophet (SA) said, “My livelihood is under the shade of my spear,(1) and he who disobeys my orders will be humiliated by paying Jizya”[1]
Bukhari
கஜ்வா என்றால் வழிப்பறி கொள்ளை. அதுதான் காரவான்கள் போகும் வழியில் காத்திருந்து தாக்கி அந்த வியாபார காரவான்களை கொள்ளையடித்து முகம்மதுவும் மற்றவர்களும் பங்கு போட்டுக்கொள்வது.
அரபியர்களிடம் அடகு வைத்த மூளையை திரும்பப்பெற முயற்சி செய்யவும்.
இந்த மாதிரி ஒரு ஆள் என்கிட்ட கடவுள் வந்து பேசினார் என்று ரீல் விட, அதனை நீங்க நம்பிக்கிட்டு இருக்கிரதுக்கு நாண்டுகிட்டு சாகலாம்
கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உங்களுக்கு?
புளுகும்நேயன் (??)
//இந்த நூற்றாண்டில்உங்கள் மதத்தில் விதவைகள் ஒதுக்கி வைக்க படும் பொது ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால் விதவை திருமணத்தை சிரத்து என வலியுறுத்தி தன்னுடைய வாழ்கையிலும் நடைமுறை படுத்தி காட்டிய முகமது நபியின் நீங்கள் சிந்தித்தால் எங்கள் முன்னோர்கள் இஸ்லாத்தை தழுவியது போல் நீங்களும் மாறலாம் //
அடக்கண்றாவியே. இந்த பொய்யை இன்னும் எவ்வளவு காலம் சொல்லப்போகிறீர்கள்? கதீஜா பிராட்டிக்கு மூன்றாவது கணவர் முகமம்து. கதீஜா பிராட்டியின் முதல் கணவர் இறந்ததும் இரண்டாவது கணவரை கல்யாணம் செய்துகொணார். இந்த விதவை திருமணத்துக்கும் முகம்மதுவுக்கும் என்ன சம்பந்தம்? கதீஜா பணக்காரர். அவரிடம் வேலை பார்த்தவர் இவர். சரி பணக்கார பெண் தன்னை கல்யாணம் பண்ணிகொள்கிறாரே என்று இரண்டாவது செத்ததும் மூன்றாவதாக கல்யாணம் பண்ணிகொள்கிறார். இதில் என்னவோ அதுவரைக்கும் விதவா விவாகமே நடக்காதது போலவும் இவர்தான் ஆரம்பிது வைத்தார் போலவும் புளுகுவது ஏனோ?
முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பொய் சொல்லலாம் என்று முகம்மது சொன்னதை எங்களிடமே போட்டு பார்க்கிறீர்களா?
நிலா,
ராமரு என்பதே ஒரு கற்பனை கதாபாத்திரம் சரியா.?
மது,
உங்களது முப்பாட்டனது தாத்தா எந்த தேதியில் பிறந்தார் என்று சொல்லமுடியுமா?
நிலா, ராமயாணம் காவியம் என்பது வேறு விஷயம் .தாங்கள் அண்ணாவின் கம்பரசம் படித்திருப்பீர்கள்.அண்ணாவின் அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்லி ராமயனாத்தின் களங்கத்தை நீக்குங்கள். முந்தைய காலத்தில் உள்ள விடுதலை உண்மை போன்ற இதழ்களில் ராமயாணம் ,மகாபாரதம் பற்றிய விமர்சனங்கள் நிறையவே குவிந்து கிடக்கின்றன.பதிலோ, விளக்கமோ அளிக்கமுடியாமல் அங்கே உங்களது மதம் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன.அதற்க்கெல்லாம் தகுந்த விளக்கங்கள் அளித்துவிட்டு இஸ்லாத்தை பற்றி பேசிட வாருங்கள்.உங்கள் மதத்தில் பிறந்த அவர்களது விமர்சனங்களால் அதிகமானோர் முஸ்லிம்களாகி உள்ளனர்.
.////ராமன் உதாரண புருஷன். உதாரண மனிதன், உதாரண மகன், உதாரண அரசன்,////
உதாரண புருஷன் என்றால் தன்னை நம்பி வந்தவளை காட்டில் விடுவதுதான் சரியா?குற்றசாட்டில் உண்மையை அறிந்து சீதா பிராட்டியாரின் மீதுள்ள அவதூறுவை களைந்து அவதூறு கூறியவனுக்கு தண்டனை வழங்குவது அல்லவா மன்னனுக்கு அழகு. சீதாவும் அந்நாட்டின் பிரஜை இல்லையா? தன்னை உயர்வாக காட்டிக் கொள்வதற்காக ஒரு பெண்ணுக்கு அநியாமாக தீர்ப்பு வழங்குவதுதான் மன்னனின் தர்மமா? அப்படியே சீதாவை தண்டிப்பதாக இருந்தாலும் ஜனகரிடம் அல்லவா விட்டிருக்கக வேண்டும்?பெண்டாட்டி மானை பிடித்துத்தா என்று கேட்டால் ,தலையணை மந்திரத்தில் மதி மயங்கி மானை விரட்ட சென்றது உதாரண புருசரின் குற்றமல்லவா?சீதாதேவி என்னதான் சொன்னாலும் ஒரு அபலையை காட்டில் தனியாக விட்டு சென்றது லட்சுமணனின் குற்றம் அல்லவா? சீதாதேவி செய்த குற்றம் என்ன?அந்த அம்மையாருக்கு தண்டனை வழங்கியது உதாரண அரசனின் தவறல்லவா?
ராமரை அங்ஙனமே பின்பற்ற முடியாது என்றால் ஏன் “உதாரண மனிதன்’ என்று சொல்ல வேண்டும்? பின்பற்ற முடியாத உதாரணம் யாருக்கு தேவை? முகம்மது நபி [ஸல் ]அவர்கள் பற்றி மீண்டும் சொன்னதி கூறி மழுப்ப வேண்டாம் அதற்க்கு நான் பதில் தருகிறேன் என்னுடைய பழைய பல கேள்விகளே பதில் இல்லாமல் உள்ளன.
நிலாவின் கவனத்திற்கு ,குரங்கையே சகோதரனாக ஏற்றுக் கொண்டானே அவரை பின்பற்றும் நீங்கள் எத்தனை பேர் தலித் வீட்டில் திருமணம் உறவு வைத்துள்ளீர்கள்? குரங்கையும் அரக்கனையும் சகோதரன் என்று ஏற்று கொண்டு நடந்திருந்தால் ராமர்க்கு பிறகு லட்சக்கணக்க்கான வருடங்கள் ஆகியும் ஏன் இன்றும் தீண்டாமை இருக்கிறது? ஏன் பார்ப்பனரும் மற்ற மேல் சாதியினரும் இரண்டறக் கலக்கவில்லை.செத்த மாட்டை அறுத்ததற்காக தலித்களை கொன்றார்களே ,ராமர் வழியில் மாட்டை சகோதரனாக ஏற்றுக்கொண்டு தலித்களை குப்பைகளாக கொண்டார்களா?
அப்புறம் மகாபாரதம் பற்றி பெரியார் சொன்னெதெல்லாம் சரியா
நிலா நாங்கள் தான் அரபுகளிடம் மூளை அடகு வைத்துவிட்டோம் .நீங்கள் கொஞ்சம் அறிவோடு பேச வேண்டாமா?
மதுவின் முப்பாட்டனாரின் தாத்தாவைப் பற்றியா பேசிக் கொண்டிருக்கிறோம் .,அவர உதாரண புருஷர் ,உதாரண அரசர்
நிலா ///முகம்மது கெட்டவர் என்று முகம்மதின் எதிரி எதாவது ஹதீஸில் சொல்லியிருப்பார். அதனை முகம்மது கெட்டவர் என்பதற்கு ஆதாரமாக சொல்லமுடியுமா?////
நிலா ,முகம்மது நபி [ஸல்] அவர்கள் பற்றி அவருடைய முதல் எதிரி அபுஜஹ்ல் .ஆனால் அவன் கூட ஒரு தடவை கூட முகம்மது நபி[ஸல்] அவர்களின் பண்புகளில் எந்த குற்றமும் பிடிக்கவில்லை .இஸ்லாமை அறிமுகப்படுத்தியதர்க்காக அவரை பழிவாங்க முயற்சிதானே தவிர தங்களைப் போன்று அபாண்டங்கள் கூறவில்லை. கொஞ்சம் சிந்தியுங்கள் பாலியல் குற்றத்திற்கும் ,திருட்டு குற்றத்திற்கும் இஸ்லாம் தான் கடுமையான தணடனைகள் கொடுக்கிறது .அவற்றின் கடுமை கடும் விமர்சனத்திற்குள் ஆகியிருக்கின்றன.ஒரு மனிதனின் உள்ளக்கிடக்கைகளும் .சிந்தனைகளும் செயல்பாட்டில் வரும். அவ்வாறிருக்க நீங்கள் சொல்லுவது போல் முகம்மதுநபி[ஸல்] அவர்கள் இருந்திருப்பார் என்றால் என் இத்தனை கடுமையான சட்டங்களை சொல்லியிருக்க வேண்டும்?
நீங்களும் திராவிடன் என்று நம்புகிறேன் .நானும் திராவிடந்தான் .என் முன்னோர் தலித் களாக இருந்திருக்கலாம். இந்த நவீன காலத்திலே செத்த மாட்டை அறுத்ததற்காக ஐந்து மனிதர்களை கொன்றவர்கள் ,எனது முன்னோர்களை எப்படி படுத்தியிருப்பார்கள் .கொஞ்சம் சிந்தியுங்கள்.அதனால் அல்லவா என் முன்னோர்கள் தங்களது மூளையை அரபுகளிடம் அடகு வைத்துவிட்டார்கள்.நான் எனது மதத்தின் வழியில் செல்லுகிறேன் மேலும் நாங்கள் மத மாறியதால் இப்போது தலித்களுக்கு அதிகமான இட ஒதுக்கீடுகளும் வேலை வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது.அதனால் உங்களுக்கு என்ன நட்டம்? . .
கம்பரசத்தில் என்ன இருக்கிறது என்றாவது படித்து பார்த்திருக்கிறீர்களா? பெண்களின் உடல் வர்ணனை இருக்கிறது. அதுதான் கம்பரசம். கம்பன் ராமாயணத்தை எழுதியதற்கு ராமன் ஜவாப்தாரியா? நீதிபதி எம் எம் இஸ்மாயில் கம்பராமாயணத்தில் தோய்ந்தவர். அவர் எழுதியதை படித்து பாருங்கள். மானுடத்தின் உயர்வை கம்பன் பாடியிருப்பதை அவர் உங்களுக்கு விளக்குவார்.
ராமன் எதற்காக சீதையை காட்டுக்கு அனுப்பினான் என்று கூட தெரியாமல் வியாக்கியானம் பேசவேண்டாம். போய் கம்பராமாயணம் படியுங்கள். இலலையேல் அது பற்றி எம் எம் இஸ்மாயில் எழுதியிருப்பதையாவது படியுங்கள். ராம பட்டாபிஷேகம் வரைக்கும்தான் எல்லா ராமாயணங்களும் இருக்கும். இறுதி பகுதி இடைச்செருகல் என்றும் பின்னால் எழுதப்பட்டது என்றும் சொல்வார்கள். இந்த இறுதிப்பகுதியில்தான் பல விஷயங்கள் சேர்க்கபப்ட்டுள்ளன.
ராமர் காலத்தில் இல்லாத தீண்டாமை, மகாபாரதம் காலத்தில் இல்லாத தீண்டாமை எப்போது இந்தியாவுக்கு வந்தது?
தீண்டாமை இந்தியாவில் எப்போதும் இருந்ததில்லை. முகலாயர்களின் பங்களிப்புதான் தீண்டாமை. தோற்றவர்களை அடிமைப்படுத்துவதும் விற்பதும் இந்தியாவில் ஒருபோதும் செய்யப்பட்டதில்லை. முஸ்லீம் அரசர்களே இதனை முதலில் செய்தார்கள். அப்படி வாங்கப்பட்டவர்களை விற்கப்பட்டவ்ர்களை தோட்டி வேலை செய்ய பணித்தார்கள். கத்திக்கும் அவமானத்துக்கும் பயந்து பல இந்துக்கள் முஸ்லீம்களாக ஆனார்கள். முகலாயர்கள் வரும் வரைக்கும் இந்தியாவில் தோட்டிகளே இல்லை. ஏனெனில் யாருமே வீட்டுக்குள் கழிப்பறை கட்டவில்லை.வீட்டுக்குள் கழிப்ப்றை என்பது வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று அடக்கப்பட்ட முஸ்லீம் பெண்களுக்காக கட்டப்பட்டது. அந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய போரில் தோற்ற வீரர்களின் குடும்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். எல்லாவற்றையும் பேசும் திருக்குறளில் தோட்டி வேலை பற்றி ஒரு வார்த்தை கண்டுபிடியுங்களேன். சங்க இலக்கியத்தில் இது பற்றி ஒருவார்த்தை கண்டுபிடியுங்களேன்.
பெரும்பாலான ஜாதி கட்டுப்பாடுகள் இந்த காலத்தில்தான் தோன்றின. பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லா ஜாதிகளிலும் கட்டுப்பாடுகள் தோன்றி இந்து சமூகம் இறுக ஆரம்பித்தது இந்த் காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர்களே கூறுகிறார்கள். ஆகவே முதலில் படித்துவிட்டு உங்கள் திக உளறல்கலை தொடர்லாம்.
என் நண்கர்களாக இருக்க்ம் பல மரைக்காயர்களும் ராவுத்தர்களும் லெப்பைகளும் தங்களை தமிழர்கள் என்ரு ஒத்துகொள்வதில்லை. தங்களை அரபியர்கள் என்றும் ராவுத்தர்கள் தங்களை துருக்கர்கள் என்றும் தான் கூறுகிறார்கள். இலங்கையில் தன்னை தமிழராக இருந்து மதம் மாறியவர் என்று சொல்லும் ஒரே ஒரு மரைக்காயரை பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் தலித்தாக இருந்து மதம் மாறியவர் என்பதெல்லாம் வெறும் கதை.
//நிலா ,முகம்மது நபி [ஸல்] அவர்கள் பற்றி அவருடைய முதல் எதிரி அபுஜஹ்ல் .ஆனால் அவன் கூட ஒரு தடவை கூட முகம்மது நபி[ஸல்] அவர்களின் பண்புகளில் எந்த குற்றமும் பிடிக்கவில்லை //
மேலும் ஒரு புளுகல்.
முகம்மதுவை பலர் பொய்யர் என்றும் இட்டுக்கட்டுபவர் என்றும் கூறுகிறார்கள் என்பது குரானிலேயே இருக்கிறது. வசனம் வேண்டுமா?
சொன்ன வாக்கு மீறலாம் என்று முகம்மதுவே சொல்வது
bu Huraira reported: A person sat late in the night with Allah’s Apostle (may peace be upon him), and then came to his family and found that his children had gone to sleep. His wife brought food for him. but he took an oath that he would not eat because of his children (having gone to sleep without food) He then gave precedence (of breaking the vow and then expiating it) and ate the food He then came to Allah s Messenger (may peace be upon him) and made mention of that to him, whereupon Allah’s Messenger (may peace he upon him) said: He who took an oath and (later on) found something better than that should do that, and expiate for (breaking) his vow.
Sahih Muslim 15:4052
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as saying: He who took an oath and then found another thing better than (this) should expiate for the oath (broken) by him and do (the better thing).
Sahih Muslim 15:4053
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as saying: He who took an oath and (later on) found another thing better than that, he should do that which is better, and expiate for the vow (broken by him).
Sahih Muslim 15:4054
This hadith is narrated on the authority of Suhail with the same chain of transmitters (with these words): “He should expiate for (breaking) the vow and do that which is better.”
Sahih Muslim 15:4055
‘Adi reported Allah’s Messenger (may peace be upon him) as saying: When anyone amongst you takes an oath, but he finds (something) better than that he should expiate (the breaking of the oath), and do that which is better.
Sahih Muslim 15:4058
Abd al-Rahman b. Samura reported that Allah’s Messenger (may peace be upon him) said to me: Abd al-Rahman b. Samura, don’t ask for authority for if it is granted to you for asking for it, you would be commissioned for it (without having the support of Allah), but if you are granted it without your asking for it. You would be helped (by Allah) in it. And when you take an oath and find something else better than that, expiate for (breaking) your oath, and do that which is better. This hadith has also been transmitted on the authority of Ibn Farrukh.
Sahih Muslim 15:4062
Muslims often claim lying in Islam is restricted to its use in war, but in the following hadiths, Muhammad permits a Muslim to lie in order to kill Ka’b ibn al-Ashraf, a Jewish poet who wrote an anti-Muslim poem which offended him.
“Narrated Jabir : The Prophet said, ‘Who is ready to kill Ka’b bin Ashraf (i.e. a Jew).’ Muhammad bin Maslama replied, ‘Do you like me to kill him?’ The Prophet replied in the affirmative. Muhammad bin Maslama said, ‘Then allow me to say what I like.’ [i.e. to lie]. The Prophet replied ‘I do (i.e. allow you).’”
Sahih Bukhari 4:52:271
பொய் சொல்ல முகம்மது கொடுக்கும் ஆணை
“Narrated Jabir : The Prophet said, ‘Who is ready to kill Ka’b bin Ashraf (i.e. a Jew).’ Muhammad bin Maslama replied, ‘Do you like me to kill him?’ The Prophet replied in the affirmative. Muhammad bin Maslama said, ‘Then allow me to say what I like.’ [i.e. to lie]. The Prophet replied ‘I do (i.e. allow you).’”
Sahih Bukhari 4:52:271
தில்லுதிரை சாரி .. நிலா ,
போருக்கும் வழிப்பறிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களிடம் பேசுவதை விட ஒரு கருங்கல்லிடம் பேசுவது சிறந்தது . இருந்தாலும் மற்றவர்களுக்காக இதை எழுதுகிறேன். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் போர் நடக்கிறது என்றால் அதில் கிடைக்கும் செல்வங்கள் மற்றும் நிலங்கள், ஏன் மக்கள் கூட வெற்றியடையும் நாட்டுக்கு தான் சொந்தம் .அன்றும் இன்றும் போருடைய விதி இது தான் . அப்படிப்பட்ட போரில் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லகூடாது என்று காட்டு மிராண்டி காலத்தில் கூட மனதாபிமான விதி முறைகளை வகுத்தது இஸ்லாம்.
அன்று தில்லு துரை என்ற பெயரிலே அபாண்டங்களை அள்ளி வீசிய நீங்கள் நிலா என்ற பெயரிலே புளுகி கொண்டு அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் மற்றவர்கள் புளுகுவதாக கூறுகிறீர்கள். எங்களுக்கு புளுக வேண்டிய அவசியம் இல்லை . காரணம் காட்டுமிராண்டி காலத்தில் கூட குறுகிய கால அவகாசத்தில் மிகச்சிறந்த சமுதாயத்தை உருவாக்கி காட்டிய முகமது நபியை பற்றி ஏராளமான உண்மைகள் கொட்டி கிடக்கும் போது உங்களை போல் புளுக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முகமது நபியின் ஒரு மனைவியை தவிர மற்ற யாரும் கன்னி பெண்ணாக இருந்ததில்லை என்பதை நான் எத்தனை முறை கூறினாலும் உங்களுக்கு விளங்க போவதில்லை . கதிஜா நாயகியின் மரணத்திற்கு பின்னால் முகமது நபி செய்த திருமணங்களில் அதிகமானவை விதவை திருமணங்கள் தான் . ஏன் அந்த நாட்டின் மன்னராக இருந்த முகமது நபிக்கு கன்னி பெண்கள் கிடைக்க வில்லையா ? உங்கள் கடவுள் ராமரை பெற்றெடுத்த தசரத ராஜாவுக்கு அறுபதினாயிரம் மனைவிகள் இருந்ததாக உங்கள் புராணம் கூறுகிறது. நீங்கள் தமிழ் கடவுள் என்று கூறும் முருகனுக்கு வள்ளி, தேவானை என்ற இரண்டு மனைவிகள். உங்கள் கடவுளர்களின் வந்த வாளங்களுக்குள் அதிகமாக நான் போக விரும்பவில்லை. அப்படி பட்ட பாரம்பரியம் மிக்க மனிதர்களை ! கடவுளாக வணங்கி கொண்டிருக்கும் நீங்கள் முகமது நபியின் பலதார மணத்தை விமர்சிப்பது . இரண்டு கைகளையும் ,கால்களையும் இழந்து முடமாகி அதனுடன் கண்களையும் இழந்து குருடாகிய ஒருவன் எதிரில் நிற்பவனின் உருவத்தை கூட விளங்கி கொள்ள முடியாமல் பொறாமையின் உச்சத்தில் இருந்து கொண்டு அவனுக்கு கைகள் இல்லை என்று கிண்டல் அடிப்பது போல் இருக்கிறது. என்னுடைய ஊகம் சரியாக இருந்தால் நீங்கள் இந்து மத வாதி போல் எழுதி கொண்டிருக்கும் செங்கொடியின் சகாக்களில் ஒருவராக கூட இருக்கலாம் . உங்களுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே தெரியும் முகமது நபியை போல் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர் வேறு யாரும் இல்லை என்பது.
மீண்டும் மனிதநேயன்
nilaaராமன் எதற்கு சீதையை காட்டுக்கு அனுப்பினார் என்று நீங்களே சொல்லியிருக்கலாமே
மனு நீதி யும் முகலாயர் காலத்தில் வந்ததா?
எல்லாவற்றையும் நானே சொல்லவேண்டுமா? நீங்களும் கொஞ்சம் முயற்சி எடுத்து படியுங்கள். நீங்களே மதிக்கும் எம் எம் இஸ்மாயிலிடம் கேளுங்கள் என்று சொன்னேனே
மனுநீதி முகலாயர் காலத்தில் ஜாதி கட்டுப்பாடுகளை உருவாக்க திருத்தப்பட்டிருக்கலாம் மாற்றப்பட்டிருக்கலாம் என்பது பல வரலாற்றாசிரியர்களின் முடிவு. மனுநீதி பல இடைச்செருகல்களை கொண்டது என்பதும் பல வரலாற்றாசிரியர்களின் முடிவு. கூடவே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது பல இடைசெருகல்களை செய்தார்கள் என்றும் இப்போது கருதுகிறார்கள். ஏனெனில் மற்ற காவியங்களிலும் இந்துமத புத்தகங்களிலும் பார்க்கமுடியாத தீண்டாமை போன்றதை மற்ற சுலோகங்களின் மொழிநடைக்கு மாறாக இடைசெருகல்களாக இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள்.
சொன்ன வாக்கு மீறாத ராமனை விமர்சிக்கப்புகும் முன்னர், சொன்னவாக்கை தாராளமாக மீறலாம், பொய் சொல்லலாம், நச்சியமாக பேசி பொய் சொல்லி எனக்கு பிடிக்காத ஆளை தீர்த்துகட்டிவிட்டு வா என்று சொல்லும் அரபி கொலைகார தாதா ஒருவன் என்னிடம் கடவுள் வந்து பேசினார் என்று புளுகுவதை ஏமாந்து நம்புகிறீர்களே… அதை முதலில் சிந்தியுங்கள்.
‘//மனுநீதி முகலாயர் காலத்தில் ஜாதி கட்டுப்பாடுகளை உருவாக்க திருத்தப்பட்டிருக்கலாம் மாற்றப்பட்டிருக்கலாம் என்பது பல வரலாற்றாசிரியர்களின் முடிவு. மனுநீதி பல இடைச்செருகல்களை கொண்டது என்பதும் பல வரலாற்றாசிரியர்களின் முடிவு.//
// எல்லா ஜாதிகளிலும் கட்டுப்பாடுகள் தோன்றி இந்து சமூகம் இறுக ஆரம்பித்தது இந்த் காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர்களே கூறுகிறார்கள்//
நண்பர் நிலா,
எந்த வரலாற்று ஆசிரியர்கள் என்று சொன்னால் சரி பார்க்க உதவியாக இருக்கும்.எப்போதும் ஏதாவதி இணைப்பு தங்களின் கருத்தை உறுதிப் படுத்த கொடுப்பது உசிதம்.
//மற்ற காவியங்களிலும் இந்துமத புத்தகங்களிலும் பார்க்கமுடியாத தீண்டாமை போன்றதை மற்ற சுலோகங்களின் மொழிநடைக்கு மாறாக இடைசெருகல்களாக இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள்//
மற்ற காவியங்கள் என்றால் எவை? யார் கூறுகிறர்கள்?.
தேடுங்கள் கண்டடைவீர். டாக்டர் சுரேந்திர குமார், George Burnham Beaman, Ramananda Chatterjee என்று நிறையபேர் மனுவில் உள்ள இடைசெருகல்களை பற்றி பேசியுள்ளார்கள்.
ஆனால் உங்களிடம் சொல்லி பிரயோசனம் என்ன? உங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளப்போகிறீர்களா? நிச்சயம் கிடையாது. அதில் குறை கண்டுபிடித்து உதவாத வாக்கியங்களை ஆதாரமாக பேசுவீர்கள், கூனி சொன்னதை வைத்து ராமனுக்கு நிறைய மனைவிகள் என்று நீங்கள் உளறுவதை போல. இதுவரை உங்களது தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை தவறு என்று ஒத்துகொள்ளுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். அந்த நேர்மை இல்லாதவர்களிடம் பேசுவது வீண்
மனிதநேயன் என்ற புளுகுநேயன்,
முகம்மது செய்த வழிப்பறி கொள்ளைகளையெல்லாம் போர்கள் என்று புளுகுவது இஸ்லாமிஸ்டு முல்லாக்களின் வழக்கம். ஆகவே நீங்கள் இதனை நிச்சயம் போர் என்று சொல்வீர்கள் என்று நன்றாக தெரியும்,.
/Whenever they heard of a Meccan caravan setting out for Syria, they intercepted it, and killed everyone they could get a hold of. They tore every caravan to pieces and took the goods.
Ishaq:508, See Also Tabari VIII:91/
உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று தெரியவில்லை. மேலே படிக்கவும்.
தபரி, இஷாக் ஆகியோர் எழுதியவற்றை படிக்காதவர்களிடம் வேண்டுமானால் நீங்கள் புளுகுவது சரியாக இருக்கும். அவரது வரலாற்றை எழுதிய பல புத்தகங்களில் மிக ஆதிகால புத்தகங்கள் உட்பட, எல்லாவற்றிலும் அவர் மெக்காவிலிருந்து செல்லும் வியாபார காரவான்களை கொள்ளையடித்துத்தான் பிழைப்பு நடத்தினார் என்பது நன்றாகவே தெளிவாகவே பதியப்பட்டுள்ளது.
வியாபார காரவான்களை கொள்ளையடிப்பது போர் அல்ல. அதன் பெயர் வழிப்பறி கொள்ளை.
போர் என்றால் ஆயுதம் உள்ள எதிரிகளை ஆயுதம் உள்ளவர்கள் சந்தித்து போர் புரிவதுதான் போர்.
இப்பொதும் முகம்மதுவின் வழியை பின்பற்றி சோமாலியா வழியாக போகும் வியாபார கப்பல்களை சோமாலிய முஸ்லீம்கள் கொள்ளையடிக்கிறார்கள். அதனை யாரும் போர் என்று சொல்வதில்லை. கடல் கொள்ளையர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
இரண்டாவது போரின் போது குழந்தைகளையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்பது மனித குலத்தின் மிக ஆதாரமான விதி. அது முகம்மது கொண்டுவந்ததல்ல. ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூட பெண்களையும் குழஃந்தைகளையும் கொன்றதாக பார்க்கமுடியாது. அதுமட்டுமல்ல, நாகரிக மனிதனின் வாடையே படாத பழங்குடிகளிலும் கூட பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது கேவலமானது பேடித்தனமானது.
ஆனால், முகம்மதுவே இதனை முதலில் உடைக்கிறார்.
பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை ஆதரிக்கிறார். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே என்று சான்றிதழ் கொடுத்து அவர்களை கொல்வதையும் அனுமதிக்கிறார். ஆதாரம் வேண்டுமா?
”இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் சிறுவர்களும் சேதமடையும் பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள். (நூல்கள் – புகாரி, 3012. முஸ்லிம், 3589, 3590)
முஸ்லிம் நூலில் இடம்பெற்றுள்ள மற்றோர் நபிவழிச் செய்தியில்,
”குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்போது இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களே?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ”அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சார்ந்தவர்களே” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (முஸ்லிம், 3591)
ஆகவே புளுக வேண்டாம்.
முகம்மதுவை பின்பற்றித்தான் ரெட்டை கோபுரம், ரயில் நிலையங்கள், தீபாவளி சந்தை ஆகிய இடங்களில் காபிர்களின் குழந்தைகளையும் பெண்களையும் இஸ்லாமியர்கள் கொல்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு மதம். வெட்கமே இல்லையா உங்களுக்கு?
புளுகளின் மொத்த உருவமே உமக்கு குர்ஆன் எது ஹதீத் கிதாப் எது என்பதே தெரியவில்லை நீர் முகம்மது பற்றி சொன்ன குற்ற சாட்டுகள் என்ன ? எடுத்துவைத்த ஹதிகளுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் உளறுவது எல்லை கடந்து விட்டது நீவிர் பதில் சொல்லதெரியாமல் மற்றவர்களை குறை சொல்லுவதற்கு என்ன யோக்கியதை உள்ளது உமது லட்சியம் பதில் சொல்லுவதில் இல்லை .பள்ளிவாசலில் குண்டுவைக்கவேண்டும் ,பிறகு முஸ்லிம்கள் கோயிலில் குண்டுவைப்பார்கள் அதை காரணம் காட்டி பெரிய கலவரத்தை உருவாக்கி ஹிந்துத்துவாவை வளர்க்கவேண்டும் என்ற பாணியிலே தங்களின் நடவடிக்கை உள்ளது முகலாயர் ஆட்சியில் சாதி கொடுமை வந்தது என்றால் முஸ்லிம்களிடம் இல்லாத சாதி கொடுமை ஏன் இந்துக்களிடம் இன்னும் உள்ளது?உமது நச்சுத்தன்மையை புரிய முடிகிறது உம்மை இங்கே அடையாளம் காட்டவே இதுவரை தொடர்ந்த விவாதன்கால் இனி உமது தவறுகளை சுட்டிகாட்டினால் வரம்பு மீருதல் கடுமையாக இருக்கும் . வேண்டாம்
உமமை அடையாளம் காட்டியமைக்கு நன்றிகள் .விடைபெறுவோம்
ஆனால் உங்களிடம் சொல்லி பிரயோசனம் என்ன? உங்கள் தவறுகளை உணர்ந்து கொள்ளப்போகிறீர்களா? நிச்சயம் கிடையாது. அதில் குறை கண்டுபிடித்து உதவாத வாக்கியங்களை ஆதாரமாக பேசுவீர்கள், ///
யார் தவறு? .மதமென்ற போர்வையில் ஏமற்றி தெரிபவர்கள் செயவது தான் தவறு..
அப்படி ஒரு நினைப்பா?. இன்னும் புத்த இராமயனத்தில் இராமனும்,சீதாவும்,அண்னன் தங்கை தெரியுமா?. ஜைன் இராமாயண்த்தில் 8000 மனைவிகள்.
http://www.oration.com/~mm9n/articles/dev/147Sri%20Rama.htm
இராமன் ஒரு சாதி வெறியன்.சாதி வெறிக்காக சம்புகன் என்னும் முனிவரை கொன்ற கொலைகாரன். ஆதாரம் வேண்டுமானல் தருகிறேன்.
7-76 Shambuk killed (51 / 2919)
Ram learnt from the man on penance, “I am a shudr, and my name is Shambuk. I intend
to bodily go to heaven.” Hearing about his tough resolve, and varn of Shudr, Ram pulling
out the sword cut off his head. Gods appeared and appreciated his effort of eliminating
this person who wanted to rise to the heaven in his physical from. This could have
spoiled the natural law of death after birth. Thereafter gods enquired from Ram whether
he had any wish. Ram solicited the revival of the dead child of the Brahmin. Gods
confirmed, “The child is already alive and has joined his family.”
Gods further informed Ram about the penance of Agastya, “He had undertaken tough
penance for twelve years immersed in water. Today he has concluded it. We are going
to extend our greetings to him for such a great performance. You may also come to see
him.”
As advised, Ram also moved to the hermitage of Agastya. Before Ram arrived there,
gods had left being duly greeted by Agastya. When Ram landed, he offered his respects
to the sage Agastya. The sage also reciprocated by greeting Ram with great affection
and respect. He appreciated his effort of killing unrighteous and ambitious shudr and
consequently reviving the brahmin’s child.
The sage advised Ram to spend his night with him, and mentioned, “You are all in all,
supreme among gods, and eternal entity, Srimannarain.”
Note: The shlok 7-76-29 is the statement of the accomplished sage Agastya confirming the
supreme entity of Ram as Narayan Himself. Therefore the common concept of taking Valmiki
depicting Ram as a model person should be taken in a correct perspective of his inherent divinity.
Subsequently the sage offered a divine jewel to Ram mentioning, “It is made by
viswakarma.
இந்த சும்புகனை கொன்ற சர்காவில்தான் அகத்தியர் இராமனை நாராயணா என்று கூறுகிறார். ஆக ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை கொன்றதால் கடவுள் ஆன்வன் இந்த இராமன்.
//கூனி சொன்னதை வைத்து ராமனுக்கு நிறைய மனைவிகள் என்று நீங்கள் உளறுவதை போல. இதுவரை உங்களது தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை தவறு என்று ஒத்துகொள்ளுங்கள். பிறகு உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். அந்த நேர்மை இல்லாதவர்களிடம் பேசுவது வீ//
இன்னும் கூனி சொன்னாள் என்று வால்மிகி இராமயணத்தில் ஆதரம் கண்பித்தேன். இராமன் ஏக பத்தினி விரதன் என்று வால்மிகி இராமாயணத்தில் எங்காவது கூறப்பட்டு உள்ளது என்று தெரிந்தால் கூறவும்.அதுவும் இல்லை என்றால் அது குழப்பம்தான்.
___
இந்த சாதிமுறை,தீண்டாமை முஸ்லிம்கள் காலத்திற்கு முன் இல்லை என்று கூறியதற்கு ஆதாரம் இல்லை.
__
வேண்டுமானால் இராமாயனத்திலேயே நன்கு சாதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இராமன் சம்புகனை கொன்றது தீண்டாமையின் உச்சகட்டம்.ஆதாரம் வேண்டுமானால் எடுத்டுக் கொள்ளுங்கள்.
இராமயனத்தில் சாதிகள் என்று பார்த்தால் தோண்ட தோண்ட நிறய விஷயம் வருகிறது.
_
ஒரு தொடர் பதிவே எழுதப்போகிறேன்.
நிலா,
என் முப்பாட்டனுடைய வாழ்வு வரலாறு அல்ல. அதிகபட்சம் 500 வருடத்திற்கு உள் இருக்கும்.
ராமரு உங்கள பொறுத்தவரை அவதாரம் அல்லவா , வரலாறு அல்லவா, இந்திய கலாசார நாயகன் அல்லவா. அப்படி என்றால் ராமரு எத்தனை வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்.?
தெரியலையா .?
மது
உங்கள் முப்பாட்டனின் வாழ்வு மிக முக்கியமானது. அது உங்களின் வரலாறு. நம் அனைவரும் வரலாறும் கூட. அவர் போன்ற பலர் உருவாக்கியதே இந்த சமூகம்.
உங்கள் முப்பாட்டன் கொண்டிருந்த மானுட விழுமியங்களை நீங்கள் கைக்கொண்டிருக்கிறீர்களா என்ப்துதான் முக்கியமே தவிர, அவர் எந்த வருடத்தில் பிற்ந்தார் என்பது முக்கியமல்ல. மனிதர்களை மதித்தாரா? அறிவை பெருக்கிகொண்டாரா? நல்ல வாழ்க்கை வழிமுறையை தன் குழந்தைகளுக்கு போதித்தாரா என்பதுதான் முக்கியம்.
வரலாறு என்பதை மக்கள் நினைவில் வைத்துகொள்வது எதற்காக என்பதுதான் முக்கியம். அதிலிருந்து பாடம் இருக்கவேண்டும். ஒரு மனிதர் இருந்தார் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் முக்கியமே தவிர, எந்த வருடம் எந்த தேதி பிறந்தார் என்பது முக்கியமல்ல.
நான் ஒரு வருடம் சொல்லலாம். அந்த வருடத்தில் அவர் பிறக்கவில்லை என்று நீங்கள் வாதிடலாம். அதன் மூலம் நடக்கும் பயனென்ன? ராமர் இந்த பூமியில் பிறந்தார் இருந்தார் என்பதுதான் முக்கியம்.
உங்களது அமைதி மார்க்க முகமூடி கிழிந்ததுதான் மிச்சம்.
நான் ஒன்றும் பெரிய அறிவாளி கிடையாது. பெரும்பாலான இந்துக்கள் பொறுமையாகத்தான் போகிறார்கள். இந்துமதத்தை பற்றி தேவையின்றி இங்கே விமர்சனத்தை ஆரம்பித்தது ஒரு இஸ்லாமியர்தான். அதற்காகத்தான் நான் இங்கே பதில் எழுதினேன். அதற்கு பிறகு என்னவெல்லாம் வரம்பு கடந்து இங்கே இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்டுகளும் இந்துமதத்தை கேவலமாக பேசினார்கள் என்று மேலே படியுங்கள். ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்திருக்கிறேன்.
முஸ்லீம்களிடம் ஜாதிக்கொடுமை இல்லை என்பது நீங்களாக கற்பனை செய்துகொள்வது. அரபியாவில் அடிமைமுறை ஜாதிமுறையை விட கேவலமானது. 1960இல் சவுதி அரேபியாவில் இருந்த அடிமை சந்தை பற்றியும் அதில் அடிமைகளில் ஓலத்தை பற்றியும் ஏராளமானவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இன்னமும் அரபியாவில் tribes களில் மேல் ஜாதி கீழ்ஜாதி உண்டு. மேல்ஜாதி பெண்ணை திருமணம் செய்த கீழ்ஜாதி ஆணுக்கு கட்டாய விவாகரத்து வழங்கப்பட்டது. அது 2006இல் தான். ஆதாரம் வேண்டுமா?
http://archive.arabnews.com/?page=1§ion=0&article=90212&d=20&m=12&y=2006&pix=kingdom.jpg&category=Kingdom
பாத்திமா என்ற உயர்ஜாதி பெண் மன்சூர் அல்திமானி என்ற கீழ்ஜாதி ஆணை திருமணம் செய்ததை பெண்ணின் சகோதரர்கள் வழக்கு போட்டு நீதிபதியும் அத விவாகத்தை ரத்து செய்தார்.
இது 2006இல்தான்.
நீங்கள் சொல்கிறீர்கள் இஸ்லாமில் ஜாதி கிடையாது என்று.
இந்துமதத்தை விமர்சிக்கும் முன்னால், சிந்தியுங்கள்.
இதோட
முடிச்சுக்கொள்ளுங்கடா !
முடியலையடா !!!
நண்பர்களே,
நாம் அனைவரும் தமிழர்கள், மனிதர்கள். எதற்கு இப்படி உணர்சிவயப்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள வேண்டும்?
முஹமது ‘நபி’, ராமர் என்ற ‘கடவுள்’ ஆகியவர்களை நாம் பார்த்தது கிடையாது. இவர்கள் உண்மையிலேயே கடவுள், நபி என்று நம்பி நல்லதை செய்தோம் என்றால் நல்லது. ஆனால், அதை நம்பி மற்றவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டோ மதவெறியையோ, ஜாதி வெறியையோ வளர்த்துக்கொள்வோம் என்றால் நம்மை விட முட்டாள்கள் எவரும் இருக்க முடியாது.
முஹமது நபி கடவுளிடம் பேசியதை யாராவது நிரூபிக்க முடியுமா? என்னவோ சொல்கிறார்கள், அவ்வளவுதான். அதை நம்பி அடுத்தவனை காபிர் என்று திட்டினால் நமது மூளையில் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.
ராமன் கடவுளின் அவதாரம் என்பதை யாராவது நிரூபிக்க முடியுமா? அதை நம்பி வேறு மதத்தவனை திட்டினால், இந்து மதம் தான் உயர்ந்தது என்று வாதிட்டால் நமது மூளை கலங்கிவிட்டது என்று அர்த்தம்.
மதங்கள் எல்லாமே பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்று, கற்பனை, வன்முறை, காமத்துக்கு வடிகாலாக ஜிஹாத், வேதம், குரான், யாகம் போன்றவற்றை தருபவையே. இதை நம்பி நாம் ஏற்பதற்கு காரணம் நம்மிடையே இருக்கும் திருட்டுத்தனம் தான்.
எனவே ஒரு திருடன் தான் சொர்க்கத்தில் பெண்கள் கிடைக்கும் என்று இந்து மதத்தையோ, முஸ்லீம் மதத்தையோ நம்பி தனது மூளையை அடகுவைப்பான்.
திருந்துங்கள். இந்த குரான், வேதம், இதிகாசம், ஹதீஸ் குப்பைகளை தூர எறிந்துவிட்டு மனிதனாக ‘மதம்’ மாறுங்கள். முதலில் மனிதனாகிவிட்டு பிறகு பகுத்தறிவோடு கேள்விகேட்டு எல்லா மதவுணர்வையும் களைந்தெறிந்துவிட்டு அன்புணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்.
அன்பே சிவம், அன்பே அல்லா, அன்பே இயேசு, அன்பே முஹமது, அன்பே ராமன், அன்பே மதம். இதற்கு மாறாக எது இருந்தாலும் அதை தூக்கி எறியுங்கள். அன்பை சொல்வது புராக் என்றால் ஏற்போம், அதை நம்பி அல்ல. அன்பிற்காக இது போன்ற மூடத்தனங்களையும் பொறுத்துக்கொள்வோம். அன்பை சொல்வது மஹாபாரதம் என்றால் ஏற்றுக்கொள்வோம். அது கட்டுக்கதை என்று தெரிந்தால் கூட பொறுத்துக்கொள்வோம்.
சங்கர் சம்புகன் பற்றி எழுதப்பட்டது அவுரங்கசிப்பின் இடைச்செருகல்
//கம்யூனிஸ்டுகளும் இந்துமதத்தை கேவலமாக பேசினார்கள் என்று மேலே படியுங்கள்.//
என்ன கேவலமாக கூறினார்கள்? வால்மிகி சொனனதை மட்டுமே கூறினென்.
// ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்திருக்கிறேன்//
1.இர்ரமயணத்தின் கூனி சொல்வதைஏற்றுக் கொள்ளக்கூடாது.சாதகமாக சொல்வதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.இராமன் சம்புகனை கொன்றதாக கூறுவது இடை செருகல்.
3.இந்து மத புராணங்களில் விமர்சனத்திற்குறிய கருத்துகள் அனைத்துமே இந்து மத எதிரிகளால் புகுத்தப் பட்டது.
4.மத புராணங்களுக்கு வரலாற்று ஆஅதாராம் எதுவும் கிடையாது.இருந்தாலும் கேட்க கூடாது.
______________
ஆகவே சாதி ,தீண்டாமை என்பதுஇந்தியாவில் எப்போதுமே கிடையாது.பிற மதத்தினரின் ஆட்சியாலேயே இந்த கொடுமையெல்லாம் நடந்தது.
_____________
ஏதாவது விட்டு போயிருந்தா சொல்லுங்க
இப்ராஹிம்,
அது அவுரங்கசீப் இடைசெருகல் அல்ல பார்ப்பன இடைச்செருகல்.
இதனை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பவபூதி குறித்திருக்கிறார். நவீன ஸ்கலர்களான புருஷோத்தம சந்திர ஜைனா ஆகியோர் இதனை இடைசெருகல் என்றே குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் ராமாயணம் எழுதிய வால்மீகியே சூத்ர குலத்தில் பிறந்த பெரும் தபஸ்வி. ஆகவே சூத்ர குலத்தை சார்ந்தவர் தவம் செய்யக்கூடாது என்று அவரே எழுதியிர்ப்பாரா என்பது கேள்வி. உத்தர காண்டத்தை சொல்பவர்களும் இடைசெருகலாக இருக்கும் பல அத்யாயங்களை உதாசீனம் செய்துவிடுகிறார்கள்.
ஆனால், இடைச்செருகல் என்று தெரிந்தாலும் அதனை வைத்து பிழைப்பு ஓட்டும் திக, இஸ்லாமிஸ்டு, கம்யூனிஸ்டுகளுக்கு இது வெல்லக்கட்டி. ஆகவே இந்துக்களே இவற்றை உதாசீனம் செய்தாலும் இந்த போலிகளால் உதாசீனம் செய்யமுடியாதே.. என்ன செய்வது பொழப்பு அப்படி..
மரைகழண்ட சங்கர்.
//1.இர்ரமயணத்தின் கூனி சொல்வதைஏற்றுக் கொள்ளக்கூடாது.சாதகமாக சொல்வதை மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.//
நீங்கள் யாராவது நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது.
நீங்கள் இப்படித்தான் இஸ்லாமியருக்கு எதிராக வாதிடுகிறீர்களா?
அறிவுக்கொழுந்து சங்கர்,
//இன்னும் புத்த இராமயனத்தில் இராமனும்,சீதாவும்,அண்னன் தங்கை தெரியுமா?. ஜைன் இராமாயண்த்தில் 8000 மனைவிகள்.//
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. இஸ்லாமிய ராமாயணம் என்று கூட ஒன்று இருக்கிறது தெரியுமா.?
அதில் இன்னும் பல கூத்துகள் இருக்கின்றன.
http://thamilislam.wordpress.com/2008/03/16/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/
என்சாய்!
//ஏனெனில் ராமாயணம் எழுதிய வால்மீகியே சூத்ர குலத்தில் பிறந்த பெரும் தபஸ்வி//
ஆதாரம் காட்டவும்.
_
அப்புறம் கொஞ்ச ஆளுங்கை ராமர் பிற்ந்ததேதி சொல்ராங்க.
http://www.historicalrama.org/
Sri Rama Navami – Birth day 10th January 5114 BCE
Birth of Bharatha 11th January 5114 BCE
Pre coronation eve 4th January 5089 BCE
Khar, Dushan episode 7th October 5077 BCE
Vali Vadham 3rd April 5076 BCE
Hanuman’s Visit to Lanka 12th September 5076 BCE
Hanuman’s Return from Lanka 14th September 5076 BCE
Army March to Lanka 20th September 5076 BCE
சரியா? இராமன் சிஷ்யர்கிட்ட கேட்டு தெளிவு பெறலாம் என்றுதான்..
//நீங்கள் யாராவது நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது./
நீங்கள் பர்த்த மருத்துவர்களிலே சிறந்தவரை சிபாரிசு செய்யவும்.
1.//பார்ப்பன இடைச்செருகல்//
2.//ஆகவே சூத்ர குலத்தை சார்ந்தவர் தவம் செய்யக்கூடாது என்று அவரே எழுதியிர்ப்பாரா என்பது கேள்வி. //
3..//ஏனெனில் மற்ற காவியங்களிலும் இந்துமத புத்தகங்களிலும் பார்க்கமுடியாத தீண்டாமை போன்றதை மற்ற சுலோகங்களின் மொழிநடைக்கு மாறாக இடைசெருகல்களாக இருக்கின்றன என்றும் கூறுகிறார்கள்//
.நகைசுவை விருந்து,வழங்குபவர்,நில,நிலா……
மேல்படி நடந்து கொண்டிருக்கும் குழாயடிச்சண்டை தீர வேண்டுமாயின்,மதம்,கடவுள்,புராண வேத குப்பைகளை தூக்கி எறிந்து விட்டு சுயமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதே உயர்வானது. இன்றைய நவீன வாழ்க்கைக்கு அறிவியலே சிறந்தது. அத்துடன் நல்லொழுக்கம்,நேர்மை,அன்பு,கருணை,பேதமில்லா உதவும் எண்ணம்,விட்டுக்கொடுத்தல்,பொருமை,சிறந்த கல்வியறிவு,இவற்றுடன் சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவு. இவைகளே மனிதனை மனிதனாக்கும் சிறந்த வழிகள். இதை யார் கூறினார்கள் என்பது முக்கியமல்ல,யாரெல்லாம் கடைபிடிக்கிறார்கள் என்பதே மிக முக்கியம்,பிறருக்கு செய்யும் உதவியைவிட போதை வேரெதிலும் இல்லை,உண்மையைச் சொல்வதில் உள்ள நிம்மதி வேரெங்கும் கிடைப்பதில்லை. எனவே மத வெறித் தத்துவங்களை மறந்து மனிதர்களை நினைக்கவும் மதிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!
சரி எல்லாமத புத்தகங்களிலும்,உள்ள சர்ர்ச்சைகுறிய விஷயங்களை(அதாவது இடை செருகல்களை) ஆர்ய சாஜ் சுரேந்திரகுமார் மாதிரி நீக்கிவிடுவது என்று எல்லாரும் செய்தால் 100 வருஷம் கழித்து படிக்கிறவன் என்ன நினைப்பான்?.
ஆஹா,அபாரம் என் மத புத்தகம் என்பானா?
இல்லை அந்த கால கட்டத்திலும் விமர்சனம் தாங்காமல் இடைசெருகள் என்று சொல்லி எதையாவது (ஏ)மாற்றுவானா?
இது ஒரு தொடர்கதை.
இதற்கு முதலிலேயே பல் பேர் நினைத்து மாற்றி,ஒழுங்கு செய்யப்பட்ட புதகங்களையே இபோது பின்பற்றுகிறார்கள்.
ஆகவே (ஏ)மாற்றம் ஒன்றே (ஏ)மாற்றமில்லாதது.
@sankar
லெனின் மில்லியண் கணக்கானவர்களைக் கொன்றது பற்றியும் பாரதியார் கஞ்ஞா அடித்து விட்டு கவிதை எழுதியதையும் பற்றி வாயே திறக்க மாட்டீர்களோ
///நவீன வாழ்க்கைக்கு அறிவியலே சிறந்தது. அத்துடன் நல்லொழுக்கம்,நேர்மை,அன்பு,கருணை,பேதமில்லா உதவும் எண்ணம்,விட்டுக்கொடுத்தல்,பொருமை,சிறந்த கல்வியறிவு,இவற்றுடன் சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவு. இவைகளே மனிதனை மனிதனாக்கும் சிறந்த வழிகள். இதை யார் கூறினார்கள் ///
அண்ணே!
நானும் குவார்ட்டர் அடிச்சேன்னா
இதைவிட சூப்பரா ஆஃப்பாயில் போடுவேண்ணே !!!
arun,
அதுமட்டுமல்ல, வேலைக்காரியை மார்க்ஸ் போட்டு பிறந்த குழந்தைக்கு எங்கல்ஸ் தன் பெயரை கொடுத்ததை கூட பேசமாட்டார்.
ஆனால் கூனி சொல்வதை வைத்து ராமனுக்கு ஏராளமான பொண்டாட்டிகள் என்று பேசுவார்.
சங்கர் ,பாரதியாரை சொல்லியிருக்கிறார்களா? பாரதிராஜாவை சொல்லியிருக்கிறார்களா?
பாரதி
_________________
இரஷ்யப் புரட்சியை
யுக புரட்சியென்றே
வாழ்த்திட்ட மாகவி
கற்பனை கடவுள்கள் போல்
பன்முகம் மையக் கொண்டனன்
ஒரு முகம் தேசபக்தி என்றால்
மறுமுகம் இலக்கிய இதிகாசமும்
இயற்கையை வியந்திட்ட இன்முகமும்
ஈசனை ஏற்றிடும் நன்முகம்
சுதெசி கப்பல் போற்றும்
சுதந்திரத்தின் மானிட முகம்
தமிழ் மொழியின் புத்திரனாம்
தரணி போற்றும் எங்கள் கவி
போற்றினலும்
தூற்றினாலும்
மாற்ற முடியாத
எழுமையாம்
அவர் எழுத்து
புதுமைப் பெண்ணை
போற்றியவன்
காளி பக்தன்
கண்ணனின் பித்தன்
பாஞ்சாலி சபத்த்தில்
பாரதத்தின் அவலம் கண்டான்
கரும்புத் தோட்டத்திலே
கஷட்ப் படும் தமிழர்
கதை பதிந்தான்
பிற நாட்டு நல்லறிவை
கொணரச் சொன்னான்
கருத்துகள் நிற்க
கவிதையாய் வாழ்கிறான்
வாழ்க நீ எம்மான்.
________
லெனின் கொலைகாரர் வழக்கமாக ஸ்டாலினைததானெ(இது து.மு அல்ல)சொல்வீர்கள்?
ச்ரியாக சொல்லுங்கள்.
ஸ்டாலின் என்றால் தொடர் வந்து கொண்டிருப்பதால்.அதற்கு மறுப்பு தெரிவியுங்கள்.
மூலவன் அடியான்
முதன்மை உடையானுக்கு
வழங்கிய விழுமியம்
வேதம் ஆனதென்று
வாத்ம் செய்கிறர்ர்
வணங்கும் அடியவர்தாம்.
மூத்தோனின் மொழிகளை
முயன்று தொகுத்திட்டார்
முன் வேதத்தின்
இளைய சோதரன் என்றார்
வேதத்தால் விளந்த பேதம்
வாளால் எழுதிய
இரத்த சரித்திரம்
முன் வழங்கியது
முன் செருகல் எனில்
இடையில் வந்தது
இடைசெருகல்
என்றே கூறுவோரும்
அடியாரில் உளர்.
முந்தியதிலும்
பிந்தியலும்
சிந்தித்ததில்
சந்திப் பிழை
கண்டார் சிலர்
முந்தியது சரிதான்
பிந்தியதில் பிழைகள்
பின் வந்த குழப்பம் என்றே
பிரியமானவர் விளக்குகிறார்.
முந்திய செய்தியில்
முற்றும் அறிவியல்
அன்றே கூறியது
ஆண்டவன் செயலே
இதுவே அத்தாட்சி
இறைவனும் இதற்கு
ஒரு சாட்சியென
ஒத்தூதுபவரும் உண்டு
ஆளும் மன்னருக்கு
அன்றுமுதல் இன்றுவரை
மதமே ஆட்சிவழி
மக்களின் வாழ்க்கை மொழி
வேதங்களின் கருத்துகளில்
வேண்டிய கருத்துகளை
அவரவருக்கு ஏற்ற வண்னம்
அழகிய வழிமுறையில்
இணையம் முதல்
இணைய்ற்ற வகைகளிலே
வாரி வழங்குகின்றார்
வணக்கம் கூறி அழைகிறார்
முந்தியதும் பிந்தியதும்
மூலவனும் மூத்தோனும்
அரசாட்சி செய்தோனும்
ஆன்மீக வழிகாட்டிகளும்
ஏய்த்து பிழைக்கும்
எமாற்று வேலையென்றே
அருமையாக கூறிவிட்டார்
அன்புத் தோழர் செங்கொடி
வாதங்களும் பிடிவாதங்களும்
கோப்ங்களும் தாபங்களும்
ஆதாரங்களும் அலசிப் பார்த்தலும்
புலம்பல்க்ளும்,மிரட்டல்களும்
அன்புக் கட்டளைகளும்
அக்கிரமங்களை தோலுரித்தலும்
இணையப் போர்களத்தில்
இன்புடனே செய்திட்டார் நண்பர்கள்
கருத்துகள் பரிமாற்றம்
கன ஜோராய் வினியோகம்
அனைவரும் வாசிப்போம்
ஆலோசித்து முடிவெடுப்போம்
_______
நட்புடன்
சங்கர்
நிலா,
மிக அரிதாகவே நான்கு தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த சாதாரண மக்களின் முன்னோர்கள் அறியப்படுவர். ராமரு கதை அப்படிப்பட்டதல்ல. ராமரின் பெருமைகள் பேசபடுகின்றன, ராமரு பெயரில் ஒரு பாலம் குரங்குகள் கட்டியதாக கதைகள் அளக்கபடுகின்றன,இலங்கை அரசனானான ராவணன் மீது படை எடுத்து வென்றதாக சொல்லபடுகிறது. எல்லாவற்றிற்கும் மேல் கலாசார நாயகனாக சித்தரிக்கப்பட்டு ராம ஜெயந்தி கொண்டாடபடுகிறது. ராமரும் , என் முப்பாட்டனின் தாத்தாவும் எப்படி ஒன்றாக முடியும்.
//ஒரு மனிதர் இருந்தார் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான் முக்கியமே தவிர, எந்த வருடம் எந்த தேதி பிறந்தார் என்பது முக்கியமல்ல. //
பிறகு எதற்கு ராம நவமி ,எத அடிப்படையா வச்சிங்க கொண்டாடுறீங்க ???
இராமரைப்பற்றி
தெரியனும்னா
நம்ம இராம.நிலாகிட்ட
கேளுங்கண்ணே !!!
இராமரஜ்ஜியம் ப்ரொஜெக்ட்
அவர்கிட்டதான் இருக்கு !!!
run,
அதுமட்டுமல்ல, வேலைக்காரியை மார்க்ஸ் போட்டு பிறந்த குழந்தைக்கு எங்கல்ஸ் தன் பெயரை கொடுத்ததை கூட பேசமாட்டார்.
செங்கொடி இது பாலியல் குற்றமா? பாலியல் வன்முறையா
run,
அதுமட்டுமல்ல, வேலைக்காரியை மார்க்ஸ் போட்டு பிறந்த குழந்தைக்கு எங்கல்ஸ் தன் பெயரை கொடுத்ததை கூட பேசமாட்டார்
செம்கோடி இது ஆணாதிக்கமா?தனியுடமையா?
இப்ராஹிம்,
முகம்மது ஆறு வயது குழந்தையை கற்பழித்தது பாலியல் வன்முறை.
தன் மருமகளை கவர்ந்து அவளை புணர்ந்தது பாலியல் குற்றம்
முஸ்லிம் ஆண்கள் அடிமைப்பெண்களோடு உறவுக்கொள்ளலாம். ஆனால், அடிமை ஆண்களோடு முஸ்லிம் பெண்கள் உறவுகொள்ளக்கூடாது என்று தடுத்தது ஆணாதிக்கம்.
வழிப்பறி கொள்ளைப்பொருள்களில் தனக்கு ஐந்தில் ஒரு பங்கு என்று எடுத்துகொள்வது தனியுடமை.
எல்லாம் கூட்டி கழிச்சி பாருங்க. சரியா வரும்.
நாங்கள் உங்களுக்கு வேண்டிய செல்வம் தந்துவிடுகிறோம் ,நீங்கள் மக்காவில் பெரும் செல்வந்தராகிவிடலாம் .நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் முடித்து வைக்கிறோம்,நாங்கள் உங்களைப் பின்பற்றி நடக்க தயாராக இருக்கிறோம் .நீங்கள் எங்கள் கடவுள்களை குறை கூறுவதை விட்டுவிட வேண்டும் எனும் எங்கள் கோரிக்கையை ஏற்று கொள்ளவேண்டும் .என்று முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் வற்புறுத்தப் பட்டபோது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .தனது கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்தார் .ஏன் ?நீங்கள் கூறுவதைப் போல் பொன்னாசை .பெண்ணாசை என்று இருந்தால் எளிதாக கிடைப்பதை பெற்றிருப்பார்களே.ஏன் போரிட்டு பெறவேண்டும்?
மேலும் குழந்தைப் பருவத்திலே பெற்றோரை இழந்த தனது வாலிப பருவத்தில் கண்ணியக் குறைவாக நடந்ததாக அவரது எதிரிகள் கூட கூறவில்லை .அவர்கள் தனது நபித்துவத்தை அறிவிக்கும் முன் வரை நபி[ஸல்] அவர்களை முழுமையாக உண்மையாளாராக நம்பினார்கள்
அடுத்து பாலியல் குற்றங்களுக்கும் திருட்டுக்கும் கடும் விமரசனத்திர்க்குரிய கடுமையாம சட்டங்கள சொல்லியிருப்பதன் மூலம் அவரது எண்ண ஓட்டங்களை அறிய முடிகிறது. காங்கிரஸ் அரசு வந்தால் சட்டங்கள் .திட்டங்கள் எப்படி இருக்கும் ?கம்யுனிச ஆட்சி வந்தால் ,சங்க பரிவார் ஆட்சி வந்தால் எப்படியிருக்கும் என்பதை நாம் எதை வைத்து அறிகிறோமோ ,அதைப்போல் குர் ஆன்கூறும் சட்டங்களின் மூலம் நபி[ஸல்] அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடியாத? போரில் பொருட்களை கைப்பற்றுவது எதிரிகளின் பொருளாதரத்தை வலுவிழக்க செய்வதுடன் ஆயுதங்கள் இல்லாமார் செய்யவேண்டும் என்பதற்க்காகவே அமெரிக்க இராக்கின் எண்ணெய்யை பகிரங்க திருட்டுக்கு எண்ண பெயர் சொன்னார்கள் ?பேரழிவு ஆயுதம் என்று எமாற்றியதைப்போல் அல்ல.
.
அரபுநாட்டில் அந்தசமயத்தில் பெண்கள் பத்து வயதில் தாயாராகவும் இருபத்தொரு வயதில் பாட்டியாகவும் ஆனார்களே ,இது எவ்வாறு நடந்தது? ஆயிசா அவர்கள் ஒன்பது வயது ஆன் பிறகே பருவம் அடைந்தார்கள் அதன் பின்னே அவர்களுடன் இல்வாழ்க்கை நடத்தினார்கள் என்பதை அறிந்தும் மீண்டும் ஆறு வயது என்று ஏன் கூற வேண்டும்?வக்கிரபுத்தியின் உக்கிரமா?
தனது ஒரே மகளுக்கு கூட சல்லிகாசு வைக்காமல் தனக்குரியதை அரசுடமை யாக்கி சென்ற ஒருமாமனிதரைப்பற்றி மனம் போன போக்கில் எழுத அஞ்ச வேண்டாமா?
அரபு ஆண்களின் காம உணர்வுகளுக்கு ஒரு பெண் தீர்வாக மாட்டார் .மேலும் ஆளுமை என்னும் ஆணாதிக்கத்தை குரான் ஆண்களுக்கே வழங்கியுள்ளது.
நான் அதை படித்து பாருங்கள் என்று நழுவவில்லை .காவிய நாயகரை பற்றி இன்னும் அதிகமாக கேட்க விரும்பவில்லை
//ஆயிசா அவர்களை மணப்பதற்கு முன் முகம்மது அவர்கள் இருமுறை கனவு கண்டதாகவும்,அக் கனவு இறைவனிடமிருந்து வந்ததால்தான் மணமுடித்தது போலவும் சொல்லப்பட்டிருக்கிறது//
இல்லற வாழ்க்கை அந்தரங்க விசயங்கள் என்பது அவரவர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இருப்பினும் இதை ஒரு சாதாரண மனிதர் செய்திருந்தால் அக்காலத்தில் இது ஒரு பெரிய விசயமே அல்ல, அரியாத காலம் என விட்டுவிடலாம். ஆனால் ஒரு இறைவன் என்கிற அனைத்தும் அறிந்தவன் என்று பறைசாற்றுகின்றவன் இதை கூறினான் என்பதும்,அதிலும் தான் தேர்வு செய்த தூதருக்கு சிறுமியை மணமுடித்து வைத்து,பிழையான முன்மாதிரியாக்கியது கடவுளின் தவறா இல்லையா? இது நபித்துவம் பெருவதற்கு முன் நடந்திருந்தால் பேசுவதற்கு இடமில்லை.
இப்ராஹிம்,
அறுபது வயதான ஒருவர் ஒன்பது வயது சிறுமியோடு உடல் உறவு கொண்டால், இந்தியாவில் கைது செய்வார்கள். சொல்லபோனால், நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் கைது செய்வார்கள். அப்போது அந்த கிழவர் இப்படி சொல்கிறார் என்று வைத்துகொள்வோம்.
நான் இளைஞனாக இருந்தபோது பலர் எனக்கு பெண்களை கொடுக்க முன்வந்தார்கள். நான் வேலையில் மும்முரமாக இருந்ததால், நான் அந்த பெண்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இப்போது எனது தொழில் காரணமாக பணக்கார்னாக ஆகிவிட்டேன். ஆகவே நான் ஒன்பது வயது சிறுமியோடு உடல் உறவு கொண்டேன் இதில் என்ன தவறு? ஆகவே என்னை தண்டிக்கக்கூடாத் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
ஆனால் அதே ஆள் முகம்மது நபி என்றால் நீங்கள் எபப்டி உளற ஆரம்பிக்கிறீர்கள் என்று பாருங்கள்.
ஒரு சமயம் அவர் அழகிய முன்மாதிரி என்று சொல்கிறீர்கள். அவரது முன்மாதிரி எல்லா காலங்களுக்கும் பொருந்தும் என்பீர்கள். ஆனால், ஆயிஷா நாயகியை ஆறுவயதில் திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவுகொண்டாலும் அதற்கு முன்னர் தொடை வேலை செய்திருக்கிறார். அதெல்லாம் அந்த கால வழக்கம் என்று எங்களிடம் சொல்கிறீர்கள்.
ஆனால் முஸ்லீம் பெரும்பான்மை ஆனதும், அதுவே சட்டமாகிவிடும். அப்போது மீண்டும் அவர் அழகிய முன்மாதிரி ஆகிவிடுவார். இதன் பெயர் அல்தக்கியா.
Muhammad placed his penis between the thighs of Aisha and he massaged it to orgasm since he could not have sexual intercourse with her until she was nine.
[edit]Fatwas
Praise be to Allah and peace be upon the one after whom there is no [further] prophet.
After the permanent committee for the scientific research and fatwahs (religious decrees) reviewed the question presented to the grand Mufti Abu Abdullah Muhammad Al-Shemary, the question forwarded to the committee by the grand scholar of the committee with reference number 1809 issued on 3/8/1421 (Islamic calendar). The inquirer asked the following:
It has become wide spread these days, and especially during weddings, the habit of mufa’khathat of the children (mufa’khathat literally translated means “placing between the thighs” which means placing the male member between the thighs of a child). What is the opinion of scholars knowing full well that the prophet, the peace and prayer of Allah be upon him, also practiced the “thighing” of Aisha – the mother of believers – may Allah be please with her.
After the committee studied the issue, they gave the following reply:
It has not been the practice of the Muslims throughout the centuries to resort to this unlawful practice that has come to our countries from pornographic movies that the kufar (infidels) and enemies of Islam send. As for the prophet, peace and prayer of Allah be upon him, thighing his fiancée Aisha. She was six years of age and he could not have intercourse with her due to her small age. That is why [the prophet] peace and prayer of Allah be upon him placed his [male] member between her thighs and massaged it softly, as the apostle of Allah had control of his [male] member not like other believers.[14][15]
See Also [16] [17] [18] [19]
“It is not illegal for an adult male to ‘thigh’ or enjoy a young girl who is still in the age of weaning; meaning to place his male member between her thighs, and to kiss her.”
Ayatu Allah Al Khumaini’s, “Tahrir Al wasila,” p. 241, issue number 12
\\\\\ முகம்மது ஆறு வயது குழந்தையை கற்பழித்தது பாலியல் வன்முறை.
தன் மருமகளை கவர்ந்து அவளை புணர்ந்தது பாலியல் குற்றம்
முஸ்லிம் ஆண்கள் அடிமைப்பெண்களோடு உறவுக்கொள்ளலாம்.
ஆனால், அடிமை ஆண்களோடு முஸ்லிம் பெண்கள்
உறவுகொள்ளக்கூடாது என்று தடுத்தது ஆணாதிக்கம் \\\\\
எத்தனையோ முறை முகமது நபி ஆயிஷா நாயகியுடன் ஒன்பது
வயதில் தான் குடும்ப வாழ்க்கை நடத்தினார் என்று விளக்கிய
பின்னாலும் விளங்காதது போல் எழுதி கொண்டிருக்கும் நிலாவே ,
முதல் இரண்டு வரிகளிலும் நீங்கள் குறிப்பிட்டது உங்களுடைய RSS
வெறித்தனத்தின் வெளிப்பாடு.
மூன்றாவது வரியில் குறிப்பிட்டது உங்களுடைய அறியாமையின்
வெளிப்பாடு. ஒரு பெண் ஒரு ஆணோடு தான் உறவு கொள்ளலாம் என்பது
தான் இஸ்லாமிய மற்றும் உலக பொது விதி. இதில் இந்து மதத்தில் உள்ள சில
சாதிகள் மட்டும் தான் விதி விலக்கு. ஏனெனில் ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு
கொண்டாலும் பிறக்கும் குழந்தை அவனுடையது என்று எளிதாக கூறி விடலாம்.
ஆனால் ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு கொண்டால் பிள்ளையின் அப்பன்
யார் என்று என்று எளிதாக கண்டு பிடிக்க முடியாது. அது போல் விஞ்ஞான
ரீதியாகவும் ஒரு பெண் பல ஆண்களோடு உறவு கொள்ளும் பொது
தான் எய்ட்ஸ் போன்ற நோய்களும் பரவுகிறது. அதே வேளையில்
ஒரு ஆண் அவனுக்கு மட்டுமே உரிய பல பெண்களுடன் உறவு
கொண்டாலும் எந்த நோயும் வருவதில்லை.
இரண்டாவது அடிமைகளை அந்தஸ்தாக கருதிய அரபு நாட்டிலே
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அடிமை பெண்ணை அவளுடைய
ஆண்டான் மட்டும் உறவுகொள்ளலாம் என்று வரைமுறை விதித்து
அதன் மூலம் பிறக்கும் குழந்தைகளை அடிமைகள் என கருத
கூடாது என்று சட்டம் போட்டு இஸ்லாம் அடிமைத்தனத்தை
ஒளித்தது. இதில் அடிமை பெண் ஒரு ஆணுக்கு மட்டும் தான்
மனைவியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள
வேண்டும் . இப்போது நீங்கள் சிந்திக்க வேண்டாம் . எப்போதாவது நீங்கள்
போதையில் இல்லாத சமயமாக பார்த்து சிந்திக்கவும். சில ஆங்கில
வார்த்தைகளை எங்கிருந்தோ காப்பி செய்து அதை இங்கு பேஸ்ட் செய்து
விட்டு ” உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று ” என்னிடம் நிலா ஒருமுறை
போதையில் இருக்கும் போது கேட்டிருந்தார். இப்படி காப்பி செய்து அதை
பேஸ்ட் செய்வதற்கு நிலாவுக்கு ஒருவேளை இப்போது தான் தெரியும் என்று
நினைக்கிறேன். எனக்கு இருபது வருடத்திற்கு முன்பே அது தெரியும் . முதலில்
உனக்கு ஆங்கிலம் தெரியும் என்றால் முதலில் அதன் அர்த்தங்களை தமிழில் எழுது .
நண்பர் இனியவன் ,
ஆயிஷா நாயகியும் அவரை பெற்ற அபூ பக்கர் சித்திக் ரலி அவர்களும் அந்த திருமணத்தில் சந்தோசம் அடைந்திருக்கும் போது உங்களுக்கு ஏன் இவ்வளவு கவலை என்று புரியவில்லை . அந்த காலத்தில் சிறிய வயதில் திருமணம் செய்யும் பக்குவத்தை பெண்கள் அடைந்திருந்தனர். அது போல் ஆண்களும் அதிக வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபடும் சக்தியை பெற்றிருந்தனர் என்பது அந்த கால மக்களின் வரலாறுகளில் இருந்து நமக்கு அறிய முடிகிறது.
இப்படிக்கு
மனிதநேயன்
கடவுளும் அவன் தூதரும்
கொய்யால ரொம்ப டயர்டா இருக்கு,
நம்பிக்கையாளன் கடைசி வரைக்கும் தப்பை ஒத்துக்க போறதில்ல, பகுத்தறிவாளன் அதை விடப்போறதில்ல.
எவனோ நாசமா போறதுக்கு நாம ஏன்யா கத்திகிட்டு இருக்கோம்.
சரஸ்வதி பொந்து மதத்துக்கும், ஆயிஸா சந்து மதத்துக்கும் நடக்கும் சண்டையில் மனிதம் நசுங்குது.
எனக்கு இருக்குற கோவத்துக்கு அடிச்சி கொண்டேபுடுவேன்.
நான் கூப்பிடுறேன் நேரடி விவாதத்துக்கு மனுசபயல பிறந்த எல்லாரும் கோவை வாங்க
9994500540
//நாங்கள் உங்களுக்கு வேண்டிய செல்வம் தந்துவிடுகிறோம் ,நீங்கள் மக்காவில் பெரும் செல்வந்தராகிவிடலாம் .நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் முடித்து வைக்கிறோம்,நாங்கள் உங்களைப் பின்பற்றி நடக்க தயாராக இருக்கிறோம் .நீங்கள் எங்கள் கடவுள்களை குறை கூறுவதை விட்டுவிட வேண்டும் எனும் எங்கள் கோரிக்கையை ஏற்று கொள்ளவேண்டும் .என்று முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் வற்புறுத்தப் பட்டபோது அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை .தனது கடவுள் கொள்கையில் உறுதியாக இருந்தார் //
எப்போது,யார் இவையெல்லாம் முகமதுவிற்கு தருவதாக கூறினார்?
ஆதாரம் அளிக்கவும்.
புளுகுநேயன்,
//ஒரு பெண் ஒரு ஆணோடு தான் உறவு கொள்ளலாம் என்பது தான் இஸ்லாமிய மற்றும் உலக பொது விதி. இதில் இந்து மதத்தில் உள்ள சில சாதிகள் மட்டும் தான் விதி விலக்கு. //
http://en.wikipedia.org/wiki/Polyandry
இதில் எத்தனை இந்து ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறுங்கள்.
தெற்கு அரேபியாவில் ஏன் இன்னமும் பல கணவர் மணம் இருக்கிறது என்று கூறுங்களேன்.
முகமது மெக்காவில் இருந்தவரை அவரை யாரும் மதித்ததாக குரான் கூறவில்லை.அவரை ,பொய்யன்,பைத்தியம்,சூனியக்காரன்,சூனியம் வைக்கப்பட்டவர் என்றே கூறினர்.
கதிஜா கணவர் ,அபுதாலிப்பின் உறவினர் என்ற இரு காரணங்களினால் உயிர் பிழைக்க முடிந்தது.அதனால் இருவரின் மரணத்திற்கு பின் மதினாவிற்கு தப்பி ஓடிவிட்டார்.மெக்கா காலம் முழுவதும் அவருடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் மிக குறைவே.
குரானில் சில வசனங்கள் அவர் மீது என்ன மதிப்பு இருந்தது என்பதை காட்டும் வண்னம் அளிக்கிறேன்.
7:184. அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.
23:25. “இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்
38:4. அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்
11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்
17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.
17:48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகைய உவமைகளைச் சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே, அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
25:4. “இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்
25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா?
25:8. “அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா?” (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள்..
28:48. எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
51:52. இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்
thillu mullu ////இந்தியாவில் இருந்தவர்கள் இருப்பவர்கள் சொல்லுவதற்கெல்லாம் நான் ஜவாப்தாரி அல்ல. இந்துமதமும் ஜவாப்தாரி அல்ல./////
உங்கள் இந்து மதத்தில் உள்ள நூல்களிலிருந்து நெய்க்காரி விசயத்திற்கு இப்படி பதில் .விட்டு இஸ்லாத்திக்கு மட்டும் எதை வேண்டுமானாலும் தூக்கிக் கொண்டு வரலாமா?
முகம்மது நபி[ஸல்] அவர்கள் தனது ஐம்பது வயது வரை ஒரு மனைவியுடனே வாழ்ந்தார். தனது முதல் மனைவி கதிஜா [ரலி]இறந்த பிறகே அடுத்த மணம் 55 வயதுடைய சவ்தா என்பவரை மணந்து கொண்டார்கள்..அதன் பின்னர் தனது 51 வயதிலே ஆயிசாவை மணம் செய்கிறார்கள், அவர்களுக்கு காமம் காரணமாக இருந்தால் உடலுறவுக்கு தகுதியான இளம் பெண்களை திருமணம் செய்ய முடியும் .மேலும் ஆய்சா திருமணத்திற்கு பிறகு தனது தந்தை வீட்டிலே இருந்தார்கள் .மதினாவிற்கு சென்ற பிறகே ஒன்பது வயதில் பருவமான பிறகே அவருடன் இல்வாழ்க்கை நடத்துகிறார்கள் .பின்னர் பால்யவிவாகம் தடை செய்யப்பட்டது. கதிஜாவிர்க்கு மட்டுமே நான்கு குழந்தைகள் .அடுத்து ஒரு மனைவிக்கு மட்டும் ஒரு குழந்தை .மற்ற மனைவியருக்கு குழந்தைகள் கிடையாது இது எதை காட்டுகிறது ?மேலும் பெண்கள் பாலியல் சம்பந்தமான பிரச்னைகளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?அதன் ஒழுங்குகள் பற்றிய விதிமுறைகளை பெண்களிடம் முகம்மது நபி [ஸல்] அவர்கள் நேரடியாக அறிவிக்க முடியாது என்பதற்கும் மக்களிடம் அதிகமான செய்திகளை எடுத்து செல்வதற்கும் அவகளது பிந்தைய திருமனம்களின் நோக்கமாக இருந்தது. அடுத்தது பீ.ஜே அவர்களின் ஆன்லைனில் சென்று அதில் தங்களுக்கு தவறான கருத்துக்கள் இருந்தால் இங்கே எடுத்து வையுங்கள் .விளக்கம் தருவோம் .சிறந்த நூல்களிலிருந்து விமர்சனம் வைத்தால் தான் உங்களது தரத்தை உயர்த்தும்.பீ.ஜெவின் ஆக்கங்களை படித்து செருப்பால் அடிப்பேன் என்று ஆத்திர பட வேண்டாம் . அதற்குமுன் நீங்கள் உங்களது வகையறாக்களை நெயக்காரி சமாச்சாரம் உள்ளது மற்றும் தரிசு என்று நிறையவே உள்ளன. அவர்களை பக்குவப்படுத்தி முடிந்தால் ஹிந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வர முயற்சியுங்கள் சங்கரும் ஒத்துழைப்பார்..
தில்லு முள்ளு என்ற நிலா
இஸ்லாத்தினை எப்படியெல்லாம் விமர்சிக்கலாம் .என்ன மேட்டரில் விமர்சிக்கலாம் என்று ஆன்லைன் பீ.ஜே விற்குள் நுழைந்தால் அவரது பதிலடிகள் செருப்பால் அடிப்பது போல் தான் இருக்கும்.உடனே நீங்கள் பதிலுக்கு நானும் செருப்பால் அடிப்பேன் என்றெலாம் கத்தக் கூடாது.அது நாகரீகம் அன்று,
நாற்பது நாட்களுக்கு மேல் செருப்பின்றி நடந்தால் அவனது சாட்சி ஏற்றுக் கொள்ளப்படாது.சிறுநீர் கழித்தால் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவேண்டும் என்பது போல் அன்றாட விசயங்கள் முதல் உலகை ஆளும் ஆட்சிமைக்கு வழிகாட்டுதல் வரை ஏரளாமான நல்ல சிந்தனைக்குரிய கருத்துக்கள் குவிந்தே உள்ளன.முடிந்தால் அவற்றினைப் படித்து விமர்சியுங்கள்.எப்படி முஸ்லிம்களை ஆத்திரப் படுத்தவேண்டும் ?என்ற தங்களது அபிலாசைகளை தவிருங்கள்
பன்றியை அறுத்து பள்ளிவாசலில் போட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தல் ,அதற்க்கு முஸ்லிம்கள் பலியாகவிட்டால் பசுவை அறுத்து கோயிலில் போட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்ச்சி செய்தல் போன்று நீங்கள் எழுத்து பயங்கரவாதத்தை கைவிட்டு ஹிந்து மதத்தினருக்கு ராமாயானத்தை பற்றி நிறையவே தெரிந்து வைத்துள்ளீர்கள் அவற்றினை கொண்டு அறவுரை வழங்குங்கள் .மக்களை நல்வழிபடுத்த முயற்சி செய்யுங்கள்..
arun,
அதுமட்டுமல்ல, வேலைக்காரியை மார்க்ஸ் போட்டு பிறந்த குழந்தைக்கு எங்கல்ஸ் தன் பெயரை கொடுத்ததை கூட பேசமாட்டார்.
செங்கொடி இது பாலியல் குற்றமா? பாலியல் வன்முறையா:
arun,
அதுமட்டுமல்ல, வேலைக்காரியை மார்க்ஸ் போட்டு பிறந்த குழந்தைக்கு எங்கல்ஸ் தன் பெயரை கொடுத்ததை கூட பேசமாட்டார்
செம்கோடி இது ஆணாதிக்கமா?தனியுடமையா?
வால்பையன் ///நான் கூப்பிடுறேன் நேரடி விவாதத்துக்கு மனுசபயல பிறந்த எல்லாரும் கோவை வாங்க////
அதற்க்கு முனனால் மார்க்ஸ் பற்றி நிலா கூறியதற்கு செங்கொடி மவுனம் காத்துவிட்டார்.நீங்கள் ஏதாவது சொல்ல வருகிறீர்களா
நண்பர் மனித நேயன்,
//ஆயிசா அவர்களைப் பற்றி பெற்றவர்களோ மற்றவர்களோ கவலைப்படுவது அல்ல பிரச்சினை.குரானுக்கு முன்பு எத்தனையோ வேதங்கள் வந்தும்,குழந்தைகள் திருமணம் தவறு என முன்பே அறியாதவன் அனைத்தும் அறிந்தவன் என்ற தகுதியை இழக்கின்றான்.
மார்க்ஸ் கடவுள்னு நான் சொன்னேனா?
இல்ல நான் கம்யூனிஸ்டுன்னு எங்கேயாவது அறிக்கை விட்டேனா?
மனுசனா இருக்குறது அவ்ளோ கஷ்டமான வேலையா?
வாழ் பையன் உங்களை கம்யுனிஸ்ட் என்று சொன்னேனா?
நீங்கள் மனுசனாகவே இருங்கள்
பாலியல் குற்றங்களை ஒழிக்க ஆணாதிக்க்கத்தையும் தனியுடமையும் அகற்ற வேண்டும் என்ற தத்துவ ஞானியின் மேற்காணும் செயல் பற்றி கருத்தை பதிவுசெய்ய்யாதது ஏன்?
சம்பந்தபட்டவர்கள் சொல்வாங்க, என்னை கேட்டா நான் என்ன சொல்றது!?
இனியவன்
அரபுலகில் மது ,வட்டி, வரைமுறையற்ற திருமணம் ,அடிமை எல்லாம் இருந்தது .அவற்றினை ஒழிக்கவே இறைவன் அந்த மக்களிடையே தனது தூதுவரை அனுப்புகிறான். அதுவே உலகபோதுமறை ஆகிறது.
சங்கர்,I.F,T யின் தமிழாக்கம் காபிரூன் அத்தியாயத்தின் முன்னுரையில் பார்த்து கொள்ளுங்கள் .மேலும்,புகாரியில் முகம்மது நபி[ஸல்]அவர்கள் வஹி வந்த பின்னர் மக்களை அழைத்து மலையின் மீது நின்று கொண்டு ,நான் இப்போது மலையின் பின்னால் ஒரு படை வருகிறது என்று கூறினால் நம்புவீர்களா?என்று கேட்ட போது,முஹம்மதே நீவீர் எப்போதும் உண்மையாளராகவே இருந்துள்ளீர்கள் ,இப்போதும் உண்மையே பேசுவீர்கள் நீங்களா எதை சொன்னாலும் நம்புவோம் என்று மக்கள் கூறும் ஒரு ஹதீதை சங்கர் இதற்க்கு முன்பு வேறொரு பதிவில் எடுத்து வைத்துள்ளதை ஞாபக படுத்திக் கொள்ளுங்கள் ,.ஞாபகத்தில் உள்ளதை சொல்லியுள்ளேன் .இன்னும் ஆதாரங்கள் தருகிறேன்
வால்பையன் அவ்வாறெனின், இஸ்லாத்தை பற்றி கருத்து சொல்லுவது இஸ்லாத்தில் நீங்க சம்பந்தபட்டுள்ளீர்களா ?
குரான் படித்திருக்கிறேன் இப்ராஹிம், அது போதுமா இல்ல முனையை வெட்டிக்கனுமா?
ஹதிதுகளில் எதிரிகளும் முகமதுவை புகழ்வது போல் ஹதிதுகளை காட்ட முடியும்.இது அபு சுஃபியான் ரோம அரசர் ஹிராக்ளியஸ் இடம் கூறியது.
2681. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்:
(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, ‘உம்மிடம், ‘அவர் (முஹம்மது – ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டேன். நீர், ‘அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.
Volume :3 Book :52
_______
குரானில் அக்கால மெக்காவாசிகள் முகமதுவை கடிந்துரைத்த வசனங்கள் எதற்காக குரானில் இடம் பெற்றன? குரானில் முகமதுவை அவர்க்ள் மதித்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லையென்றே நினைக்கிறேன்.
நண்பர் இப்ராஹிம்,
ஆசான் மார்க்ஸுக்கு வேலைக்காரியுடன் குழந்தை உண்டு என்பது மட்டுமல்ல. அதைவிட இன்னும் அசிங்கமான மோசமான குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும் இணையங்களில் உண்டு. அவை மட்டுமல்ல, அவைகளுக்கான மறுப்புகளும், தரவுகளுடன் கூடிய விளக்கங்களும் கூட இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. எதை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் மன விகாரங்களைப் பொருத்தது. ஒரு விசயம் உண்மையா பொய்யா என்பதை தன்னுடைய நிலைக்கு ஆதரவானதா எதிரானதா என்பதை வைத்து முடிவு செய்பவர்களால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாது. அது மெய்யா என அறிய விரும்புபவர்கள் அதற்கான மறுப்புகளையும் படித்துப்பார்த்து ஒப்பு நோக்கி சரியானது எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஐயமிருந்தால் விளக்கமளிக்கலாம். என்னவென்றே தெரியாமல் கிடைத்ததை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை அலட்சியம் செய்வதைத்தவிர வேறு வழியில்லை. அடிப்படை இல்லாதவைகளுக்கெல்லாம் நூற்றாண்டுக் கணக்கில் மறுப்புச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
தவிரவும், இவைகளை மதவாதிகள் பேசுவது அபத்தமானது. எங்கள் தலைவர்களின் மீது தவறிருந்தால் நாங்கள் விமர்சித்திருக்கிறோம், விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். விமர்சனமும், சுயவிமர்சனமும் கம்யூனிஸ்டுகளுக்கு அடிப்படை. ஆனால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக புனிதப்படுத்தப்பட்டிருக்கும் தலைவர்களின் நடத்தைகளுக்குத்தான் அன்றிலிருந்து இன்றுவரை சமாளித்தல்கள் தேவைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அது அவசியமில்லை.
வாழ் பையன்,மார்க்ஸ் பற்றி சொல்ல செங்கொடிக்கு இத்தனை பயமா? இஸ்லாம் என்றால் அல்வா சாப்பிடற மாதிரி ///அது போதுமா இல்ல முனையை வெட்டிக்கனுமா/// அது ஒரு மருத்துவ ஆலோசனை தான் /எய்ட்ஸ் வந்த பிறகு அநேகர் [முஸ்லிம்கள் அல்லாதவரும்]பென்சிலாக ஷார்ப் ஆக்கிக் கொள்கின்றனர்.
எயிட்ஸுக்கும் சுன்னத்துக்கும் என்ன சம்பந்தம்?
அண்டபுளுகன் நிலாவே,
\\\\\\ http://en.wikipedia.org/wiki/Polyandry
இதில் எத்தனை இந்து ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறுங்கள்.
தெற்கு அரேபியாவில் ஏன் இன்னமும் பல கணவர் மணம் இருக்கிறது.\\\\
நீ என்னை புளுகன் என்று கூறுவது போல் நான் வன்மத்தை வெளிப்படுத்து
வதற்காக உன்னை புளுகன் என்று கூறவில்லை. தெளிவான ஆதரங்களுடன் கூறுகிறேன்.
உன்னுடைய அண்ட புளுகை உண்மை படுத்துவதற்காக நீ வழக்கமாக
ஆங்கிலத்தை வெட்டி ஓட்டுவதை போல் இந்த பதிவிலும் polyandry (ஒரு
பெண் பல ஆண்களை மணந்து கொள்ளும் முறை) பற்றி விக்கிபீடியா
செய்தியின் லிங்க் அனுப்பி என்னிடம் ஒரு சவாலும் விட்டுள்ளாய்.
இதில் எத்தனை இந்து ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று
கூறுங்கள். என்று கேட்டிருக்கிறாய். போகிற போக்கில் , தெற்கு
அரேபியாவில் ஏன் இன்னமும் பல கணவர் மணம் இருக்கிறது என்றும்
கேட்டிருக்கிறாய். எனக்கு சிலவேளை நேரமின்மையால் உன்னை
அலட்சியம் செய்து விடுவதுண்டு . ஆனால் இன்று விடுமுறை தினம்
என்பதால் என்பதால் உன்னுடைய அயோக்கியத்தனத்தை
அம்பலபடுத்த சிறுது நேரம் ஒதுக்க முடிந்தது.
நீ கொடுத்திருந்த விக்கிபீடியா லிங்கில் இருந்து உன்னுடைய தில்லு
முல்லுவிற்கு இப்போது விளக்கமளிக்கிறேன். வழக்கமாக நீ வெட்டி
ஓட்டுவது போல் ஏதாவது ஆங்கிலத்தை ஓட்டிவிட்டு அதன்
அர்த்தத்தை எழுதாமல் நீ கூறும் கருத்தை அது கூறுவது போல் இந்த
தளத்தில் வருபவர்கள் அனைவரையும் கேனையனாக நினைத்து
எழுதுவது போல் அல்ல இது.
இப்போது நீ எழுதிய விசயத்திற்கு வருகிறேன்.
இதுதான் நீ வெட்டி ஒட்டிய லிங்கில் உள்ள ஆங்கில வாசகம்.
”””Islam also bans polyandry. For example, Quran Surah Nisa’ Chapter 4 verses 22-24
gives the list of women with whom one cannot marry. Nikah Ijtimah is a pre-Islamic
tradition of polyandry, which was forbidden in Islam.[11]
There is at least one reference to polyandry in the ancient Hindu epic, Mahabharata.
Draupadi marries the five Pandava brothers. This ancient text remains largely neutral to
the concept of polyandry, accepting this as her way of life.[12] “”
Draupadi with her five husbands – the Pandavas. The central figure is Yudhishthira; the
two to his left are Bhima and Arjuna. Nakula and Sahadeva, the twins, are to his right.
Their wife, at far right, is Draupadi. Deogarh, Dasavatar temple
Polyandry has been practised in several cultures — in the Jaunsar region in
Uttarakhand, among the Nairs, Theeyas and Toda of South India,[2] and the Nishi of
Arunachal Pradesh.[ “”””
இதில் முதல் வரி என்ன கூறுகிறது .
இஸ்லாம் இந்தபல கணவன் முறையை தடை செய்ததாக கூறுகிறது.
இஸ்லாம் வருவதற்கு முன்னால் இருந்த இந்த முறையை இஸ்லாம்
தடை செய்ததாகவும் கூறுகிறது. குரானின் 4 வது அத்தியாயம் 22 :24
வசனத்தில் யாரை மணந்து கொள்ளலாம் என்பதை பற்றி குரான்
கூறுவதாகவும் எழுதப்பட்டுள்ளது.
அடுத்த வரியில் மகாபாரதத்தில் திரளபதி ஐந்து பாண்டவா
சகோதரர்களை மணந்து உங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டுவதையும்
குறிபிட்டுள்ளது. அடுத்து திரளபதியின் ஐந்து பாண்டவ
கணவன்மார்களின் பெயர்கள் குறிப்பிட பட்டுள்ளது. உனக்கு ஆங்கிலம்
படிக்கச் தெரிந்தால் அதை படித்து புரிந்து கொள். இதுதான் பல கணவன்
முறைக்கு அடிப்படை என்றும் குறிப்பிட்டுள்ளது
அடுத்து உத்தரகான்ட் ,அருணாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவில்
உள்ள நாயர் சமுதாயம் போன்ற இந்து சாதிகளில் இந்த பழக்கம்
இருப்பதை குறிப்பிட்டுள்ளது. இன்றும் கூட சில இந்து சாதிகள் இதை
பின்பற்றுவதை பற்றி நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் .
இப்போது அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் இந்த தில்லு முல்லுவின்
மோசடியை.
இனி ஏதாவது வெட்டி ஒட்டுவதாக இருந்தால் அனைவருக்கும் புரியும் படி தமிழில் எழுது.இல்லைஎன்றால் வழக்கம்
போல் குல தொழிலான மோசடியை செய்.
இப்படிக்கு ,
மனித நேயன்
அண்டபுளுகு நிலாவே ,
நீ குறிப்பிட்ட விக்கிபீடியா லிங்கில் இஸ்லாத்தில் பல கணவன் முறை இருப்பதாக எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது ?. மாறாக இந்த கேடு கேட்ட வழக்கம் இந்து மதத்தில் பல சாதிகளில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இஸ்லாம் அதை தடை செய்ததாக அல்லவா எழுதியிருக்கிறது. நீ அப்படியே உல்டாவாக புரிந்து கொண்டதற்கு காரணம் ஒன்றில் நான் கூறுவது போல் நீ போதையில் இருந்து எழுதியிருக்க வேண்டும் . அல்லது இங்கு படிப்பவர்களை எல்லாம் கேனையனாக நினைத்து எல்லோரும் ஆங்கிலத்தில் ஏதாவது லிங்கை கொடுத்தால் உன்னுடைய உல்டாவை நம்பிவிடுவார்கள் என்ற நப்பாசையாக இருக்க வேண்டும் .
நீ மோ(ச)டியை விட வெறியனாக இருப்பாய் போல் இருக்கிறது. நான் இஸ்லாமியர்களை விட இந்து மக்களில் அதிகமான நல்லவர்கள் இருப்பதாக நம்புபவன் . உன்னை போல் அயோக்கியர்களால் நல்ல இந்துக்களின் மானமும் போய் கொண்டு இருக்கிறது.
இப்படிக்கு,
மனிதநேயன்
ஹா ஹா… புளுகுநேயனே,
இதுவரை நான் ஆதாரத்துடன் எழுதியதற்கெல்லாம் பதில் வரவில்லை. ஏன்? வேண்டுமென்றேதான் அந்த லிங்கை கொடுத்தேன். பதில் சொல்ல முடியும்போது வாய் ரொம்ப நீளும் என்றே எதிர்பார்த்தேன்.
இப்போது வாய் நீளுகிறது.
இந்து ஜாதிகளில் உலகத்திலேயே ஒரே ஒரு ஜாதியில்தான் பாலியண்டரி இருந்தது. இப்போது இல்லை.. அது நாயர் ஜாதி மட்டுமே. மற்ற சாதிகள் இந்தியாவில் இருந்தாலும் அவை இந்து ஜாதிகள் அல்ல. அருணாசல பிரதேசத்தில் உள்ளவர்கள் பௌத்தர்கள். திபெத்தியரகளிடமும் உண்டு. ஆனால், திரௌபதையை வைத்து நீங்கள் பல இந்துஜாதிகளில் இருக்கின்றன என்று அள்ளுவீர்கள் என்றும் தெரியும்.
நான் சொன்னது தெற்கு அரபியாவில் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் நீங்களோ நான் இஸ்லாத்தில் இருபப்தாக சொல்வதாக எழுதுகிறீர்கள்.
கதீஜா செய்ததும், முகம்மதுவின் மருமகள் ஜனப் செய்ததும் பாலியாண்டரியில் வராது என்று தெரியும். ஆனால், அதுவும் பல கணவன்களை வைத்துகொளவதுதானே? என்ன நடுவில் ஒரு சட்டரீதியான பிரிவு, பிறகு இன்னொரு ஆளோடு உறவு.
//எத்தனையோ முறை முகமது நபி ஆயிஷா நாயகியுடன் ஒன்பது
வயதில் தான் குடும்ப வாழ்க்கை நடத்தினார் என்று விளக்கிய
பின்னாலும் விளங்காதது போல் எழுதி கொண்டிருக்கும் நிலாவே ,//
ஆனால், ஆயிஷா நாயகியை ஆறுவயதில் திருமணம் செய்து ஒன்பது வயதில் உறவுகொண்டாலும் அதற்கு முன்னர் தொடை வேலை செய்திருக்கிறார். அதெல்லாம் அந்த கால வழக்கம் என்று எங்களிடம் சொல்கிறீர்கள். என்று எழுதி அதற்கு ஆதாரமும் எழுதியிருந்தேனே .. பார்க்கவில்லையா புளுகு நேயனே?
நான் சொல்கிறேன்.
ஒரு வயதுக்கு வந்த பெண் சுய விருப்பத்தோடு பல ஆண்களை மணந்துகொள்வதை கூட ஒரு சாராரின் பழக்க வழக்கம் என்று ஏற்றுகொள்ளலாம். ஆனால், ஆறு வயது குழந்தையை அறுபது வயது கிழவன் தொடை வேலை செய்வது? எந்த பர்வர்ட்டுமே நினைக்கக்கூட அஞ்சும் செயலை இன்று அழகிய முன்மாதிரி என்று பிரச்சாரம் செய்வதற்கு வெட்கமே இல்லையா?
மேலே பத்வாவை படிக்கவும்.
உங்கள் ஆறு வயது குழந்தையை ஒரு அறுபது வயது கிழவனுக்கு மணம் செய்துகொடுப்பீர்களா? தூ…
புளுகுநேயன்,
அடுத்த வரியில் மகாபாரதத்தில் திரளபதி ஐந்து பாண்டவா
சகோதரர்களை மணந்து உங்கள் வாழ்க்கைக்கு வழி காட்டுவதையும்
குறிபிட்டுள்ளது.
இதை படித்துவிட்டு இதனை படிக்கவும்.
There is at least one reference to polyandry in the ancient Hindu epic, Mahabharata. Draupadi marries the five Pandava brothers. This ancient text remains largely neutral to the concept of polyandry, accepting this as her way of life.[12]
இதில் எங்கே இந்துக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக சொல்லப்படுகிறது? உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்லியிருந்தால், நானே மொழிபெயர்த்திருப்பேனே.
In Arabia (southern) “All the kindred have their property in common …; all have one wife” whom they share.[24)
இதுதான் தென் அரேபியாவிலும் இருக்கிறது. இஸ்லாமில் இருக்கிறது என்று சொல்லவில்லை. நான் எழுதியதை சரியாக படிக்கவும்.
அடுத்து அயீஷாவை மட்டுமே அப்படி கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார் முகம்மது என்று கருதவேண்டாம்
.
முகம்மதுவின் பர்வர்ட் மனநிலையை சொல்லும் ஒரு வரி இஷாக்கில் இருக்கிறது.
Ishaq:311 The Apostle saw Ummu’l when she was a baby crawling before his feet and said, If she grows up, I will marry her.ஒ But he died before he was able to do so.
இஷாக்:311 “உம்முல் குழந்தையாக அவரது காலடியில் தவழ்ந்து கொண்டிருந்தபோது அவர் சொன்னார்,”இவள் வளர்ந்தால் நான் இவளை திருமணம் செய்துகொள்வேன்” அவர் அவ்வாறு செய்வதற்குள் இறந்துவிட்டார்.
#
காலடியில் தவழும் குழந்தையைப் பார்த்ததும் இவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோன்றும் ஒரு அசிங்கமான மனநிலை என்ன மனநிலை?
அப்படிப்பட்ட ஆள் என்னிடம் கடவுள் பேசினார் என்று சொன்னால் ஏமாந்து போய் உளறிக்கொண்டிருக்கும் உங்களுக்கு வெட்கமே இல்லையா?
மனித நேயன், நீங்கள் பதிலுக்கு அவரது ஒரு மகளை ஐந்து பேருக்கு திருமணம் செய்து கொடுப்ப்பீர்களா?என்று லாவணி பாட வேண்டாம்.அவரது வேலை ஓன்று பள்ளிவாசலில் பன்றிக்கறி போடா வேண்டும் .இல்லையெனில் கோயிலில் பசுக்கறியை போட வேண்டும்.கலவரம் வரவேண்டும் குளிர்காய வேண்டும் .குரான் ஹதித் அடிப்படையில் தான் ப்த்வா கொடுக்க வேண்டும் .வெற்று பத்வா எப்படி இஸ்லாத்திற்கு ஆதாரம் ஆகும்? அவர் நல்ல ஹிந்துவாக இருந்தால் அந்த மதத்திற்கு அக்க்கப் பணிகள் தொண்டுகள் புரிவார்.இல்லையெனின் அந்த மதம் பற்றி திகவின் உளறல்களுக்கு பதில் சொல்லுவார்.அதையெல்லாம் விட்டு விட்டு இங்கே வந்து இஸ்லாத்தை பற்றி ஆட்டம் போடக் காரணம் என்ன?எழுத்து பயங்கரவாதியாக மாறிவிட்ட அவர் உள்ளத்திலோ அல்லது மூளையிலோ ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது.அதனால் அவரை மன்னிப்போம். மறப்போம்.அவர் இங்கே ஆசைதீர ஆடிவிட்டு போகட்டும்./செங்கொடி அதை ரசிக்கட்டும்
அண்டப்புளுகு நிலாவே ,
இப்படியும் ஒரு சப்பை கெட்டா. சாயம் வெளுத்து விட்டதால் வேறு வழியில் ஒரு திசை திருப்பலா ? உங்கள் மகாபாரதமே இதற்கு வழிகாட்டும் போது உங்களுக்கு என்ன இதை ஆதரிப்பதற்கு ? அடுத்து இது வரை நீ எழுதிய ஆதாரத்தை முடிந்தால் தமிழில் மொழி பெயர்த்து எழுது உன்னுடைய அண்ட புளுகை எல்லோரும் புரிந்து கொள்ளட்டும். என்னை போல்.
இப்படிக்கு,
மனித நேயன் .
புளுகுநேயன்
இதுதான் நீங்கள் எழுதியது.
////ஒரு பெண் ஒரு ஆணோடு தான் உறவு கொள்ளலாம் என்பது தான் இஸ்லாமிய மற்றும் உலக பொது விதி. இதில் இந்து மதத்தில் உள்ள சில சாதிகள் மட்டும் தான் விதி விலக்கு. //
உலக பொதுவிதியா? உலகத்தில் பல நாடுகளில் இது இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்கிறீர்களா? ஆகவே புளுகுவதற்கு முன்னால், சிந்தித்து புளுகவும்.
மகாபாரதம் ஒரு வரலாறு. அதில் நடந்தது எழுதப்பட்டுள்ளது. ஆகவே வரலாற்றில் நடந்தது என்பதர்காக பின்பற்ற வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இந்துக்களுக்கு கிடையாது. ராமாயணமும் வரலாறு. ஆனால் ராமனின் உன்னத மானுடம் நீதிபதி எம். எம் இஸ்மாயில் உடபட பல உண்மையான மனிதநேயர்களை கவர்ந்தது.
அன்புள்ள இப்ராஹிம்
//அவரது ஒரு மகளை ஐந்து பேருக்கு திருமணம் செய்து கொடுப்ப்பீர்களா?என்று லாவணி பாட வேண்டாம்.//
முகம்மது ஒரு அழகிய முன்மாதிரி என்று சொல்வது இஸ்லாமியர்கள்தான். அவர் எப்படி நின்றுகொண்டு ஒன்னுக்கு அடித்தார் உக்கார்ந்து ஒன்னுக்கு அடித்தார் என்று பார்த்து அதே மாதிரி செய்வது முஸ்லீம்கள்தான். அவர் போரில் கைது செய்யபப்ட்ட பெண்களை அன்றிரவே கற்பழித்தது மாதிரி எல்லாம் நீங்களே செய்துகொண்டிருங்கள்.
இந்துக்கள் அபப்டிப்பட்ட கேவலமானவர்கள் அல்ல, மடையர்களும் அல்ல .
ஆகவே உங்களது மரமண்டைத்தனத்தை இந்துக்களிடம் நீட்ட வேண்டாம். யாரும் பாஞ்சாலியை பெண்கள் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரியாக சொல்லவும் இல்லை. அது போல இந்துக்கள் நினைக்கவும் இல்லை.
இந்திய பெண்கள் முன்மாதிரியாக கொள்ளவேண்டியதாக பலரால் சொல்லப்படுவது சீதை மட்டுமே. முன்மாதிரி யாக ஆண்களால் கருதப்படவேண்டியது ராமன் மட்டுமே. அதுவும் மூளையை உபயோகப்படுத்தவேண்டும் என்று முன்பே எழுதிவிட்டேன்.
நான் எழுதியிருப்பதை கொஞ்சம் படித்துத்தான் பாருங்களேன்,.
இப்ராஹிம், மற்றும் சகோதரர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
மகாபாரதம், ராமாயணம், வேதங்கள், தேவாரம் திருவாசகம், கம்பராமாயணம் எல்லாம் வெறுமே இன்றைய இந்துக்களின் சொத்து மட்டுமே அல்ல. இவை உலகத்தின் பொதுச்சொத்து. இவை நிச்சயமாக உங்களது பாரம்பரிய சொத்து. முஸ்லீம் என்று தங்களை கருதிக்கொள்ளும் பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்தால் இவற்றை வெறுக்க வேண்டும் என்றோ இவற்றை படிக்கக்கூடாது என்றோ கருதிகொள்ள வேண்டாம். இந்திய ஜனாதிபதியாக இருந்த ஹிதாயத்துல்லா, எம் எம் இஸ்மாயில், அப்துல் கலாம் ஆகியோர் இவற்றை தங்களது பாரம்பரியம் என்றுதான் க்ருதுகிறார்கள்.
ஒரு வழிப்பறி கொள்ளைக்கூட்டக்காரனிடம் 14ஆம் நூற்றாண்டு நித்தியானந்தாவிடம் கடவுள் பேசினான் என்று நம்பி ஏமாறாதீர்கள்.
ஆனால் இந்த கருத்தையும் நீங்கள் உதாசீனம் செய்து வன் வார்த்தைகளைத்தான் சொல்லபோகிறீர்கள். அறிவேன்.
ஒரு நாள் உங்களது கண்கள் திறக்கும். எப்படிப்பட்ட மூளைச்சலவைக்குள் இருந்தோம் என்பதை உணர்வீர்கள்.
பயங்கரவாதி நிலாவே,
உனக்கு பள்ளியில் பசுவை வெட்டி போடுவதும் கோவிலில் பன்றியை வெட்டி போடுவதும் அதன் மூலம் கலவரம் உண்டு பண்ணுவதும் தான் உன்னுடைய தலையாய வேலை. போதா குறைக்கு செங்கொடி போல் சில வலை தளங்கள் உங்கள் அரிப்பை தீர்பதற்கு அரு மருந்தாக இருக்கிறது. எங்களுக்கு உபயோகமான நிறைய வேலைகள் இருக்கிறது. உனக்கு போதையும் தெளிய போவதில்லை புத்தியும் தெளிய போவதில்லை.
இப்படிக்கு
மனித நேயன்
பள்ளியில் பன்றியை வெட்டி போடுவது மற்றும் கோவிலில் பசுவை வெட்டி போடுவது என்று வாசிக்கவும்
மனித நேயன்
இந்து என்று தங்களை கருதிக்கொள்ளும் பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்தால் மட்டுமே இஸ்லாத்தை வெறுக்க வேண்டும் என்றோ குரானைப் படிக்கக்கூடாது என்றோ கருதிகொள்ள வேண்டாம்.
மகாபாரதம், ராமாயணம், வேதங்கள், தேவாரம் திருவாசகம், கம்பராமாயணம் எல்லாம் வெறுமே இன்றைய இந்துக்களின் சொத்து மட்டுமே அல்ல. இவை உலகத்தின் பொதுச்சொத்து. இவை நிச்சயமாக உங்களது பாரம்பரிய சொத்து.இந்திய ஜனாதிபதியாக இருந்த ஆர்.எஸ்.எஸ் காரரகளான் ஹிதாயத்துல்லா, எம் எம் இஸ்மாயில், அப்துல் கலாம் ஆகியோர் இவற்றை தங்களது பாரம்பரியம் என்றுதான் க்ருதுகிறார்கள்.
///முன்மாதிரி யாக ஆண்களால் கருதப்படவேண்டியது ராமன் மட்டுமே.///
அரிதார ராமனைப்பின்பற்றி அவைனை வணங்கும் கூட்டமும் தற்கொலை செய்துகொள்ள இந்தியாவில் சட்டமியற்றலாமே ?
இந்திய பெண்கள் முன்மாதிரியாக கொள்ளவேண்டியதாக பலரால் சொல்லப்படுவது சீதை ( Aiswarya Roy) மட்டுமே.
முன்மாதிரி யாக ஆண்களால் கருதப்படவேண்டியது ராமன்( Vikram) மட்டுமே.
போலி இந்தியன்,
//இந்து என்று தங்களை கருதிக்கொள்ளும் பெற்றோருக்கு பிறந்த ஒரே காரணத்தால் மட்டுமே இஸ்லாத்தை வெறுக்க வேண்டும் என்றோ குரானைப் படிக்கக்கூடாது என்றோ கருதிகொள்ள வேண்டாம். //
சேசே அப்படியெல்லாம் படிக்காம இருந்திருந்தா இப்படி உங்களை ரவுண்டு கட்டி அடிக்க முடியுமா? நல்லா குரான் ஹதீஸெல்லாம் படிச்சிட்டுத்தான் எழுதுறேன்.
//அரிதார ராமனைப்பின்பற்றி அவைனை வணங்கும் கூட்டமும் தற்கொலை செய்துகொள்ள இந்தியாவில் சட்டமியற்றலாமே ?//
அப்பவே சொன்னேன். கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தணும்னு.
புளுகுநேயன்,
//எங்களுக்கு உபயோகமான நிறைய வேலைகள் இருக்கிறது. உனக்கு போதையும் தெளிய போவதில்லை புத்தியும் தெளிய போவதில்லை. //
ராமர் பக்தி போதை என்றால் நிச்சயமாக அது நல்ல போதைதான். அவன் ஆயுதம் தாங்காத போர்வீரனைக்கூட கொல்லாதவன். இன்று போய் நாளை வா என்று பேராண்மையுடன் அனுப்பியவன்.
ஆயுதம் ஏந்தாத குழந்தைகளையும் பெண்களையும் கொல்லச் சொல்லும் முகம்மதை ”அழகிய முன்மாதிரி” என்று உளறும் உங்களுக்கு எப்படி அதன் அருமை தெரியப்போகிறது?
அன்பு இராம.நிலா,
இந்து தெய்வங்கள்
சோமபான சுராபானமருந்துவர்(மது).
பல பெண்களுடன் படம்காட்டுவர்(மாது).
கொலைகருவியேந்தி
ஆயுதபானிகளாகவே(கொலை)இருப்பர்.
//நல்லா குரான் படிச்சிட்டுத்தான் எழுதுறேன்.//
நன்றாக குரானைக்கற்றதாகக்கதைக்கும் நபரே.
விளங்கியதை A4 size-ல் விளக்கவும்.
\\\\ சேசே அப்படியெல்லாம் படிக்காம இருந்திருந்தா இப்படி உங்களை ரவுண்டு கட்டி அடிக்க முடியுமா? நல்லா குரான் ஹதீஸெல்லாம் படிச்சிட்டுத்தான் எழுதுறேன் \\\\
நீ எங்களை ரவுண்டு கட்டி அடித்து விட்டாய் என்று நீயாகவே கற்பனை செய்வது குடி காரன் குடித்து விட்டு I am stedy என்று உளறுவது போல் உள்ளது. ஒருவேளை உனக்கு போதை தெளிந்தால் நீ இவ்வளவு காலம் உறங்கியது பஞ்சு மெத்தையல்ல ரோட்டோரத்து சாக்கடைஎன்பதை உணர்ந்து கொள்வாய். உன் அருகில் வருவதற்கே எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது என்பதை போதையில் இருக்கும் நீ எப்படி உணர்ந்து கொள்ள முடியும் . ஆறு வயது , கற்பழிப்பு இப்படி ஏதேதோ உளறியதை தவிர நீ இது வரை என்ன எழுதினாய் ?
கழுதைக்கு புரியுமா கற்பூர வாசனை ! அது போல பயங்கரவாதி நிலாவுக்கு புரியுமா அமைதி மார்க்கத்தை பற்றி. திரும்ப திரும்ப ஆறு வயது ஆறு வயது என்று புலம்பி கொண்டிருக்கும் பயங்கர வாதியே. உன்னை போல் ஒரு பயங்கர வாதிக்காக வேண்டி எங்கள் உடன் பிறவா சகோதரர்களாகிய நல்ல ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்த விரும்பவில்லை . எங்கள் மார்க்கம் அதை எங்களுக்கு கற்று தரவில்லை. நாங்களும் ஒன்றிரண்டு தலை முறைக்கு முன்னால் ஹிந்துகளாக இருந்தவர்கள் தானே.
இப்படிக்கு,
மனித நேயன் .
நிலா,
மனிதநேயனிடமிருந்து மனித நேயத்தை கற்றுகொள்ளுங்கள்.
எங்கள் தலைவர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் ஆயுதம் தாங்காத பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்கி கொன்று மனித நேயத்தை நிலைநாட்டினார்.
உங்களது கேடுகெட்ட ராமனோ இன்று போய் நாளை வா என்று ஆயுதம் இழந்த ராவணனை அனுப்பி வைத்து மனித நேயத்தை குழி தோண்டி புதைத்தான். இந்த கேடு கெட்ட ராமனை விட்டுவிட்டு எப்போது நீங்கள் இஸ்லாமுக்கு வருகிறீர்களோ அப்போதுதான் உங்களுக்கு இஸ்லாமிய மனிதநேயம் புரியும்.
நாங்கள் ஓரிரண்டு தலைமுறைக்கு முன்னால் இந்துக்களாக இருந்தவர்கள்தான். எங்களுக்கு தெரியும் எவ்வளவு கேடுகெட்டவர்களாக எங்கள் முன்னோர்கள் இருந்தார்கள் என்று. ராமன் மாதிரி மனித நேயமில்லாத கொடூரமானவர்களை வணங்கி கொண்டிருந்தார்கள். இப்போது நபிகள் நாயகத்தின் வழியில் உலகத்தில் அன்பும் பண்பும் செழிக்க வைத்துகொண்டிருக்கிறோம். வேண்டுமானால், தாலிபான், ஈராக், டார்பர், பஹ்ரைன், பாகிஸ்தான் என்று எங்களது தோழர்கள் நிகழ்த்தும் அன்பு நிகழ்ச்சிகளை பாருங்களேன். ஷியாவும் சுன்னிகளும், அஹ்மதியாக்களும், ஒன்றுக்குள் ஒன்றாக கலந்து மகிழ்ந்து உறவாடிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவர்களையும் யூதர்களையும் நெஞ்சார தழுவிக்கொண்டு அன்பை முகிழ்க்கும் மலர்களாக பரப்பிக்கொண்டிருக்கிறோம்.
உங்களப்போல யோகா சொல்லிக்கொடுத்து வன்முறையாளர்களாகவா ஆக்கிக்கொண்டிருக்கிறோம்? சிந்தியுங்கள். விரைவில் இஸ்லாமிய மனிதநேயத்தை புரிந்துகொள்ளுங்கள். இல்லையேல் புரியவைக்கப்படுவீர்கள்.
இப்னு பசீர் நீங்கள் உண்மையில் கள்ளபெயரில் வரும் வேறு மதத்துக்காரராகவே இருக்க வேண்டும்.பசீரின் மகன் என்பது உண்மை என்றால் அங்குலம் அங்குலமாக நடைமுறைபடுத்த தகுந்த இஸ்லாத்தில் பிறந்த நீங்கள் நாத்திகனாகவோ கம்யுனிஸ்ட் ஆகவோ மாறியிருந்தால் ஏற்றுக் கொள்ளகூடியதாக இருக்கும்..காவியத்தை புகழுவதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை .ஆனால் இஸ்லாத்தை ஒப்பிட வேண்டாம் என்பதுதான் வேண்டுக்கோள். பெண்களையும் குழந்தை களையும் போரில் தாக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வசனங்களையும் ஹதித்களையும் மறந்துவிட்டு , இக்காட்டன சூழ்நிலையில் கூறப்படும் வசனத்தை இங்கே தூக்கி வருவது ஏனோ? அந்த நேரத்தில் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப் படவில்லை என்றால் தாங்கள் வீழ்த்த பட்டிருக்கக் கூடும் என்பது போன்ற சூழ்நிலையில் தான் அந்த வசனம் கூறுகிறது.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முஸ்லிம்களா?
பவாமை காட்சியளிக்கும் அஹிம்சாமூர்த்தி காந்திஜியை கொன்றது யார்?
ஹே ராம் என்று உயிரிழந்த ராம பக்தர் தான் ,அத்துடன் விட்டாரா?மத ஒற்றுமையை வலியுருத்தியவரையும் கொல்லவேண்டும்.அதன் மூலம் கலவரம் ஏற்படுத்தி முஸ்லிம்களையும் கருவறுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திய நய வஞ்சகன் முஸ்லிமா?
இனவெறிக்காக ஆப்ரகாம் லிங்கனைக் கொன்றவன் முஸ்லிமா?
அணுகுண்டுகளை வீசி பெண்கள் என்ன குழந்தைகள் என்ன புல்பூண்டுகள் கூட இல்லாமல் இன்றுவரை நாசாமாக்கிய கொடுங்கோலர்கள் இன்று அமைதி பூங்காவின் காவலர்களா?
பாலஸ்தின வீரர்களுக்காக பெய்ரூட்டில் அத்தனை மக்களையும் மின்சாரம் உணவு தண்ணீர் இல்லாமல் குண்டுமழை பொழிந்த,முகாம்களில் இருந்த பெண்,குழந்தைகளையும் கொன்று புடோசரால் குழிதோண்டி பிணங்களை புதைத்த புண்ணியவான்கள் முஸ்லிம்கள் அல்ல ,ஹிட்லர் பற்றி பேசும்போது மதம் மறைக்கப் படுவது ஏன்? ஹிட்லரால் கொடுங்கோலானாக மாற்றிய யூதர்களின் நய வஞ்சகம் மறைக்கப் படுவது ஏன்?
ஆப்கானில் புகுந்து அந்நிய நாடு பெண்கள் குழந்தைகள் நோயாளிகள் வயோதிகர் என்று பாராது லட்சக்கணக்கான மக்களை கொன்றது பொதுவுடமைக்காகவா? அங்கே பெண்களின் கற்புகளை சூறையாடியது ஆணாதிக்கமா?அல்லது தங்கள் வீரர்களுக்கு பொதுவுடைமை கற்று தந்த தனியுடமை பாடமா?
ஒரு பெறல் ஆறு டாலர் என்ற வீதத்தில் வாங்கி 150 டாலருக்கு உலக சந்தையில் விற்ற உலகமாக தாதாவிடமிருந்து அரபுலகை காப்பாற்ற முயற்சித்த எகிப்து நாசரைய்ம் அதன் பின்னர் சவூதி பெயசலையும் அந்நாட்டு மக்களைவைத்தே கொலை செய்து நாடகமாடும் பாதகன் முஸ்லிமா?
ஏன் நம் இந்தியாவில் ஜாலிவாலபாக் படுகொலை செய்தது முஸ்லிமா?
பொற் கோயிலில் ராணுவம் நுழைந்தமிகாக இந்திரா காந்தியை கொலை செய்தது முஸ்லிமா?
பாபரி மஸ்ஜிதை இடித்துவிட்டு முஸ்லிம்களை கொலையும் செய்த கொடுமை களை சொல்லவும் வேண்டுமா?
இந்திராஜி கொலைக்காக பெண்கள் குழந்தைகள் உட்பட மூன்றாயிரம் சீக்கியர்களை கொன்றவர்களும் முஸ்லிம்கள் அல்ல
குஜராத் கலவரத்தை பற்றிய தெகல்காவின் விசாரணைகளின் உண்மைகளை மறுத்து பாருங்கள்.
குஜராத் மந்திரியை கைது செய்தததிர்க்காக பிரதமரின் பேட்டியை படித்து பாருங்கள்.
முஸ்லிம்களை பயங்கரவதிகாளாக காட்டி உலகத்தில் அமெரிக்க ஆதாயம் தேடுகிறது.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி இந்தியாவில் பாஜக ஆதாயம் தஐத்கிறது
அதிலும் மனவேதனை என்ன வென்றால் தங்களின் சூழ்ச்சிக்கு முஸ்லிம்களையே பயன்படுத்துகிறார்கள்.
ரச்யாவைப்போல பொருளாதார சரிவு எற்படவிருந்ததை மறைத்து பேரழிவு ஆயுதம் என்றுகூறி டாலரிலிருந்து யுரோக்கு மாறிய சதாமை ஒழித்து இராக்கை கைப்பற்றி எண்ணெய் மார்க்கெட் கைக்கு வந்த பிறகு வெட்கம் இல்லாமல் இராக்கில் பேரழிவு ஆயுதம் என்று சொன்ன படு பாதகன் எந்த மதம்?
விண்ணில் இருந்து வீசப்பட்ட நவீன குண்டுகள் பெண்களையும் குழந்தைகளையும் நோயாளிகளையும் தவிர்த்து ராணுவ வீரகளை மட்டுமா கொலை செய்தது?
அங்கு நடந்த கற்பழிப்புகளும் சிறை கொடுமைகையும் ,தீவிரவாதிகள் என்று கூறப்படும் புரட்சியாளர் களால் கடத்தப்பட்ட வர்களுக்கு நேர்ந்த அனுபவங்களையும் ஒப்பிடுக்கொள்ளுங்கள்.
செத்த மாட்டுக்காக ஐந்து மனிதர்களை கொன்ற கொடுங்கோலர்கள் முஸ்லிம்களா?
தலித் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காக நாயை விரட்டிய பண்பாளர்கள் முஸ்லிம்களா?
நாயிக்கு தண்ணீர் புகட்டிய காரணத்திற்க்காக விபச்சார குற்றத்தை மன்னித்த இஸ்லாம் பண்பானதா?இன்னும் எதனை வரலாற்று கொடுமைகள் இங்கு விடபட்டிருக்கலாம்.அவற்றை எல்லாம் செய்தது முஸ்லிம்களா?
கன்றுக்காக ஆலயமணி அடித்து நீதி கேட்ட பசுவுக்காக தன மகனை கொன்றதை புகழ்ந்து கொள்ளுங்கள் .
கொடி தளிர்க்க தனது தேர் கொடுத்த பாரி வள்ளலை புகழ்ந்து கொள்ளுங்கள்
கணவன் அநீதியாக கொல்லப்பட்டதர்க்காக,மதுரையில் உள்ள பெண்கள் குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்களை எரித்த கண்ணகியை புகழ்வதை நான் குறை காண வில்லை.இஸ்லாத்தோடு ஒப்பிடாதீர்கள்.
.
அன்புள்ள இப்ராஹிம்,
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக,
மற்றவர்கள் மீது பல இறைவன்களின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக
நாம் இங்கே இஸ்லாமிய மனிதநேயம் என்றால் என்ன என்று விளக்க வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். நமது மனிதநேயத்தை பற்றி நாம் விளக்கினால்தானே நிலா போன்ற தவறானவர்களுக்கு புரியும். அவர்கள் ஏதோ இரவுநேரத்தில் போரிடுவது தவறானது என்று கருதுகிறார்கள். நமது நபிபெருமானார்(ஸல்) இரவுநேரத்தில் மற்றவர்கள் அறியாமல் திடீர் தாக்குதல் நடத்தி பெண்களையும் குழந்தைகளையும் கொல்லுவதற்கு ஆணையிட்டு மனிதநேயத்தை மற்றவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார் என்பதை நிலா போன்ற இந்துத்துவர்களுக்கு எபப்டி புரியவைப்பது?
இருக்கட்டும். நீங்கள் கொடுத்த லிஸ்டில் பல விடுபட்டுவிட்டன. எங்கள் பக்கத்து வீட்டுக்காரனிடமிருந்து ஒரு இந்து திருடிவிட்டான். அதனையும் சேர்த்திருக்கலாம். கருணாநிதி உதயகுமாரனை கொன்றது, ஜெயலலிதா பஸ்ஸில் சென்ற சிறுமிகளை கொன்றது போன்ற விஷயங்களையும் இந்துக்கள் செய்ததாக, இந்து மத புத்தகங்கள் சொல்லி செய்ததாக நாம் சேர்த்துகொள்ளலாம். அப்புறம் ஒஸாம பின் லாடன், ஜியாவுல் ஹக், .. . அவர்கள் முஸ்லிம் என்பதால் அவர்களை பற்றி இப்போது பேச வேண்டாம்.
வேறு என்ன? கோத்ராவில் ரயிலில் வந்த கேடுகெட்ட இந்துத்துவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சாதித்து விட்டோம். அப்புறம் ?
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சித்ரவதை செய்து கொன்றவர்கள் முஸ்லிம்களா? என்று கேட்டிருக்கிறீர்கள். இதுவும் ராமன் போன்ற மனிதநேயமற்ற மடையர்களை வணங்கும் இந்துக்கள் செய்ததுதான் என்று நாம் பேசமுடியுமா என்று ஆராய வேண்டும். சிந்திப்போம். செயல்படுவோம்.
இப்னு சாத்தான் ///நீங்கள் கொடுத்த லிஸ்டில் பல விடுபட்டுவிட்டன. எங்கள் பக்கத்து வீட்டுக்காரனிடமிருந்து ஒரு இந்து திருடிவிட்டான். அதனையும் சேர்த்திருக்கலாம். கருணாநிதி உதயகுமாரனை கொன்றது, ஜெயலலிதா பஸ்ஸில் சென்ற சிறுமிகளை கொன்றது போன்ற விஷயங்களையும் இந்துக்கள் செய்ததாக, இந்து மத புத்தகங்கள் சொல்லி செய்ததாக நாம் சேர்த்துகொள்ளலாம்.////
நியாயமான வாதங்கள் நீர்த்து போய்விட்டதால் இப்படி கோமாளி வேடம்போட்டுத்தான் தப்பிக்க முடியும்
ஒசாமா பின் லாதின் தனது எதிரியான ரஷ்யாவை விரட்ட அமெரிக்காவின் தயாரிப்பு. ஒசாமா குற்றவாளி என்றால் அந்நிய நாட்டை ஆக்கிரமிப்பு செய்து அப்பாவிமக்களை கொன்று பெண்களை கற்பழித்துக் கொன்ற ரஷ்யாவினர் யார்? எண்ணை கொள்ளைக்காக இராக்கில் இரவு நேரம் மட்டுமே அனைத்து மக்களை கொன்ற கண்ணியவான்கள் அமெரிக்கர்கள் அல்லவா?ஜப்பானில் அணுகுண்டு வீசி அணுவும் மிஞ்சாமல் கொன்றவர்கள்பற்றி பேச உள்ளம் செத்து போனது ஏன்?மேலும் உம பெயர் பற்றிய சந்தேகங்கள் வரை நிறையவே பதில் இல்லாமல் நிற்கின்றனவே ,
உமது பதில்கள் உம்மை ஒரு வெட்கம் அற்றவராகவே நிருபிக்கின்றன .இப்படி பதில் எழுதுவதை விட ஓடிபோயிருந்தால் மானமாவது மிஞ்சும்.[அது இருக்கிறதோ இல்லையோ என்பது வேறு விஷயம்].
அட இப்னு மசிரு சாரி …….. இப்னு பசிர் ,
கழுத கெட்டா குட்டிசுவரு நிலா கெட்டா இப்னு மசிரு.
எப்படியோ எனக்கு ஒரு நல்ல கூட்டாளி கெடச்சிட்டான்.
இப்படிக்கு
நரேந்திர மோடி .
:-))
மனிதநேயத்திலும் கர்ப்பிணி பெண்களை காப்பதிலும் முகம்மதுவை அடித்துகொள்ள ஆள் கிடையாது.
Narrated Abdullah Ibn Abbas: A blind man had a slave-mother who used to abuse the Prophet (peace be upon him) and disparage him. He forbade her but she did not stop. He rebuked her but she did not give up her habit. One night she began to slander the Prophet (peace be upon him) and abuse him. So he took a dagger, placed it on her belly, pressed it, and killed her. A child who came between her legs was smeared with the blood that was there. When the morning came, the Prophet (peace be upon him) was informed about it.
He assembled the people and said: I adjure by Allah the man who has done this action and I adjure him by my right to him that he should stand up. Jumping over the necks of the people and trembling the man stood up.
He sat before the Prophet (peace be upon him) and said: Apostle of Allah! I am her master; she used to abuse you and disparage you. I forbade her, but she did not stop, and I rebuked her, but she did not abandon her habit. I have two sons like pearls from her, and she was my companion. Last night she began to abuse and disparage you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.
Thereupon the Prophet (peace be upon him) said: Oh be witness, no retaliation is payable for her blood.
Abu Dawud 38:4348
————
A blind man had a freed concubine (umm walad) who used to insult the Prophet (peace and blessings of Allah be upon him) and say bad things about him. He told her not to do that but she did not stop, and he rebuked her but she did not heed him. One night, when she started to say bad things about the Prophet (peace and blessings of Allah be upon him) and insult him, he took a short sword or dagger, put it on her belly and pressed it and killed her. The following morning that was mentioned to the Messenger of Allah (peace and blessings of Allah be upon him). He called the people together and said, “I ask by Allah the man who has done this action and I order him by my right over him that he should stand up.” The blind man stood up and said, “O Messenger of Allah, I am the one who did it; she used to insult you and say bad things about you. I forbade her, but she did not stop, and I rebuked her, but she did not give up her habit. I have two sons like pearls from her, and she was kind to me. Last night she began to insult you and say bad things about you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.” Thereupon the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Bear witness, there is no blood money due for her.”[31]
Sunan An-Nasa’ee, 4081 – classed as saheeh by al-Albaani
See also Sunan Abi Dawood 4361
———–
Qubaysah ibn ‘Uqbah told us: Yoonus ibn Abi Ishaaq narrated to us, from Abu Ishaaq, that ‘Abd-Allaah ibn Ma’qil said: Ibn Umm Maktoom stayed in the house of a Jewish woman in Madeenah, the paternal aunt of an Ansaari man. She was kind to him, but she annoyed him with regard to Allaah and His Messenger, so he took hold of her and hit her and killed her. The matter was referred to the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) and he said: By Allaah, O Messenger of Allaah, she was kind to me, but she annoyed me with regard to Allaah and His Messenger, so I hit her and killed her. The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “May Allaah cast her away. There is no recompense for the shedding of her blood.”[32]
Ibn Sa’d in al-Tabaqaat al-Kubra (4/210)
இப்படிப்பட்ட கொடூர மதி படைத்தவனின் பின்னால் செல்பவர்கள் கொலைவெறி தாண்டவம் ஆடுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
வழிப்பறி கொள்ளைக்காரனையும், கொலைகாரனையும், மாபியா தாதா போன்றவனையும் கடவுள் பேசினார் என்று நம்பி இம்மக்கள் ஏமாறுகிறார்களே என்பதுதான் வருத்தப்பட வைக்கிறது.
இவர்கள் மற்றவர்களை பார்த்து இருட்டில் இருக்கிறார்கள், சாக்கடையில் இருக்கிறார்கள் என்று பேசுவதுதான் மூளைச்சலவையின் உச்சகட்டம்..
நிலா,மற்றொரு பதிவில் இந்த சுட்டி வெளியாகி உள்ளது இருந்தாலும் நான் அதை கண்டு கொள்வதில்லை.உங்கள் மதத்தை பற்றி இப்படி ஒரு அவதூறு சொன்னவர்களுக்கு பதிலடி கொடுத்து அவர்களை திக்கு முக்காட வைக்காமல் இஸ்லாத்திலே வீணாக உங்கள் அற்ப ஆயுசை செலவிடவேண்டம் என்பது என் அன்பான வேண்டுக்கோள் .வாருங்கள் நாமெல்லாம் சேர்ந்து இந்த நாத்திகர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம்
பிராமணபெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்.
பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.
அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.
கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 47.
மநு தர்மப்படி எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா?
என் காலத்தில் என் கண்ணெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன.
அவர்களை எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?
அப்படியென்றால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரமாண்டமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும். அதுவும் மநுமணம் செய்துகொண்டதாக , அதாவது பால்ய திருமணம் செய்துகொண்ட ஜோடியாக இருக்கவேண்டும். அல்லவா?
சரி, இதோ உதாரணம். ராமர் சீதா தெரியுமா? அவர்கள்தான்.சற்று முன்பே சொன்னேனே. பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு… கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் என்று. அதேபோல்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிருந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள்.
கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார்.
“ராமரை சீதை பார்த்த போது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.
சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து, கீழே உருண்டோடுகின்றன. ராமனை… இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார்.
அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம்.
கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால், வால்மீகி ராமாயணத்தில்,
தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா
என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி.
விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது.
கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.
வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
“அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.
இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.
‘நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”
ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?
குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை… என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கிறது என்பது புரிகிறது. உதாரணம் சொல்லியாகிவிட்டது.
கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்
“மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்”
என்ற Trade Mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?
“அடியே இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் – உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.” இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்.
நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை – தால் அதனால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.
அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரியவேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான்.
மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அடுத்ததாக பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?….
வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும் சம்ஸாதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது.
பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.
அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 46. மகளுடைய மாதவிடாயை அருந்து????. எட்டு வயதுக்குள் உன் மகளை திருமணம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் இருக்கும் காலம் வரை..மகளுடைய மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.
பகுதி 48-1 பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.
Posted by tamilan at 8:30 AM
நிலா இந்த சுட்டியை கொடுத்தவனுக்கு சரியான பதிலடி கொடுங்கள்
=== புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ===
….
இப்ராஹிம்,
இது போன்றவைகளுக்கு இந்த பதிவிலேயே பதில் எழுதியிருக்கிறேன். பார்ப்பனர்கள் தாங்களாக எழுதிக்கொள்ளும் எதற்கும் நான் ஜவாப்தாரி அல்ல. நீங்களும் இந்தியாவில் இருக்கிறீர்கள். இப்படி உளறுகிறீர்கள். அதற்காக இந்தியாவின் வெளியே இருக்கும் ஒருவர் ஏன் உங்கள் நாட்டு இந்தியர் இப்படி உளறுகிறார் என்று என்னிடம் கேட்டால் நான் ஜவாப்தாரியா?
மேலும் இது மகா புளுகுகள் நிறைந்தது. அக்னிஹோத்ரம் தாத்தாசாரியார் பிச்சை எடுத்துகொண்டிருந்தபோது அவர் பெயரை போட்டு காசு பண்ன விரும்பிய திக வீரமணியும், நக்கீரனும் எழுதிகொண்டு அவரது பையன்களிடம் காசு கொடுத்து பிரசுரித்துகொண்டார்கள். இதில் வரும் சமஸ்கிருத வசனஙகளுக்கு அந்த பொருளே கிடையாது. இதெல்லாம் உட்டாலக்கடி.
மேலும் சீதாபிராட்டிக்கு பால்யகாலத்தில் நடந்திருந்தாலும், அது ஒரு அறுவது வயதுகிழவனுக்கு நடக்கவில்லை. அது உங்கள் மண்டையில் ஏறுகிறதா என்று தெரியவில்லை.
இப்போதும் உறவினர்கள் என் பிள்ளையை உன் பிள்ளை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று குழந்தை பருவத்தில் பேசுகிறார்கள். அது என்ன அரபி கொள்ளைக்கார 60 வயது கிழவன் ஆறுவயது குழந்தையை கற்பழித்தது போலவா ?
இப்ராஹிம் அவர்களே,
தாத்தாச்சாரியார் எழுதியதாக இருப்பதெல்லாம் சுத்த டுபாக்கூர். மேலும் இதெல்லாம் வேதத்தில் இருக்கிறது என்றும் அவர் சொல்லவில்லை. வேதம் உபநிடதம், ஆகியவற்றை நேரமிருந்தால் படித்து பாருங்கள். வேதமும் உங்களுக்கு புரியாது. ஆகவே உபநிடதம் படித்து பாருங்கள்.
அதில் எங்கேயாவது இந்த வயதில் பெண்னை திருமணம் செய்து தரவேண்டும் என்றோ அல்லது இப்படி நின்று ஒன்னுக்கு போகவேண்டும் என்றோ ஒரு சட்டத்தையும் பார்க்கமுடியாது. அவை உண்மையான ஆன்மீக விஷயங்களை மட்டுமே பேசும்.
அரபிய தாதா என்னைப் பற்றி ஒரு கர்ப்பிணி பெண் கேவலமாக பேசினாலும் அவளது வயிற்றை கிழித்து கொன்றாலும் தப்பில்லை என்று சொல்கிறானே?
அதனை பற்றி சிந்தியுங்கள். பிறகு பார்ப்போம்.
நிலா,
எல்லாம் பார்பன சதியா.? ராமரு எப்போ பொறந்தாரு என்றால் மட்டும் ஆளையே காணுமே உங்கள…
ராமனின் புஸ்பக விமானமும்,முகம்மதுவின் புராக்விமானமும்,முருகனின் மயில் வாகனமும் கர்பனை கலவை
உலகம் தட்டை என்று அரபி மொழியை தாய்மொழியாக கொண்ட ஈராக்கியர் குரானின் அடிப்படையில் அரபி மொழியிலேயே விளக்குகிறார்.
இதனை அவர் சொந்த கருத்தாக சொன்னால், அது முஸ்லீம்களின் கருத்தும் அல்ல, இஸ்லாமின் கருத்தும் அல்ல.
அதனை வைத்து இப்ராஹிமிடம் ”என்னய்யா ஒரு முஸ்லீம் உலகம் தட்டை என்று சொல்கிறாரே, அவருக்கு பதில் சொல்லிவிட்டு வாருங்கள். பிறகு பார்க்கலாம்” என்று சொன்னால், அது என் தவறு.
ஒரு முஸ்லீமின் கருத்து இஸ்லாமின் கருத்து அல்ல. அதே போல தனிப்பட்ட முறையில் வேத உபநிடத அடிப்படை இல்லாமல், பார்ப்பனர்கள் எழுதிகொள்வதெல்லாம் இந்துமததின் கருத்து அல்ல.
ஆனால், அவர் குரானின் அடிப்படையில், குரானில் இப்படி சொல்லியிருக்கிறது, ஹதீஸில் இப்படி சொல்லியிருக்கிறது. ஆகவே உலகம் தட்டை என்றுதான் குரான் சொல்லுகிறது. ஆகவே உலகம் தட்டை என்று சொன்னால், அது இஸ்லாமிய கருத்தாக ஆகிவிடுகிறது. அதற்கு இப்ராஹிம் ஜவாப்தாரி.
முகம்மது அழகிய முன்மாதிரி, அவர் நின்று ஒன்னுக்கு போனால் அதுமாதிரிதான் எல்லா முஸ்லீம்களும் ஒன்னுக்கு போகவேண்டும் என்று சொல்லும் இப்ராஹிம், முகம்மதை கர்ப்பிணி பெண் த்வறாக பேசினாலும் வயிற்றை கிழித்து கொல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள்?
ஆகவே இது எப்படி மனிதநேயம் என்று இப்ராஹிமும் இதர புளுகுநேயர்களும்தான் விளக்க வேண்டும்.
இந்த அடிப்படை தெரியாமல், மதுவும் நாத்திகனும் பெரிய புடுங்கி மாதிரி ராமன் எந்த வினாடி பொறந்தான் என்று பெரிய கேள்வி கேட்டுவிட்டமாதிரி பிலிம் காட்டுவதில் என்ன பயன்? முன்னரே சொல்லிவிட்டேன். அவர் பிறந்தார். வாழ்ந்தார். அது வரலாறு என்னும் இதிஹாசம். அது நடக்கவில்லை. அது வெறும் கற்பனை, காவியம் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளுங்கள். எனக்கு அது பற்றி கவலை இல்லை. அது கற்பனை காவியமாகவே இருந்தாலும் அந்த காலத்தில் என்ன நடைமுறை இருந்ததோ அதனைத்தான் காவியமாக எழுதி வைத்திருக்கமுடியும். அந்த காவியத்தில் இராவணன் இரவு நேரத்தில் போர் புரிவதில்லை. மகாபாரதத்தில் மாலை கவிழ்ந்ததும் போர் நிறுத்தப்படுகிறது. போரில் காயமடைந்தவர்களுக்கு இரு தரப்பும் மருத்துவ உதவி அளிக்கிறது. இதுதான் அந்த கால நடைமுறை. அந்த கால நடைமுறை இரவிலும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கி அழிக்கலாம் என்று இருந்திருந்தால், அது காப்பியமாக இருந்தாலும் அது அங்கே இடம் பெற்றிருக்கும்.
நான் இப்ராஹிமையும் மனிதநேயனையும் இப்படி கேள்வி கேட்கும்போதெல்லாம், மது நாத்திகன் என்ற பெயரில் இந்துமதத்தை கேள்வி கேட்பது போல திசை திருப்பும் வேலையை செய்துகொண்டு இஸ்லாமை காப்பாற்ற முயற்சி வேறு!
அன்பு நண்பா நிலா ,
பிராமணர்களை ஒரு போதும் குறை கூறாதே . எந்த பிராமணன் இடையில் வந்து வேதத்தில் இடை சொருகல் செய்தான் என்று உன்னால் கூற முடியுமா? வேதங்களை உருவாக்கியதே பிராமணன் எனும் போது நீ அதை ஏற்று கொள்வதாக இருந்தால் முழுமையாக ஏற்று கொள். இல்லையென்றால் அதை முழுமையாக வெறுத்து விடு. கடவுளின் சித்த படி போன ஜென்ம பலன் படிதான் நீ சூத்திரனாக பிறந்தாய். அந்த உண்மையை ஏற்று கொள் . இஸ்லாமியர்களுக்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில் பிராமணியத்தை குறை கூறுவதை விட்டு விடு. வேதத்திற்கு நாங்கள் பொறுப்பெடுத்து கொள்கிறேம் . நீ அதை பற்றி கவலை படாதே.
அன்புடன் ,
ராம கிருஷ்ணன்
ஹேஹ்ஹெஹே…. ஒருவழியா ஒரு முஸ்லீமை இந்துவா ஆக்கிட்டேன்யா..
முல்லாவோட தொப்பி தெரியுது. கொஞ்சம் மறைத்துகொண்டு வரவும்.
அடுத்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
—
எந்த ஒரு இந்துவும் செய்யாத தவறை செய்திருப்பதை கூட தெரிந்துகொள்ளாமல் உளறுவதற்கு முன்னால் வேதங்களை பற்றி தெரிந்துகொள்ளவும்.
பெட்டர் லக் அட் நெக்ஸ்ட் டைம்.
நிலா,
ராமரு கதையை வரலாறு என்றும் சொல்கிறீர்கள், அதனால் தான் கேள்வி எழுகிறது வரலாறு என்றால் ராமாறு எந்த ஆண்டு பொறந்தாரு. இந்த அடிப்படை கேள்விக்கு பதில் அளிக்க வக்கில்லாத நீங்கள் மற்றவரை புடிங்கி என்கிறீர்கள். இஸ்லாமை போல் இல்லை இந்து மதம் என்பது போல் பேசுவதால் தான் கேள்வி எழுகிறது. உலகம் என்பது தட்டை என்கிற நம்பிக்கை எல்லா மதங்களுக்கும் உள்ளது தான். அறிவியல் துணை கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் உருண்டையாக உலகத்தில் காட்டி ஏமாற்ற முடியாது.
இந்து மதம் இந்திய பார்ப்பனீயம் ,இஸ்லாம் அராபிய பார்ப்பனீயம்..
மது,
ராமர் எந்த ஆண்டு பொறந்தால் உங்களுக்கு என்ன? ராமர் இந்த ஆண்டு பிறந்ததாக எல்லோரும் ஒப்புகொண்டுவிட்டால், நீங்களும் ஒப்புகொண்டுவிடுவீர்களா?
அது சரி, முகம்மது எந்த ஆண்டு பிறந்தவர்? அவர் உண்மையிலேயே பிறந்தவரா அல்லது அரபு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரமா?
http://en.wikipedia.org/wiki/The_Quest_for_the_Historical_Muhammad_(Ibn_Warraq)
சுமார் 15 ஆய்வாளர்கள் முகம்மது என்று ஒரு நபரே இருந்ததில்லை என்று சாதிக்கிறார்கள். குரான் ஹதீஸ் எல்லாமே ஒரு அரபியகுழுவின் உருவாக்கம் என்று சொல்கிறார்கள்.
ராமரை பற்றி கேட்பதற்கு முன்னால், முகம்மது என்ரு ஒருவர் இருந்தாரா என்று கேட்டு உதை வாங்கிகொண்டு வாருங்கள். பிறகு பார்ப்போம்.
அன்புள்ள இப்ராஹிம்
//இஸ்லாத்திலே வீணாக உங்கள் அற்ப ஆயுசை செலவிடவேண்டம் என்பது என் அன்பான வேண்டுக்கோள் .வாருங்கள் நாமெல்லாம் சேர்ந்து இந்த நாத்திகர்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவோம்//
எனக்கு நாத்திகர்களிடம் ஒரு பிரச்னையும் இல்லை. இந்துக்கள் நாத்திகர்களை கொல்லப்போவதுமில்லை. நாத்திகர்கள் இந்துக்களை கொல்லப்போவதுமில்லை.
ஆனால், நாத்திகர்கள் இஸ்லாமியரையும் கொல்லபோவதாக கூறிக்கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமியர்கள்தான் நாத்திகர்களையும், இந்துகக்ளையும், கிறிஸ்துவர்களையும் இதர தெய்வங்களை வணங்குபவர்களையும்,, வழி தவறியதாக ஒருவர் மற்றவரை சொல்லிகொள்ளும் முஸ்லீம்களையும் கண்ட இடத்தில் கொல்லவேண்டும் என்று அலைகிறார்கள்.
இந்துக்களுக்கு நாத்திகர்களிடம் ஒரு பிரச்னையுமில்லை. அவர்கள் ராமனையோ சிவனையோ நம்பினாலும் நம்பாவிட்டாலும், இந்துக்களின் கருத்துப்படி அவர்கள் அறநெறியில் வாழ்க்கையை வாழ்வார்களேயானால், அவர்களுக்கு நற்கதி, அறநெறியற்ற முறையில் வாழ்வார்களேயானால், அவர்களுக்கு தீயகதி. அது அது அவர்க்ள் பிரச்னை.
இந்துக்களின் நம்பிக்கை இதுதான். ஒருவன் முந்திய தீய வினைகளின் மூலம் முந்தைய தீய வாழ்க்கையையும் துரதிர்ஷ்டமான நிலையையும் பெற்றுகொண்டாலும், . இறைவனை நாடினால், முந்தையை தீவினைகளை அறுத்து நல் வாழ்க்கையை தருவான்.
ரஜினிகாந்த் சொல்வது போல, உழைப்பும் சிவனின் அருளும் இருந்தால், நல்லது நடக்கும். சிவனை வணங்காமல் தினந்தோறும் கல்லெறிந்துகொண்டிருந்த சாக்கியரை (பௌத்தரை) கூட தினந்தோறும் சிவனையே நினைத்துகொண்டிருந்த காரணத்தால், அருள்பாலித்தவர்.
ஆகவே நாத்திகர்களைப் பற்றியும், சிவனையும் ராமனையும் அவதூறு செய்பவர்களைப் பற்றியும், வேண்டுமென்றே வேதங்களை திரித்து பொருள் சொல்லிக்கொண்டு சுகம் காண்பவர்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுவதில்லை.
நிலா,
ராமரோ, முகமதோ – இருவராலும் மனித குலத்துக்கு எந்த நன்மையையும் இல்லை. முகமதை விமர்சித்துவிட்டு ,ராமருக்கு சொம்பு தூக்குவதால் தான் கேள்வி எழுகிறது. பதில் தெரியாவிட்டால் தெரியவில்லை என்று ஒப்புகொள்ளலாமே .
.////ரஜினிகாந்த் சொல்வது போல, உழைப்பும் சிவனின் அருளும் இருந்தால், நல்லது நடக்கும்////
மீனா எனக்கு மகளாக நடித்தார் இப்போது காதலியாக நடிக்கிறார் இனி எனக்கு அம்மாவாகவும் நடிக்கவேண்டும் என்று கூறிய மாமனிதர்.அறுபது வயாதாகியும் பதினாறுகளோடு பகிரங்கமாக கட்டிபிடித்து ஆடும் வெட்கங்கெட்ட ஜென்மங்களை முன்மாதிரியாக காட்டியுள்ளார் நண்பர் நிலா.
.உங்களுக்கு பதில் அளிக்க நிறைய விசயங்கள் உள்ளன இருப்பினும் இப்போதைக்கு இது போதும்
இப்ராஹிம்,
//அறுபது வயாதாகியும் பதினாறுகளோடு பகிரங்கமாக கட்டிபிடித்து ஆடும் வெட்கங்கெட்ட ஜென்மங்களை//
அடேங்கப்பா, உங்களது அறச்சீற்றம் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது அந்த ஆளாவது நடிக்கத்தான் செய்கிறான். அதுவும் மேஜரான பெண்களோடு.
இதே அறச்சீற்றத்தை அறுபது வயது கிழவன் ஆறு வயது குழந்தையிடம் தொடைவேலை செய்தபோது அல்லவா வந்திருக்க வேண்டும்?
இந்த ஆளை ஏன் வெட்கம் கெட்ட ஜென்மம் என்று நீங்கள் கூறவில்லை?
நிலா ஆதார மற்ற செய்திகளை மீண்டும் மீண்டும் கூறுவது ஓன்று உமக்கு இஸ்லாத்திற்கு எதிரான் வெறி பிடித்திருக்க வேண்டும்? இல்லை எப்படியாவது என்னை கோப படுத்த வேண்டும்?இதற்க்கு பெயர் ராமனிசமா?இந்துத்துவமா?இல்லை பால் தாக்கரே இசமா?
ஹா ஹா..
ஆதாரமற்ற செய்தியா? எது?
மேலே ஹதீஸ்களையும் பத்வாக்களையும் போட்டிருக்கிறேன்.
எல்லோரும் படித்துகொண்டுதான் இருக்கிறாரக்ள்.யார் ஆதாரமற்ற செய்திகளை கூறுவது என்று படிப்பவர்கள் அறிவார்கள்.
nilaஎவரோ ஒருவர் கொடுத்த பதவாவை ஹதித் என்றோ ஆதாரம் என்றோ சொலமுடியாது
ஹலோ மனிதநேயன்,
என்னை இனம் கண்டுவிட்டீர்களே.…! அதுபோகட்டும். எனது தொகுப்பிற்கு பதில் சொல்லும் உத்தேசம் இருக்கிறதா? இனம் இனத்தோடு சேர்ந்து விட்டதாக இப்பொழுது ஒப்பாரி வைத்து பயனில்லை நண்பரே. பாவம்…! எனது தொகுப்பை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியால் TNTJ, TMMK, Read Islam,சத்தியமார்க்கம். …, இஸ்லாம்கல்வி என அல்லாடிக் கொண்டிருக்கிறார்i. உங்கள் பீஜேவும், அப்துல் நாசரும் அவருக்கேனும் பதில்கூறுவார்களா?
தஜ்ஜால்
இது ஒரு புது கிறுக்கு
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க: http://ihsasonline.blogspot.com/2011/05/blog-post.html
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளதுபார்க்க
http://ihsasonline.blogspot.com/2011/05/blog-post.html
அருளாளனின் அடிமை அவர்களே,
//நபிகள் நாயகம் செய்ததால் நாங்கள் தாடி வைக்கிறோம், தொப்பி அனிகிறோம், உட்கார்ந்து சிறுநீர் கழிக்க்றோம் என்று. சரி தான் எங்கள் தலைவர்(நபிகள் நாயகம்) சொல்லித்தந்த வழிமுறையில் .//
நீங்கள் 25 முதல் 30 வயது உட்படவரயிருந்தால் 25வயது வாலிபர் ஒருவர் 40 வயது விதவையை மணமுடிக்கவேண்டும் என்ற நபி வழியின் படி நீங்களும் 40 வயது பெண்ணை (விதவை அல்லது மணவிலக்கு பெட்ரவர் அல்லது கொடுத்தவர் ) மணமுடியுங்கள்.அல்லது உங்கள் 10 வயது மகளையோ , சகோதரியையோ 50 வயதான ஒருவருக்கு மணமுடித்து கொடுங்கள். அப்போழ்து நாங்கள் நம்புகிறோம் . நீங்கள் உண்மையில் நபிவழியை கடைபிடிப்பவர் என்று. இருப்பினும் நாங்கள் அந்த இள வயது பெண்ணின் கோணத்தில் இருந்து ஆராய்வோம். ( இதில் செங்கொடி உட்பட கடவுள் மறுப்பாளர் எவறேனுக்கும் மருப்ரிந்தால் தெரிவிக்கவும்.இங்கு பன்மைஇலேயே குறிப்பிட்டு இருக்கிறேன் )
intha thalaththil tamilil type seivatharkkaana vasathi seithal nandraha irukkum
நண்பர் அஸாருதீன்,
வலதுபக்கம் இருக்கும் தமிழ் எழுதி என்பதை சொடுக்கி தனி சாளரத்தில் திறந்து வைத்துக் கொண்டு தட்டச்சு செய்து பதிவிடுங்கள்
greatindian
STUPPID NILA,DONKEY NILA MOHAMMAD NABI VALNTHA KALATHIL APPOTHAIYA MAKKAL PALA PENGALUDANUM VIBACHARAM ANDRU MANAM PONA POKKIL VALNTHU KONDU IRUNTHANER.AVARGALAI THIRUTHI,KUDUMBAM ANDRA KATTUPADANA VALKAI MURAI MURAIPADUTHIYAVARGAL MOHAMMAD NABI.MELUM PENGALAI ADIMAI PDUTHUVATHU ANBATHU ANTHAKALA NADAI MURAI.PINBU ATHAI MURAIPPADUTHIYATHU MOHAMMAD NABI.
MELUM ISLAM THANTHA PENGALIN URIMAIGALAI PARTHE KARUNATHI PENGALUKKU ,PARENTS SOTHIL URIMAI ANDRA SATTAM KONDU VANTHAR.MELUM VITHAVAI KALIN THIRUMANATHAIYUM AATHARITHATHU ISLAM.MELUM KULANTHAIGALIN THIRUMANATHAIYUM THADUTHATHU.
NILA ,NEE MATRUM SANKER&SENKODI ANDRA PEYARIL MAKKALI SIXTHSENSE ILLATHA IDIATTUM ANNODU VIVATHATHUKKU VARA READY ANDRAL UDANAYE ANKKU THERIYA PADUTHAVUM.ATHAIP PATRIYUM THERIYAMAL DON’T SPEAK LIKE MENTAL……
I GIVE TO CHALLANGE TO ALL COMMUNISTS&NATHIGARGAL.
NILA UUU SHOULD ACCEPT MY CHALLENGE…DAMMIT…
I WILL WAIT FOR YOUR REPLY…
NILA UNAKKU VENUM ANDRAL http://www.online pj.com,andra website poye athil ulla pala vitha thalaipugalil ulla vivathangalai kettupar.don”t be bluuf….,immiadiately contact to me through my mail. greatind@ymail.com
greatindian
nila islam gents kku avvalavu urimai ullatho athepol islam pengalukkm urimai koduthullathu.antha pennum virumbinal than husband i diverce seyyalam.education urimaiyum islathil pengalukku samaga ullathu.melum pen kulanthaigalai antha muslimum kolvathillai.melum ovvoru muslimum than parents i paramarikka kadamaiullavan.kanndippaga intha rules galai follow seythy aagavendum.
dear nila u &senkodi &sanker islathai patriya sariyana unmaiyana visayangalai theriyamal pesukindirgal.ungalukku thevcai andral nan ready ,muthalil oruvisayathaip patri muthailil nandraga therindu kondu pesavendum.neegal 3 perum nalla valikku vara udanaye ankku mail pannavum…..greatind@ymail.com
முதலில் செங்கொடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
உங்களைப்போன்றோர்களினால்தான் இஸ்லாம் இன்றளவும் அதிகமான மக்களிடம் சென்றடைந்து கொன்டிருக்கிறது.
என்னைப் போன்றோருக்கு தேடுதலையும் அதிகமாக்கிக் கொன்றிருக்கிறது.
ஆம்,
போன நூற்றான்டு வரை குரானில் கூறப்பட்ட விண்வெளிக்கு மனிதன் செல்ல முடியும் என்பதும்,பூமியின் வடிவம் வான்கோழியிமன் முட்டை வடிவம் என்பதும் விசித்திரனமானவயே.ஆனால் அவை இன்று வெளிப்பட்டு விட்டதுவே.
அது போன்று இவையும் வரும் காலங்களில் உறுதிப்படுத்தப்படலாம்
உங்கள் பணியை தொடருங்கள்.
அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி விடையளிப்பதே இஸ்லாத்தின் வெற்றி.
பர்தாவை எதிர்த்த பிரிட்டனில் இன்று வருடத்திற்கு 50,000 பேர் இஸ்லாத்தில்
இனைகிறார்கள்.அதில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள்.(பாரக்க The Hindu 24/5/13)
உங்களைப் போல் ஆய்வாளர்கள் இஸ்லாத்திற்கு வராமல் போன சரித்திரமில்லை.
நன்றி
ellam sarithan muhammed tirumba boomikku varumboluthu ulagam urundayaga iruppathai paarthiruppare ? athai patri yaridamavathu sonnathaga hadith unda ?
ahamed,
quranai ninaitthai pullarikkirathu ponggal…
brother aasik senkodi please tell kuraan hadhis books in tamil books i want to read i want to download this books where is its available please give the link i want your reply
you want to study about islam? please visit
நண்பர் ஷகீல்,
நான் எழுதியிருப்பது குறித்து ஏதும் கருத்து கூற விரும்புகிறீர்களா? கூறுங்கள் பரிசீலிப்போம். வேண்டுமென்றால் உங்கள் ஆன் லைன் பீஜே வையும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். மற்றப்படி ஆன் லைன் பீஜேவில் போய் இஸ்லாத்தை தெரிந்து கொள்வதற்கு நான் ஒன்றும் முட்டாளோ, அடிமையோ அல்ல.