கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்  உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ளனர். 2006 தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும், மேற்புறம் பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால், தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது … கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 7 ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு ஹதீஸ் குறித்த இந்த கட்டுரையில், அது எந்த காலகட்டத்தில் எப்படி தொகுக்கப்பட்டது என்பது குறித்த சுருக்கமாக விவரித்திருந்தேன். அதை நண்பரும் ஒப்பியிருக்கிறார். ஆனால் ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்தவற்றில் மட்டும் அவரின் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹதீஸ்கள் என்பது அவை தொகுக்கப்படுவதற்கு முன்னர் வரை செவி வழிச் செய்திகள் தான். முகம்மது இறந்து நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹதீஸ்களை தொகுக்கும் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!

தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும்.  அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி … சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 16 "டிராட்ஸ்கியின் கொள்கைத் திட்டத்திலும் எண்ணங்களிலும் ஏற்பட்ட இன்னொரு மாற்றமா அல்லது வேறு காரணமா என்பதை நான் அறியேன்" லெனின்  1917இல் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பும், டிராட்ஸ்கிய குழுவுக்கும் லெனினின் தலைமையிலான கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியான முரன்பாடுகள் நீடித்திருந்தன. 1918 துவக்கத்தில் புரட்சி நடைபெற்று சிறிது காலத்தில் ஜெர்மனிய சோவியத் சமாதான உடன்பாடு தொடர்பாக, கடுமையான மோதல் எற்பட்டது. கட்சியில் இதுபற்றி முரண்பாடுகள் … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 16-ஐ படிப்பதைத் தொடரவும்.

தியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்!

இருபதாண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை ஏமாற்றிய மேற்கத்திய பொய்ப்பிரச்சாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. 1989 ல், சீனாவின் தலைநகரான பெஜிங்கில் நடந்த மாணவர் போராட்டத்தை அடக்கிய போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டது. பெய்ஜிங்கின் மையப் பகுதியான தியன் அன் மென் சதுக்கத்தில் இரத்தக் களரி ஏற்பட்டுள்ளதாகவும், சீன இராணுவம் மூவாயிரத்திற்கும் குறையாத மாணவர்களை கொன்று குவித்ததாகவும் வெளிவந்த செய்திகள் பொய்யானவை. தியன் அன் மென்னில் படுகொலை நடக்கவில்லை என்ற உண்மையை அம்பலப் படுத்தியுள்ள, விக்கிலீக்ஸ் கேபிளின் சாராம்சம் … தியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.