அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா

 

எல்லா மதங்களையும் போலவே இஸ்லாமும் ஆணாதிக்க மதமே. அதன் விதிமுறைகளும், சட்ட திட்டங்களும் அதை தக்கவைக்கும் விதத்திலேயே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. பெண்களை கண்ணியப்படுத்துவதாக கூறப்படும், இஸ்லாமிய ஆணாதிக்கத்தின் குறியீடாக இருக்கும் புர்கா கலாச்சாரத்தை கொண்டே இதை பார்க்கலாம்.

 

புர்கா, பர்தா, துப்பட்டி, ஹிஜாப் என்று பலவிதங்களில் அழைக்கப்படும் பெண்களுக்கான மேலதிக ஆடை தமிழ்ச் சூழலில் 80களுக்கு முன்பு வெகு சில ஊர்களில் மட்டும் மரபாக இருந்தது. கடுங்கோட்பாட்டுவாத இயக்கங்கள் செயல்படத் தொடங்கியதன் பின்னர் தற்போது அனைத்து இடங்களிலும் இந்த ஆடைமுறை இஸ்லாமியப் பெண்களின் மீது ஒரு உறுப்பாகவே படிந்து விட்டது. எந்த அளவுக்கு இந்த ஆடை பெண்களுக்கான கண்ணியமாக இஸ்லாமியர்களால் திணிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. இதை இஸ்லாமியர்கள்  இரண்டு விதங்களில் எதிர்கொள்கிறார்கள். ஒன்று. புர்காவை மறுப்பவர்கள், மேற்குலகின் ஆகக் குறைந்த ஆடை அணிவதையே சுதந்திரமாக கொண்டிருக்கும் போக்கிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது. இரண்டு, புர்காவை மறுப்பவர்கள், பெண்களுக்கு வேறு என்ன அளவில் ஆடை அணிய வேண்டும் என்பதை வரையறுத்திருக்கிறார்களா? என்பது.

 

பெண்களுக்கான இந்த மேலதிக ஆடைய அணியச் செய்வதற்கு கூறப்படும் காரணம், ஆண்களின் காமப் பார்வையிலிருந்து பெண்களை காக்கும் என்பது தான். பெண்ணுக்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம். ஆண் செய்யும் இந்த குற்றம் நிகழாமல் இருக்க வேண்டுமென்றால் பெண் மேலதிக கருவிகளுடன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சாரம்சத்தில் பெண்ணை சக மனிதப் பிறவியாக எண்ணாததன் வெளிப்பாடு தான். எவ்வாறெனின், குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது. உடலுறுப்புகள் வெளித்தெரியும்படி ஆடையணிவது ஒரு ஆணை பாலியல் குற்றத்திற்கு தூண்டும் எனக் கூறி குற்றத்தின் பங்களிப்பை பாதிக்கப்படும் பெண்களிடமும் பகிர்வது.

 

பொதுவாக பாலியல் உறவு என்பது இருபாலாரும் விரும்பி ஈடுபடுவது. மனைவியாயியினும், வேறு பெண்களாயினும்; முழுவதுமாக மறைத்துக் கொண்டிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும் அவளை வற்புறுத்துவது ஆணுக்கு உரிமையல்ல. ஒரு ஆண் மேலாடையின்றி இருந்தான் என்பதால் அவன் முதுகில் சுவரொட்டியை ஒட்டிவிட்டு; சுவரொட்டி ஒட்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் நீ முதுகை மறைத்திருப்பது உன்னுடைய கடமை என்றால், அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அவ்வளவு அபத்தம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் தங்களை கவசமிட்டு மறைத்துக் கொள்ள வேண்டுமென்பது.

 

பணமோ, பொருளோ திருடப்படாமல் தடுக்க வேண்டுமென்றால் அதை பெட்டியில் பூட்டிவைத்து பாதுகாக்க வேண்டும் என்பதைப் போல் பெண்களையும் பார்த்தால்; பணத்தின், பொருளின் மதிப்பு அதன் பரிமாற்ற பயன்பாட்டில் இருப்பதைப் போல் பெண்களின் மதிப்பு அவர்களின் பாலியல் பயன்பாட்டில் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டவர்களாவார்கள். பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.

 

இஸ்லாம் ஆண்களுக்கு ஆடைவரம்பு விதித்திருப்பதைப் போல், பெண்களுக்கும் விதித்திருக்கிறது இதில் அடிமைத்தனம் ஒன்றுமில்லை என்பது முஸ்லீம்களின் பிரபலமான வாதம். இது உண்மையா? குரான் 24:30,31 இப்படி குறிப்பிடுகிறது.

 

மூமீன்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக, அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்….. இன்னும் மூமீன்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது. இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தம் கணவர்கள், தம் தந்தையர்கள், தம் கணவர்களின் தந்தையர்கள், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் பெண்கள், தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது……

 

இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன, முஸ்லீம்கள் கூறுவது போல் ஆண்களுக்கான ஆடை பெண்களுக்கான ஆடை என்று வரையரை செய்வதாக இல்லாமல் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளுடன் குறிப்பிட்ட சில ஆண்களை தவிர ஏனைய ஆண்களுக்கு முன் வரக்கூடாது என்பதையே அந்த வசனம் குறிக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன ஆடை உடுத்தியிருந்தாலும் அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும். இது ஆடை சார்ந்த விசயமா? அடிமைத்தனம் சார்ந்த விசயமா?

 

தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப, உடலை முழுவதும் மறைக்கக் கூடிய சுடிதார் போன்ற ஆடைகளும் ஹிஜாப் போன்றது தான் என்று முஸ்லீம்கள் வைக்கும் வாதத்தையும் மேற்கண்ட வசனம் தகர்த்து விடுகிறது. ஆக உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ, அன்னியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. இது ஆண்களுக்கு இல்லை.

 

முகத்தையும் முன்கைகளையும் தவிர ஏனைய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள் எனும் ஹதீஸை பெண்களின் ஆடைகளுக்கான வரம்பாக காட்டினாலும், முகத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குரான் வசனங்கள், ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.

 

நபியே நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக…….. குரான் 33:59

 

இந்த வசனம் வந்த சூழலை புஹாரி 146 துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கழிப்பிடம் நாடி திறந்த வெளிகளுக்கு இரவு நேரங்களில் பெண்கள் செல்வார்கள். முகம்மதின் மனைவியருள் ஒருவராகிய ஸவ்தா அவ்வாறு வெளியில் செல்கிறார். அப்போது முகம்மதுடன் அமர்ந்திருக்கும் நண்பரான உமர் ஸவ்தாவே உங்களை அடையாளம் தெரிந்து கொண்டோம் என்கிறார். முக்காடிடுவது குறித்த வசனம் இறங்க(!) வேண்டுமென்பதற்காக சப்தமிட்டு இவ்வாறு கூறுகிறார்.அப்போது தான் மேற்கூறிய வசனம் இறங்குகிறது. இந்த ஹதீஸை அறிவிப்பவர் முகம்மதின் இன்னொரு மனைவியான ஆயிஷா. ஸவ்தா முகம்மதின் மனைவியரில் உயரமானவர் எனவே இங்கு முகத்தை மறைப்பது பற்றியே கூறப்படுகிறது என்பது உறுதியாகிறது. ஆக பெண்கள் தங்கள் பாலியல் அங்கங்களை மறைக்கும் வழமையான ஆடைகளால் உடுத்திக் கொள்வது போதாது. ஆடைக்கு மேலாக முகம் உட்பட அனைத்தையும் மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் முடிவு. இதை தற்போதைய நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு ஆடைகளையே ஹிஜாபாக கொள்ளலாம் என்றும், முகத்தை மறைப்பது முக்கியமில்லை என்றும் சமரசம் செய்து கொள்கிறார்கள்.

புர்கா குறித்த பிரச்சனை எழுப்பபட்டால், ஆண்களின் அளவைவிட பெண்கள் அதிகமாக ஆடை அணிய வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள், இதற்கு இஸ்லாம் ஒரு அளவை நிர்ணயித்திருக்கிறது. இதை ஏன் விமர்சிக்க வேண்டும் என்பது போல் திசை திருப்புவார்கள். இங்கு பிரச்சனை ஆடையின் அளவு அல்ல. போதுமான அளவு ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துக் கொண்டு தான் அன்னியருக்குமுன் அல்லது வெளியில் வரவேண்டும் என்பது தான். இதுமட்டுமன்றி புர்கா அணிந்து கொண்டு வாழும் பெண்களின் மூலம் அது தங்களுக்கு படிப்பதற்கோ, வேலை செய்வதற்கோ, பொது இடங்களுக்கு சென்று வருவதற்கோ எந்தவித இடையூறும் இல்லை என்றும், அதை ஆணாதிக்கமாக நாங்கள் கருதவில்லை என்றும் பதில் கூறச் செய்து அதனைக் கொண்டும் இதை எதிர் கொள்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு புர்கா அணியும் பெண்களுக்கு அது இடையூறாக இருக்குமா? அவர்கள் அதை ஆணாதிக்கமாக கருதுகிறார்களா என்பதெல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.

 

பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது. ஆணாதிக்கமும் தனியுடமையும் இணையும் புள்ளியிலிருந்து தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடக்கம் பெறுகிறது. ஆனால் இஸ்லாம் இந்த அடிப்படைகளை காண மறுக்கிறது. பாலியல் குற்றங்களை தனிப்பட்ட குற்ற நடவடிக்கையாக காணும் அதேநேரம் அந்தக் குற்றத்தில் பெண்களையும் இணைக்கிறது. இந்த குற்றங்களுக்கு தீர்வாக புர்காவை முன் தள்ளுகிறது, அதுவும் ஆணின் பலதார வேட்கையை சட்டமாக அங்கீகரித்துக் கொண்டு. அதாவது ஆணின் காமப்பசிக்கு நான்கு மனைவிகள் கூடுதலாக வேண்டிய அளவுக்கு அடிமைகள் என்று அனுமதியளித்துவிட்டு அதற்கு எதிராக பெண்களை புர்காக்களுக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

 

ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புர்கா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா?  ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்?  சுட்டுவிரல் நகம் தெரிந்தாலும் அதையும் பாலியல் நுகர்வோடு அணுக சமூகம் ஆணை அனுமதிக்கும் போது ஒரு ஆடை அதற்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? தன்னின் எந்தப்பகுதி வெளிப்பட்டு ஆணின் பார்வையில் கிளர்ச்சியை தூண்டுமோ என்னும் பதைப்பையே இந்த ஆடைகள் பெண்களுக்கு வழங்குகிறது. அது மேலும் மேலும் ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.

 

பாலியல் குற்றமென்பது பார்வையோடு மட்டும் தொடர்புடையதல்ல. பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க் கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக் கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌து போல் தைத்துக் கொள்ள‌  வேண்டும் என‌த் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

 

அல்லாவின் பெயரை உச்சரிக்கக் கேட்டுவிட்டால் முஸ்லீம்கள் அடையும் புளகம் சொல்லி மாளாது. எல்லாம் அறிந்த, எக்காலமும் அறிந்த கடவுளின் பார்வை பெண்களின் விசயத்தில் இவ்வளவு மட்டமாக இருக்க முடியுமா? ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த ஒரு சராசரி மனிதனின் பார்வையைத் தாண்டி இஸ்லாத்திலோ, குரானிலோ ஒன்றுமில்லை என்பதற்கு இந்த புர்காவை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

71 thoughts on “அல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா

  1. Hi,

    You have mentioned that , if men look women in a wrong way… its wrong with the men not the dressing of women.

    i have a doubt, why do you lock your door in the house, its the fault of the thief, u r not tempting him by keeping ur door opened. so from tommorrow keep ur door opened always.

    do you know how a muslim men wear dress, he has to cover his whole body, how does a sheik dress .. does he wear a shorts or bermuda ??
    use commensense before you write.

  2. //இதை நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை. ஆனால் அது பெண்களுக்கு கண்ணியம் தரும் ஆடை, பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களுக்கு அது பாதுகாப்பை அளிக்கிறது என்று கூறுவது தான் பிரச்சனை.//

    புர்கா பற்றிய விவாதங்களில் நானும் இதையே தான் சொல்லிவருகிறேன், புர்கா அணியாத பிற (மதத்து) பெண்களையெல்லாம் என்னவோ ஆண்களுக்கு வலைவிரிக்கிறவர்கள், கூப்பிடுகிறவர்கள் என்கிற ரேஞ்சுக்கு இவர்கள் எழுதுவது அருவெறுப்பான ஒன்று, மதம் சொல்லுது அணிகிறேன் என்று சொல்லிவிட்டுப் போ, அதை ஏன் பெண்களின் குண நலனாக, கண்ணியம் என்றெல்லாம் பிதற்றுகிறீர்கள் என்றே கேட்டுவருகிறேன்

  3. ஒரு வருடத்திற்கு முன் ஒரு இஸ்லாமிய பெண்மணி தமது தளத்தில் புர்கா அணிந்த பெண்கள் மூடிவைத்த பண்டங்கள் என எழுதி வாங்கி கட்டி கொண்டார், தற்பொழுது இணையம் பக்கமே வருவதில்லை போல, வூட்டுகாரரு வேணாம்னு சொல்லியிருப்பாரு!

    ஆண்களையும், பெண்களையும் சமமாக தான் கடவுள் பார்க்கிறான் என்றால் ஏன் ஒரு பெண் தூதர் கூட இல்லை!?

  4. வணக்கம்
    திரு இராஜாவின் பின்னூட்டத்தை மொழி பெயர்த்து அனைவரும் அதனை படித்து புரிந்து கொள்ள ஏதோ நம்மால இயன்ற ஒரு தொண்டு.
    இதில் அடைப்புக் குறியினுள் குறிப்பிட்ட அனைத்தும் ச()கோ இராஜாவின் கருத்துகளே
    XXXXXXXXXXXXX__________________
    [பதிவில் பெண்ணை ஒருவன் தவறாக பார்ப்பது ஆணின் தவறுதான்,அவள் உடை மீது அல்ல என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
    அப்ப்டி எனில் எனக்கு(ச()கோ இராஜா) ஒரு சந்தேகம் ஏன் உங்கள் வீட்டை பூட்டி வைக்கிறீர்கள்? திறந்து வைத்து திருடனை தூண்டலாமே!
    ஆகவே நாளையில் இருந்து உங்கள் வீட்டை பூட்ட வேண்டாம்!!!!!
    முஸ்லிம் ஆண்களுக்கும் உடையில் கட்டுப்பாடு உண்டு.அரபு ஷேக் எப்படி உடை அணிகிறார்?.அவர் என்ன ஷார்ட்ச் அலது பெர்முடா அணிகிறாரா?

    ஆகவே பொது அறிவை எழுதும் முன் பயன் படுத்துங்கள்!!!!]
    ___________________________-
    ஆகவே
    1.முஸ்லிம் பெண்கள்=வீடு
    வீட்டுக்கு சிந்திக்கும்,தன்னை பாதுகாக்கும் திறன் எவ்வளவு உண்டோ அவ்வளவுதான் முஸ்லிம் பெண்களுக்கு உண்டு
    2. முஸ்லிம் ஆண்களுக்கும் உடை கட்டுப்பாடு உண்டு.நல்ல விஷயம்தான்.இதுவும் ஆண்களின் பாதுகாப்புக்காக என்றே எடுத்துக் கொள்ளலாம்.
    ________________XXXXXXXXXXXXXXXX

    சரி என் கருத்தை சொல்லி விடுகிறேன்

    ஒரு பெண்ணின் உடல்,உடை சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டுமே உண்டு.

    இதில் ஆண்(டவன்) களுக்கு உரிமை கிடையாது!!!.

    மற்றபடி நண்பர் கோவியின் கருத்தே நம் கருத்து!!!!.

  5. //குற்றத்தால் பாதிக்கப்படுபவர்களிடமே அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பையும் வழங்கியிருக்கிறது//

    இதில் என்ன பிழையிருக்கிறது..

    //பெண்கள் சக பிறவிகள் இல்லை, பாலியல் பண்டம் தான் எனக் கூறுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல, கடவுளோ, மதமோ, வேதமோ எதற்கும் உரிமையில்லை.//

    நி நிச்சயமாக..

    //பாலியல் வரம்புமீறல்கள் ஒரு குற்ற நடவடிக்கை. ஆண்களின் அந்த குற்ற நடவடிக்கைக்கு தனியுடமையே காரணமாக இருக்கிறது.//

    பாத்தீங்களா உங்க கம்யூனிச புத்திய காட்றீங்க.. இதிலிருந்து என்ன விளங்குது இதெல்லாம் உங்க கம்யூனிசத்தை பரப்புவதற்கான விளம்பரங்கள்.. ஓக்கேவா!

    //நாங்கள் மதச் சடங்காக அணிகிறோம் என்றால் அதில் விமர்சனத்திற்கு இடம் ஒன்றுமில்லை//

    அப்பிடியில்லன்னு யாரு சொன்னா..?

    //பெண்களை புர்காக்களுக்குள் மறைந்து கொள்ள உத்தரவிடுகிறது. இதை ஆணாதிக்கம் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?//

    இதப்பத்தி சொல்ல தெரியல்ல..

    /ஒரு பாலியல் குற்றத்தை நிகழ்த்தும் துணிவுடனும், சமூகப் பாதுகாப்புடனும் ஆண் இருக்கும்போது அதற்கு எதிராக பெண்ணின் கவச ஆடை என்ன சலனத்தை நிகழ்த்திவிட முடியும்? //

    எல்லா ஆண்களுமே காமகொடூரனத்தான் அலையுறான்னு சொல்றிங்களா.. ஒரு சில அயோக்கியர்களால் எல்லா ஆண்களையும் ஏன் அப்பிடி மதிப்பிட வேண்டும்.. ஏன் நீங்களும் ஆண்தான் நானும் ஆண்தான்.. அப்போ வாங்க யாரையாவது கற்பழிப்போம்.. ஏன்னா ஆண்கள்னாலே பொம்பல பொறுக்கி இல்லயா..

    /ஆணின் காமப் பதுமையாக பெண்ணை மனதளவில் இருத்தி வைக்கிறது.//

    அது உங்கள் பார்வைக்கு மட்டும் இருக்கலம்..

    //ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆணாதிக்கம் மிகுந்த ஒரு சராசரி மனிதனின் பார்வையைத் தாண்டி இஸ்லாத்திலோ, குரானிலோ ஒன்றுமில்லை என்பதற்கு இந்த புர்காவை விட வேறு சான்று ஒன்றும் தேவையில்லை//

    ம்ம்ம் உங்களுக்கு புரிஞ்சது அவ்வளவுதான்.. விடுங்க.. அது வேதத்தின் குற்றமல்ல..

  6. உடையின் இடையில் தெரியும் பெண்ணுடலை வக்கிரத்துடன் பார்க்கும் நோய் ஆண்களின் கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்போது அதற்கு அல்லாவோ பர்தாவோ என்ன செய்ய முடியும்? அல்லது அந்த அல்லாதான் ஆண்களின் காமவெறியை கொஞ்சம் காந்தி மாதிரி தணிச்சலாக படைத்திருக்கலாம்தானே? தஞ்சை மாவட்டத்தில் வயலில் வேலை செய்யும் உழைக்கும் பெண்கள் தமது உள்பாவாடையை வரிந்து கட்டிக்கொண்டு கிட்டத்தட்ட ஷார்ட்ஸ் போல உடையை மாற்றிக் கொண்டு வேலை செய்வதை சுமஜ்லா பார்த்ததில்லையா? எந்த வேலையும் இல்லாமல் சும்மா அரட்டை அடிப்பவர்களுக்குத்தான் பர்தா லாயக்கு. உழைக்கும் பெண்களுக்கும், ஒட்டம், ஆட்டம் என சாதனை படைக்கும் பெண்களுக்கும் அது தடைச் சங்கிலி

  7. முஸ்லிம் பெண்களுடைய கண்ணியத்தின் அடையாளம் பர்தா என்ற விளக்கத்தை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? ஆண்களின் கண்ணியமற்ற காமவெறிப் பார்வையைச் சமாளிப்பதற்காகப் பெண்களின் மீது இஸ்லாம் போட்டிருக்கும் கவசம்தானே பர்தா? அப்படிப் பார்த்தால் அதனை ஆண்களுடைய பொறுக்கித்தனத்தின் அடையாளம் என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்!

  8. இண்டர்நேஷனல் கொரில்லா திரைப்படம் காணத்தவறாதீர்கள்.

    பறக்கும் குரான்கள் பாய்ந்து வந்து காஃபிர் சல்மான் ருஷ்டியை அழிக்கும் இறுதிக்காட்சி. கலிமா சொல் என்று பர்தா போடாத பாண்டிட் குவின் முஸ்லிமா சல்மான் ருஷ்டியை மிரட்டும் காட்சி, முஸ்லிமாக்கள் டைட்ஸ் போட்டுகொண்டு டப்பாங்குத்து போடும் கண்ணுக்கினிய காட்சிகள். உங்கள் ஈமான் பலப்பட, காஃபிர்கள் வெருண்டோட இன்றே காணத்தவறாதீர்கள்

    காஃபிர்களுக்கு மின்னல் எச்சரிக்கை வீடியோ.. சல்மான் ருஷ்டியை அழிக்கும் அல்குரான்

  9. ஹிஜாபின் கதையை குரான் மற்றும் ஹதீதின் ஒளியில் நாம் அறிய வேண்டாமா ?
    முகம்மதுவின் மனைவிமார்கள் ( கிட்டத்தட்ட 13 ) கழிவு வெளியேற்ற அல்-மனாசி அப்டின்னு ஒரு திறந்த வெளி புல்வெளி கழகத்துக்கு போறது வழக்கம். கூட்டமா கக்கூஸ் போறதை உமர் தினமும் நோட் பண்ணுவாராம். ( நடந்து போறதா மட்டும்னு நான் நினைக்கிறேன் )
    அப்படி நோட் பண்ணி ஒருநாள் சவுதா ( மூமீன்களின் தாய்) போகும் பொது இந்த உமர் அத பாதுட்டாறாம்.
    உடனே அத நபிகிட்ட போட்டு குடுத்த உடனே அல்லா கிட்ட இருந்து “வஹீ” வந்துருச்சாம்.
    அதுக்கு நபி, உமர் நாக்குல அல்லா இருக்குறான்னு வேற பாராட்டாம். ( அல்லா எங்கே என்று கேட்கும் நாத்திகர்களுக்கு பதில் கிடைத்து விட்டது !! சுபஹானல்லாஹ் ) .
    கேள்விகள் :
    ****************
    1 . மூமீன்களின் தாய்கள் கக்கூசு போகும் போது அவுகள நோட் பண்றது தான் உமரின் வேலையா ?
    2 . அல்லாஹ்வின் இருப்பிடம் உமரின் ஊத்த வாயா ?
    3 .சவுதாவுக்கு அன்று கக்கூசு வரலேன்ன முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போட வேண்டிய அவசியமிருக்காதா?
    4 . உமர் சொல்லித்தான் அல்லாஹ்வுக்கு ஹிஜாப் பற்றி அறிவு வந்ததா ?

    This is one of those incidents that led to the revelation of the verses of Hijab. ‘Umar played an important role in it..

    Volume 1, Book 4, Number 148:

    Narrated ‘Aisha:

    The wives of the Prophet used to go to Al-Manasi, a vast open place (near Baqia at Medina) to answer the call of nature at night. ‘Umar used to say to the Prophet “Let your wives be veiled,” but Allah’s Apostle did not do so. One night Sauda bint Zam’a the wife of the Prophet went out at ‘Isha’ time and she was a tall lady. ‘Umar addressed her and said, “I have recognized you, O Sauda.” He said so, as he desired eagerly that the verses of Al-Hijab (the observing of veils by the Muslim women) may be revealed. So Allah revealed the verses of “Al-Hijab”.

  10. History of Hijab or Head covering

    Introduction:
    In this section we will be pondering over the history of Head covering or Hijab as general, particularly looking at the ancient times. Our focus would be:

    Whether in past history of civilizations Hijab used to exists or not?
    Whether the concept of Head covering or Hijab is purely coming from Islam Prospective?

    Hijab in Past civilizations Before Islam:

    According to Ancient civilizations, Head covering or Hijab used to be part of their customs. This custom can be found both in Ancient Iran, Jew and Hindus.

    According to a famous American Historian Will Durant:
    “If a Jew lady lacks in following the rules like for example she would go without covering her head in street or in front of other men, or even her voice get heard by other men or neighbours. In this case her husband has the right to divorce her without giving her dowry.”
    From above text it is apparent that the head covering rules in Jew was rather HARD comparing to that of Islam.
    Will Durant further refers to the ancient Persian Civilization, Volume 1 History of Civilization pg 552:

    “After Daruish the status of woman particularly women from high social background, decline in their freedom came into existence. The women from lower social background somehow could manage to keep their freedom. This was mainly because they had to leave their homes to be in society to earn money and to survive. But women in other economical or financial level were not allowed to leave their homes while in the state of menstrual.”
    These types of customs took continuation and becoame more and tougher for women. The women from high social background couldn’t dare to go out except in the stretcher (special carrier made out of wood, with four men, each man holding one side of the stretcher) which was totally covered from all four sides with curtains. The women didn’t have even the permission to openly talk to any man. Ladies who were married were not allowed to see any man, even their own father and brothers.
    Whether the concept of Head covering or Hijab is purely coming from Islam Prospective?
    Will Durant Further states: The Hijab during Ancient Persian times brought the concept of Hijab to Arab world and in particularly in Muslim nation.
    We know that Hijab in Islam has nothing to do with the customs and rules of Hijab during Ancient Persian or in Jew. In Islam woman is only not allowed to do her obligatory prayers and fasting and she is not allowed to sleep with her legal partner during the time of her menstrual. Other than this she is completely free to go out in the society or associate with public. The concept of “prison yourself at home” during menstrual time doesn’t exist in Islam at all.
    If will Durant is trying to convince us that the whole concept of Hijab was transfer to Muslim world through other civilizations like Ancient Iran or Jew. Again such statement is wrong since Verses of Quran relating Hijab were revealed before Iranian became Muslim.

    Arab society according to Will Durant:
    “Arabs women during the first century didn’t use to were Hijab, Men and women used to see and talked to each other, in street they used to walk side by side. In Mosques they use to pray together. Prophet though had made wearing of loose clothes prohibited but the Arab would take this rule as unseen. Arab women use to wear colourful loose clothes mostly half covered. They use to put a shinning belt around the waist. The hair used to be opened and not covered.”
    Will Durant Explanation about an Arab woman before Islam is no doubt true, but his opinion about the end of first century and beginning of the second century after Islam is doubtful. He talks as if during prophet time there wasn’t a smallest concept of Hijab in Arab and an Arab woman would freely go around with no Hijab or head covering. The History proof this is wrong to us, Islam did brought a lot of changes to the dress code of a woman. Most of Arab ladies used to dress according to the Islamic dress code as explained in the Quranic verses. This fact can be verified by the tradition of Prophet’s Wife like Ayesha.

    In one of the writing by Jawahir Lal Nehru the first minister of India, also believed that emergence of Hijab in an Arab nation is from other non Muslim civilization like Iran and Rome. In his book “A look into the history of world” Vol1 pg 328: after praising the Islamic civilization, He talks about the afterward changes in Islam by other civilization.

    “One big change that slowly took place in Arab society was in woman sect. In Arabia for woman there was no custom of head covering or Hijab. Arab women wouldn’t be separated in society from men. Rather an Arab woman would have public appearance, attend speeches etc. Arab nation after Islam copied different customs from empire like ancient Iran and Rome. Arab conquered empire Rome and Iran but adopt their customs and etiquettes. Therefore the custom of Hijab has come from other civilizations.”

    What Jawahir says doesn’t match with history of Islam. We can say that the relationship between Arab Muslim and Non Arab Muslim did add some different types of customs in practising Hijab or made it more strict comparing to Prophet Mohammad time, but saying that Hijab was a concept totally introduce in Islamic world by other civilizations, is incorrect.
    Conclusion:
    At the end what is apparent is that Hijab as a custom and practice was present in other civilisations. Islam didn’t bring this concept of Hijab as a whole new practice. Islam did make the concept of Hijab easier and took the harsh law which used to be practice by other culture and traditions. For example customs like: woman not associating with man in society, woman get prisoner at homes while in the state of menstrual, women voice couldn’t be heard by any man, woman not allowed even to see their own brothers and father and many more.
    Of course we can prove this by the history, Prophet Mohammad daughter like Hazrat Fatima and granddaughter Like Hazrat Zainab had gone in front of public and had given hard speeches to the ruler of that time.
    The question which arise here is about the in depth philosophy of Hijab. The philosophy and reasons of Hijab in Islam is same as the philosophy in other ancient civilization. We shall discuss in the later articles.

  11. http://en.wikipedia.org/wiki/Veil

    Veiling in the Qur’an

    Even though Islamic traditions say that the foundations for veiling and seclusion for all Muslim women are in the Qur’an,
    this is a rather partial reading of the actual text.
    While the Qur’an instructs Muslims to dress modestly,
    the only specific reference to veiling is Surah 24:30-31,
    instructing women to veil their bosoms and hide their ornaments.
    This was later interpreted to mean all parts of the body except the hands, feet, and possibly the face,
    which many argue defies logic as there would be no need to mention bosoms specifically, if the reference was intended for the entire body.

    Surah 33:59, tells women to “draw their cloaks close round them (when they go abroad)” so they may be recognized and not annoyed.

    These are the only two references to veiling in the Qur’an.

    Veiling has been rapt in controversy throughout history.
    Today, the veil stands as both a symbol of Islamic identity and resistance to Western ways, while in much of Western thinking,
    the veil has become the symbol of the Middle Eastern woman and oppression.

    024:030.

    Tell the believing men to lower their gaze and keep covered their private parts, for that is better for them.

    024:031.

    And tell the believing females
    to lower their gaze and keep covered their private parts,
    and that they should not reveal their beauty except what is apparent,
    and let them put forth their shawls over their cleavage.
    And let them not reveal their beauty except to their husbands,
    or their fathers, or fathers of their husbands,
    or their sons, or the sons of their husbands,
    or their brothers,
    or the sons of their brothers,
    or the sons of their sisters,
    or their women,
    or those by betrothal,
    or the male servants who are without need,
    or the child who has not yet understood the composition of women.
    And let them not strike with their feet* in a manner that reveals what they are keeping hidden of their beauty.

    *catwalk

    033:059.
    Tell your wives,
    your daughters,
    and the women of the believers that they should lengthen upon themselves their outer garments.
    That is better so that they will not be recognized and harmed.

    quranist@aol.com

  12. செங்கொடி அவர்களே ,ஆணாதிக்கத்தின் அர்த்தத்தை கற்பனையிலே நீங்கள் எடுத்து வைக்காமல் நிஜமாக எடுத்து வைத்து இஸ்லாம் ஆணாதிக்கத்தை ஆதரிக்கிறது என்பதை நீங்கள் நிரூபியுங்கள்.அது உங்கள் இனத்தால் உலகம் அழியும் காலம் வரை முடியாது.

    பெண்ணிற்கு எதிரான பாலியல் மீறல் என்பது ஆணின் குற்றம் என்பதை மறைக்க முடியாது.அதனால் அந்த ஆணிற்கு தண்டனை வழங்க பட வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது.ஆனால் ஒரு ஆண் நிர்வாணமாக ரோட்டிலே நடந்து போனால் ஒரு பெண்ணிடம் தோன்ற கூடிய உணர்வும்,அதே ஒரு பெண் அப்படி நடந்து சென்றால் ஒரு ஆணிடம் தோன்ற கூடிய உணர்வும் ஓன்று என்பதை இன்றிய அறிவியல் பூர்வமான நிரூபனன்களை கொண்டு நீங்கள் நிரூபித்து விட்டால் பின்பு யார்தான் உங்கள் கருத்தை மறுக்க போகிறார்கள்.நீங்கள் நினைத்த வேலையும் எளிமையாக முடிந்து விடுமே!முடியும் என்று தோன்றுகிறதா உங்களால் ?
    அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் நிச்சயமாக குற்றத்தால் பாதிக்க படுபவர்களிடமே அதன் பொறுப்பை ஒப்படைப்பது குற்றம்தான்.ஆனால் அதுவரை என்ன செய்வது தோழரே?அதுவரை பாதிக்க படும் பெண்கள் மீது குற்றத்தை பகிர்வது என்பது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிய ஒருவருக்கு நிகழும் நிகழ்ச்சியாகத்தான் தொடரும்.

    பாலியல் உறவு என்பது இருவரும் விரும்பி ஏற்று கொள்வது என்பது மிக அழகான கருத்துதான்.அந்த விருப்பம் எதனால் வருகிறதோ அந்த காரணத்தை பொதுவுடமையாக்கி உன் விருப்பத்தை நீ கட்டுபடுதிதான் ஆக வேண்டும் என்று கூறுவது தவறு செய்யும் இயல்போடு உள்ள மனிதனிடம் திணிக்க படும் ஒரு பல பரீட்சையாக உங்களுக்கு தெரியவில்லையா?ஒரு ஆணின் முதுகு திறந்திருக்கிறது என்பதற்காக அவனது முதுகில் சுவரொட்டிய ஓட்டுவது மனித குல இயல்பாக (காமத்தை போல ) இல்லாத வரைக்கும் சரி.அது மனிதகுல இயல்பாக இருந்து விட்டால் ஒரு ஆண் அவன் புரத்தில் இருந்து என்ன செய்வான்?அதைத்தான் நாம் பெண்களிடம் செய்ய சொல்கிறோம்.

    இன்னும் சொல்ல போனால் ஒரு பெண்ணினுடைய மதிப்பு மட்டுமல்ல ,ஒரு ஆணினுடைய மதிப்பும் அவனது பாலியல் பயன்பாட்டில் அடங்கித்தான் இருக்கிறது.
    ஆனால் அந்த பாலியல் பயன்பாடு ஒரு பெண்ணினுடைய உடலை இயற்கையாகவே அதிகமாகவே ஆக்கிரமித்து கொண்டுள்ளது..இதை உங்கள் பாழையில் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் கருத்தை நிலை நிறுத்த இயற்கையை வென்றே ஆக வேண்டும்.நாங்கள் சவால் விடுகிறோம்.முடியுமா உங்களால் ?

    24:30 வசனத்தை சுட்டி காட்டி சில ஆண்களிடம் ஒரு மாதிரியாகவும்,மற்ற சில ஆண்களிடம் ஒரு மாதிரியாகவும் பெண்களை குரான் உடை அணிய சொல்வது அடிமைத்தனம் என்று சொல்கிறீர்கள்.ஆனால் இது ஆணிற்கும் பொருந்த கூடிய சட்டம்தான்.ஒரு ஆணும மகரம் இல்லாத பென்னிடதிலே ஒரு மாதிரியும்,மகரமான பென்னிடதிலே ஒரு மாதிரியும்தான் நடக்க குரான் சொல்கிறது.இது ஆண் அடிமை தனம் என்று நீங்கள் சொல்ல தயாரா?ஒரு சஹாபி ஒரு பெண்ணுடைய முகத்தை ஒரு விதமாக பார்த்து விட்டதற்காக அவருடைய முகத்தை அந்த பெண்ணுடைய முன்னால் வைத்தே ரசூல் (ஸல்) அவர்கள் திருப்பி விட்டதாக கூறும் ஹதீசெல்லாம் உங்கள் பார்வையில் ஆண் அடிமை தனத்தை பலமாக ஆதரிக்கிறதே!!!! (நவூதுபில்லாஹ்).ஏன் உங்கள் கொள்கையில் முரண்பட்டு கூறுவது போல ,எங்கள் கொள்கையிலும் முரண்பாடு கற்பிக்க பார்க்கிறீர்கள்.

    அலங்காரம் என்ற சொல் பதத்திற்கு அற்புதமான விளக்கம்(?) கொடுத்துள்ளீர்கள்.மொத்தமாக உடலை மறைப்பதை கூறி விட்டு ,அலங்காரம் என்று சொன்னால் அது தனி அலங்காரத்தை குறிக்குமா?அல்லது ஆடையுடன் சேர்ந்த அலங்காரத்தை குறிக்குமா?இதற்க்கு பதில் உங்களிடமே நீங்கள் கேட்டு பாருங்கள்.

    //ஆண்கள் கேவலமான வார்த்தைகளில் பேசுகிறார்கள் என்று காதை அடைக்க முடியுமா?ஆண்கள் இடிக்கிறார்கள் என்பதற்காக பெண் இருப்பு உடையை அணிய முடியுமா?//என்றெல்லாம் கேட்கிறீர்கள்.

    இதற்க்கு ஓர் பதில் உங்கள் உறவின பெண் ஒருவர் சேலை உடுதுவதை இன்னொருவன் விமர்சித்து அதை விட குறைந்த ஆடையை உடுபதர்க்கு இந்த வாதத்தை எடுத்து வைத்தால்,அவனிடம் என்ன அறிவார்ந்த பதில் சொல்வீர்களோ அதே பதில்தான் இந்த உங்களின் உச்ச கட்ட உளறலுக்கும்.

    பெண்களை எப்படியாவது காம பொருளாக்கி, இந்த மனித இனத்தை தாய்க்கும்,தாரதிர்க்கும் வித்தியாசம் தெரியாத இனமாக மாற்ற வேண்டும் என்ற உன் போன்றவர்களுக்கு சவுக்கடிதான் படைத்த ரப்பின் இந்த புர்கா பற்றிய தீர்ப்பு.

  13. “ஒரு ஆண் ரோட்டிலே நடந்து போனால் ஒரு பெண்ணிடம் தோன்ற கூடிய உணர்வும்,அதே ஒரு பெண் அப்படி நடந்து சென்றால் ஒரு ஆணிடம் தோன்ற கூடிய உணர்வும் ஓன்று”
    —————————————————————————————–
    012:030.

    Wife of the governor is trying to seduce her young man from himself;
    she is taken by love.

    012:031.

    Prepared a banquet for them, and she gave each one of them a knife. And she said: “Come out to them,” so when they saw him they exalted him and cut their hands, and they said: “Praise be to God, this is not a human being, but a blessed angel!”

    quranist@aol.com

  14. வன்புணர்ச்சி/பாலியல் உறவு என்பது ஒரு/இருவர் விரும்பி உறவுகொள்வது.

    “அந்த விருப்பத்தை நீ கட்டுபடுத்தித்தான் ஆக வேண்டும்”

    என்று கூறுவது தவறு செய்யும் இயல்போடு உள்ள மனிதனிடம் திணிக்கப்படும் ஒரு பலப்பரீட்சையாக!!! உங்களுக்கு தெரியவில்லையா?
    —————————————————————————————–

    024:033.
    And let those who are not able to marry continue to be chaste until God enriches them of His Bounty.

    quranist@aol.com

  15. நண்பர் அப்துல்லா,

    உங்களின் பின்னூட்டத்தை தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. சற்று தெளிவாக எழுதினால் நலம்.
    நூலகம் பகுதியில் விவாதம் எனும் பிரிவில் “இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே” என்பதை தரவிறக்கி படித்துப் பாருங்கள். அது என்ன உங்கள் இனம், நீங்கள் மனித இனம் இல்லையா?

    இந்த உலகம் ஆணாதிக்க உலகமாகவே இருக்கிறது. அதை இஸ்லாமும் தக்கவைக்கிறது என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறேன். நிர்வாணமாக போவதென்ன, பெண்ணின் ஆடை சற்றே விலகினாலும் அவளை சுகிக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று தான் ஆண் அலைகிறான். அதன் காரணம் ஆணாதிக்கம். ஆணின் உடல் மீதான பெண்ணின் பார்வையும், பெண்ணின் உடல் மீதான ஆணின் பார்வையும் வேறுபாடாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் சமூகத்தின் பார்வையின் ஆணும் பெண்ணும் வேறுபாடாக இருக்கிறார்கள். ஆண் ஆணாதிக்கத்தின் உச்சத்தில் இருக்கிறான். பெண் அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக்கிறாள். இதை சரி செய்வதற்குப் பதிலாக பெண்ணுக்கு மேலதிக உடையால் மூடி போடு என்பது மேலும் அவளை அடிமைத்தனத்தின் நுகத்தடியில் சிக்க வைக்கும் கடவுளின் வக்கிரம்.

    ஆடையில் ஆணின் அளவு பெண்ணின் அளவு என்பது கூடுதல் குறைவை குறிப்பது பிரச்சனையில்லை. பெண் ஆணைவிட கூடுதலாகவே ஆடை அணிந்தாலும் அதையும் அவள் மறைத்துக் கொண்டே வெளியில் வரவேண்டும் என்பது தான் பிரச்சனை. பெண்ணிடம் கூறுவது போல் குரான் ஆணிடம் கூறவில்லை. மற்றப்படி ஆடை என்பதே அலங்காரம் தான் என நானாக கூறவில்லை அதையும் குரான் தான் கூறுகிறது. ஐயமிருந்தால் 7:26 ஐ பார்த்துக் கொள்ளுங்கள்.

    மீண்டும்,மீண்டும் கூறுகிறேன் இது ஆடையின் அளவு குறித்த பிரச்சனை அல்ல. பெண் தன்ண்டைய உடலை போதுமான அளவுக்கு மறைக்க அவளுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை தெரிவு செய்து கொள்வாள். சேலைதான் பெண்களைக் காக்கும் கண்ணியம் என்று யாரும் கூறுவதில்லை. அது ஓர் ஆடை அவ்வளவு தான். ஆனால் நீங்கள் புர்கா தான் பெண்களுக்கான கண்ணியம் என்கிறீர்கள். கட்டாயம் அணிந்து தான் ஆகவேண்டும் என்கிறீர்கள். அது தான் பிரச்சனை.

    இந்த சவுக்கடி போன்ற சொற்களுடனான சுய சொரிதல்கள் இல்லாமல் உங்களைப் போன்றவர்களால் எழுதவே முடியாதா?

  16. மற்றப்படி ஆடை என்பதே அலங்காரம் தான் என நானாக கூறவில்லை அதையும் குரான் தான் கூறுகிறது.

    ஐயமிருந்தால் 7:26 ஐ பார்த்துக் கொள்ளுங்கள்.

    007:026. மனுஷபுத்திரனே, உங்களுடைய உடம் புகளை மூடுவதற்காகவும், வசதிக்காகவும் நாம் ஆடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கின்றோம். ஆனால் ஆடைகளில் சிறந்தது நன்னெறியின் ஆடையே ஆகும்.

    007:026.O Children of Human being, We have sent down for you garments to alleviate your bodies, and feathers; and the garment of righteousness is the best.

    quranist@aol.com

  17. //ஐயமிருந்தால் 7:26 ஐ பார்த்துக் கொள்ளுங்கள்//

    007:026.

    We have sent down for you garments
    to alleviate your bodies,as feathers*;

    Feathers* are one of the epidermal growths that form the distinctive outer covering, or plumage, on birds and some theropod dinosaurs.

    They are considered the most complex integumentary structures found in vertebrates,[1][2] and indeed a premier example of a complex evolutionary novelty.[3] They are among the characteristics that distinguish the extant Aves from other living groups.

    Feathers have also been noticed in those Theropoda which have been termed feathered dinosaurs. Although feathers cover most parts of the body of birds, they arise only from certain well-defined tracts on the skin.

    They aid in flight,
    thermal insulation*,
    waterproofing*
    and coloration*
    that helps in communication and protection*.[4]

    quranist@aol.com

  18. நீங்கள் எதற்கு மட்டும் பதில் கொடுத்தீர்களோ அதை மட்டும் கவனத்தில் கொள்ளலாம் என விழைகிறேன். ஏன் என்றால் நீங்கள் எந்த இடம் புரியவில்லை என்று சுட்டி காட்டினால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.உங்களுடைய சில வரிகளும் முதலில் புரியாமல் போய்,பின்பு மீண்டும்,மீண்டும் படித்த பிறகுதான் ஓர் அளவிற்கு புரிகிறது.அது போல் முயற்சி செய்து பாருங்கள்.

    //அது என்ன உங்கள் இனம், நீங்கள் மனித இனம் இல்லையா?//என்று கேட்டு வைத்துள்ளீர்கள்.
    உங்களுக்கு ஓன்று தெரியுமா?ஒரு பைத்தியத்தை பார்த்து ”உனது உடையை சரி செய்யடா” என்று சொன்னால் அவன் நம்மை பார்த்து ”லூசு ” என்று சொல்வான்.இதுவும் அப்படிதான் இருக்கிறது.உங்கள் இனம் என்றால், பெண்ணை போக பொருளாக ஆக்கி அவளை இறுதி வரை ரசித்து தொலைக்கும், வக்கிர இனம்.இது சிந்திக்கும் மனித இனத்தில் அடங்காது.பெண்ணை அவளுடைய கண்ணியத்தோடு பாதுகாக்க நினைக்கும் எல்லோரும் மனித இனம்.பெருமையோடு கூறுகிறேன்.

    சரி விஷயத்திற்கு வருவோம்.பெண்ணின் அழகை ஆண் ரசிப்பது ஆணாதிக்கம் என்கிறீர்கள்.நான் உங்களிடம் ஓன்று கேட்கிறேன்.உங்கள் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணம் வைத்து இருக்கிறீர்கள்..அதை உங்கள் வீட்டு வாசலில் ஊரே பார்க்கும் படியாக வந்து கொட்டி விட்டு நீங்கள் போய் விடுகிறீர்கள்.இதன் மீது எவனாவது ஆசை பட்டு இதை எடுக்க வேண்டும் என்று முயற்சித்தால்,நான் எப்படி வேண்டுமானாலும் என் பணத்தை போடுவேன் நீ எப்படியடா திருடுவாய் என்று கேட்பீர்களா?

    இது போல்தான் இருக்கிறது உங்கள் கேள்வியும்.பெண்ணை பார்த்து அவள் அழகில் மயங்குவது என்பது ஒரு ஆணின் இயற்கை.அப்படி தன்னை கட்டு படுத்த தெரியாமல் மயங்கியவனுக்கு பெண் பித்தன் என்ற பட்டம் கொடுத்து அவனை தண்டிக்கலாமே தவிர ,//பெண்ணே நீ உனது கவர்ச்சியான பாகங்களை எல்லாம் திறந்து ஆணிற்கு காட்டு.அவன் என்ன செய்து விடுவான் என்று பார்ப்போம்// என்று கங்கணம் கட்டினால்,கடைசியில் என்ன ஆகும் தெரியுமா?அப்படி கங்கணம் கட்டிய நீங்களே உங்களை கட்டு படுத்த முடியாமல் வீழ்ந்து விடுவீர்கள்.இதுதான் எதார்த்தம்.

    இல்லை நான் யோக்கியன் என்று சொல்கிறீர்களா?அதை நிரூபித்து காட்டுங்கள் .உங்கள் வீட்டில் ஒரு பெண்ணை முழுக்க ,முழுக்க சுதந்திரமான ஒரு ஆடையில் வர வைத்து ,அவளுடன் ஒரு நாள் முழுக்க அவளது அழகில் மயங்காமல் வாழ்ந்து காட்டுங்கள்.குறைந்த பட்சம் உங்கள் இணைய தளதிலாவது இப்படி பட்ட புகை படங்களை வெளி இட உங்கள் மனம் இடம் கொடுக்குமா?இப்படி நம் மன சாட்சியே தவறு என்று கூறுவதை மக்கள் மத்தியிலே எடுத்து கூறினால் இது உங்கள் பாழையில் ஆணாதிக்கமா?

    பெண் தன்னுடைய உடலை மறைத்து ஒழுக்கமுள்ளவளாக வாழ விரும்புவது பெண் அடிமை தனம் என்று கூறி உங்களுடைய வக்கிர புதியைதான் மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள்.இதை படைத்தவன் ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
    சரி நான் கேட்க்கிறேன் இஸ்லாத்திலே ஆண்கள் அந்நிய பெண்களுடன் மார்க்கம் வரையறுத்த எல்லைக்கு மேலே பேசுவது தவறு என்று கூற பட்டிருக்கிறது.இதை பெண்களும் ஆதரிக்கதான் செய்கிறார்கள்.இதை ஏன் பெண் ஆதிக்கம் என்று சொல்ல கூடாது ?
    விளக்குங்கள்?

    7:26 வசனம் எந்த வகையிலே உங்கள் கருத்துக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை விளக்கினால், நாம் பதில் கூறுவதற்கு வசதியாக இருக்கும்.அதை விட்டு,விட்டு தெளிவாக ஆடையையும் ,அலங்காரத்தையும் பிரித்து காட்டும் ஒரு வசனத்தை //தேவையான அளவுக்கு மேலே பெண்களை ஆடை அணிய கூறி குரான் கொடுமைபடுதுகிறது //என்று நீங்களாக உளறினால் நாம் அதை ஆதரித்து //சரி//என்று தலையாட்ட வேண்டுமா?

    போகிற போக்கில் இப்படி கூறுகிறீர்கள் //பெண் தன்ண்டைய உடலை போதுமான அளவுக்கு மறைக்க அவளுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை தெரிவு செய்து கொள்வாள்//.அதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது.தேவையான அளவுக்கு தனது மறைவிடங்களையும்,கவர்ச்சியான பகுதிகளையும் மறைக்கும் உடைக்கு பேர்தான் புர்காவே ஒழிய நீங்களாக இதுதான் புர்கா என்று முடிவு செய்து கொண்டு அதை ஒழிக்க பாடு பட்டால் நாம் என்ன செய்ய முடியும்.?

    //இந்த சவுக்கடி போன்ற சொற்களுடனான சுய சொரிதல்கள் இல்லாமல் உங்களைப் போன்றவர்களால் எழுதவே முடியாதா?//என்று கேட்கிறீர்கள்.
    என்னால் மட்டும் அல்ல ,உங்களாலும் இது போன்ற வார்த்தைகள் இல்லாமல் எழுத முடியாது.ஏன் என்றால் நாம் கொண்ட கொள்கை சரி என்று நியாயமான அடிப்படையிலே நாம் கருதினால் இது போன்ற வார்த்தைகள் எதார்த்தமாக வந்து விடும்.

    இது சுய சொரிதலா இல்லையா என்பதை நம்முடைய வாதங்கள் தீர்மானிக்கட்டும் .அதற்க்கு முன்பு நீங்கள் ஆருடம் கூற வேண்டாம்.

  19. கருத்தோடு கருத்து மோதுவது செய்யலாம் என்று சிலர் தவறாக பிரச்சாரம் செய்து சுன்னாவை கெடுக்கிறார்கள்.
    அவர்களுக்காக ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்

    கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்

    ய்ய்ய்ய்ய்யாஆ அல்லாஹ்

  20. நண்பர் அப்துல்லாஹ்

    பெண்ணும் பணமும் ஒன்றா?அதெப்படி மதவாதிகளுக்கு மட்டும் பெண்களைப் பணத்தை பொத்தி பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ?அவர்களையும் சக மனித பிறவியாய் நினைக்காமல் ஏதோ போகப்பொருள் போலவும் கொஞ்சம் அசந்து விட்டால் யாராவது திருடிவிடுவார்கள் என்ற பொருள் போல் நினைக்கும் மனப்பான்மையும் மாறாத வரையும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியாது.பிரச்சனையின் மூலத்தைப் பாராமல் தீர்வு வழங்குவதற்கு இஸ்லாமிற்கு நிகர் இஸ்லாம் தான்.வீட்டில் எலி செத்து கிடந்தால் நாற்றத்தை போக்குவதற்கு ஊதுவர்த்தி வைக்கச்சொல்லும் தீர்வைப் போலதான் பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாம் கூறும் தீர்வும் இருக்கிறது.

  21. //how does a sheik dress .. does he wear a shorts or bermuda ??//

    அடடா …! ஷேக் ட்ரஸ்தான் நல்ல ட்ரஸ் போலும்!!!!

  22. இவ்வளவு குரானிலிருந்தும் ஹதீசுகளிலிருந்தும் மேற்கோள் காண்பித்து பர்தாவை ஆதரிக்கும் மக்கள் ஏன் தங்கள் டெசிபல்களை வைத்தே ஒரு தொலைக்காட்சியில் இரு இஸ்லாமிய பெண் மக்கள் பர்தாவைப் பற்றி விவாதித்த ஒரு நிகழ்ச்சியை நிறுத்தினார்களோ தெரியவில்லை. மதத்தைக் காப்பாற்றவா .. இல்லை, தங்களை தங்களிடமிருந்தே காப்பாற்றிக் கொள்ளவா?

  23. ஒரு முஸ்லீமை காரண காரியம் இல்லாமல் காபிர் என்றால் அது உன் பக்கம் திரும்பி விடும்.
    சரி,விவாதம் செய்வது காபிர் குணம் என்றால் விவாதம் செய்பவர்களுக்கு எதிராக நீ வாதம் செய்வதும் காபிர் குணம்தானே மடையனே?

  24. நண்பர் செந்தமிழ் செல்வன் அவர்களே,
    ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னால் கண்ணை மூடி கொண்டு கனவிலே சொல்வது உங்களை போன்றவர்களுக்கு நிகர் நீங்கள்தான்.
    அதாவது பெண் என்பவள் ஆண்கள் ரசிக்க படும் தன்மையுடைவளாக இயற்கையிலே இருக்கிறாள்.ஆண் ரசிப்பவனாக இருக்கிறான்.நாம் சொல்வது என்னவென்றால் ,ஆண் தன்னை அடக்க கற்று கொள்ள வேண்டும் .இந்த உலகத்தில் பெண் மாத்திரம் அல்ல .அவன் இந்த உலகத்தில் எந்த விஷயங்களில் எல்லாம் எளிதாக வீழ்ந்து விடும் தன்மையுடன் படைக்க பட்டிருக்கிரானோ அல்லது உங்கள் பாழையில் இயற்கை தன்மையோடு இருக்கிறானோ அனைத்து விஷயங்களிலும் தன ஒழுக்கத்தை நிரூபிக்க கூடிய கடமை அவனுக்கு இருக்கிறது.
    அதே நேரத்தில் பெண்ணும் அவனை ஈர்க்கும் வாசல்களை அடைத்து வைக்க வேண்டும்.இருவரும் தத்தமது வரம்புகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

    தன் உடலை மறைப்பது பெண்ணிற்கு எப்படி கடமையோ ,அதே போல ஒரு ஆணிற்கும் கடமை.ஆனால் இன்று ஆண்கள் பெண்கள் அளவிற்கு உடலை காட்டுவதிலே கங்கணம் கட்டுவதில்லை.அதனால் அது ஒரு பெரிய விஷயம் ஆக்க படுவதில்லை.
    பெண்ணை பணத்தோடு ஒப்பிடுவதை விமர்சித்து உள்ளீர்கள்.
    உண்மையிலே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்.இது போன்று ஒரு காரணத்திற்க்காக உயிர் அற்ற பொருளுடன் மனித இனத்தை ஒப்பிட்டு பார்த்ததே இல்லையா?பெண்ணை பூ என்கிறார்களே ?அதை எல்லாம் விமர்சிக்க உங்களுக்கு ஏன் நா எழ வில்லை.

    ஏன் என்றால் உங்கள் மன சாட்சியே சொல்கிறது,அது ஒரு பண்பை குறிப்பதற்காக சொல்ல படுவதுதான் அன்றி அவளை இழிவு படுத்துவதற்காக அல்ல.
    அது போல்தான் பணத்தின் மீது ஈர்ப்பு கொண்டு மொத்த மனித இனமே அமைந்திருப்பதால் பணத்தை மொத்தமாக பூட்டி வைக்கிறோம்.

    பெண்ணின் மீது ஆண் ஈர்ப்புள்ளவனாக இருப்பதால் ,பெண் தன்னுடைய பொதுவாக ஈர்க்க படும் பகுதிகளை மறைக்க வேண்டும் என்கிறோம்.
    பணத்தை பாதுகாப்பதை விட அதிகமாக நாம் நம் தன்மானத்தை பாதுகாக்க வேண்டும் என்பது மொத்த மனித குலத்திற்கே கூற படும் போது,அதில் உள்ள நியாயதைதான் பார்க்க வேண்டுமே தவிர ஊட்ட பட்ட குருட்டு உணர்வுகளுக்கு அடிமையாக கூடாது எனபதையும் சொல்லி வைக்கிறோம்.

  25. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எந்த தளத்திலேனும் காணக்கிடைக்கிறதா தருமி அவர்களே ?

  26. //பெண்ணின் மீது ஆண் ஈர்ப்புள்ளவனாக இருப்பதால் ,பெண் தன்னுடைய பொதுவாக ஈர்க்க படும் பகுதிகளை மறைக்க வேண்டும் என்கிறோம்.//

    பெண்ணின் முகத்தைக் காண்பிக்கலாம் என்று சொல்கிறார்கள். பெண்ணின் முகத்தை ”மட்டும்” பார்த்தாலும் காதலோ காமமோ ஆண்களுக்கு வராதா?

  27. //அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி எந்த தளத்திலேனும் காணக்கிடைக்கிறதா தருமி அவர்களே ?//

    விஜய் தொலைக்காட்சியில் ‘நீயா நானா’ நிகழ்ச்சிக்கு விளம்பரங்கள் வந்தன. இரு தரப்பு இஸ்லாமியப் பெண்கள் ஆதரவாகவும் எதிராகவும் பேசிய சில வினாடிகள் விளம்பரத்திற்காகக் காட்டப் பட்டன. இஸ்லாமியர் “தங்கள் டெசிபல்களை வைத்தே ” அதைத் தடுத்து விட்டனர். அந்த மதக்காரர்களில் உள்ள கருத்துக்களைக்கூட வெளியிட அவர்கள் மார்க்கமும், மார்க்கத்தின் மேலுள்ள இறுக்கமும் அவர்களை அனுமதிகவில்லை!

  28. தருமி அவர்களே,
    உண்மைதான் .முகத்தை காட்டினாலும் ஈர்ப்பு வர வாய்ப்பு உள்ளது .இல்லை என்று மறுக்க முடியாது.

    ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் சில தீமைகளை கருத்தில் கொண்டால் முகத்தை மறைப்பதில் சிக்கல்களும் உள்ளது.

    சில ஆண்கள் முகத்தை மறைத்து கொண்டு பெண்கள் போல் பெண்களின் கூடத்தில் நுழைந்து சில்மிஷம் செய்வதும்,சில பெண்கள் திருடுவதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொள்வதும் இதில் அடங்கும்.இதை கவனத்தில் கொண்டால் ,இன்றிய சூழ் நிலையில் மறைக்காமல் இருப்பதுதான் சிறந்ததாக கருத முடியும்.ஆனால் கட்டாய படுத்த முடியாது.எநேவேதான் இஸ்லாமும் இதை கட்டாய படுத்த வில்லை.

    ஒரு கொள்கையை விமர்சிப்பதற்கு முன்னால் அதை தெளிவாக அறிந்து வைத்திருப்பது சிறந்தது.

  29. நண்பர் அப்துல்லா,

    \\ உங்கள் இனம் என்றால், பெண்ணை போக பொருளாக ஆக்கி அவளை இறுதி வரை ரசித்து தொலைக்கும், வக்கிர இனம்// \\ பெண் தன்னுடைய உடலை மறைத்து ஒழுக்கமுள்ளவளாக வாழ விரும்புவது பெண் அடிமை தனம் என்று கூறி உங்களுடைய வக்கிர புதியைதான் மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள்// என்மீது இப்படி குற்றம் சுமத்துவதற்கு என்னுடைய எழுத்துகளில் என்ன அடிப்படை இருக்கிறது? என்பதை நீங்கள் சுட்டிக் காட்டியாக வேண்டும். ஏனென்றால் நான் என்ன கூறுகிறேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் நீங்கள் என்னுடன் விவாதிக்க முடியாது. ஏனென்றால் பைத்தியங்களிடம் ஆழமாக உரையாடினால் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. நான் புர்கா கலாச்சாரத்திற்கு எதிராக வைத்திருக்கும் வாதங்களை மேலோட்டமாக அலசாமல் ஆழமாக உள்வாங்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

    பெண்ணும் பணமும் ஒன்றா? பணம் என்பது பரிவர்த்தனை மதிப்பைத் தாண்டி ஒன்றுமில்லாதது. பெண்ணும் அவ்வாறு தானா? இதற்கு நீங்கள் பெண்களை பூவாக கூறுவதில்லையா? என்று வேறொரு பின்னூட்டத்தில் கூறியிருக்கிறீர்கள். பெண்களை பூவாக கூறுவது (அது ஏற்புடையதல்ல என்றாலும்) தன்மை கருதியான ஓர் ஒப்பீடு. பூட்டிவை என்பது ஒப்பீடல்ல போலச் செய்வது. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. பெண்களை மலரோடு ஒப்பிடுகிறார்கள் என்பதால் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விட்டு வளரவைக்கிறேன் என்பதைப் போல் அபத்தமானது. பெண்ணின் பாலியல் பயன்பாட்டை பணத்தின் பரிமாற்ற பயன்பாட்டுடன் ஒப்பிடுவது என்பது வேறு. பணத்தை பூட்டி வைப்பது போல் பெண்ணை பூட்டி வைக்க வேண்டும் என்பது வேறு. பணத்திற்கு பாதுகாத்துக் கொள்ளும் திறன் கிடையாது. ஆனால் பெண் உயிருள்ள மனிதப் பிறவி.

    பெண்ணின் அழகில் மயங்குவது அதாவது பெண்ணை சுகிக்க நினைப்பது ஆணின் இயற்கை என்று கூறியுள்ளீர்கள். அது இயற்கையல்ல, அது ஆணாதிக்கத்தின் விளைவு. பெண் என்பவன் சக மனிதப் பிறவியல்ல, ஆண் சுகிப்பதற்காக படைக்கப்பட்டவள் என நினைப்பது தான் வாய்ப்புக் கிடைத்தால் அவளை அடைந்துவிட வேண்டும் என எண்ண வைக்கிறது. தனியுடமையும் ஆணாதிக்கமும் இணைந்த இந்த குற்றச் செயலை ஆணின் இயல்பாக கருதுவது அந்த குற்றச் செயலைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், புர்காவை விமர்சித்துவிட்டால் உடனே நிர்வாணமாக திரிவதற்கு அனுமதி கேட்கிறான் என்பதாக புரிந்துகொள்ளாதீர்கள். உங்களுக்கு நீங்களே அணிந்து கொண்டிருக்கும் பக்கப் பட்டையை நீக்கிவிட்டு விமர்சிக்க வாருங்கள்.

    அன்னியப் பெண்களுடன் மார்க்கம் அனுமதித்த எல்லையை மீறி பேசாதீர்கள் என்று ஆண்களுக்கு கூறப்பட்டிருந்து, அன்னிய ஆண்களுடன் மார்க்கம் அனுமதித்த எல்லையை மீறி பேசாதீர்கள் என்று பெண்களுக்கும் கூறப்பட்டிருந்தால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஆண் என்னவிதமாக வேண்டுமென்றாலும் உடலை மறைத்து அணிந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் அலங்காரம் செய்து கொண்டு யார் முன்னாலும் சென்று வரலாம் என இருக்கும் போது பெண் மட்டும் -உடலை மறைத்து ஆடை அணிந்திருக்கும் போதிலும்- தன்னுடைய ஆடை அலங்காரங்களை மறைத்துக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும். அது தான் அவளுக்கு கண்ணியம், பாதுகாப்பு என்றால் அதை ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது?

    ஆதமுடைய மக்களே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம்……. இது தான் குறிப்பிட்ட அந்த வசனம். ஆடை என்பதே ஒருவிதத்தில் அலங்காரம் தான் என்பதை இந்த வசனம் குறிக்கிறது. ஆண்களைவிட மேலதிக கவசம் அணிய வேண்டும் என்பதை பதிவில் நான் எடுத்தெழுதியிருக்கும் வசனம் சுட்டுகிறது. உளறுவதையெல்லாம் யாரும் ஏற்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் இருப்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

    உடலைமறைக்கும் ஆடையும் புர்காவும் ஒன்றல்ல. ஆடையை மறைத்து முகத்தையும் மறைக்க வேண்டும் என்பதற்கான வசனங்களை நான்கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளேன். மட்டுமல்லாது நடப்பாகவும் இருக்கிறது. இஸ்லாமிய பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் சுடிதார் போன்ற ஆடைகள் அணிந்தாலும் புர்கா அணிந்து தான் வெளியில் செல்கிறார்கள். ஆடையே போதுமானது என்று குரானும் கூறவில்லை, நீங்களும் கூறப்போவதில்லை. அதேநேரம் புர்காவை விமர்சித்துவிட்டால் நிர்வாணமாக அலையச் சொல்கிறார்கள் என கூப்பாடு போடுவதற்கும் மறப்பதில்லை.

    நாம் இருவரும் தம்முடைய நிலைப்பாடு சரி எனும் அடிப்படையிலேயே விவாதிக்கிறோம். இதில் என்னுடைய நிலைப்பாடு இது என கூறுவதற்கும், அந்த நிலைப்பாட்டை எதிராளிக்கான சவுக்கடி என வர்ணிப்பதற்கும் வேறுபாடுஇருக்கிறது. நான் எந்த விவாதத்திலுமே எதிராளியின் வாதங்களை ஒரு மாற்றுக் கருத்து எனும் அடிப்படையிலேயே அணுகுகிறேன். அதனால் என்னுடைய நிலைப்பாட்டை உங்களுக்கான சவுக்கடி என்பது போன்ற சொல்லாடல்களை நீங்கள் காண முடியாது. ஆனால் இஸ்லாமியர்கள் இது போன்ற சொல்லாடல்கள் இல்லாமல் விவாதிப்பதே இல்லை எனும் அளவுக்கு இணையத்தில் இறைந்து கிடக்கிறது. இதை சுய சொரிதல் எனாமல் வேறு என்னவென்பது. அது சரி இது சுயசொரிதலா இல்லையா என்பதை வாதங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றால், அது சவுக்கடியா இல்லையா என்பதையையும் வாதங்கள் மூலம் தீர்மானிக்கலாமே.

  30. சார்வாகன் இராஜாவின் பின்னூட்டத்தை மொழி பெயர்த்து நல்லது. ஆனால் இராஜா தமிழில் எழுத தெரியாமல் என்று நான் நினைக்கவில்லை. பெண்களை அவர்கள் மூடிவைக்கும் புர்கா பற்றி அவர்கள் மிகவும் வெட்கபட்டு சங்கடப்படுகிறார்கள். புர்கா பற்றி ஆங்கிலத்தில் சொன்னால் அது உண்மையான விடயம் என்று பலர் நினைக்கலாம் என்று எதிர்பார்ப்பாக இருக்கலாம். இங்கிலாந்து பெண்கள் இஸ்லாமை தழுவுகிறார்கள், இஸ்லாமால் கவர்ந்திழுக்கபடுகிறார்கள் என்று எழுதுவது மாதிரி தான்.

  31. சகோ அப்துல்லாஹ்
    உங்கள் மீது ஏக்க எறைவனின் ஜாந்தியும் ஜமாதானமும் நெலவுவதாக

    காஃபிர்களோடு கருத்து ரீதியாக மோதுவதுதான் தவறு. ஆனால் மூஃமின்களோடு கருத்து ரீதியாகத்தான் உரையாடல் நடத்தவேண்டும் என்று அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயஹம் மொஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் கூறியுள்ளாரே. அவர்களை கெட்ட முஸ்லீம்கள் என்று பிராண்ட் பண்ணிவிட்டால் போட்டுத்தள்ளலாம் என்று சொல்லியிருக்கிறாரே..

    சிந்திக்கமாட்டீர்களா என்று ஏக்க இறைவன் அடிக்கடி புலம்புகிறாரே.. சிந்திக்க மாட்டீர்களா?

    ய்ய்ய்ய்யாஆஆ அல்லாஹ்

  32. நண்பர் அப்துல்லா
    விவாதத்தை திசை திருப்புவதில் மதவாதிகளுக்கு நிகர் அவர்கள்தான்.ஏன் தலை முதல் கால் வரை மூடிய கருப்பு அரேபிய அங்கி அணிகிறாய் என்றால்,நிர்வாணமாக் செல்லுதல்,ஆபாச உடை,நாகரிகம்,கண்ணியம் என்பர்.

    ஏன் 4 மனைவிகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள அனுமதி இருக்கிறது என்றால் இரண்டாம் கல்யாணம் நிபந்தனை சூழ்நிலை என்று மழுப்புவர்.
    இப்பிரச்சினையில் குரானில் சொன்னது என்ன? அது எவாறு நடைமுறை படுத்தப் படுகிறது என்பதை பார்ப்போம்.நான் கூறியது போல் ஆணாகிய அப்துல்லா பெண்கள் அண்யும் ஃபர்தாவிற்கு வக்காலத்து வாங்குவதால் அவ்ர் கருத்து விவாதத்திற்கு உரியதாகிறது.

    குரானில்[குரான் 24:30,31 ] சொல்லி இருப்பது என்ன?

    1.வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்.

    2. தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது.

    3.முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.

    4._____..இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.

    a)முதலில் இவைகளுக்கு பொருள் ஃபர்தா எனப்படும் அரேபிய கருப்பு அங்கிதான் என்பதை நிரூபியுங்கள்.

    b)ஃபர்தாவில் பல வகை உண்டு அதில் எதை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?
    (தொடரும்)

  33. செங்கொடி , நீ ஒரு அறிவாளி என்று நினைக்கிறாய் ஆனால் நீ ஒரு முட்டாள்

  34. அப்துல்லா,

    ’பெண்களை சைட் அடிப்பதுதான்’ உங்களுக்கு பிரச்சினையாக தெரிகிறது என்றுதான் உங்களது விவாதத்திலிருந்து என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. சரியா திருவாளர். அப்துல்லாஹ்.

  35. //ஒரு கொள்கையை விமர்சிப்பதற்கு முன்னால் அதை தெளிவாக அறிந்து வைத்திருப்பது சிறந்தது.//

    அபதுல்லாஹ்
    பதில் சொல்லும் முன் கேள்வி என்ன? ஏனிந்த கேள்வி என்பதையும் புரிந்து கொண்டு பதில் சொன்னால் நல்லது. இதைக்கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல் பதில் சொல்லியுள்ளீர்கள் – அதில், என்னையும் குறை சொல்லிக்கொண்டு!!

  36. நண்பர் செங்கொடி,

    மீண்டும் சொல்கிறேன்,பெண் சுதந்திரம் என்ற பெயரில் ஆணையும் ,பெண்ணையும் உடல் ரீதியாக சமம் என்று கூறி எப்படியாவது பெண்களை ரசித்து விட வேண்டும் என்ற வக்கிர வெறியர்தான் நீங்கள்.இதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

    ஏன் என்றால் மொத்த மனித இனத்தையே அதுவும் ஒரு மிருக இனம்தான் என்று சொல்வதுதான் உங்கள் கோட்பாடு.யாரிடம் இதை நீங்கள் மறைக்க பார்க்கிறீர்கள்.நீங்கள் பெண்கள் விஷயத்தில் இறுதியாக என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாதா?

    சுடிதார் என்பது பெண்களின் அங்கங்களை பாதுகாக்கும் உடையாகும் பட்சத்தில் அதை இஸ்லாம் எதிர்க்கிறது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

    அலங்காரமும், ஆடையும் வேறு வேறாகத்தான் குரானில் கூற பட்டு இருக்கிறது.ஆனால் அலங்காரங்கள் ஈர்க்கும் பாட்சதில் அதையும் மறைக்க வேண்டும் என்று கூறுவது பெண்கள் புர்காவிற்கு மேல் இன்னும் வேறு ஆடைகள் அணிய வேண்டும் என்று குரான் கூறுவதாக சிதரிக்கிரீர்களே.மக்கள் இதை பார்ப்பார்கள் என்பதை பற்றி கவலையே இல்லையா?

    தலைப்பு மாறுவதாக நீங்கள் நினைத்தாலும் பரவா இல்லை.சில விஷயங்களை உடைத்துதான் ஆக வேண்டும்.

    அதாவது ,ஒருவன் இறைவனை உண்மையாக ஓர் அளவுக்காவது அஞ்சினான் என்றால் அந்த இறைவன் சொன்னதுக்காகவது கட்டுப்பாடு என்ற ஒன்றை தனக்கு வகுப்பான்.
    ஆனால் , ஒருவன் சொல்கிறான் //என்னை எவனும் கட்டு படுத்த முடியாது.நீயும் மனிதன்.நானும் மனிதன்.எனக்கு மேலும் ஒருவனும் இல்லை.//என்று கூறி சகட்டுமேனிக்கு வாழ்க்கையை வாழ்ந்தால் இவனுக்கு உங்களின் அறிவுரை என்ன?
    இதற்க்கு பதில் சொல்லுங்கள்.

    குறிப்பு: உங்களை பைத்தியம் என்று சொன்னதற்கு வருந்துகிறேன்.ஏன் என்றால் சில பேருக்கு உண்மையை சொன்னால் கோபம் வந்து சொன்னவர்களியே ஏசுவார்கள்.அப்படி கோபம் வர வைத்ததற்கு வருந்துகிறேன்.நீங்கள் வரம்பு மீறும் போது நானும் வரம்பு மீறுவது தவறில்லை என்று நினைக்கிறேன்.

  37. நண்பர் அப்துல்லா,

    வெறுமனே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குற்றச்சாடுகளுக்கான சான்றுகள் எங்கே? ஒருவரை வக்கிர வெறியர் என குற்றம் சாட்ட வேண்டுமென்றால் அதற்கு உங்கள் விருப்பங்கள் மட்டும் போதாது. ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவோருக்கு என்ன பெயர் என்பது தெரியுமல்லவா? உடல்நலத்தில் கவனம் கொள்ளவும், காதுகள் வழியே புகை வருவது உடல் நலத்திற்கு தீங்கானது. ஆணும் பெண்ணும் சமம் என்பது எப்படி பெண்களை பெண்களுக்கு எதிரான குற்றம் செய்யத் தூண்டும்? ஆணுக்கு கீழ் தான் பெண் என எண்ணுவதே பெண்களுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுகிறது.

    மனிதன் சமூக விலங்கு தான், இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது. பெண்கள் விசயத்தில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்களாகவே மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. வெளியில் சொன்னால் தான், நீங்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என தீர்மானிக்க முடியும்.

    சுடிதார் போன்ற முழுதும் மறைக்கும் ஆடைகள் மட்டும் போதுமானதல்ல என்பதற்கு, அது போன்ற ஆடைகளுக்கு மேலும் புர்கா அணிந்தே பெண்கள் வெளியில் வருவதே போதுமானது, இது முஸ்லீம்கள் மட்டத்தில். பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனத்தில் ”……..ஆகிய இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது” என்பதன் பொருள் என்ன என்று நீங்கள் கூறுங்கள், இது குரான் மட்டத்தில்.

    புர்காவுக்கு மேல் இன்னொரு ஆடை என்று நான் கூறவில்லை. ஆடைக்குமேல் இன்னொரு ஆடை அதாவது ஆடைக்குமேல் புர்கா என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறேன்.

    தலைப்பு மாறி நீங்கள் உடைத்துக்(!) கேட்ட கேள்விக்கு கேள்வி பதில் பகுதியில் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறேன். சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

    உண்மையைச் சொன்னால் கோபம் வரும் என்று கூறியிருந்தீர்கள். உங்களுக்கு கோபம் வந்திருப்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.

    போகட்டும், நான் கூறியிருந்த எதையும் கண்டுகொள்ளவில்லையே ஏன்?

  38. ஆடைக்குமேல் இன்னொரு ஆடை அதாவது ஆடைக்குமேல் புர்கா என்றுதான் குரான் கூறுகிறது. அதற்கு அவ்வசனம் இறக்கப்பட நேர்ந்த சம்பவமே சான்று. இதை செங்கொடி அவர்களும் தெளிவாகவே குறிப்பிட்டும் இருக்கிறார். ஆனால் கம்யூஸ்டாகிய செங்கொடியாகிய கலிலுர் ரஹ்மானை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அப்துல்லா என்ற ஈமான்தாரி தனது வீண் விதாண்டாவாதத்தின் மூலம் அல்லாவிற்கே மாறு செய்ய (சுடிதார் போதும் புர்கா தேவையில்லை என்பதின் மூலம்) இஸ்லாமிய பெண்களைத் தூண்டும் விதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். இல்லை, குரான் சுடிதார் போன்ற உடலை முழுதும் மறைக்கும்படியான ஆடையைப் பற்றிதான் பேசுகிறது என்றால் சவ்தா அவர்கள் அணிந்திருந்த ஆடை அரைகுறையானது என்ற கருத்து உருவாக நேரிடும். அல்லாதான் சவ்தாவையும் காப்பத்தனும், அப்துல்லாவையும் காப்பத்தனும்.

    புஹாரி 146 – ”கழிப்பிடம் நாடி திறந்த வெளிகளுக்கு இரவு நேரங்களில் பெண்கள் செல்வார்கள்.” என்ற இந்த ஹதீதிலிருந்து ஒரு சந்தேகம் எழுகிறது. பெண்கள் செல்லக்க் கூடிய அந்த நேரத்தில், அவ்விடத்தில் உமருக்கென்ன அங்கு வேலை.

    ”மொத்த மனித இனத்தையே அதுவும் ஒரு மிருக இனம்தான் என்று சொல்வதுதான் உங்கள் கோட்பாடு”

    அப்துல்லா! இதை செங்கொடி மட்டும் கூறவில்லை. இதற்கு முன்பு நடந்த விவாதங்களில் சகோ.கள் ஆணின் காமவெறியை விலங்கினங்களிடமிருந்துதான் பொதுமைப் படுத்தினார்கள் என்பதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

    சகோ.தரர்களின் விவாதத்திலிருந்து ஒன்றை புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, ஆணின் பாலியல் உணர்வு கட்டுக்கடங்காதது. அதை அல்லாவாலும் தடுக்கமுடியாது. ஆனால் பொதுவெளியில் ஆண்கள் மார்கழி மாத வெறிநாயைப் போல நடந்து கொள்ளாமல் இருக்க இந்த புர்கா என்னும் மேலாடையை அல்லா பரிந்துரை செய்திருக்கிறார், என்பதைத் தவிர இஸ்லாம் மனிதனை நல்வழிப்படுத்துகிறது, நேர்வழிப்படுத்துகிறது, தூய்மைப் படுத்திகிறது என்று விளங்கிக் கொள்வதற்கு அதில் ஒன்றும் இல்லை. இது அல்லாவின் தவறான புரிதலுக்கு ஒரு சான்று. மேலும், இஸ்.சகோ.களின் வாதம் புர்கா போடாத கலாச்சாரத்தையுடைய பெண்களையும் ஆண்களையும் கொச்சைப் படுத்துவதாக உள்ளது. பரிசீலனை செய்யவும்.

  39. செங்கொடி,
    நான் கேட்ட கேள்விக்கு பதிலை நேரடியாக என்னிடம் கூற சொன்னால் வேறு ஒரு தலைப்பில் போய் பார்க்க சொல்கிறீர்கள்.எனக்கு நேரடியாக் பதில் தாருங்கள் என்று மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன்.

    நான் கொடுத்த பணம் உதாரணத்திற்கு அற்புதமான(?) பதில் எழுதி இருக்கிறீர்கள்.பூ பெண் என்றால் அவள் மீது தண்ணீர் ஊற்ற மாட்டீர்கள் அல்லவா?அது போல் இதையும் புரிந்து கொள்ளுங்கள். பணம் போல் பெண் என்றால் அவளை வீட்டிலே பூட்டி வைப்பது என்பது அர்த்தம் அல்ல.

    மற்றவர்களிடம் இருந்து ,மற்றவர்களின் இயற்கை தன்மையில் இருந்து எந்த ,எந்த விஷயங்களில் எல்லாம் அவள் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டுமோ அந்த விஷயங்களில் எல்லாம் அவள் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    பெண்ணின் அழகில் மயங்குவது ஆணாதிக்கத்தின் விளைவு என்றால் ,மருத்துவ ரீதியாக உணர்வு அடிப்படையிலே ,பெண்ணின் உடல் கட்டமைப்பு அடிப்படையிலே பெண்ணும் ஆணை போல் கடின தன்மை வாய்ந்தவள்தான் என்பதை நிரூபித்து விடுங்களேன்!விஷயம் எளிதாக முடிந்து விடும்.அது மட்டும் இல்லாமல் செயல் ரீதியாகவும் பெண்களும் ஆண்களும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்க வேண்டும்.அது எப்படி என்பதை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

    அது எப்படி அய்யா மார்க்கம் அனுமதித்த எல்லையை மீறி பேசாதே என்று ஒரு ஆணுக்கு கட்டளை இட்டு இருப்பது போல் உடை விஷயத்திலும் அவன் கண்ணியமாக நடக்க வேண்டும் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.ஆனால் பெண் விஷயத்தில் அவள் உடல் அமைப்பை வைத்து கொஞ்சம் கூடுதலாக பாதுகாப்பாக இருக்க சொல்கிறது அவ்வளவுதான்.இதைதான் ஒரு பார தூரமான விஷயமாக காட்டி உங்கள் என்னத்தை நிறைவேற்ற பார்க்கிறீர்கள்.பெரிய பதவிகளில் எல்லாம் இருக்கும் பெண்கள் தங்கள் உடலை மறைப்பதானால் அவர்கள் முன்னேற்றத்திற்கு என்ன இழுக்கு வந்து விட்டது.அந்த உடையை பெண்ணடிமை தனத்திற்கு ஒரு சான்றாகதான் அவர்கள் எல்லாம் எடுத்து கொண்டார்களா?

    உடலை மறைக்கும் ஆடையையும் அலங்காரத்தையும் உங்களுக்கு வழங்கி உள்ளோம் என்று கூறி விட்டு உங்கள் அலங்காரங்களை குறிப்பிட்ட நபர்களை தவிர வெளி காட்ட கூடாது என்றால் அலங்காரம் என்பது ஒரு தனி ஆடை என்று எவனாவது கூறுவானா?நீங்கள் கூறுவீர்கள் .ஏன் என்றால் பெண்களை உடைகளை கழட்ட வைப்பதுதானே உங்கள் திட்டம்.நீங்கள் கண்டிப்பாக கூறுவீர்கள்.

    போகிற போக்கில் ஆடைக்கு மேல் புர்கா என்று உலருகிரீர்கள்.இதற்க்கு என்ன சான்றை வைத்தீர்கள் ?எந்த குரான் வசனம் இப்படி கூறுகிறது.?எப்படி இவ்வளவு அப்பட்டமாக உங்களால் புலம்ப முடிகிறது ?இன்றைய பெண்கள் மார்க்கம் என்ற பெயரில் ஏதாவது செய்தால் அதற்க்கு இஸ்லாம் பொறுப்பா?இப்படிதான் ஒரு கொள்கையை ஆராய்வதா?

    நீங்கள் உங்களுடைய வாதங்களில் சுய சொறிதல் என்று கூறினால்,நான் என்னுடைய வாதங்களில் சவுக்கடி என்ற வார்த்தையை உபயோக்கிக்க கூடாதா?
    ஆனால் நான் சவுக்கடி என்று சொன்னது என்னுடைய கொள்கை உறுதி அடிப்படியிலே உங்கள் பலவீன வாதத்தை வைத்து சொன்னேன்.நீங்கள் சுய சொறிதல் என்று சொன்னது வாய் சவ்டாலுக்காக.இதுதான் வித்தியாசம்.

    //உண்மையைச் சொன்னால் கோபம் வரும் என்று கூறியிருந்தீர்கள். உங்களுக்கு கோபம் வந்திருப்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.//என்று கூறி இருக்கிறீர்கள்.

    உண்மைதான் .எனக்கும் கோபம் வருகிறது.இது பகுத்தறிவுள்ள மனிதனுக்கு வருவது.ஆனால் உங்களுக்கு வந்திருக்கும் கோபம் நம்மை பைத்தியம் என்ற உண்மையை வெளிப்படுத்தி விட்டானே என்பதற்கான கோபம்.இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.
    மீண்டும் சொல்கிறேன் நீங்கள் வரம்பு
    மீறினால் எனக்கும் வேறு வழி இல்லை.

  40. இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றும் சில அல்லது பல ஆண்களுக்கு பெண்களை புர்க்கா, பர்தா இல்லாமல் பார்க்கும் போது வக்கிர உணர்வு ஏற்படுகிறது என்றால், இஸ்லாமிய நல்ல மனம் கொண்ட பெரியவர்கள், வசதி படைத்தவர்கள் புர்க்கா, பர்தா அணியாத பெண்கள் மீது வக்கிரமான பார்வையை தடுப்பது தொடர்பாக இஸ்லாமிய ஆண்களுக்கு அறிவூட்டும் திட்டங்களை தொடங்கலாம். அதைவிட்டுவிட்டு பெண்களை புர்க்கா, பர்தா போடு என்று நிர்பந்திப்பது மகா கொடுமை.

  41. நண்பர் அப்துல்லா,

    வக்கிர புத்தியுள்ளவன் என என்னை குற்றம் சாட்டியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டிருந்தேன். நீங்கள் ஆதாரம் தர வேண்டும் அல்லது வருத்தம் தெரிவித்து அதை திரும்பப்பெற வேண்டும். மாறாக அமைதியாக இருப்பதை ஏற்க முடியாது.

    நாம் வாதித்துக் கொண்டிருக்கும் பேசுபொருளில் கேட்டால் அது குறித்து உங்களுக்கு பதில் கூறுவதில் எனக்கு மறுப்பு ஒன்றுமில்லை. ஆனால் தொடர்பற்று பேசுபொருளுக்கு வெளியே கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு பதில் தருவது முதன்மையானது அல்ல. ஆனாலும் அது போன்ற கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டிருக்கிறது என்பதால், நீங்கள் அவசியப்பட்டால் அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள். அவசியப்படவில்லை என்றால் விட்டு விடுங்கள். இந்த விசயத்தில் என்னை நீங்கள் வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ முடியாது.

    பெண்ணை பணத்துடனான ஒப்பீட்டில் நீங்கள் கூறியது என்ன? \\ இதன் மீது எவனாவது ஆசை பட்டு இதை எடுக்க வேண்டும் என்று முயற்சித்தால்,நான் எப்படி வேண்டுமானாலும் என் பணத்தை போடுவேன் நீ எப்படியடா திருடுவாய் என்று கேட்பீர்களா?// இதன் பொருள் என்ன? தொடர்ச்சியாக, உயிரற்ற பொருட்களோடு பெண்ணை ஒப்பிட்டிருக்கிறார்கள் என பிரிதொருவருக்கான பின்னூட்டத்தில் \\பெண்ணை பூ என்கிறார்களே ?அதை எல்லாம் விமர்சிக்க உங்களுக்கு ஏன் நா எழ வில்லை// இப்போது நீங்கள் கூறுவது \\பணம் போல் பெண் என்றால் அவளை வீட்டிலே பூட்டி வைப்பது என்பது அர்த்தம் அல்ல. மற்றவர்களிடம் இருந்து ,மற்றவர்களின் இயற்கை தன்மையில் இருந்து எந்த ,எந்த விஷயங்களில் எல்லாம் அவள் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டுமோ அந்த விஷயங்களில் எல்லாம் அவள் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்// என்றால் பெண்களுடன் பணத்தை ஒப்பிட்டு நீங்கள் கூறியதன் பொருள் என்ன? எந்த அடிப்படையில் அல்லது எந்த தன்மையில் நீங்கள் பணத்துடன் ஒப்பிட்டீர்கள்? விளக்கமளியுங்கள். தன்னை ஒரு பெண் எந்த அடிப்படையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ அந்த அடிப்படையில் அவள் தன்னை பாதுகாத்துக் கொள்வாள். ஆனால் இதில் உங்களின் அல்லது உங்கள் மதத்தின் நிலைப்பாடு என்ன? தன்னுடைய அங்கங்களை மறைத்து என்ன விதமான ஆடையை பெண் அணிந்திருந்தாலும் அதற்கு மேலாக ஒரு உடையை பெண் அணிய வேண்டும். அப்படி அணிவது தான் அவளுக்கு பாதுகாப்பு, கண்ணியம், இத்யாதி, இத்யாதி. சரி, இந்த கவச ஆடை சட்டமாக்கப்பட்டதன் பின்னணி என்ன? பெண்களின் விருப்போ, கருத்தோ, சம்மதமோ கேட்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதா? (இந்த இடத்தில் ஆண்களிடமும் அவர்களின் ஆடை குறித்து கருத்து கேட்கப்படவில்லை என குறுக்குச் சால் ஓட்டவேண்டாம். ஆடையும், புர்காவும் ஒன்றல்ல. ஆடை அணிவது குறித்து எந்த கருத்து வேறுபடும் இல்லை. அதற்கு மேலான கவச ஆடையும், அது தான் பாதுகாப்பு எனும் மத நிர்ப்பந்தமுமே பிரச்சனை)

    ஓர் ஆண் தன்னுடைய மதம் அங்கீகரித்த அளவில் என்ன ஆடை வேண்டுமானாலும், சட்டை வேட்டியோ, சட்டை பேன்டோ, டீசட் ஜீன்ஸோ, முழு அங்கியோ, சல்வார்கமீசோ, அல்லது இதுபோன்ற வேறு எந்த வடிவ ஆடைகளையோ உடுத்திக் கொண்டு என்றும், எங்கும், யார்முன்னிலும் சென்று வரலாம். இதற்கு எந்த தடையும் மதரீதியாக இல்லை. ஆனால் இது போன்ற உடலை மறைக்கும் எந்த வடிவ ஆடையையும் அணிந்து ஒரு பெண் வெளியில் சென்று வர மதம் அனுமதிக்கவில்லை. இங்கு போதிய அளவில் பெண் ஆடையணிந்திருந்தாலும் இது மறுக்கப்படுவது ஏன்? இதைத்தான் ஆணாதிக்கமாக குறிப்பிடுகிறோம். அதுவும் ஆணுக்கு நான்கு பெண்கள்வரை திருமணம் முடிக்க அனுமதியிருந்தும், எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் கையாள அனுமதியிருந்தும் அதையும் மீறி பெண்களை கவச ஆடைக்குள் பூட்டிவைப்பது தான் பெண்களுக்கு பாதுகாப்பு என மதரீதியாக வற்புறுத்தினால் அது ஆணாதிக்கமா? இல்லையா? இதுதான் கேள்வி.

    \\ இன்றைய பெண்கள் மார்க்கம் என்ற பெயரில் ஏதாவது செய்தால் அதற்க்கு இஸ்லாம் பொறுப்பா?// உலகில் புர்கா அணியும் பெண்கள் அறியாமல்தான் அணிகிறார்கள் என்பது உங்கள் கருத்தா? புர்கா அணியும் பெண்கள் அனைவரும் உள்ளே கண்ணியமான ஆடையை அணிந்து தான் இருக்கிறார்கள். அப்படி ஆடை அணிந்திருந்தும் புர்கா அணிவது அவர்களின் அறியாமையா? என்றால் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள், சுடிதார் போன்ற ஆடைகள் அணிந்திருக்கும் நிலையிலும் புர்கா அணிந்து வெளியில் வருவது தேவையற்றது, அப்படி வருபவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்று. நீங்கள் இன்றைய நிலையில் அப்படி ஒரு சமரசத்திற்கு வந்தாலும் அது குரான் வசனத்தை மீறியது என்பதே உங்கள் மத நிலைபாடு.

    கட்டுரையில் நான் குறிப்பிட்டிருக்கும் வசனம் தெளிவாக குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட சில உறவினர்களை தவிர ஏனையர்கள் முன் அழகலங்காரங்களுடன் வரவேண்டாம் என்று. அழகலங்காரம் என்பது ஆடையை உள்ளடக்காது என்றால் குறிப்பிட்ட அந்த உறவினர்கள் முன் நிர்வாணமாக வரலாம் என பொருள் கொள்ள முடியும். அது தான் அந்த வசனத்தின் பொருள் என கருதுகிறீர்களா? அல்லது அது ஆடையையும் உள்ளடக்கும் என்றால் தன் அங்கங்களை மறைத்து என்ன ஆடை அணிந்திருந்தாலும் அதையும் மறைத்துத்தான் வெளியில் வரவேண்டும் எனும் பொருளில் இன்று பெண்கள் புர்கா அணிவது சரி என்றாகும். இப்போது நீங்கள் குழப்பாமல் பதில் கூறுங்கள் அந்த வசனத்தின் பொருள் என்ன?

    ஆணும் பெண்ணும் சமம் என்று எந்த அடிப்படையில் கூறுகிறோம்? மனிதப்பிறப்பு எனும் அடிப்படையில், உணர்வின் அடிப்படையில், அறிவின் அடிப்படையில், ஆணுக்கு இருப்பதாக கருதப்படும் அனைத்து தகுதிகளும் பெண்ணுக்கும் உண்டு எனும் அடிப்படையில். ஆனால் உடலியல் ரீதியில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கின்றன. இதை வைத்துக் கொண்டு ஆணுக்கு பெண் கீழானவள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அறிவின் எந்த எல்லையில் என்றாலும் ஆணும் பெண்ணும் ஒன்றே, சிந்தனைத் திறனில், உழலுழைப்புத் தகுதியில், போராடும் துணிவில், திட்டமிடும் திறனில் எந்த விதத்திலும் ஆணுக்கு பெண் குறைந்தவளல்ல. உடலியல் ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கும் சில வித்தியாசங்களைக் காண்பித்து (கவனிக்கவும் வித்தியாசங்கள், குறைகளல்ல) பெண் தாழ்ந்தவள் ஆண் உயர்ந்தவன் என்றால் அதைவிட அபத்தம் வேறொன்று இருக்க முடியாது. இரண்டு ஆண்களில் ஒருவனைவிட மற்றொருவன் உயரம் குறைவு என்பதால் அவர்களின் தகுதியில் ஒருவன் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என கூற முடியுமா?

    பெண்கள் கூடுதலாக உடையணிவது அவர்கள் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லா? என்பதோ, அவர்கள் அதை சுமையாக கருதுகிறார்களா? என்பதோ இங்கு பிரச்சனை அல்ல. இதையும் நான் கட்டுரையில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அது தான் பாதுகாப்பு, கண்ணியம் என்று மதரீதியாக வற்புறுத்தப்படுகிறதே அதைத்தான் ஆணாதிக்கம் என்கிறோம்.

    \\நீங்கள் உங்களுடைய வாதங்களில் சுய சொறிதல் என்று கூறினால்,நான் என்னுடைய வாதங்களில் சவுக்கடி என்ற வார்த்தையை உபயோக்கிக்க கூடாதா?// என்ன உளரல் இது. யார் முதலில் பயன்படுத்தியது? யார் இரண்டாவது பயன்படுத்தியது? வரம்பு மீறியது யார்? உங்களுக்கு கொள்கை உறுதி இருந்தால் அது உங்களோடு. எனக்கு இருக்கும் கொள்கை உறுதி என்னோடு, இருவரும் பொதுவெளியில் விவாதிக்கும் போது தகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
    நீங்கள் எப்படி எழுதினாலும் நாங்கள் அமைதியாக பதிலளிப்போம் எனும் மனோநிலையில் இங்கு வரவேண்டாம். என்ன சொற்களை நீங்கள் பாவித்திருந்தீர்களோ அதுபோன்ற சொற்களில் பதில் தரப்படும். ஆனால், நீங்கள் பயன்படுத்தியது போன்ற சொல்லாடல்களை நான் இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை. நானும் அதுபோல் பயன்படுத்தத் தொடங்கினால் அது இப்போதைவிட இன்னும் களேபரமாக இருக்கும் அறியவும்.

  42. பெண்களுக்கு பர்தா; அதற்கு நிறைய விளக்கங்கள். அது போதாதென்று ஆண்களும் கீழே பாதம் வரை ஆடை அணிய வேண்டாமென்றும், க்ரண்டைக் கால்களுக்கு மேல் உடையிருக்க வேண்டும் என்று ஒரு இஸ்லாமியர் பதிவில் வாசித்தேன். அல்லா அதைப் பார்த்துக் கொண்டிருப்பாரென்றும் எழுதியிருந்தது. மறு வாழ்வில் அதற்கான தண்டனையோ/ வெகுமதியோ இருக்குமாம்!!!

    பெண்களின் கவர்ச்சியிலிருந்து தப்பிக்க பர்தா. ஆண்கள் பாதங்களை மறைக்கக் கூடாது — இப்படியெல்லாமா ஒரு ‘கடவுள்’ கட்டளை போட வேண்டும். ஆச்சரியமாக மட்டுமில்லாமல், உட்கார்ந்து தண்ணீர் குடி; கொட்டாவி இடாதே; தொழுகையில் வானத்தைப் பார்க்காதே, தாடி வளர்த்துக் கொள்; அதை கலர் அடித்து வைத்துக் கொள்; — இதெல்லாம் பார்க்கும் போது இது ஒரு வேடிக்கையான கடவுளாகத்தான் எனக்குத் தெரிகிறது.

  43. செங்கொடி அவர்களே,
    தருமி போன்று வாதங்களை வைக்காமல் உழருபவர்களை கொஞ்சம் கவனித்து அவர்களது பதிவுகளை பதிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

  44. செங்கொடி அவர்களே,

    உங்களை வக்கிர புத்தியுள்ளவன் என்று சொன்னதற்கு ஆதாரம் தர வேண்டும் என்றால் முதலில் நான் உங்களிடம் கேட்ட ஒரு கேள்விக்கு வேறு இடத்தில போய் பார்க்க சொல்லாமல் நேரடியாக இந்த களத்திலேயே பதில் அளியுங்கள்.அதில் இருந்து நான் நிரூபிக்கிறேன் உங்கள் வக்கிர புத்தியை.அது மட்டும் இல்லாமல் உங்கள் பதிலில் பெண் அதிகமான ஆடை அணிவதுதான் இங்கு பிரச்னை என்பது போலவும்,இதைதான் இஸ்லாம் கூறுவது போலவும் கூறினால் நீங்கள் பெண்களை மதிப்பது போல் காட்டி கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?உங்களால் அது முடியாது.

    உங்கள் கொள்கை எந்த வகையிலும் பெண் ஆணிற்கு குறைந்தவள் அல்ல என்பதுதான்.இந்த தலத்தில் பல்டி அடித்து சில விஷயங்களில் வித்தியாசம் உள்ளது என்று கூறி அறிவியலின் முன்னால் நிற்க முடியாமல் கூனி,குறுகி கேவலப்பட்டு நிற்கிறீர்களே.இதற்க்கு மேலும் விவாதிக்க உங்களுக்கு மனம் வருமா?வரும் என்றால் ……..

    நான் பெண்ணை பணத்துடன் ஒப்பிட்டது பணத்தை கண்டால் எப்படி பொதுவான ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வரம் படி அவனது தன்மை அடங்கி உள்ளதோ அது போல்தான் ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணிற்கு வரும் ஈர்ப்பும் உள்ளது.அந்த பெண் ஈர்ப்பு வர கூடிய வாசலை தன்னால் இயன்ற வரை அடைக்க வேண்டும்.இதுதான் நான் பெண்ணை பணத்தோடு ஒப்பிட்டதன் நோக்கம்.நீங்கள்தான் கூறினீர்கள் பெண்ணை பூவோடு ஒப்பிடுவது ஒரு தனி பட்ட பண்பிர்க்காக என்று.அது பணத்திற்கு பொருந்தாதா?நிச்சயமாக அவளை உயிர் அற்ற பொருளாக காண்பிப்பதற்கான ஒப்பீடு அல்ல அது..இது உங்கள்க்கும் தெரியும்.சிந்திக்கிறேன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் ஒரு வேலையை செய்கிறீர்கள்.அவ்வளவுதான்.

    பெண்ணின் உடையை நிர்ணயிப்பதற்கு யாரிடம் அனுமதி கேட்டீர்கள் என்று கேட்கிறீர்கள் .நான் திரும்ப கேட்கிறேன் மனிதன் உடை அணிந்து வெளியில் நடமாடுவதுதான் நாகரீகம் என்று நீங்கள் யாரிடம் அனுமதி கேட்டீர்கள்?
    உங்களுக்கு நாகரீகம் என்று பட்டால் அனுமதி கேட்க்க வேணாம்.இல்லை என்றால் அனுமதி கேட்க்க வேண்டும் இப்படிதான் சிந்திப்பதா?

    அதாவது இங்கு ஜீன்சா,வெட்டியா என்பது பிரச்னை அல்ல.கவர கூடிய பகுதிகள் மறைக்க பட்டிருக்கிறதா?என்பதுதான் பிரச்னை.நீங்கள் சொன்ன ஆடைகளில் நிச்சயம் பெண்கள் போக பொருள் ஆக்க படுவார்கள்.அதற்க்கு காரணம் நீங்களே சொன்ன ஆணிற்கும் பெண்ணிற்கும் உள்ள வித்தியாசம்.

    ஆணிற்கு நான்கு மனைவி என்பது சுகமா?சோதனையா?தமிழகத்தில் வாழும் ஆண்களிடம் இதை ஒரு கணக்கெடுப்பு நடத்தி பாருங்கள்.அப்புறம் உங்களுக்கு தெரியும்.இதை பெண்ணிற்கு அனுமதிகாததும் நீங்கள் மேற சொன்ன விதியாசதினால்தான்.

    ஒரு பெண் தன உடல் முழுவதையும் அழகான முறையிலே ,கவர்சிக்குரிய பாகங்கள் வெளியில் தெரியாத வகையிலே ஆடை அணிந்து அதற்க்கு மேலே வேறு ஒரு ஆடை அணிவாலேயானால் அது அவள் விருப்பம்.அதே சமயத்தில் இஸ்லாம் கட்டுபடுதாத ஒன்றை உலகமே சேர்ந்து செய்தாலும் அது நிச்சயம் இஸ்லாம் ஆகாது.இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல.உங்கள் கொள்கையானாலும் நீங்கள் இதைதான் சொல்ல வேண்டும்.

    அலங்காரங்களை இவர்களை தவிர மற்றவர்களிடம் காட்டாதீர்கள் என்றால்,அனுமதிக்கப்பட்ட ஆண்களின் முன்னால் நிர்வாணமாக நிற்பதா?என்று கேட்கிறீர்கள்.
    இதற்க்கு பொதுவாக மனிதர்களை நோக்கி “கண்ணியம் என்பது முக்மீங்களுக்கு உரியது “என்று குரான் பேசுகிறது.ஒரு தகப்பனார் முன்னாலும் சரி ,யாருக்கு முன்னாலும் சரி தங்களுடைய மறைவிடங்களை அவர்கள் மறைக்க வேண்டும் என்பதை இந்த வசனம் தெளிவாக குறிப்பிடுகிறது.சகாபி பெண்கள் தன்னுடைய தகப்பனார் முன்னிலையில் எப்படி இருந்தார்கள் என்பதையும் ஹதீஸ்கள் பேசுகின்றன.இது போக உள்ள அலங்காரங்களை மற்றவர்கள் பெண்கள் காட்ட கூடாது என்பதை நீங்கள் சுட்டி காட்டிய வசனம் குறிப்பிடுகிறது.
    இது வெல்லாம் உங்களுக்கு தெரியாது என்று நிச்சயம் நான் நினைக்க வில்லை.நிச்சயம் தெரியும்.இஸ்லாம் பெண்களை அடிமை படுத்துகிறது என்பதை எப்படியாவது கண்ணை மூடி கொண்டு நிரூபித்து விட்டால் பின்பு ஒழுங்காக இருக்கும் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் அரை குறை ஆடை கலாசாரத்தை கொண்டு வந்து விடலாம் அல்லவா.அதற்காகத்தானே இந்த முயற்சி?

    ஒரு ஆண் குள்ளமானவன் ,ஒரு ஆண் உயரமானவன் என்றால் யாரும் இதை குறை பாடு என்று கூற மாட்டார்கள்.குள்ளமானவனை கண்டால் உய்ரமானவனுக்கு அடிக்க வேண்டும் என்ற தன்மை இயற்கையாக மருத்துவ ரீதியாக இருக்கிறது என்றால் ,நிச்சயம் குள்ளமானவனுக்கு பரிகாரம் சொல்லியே ஆக வேண்டும்.அது போல்தான் பெண்ணின் ஈர்ப்பும் ,ஆண்களின் பார்வைகளும் அமைந்திருக்கிறது.

    பெண்கள் கூடுதலாக உடை அணிவது மார்க்க ரீதியாக கட்டாயம் என்பதை மறுக்க வில்லை.ஆனால் அது கட்டாயம் ஆக்க படாத நேரத்தில் ஏற்படும் விளைவுகளை கணக்கில் கொண்டால் அதில் நியாயம் நூறு சதவிகிதம் புரியத்தான் செய்கிறது.

    இனிதான் பெரிய தமாசை எழுதி இருக்கிறீர்கள்.ஒரு பக்கம் நீங்கள்தான் சொல்கிறீர்கள் //என்ன சொற்களை நீங்கள் பாவித்திருந்தீர்களோ அதுபோன்ற சொற்களில் பதில் தரப்படும்//என்று.இதற்க்கு அர்த்தம என்ன?நான் ”சவுக்கடி ”என்று பயன்படுதியத்ர்க்காகதான் நீங்கள் ”சுய சொறிதல் ” என்று பயன்படுத்தி இருக்கிறீர்கள்.அப்படிதானே.
    அதே நீங்கள் மீண்டும் பிரண்டுகிட்டு சொல்கிறீர்கள் //நீங்கள் பயன்படுத்தியது போன்ற சொல்லாடல்களை நான் இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை.//என்று.நான் உங்களுக்கு கொடுத்த அடை மொழி சரிதான் என்பதை இப்படியெல்லாமா நிரூபிப்பது.!!!

    இது போதாதென்று ரஜினி பட வசனம் வேறு ….ரஜினி ரசிகர்கள் யாராவது இருந்தால் செங்கொடியின் அந்த வாசகத்தை கீழே தருகிறோம் பயன்படுத்தி கொள்ளுங்கள் …

    // நானும் அதுபோல் பயன்படுத்தத் தொடங்கினால் அது இப்போதைவிட இன்னும் களேபரமாக இருக்கும் அறியவும்- செங்கொடி //

  45. நண்பர் அப்துல்லா,

     

    \\என்ன சொற்களை நீங்கள் பாவித்திருந்தீர்களோ அதுபோன்ற சொற்களில் பதில் தரப்படும். ஆனால், நீங்கள் பயன்படுத்தியது போன்ற சொல்லாடல்களை நான் இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை//  இங்கே தனித்துக் காட்டப்பட்டிருக்கும் சொற்களின் காலம் புரியவில்லை என்றால், சென்று ஒரு தமிழாசிரியரிடம் கற்று வாருங்கள். உங்களுக்கு இலக்கணம் கற்பிக்கும் சுமையை என்னிடம் ஏற்றாதீர்கள். இதுவரை நீங்கள் என்னை சுட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கும் சொற்கள், \\உன் போன்றவர்களுக்கு சவுக்கடி// \\உங்கள் இனம் என்றால், பெண்ணை போக பொருளாக ஆக்கி அவளை இறுதி வரை ரசித்து தொலைக்கும், வக்கிர இனம்// \\உங்களுடைய வக்கிர புதியைதான்// \\வக்கிர வெறியர்தான் நீங்கள்// \\எவனாவது கூறுவானா?நீங்கள் கூறுவீர்கள்// \\உங்களால் புலம்ப முடிகிறது// \\வாய் சவ்டாலுக்காக// \\நீங்களாக உளறினால்// \\கூனி,குறுகி கேவலப்பட்டு நிற்கிறீர்களே// \\மக்களை ஏமாற்றும் ஒரு வேலையை செய்கிறீர்கள்// இது போன்ற சொற்களையெல்லாம் பயன்படுத்தித்தான் உங்கள் இஸ்லாத்தை எடுத்துக் காட்டமுடியுமா? இது போன்ற சொற்களையெல்லாம் நான் இன்னும் பயன்படுத்தத் தொடங்கவில்லை. நான் செய்திருப்பது நீங்கள் சவுக்கடி என்றதனால் இது போன்ற சுய சொரிதல்களை தவிர்க்க முயலுங்கள் எனும் சுட்டல் தான். இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு. என்னை வக்கிர வெறியன் எனக் கூறியதற்கு நீங்கள் ஆதாரம் தரவேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பதில் சொன்னால்… இதற்கு பதில் சொன்னால்…. என்று நிபந்தனை விதிக்கும் வாய்ப்பு உங்களிடம் இல்லை. உங்களின் தொடரும் பதிவில் இது குறித்து இல்லையென்றல், நீங்கள் பயன்படுத்தியிருக்கும் சொற்களைவிட அதிகப்படியான சொற்களால் உங்களை விளிக்க என்னை அனுமதிக்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கொள்வேன்.

     

    \\உங்கள் கொள்கை எந்த வகையிலும் பெண் ஆணிற்கு குறைந்தவள் அல்ல என்பதுதான்.இந்த தலத்தில் பல்டி அடித்து சில விஷயங்களில் வித்தியாசம் உள்ளது என்று கூறி அறிவியலின் முன்னால் நிற்க முடியாமல் கூனி,குறுகி கேவலப்பட்டு நிற்கிறீர்களே.இதற்க்கு மேலும் விவாதிக்க உங்களுக்கு மனம் வருமா?வரும் என்றால் ……..// இதன் பொருள் என்ன? நான் என்ன பல்டி அடித்திருக்கிறேன். எந்த விதத்தில் நான் கூனிக் குறுகி நிற்கிறேன். இதற்கும் நீங்கள் விளக்கம் கூறியாக வேண்டும்.

     

    \\பணத்தை கண்டால் எப்படி பொதுவான ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வரம் படி அவனது தன்மை அடங்கி உள்ளதோ அது போல்தான் ஒரு பெண்ணின் மீது ஒரு ஆணிற்கு வரும் ஈர்ப்பும் உள்ளது// என்று இப்போது குறிப்பிடும் நீங்கள் பணத்துடனான ஒப்பீட்டை கூறும் போது இந்த தன்மையை குறிப்பிடவில்லை. மாறாக, பணத்தை பூட்டி வைப்பது போல் பெண்ணை (புர்கா மூலம்)பூட்டி வைக்க வேண்டும் என்று கூறினீர்கள். \\இதன் மீது எவனாவது ஆசை பட்டு இதை எடுக்க வேண்டும் என்று முயற்சித்தால்,நான் எப்படி வேண்டுமானாலும் என் பணத்தை போடுவேன் நீ எப்படியடா திருடுவாய் என்று கேட்பீர்களா// ஆக முதலில் நீங்கள் ஒப்பிட்டது அந்த ஈர்ப்பை மட்டும் தான் என்றால், அந்த ஒப்பீட்டின் மூலம் புர்காவை நீங்கள் நியாயப் படுத்தியிருக்க முடியாது. எனவே நீங்கள் முதலில் ஒப்பிட்டது பூட்டும் தன்மையைத் தானேயன்றி ஈர்க்கும் தன்மையை அல்ல. இவ்வளவு தானா உங்கள் கொள்கை உறுதி.

     

    நான் என்னுடைய பதிவில் தெளிவாகவே வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன். ஆணின் உடைக்கோ, பெண்ணின் உடைக்கோ யாரிடமும் கருத்து கேட்கப்பட வேண்டியதில்லை. ஆடைக் கலாச்சாரம் என்பது சமூகப் போக்கில் படிப்படியாக வளர்ந்து வருவது. ஆனால் அதற்கும் மேலாக ஒரு கவச ஆடையை திடீரென பரிந்துரைத்து அது தான் பெண்களுக்கான பாதுகாப்பு கண்ணியம் என்று கூறி வற்புறுத்தினால் அங்கு பெண்களின் கருத்து கோரப்படவில்லை என்பதையே நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் புர்கா கலாச்சாரம் வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டதல்ல, பெண்கள் மீது திணிக்கப்பட்டது. என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.

     

    \\கவர கூடிய பகுதிகள் மறைக்க பட்டிருக்கிறதா?என்பதுதான் பிரச்னை.நீங்கள் சொன்ன ஆடைகளில் நிச்சயம் பெண்கள் போக பொருள் ஆக்க படுவார்கள்// இப்படி கூறியிருப்பது நீங்கள், \\இன்றைய பெண்கள் மார்க்கம் என்ற பெயரில் ஏதாவது செய்தால் அதற்க்கு இஸ்லாம் பொறுப்பா// என்று கூறியிருப்பதும் நீங்கள் தான். அதாவது சுடிதார் போன்ற முழுதும் மறைக்கும் ஆடைக்கு மேல் புர்கா அணிவது தேவையில்லாதது என்று கூறியிருப்பதும் நீங்கள் தான். சுடிதார் போன்ற ஆடைகளில் பெண்கள் போகப்பொருள் ஆக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பதும் நீங்கள் தான். முதலில் உங்கள் வாதம் என்ன? அதை எப்படி சொல்கிறீர்கள்? என்பதை முடிவு செய்துவிட்டு எழுதுவது உங்களுக்கு சிறந்தது.

     

    தமிழ்நாட்டில் எல்லா முஸ்லீம்களும் நான்கு திருமணம் புரிந்திருக்கிறார்கள், அதை ஏன் பெண்களுக்கு அனுமதிக்கவில்லை என்றா நான் கேட்டிருக்கிறேன். அல்ல. ஆண்களுக்கு நான்கு திருமணமும் எத்தனை அடிமைப் பெண்களையென்றாலும் அனுபவிக்கலாம் என்று ஆண்களின் பலதார வேட்கையை அங்கீகரித்து சட்டமாக்கியுள்ள குரான் அதற்கு மேலும் ஆண்கள் அலைபாய்ந்து விடக்கூடாது என்பதற்காக பெண்களை கவசமணியச் சொல்கிறது. இது ஆணாதிக்கமா இல்லையா என்பதே என் கேள்வி. இதற்குத்தான் நீங்கள் பதில் கூற வேண்டும். நீங்களோ பதில் என்ற பெயரில் நான் கேட்காததை கூறியிருக்கிறீகள்.

     

    குறிப்பிட்ட அந்த வசனம் சில உறவினர்களைத் தவிர ஏனையோர் முன் பெண்கள் தங்கள் அழகலங்காரத்துடன் வரவேண்டாம் என்று தடுக்கிறது. இந்த அழகலங்காரம் என்ற சொல்லின் பொருள் என்ன?  அலங்காரம் பிளஸ்(+)  ஆடை என்பதா?  அலங்காரம் மைனஸ்(-) ஆடை என்பதா? இந்தக் கேள்வியில் தான் பெண்கள் ஆடைகளுக்கு மேல் புர்கா அணியவேண்டுமா? ஆடையே போதுமா? என்பதற்கான பதில் அடங்கியிருக்கிறது. ஆனால் நீங்களோ குழப்பாமல் பதில் கூறுங்கள் என நான் கேட்டுக் கொண்ட பிறகும் தெளிவாக குழப்பியிருக்கிறீர்கள். மீண்டும் கேட்டிருக்கிறேன், குழப்பாமல் பதில் கூறுங்கள்.

     

    என்னுடைய நேரத்தை வீணாக்காமல் தெளிவான, குறிப்பான பதில்களைக் கூறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  46. ஆண்களுக்கு நான்கு திருமணமும் எத்தனை அடிமைப் பெண்களையென்றாலும் அனுபவிக்கலாம் என்று ஆண்களின் பலதார வேட்கையை அங்கீகரித்து சட்டமாக்கியுள்ள குரான் அதற்கு மேலும் ஆண்கள் அலைபாய்ந்து விடக்கூடாது என்பதற்காக பெண்களை கவசமணியச் சொல்கிறது. இது ஆணாதிக்கமா இல்லையா ?

    ஒருவனுக்கு ஒருத்தி

    004:003.

    And if you fear that you cannot be just to the orphans,
    then you may marry those who are agreeable to you of the women: two, and three, and four.

    But if you fear you will not be fair,
    then only one,
    or whom you maintain by betrothal.

    This is best that you do not face financial hardship.

    ————————————————————————————
    குரான் குறிப்பிட்ட சிலரிடம் குறைந்தபட்ச ஆடையும் தவிர பிறரிடம் அதனினும் சற்று ஆடையில் பேணுதலையும் வலியுறுத்துகிறது.

    007:026.

    We have sent down for you garments
    to alleviate your bodies,as feathers*;

    024:030.

    Tell the men to lower their gaze and keep covered their private parts, for that is better for them.

    024:031.

    And tell the females
    to lower their gaze and keep covered their private parts,
    and that they should not reveal their beauty except what is apparent,
    and let them put forth their shawls over their cleavage.
    And let them not reveal their beauty except to their husbands,
    or their fathers, or fathers of their husbands,
    or their sons, or the sons of their husbands,
    or their brothers,
    or the sons of their brothers,
    or the sons of their sisters,
    or their women,
    or those by betrothal,
    or the male servants who are without need,
    or the child who has not yet understood the composition of women.
    And let them not strike with their feet* in a manner that reveals what they are keeping hidden of their beauty.
    *catwalk

    033:059.

    Tell your wives,
    your daughters,
    and the women of the believers that they should lengthen upon themselves their outer garments.
    That is better so that they will not be recognized and harmed.

    quranist@aol.com

  47. அப்துல்லாஹ்
    உங்களிடமிருந்து பொறுப்பான வாதங்களையும், ஒழுங்கான சொற்களையும் எதிர்பார்த்தது தவறுதான். உங்கள் எழுத்தே உங்களை நன்கு காண்பித்துக் கொடுக்கிறது.
    செங்கொடிக்கு இருக்கும் பொறுமை எனக்கில்லை.

  48. காஃபிர் தருமி,
    பொறுமை பொறுமை.

    வெகு விரைவில்

    1)அல்லாஹ் என்ற தெய்வம் உண்டு

    2) மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற பெயரில் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபியாவில் வழிப்பறி கொள்ளைக்காரராகவும், கொலைவெறியராகவும், அன்னிய மத பெண்களை கற்பழிப்பவராகவும், தன் சீடர்களின் மனைவிகளையும் அமுக்கியவராகவும், தாவூத் இப்ராஹிமை விட பெரிய தாதாவாகவும் வாழ்ந்த ஒருவரிடம் அந்த அல்லாஹ் ஏதோ சொன்னான்

    3)அந்த ஏதோதான் அல்குரான் என்பதை எல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிடுவார் நமது அப்துல்லாஹ்

    இதற்காக முஸ்லீம்களிடம் மற்றவர்கள் 1400 ஆண்டுகளாக நிருபணம் கேட்டுகொண்டிருக்கிறார்கள். வந்த பாடில்லை.

    1400 ஆண்டுகளாக நடக்காத ஒன்றை இப்போது அப்துல்லாஹ் நிரூபிக்கப்போகிறார் என்று ஆவலுடன் காத்துகொண்டிருக்கிறேன் நீங்கள் என்னடாவென்றால்…பொறுமை இல்லை என்கிறீர்கள்.

    பொறுமை பொறுமை

  49. முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள் என்று நமது ஆண் முஸ்லீம்கள் இணையத்தில் பல வீடியோக்களில் ஆவணப்படுத்தியிருப்பது நாம் அறிந்த விஷயம்தான்.

    முஸ்லிமாக்கள் ஏன் குரானை எட்டி உதைக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்பதை பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

    ஏன் முஸ்லிமாக்கள் குரானை எட்டி உதைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

  50. Question:

    Does the Quran Require Women to Wear the Veil?

    One of the most visibly contentious issues in Islam as well as in the Western world is women’s wearing of the veil . To western feminists, the veil is a symbol of oppression. To many Muslims, it can equally be a symbol and an act of empowerment, both for its explicit rejection of Western values and its implicit meaning as a status symbol: many Muslims see the veil as a sign of distinction, the more so because it evokes a connection to the Prophet Muhammad and his wives. But does the Quran, in fact, require women to cover themselves–with a veil, a chador or any other form of head covering?

    Answer:

    The quick answer is no: the Quran has no requirement that women cover their faces with a veil, or cover their bodies with the full-body burqua or chador, as in Iran and Afghanistan. But the Quran does address the matter of veiling in such a way that it has been interpreted historically, if not necessarily correctly, by Muslim clerics as applying to women.

    quranist@aol.com

  51. செங்கொடி அவர்களே மொழிபயர்பாலர்களின் கருத்தை கொண்டு நீங்கள் குரானை விமர்ச்ப்பது அறியாமையாகும்
    மேலும் நீங்கள் குறிப்பிட்ட குரானின் வசங்களிளிருந்து அல்லா பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிலே வரைமுறைகளை
    கூறுகின்றானே தவிர அது எந்தவிதத்தில் ஆணாதிக்கமாகும். பெண்களை அவர்களின் சில பாகங்களை மறைத்து கொள்ளுமாறு
    கூறுவது ஆணாதிக்கமா ? முதலில் ஆணாதிக்கம் என்றால் என்ன என்பதை விவரியுங்கள்

  52. நண்பர் அஸ்கர்,

    முதலில் நீங்கள் பதிவையும், பின்னூட்ட விவாதங்களையும் படித்துவிட்டு வாருங்கள்.

  53. உலகில் இன்னும் ஒரு மதம் தனது வம்சத்தை விருச்சிக்கும் மாதர் குலத்துக்கு மாணிக்கங்களை அடிமையிலும் அடிமையாக வைத்திருக்கிறது என்றால் அது இஸ்லாமிய மதம் தான். பிறந்தது முதல் சுடுகாட்டுக்கு போகும் வரை அவர்கள் வாழ்வு அடிமையாகவே இருட்டிலேயே கிடக்கிறது. வெளிச்ச ரேகைகள் அவர்கள் வாழ்வில் தெரிவதேயில்லை. வெளிச்சத்தை தேடி அவர்களை சொல்லவும் விடுவதில்லை அந்த ஆணாதிக்க மதம்.

    கறுப்பு அங்கி என்ற ஒன்றை உடல் முழுக்க போட்டு மறைத்து இன்றளவும் இந்தியாவில் பெண்களை, பெண் குழந்தைகளை சுத்தவிடுகிறது என்றால் அது இஸ்லாமிய சமுகம் மட்டும் தான். கேட்டால், இது எங்களது மதகோட்பாடு என்கிறார்கள். எந்தயிடத்தில் இஸ்லாமிய கேட்பாடு பெண்களை அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் எனக்கூறியது ?. மசூதிக்கு தொழுகை செய்ய போக கூடாது என்றது. தங்களது ஆணாதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள கொள்கை என்ற முகமுடியை ஆண் சமுகம் மாட்டிக்கொண்டது. காலப்போக்கில் அது இஸ்லாத்தை தவிர்த்து மற்ற மதத்தில் செல்லா காசாகி வந்தன, வருகின்றன.

    இதை கண்டு, உணர்ந்தே வந்த இஸ்லாமிய சமூக ஆணாதிக்கவாதிகள் படிப்பதால் தான் இந்த நிலையென பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புவதேயில்லை. ஆண்களும் அதிகம் படிப்பதில்லை என்கின்றனர் இஸ்லாமிய நண்பர்கள். படித்தால் கேள்வி கேட்பார்கள், மத கோட்பாட்டை மீறுவார்கள் என யூகித்து கொள்கை என்ற முகமுடியை இரும்பால் போட்டு மூடி அவர்களை அடிமையாகவே வைத்திருக்கிறார்கள் இஸ்லாமிய பிற்போக்குவாதிகள்.

    உலகின் பல நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இந்த அடிமைத்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கி அணிவதை தடை செய்துள்ளன. ஆனால் அப்படி வாதத்தை உருவாக்கக்கூட இந்தியாவில் ஒருவரும் இல்லை என்பதே வேதனைக்குறியது.

  54. பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் – பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள்

  55. ஜிஹாப் எனும் பெண்க‌ளுக்கான‌ ஆடை(ப‌ர்தா): ஆண்க‌ளின் காம‌ப்பார்வையிலிருந்து பெண்க‌ள் த‌ங்க‌ளை காத்துக்கொள்ள‌ இஸ்லாம் வ‌ழ‌ங்கிய‌ கொடை இந்த‌ ப‌ர்தா எனும் ஆடை என்ப‌து இஸ்லாமிய‌ வாதிக‌ளின் வாத‌ம். அணியும் ஆடைக‌ள் தொட‌ர்பாக‌ ஆண்க‌ளுக்கு குறிப்பிட‌த்த‌குந்த‌ க‌ட்டுப்பாடு எதியும் வ‌ழ‌ங்காத‌ இஸ்லாம் பெண்க‌ளுக்கு அனேக‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்துள்ள‌து. பெற்றோர்க‌ள் க‌ண‌வ‌ன் உட்ப‌ட்ட‌ நெருங்கிய‌ சில‌ உற‌வின‌ர்க‌ளை த‌விர‌ ஏனைய‌வ‌ருக்கு த‌ங்க‌ள் ஆடை அல‌ங்கார‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடாது. இருக்க‌மான‌ ஆடைக‌ளை அணிய‌க்கூடாது. தோலின் நிற‌ம் தெரிய‌க்கூடிய‌ அல்ல‌து தோலின் நிற‌த்திலுள்ள‌ ஆடைக‌ள் அணிய‌க்கூடாது. முக‌ம் முன்கைக‌ள் த‌விர‌ ஏணைய‌ பாக‌ங்க‌ள் அனைத்தும் ம‌றைக்க‌ப்ப‌ட்டிருக்க‌வேண்டும் இப்ப‌டிப்ப‌ல‌. பெண்ணை பாலிய‌ல் ப‌ண்ட‌மாக‌ப்பார்ப்ப‌த‌ன் நீட்சிதான் இது. ஆணின் காம‌ப்பார்வைக்கு நான்கு ம‌னைவிக‌ளையும் கூடுத‌லாக‌ அடிமைப்பெண்க‌ளையும் த‌ந்துவிட்டு அவ‌ன் பார்வையிலிருந்து த‌ப்பிக்க‌ பெண்க‌ளை க‌வ‌ச‌ம‌ணிய‌ச்சொல்வ‌து குரூர‌மான‌ ந‌கைச்சுவை. இப்ப‌டிக்கூறுவ‌த‌ன் மூல‌ம் இன்றைய‌ முத‌லாளித்துவ‌ உல‌கின் பெண்ணை காட்சிப்பொருளாக்கும் சீர‌ளிவுக்க‌லாச்சார‌த்திற்கான‌ ஆத‌ர‌வு என‌ யாரும் த‌வ‌றாக‌ எண்ணிவிட‌லாகாது. பெண்ணின் ஆடையை ஆணின் வ‌க்கிர‌ப்பார்வை தீர்மானிக்க‌லாகாது என்ப‌துதான். முழுக்க‌ முழுக்க‌ ம‌றைத்துவிட்டு ஒற்றை விர‌ல் ம‌ட்டும் தெரிந்தாலும் அதையும் வெறித்துப்பார்க்க‌வைப்ப‌து ஆணின் வ‌க்கிர‌மேய‌ன்றி பெண்க‌ளின் உட‌ல‌ல்ல‌. த‌வ‌று ஆண்க‌ளிட‌ம் த‌ண்ட‌னை பெண்க‌ளுக்கா? பார்வை இருக்க‌ட்டும் கேட்க‌க்கூசும் வார்த்தைக‌ளால் அர்ச்சிக்கிறார்க‌ளே பெண்க‌ள் வெளியில் வ‌ரும்போது காதுக‌ளை ப‌ஞ்சால் அடைத்துக்கொண்டுதான் வ‌ர‌வேண்டும் என்று ச‌ட்ட‌ம் செய்ய‌லாமா? பொது இட‌ங்க‌ளுக்கு வ‌ந்தால் உர‌சுவ‌த‌ற்காக‌வே க‌ட‌ந்துபோகிறார்க‌ளே என்ன‌செய்ய‌லாம்? ப‌ர்தாவை இரும்பால் நெய்து கொள்ள‌வேண்டும் அதுவும் உட‌லைவிட்டு அரை அடி த‌ள்ளியிருப்ப‌துபோல் தைத்துக்கொள்ள‌வேண்டும் என‌த்திருத்த‌ம் கொண்டு வ‌ர‌லாமா?

    பொதுவாக‌ ஆணின் பாலிய‌ல் வெறி அல்ல‌து அதீத‌ பாலிய‌ல் உண‌ர்வு என்ப‌து ச‌மூக‌த்திலிருந்து வ‌ருவ‌து. உட‌லுற‌வு என்ப‌து இன‌ப்பெருக்க‌த்திற்கான‌து என்ற‌ இய‌ற்கையை தாண்டி அது இன்ப‌மாக‌ நுக‌ர்வாக‌ ஆன‌து தான் பெண்க‌ள் மீதான‌ பாலிய‌ல் கொடுமைக‌ளுக்கான‌ தொட‌க்க‌ப்புள்ளி. எல்லாம் தெரிந்த‌ ஆண்ட‌வ‌ன் இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்துதான் அந்த‌க்குற்ற‌த்தை பார்த்திருக்க‌வேண்டும். இந்த‌ தொட‌க்க‌ப்புள்ளியிலிருந்து தான் தீர்வை தொட‌ங்கியிருக்க‌வேண்டும். ஆனால் ஆணின் காம‌ உண‌ர்வை இன்ப‌ நுக‌ர்வாக‌ அங்கீக‌ரித்துவிட்டு அதிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காக‌ பெண்க‌ளுக்கு ஆடைக்க‌ட்டுப்பாடு விதிப்ப‌து எந்த‌ வ‌கையில் பெண்க‌ளுக்கு க‌ண்ணிய‌த்தை த‌ரும் என்று ம‌த‌வாதிக‌ள் கூற‌வேண்டும்.

    சாட்சிய‌த்தில் பெண் ஆணில் பாதி(2:282), போர்க்கைதிக‌ளோடு உற‌வுகொள்ள‌ அனும‌தி(33:50), ம‌னைவியை அடிப்ப‌த‌ற்கு அனும‌தி(4:34), க‌ண‌வ‌ன் உற‌வுக்கு அழைத்து ஏதாவ‌து கார‌ண‌த்தால் ம‌னைவி ம‌றுத்தால் விடியும் வ‌ரை வான‌வ‌ர்க‌ளால் ச‌பிக்க‌ப்ப‌டுவாள்(புகாரி) போன்று பெண்ணை இழிவுப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ள் குரானிலும் ஹ‌தீஸிலும் ஏராள‌ம் உண்டு. இவைக‌ளையெல்லாம் ம‌ற‌ந்துவிட்ட‌ ந‌ண்ப‌ர் டென்தாரா பைபிளின் வ‌ச‌ன‌ங்க‌ளை சுட்டிக்காட்டியுள்ளார். பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ஆணோ பெண்ணோ ந‌ம்பிக்கை கொண்டு ந‌ல்ல‌ற‌ம் செய்தால் அவ‌ர்க‌ளை ம‌கிழ்ச்சியான‌ வாழ்க்கை வாழ‌ச்செய்வோம். அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ளின் கூலியை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவோம்(16:97) என்ப‌ன‌போன்ற‌ ஆணையும் பெண்ணையும் பொதுவாக‌ பாவிப்ப‌து போன்று தோற்ற‌ம் ஏற்ப‌டுத்தும் வ‌ச‌ன‌ங்க‌ளும் குரானில் உண்டு. ஆண், பெண்ணின் ந‌ல்ல‌ற‌ம் எது என்று பார்த்தால் அங்கே பேத‌ம் ப‌ல்லிளிக்கிற‌து.

    பெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது.

  56. @ அப்துல்லா
    “உண்மைதான் .எனக்கும் கோபம் வருகிறது.இது பகுத்தறிவுள்ள மனிதனுக்கு வருவது.”

    செம காமெடி !

  57. நான் நாத்திகன் ,////பெண்க‌ளுக்கான‌ க‌ண்ணிய‌மும், ம‌திப்பும் காக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால், ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டும். ஆணாதிக்க‌ம் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டுமென்றால் த‌னியுட‌மை த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டும். த‌னியுட‌மையை த‌க்க‌வைத்துக்கொண்டு பெண்ணிய‌ம் பேச‌முடியாது.///

    நான் நாத்திகன் ,இது எழுதுவதற்காக மட்டுமா?
    உங்களது சொந்த வாழ்க்கையில் ஆணாதிக்கத்தையும் தனியுடமையினையும் எந்த அளவில் தவிர்த்து வருகிறீர்கள்?

    ///பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ////
    முற்போக்குத்தனமான உங்களிடம் இல்லாத எந்த ஆணாதிக்கம் மதவாதிகளிடம் உள்ளது?

  58. செங்கொடியின் எல்லா எழுத்துக்களையும் நான் தொடர்ந்து படித்துக்கொண்டு வருகிறேன். அவர் சொல்லும் எல்லா செய்திகளும் இஸ்லாமியர்களுக்கு அமிலம் ஊற்றியது போல தகிக்கிறது.இஸ்லாமையோ அல்லது அதை சார்ந்த எதையாவதையோ விமர்சித்தால் உடனே காட்டு கூச்சல் போட்டுக்கொண்டு ஒரு அரேபிய பட்டாளமே களத்தில் குதித்து விடுகிறது.மூளை இல்லாமல் பின்னூட்டம் இடும் அந்த வெறுப்பை உமிழும் கூட்டத்திற்க்கு அறிவு அவியலாகி போய் விடுகிறது. எல்லா வற்றிக்கும் எங்கள் குரானை முழுமையாக படி. அதை அரபியில் படி. அதை இப்படி படி, அப்படி அர்த்தம் கொள் என்று நமக்கே கட்டளை இடுகிறது. அதே போலதானே எல்லா மதமும். இதே அளவுகோல் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதே இந்த குல்லா சகாக்களுக்கு தெரிவதில்லை. இந்த பதிவில் செங்கொடி நாகரீகமான முறையில் இஸ்லாமின் பிற்போக்குத்தனத்தை சம்மட்டியால் அடித்து துவைத்திருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அப்துல்லா வகையறாக்கள் கண்ணா பின்னா என்று மூளை மழுங்கிப்போன நிலையில் குடிகாரன் அளவுக்கு உளறி கொட்டுகிறார்கள். இஸ்லாமை விமர்சிப்பது தேவையானதுதான்.அதற்கு பதில் சொல்ல விரும்பும் அரேபிய அடிமைகள் குர்ஆனில் அல்லா சொல்வது போல அறிவை உபயோகித்து சொல்லட்டும். கடைசி வரை செங்கொடியின் சவாலுக்கு துணிச்சலுடன் பேச தைரியம் இல்லாமல் கோழை போல பர்தாவுக்குள் ஒளிந்து கொண்ட அப்துல்லா வகையறாக்களே, இந்து கிருஸ்துவத்தில் உள்ளது போல உங்கள் பாலைவன் மதத்திலும் சுதந்திரம் இருந்தால் உங்கள் கூடாரமே காலியாகிவிடும் என்ற பயத்தினால்தானே ஒரு மனிதனின் உளறலை இப்படி கெட்டியாக பிடித்துகொண்டு வாய்ச்சவடால் அடிக்கிறீர்கள். செங்கொடியின் தொண்டு வளரட்டும்.

  59. dear friends

    thanks for your wishes to us and i agree you are the genius in this world.

    first answer my question and continue your comment

    i have two chocolates first one is wrapped with paper and another one is uncovered.after five minutes most of the fly will taste the uncovered chocolate(that is nature -in this chocolate is the girls and flys are boys) which one you will prefer to eat.say the answer

    will you marry the girl which is tasted by many boys.so that we protect the girls

  60. இஸ்லாமின் பர்தாவும், அதன் பாவ வரலாறும் – பர்தா! புர்கா!! ஹிஜாப்!!

    கப்சா கடவுளானாலும், கள்ள இறைதூதர் என்றாலும், குற்றம் குற்றமே! விளக்கங்கள், காரணங்கள், நியாயங்கள், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!!
    மனசாட்சியே கடவுள். உனக்கு பிறர் செய்ய விரும்பாததை, நீ பிறருக்கு செய்யாதே!! உனக்கு வந்தால் வேதனை, மற்றவருக்கு வந்தால் வேடிக்கை என்று வாழாதே!!

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
    அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.- திருக்குறள்:148

    உண்மை கதையின் நாயகன்: முகம்மது
    உண்மை கதையின் நாயகி : ஸைனப் பின்த் ஜஹ்ஷ்
    உறவு முறை : முகம்மது நபியின் மருமகள். வளர்ப்பு மகன் ஸைத் இப்னு ஹாரிஸ் அவர்களின் மனைவி.

    அதிக தகுதி : நல்ல அழகி. வயது: 35. குலம்: குறைஷி
    புதுமொழி: மருமகள் மகளை போன்றவள்! மையல் கொள்ளாதே!!
    நிஜம் : அன்றைய பாலைவன சமவெளி உண்மை சம்பவம்!! இன்றைய சிந்து சமவெளி படம்!!.

    முன்னுரை: இஸ்லாமிய பெண்கள் போடும் பர்தா கண்ணியமானதா? இல்லையா? போட வேண்டுமா? வேண்டாமா? என்று சிந்திக்கும் முன்பு , பர்தா ஏன் வந்தது? எப்படி வந்தது? யாரால் வந்தது? யாரை காக்க வந்தது? என்ன காரணத்தால் வந்தது? யார் செய்த தப்பால் வந்தது? யாருடைய நிர்பந்தத்தினால் வந்தது? என்கிற பர்தா வந்த மூலக்காரணத்தை முதலில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    சம்பவம்: இஸ்லாமின் இறைதூதர் முகம்மது நபி தன் வளர்ப்பு மகன் ஸைத் இப்னு ஹாரிஸ் அவர்களின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஷ்த்தை அபகரித்து கல்யாணம் செய்யும் வரை, அரேபியாவில் இந்த பர்தா போடும் வழக்கம் கிடையாது. மேலும் குரானில் பர்தா என்கிற வார்த்தை கிடையாது. ஒரு நாள் முகம்மது தன் வளர்ப்பு மகன் ஸைத் இப்னு முஹம்மத் வீட்டிற்க்கு, அவன் இல்லாத நேரத்தில் செல்கிறார். அப்போது மருமகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்வை பார்க்க கூடாத கோலத்தில் கவர்ச்சியாக பார்த்து விடுறார். அவளின் சொக்க வைக்கும் பேரழகை கண்டவுடன், அவள் மேல் மோகம் கொண்டு, அவள் அழகின் மேல் ஆசை கொண்டு, அவளை அடைந்து விட வேண்டும் என மனதுக்குள் எண்ணினார். பிறகு தன் மகனை விவாகரத்து செய்ய வைத்து, இவர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்வை மணந்துக்கொள்கிறார். மேலும் அந்த கல்யாண விருந்துக்கு வந்த மூன்று பேர், வலீமா மணவிருந்து சாப்பிட்டு விட்டு போகாமல், அங்கேயே இருந்து விடுகிறார்கள். அவர்கள் போகாமல் இருப்பதால், முகம்மது முதலிரவுக்கு போக முடியாமல் தவிக்கிறார். அவர்கள் போன உடன் முகம்மது, தன் மனைவிக்கும் மற்றவர்களுக்கும் இடையே பர்தா போடுகிறார். இப்படித்தான் நபி மனைவிகள் பிறரின் கண்களிலிருந்து தப்பிக்க பர்தா போடும் வழக்கம் வந்தது.
    நபிகள் தன் மருமகளின் அழகை பார்த்து அபகரித்தது போல், வேறு யாரும் நபியின் மனைவிகளின் அழகை பார்த்து அபகரித்து விடக்கூடாது என்கிற சுயநல நோக்கில், அவர் மனைவிகளுக்கு போட்டது தான் இந்த பர்தா. உலகில் தன் மருமகளை கட்டின முதல் ஆள் முகம்மது நபி. ஒரு தப்பு செய்தவனே, தான் செய்த தப்பை பிறர் செய்யக்கூடாது என்று சட்டம் போட்டானாம். சிரிப்பாய் இல்லை. ஒரு கறுத்த சம்பவத்தால் போடப்பட்டதால் தான், இந்த பர்தா கறுத்து இருக்கிறது.

    பத்து ஆதாரங்கள்:

    1) [ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஸைனப் தாம் எனக்கு அழகிலும், நபி அவர்களின் அன்பிலும் போட்டியாக இருந்தார்கள்.] இதிலிருந்து மகனின் மனைவி நல்ல அழகி என்பதை அறியலாம். (ஸஹீ புகாரி ஹதீஸ் : 2661)
    2) [ஆயிஷா(ரலி) கூறினார்: இறைத்தூதர் அவர்கள் தம் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களின் அறையில் தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் அதிக நேரம் தங்கி விடுவார்கள்] மகனின் மனைவி அழகியாததால், அவளிடம் அதிக நேரம் செலவிடும் தூதர்.( ஸஹீ புகாரி ஹதீஸ்: 5267)
    3) [அனஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி அவர்கள், ஸைனப் அவர்களுக்காக, வலீமா மணவிருந்தளித்த அளவு, வேறு எவரை மணந்தபோதும், மணவிருந்தளிக்க நான் கண்டதில்லை.] மகனின் மனைவியை கல்யாணம் செய்யும் போது தான் பெரிய விருந்து கொடுத்துள்ளார். இதிலிருந்து மகனின் மனைவி மேல் அதிக மோகம் கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.( ஸஹீ புகாரி ஹதீஸ்: 5168)
    4) முகம்மது நபிகள் தன் மருமகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் மீது மனதில் ஆசைகொண்டது. (குரான் 33:37;34:54 ஸஹீ புகாரி ஹதீஸ் 4787).
    5) நபியின் உள்மன ஆசையை தெரிந்துக்கொண்டு மருமகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்யை, கல்யாணம் செய்ய அல்லா அனுமதி கொடுத்த வசனம் (குரான் 33:37)
    6) நபி மனைவிகள் மற்றவர்களுடன் பேசாமல், பழகாமல், மோகம் கொள்ளாமல், ஓடிப்போகாமல் இருக்க பர்தா வசனம். (குரான் 33:53; ஸஹீ புகாரி ஹதீஸ் 4792)
    7) உமர் இப்னு கத்தாப்பின் கருத்துக்கேற்ப அல்லாவின் பர்தா வகி வசனம். (ஸஹீ புகாரி ஹதீஸ் 4790;6240) (உமரின் கருத்து கூட அல்லாவின் குரானாக(???) மாறியுள்ளது
    8) உமர் இப்னு கத்தாப்க்கு பயந்து பர்தா போட்ட நபி மனைவிகள். (ஸஹீ புகாரி ஹதீஸ் 6085 )
    9) நபி வீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கு பயந்து நபி மனைவிகளுக்கு பர்தா போட்டது அல்லது நபி மனைவிகளிடம் உரையாட வருபவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ள பர்தா போட்டது. (ஸஹீ புகாரி ஹதீஸ் 402)
    10) இரவு நேரத்தில் கழிப்பிடங்களுக்கு போகும் போது பர்தா அவசியமில்லை. வெட்கத் தலங்களை மட்டுமே மறைக்க வேண்டும். (குரான் 24:31; ஸஹீ புகாரி ஹதீஸ் 146,147)

    பத்து கேள்விகள்:-
    1. தன் மருமகளை ஒரு இறைதூதர் கட்டலாமா?
    2. தன் மாமி மகளானாலும் அடுத்தவன் மனைவி அல்லவா?
    3. ஒரு அழகி என்பதற்காக தன் வளர்ப்பு மகனை விவாக ரத்து செய்ய வைத்து கட்டியது சரியா?
    4. இவள் உறவு முறை உரிமை என்றால் கதீஜா உயிரோடு இருக்கும் போது இவளை ஏன் கட்டவில்லை. கதீஜாவுக்கு பயந்தா?
    5. பிம்பம் அல்லாவே இந்த காரியத்துக்கு வசனம் கொடுத்து துணைப்போவது சரியா?
    6. மனைவிகள் எதிர்த்தும், அடைக்கலம் கொடுத்த மெதீனாவாசிகளின் விருப்பத்திற்கு மாறாக ஏன் இவளை கட்டினார்.
    7. ஒருவனை கட்டயாப்படுத்தி விவாகரத்து செய்யவைத்து, அவன் மனைவியை ஊர் கூட்டி வலீமா விருந்து கொடுத்து கல்யாணம் செய்வது இறைதூதருக்கு ஆகுமா?
    8. தந்தைக்காக மகன் விவாகரத்து செய்தது உலகத்தில் இதுதான் முதல் செயல்.
    9. நபிகளுக்கு பல மனைவிகள் இருந்தும், இப்படி ஏன் பலர் மனைவியை அபகரித்தார்.
    10. இவளை கல்யாணம் செய்ய, இந்த கல்யாணத்தை நியாயப்படுத்த, இந்த தப்பை சரி செய்ய, இந்த தப்புக்கு விளக்கம் கொடுக்க அல்லா எதனை வசனங்களை குரான் மூலம் இறக்கினான்.

    முடிவுரை:-
    பர்தா என்பது நபி செய்த பாவத்தால், நபி மனைவிகளை மற்றவர்களிடமிருந்து மறைக்க, நபி மனைவிகளை மற்றவர்களிடமிருந்து பாதுக்காக்க, மற்றவர்கள் நபி அபகரித்து போல், அபகரிக்காமல் இருக்க நபி மனைவிகள் மேல் போடப்பட்டது. நபி மனைவிகளுக்கு மட்டும் தான் இந்த பர்தா முறை உண்டு. மற்ற பெண்கள் குரான் 24:31 படி வெட்கத் தலங்களைப் பேணிக்காத்தால் போதும். முந்தானையால் மார்பை மறைத்தால் போதும். ஜனநாயக நாட்டில் ஆணும், பெண்ணும் சமம். ஆணுக்கு பெண் அடிமையில்லை. மதத்தால் பெண்கள் அடிமையாகக்கூடாது.

  61. குறையேதுமில்லை
    திரையிட்டு வந்தேன்;
    உன் இச்சைக்கொண்ட பார்வைக்கு
    எச்சில் துப்பி எதிர்ப்பேன்!

    அரைநிர்வாணம்
    அழகாய் தோன்றும் உனக்கு;
    உன் அக்காள் தங்கை காட்டி வந்தால்
    முழுக்கோபம் எதற்கு!

    மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும்
    மணக்கவேண்டும் உனக்கு;
    மானங்கெட்ட மானிடனே
    மனைவியை பூட்டிவைக்கிறாய் எதற்கு!

    போர்த்தியிருக்கும் எங்களை
    கழட்டச் சொல்லி கேட்கிறாய்;
    கழட்டி வந்த பெண்களிடம்
    கைவரிசையைக் காட்டுகிறாய்!

    மானம் காக்க மறைத்திருப்பது
    சிறையென்று நீ நினைத்தால்;
    ஒத்துக்கொள்கிறேன் ஒளிந்திருக்கிறேன்
    உனக்காகத்தான்; தப்பிப்பதற்கு!

  62. ஆணோ பெண்ணெ உடையில் ஒரு கண்ணியம் தேவை. பெண்களைப் பொருத்த மட்டில் 1 கண்ணாடி போல் உடலைக்எடுத்துக்காட்டாத 2. உடலை இறுகப்பிடிக்காத உடை 3. உடலை முழுமையாக மறைக்கக் கூடிய 4.வசதியாக இருக்கக் கூடிய உடை ஏற்புடையதே.துப்பட்டா முறையாக அணிந்து சல்வார் கமமீஸ் பெண்களுக்கு பொருத்தமான உடைதான்.வயிறு முதுகு போதிய அளவில் மறைக்கப்பட வேண்டும். ஜாக்கெட் கழுத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். … இப்படி நாம் ஒரு பொதுவான இலக்கணத்தை வகுத்துக் கொள்வது அவசியமானதே.
    ஆண்கள் ஏற்கனவே தங்கள் உடலை முழுமையாக மறைத்துதான் உடையணிகின்றனர். முழு கை
    மேல்சட்டை, முழுகால் சட்டை அணிந்த ஆடவன் உடலில் பாரக்க எந்தக் கவர்ச்சியும் இல்லை. பெண்கள் தான் உடைவிசயம்தில் வேண்டாத வேலைகள் அத்தனையும் செய்து வருகின்றனர். சினிமாவில் பாருங்களேன. பெண்களுக்கு அவர்கள் கொடுக்கும் உடைகளை.

  63. நான் நாத்திகன் ,இது எழுதுவதற்காக மட்டுமா?
    உங்களது சொந்த வாழ்க்கையில் ஆணாதிக்கத்தையும் தனியுடமையினையும் எந்த அளவில் தவிர்த்து வருகிறீர்கள்?
    ///பெண்ணை ஆணாதிக்க‌த்திற்கு ப‌லியாக்கும் பிற்போக்குத்த‌ன‌த்திற்கு எந்த‌ ம‌த‌மும் விதிவில‌க்க‌ல்ல‌. ////
    முற்போக்குத்தனமான உங்களிடம் இல்லாத எந்த ஆணாதிக்கம் மதவாதிகளிடம் உள்ளது?

  64. Let me tell you one example, ஒரு Flex board athula oru car and a girl, two sentence eluthirukku ” intha salugai indru mattumea indrea ootti sellungal” nnu eluthirukku antha board la, etha oottittu poga sollirukkanga antha car a ya? antha ponnaya? etha ? Muslims ponnungala kaatchi porula paakkarathilla athaan cinema ,modeling forbid pannirukku.oru Boy ku oru girl a paatha thappana paarvai rendhu matter naala 1. udal angam 2. face. silar scooty la pogum pothu face cover panniruppanga. dust padama irukkanumnu appa face cover panna thappilla.athayea purthannu pottaa thappa? oru prostitute podara dress eppadi irukkum oru heroine dressing eppadi irukkum? avanga saree, flower vechuruppanga but heroine? yaar dress better?
    unga peachukkea varea
    புர்கா
    அணியாத பிற (மதத்து)
    பெண்களையெல்லாம் என்னவோ
    ஆண்களுக்கு
    வலைவிரிக்கிறவர்கள்,
    கூப்பிடுகிறவர்கள் என்கிற
    ரேஞ்சுக்கு இவர்கள் எழுதுவது
    அருவெறுப்பான ஒன்று, மதம்
    சொல்லுது அணிகிறேன் என்று
    சொல்லிவிட்டுப் போ, அதை ஏன்
    பெண்களின் குண நலனாக,
    கண்ணியம் என்றெல்லாம்
    பிதற்றுகிறீர்கள்
    intha range ku Muslims sollala Muslims kku partha mukkiyam.
    unga peachukku reply pannanumna don’t mistake me” oruthanukku kaatta veandiyatha oorukkea kattara ponnunga kanniyama irukkaanga. , oruthanukku mattum kaattanum nenaikkara muslims kanniyam illathavanga.?ethana fans padam nalla irukkunnu movie paakkaranga.? movie mattum paakka varavangala iruntha then why thappana movies varuthu ? aabaasam aadaila illa, paakaravanga kannula thaan nna kannula chilly powder thuvittu kaaram kannula illa chilly powder thaan nnu sollara mathiri irukku .ungalukku unga karuthu best muslims ku avanga kattuppadu pearusu. athu avanga wish. neenga eppadi interfere pannalaam ?
    Islam pathi ippadi sollareengalea, Hindu la ponnunga arakora dress pottathila. kannagi , seethai ellam karpukkarasi, oru devan thanna alaga irukkannu sonna reason naala angayea statue aana ponnunga irukkaanga avanga thaan karpukkarasi. avanga onnum arakora dress pottathilla. neengala arakora dress pottu olunga dress podara ponnungala aanathikkanmu sollareenga remember ungalukku ellam ippatha sothu urimai but muslims ku 1400 varusathukku munnadiyea quran la irukku. ippa sollunga ethu aanathikkam. etha Muslims veetla husband drink pannityu vanthu adikkaraanga sollunga.unga kannulatha kora irukku kanna sari pannunga okay. entha comments veana podunga naan answer pandrea

  65. சகோதரி ரபியா,

    புர்கா குறித்த இந்தக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை நன்றாக படித்துப் பாருங்கள். அதில் நான் கூறியிருப்பதற்கும் நீங்கள் எழுதியிருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. புர்கா என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்றால் அதில் நான் குறுக்கே வரவில்லை என்று தான் எழுதியிருக்கிறேன். அங்கங்களை மறைத்து சிறந்த விதமாக ஆடை உடுத்தியிருந்தாலும் அதையும் மறைத்து புர்கா அணிந்து தான் பொது இடங்களுக்கு வர வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. இதைத்தான் நீங்களும் உங்களைப் போன்றோரும் கடைப்பிடித்து வருகிறீர்கள். இது சரியா? இது ஆணாதிக்கமில்லையா? என்பது தான் என்னுடைய கேள்வி. இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். மற்றப்படி உங்கள் பிளக்ஸ் போர்ட், உள்ளிட்ட உங்களின் எடுத்துக்காட்டுகளெல்லாம், நான் எழுதியிருப்பதற்குள் அடங்காது.

    இன்னும் நன்றாக படித்துப் பாருங்கள். அவ்வளவு தான்.

  66. இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

  67. இஸ்லாத்தை பொறுத்தவரை எதுவும் கட்டாயம் இல்லை, விரும்புகிறவர் ஏற்கலாம் , விரும்பாதவர் ஏற்க்கத்தேவை இல்லை , மேலதிகமாக புரக்க தேவை என்று பெண்கள் நிற்க்கும் பட்சத்தில் தேவை இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் யார்? புரக்க போடாதவர்களுக்கு உரிமை இருப்பது போல் , போடுபவர்களுக்கு உரிமை இருக்கிறது, மற்ற பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நாங்கள் சொல்வதற்கு அவசியம் இல்லை, எண்கள் பெண்கள் தங்கள் அவயங்களை மாற்றானிடம் காண்பிக்க விரும்பவில்லை, காண்பித்துதான் ஆக வேண்டும் என்று சொல்ல நீங்க யார்? அரைகுறை ஆடையுடன் சினிமாவில் வருவது போல் ஆடையணிவதுதான் சுதந்திரம் என்றால் அணியுங்கள், என்னைப்பார் என் அழகைப்பார் என்று உங்கள் பெண்கள் வீதி உலா வரட்டும் எங்களுக்கு யாதொரு பிரச்சனையும் இல்லை

  68. 2022-ல் அல்லா குல்லான்னுட்டு. போய் வேலைய பாருங்கடா

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்