செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15

குரானின் மலையியல் மயக்கங்கள்

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

மலை குறித்து குரானில் கூறப்படுபவைகள் என்ன? பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார்? ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் மறுக்கவே இல்லை, கேலி செய்திருக்கிறார் அவ்வளவு தான். முதலில் எழுதப்பட்டிருந்ததை விளங்கிக் கொண்டாரா என்பதே ஐயமாக இருக்கிறது.

 

மலைகள் முளைகளாக செயல்படுகின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். எவ்வாறென்றால், இருக்கும் எந்த அடுக்கையும் மலைகள் கடந்து செல்லவே இல்லை. இருக்கும் அடுக்குகளில் எந்த அடுக்கையும் கடந்து சென்றிருக்காத போது; பூமியின் மேற்பரப்பில் இருக்கும் அடுக்கில் மட்டுமே மலைகள் அமைந்துருக்கும் போது அதை முளை என்று கூறுவதே பொருட்பிழையானது.

 

பூமியின் அடுக்குகள் ஒரே சீரான ஆழத்தில் அல்லது அளவில் அமைந்திருக்கவில்லை. ஒவ்வொரு அடுக்கும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான அளவில் இருந்தால் தான் சுழல் வேகம் வெவ்வேறாக இருக்க சாத்தியம் ஏற்படும். ஆனால் பூமியின் மேலோட்டின் எந்த அடுக்கும் சீரான அளவில் இல்லை. அப்படி சீரான அளவில் இல்லாமல் ஏற்றத்தாழ்வாக இருப்பதே தனித்தனி வேகம் பெற்றுவிடாமல் ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு ஒத்த வேகத்தில் சுழல்கிறது. இதில் மலையின் பங்களிப்பு எதுவுமில்லை. இது அறிவியல்.

 

நண்பர் இஹ்சாஸ் பூமி எனும் ஓர் நூலைப் பற்றி குறிப்பிடுகிறார், ஃப்ரான்க் பிரஸ் என்பவர் (இவர் மருத்துவரா? முனைவரா?) அந்த நூலில் என்ன கூறியிருக்கிறார்? குறிப்பாக பக்கம் 435 ல் இது குறித்து அவர் எழுதியிருப்பதை எடுத்துக் கூறினால் அதை பரிசீலிக்கலாம். ஆனால் நான் ஒரு கேள்வியை அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், மலைகள் தான் சுழல் வேகம் வெவ்வேறாகாமல் தடுக்கிறது என்று இஸ்லாமிய பரப்புரையாளர்களான விதந்தோதிகள் பலரும் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். ஆனால் அந்த வேலையை மலைகள் எப்படி செய்கின்றன? என்றால் அதற்கு பதில் கூற யாருமில்லை. கேட்டால் அந்த விஞ்ஞானி கூறியிருக்கிறார், இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்கிறார்கள். ஐயா, அந்த விஞ்ஞானி என்ன கூறினார்? எப்படி விளக்கினார்? புத்தகத்தில் விளக்கப்பட்டிப்பது எப்படி? இதை யாராவது கூறியிருக்கிறார்களா? முதலில் அதைக் கூறுங்கள் பார்த்து விடலாம் அந்த விஞ்ஞ்ஞ்ஞ்ஞான விளக்கத்தை.

 

குறிப்பிட்ட அந்த வசனம் என்ன கூறுகிறது? பூமி உங்களை அதாவது மனிதர்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்திருப்பதாக அல்லா அல்லது குரான் கூறுகிறது. பூமியின் அசைவுகளாக மூன்றுவித அசைவுகளை குறிப்பிட்டிருந்தேன் அந்த பதிவில். 1. நில நடுக்கம், 2. கண்ட நகர்வுகள், 3. பூமியின் சுழற்சி இந்த மூன்றுவிதமான பூமியின் அசைவில் எந்த அசைவை மலைகள் கட்டுப்படுத்துகின்றன? அதன் மூலம் எப்படி மனிதர்களை காக்கின்றன? சும்மா யாரோ சொன்னார்கள் என்பதற்காக ‘டப்பா’ அடித்து ஒப்பிக்காமல் என்ன கேட்கப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் புரிவதற்கு முயற்சிக்கலாம். இதற்கிடையில் நண்பர் இப்படி சலித்துக் கொள்கிறார், \\\இவரது வாதங்களுக்கு விரிவாக பதிலளிக்கும் வகையில் எந்த சரக்குமில்லை.அதனால் மிகச்சுருக்கமாக் பதிலளிக்கப்பட்டுள்ளது/// எதில் சரக்கில்லை? கேள்வியில் சரக்கிருக்கிறது, பதில் கூற முனைந்தவருக்குத்தான் சரக்கில்லை என்பதை அவரது பதிவு உணர்த்தி நிற்கிறது.

 

அறிவியல் வளர வளர அதற்கு தோதாக வசனங்களின் பொருளை மாற்றிக் கொள்வது அல்லது வளைத்து நெளித்துக் கொள்வது என்பது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். அப்படியான வசனம் தான் இது.

 

.. .. .. நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது – ஜான் டிரஸ்ட்

 

.. .. .. நீ பூமியைப் பிளந்து மலைகளின் உயரத்தை அடையவே மாட்டாய் – பிஜே

 

.. .. .. that you will never reach (the) end (of)/tear apart the earth/Planet Earth, and you will never reach the mountains (in) height/length (be as tall as the mountains). – லிடரல்

 

.. .. .. certainly thou wilt never tear the earth open, nor attain the mountains in height. – அர்பெர்ரி

 

.. .. .. for thou canst not rend the earth asunder, nor reach the mountains in height. – யூசுஃப் அலி

 

இது போன்று இன்னும் பல மொழிபெயர்ப்புகளைக் காட்ட முடியும். இவைகளை படிக்கும் போது என்ன புரிந்து கொள்ள முடிகிறது? பூமியைப் பிளந்து விட முடியாது, மலையின் உச்சிக்கு உயர்ந்துவிட முடியாது. இது தான் பொருள் ஆனால் பூமியைப் பிளந்து மலையின் அளவுக்கு என்பது அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்பட்டதோடு சேர்த்துப் படித்தால் வரும் பொருள். அடைப்புக்குறிக்குள் இருப்பது குரான் அல்ல என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது. என்றால் அடைப்புகுறி இல்லாமல் படிக்கும் போதும் அடைப்புக்குறியோடு படிக்கும் போதும் ஏன் இரு வேறு பொருள் தருகிறது அந்த வசனம்? அதில் கிடைக்கும் ‘எக்ஸ்ட்ரா’ பொருளுக்கு பொறுப்பேற்பது யார்? இதில் இருக்கும் இன்னொருஅபாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனையவர்கள் தாம் நினைக்கும் கருத்தை அடைப்புக் குறிக்குள் போட்டுத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பிஜேவோ தாம் நினைப்பதை நேரடியாக குரானாகவே போட்டு வைத்திருக்கிறார். இதை மறுக்க விரும்பும் அரபு மொழியில் புலமை பெற்றவர்கள் அந்த வசனத்தில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதி அவற்றுக்கான பொருளை தனித்தனியாக தமிழில் எழுதட்டும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். மொத்தமாக வாக்கியத்துக்கு பொருள் கூறும் போது தான் தகிடுதத்தம் செய்து விடுகிறார்கள்.

 

சரி, அந்த வசனத்துக்கு பூமியைப் பிளந்து மலையின் உச்சியளவுக்கு என்றே பொருள் கொள்வோம். எந்த மலையின் உச்சியளவுக்கு? ஏனென்றால் பூமியில் நிலத்திலும் கடலிலும் பல்வேறு உயரங்களில் மலைகள் இருக்கின்றன. இதில் எந்த மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியை பிளக்க முடியாது. ஏனுயரமான மலையின் அளவை எடுத்துக் கொள்ள வேண்டும் குறைந்த மலையின் அளவை எடுத்துக் கொண்டால் என்ன? உயரமான மலையளவு தான் என்பதற்கு வழிகாட்டல் ஏதும் இருக்கிறதா? குரானில் ஒரு புள்ளியும் மாறாது என்கிறார்கள். ஆனால், அவர்களே அவர்கள் விரும்பும் கருத்தை குரானாக எழுதி வைக்கிறார்கள். அல்லாவும் அவன் தூதரும் சொல்லாத ஒன்று இஸ்லாம் அல்ல என்கிறார்கள். ஆனால், அவர்களே குரானின் வசனங்களுக்கு முகம்மது சொல்லாத பொருளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

பிஜே இந்த வசனத்தின் பொருளை மேலும் விளக்கும் போது ஒன்றைக் குறிப்பிடுகிறார். மனிதன் வானத்தில் சந்திரனுக்கு சென்று வந்து விட்டான், செவ்வாய் கோளுக்கு இயந்திரங்களை அனுப்பி, எட்டு கோடி கிலோ மீட்டர் தூரத்தை அடைந்து விட்டான் .. .. .. .. என்று கூறிச் செல்கிறார். அதாவது வானில் எட்டு கோடி கிமீ தூரத்தை எட்டி விட்டான் ஆனால் பூமியில் மலையின் அதிக பட்ச உயரமான 9 கிமீ ஆழத்தை அடையவில்லை என்று குரானில் அவர் கூறும் பொருளுக்கு விளக்கம் கூறுகிறார். ஆனால் பூமியின் ஆழத்தில் 12 கிமீ வரை குழாய் இறக்கியிருக்கிறார்கள். என்றால் குரானின் கூற்று பொய்யாகி விட்டதா இல்லையா?

 

குரானின் மொழிபெயர்ப்புகள் குறித்தும் நண்பர் கூறியிருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பு ஒன்றும் ஒதுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு அல்ல. இன்னும் சொல்லப்போனல் பிஜே மொழிபெயர்ப்பு வெளிவரும் வரையில் ஜான் டிரஸ்ட் மொழி பெயர்ப்பு தான் சரியானது என்று தான் பிஜேவினர் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதும் நண்பர் கவனத்திற்கு. இதில் முதன்மைத்தனம் வாய்ந்த ஒரு கேள்வியும் இருக்கிறது. ஏன் கலத்திற்கு காலம் குரான் மொழிபெயர்ப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன? குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. ..? அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும்? ஏனென்றால் புதுபுது அறிவியல் கண்டு பிடிப்புகள் வர வர தோதுப்படும் வசனங்களில் அறிவியலை இணைத்து பொருள்கொள்வதால் தான் பிற்பாடு வரும் மொழிபெயர்ப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது சரி என்றால் குரான் காலாகாலத்திற்கும் மாறாது என்பது எப்படி சரியாகும்? குட்டிக்கரணம் அடித்தேனும் குரானைக் காப்பாற்ற முயல்கிறார்கள் என்பது புரிகிறது. ஆனால், பாவம்! குரான் தான் கிழிந்து கொண்டிருக்கிறது.

 

 

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்      செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨     செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩     செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்       
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫      
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6     
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7     
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8     
 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9     
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10       
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11   
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13 செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14   
 
மின்னூலாக(PDF) தரவிறக்க‌

22 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15

  1. செங்கொடி . ///ஏனையவர்கள் தாம் நினைக்கும் கருத்தை அடைப்புக் குறிக்குள் போட்டுத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பிஜேவோ தாம் நினைப்பதை நேரடியாக குரானாகவே போட்டு வைத்திருக்கிறார். இதை மறுக்க விரும்பும் அரபு மொழியில் புலமை பெற்றவர்கள் அந்த வசனத்தில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவோ அதை எழுதி அவற்றுக்கான பொருளை தனித்தனியாக தமிழில் எழுதட்டும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். மொத்தமாக வாக்கியத்துக்கு பொருள் கூறும் போது தான் தகிடுதத்தம் செய்து விடுகிறார்கள்.////
    இஸ்லாத்தைப் பற்றி நான் என்ன படித்தேனோ ,தனது வாதங்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதுதான் சரி என்று அடம்பிடிக்கும் சாக்லேட்டே , பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,என்றால் அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் பெயரால் ,,,,என்பது நேரடிப்பொருள் .ஒவ்வொரு செய்கைகளையும் துவங்குகையில் இந்த வார்த்தையை சொல்லவேண்டும் என்று முஹம்மது நபி[ஸல்] அவர்கள் பணித்துள்ளதால் ,அதை மனதிற் கொண்டு ,அரபுநடையில் பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மாநிர் ரஹீம் என்றாலே முழுமை பெரும் அந்த வார்த்தையை ,தமிழில் அளவற்ற அருளாளனும் ,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன் என்று மொழியாக்கம் செய்கிறார்கள்.ஆனால் இதுபோன்றே குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களுக்கும் மொழியாக்கம் செய்யாமல் ,நேரடி சொற்களுக்கு மட்டும் அர்த்தம் செய்துவிட்டு அது தமிழில் மற்றும் ஏனைய மொழிகளில் முழுமை பெறாததால் அடைப்புக் குறிக்குள் சொற்களை சேர்த்து வார்த்தையை முடிக்கிறார்கள்.உதாரணமாக ,பிஸ்மில்லாஹ் ஹிரஹ்மாநிர் ரஹீம்,, என்பதை [அளவற்ற] அருளாளனும் [நிகரற்ற ]அன்புடோயோனும் மாகிய அல்லாஹ்வின்[திரு] பெயரால் [துவங்குகிறேன் ]. என்று அடைப்புகுறிகளை பயன்படுத்துகிறார்கள்.இதை அடைப்புக்குறி பயன்படுத்தாமல் அர்த்தம் செய்தாலும் அது சரியே .ஆனாலும் அடைப்புகுறி என்பது தமிழில் புரிவதர்க்ககா சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அடையாளப்படுத்தும் நோக்கமே .கிராமத்திற்கு சென்ற ஆங்கிலேயர் ,ஒரு பெண்ணிடம் ,bring the water என்று கேட்டால் அதை கைடு புரிந்து கொண்டு குடிப்பதற்கு குளிர்ந்த மண்பானை தண்ணி கொண்டுவாம்மா என்று சொல்லுவார் .இதை குரான் மொழிபெயர்ப்பாளர்கள் [குடிப்பதற்கு குளிர்ந்த மண்பானை ] தண்ணி கொண்டு வா[ம்மா] என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள் .இதில் நீங்கள் என்ன தவற்றை கண்டு பிடித்து விட்டீர்கள் ?

  2. செங்கொடி ////இதில் முதன்மைத்தனம் வாய்ந்த ஒரு கேள்வியும் இருக்கிறது. ஏன் கலத்திற்கு காலம் குரான் மொழிபெயர்ப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன? குரான் எக்காலத்திற்கும் மாறாதது என்றால் பொருள் மட்டும் ஏன் மாற வேண்டும். அரபு மொழியின் இலக்கணம் மாறும் போது இலக்கண கூறுகளை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் பொருள்.. ..? அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும்? ///
    உதாரணமாக் அலக் என்ற அரபு சொல்லுக்கு ரத்தக்கட்டி ,ஒட்டி உறிஞ்சும் அட்டை என்ற பூச்சி போல ஒன்று என்று இரு அர்த்தங்கள் உள்ளன .அப்போதைய மக்கள் ,இறைவன் மனிதனின் படைப்பைப் பற்றி சொல்லும் பொழுது ,அங்கு அலக் என்ற சொல்லுக்கு ரத்தக்கட்டி என்ற அர்த்தம் தான் சரியாக தோன்றியிருக்கிறது.ஆனால் இன்றைய அறிவியலின்படிஅது ரத்தக் கட்டி அல்ல,ஒட்டி உறிஞ்சும் அட்டை போன்ற ஒன்று என்பதை கூறுகிறது.ஆனால் அக்கால மக்கள் ஒட்டி உறிஞ்சும் ஒன்று என்றால் அதை ஏற்று இருக்க மாட்டார்கள் .இப்போதைய அறிவியல் ரத்தக்கட்டி என்பதை ஏற்காது.ஆனால் குரானோ எக்காலத்திலும் ஏற்கும் வண்ணம் உள்ளது .அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

  3. அண்ணன் இப்புராகீம் அவர்களுக்கு,
    வணக்கம். நீங்க எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?
    முடியலீங்கண்ணா….

  4. IBRAHIM ANNA VELUTHUTTINGA PONGA! SAGODHARAR VAANAM NEENGA YAEN AVARA POI IPADI NINAIKIRINGA? AVARUKKU APPADITHAN ZAKIRNAIK,PJ,PONDRA ARIVAALIGAL ELLAM SOLLIRUKKANGA…. APPADITHANA IBRAHIM ANNA. SINDHITCHIPAARUNGA VAANAM!
    PADINGA QURAN.

  5. \\உதாரணமாக் அலக் என்ற அரபு சொல்லுக்கு ரத்தக்கட்டி ,ஒட்டி உறிஞ்சும் அட்டை என்ற பூச்சி போல ஒன்று என்று இரு அர்த்தங்கள் உள்ளன .அப்போதைய மக்கள் ,இறைவன் மனிதனின் படைப்பைப் பற்றி சொல்லும் பொழுது ,அங்கு அலக் என்ற சொல்லுக்கு ரத்தக்கட்டி என்ற அர்த்தம் தான் சரியாக தோன்றியிருக்கிறது.ஆனால் இன்றைய அறிவியலின்படிஅது ரத்தக் கட்டி அல்ல,ஒட்டி உறிஞ்சும் அட்டை போன்ற ஒன்று என்பதை கூறுகிறது.ஆனால் அக்கால மக்கள் ஒட்டி உறிஞ்சும் ஒன்று என்றால் அதை ஏற்று இருக்க மாட்டார்கள் .இப்போதைய அறிவியல் ரத்தக்கட்டி என்பதை ஏற்காது.ஆனால் குரானோ எக்காலத்திலும் ஏற்கும் வண்ணம் உள்ளது .அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்||

    மிக சரியான வாதம்.செங்கொடியும் அதைத் தானே சொல்லுராறு.

    காலதுக்கு தகுந்த மாதிரி பொருள் மட்டும் மாத்துரிஙன்னு.

  6. வானம் முடியலீங்கண்ணா முடியாதண்ணா ….முடியாது ,தொடரும்

  7. //அண்ணன் இப்புராகீம் அவர்களுக்கு,
    வணக்கம். நீங்க எப்பவுமே இப்படித்தானா இல்ல இப்படித்தான் எப்பவுமேவா?
    முடியலீங்கண்ணா….// சரியாகச் சொன்னீர்கள் வானம்.

  8. மலையை விட்டுவிட்டு ரத்தக்கட்டிக்கு ஓடிவிட்டார். இதுதான் இப்ராஹீம் ஸ்டைல்.

  9. நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது

    நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது

    இபுராகிம் அண்ணே, நிஜமாவே இந்த வசனத்துல பிராக்கெட் போட்டு, பிராக்கெட் இல்லாம அர்த்தத்துல ரெண்டுக்கும் வித்தியாசமே இல்லியாங்ண்ணா

  10. தச்சஆள் ///மலையை விட்டுவிட்டு ரத்தக்கட்டிக்கு ஓடிவிட்டார். இதுதான் இப்ராஹீம் ஸ்டைல்.///

    செங்கொடி தனது பதிவில் இவாறு கூறியிருப்பதால் ////அதே குரான், அதே மொழி பின் ஏன் பொருள் மாறுபட வேண்டும்? ///
    இதற்கு பதில் அளிக்கும் முகமாக அலக் என்ற வார்த்தையி உதாரனம காட்டியுள்ளேன்.

  11. வணக்கம் தோழர் நலமா!
    Sahih International: And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height.
    Pickthall: And walk not in the earth exultant. Lo! thou canst not rend the earth, nor canst thou stretch to the height of the hills.
    Yusuf Ali: Nor walk on the earth with insolence: for thou canst not rend the earth asunder, nor reach the mountains in height.
    Shakir: And do not go about in the land exultingly, for you cannot cut through the earth nor reach the mountains in height.
    Muhammad Sarwar: Do not walk proudly on the earth; your feet cannot tear apart the earth nor are you as tall as the mountains.
    Mohsin Khan: And walk not on the earth with conceit and arrogance. Verily, you can neither rend nor penetrate the earth, nor can you attain a stature like the mountains in height.
    Arberry: And walk not in the earth exultantly; certainly thou wilt never tear the earth open, nor attain the mountains in height.
    குரான் 17.37க்கு அனைத்து மொழி பெயர்ப்புகளின் எளிய விளக்கம் என்ன‌?

    1. பூமியின் மேல் அகந்தையோடு நடக்காதே,உன்னால் பூமியை பிளக்கவோ மலை அள்வுக்கு வளரவோ முடியாது என்பதுதான்.

    இங்கு முக்கியம் அகந்தை கொள்ளாதே என்னும் அறிவுறுத்தல் ஆனால் அண்ணனுக்கு அறிவுரைக்கு பதில் அறிவியல் காட்ட வந்த விபரீத ஆசையினால் வந்த பிரச்சினையே இது.

    குரானில் அறிவியல் இல்லை என்றால்,காட்ட முடியாத பி.ஜேவை சிஷ்ய கோடி இப்ராகிம் கூட மதிக்க மாட்டார்!!!!!!!

    *****
    தவுகீத் அண்ணன் எல்லாரும் சொல்வதையே அவரும் சொன்னால் என்ன மதிப்பு? கொஞ்ச்ம் மாத்தி யோசித்தன் விளைவாக அவரின் மொழி பெயர்ப்பில்.

    பூமியை பிளந்து மலையின் உயரத்தின் அளவிற்கு ஆழத்தை அடைய முடியாது என கூறுகிறார்.

    அண்ணன் மொ.பெ சரி என்றால் அறிவியலுக்கு முரண் ஆகிவிட்டது.இதன் வாய்ப்புகளை தோழர் விள்க்கி விட்டார்.

    மலையளவு உயர‌த்தில் கீழே குழி தோண்டி போவது இதுவரை அண்ணனின் விள்க்கம் தவிர எதிலுமே ,எங்கும் உலக வரலாற்றில் கூறப்படாத விடயம் ஆகும்.

    இந்த வசனத்தின் அரபி மூலம் 13 சொற்களை கொண்டது.அதனையும் பார்க்கலாம்.

    http://corpus.quran.com/wordbyword.jsp?chapter=17&verse=37#(17:37:1)

    (17:37:1)walā=And (do) not= இன்னும் வேண்டாம்

    (17:37:2)tamshi=walk= நடக்க‌

    (17:37:3)fī =in= மீது

    (17:37:4)l-arḍi=the earth= பூமி

    (17:37:5)maraḥan=(with) insolence.= அகந்தை(யுடன்)

    (17:37:6)innaka=Indeed, you= நீ உறுதியாக‌

    (17:37:7) lan=will never= எப்போதும் முடியாது

    (17:37:8)takhriqa=tear= பிளக்க‌

    (17:37:9)l-arḍa=the earth= பூமி

    (17:37:10)walan=and will never= இன்னும் எப்போதும் முடியாது

    (17:37:11)tablugha=reach= அடைய‌

    (17:37:12)l-jibāla=the mountains= மலைகளின்
    (17:37:13)ṭūlan=(in) height= உயர(அளவு).

    இந்த சொற்களை இணைத்தாலே இருமுறை முடியாது என்று வருவதால் பூமியை பிள்ள்க்க முடியாது,மலை உயர அளவை அடைய முடியாது. என்பதே சரியான பொருள் அண்ணன் மொ.பெ தவறு என்பது விள்ங்கும்.

    அது மட்டும் அல்ல அங்கேயும் சில மொ.பெ சித்து விளையாட்டுகள் உண்டு.அதாவது உருவத்தில் மலை அளவு என்று எடுத்தால் மட்டுமே அறிவியலுக்கு முரண் ஆகாது.

    வசனத்தின் 13 ஆம் சொல் துலான்[tulan] என்பதன் பொருள் உயரம் மட்டுமே.குரானில் இந்த சொல்லில் மட்டும் உயர(அளவு) என பயன்படுத்துவது எப்படியாவது சரியான பொருள் கொள்ளும் முயற்சி என அறிய முடியும். இச்சொல் குரானில் இந்த ஒரே இடத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

    அப்படி அடைப்புக் குறி போடவில்லை எனில் மலை உயரத்தை அடைய முடியாது எனில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய டென்சிங் ஹில்லாரியை அல்லாவுக்கு தெரியாது.இக்குரான் வசனம் அறிவியலுக்கு முற்று முழுதும் பொருந்தாத ஒன்று.
    நன்றி

  12. சூப்பர் சங்கர் ஸார்,

    அக்கக்கா பிரிச்சு மேஞ்சிட்டீங்க. நீங்க சொல்றத பர்த்தா குரான்ல் உள்ள எல்லா வசனமுமே லூலூவாயி தானா இபுராகிம் அண்ணன் இதுக்கு என்ன சொல்றாரு. எனக்கே இன்னும் பதில் சொல்லல. ஏது நானும் பூந்து விளையாடலாம் போலிருக்கே.

  13. சார்வாகன் ///பூமியின் மேல் அகந்தையோடு நடக்காதே,உன்னால் பூமியை பிளக்கவோ மலை அள்வுக்கு வளரவோ முடியாது என்பதுதான்
    இங்கு முக்கியம் அகந்தை கொள்ளாதே என்னும் அறிவுறுத்தல் ஆனால் அண்ணனுக்கு அறிவுரைக்கு பதில் அறிவியல் காட்ட வந்த விபரீத ஆசையினால் வந்த பிரச்சினையே இது.///
    முஹம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலேயே பூமி பிளந்துள்ளார்கள் .கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.பிறகு பூமியை பிளக்க முடியாது என்பது சரியாக இருக்க முடியும்? பூமியையும் பிளக்கவும் முடிகிறது.மலையை விட பல மடங்கு உயரே செல்லமுடிகிறது..பிறகு மனிதனால் இயலுவதை இயலாது என்று குர்ஆன் சொல்லாது.குர் ஆன் முடியாது என்று சொல்லுமென்றால் அதன் அர்த்தம் இப்படித்தான் இருக்க வேண்டும் ..”பூமியை பிளக்க முடியாது ,எந்த அளவுக்கு முடியாது எனின்,மழையின் உயரம் அளவுக்கு முடியாது”என்பதே சரியான பொருள் . பீஜேவின் இந்த மொழியாக்கத்தை அரபு இலக்கண அடிப்படையில் தவறு காணமுடியாது பீஜேயின் மொழியாக்கத்தில் தவறுகள் என்ற தலைப்பில் மதினா பலகலை கழகத்தில் பேராசிரியர்களாக பணிபுரியும் பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆலோசானையோடு பீஜெவுடன் விவாதம் புரிந்த முஜிபுர் ரஹ்மான் இதை சுட்டி காட்டியிருப்பார்.ஆனால் அங்ஙனம் காட்டப்படவில்லை பீஜேயின் தவறுகளை பூத கண்ணாடியும் கையுமாக பலர் உள்ளனர் அவர்களும் இது இலக்கண ரீதியாக தவறாக இருந்தால் ஊதி பெரிதாக்கியிருப்பர் .அப்படியும் நடக்கவில்லை

  14. ivanuga vitta katti irukura kovanatha koda uruvidu viduvanuga ivanuglavida british kollakaran evlavo mel

  15. புத்தகத்திற்கு விளக்க விரிவுரையாளர் அதாங்க நம்ம தூதர் என்ன சொன்னார்கள் என்பதை(அறிவியல் விளக்கம்)ஹதீத் ஏதும் உண்டா? இல்லையேல் அறிவியல் கருத்து நிராகரிக்கப்படுகிறது.

  16. இபுராகிம் அண்ணே,

    இங்கயும் கொஞ்சம் வாங்கண்ணே, பிராக்கெட் போட்ட வேற அர்த்தம் வர்ரதுக்கு என்னங்க செய்யலாம். அப்புறம் சங்கர் ஸார் அந்த வசனத்த துவச்சு காயப் போட்டிருக்கார். கொஞ்சம் விளக்கம் சொன்னீங்கண்ணா நல்லாயிருக்கும்.

  17. கடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்

  18. இபுறாகிம் உன்னால எப்பிடிடா முடியூது. அநியாயத்துக்கு அப்பிரானியா இருக்கியேடா? இந்தளவூக்கு ஒருத்தனாலயூம் முடியாதுடா!

  19. தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து இப்ராஹிமை தவிர வேறு யாருமே பதில் அளிக்க முன் வர மாட்டேங்குறார்களே. இப்ராஹீம் ரொம்ப நல்லவர், அவரால் மட்டுமே எவ்வளவு அடித்தாலும் தாங்க முடியும் என்பதால் தானோ என்னவோ!

  20. இதலாம் ஒரு கேள்வினு தூக்கிட்டு வந்துட்ட…

    ஒவ்வொரு காஃபிரும் எவ்ளோ அறிவுபூர்வமா கேள்வி வச்சிருகாங்க….பைத்தியமான‌ ஒரு மனிதன் புரியாம கேள்வி கேட்டா அதுக்குனு‌அவங்க கேக்குறது சரினு ஆகிடாது..

    அவங்களுக்கு கொடுக்கபட்ட அறிவு அவ்ளோதான்…

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s