முகம்மது தேன் குடித்த கதை

isl 55

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 56

நபியே உம் மனைவியரின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? .. .. .. குரான் 66:1

 

இப்படி ஒரு வசனம் குரானில் உண்டு. அல்லா அனுமதித்த எதை முகம்மது தம் மனைவிகளின் விருப்பத்திற்காக விலக்கினார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது தான் முகம்மது தேன் குடித்த கதை. அதாவது முகம்மது தன் பல மனைவியர்களின் வீட்டில் முறைவைத்து தங்கும் போது ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடிக்கிறார். இது ஏனைய மனைவியர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இனிமேல் தேன் குடிக்க மாட்டேன் என்று அல்லாவின் பெயரால் சத்தியம் செய்து விடுகிறார். ஆனால் முகம்மது தேன் குடிக்கவில்லை என்று தெரிந்தால் உலகின் அனைத்து முஸ்லீம்களும் தேன் குடிப்பதை நிறுத்தி விடுவார்களே, அதனால் தான் அல்லா முகம்மதை கண்டித்து மீண்டும் தேன் குடிக்க வைத்தான். இது தான் அந்த தேன் குடித்த கதை என்று இப்பொழுது பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய பரப்புரையாளர்கள்.

 

இது மெய்தானா? இது முகம்மது தேன் குடித்ததை குறிப்பிடும் வசனங்கள் தாமா? இந்த தேன் குடித்த கதைக்குப் பின்னர் வக்கிரம் பிடித்த ஒரு வரலாறு மறைந்து கிடக்கிறது. இதை விரிவாகப் பார்க்கலாம். இந்த தேன் குடித்த கதை தொடர்பாக மேற்கண்ட வசனம் மட்டுமல்ல வேறு சில வசனங்களும் குரானில் இடம் பெற்றிருக்கின்றன.

 

நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

 

உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

 

இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அதனை அவர் அறிவித்து, அல்லாஹ் அவருக்கு வெளியாக்கிய போது, அவர் அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் தெரிந்தவனாகிய அல்லாஹ் எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

 

நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் மீண்டால் ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

 

அவர் உங்களை தலாக் சொல்லி விட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான, முஃமினான, வழிபட்டு நடப்பவர்களான, தவ்பாச் செய்பவர்களான, வணங்குபவர்கலான, நோன்பு நோற்பவர்களான, கன்னிமை கழிந்தவர் இன்னும் கன்னிப் பெண்டிர் இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு பகரமாக மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.

குரான் அத்தியாயம் 66 தஹ்ரீம் வசனங்கள் ஒன்றிலிருந்து ஐந்து வரை

 

முதல் வசனத்திற்குப் பிந்திய நான்கு வசனங்களும் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் கூறும் தேன் குடித்த கதைக்கு பொருந்துகிறதா? வெகு சாதாரணமான நிகழ்வான முகம்மது தேன் குடித்தததை, முகம்மதுக்கு எதிராக நீங்கள் சதி செய்து விட்டீர்கள் என்றும், இருவரும் அல்லாவிடம் மன்னிப்பு கேழுங்கள் என்றும், முகம்மதுக்கு உதவி செய்ய அல்லாவும், வானவர்களும் இன்னும் ஏராளமானவர்களும் இருக்கிறார்கள் என்றும், உங்களை விவாகரத்து செய்து விட்டால் உங்களுக்குப் பதிலாக சிறந்த மனைவியர்கள் முகம்மதுவுக்கு கிடைப்பார்கள் என்றெல்லாம் முகம்மதின் மனைவியர்களை அல்லா மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மட்டுமா? எந்த முக்கியத்துவமும் இல்லாத இந்த தேன் குடித்த கதையால் சஞ்சலத்துக்கு உள்ளான முகம்மது தன்னுடைய அனைத்து மனைவிகளையுமே ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்து விடும் அளவுக்கு சென்றார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான் என்பதை ஒரு ஹதீஸ் உறுதி செய்கிறது.

 

ஒரு நாள் காலை நபி அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். .. .. .. உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.

புஹாரி 5203

 

ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடித்தது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகுமா? ஒட்டு மொத்தமாக அத்தனை மனைவியர்களையும் விவாகரத்து செய்து விடுமளவுக்கு தேன் குடித்தது அவ்வளவு பெரிய குற்றச் செயலா? தன்னுடைய நெருங்கிய நண்பரும், மாமனாருமாகிய உமர் கேட்கும் போது விவாகரத்து செய்யவில்லை. ஒரு மாத காலம் அனைத்து மனைவியர்களை விட்டும் விலகி இருக்கப் போகிறேன் என்று கூறி 29 நாட்கள் விலகி இருக்கும் அளவுக்கு தேன் குடித்தது ஒரு மன்னனை கலங்க வைக்குமா? நிச்சயம் இருக்காது. குரானின் அந்த வசனங்களும், புஹாரியின் இந்த ஹதீஸும் தெட்டத் தெளிவாக அது தேன் குடித்த கதையல்ல வேறு எதுவோ ஒன்று அதில் மறைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அது என்ன? இந்த தேடலை முகம்மதின் பிரியத்திற்குறிய மனைவி ஆய்ஷா அறிவித்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து தொடங்கலாம்.

 

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் தங்கி விடுவார்கள். நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். தேன் சாப்பிட்ட பின் நம்மவரில் எவரிடம் நபி அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விட வேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் தேன் குடித்தேன். நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

புஹாரி 4912

 

இது ஒரு ஹதீஸ். இன்னொரு ஹதீஸையும் பார்க்கலாம்.

 

அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் அவர்களிடம் நபி அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் அல்லாஹ்வின் மீதாணையாக இதை நிறுத்துவதற்காக ஒரு தந்திரம் செய்வோம் என்று கூறிக் கொண்டு நபி அவர்களின் துணைவியரில் சவ்தா பிந்த் ஸம்ஆவிடம் நபி அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள் .. .. ..

புஹாரி 5268

 

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்ட நிகழ்வு ஒன்று தான், அறிவித்தவரும் ஒருவர் தான். ஆனால், அதில் ஈடுபட்ட மனைவியரில் மட்டும் ஆள்மாறாட்டம். முகம்மது தேன் குடித்தது யார் வீட்டில்? ஜைனப் வீட்டிலா? ஹப்ஸா வீட்டிலா? அல்லா எச்சரித்த இரண்டு மனைவியர்கள் யாவர்? ஒருவர் ஆய்ஷா இன்னொருவர் யார்? ஹப்ஸாவா? சவ்தாவா? ஆய்ஷாவும் ஹப்ஸாவுமா? ஆய்ஷாவும் சவ்தாவுமா? எந்த ஆய்ஷாவை ஆறு வயதிலேயே இவரைத் திருமணம் செய்து கொண்டால் இல்லறம் குறித்த அறிவிப்புகளை தெளிவாகவும் துல்லியமாகவும் அறிவிப்பார்கள் என்று கண்டு பிடித்து முகம்மது திருமணம் செய்து கொண்டதாக மதவாதிகள் கூறுகிறார்களோ, அந்த ஆய்ஷா தான் இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த குழப்பத்தை இன்னொரு ஹதீஸ் தெளிவிக்கிறது.

 

.. .. .. அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி அவர்களுடைய துணைவியரில், நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள் .. .. .. அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று சொன்னேன். பிறகு நான் புறப்பட்டு, நபி அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் என்  உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்து விட்டார் .. .. ..

புஹாரி 4913

 

இந்த ஹதீஸ் இரண்டு விபரங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது. ஒன்று, எந்த இருவர் என்பதற்கு ஆய்ஷாவும் ஹப்ஸாவும் என்பது. அடுத்தது, இந்த விவகாரத்தில் உமர் முகம்மதுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து முகம்மதின் ஒவ்வொரு மனைவியராக சந்தித்து அறிவுரை கூறி எச்சரிக்கிறார். ஆனால் உம்மு சலமா உமர் வாயடைத்துப் போகும் அளவுக்கு அவரை கேள்விகளால் திணறடித்து விடுகிறார். உமரால் பேச முடியாமல் போகும் அளவுக்கு தேன் குடித்ததில் அத்தனை பெரிய விவகாரம் என்ன இருந்து விட முடியும்? ஆக ஒன்று தெளிவாய் புரிகிறது. ஹதீஸ்களும் குரான் வசனங்களும் நடந்த ஏதோ ஒன்றை மறைத்து தேன் குடித்தார் என்று பூசி மெழுகுகின்றன. இது தேன் குடித்த கதையல்ல என்பது தெளிவாகி விட்டது. என்ன நடந்தது என்று எப்படி அறிந்து கொள்வது? இஸ்லாமிய மதவாதிகள் ஒருபோதும் இதற்கு பதில் கூறப் போவதில்லை. குரான் வசனங்களிலும், ஆதாரபூர்வமானவை என்று மதவாதிகள் நீட்டி முழக்கும் ஹதீஸ் தொகுப்புகளிலும் தலைகீழாக நின்று தேடினாலும் இதற்கான விபரம் கிடைக்கப் போவதில்லை. அப்படியானால் எப்படி அதை தெரிந்து கொள்வது? எதில் இதற்கு விளக்கங்கள் கிடைக்கும்?

 

இப்ன் ஸாத் என்பவர் எழுதிய தபாக்கத் எனும் நூலை முகம்மது மஹ்தவி தம்ஹானி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதில் 223ம் பக்கத்தில் முகம்மது என்ன தேனைக் குடித்தார் எனும் விபரம் கிடைக்கிறது.

 

நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு அன்று ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறை, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புகிறார் என்று கூறுகிறார் முகம்மது. ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப் பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா நடந்த நிகழ்ச்சியை அறிந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?”  என்று கோபப்பட ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக் கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது என்கிறார். வேறு வழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது.

 

ஆக முகம்மது குடித்த தேன் மரியத்துல் கிப்தியா. இப்போது குரான் வசனங்கள் ஹதீஸ்கள் ஆகியவை கூறும் செய்திகளை தொகுத்துப் பாருங்கள். அவை மரியத்துல் கிப்தியவை உறுதி செய்கின்றன. அசிங்கமான வக்கிரமான இந்த வரலாற்றை மறைப்பதற்காகத் தான், தேன் கதையை புனைந்து பரப்பியிருக்கிறார்கள். மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் தொகுப்பு என்று கூறும் தொகுப்புகளின் லட்சணம் இப்படி உண்மையை மறைப்பதற்குத் தான் உதவியிருக்கிறது. அதனால் தான் மதவாதிகள் ஆதரபூர்வ தொகுப்புகள் என்று கூறப்படும் ஆறு தொகுப்புகளுக்கு [ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும் எனும் தலைப்பில் பார்க்க] முந்திய தொகுப்புகளான தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களின் முகம்மதின் வரலாறு எதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

 

முப்பத்து ஒன்று அதிகாரபூர்வ மனைவிகள், அதற்குமேல் அடிமைப் பெண்கள், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அதன் பிறகும் தொடரும் இது போன்ற வக்கிரங்கள். உலகில் பிறக்கும் அத்தனை மனிதர்களுக்கும் முன் மாதிரி என்று விதந்து போற்றப்படும் ஓர் ஆறாம் நூற்றாண்டு மனிதனின் ஆளுமைகள் அவ்வாறான போற்றுதல்களுக்கு கொஞ்சமாவது தகுதியைக் கொண்டிருக்கின்றனவா என்பதை முஸ்லீம்கள் சிந்திக்கட்டும்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

55. முகம்மதும் ஆய்ஷாவும்

54. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்

53. முகம்மதின் மக்கா வாழ்வும் அவரின் புலப்பெயர்வும்

52.  தன்னுடன் தானேமுரண்பட்ட முகம்மது

51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?

50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

5 thoughts on “முகம்மது தேன் குடித்த கதை

  1. i converted to islam by my friend suggestion. one day i decided to learn quran. then i asked my friend that tell about muhamed and quran. but he did,t know about it. so learnt myself. b—–d muhamed

  2. if uhave a islamic orgin, go ahead. it is the success of humanity, marxiam, genuine history, science and logic. we will proud of u. otherwise stop it. dont be a cause of religious hatred and enmity.

  3. பிங்குபாக்: Mohammed claimed the story of honey | jamialim

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s