விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 11
உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பதினொன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள். 11-1, 11-2, 11-3
உணர்வு கும்பல் எழுதும் தொடரின் கடந்த மூன்று பகுதிகளில் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்று ஆதாரம் ஏதுமின்றி அவதூறு பரப்பி வந்திருந்தது. இந்த பதினொன்றாம் பகுதியிலும் அது தொடர்ந்திருக்கிறது என்றாலும், சிறு மாறுதலாக ஆதாரம் எனும் பெயரில் அயோக்கியத்தனங்களையும் சேர்த்து செய்திருக்கிறது. அதாவது, இஸ்ரேல் எனும் நாடு உருவானதில் யூதரான கார்ல் மார்க்ஸ் செய்த உதவி என ஒன்றைச் சுட்டிக் காட்டி, அது தான் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கான ஆதாரம் என்று போகிறது உணர்வு கும்பலின் உளறல். இதில் தான் உணர்வு கும்பல் ஓர் அயோக்கியத்தனத்தையும் செய்திருக்கிறது. அதை பார்ப்பதற்கு முன்னால் இஸ்ரேலின் வரலாறு குறித்து பார்த்து விடலாம்.
இஸ்ரேல் எனும் நாடு உலகில் எப்படி உருவானது? ஒரு வார இதழில் எழுதப்பட்டு வெளியாக வேண்டுமென்றால் அவருக்கு கொஞ்சமாவது வரலாற்று அறிவும், அரசியல், சமூக அறிவும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் எழுதும் எதுவும் குப்பை தான். அந்தக் குப்பையைத் தான் இப்போது கிளறிக் கொண்டிருக்கிறோம். அது குப்பை தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டியதிருக்கிறதே அதற்காக.
உணர்வு கும்பல் இஸ்ரேல் எப்படி உருவானதாக கூறியிருக்கிறது? ஷெசில் எனும் யூதத் தலைவர் திட்டமிட்டு உலகெங்கும் இருக்கும் வட்டித் தொழில் செய்யும் யூதர்களை புதிய வங்கி மூலம் ஒருமுகப்படுத்தி வட்டி மூலம் வந்த பணத்தில் பலஸ்தீனத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களிடம் நயவஞ்சகமாக ஆசைகாட்டி, கவர்ச்சிகர திட்டங்கள் தீட்டி வட்டி வலையில் வீழவைத்து அவர்களின் நிலங்களைப் பிடுங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து பலஸ்தீனியர்களை விரட்டி விட்டு இஸ்ரேலை உருவாக்கினார்கள். இது தான் உணர்வு கும்பல் உருவகிக்கும் வரலாறு. இப்படித்தான் உருவானதா இஸ்ரேல்? ஏகாதிபத்திய போர்களுக்கும், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும், அவர்களின் ஏகாதிபத்திய அரசியலுக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லையா? இஸ்ரேல் உருவானது வெறும் வட்டி வணிக நடவடிக்கை அல்லது நிலம் வாங்கிய ரியல் எஸ்டேட் நடவடிக்கை தானா? இப்படித்தான் உணர்வு கும்பல் கருதுகிறதா? ஆனால் உண்மை அப்படியல்ல.
முதல் உலகப் போருக்கு முந்திய காலங்களில் பலஸ்தீனம் ஒட்டாமன் பேரரசின் அதாவது உஸ்மானிய பேரரசின் கீழ் இருந்தது. அன்றைய பலஸ்தீனம் என்பது இன்றைய இஸ்ரேல், பலஸ்தீனம், சிரியா, ஜோர்டான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அன்றைய பலஸ்தீன மக்கட் தொகையில் 4 விழுக்காடு யூதர்கள். உணர்வு கும்பல் பிம்பமாக்குவது போல் யூதர்கள் இருந்திராத இடத்தில் புதிதாக குடியேறியவர்களல்லர். அவர்கள் அந்தப் பகுதியின் வாழ்ந்த குடிகள் என்பதற்கு, முகம்மதின் காலகட்டத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு குரான், ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கிறது. தவிரவும், பலஸ்தீனப் பகுதி என்பது யூத கிருஸ்தவ இஸ்லாமிய மதங்கள் தங்கள் புனித பூமியாக சொந்தம் கொண்டாடும் இடமாகவும் இருந்து வந்திருக்கிறது.
யூதர்கள் ஒரே இனமல்ல, ஒரே மதத்தவர்கள் அவ்வளவு தான். இன்றும் கூட இஸ்ரேலில் ஐரோப்பிய யூதர்களுக்கும், அமெரிக்க யூதர்களுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருகின்றன. சகோதர மதங்கள், அப்ரஹாமிய மதங்கள் என அழைக்கப்பட்டாலும் கிருஸ்தவ, இஸ்லாமிய வேதங்கள் யூதர்களை கடுமையாகச் சாடுகின்றன. விரோதிகள் என்கின்றன. இதனால் உலகம் முழுவதும் யூதர்கள் ஒடுக்குதல்களைச் சந்தித்தார்கள். இது தான் யூதநாடு எனும் கருத்தோட்டத்தை ஏற்படுத்தியது. 1897 ஆகஸ்ட் 29ம் தேதி சுவிட்சர்லாந்தின் பாஸில் எனும் நகரத்தில் முதல் சியோனிச மாநாட்டை ஹெர்செல் என்பவர் கூட்டியிருந்தார். (சியோனிசம் என்றால் ஜெருசலத்திலுள்ள புனித சியோன் மலைக்கு செல்ல விரும்புபவர்கள் என்று பொருள்) இந்த மாநாட்டில் தான் யூதர்களுக்கென்று பலஸ்தீனப் பகுதியில் ஒரு நாடு வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் நடவடிக்கையாக ஹெர்செல் உலகெங்குமுள்ள யூதர்களிடமிருந்து நிதியை திரட்டத் தொடங்கினார். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தரவில்லை. எனவே, 1901 மே 17ம் தேதி உஸ்மானியப் பேரரசின் மன்னரான இரண்டாம் அப்துல் ஹமீதைச் சந்திக்கிறார். உலகெங்கிலுமுள்ள அரசுகளில் செல்வாக்காக இருக்கும் யூதர்களின் உதவியால் உஸ்மானியப் பேரரசின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க உதவமுடியும் என்றும், அதற்குப் பகரமாக பலஸ்தீனப் பகுதியில் யூதர்களை குடியேற்ற உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார். இதை ஏற்றுக் கொள்ளும் அப்துல் ஹமீது இரண்டு நிபந்தனைகளை வைக்கிறார்.
1. அவ்வாறு குடியேறும் யூதர்கள் துருக்கிய குடிமக்களாக இருக்க வேண்டும் என்றும் (உஸ்மானியப் பேரரசு துருக்கியர்களால் தான் இன்றைய இஸ்தான்புல் பகுதியிலிருந்து ஆளப்பட்டுக் கொண்டிருந்தது)
2. ஒரே இடத்தில் குவியலாக குடியேறாமல் வெவ்வேறு இடங்களில் பரவலாக குடியேற வேண்டும்.
என்பது தான் அந்த இரண்டு நிபந்தனைகள். இதே போன்று குடியேற்றம் குறித்த ஒப்பந்தம் ஒன்று சிரியப் பகுதியின் ஆளுனருடனும் செய்து கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படையில் துருக்கியிடமிருந்து பெறப்பட்ட நிலத்திலிருந்து 1910ல் டெல்அவிவ் நகரம் உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து பல நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்படுகிறது. முக்கியமாக பிரிட்டனுடனும், ரஷ்யாவுடனும். அனைத்து யூதர்களையும் அழைத்துக் கொள்வதாக பிரிட்டனுடனும், திரண்டு வரும் கம்யூனிசப் புரட்சியில் இருந்து யூதர்களை விலக்கி வைக்கிறேன் என்று ஜார் மன்னரிடமும் பேசி ஆதரவு திரட்டப்படுகிறது. இதன் பிறகு தான், உணர்வு கும்பல் குறிப்பிடும் யூத தேசிய நிறுவனம் தொடங்கப்பட்டு தோராயமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் யூதர்கள் பலஸ்தீனப் பகுதியில் குடியேற்றப்படுகிறார்கள். இதன் பிறகு அரேபியர்கள் யூதக் குடியேற்றத்தை எதிர்த்து அரசியல் நடவடிக்கைகளை தொடங்குகிறார்கள். இதனால் 1914ல் உஸ்மானியப் பேரரசு யூதக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கிறது.
இந்த நிலையில் தான் முதல் உலகப் போர் வருகிறது. முதல் உலகப் போரில் உஸ்மானியப் பேரரசு ஜெர்மனியுடன் சேர்ந்து பிரிட்டனை எதிர்க்கிறது. யூதர்கள் பிரிட்டனுக்கு ஆதரவளிக்கிறார்கள். அரசுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்த உஸ்மானியப் பேரரசுக்குள் லாரன்ஸ் என்பவரை அனுப்பி வைக்கிறார் பிரிட்டனின் இராணுவ அமைச்சராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில். (இந்தக் கதை தான் சிலபல திரித்தல்களுடன் லாரன்ஸ் ஆப் தி அரேபியா எனும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது) யூதர்களிடமும், அரசுக்கு எதிராக கலகம் செய்த அராபியர்களிடமும் முதல் உலகப் போரில் வெற்றி பெற்றால் தனித்தனி நாடுகளாக யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் தருவதாக இருவரிடமும் இரகசியமாக வாக்குறுதி வழங்குகிறது பிரிட்டன். முதல் உலகப் போரில் வெற்றி பெறவுடன் உஸ்மானியப் பேரரசின் கீழ் இருந்த அரேபியப் பகுதிகளை இணைந்து போரிட்ட பிரிட்டனும் பிரான்ஸும் பங்கு வைத்துக் கொண்டன. அதன்படி சிரியப் பகுதி பிரன்சிடமும், பலஸ்தீனப் பகுதி பிரிட்டனிடமும் வருகின்றன. ஆனால் வாக்குறுதி அளித்திருந்தபடி யூதர்களுக்கும், அராபியர்களுக்கும் தனித்தனியே நாடு பிரித்துக் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்தது பிரிட்டன். மறுபக்கம் நின்று போயிருந்த குடியேற்றங்களை யூதர்கள் மீண்டும் தொடங்கினார்கள். இதனால் யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே கலகங்கள் மூண்டன. இது 1936ல் பெரிய அளவில் வெடித்தது. அராபியர்களை கடுமையாக ஒடுக்கி கலவரங்களை அடக்கிய பிரிட்டன். நிலமையை சமாளிக்க பீல் கமிட்டியை உருவாக்கியது. 1937 ல் பீல் கமிட்டி பிரிட்டன் வசமிருந்த பலஸ்தீனப் பகுதியை மூன்றாகப் பிரித்து அராபியப் பகுதி அராபியர்கள் கட்டுப்பாட்டிலும், யூதப் பகுதி யூதர்கள் கட்டுப்பாட்டிலும், இரண்டும் அல்லாத ஜெருசலம் பகுதி சர்வதேச கட்டுப்பாட்டிலும் இருக்கும் எனப் பரிந்துரைத்தது. இந்தத் தீர்வை யாரும் ஏற்கவில்லை என்பதால் பீல் கமிட்டியின் பரிந்துரைகள் கைவிடப்பட்டன.
1939 ல் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட போரில் சூயஸ் கால்வாயின் பயன்பாடு தனக்கு வேண்டும் எனக் கருதிய பிரிட்டன். அதற்காக அராபியர்களிடம் சமாதானம் பேசியது. யூதக் குடியேற்றம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. இதனால் இரண்டாம் உலகப் போரில் அராபியர்கள் பிரிட்டனுக்கு ஆதரவாகவும், யூதர்கள் எதிராகவும் ஆனார்கள். யூதநாடு அடைந்தே தீர்வது எனும் முடிவில் ஸ்டெர்ண், இர்குன் எனும் இரண்டு பயங்கரவாதக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை குண்டு வைப்பது உள்ளிட்ட பல பயங்கரவாத செயல்களை பிரிட்டனுக்கு எதிராக செய்தன. 1945 ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரிட்டன் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. அவைகளைத் தீர்க்க தன்னுடைய காலனி நாடுகளில் விடுதலை என்ற பெயரில் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தியது. 1946 ஜூலை 22 ம் தேதி யூத பயங்கரவாதக் குழுக்கள் ஜெருசலத்திலிருந்த பிரிட்டன் இராணுவ தலைமையகமான கிங் டேவிட் முகாமை தாக்கி அழித்தன. இதனால் வேறு வழியின்றி 1947 பிப்ரவரி 17ம் தேதி தன்னிடமிருந்த பலஸ்தீனப் பகுதியை ஐ.நா வின் மேற்பார்வையில் விட்டு விட்டு வெளியேறுவதாக அறிவித்தது.
ஐ.நா இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஒரு குழுவை அமைத்தது. இதை அராபியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, யூதர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 1947 ஆகஸ்ட் 31ம் தேதி ஐ.நா குழு தன் தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி பலஸ்தீனப் பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு அராபியர்களுக்கு ஒரு நாடாகவும், யூதர்களுக்கு ஒரு நாடாகவும் அளிக்கப்படும். புனிதத்தலங்களான பெத்லஹேமும், ஜெருசலமும் ஐ.நா வின் கட்டுப்பாட்டில் இருக்கும். அராபியர்கள் இதனை நிராகரித்தார்கள். சூழ இருக்கும் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு உதவி செய்யும், யூதர்களை விரட்டி மொத்த நாட்டையும் தம்மிடம் அளிக்கும் என அராபியர்கள் நம்பி ஏமாந்து போனார்கள். 1948 மே14ம் தேதி இஸ்ரேலை சுதந்திர நாடாக யூத பயங்கரவாதக் குழு ஒன்றின் தலைவராக இருந்த பென் குரியன் அறிவித்தார்.
சுற்றி இருந்த அரபிய நாடுகள் சக அரபிகளான பலஸ்தீனியர்களுக்கு உதவினவா? அல்லது அவைகளுக்கென்று தனி நோக்கங்கள் இருந்தனவா? இஸ்ரேல் தனி நாடாக அறிவித்துக் கொண்ட உடனேயே சுற்றி இருந்த அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஒரு மாதம் நடந்த போரில் இஸ்ரேல் தோற்று வீழும் நிலை வந்தவுடன் ஐ.நா தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டது இஸ்ரேல் பாதுகாக்கப்பட்டது. ஆனால் பரிதாபம்! பலஸ்தீனர்களைச் சொல்லிக் கொண்டு போரில் குதித்த நாடுகள் போரில் பிடித்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டனவே தவிர அவைகளை இணைத்து பலஸ்தீனம் எனும் தனி நாடு அமைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. போர் நிறுத்ததத்தை பயன்படுத்திக் கொண்டு இஸ்ரேல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி உதவிகளையும் இராணுவ தளவாடங்களையும் கொண்டு வந்து குவித்தது. விளைவு, இழந்த இடங்களை இஸ்ரேல் படிப்படியாக மீட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நாடில்லாத பகுதியாக இருந்த பலஸ்தீனத்தையும் கபளீகரம் செய்து கொண்டது.
இது தான் இஸ்ரேல் உருவான வரலாறு. இதைத்தான் உணர்வு கும்பல் வட்டிக்கு விட்டு நிலத்தைப் பிடுங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள் என்று திரிக்கிறது. உலக ஏகாதிபத்திய நாடுகளின் அரவணைப்போடு ரவுடித்தனம் செய்த இஸ்ரேலின் நடவடிக்கையை ரியல் எஸ்டேட் நடவடிக்கையாக சுருக்கிப் பார்க்கிறது உணர்வு கும்பல். மதவாதக் கும்பல்களுக்கு எப்போதுமே உண்மையோ, வரலாறோ அவசியமே இல்லை. தமக்கு ஏற்ப வரலாறு உட்பட அனைத்தையும் திருத்திக் கொள்வது தான் அவர்களின் வாடிக்கை. ஆர்.எஸ்.எஸ் இதைத்தான் செய்கிறது. டி.என்.டி.ஜே வும் அதைத்தான் செய்கிறது.
சரி, இதில் எங்கிருந்து மார்க்ஸ் வருகிறார்? ஓர் அயோக்கியத்தனத்தைச் செய்து மார்க்ஸை இதனுள் கொண்டு வந்து நுழைத்திருக்கிறது உணர்வு கும்பல். உணர்வு எனும் பெயரிலிருக்கும் அயோக்கியக் கும்பல் இப்படி எழுதியிருக்கிறது.
வட்டித் தொழிலை அரசாங்கத்தின் சுவாதீனத்துக்கு படுத்துதல், இதற்காக அரசாங்கத்தின் மூலதனத்தைக் கொண்டு ஒரு வங்கி ஏற்படுத்தும் என்று திட்டமிட்டார் மார்க்ஸ் என்றார்.
வேண்டுமென்றே இலக்கணப் பிழைகளோடு எழுதப்பட்டிருக்கும் இந்த வாசகத்திலிருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது? அதாவது வட்டித் தொழிலை முறைப்படுத்த அரசாங்கம் ஒரு வங்கியை ஏற்படுத்த வேண்டும் என மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாம். இந்த மேற்கோள் எதில் இடம்பெற்றிருக்கிறது? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திட்டத்தில் ஐந்தாவது சரத்தில் என்று உணர்வு கும்பல் கூறியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பது கம்யூனிஸ்ட் அல்லாத பிற மக்களாலும் அதிகம் வாசிக்கப்பட்ட கம்யூனிச நூல்களில் ஒன்று. இந்த நூலில் நான்கு அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
1. முதலாளிகளும் பாட்டாளிகளும்,
2. பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்,
3. சோசலிச கம்யூனிச இலக்கியம்,
4. தற்போதுள்ள பற்பல எதிர்க்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை.
இந்த நான்கு அத்தியாயங்கள் தான் அந்த நூலில் இருக்கிறது. ஆனால் உணர்வு கும்பல் எழுதியிருக்கிறது ஐந்தாவது சரத்தில் என்று. அது என்ன ஐந்தாவது சரம்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? இல்லாத ஒன்றை இருப்பது போல் மேற்கோள் காட்டுவது தான் இந்த மதவெறி பிடித்தலையும் வியாபாரிகளின் அகராதியில் நேர்மையா? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனும் நூலில் ஐந்தாவது அத்தியாயத்தில் என்று எழுதினால் தெரிந்து விடும் என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை திட்டத்தில் ஐந்தாவது சரத்தில் என்று எழுதியிருக்கிறார்கள். அதுவும் அந்த கற்பனையான மேற்கோளை இலக்கணப் பிழையோடு எழுதியிருக்கிறார்கள். இப்படியான பச்சை அயோக்கியத்தனத்துக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது? இதை எழுதிய பாசில் எனும் அயோக்கியனா? வெளியிட்ட உணர்வு எனும் இதழை நடத்தும் அயோக்கியக் கும்பலா? உணர்வு இதழின் பின்னணியில் இருக்கும் டி.என்.டி.ஜே எனும் அயோக்கியத்தனமான மதவாத இயக்கமா?
இதற்கு யாரும் பொறுப்பேற்கப் போவதில்லை, யாரும் பதில் கூறப் போவதில்லை. ஆனால், அந்த இயக்கத்திலிருக்கும் முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும். இப்படி ஒரு பொய்யை, பச்சை அயோக்கியத்தனத்தை துணிந்து அரங்கேற்றும் இந்த மதவாத வியாதிகள் எதைத்தான் செய்ய மாட்டார்கள்? நீங்கள் தான் பதில் கூற வேண்டும். பொறுப்பேற்க வேண்டும். சிந்திக்க வேண்டும். ஏனென்றால் உங்களின் பொருட்டு தான் இந்த அயோக்கியத்தனம் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அது எழுதப்பட்டிருக்கிறது.
இஸ்லாத்தின் மீது ஒரு விமர்சனம் எப்படி வைக்கப்படுகிறது? குரானில் அல்லது ஹதீஸில் இந்த அத்தியாயத்தில் இந்த எண்ணுள்ள வசனத்தில் என்று தெளிவாகக் குறிப்பிட்டுத்தான் விமர்சிக்கப்படுகிறது. அதற்கு விளக்கம் கூறும் மதவாதிகள் என்ன செய்கிறார்கள்? இதை அப்படி புரிந்து கொள்ளக் கூடாது. அந்த அரபு வார்த்தைக்கு இப்படி அர்த்தம் செய்ய வேண்டும் என்று அவர்களின் சொந்த விருப்பத்தை பொதுக் கருத்து போல எண்ணிக் கொண்டு விளக்கம் சொல்லுவார்கள். ஆனால், இங்கு இல்லாத ஒன்றை மார்க்ஸ் மீது பொய்யாக இட்டுக் கட்டியுள்ளார்கள். இதை எப்படி புரிந்து கொள்வீர்கள் முஸ்லீம்களே, பதில் சொல்லும் கடமை உங்களுக்கு இல்லையா?
இப்படி கற்பனையாக, பொய்யாக, அயோக்கியத்தனமாக எழுதி விட்டு, அந்த பொய்யை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் இப்படி திட்டம் போட்டுக் கொடுத்ததால் தான் ஹெசில் யூதர்களின் வட்டி நிதியைக் கொண்டு வங்கியை உருவாக்கி பலஸ்தீனத்தில் நிலம் வாங்கி இஸ்ரேலை உருவாக்கினார்கள் என்கிறது உணர்வு கும்பல். மார்க்ஸின் உதவியால் தான் இஸ்ரேல் உருவானது. அதனால் யூதர்களுக்கு உதவிய மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி. இது தான் உணர்வு கும்பல் தரும் ஆதாரம். முஸ்லீம்களே நீங்கள் தான் இதற்கு செருப்படி கொடுக்க வேண்டும்.
இன்னொரு ஆதாரத்தையும் உணர்வு கும்பல் கூறியிருக்கிறது, உலகெங்கிலுமுள்ள யூதர்கள் வட்டியினால் மக்களை கொடுமைப்படுத்தினார்கள், அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தார்கள். இப்படி உலகெங்கும் மக்கள் ஏழ்மையில் வாட காரணமாக இருந்த வட்டியை ஆதரித்தார் மார்க்ஸ். யூதர்கள் வட்டித் தொழில் செய்தார்கள் என்பதால் தான் மார்க்ஸ் வட்டியை ஏற்றுக் கொண்டு முதலாளித்துவத்தை மட்டும் சாடுகிறார். எனவே, மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி. இது தான் உணர்வு கும்பலின் அடுத்த ஆதாரம்.
மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார், ஏற்றுக் கொண்டார் என்பது ஆதாரமற்ற பொய், உளரல். உணர்வு கும்பல் நினைப்பதெல்லாம் உண்மை ஆகிவிடுமா? மார்க்ஸ் வட்டி என்றால் என்ன என்று வரையறை செய்திருக்கிறார். நிலவில் இருக்கும் ஒன்றை வரையறை செய்வதற்கும் ஆதரிப்பதற்கும் இடையிலிருக்கும் வித்தியாசம் உணர்வு கும்பலுக்கு புரியவில்லை. அவர்களின் மதவாத மூளை புரிவதை அனுமதிக்கவும் செய்யாது.
அன்றிலிருந்து இன்றுவரை வட்டி சமூகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வட்டி என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான் அதை சமூகத்திலிருந்து நீக்குவதைக் குறித்து சிந்திக்க முடியும். அந்த அடிப்படையில் வட்டி என்பது லாபத்தின் ஒரு பகுதி. அதாவது தனக்கு உடமையாக இல்லாத மூலதனத்தை பயன்படுத்தி லாபம் பெறும் ஒருவர், தன்னுடைய லாபத்தின் ஒரு பகுதியை மூலதனத்தின் உடமையாளருக்கு கொடுப்பதே வட்டி எனப்படுகிறது. இது தான் வட்டி குறித்த மார்க்ஸின் வரையறை. மார்க்ஸ் லாபத்தை ஏற்றுக் கொள்கிறாரா? லாபத்தையே ஏற்றுக் கொள்ளாத மார்க்ஸ் அந்த லாபத்தின் ஒரு பகுதியான வட்டியை ஏற்றுக் கொண்டார், ஆதரித்தார் என்றால் அப்படிக் கூறுபவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
பொதுவாக, இஸ்லாமிய மதவாதிகள் குரான் குறித்து ஏராளமான புளகங்களைக் கொண்டிருப்பார்கள். எல்லா அறிவியல் உண்மைகளும் அதில் புதைந்து கிடக்கிறது, மண்வெட்டியைக் கொண்டு வந்தால் அள்ளி எடுத்துக் கொள்ளலாம் என்பார்கள். மறுகணமே குரான் ஒரு அறிவியல் நூலல்ல என்றும் கூறுவார்கள். அதே மதவாதிகள் மூலதனம் எனும் நூலை எப்படிப் பார்க்கிறார்கள்? மூலதனத்தில் மார்க்ஸ் அதை எழுதவில்லை, இதை எழுதவில்லை பிலாக்கணம் வைக்கிறது உணர்வு கும்பல். உணர்வு கும்பலிடம் கருத்து கேட்டுவிட்டுத்தான் மார்க்ஸ் மூலதனம் எழுதியிருக்க வேண்டும் போலிருக்கிறது. மூலதனம் எனும் நூல் முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது? அதன் அடிப்படை என்ன? முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை, அதன் பரிமாற்றம் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல். இது தொடர்பாக ஏதாவது விடுபட்டிருக்கிறது, அல்லது தவறாக விளக்கப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் விமர்சனம் செய்தால் பரிசீலிக்கலாம். மாறாக, வரலாற்றில் நடந்த அந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை, இந்த சம்பவத்தை குறிப்பிடவில்லை. எனவே மார்க்ஸ் யூதக் கைக்கூலி என்றால், காழ்ப்புணர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லைத் தவிர வேறு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.
மார்க்ஸோ, ஏங்கல்ஸோ கூறாத ஒன்றை அது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஐந்தாவது பகுதியில் இருக்கிறது எனும் பொய்யின் மூலம் தன்னைப் பின்பற்றுகிறவர்களிடம் கம்யூனிச வெறுப்பை வளர்க்கிறது உணர்வு கும்பல். மட்டுமல்லாது, மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார் எனும் திரித்தல் மூலம் வட்டி குறித்து இஸ்லாமியர்களிடம் மதரீதியாக இருக்கும் புரிதலை தன்னுடைய அயோக்கியத்தனமான நிலைப்பாட்டுக்கு சாதகமாக வளைக்கவும் முற்படுகிறது உணர்வு கும்பல். இவைகளை அவதூறு என்று மட்டும் புரிந்து கொள்ள முடியாது. முஸ்லீம்கள் கம்யூனிசத்தைப் பற்றி தெரிந்து கொள்ளக் கூடாதே எனும் பதைபதைப்பு என்பது தான் அதில் உள்ளார்ந்து நிற்கும் அம்சம்.
மார்க்ஸின் மீது கம்யூனிசத்தின் மீது அவதூறு செய்வது என்பது உணர்வு கும்பலைப் பொருத்தவரை இயல்பானது தான். மதம் எனும் அடிப்படையிலிருந்து மட்டுமல்ல, இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் பெயரில் அமெரிக்கா பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தைகள் தானே இவர்களெல்லாம். எனவே, கம்யூனிசத்தின் மீது அவதூறு செய்வது என்பது உணர்வு கும்பலுக்கு இயல்பானது தான். அந்த அடிப்படையில் தன் எஜமானனின் கட்டளையை நிறைவேற்றி இருக்கிறது என்றும் கொள்ளலாம்.
ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி வங்கியை ஏற்படுத்தச் சொன்னார், மார்க்ஸ் வட்டியை ஆதரித்தார் என்று பொய் சொல்லி அதன் மூலம் மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி எனச் சொல்லும் உணர்வு கும்பலை நோக்கி (உணர்வு கும்பலை நோக்கி மட்டுமே) அதே திசையில் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். இதற்காக பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. முகம்மது லாபத்தை ஆதரித்தார் என்பது ஆதாரபூர்வமான உண்மை. எனவே, முகம்மது நபி ஒரு முதலாளித்துவ கைக்கூலி என்று கூறினால் டி.என்.டி.ஜே விலிருக்கும் எந்தக் கொம்பனாவது மறுக்க முடியுமா?
இதில் அவதூறு, இட்டுக்கட்டல்கள், பொய்களைக் கடந்து அடிப்படையான அம்சம் குறித்து விவாதிக்க வேண்டியதிருக்கிறது. வட்டி குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன? மார்க்ஸியத்தின் பார்வை என்ன? இரண்டில் எது சரி?
இஸ்லாம் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்திருக்கிறது என்பதன் பொருள் என்ன? இஸ்லாம் லாபத்தை அனுமதித்து வட்டியை தடை செய்திருக்கிறது என்பது தான். எந்த எல்லை வரை லாபம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது? குரான் ஹதீஸ்களிலிருந்து இதற்கு அளவு எதையாவது கூற முடியுமா? முஸ்லீம்கள் யாராவது, தொடர் கட்டுரையை உணர்வில் எழுதும் பாசிலோ அல்லது டி.என்.டி.ஜே வின் உலகமகா அறிஞரோ பதில் கூற முடியுமா? குரான் ஹதீஸ்களில் இருப்பதெல்லாம் சில நீதி போதனைகள் தான். 300 விழுக்காடு லாபம் வைத்தாலும் விற்பவரும் வாங்குபவரும் பொருந்திக் கொண்டால் அது வியாபாரம் தான். அப்படி பொருந்திக் கொள்ளும் வியாபாரத்துக்கு அல்லாவின் பரகத் உண்டு என்கிறது குரான். இதை அனுமதிக்கும் இஸ்லாம் வட்டியை ஹராம் என்கிறது ஏன்? அடமானத்தை அனுமதிக்கும் இஸ்லாம் வட்டியை எதிர்க்கிறது, ஏன்? யாராவது விளக்கம் கூற முடியுமா?
இஸ்லாம் போரில் கொள்ளையடிப்பதை அனுமதிக்கிறது. கனீமத் பொருட்கள் போரில் வென்றவர்களுக்குச் சொந்தம். கனீமத் என்பது கடவுளின் கொடை. முகம்மதின் சம காலத்தில் முகம்மதை பின்பற்றியவர்களின் சொத்து என்பது பெரும்பாலும் கனீமத் பொருட்களால் வந்தது. இதில் நீங்கள் போதுமான அளவு தானம் செய்யுங்கள் என வலியுறுத்துகிறது குரான். அப்படி தானம் செய்யும் பொருட்கள் உங்களை சுத்தீகரிக்கும் என்கின்றன ஹதீஸ்கள். ஏன் தானம் செய்வதின் மூலம் மனிதன் தன்னை சுத்தீகரித்துக் கொள்ள வேண்டும்? ஏனென்றால் அவன் சொத்துகளாக இருப்பவை பிறரிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. அந்த சொத்துகளை நீங்கள் உண்ணுங்கள், உண்ணுவதால் ஏற்படும் பாவங்களை தானம் கொடுத்து கழுவிக் கொள்ளுங்கள். அதை நீங்கள் விரிவாக்க வேண்டுமென்றால் உங்கள் உழைப்பை செலுத்தி விரிவாக்கம் செய்யுங்கள். மாறாக வட்டி என்பது உழைக்காமல் விரிவாக்கம் செய்வது, அதை செய்யாதீர்கள். இது தான் வட்டியை தடுக்கும் இஸ்லாத்தின் உள்ளடக்கம். அதாவது தனியுடமை இருக்கலாம், போர்களின் மூலம் தோற்றவனின் சொத்தை அபகரிக்கலாம். கொள்ளையடித்த பாவத்தை தானம் செய்து நீக்கிக் கொள்ளலாம். வியாபாரம் என்ற பெயரில் எவ்வளவு லாபம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வட்டி மட்டும் வாங்கி விடாதீர்கள். என்ன விதமான பார்வை இது? இதை முழுமையான கண்ணோட்டம் எனக் கொள்ள முடியுமா?
மார்க்ஸியம் வட்டியை விட லாபத்தையே முதன்மையானதாக எடுத்துக் கொள்கிறது. ஏனென்றால் வட்டி என்பது முதலீட்டின் லாபத்திலிருந்து கிடைக்கும் ஒரு பகுதி. லாபம் என்பது முழுமை, வட்டி என்பது அதன் ஒரு பகுதி. லாபம் இருக்கும் வரை வட்டியை தவிர்க்க முடியாது. வட்டி எவ்வளவு கொடூரமானதோ அதை விட பன்மடங்கு கொடூரமானது லாபம். ஓர் உற்பத்திப் பொருளின் பயன்பாட்டு மதிப்புக்கும், பரிமாற்ற மதிப்புக்கும் இடையேயான இடைவெளி எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு அதை பயன்படுத்துபவரின் உழைப்பைச் சுரண்டுகிறது. வட்டி, அதன் முழுமை வடிவமான லாபம், அதன் பிறப்பிடமான மூலதனம், அதன் ஆதாரமான தனிச் சொத்து, அதன் மூலமான தனியுடமை இவைகளை ஒழிப்பது தான் தன்னுடைய லட்சியம் என்கிறது மார்க்ஸியம். இவை தான் மக்களை வாழவிடாமல் செய்கிறது. இவைகளை அழிக்காமல் மக்களுக்கு வாழ்வு இல்லை என்கிறது. இதுவரை மனித உலகின் வரலாறு என்பது இதற்கான போராட்டம் தான் என்கிறது. இது தான் வட்டி குறித்த மார்க்ஸியத்தின் பார்வை.
இஸ்லாமிய வங்கி என்று ஒன்றைச் சொல்லுகிறார்கள். அது எப்படிச் செயல்படுகிறது. தொழில் செய்வதற்கான முதலீட்டுப் பணத்தை இஸ்லாமிய வங்கி கடனாக கொடுக்கும். அதைக் கொண்டு ஈடுபடும் தொழிலில் லாபம் ஈட்டினால், கடனையும் லாபத்தில் வங்கி நிர்ணயிக்கும் ஒரு தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். நட்டமடைந்தால் கடனை மட்டும் செலுத்தினால் போதுமானது. இது தான் வட்டியில்லாத வங்கி என இவர்கள் கூறும் இஸ்லாமிய வங்கியின் அடிப்படை. இதைத்தான் மார்க்ஸும் சொல்கிறார். வட்டி என்பது மூலதனம் மீதான லாபத்தின் ஒரு பகுதி என்று. வட்டி என்று பெயர் வைக்க வில்லை என்றால் அது வட்டி இல்லை என்றாகி விடுமா?
வட்டி குறித்த இஸ்லாமியப் புரிதல், மார்க்ஸியப் புரிதல் இரண்டில் எது சரி இஸ்லாமியர்களே? ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அதன் அடிப்படையில் இருந்து உணர்வு கும்பல் எழுதும் வட்டி பற்றிய விபரங்களைப் படித்துப் பாருங்கள். உலகில் யூதர்கள் மட்டும் தான் வட்டித் தொழிலில் ஈடுபட்டார்களா? முஸ்லீம்கள் ஈடுபடவில்லையா? அனைத்து யூதர்களும் வட்டித் தொழில் மட்டும் தான் செய்தார்களா வேறு தொழிலில் ஈடுபடவே இல்லையா? மதம் எனும் அடிப்படையில் முஸ்லீம்களுக்கு இருக்கும் வட்டியின் மீதான புரிதலை இஸ்ரேலின் உருவாக்கம் குறித்த தங்களின் திரித்தல்களுக்கு ஆதரவாக மாற்ற முயல்கிறது உணர்வு கும்பல். இதை நீங்கள் அனுமதிக்க விரும்புகிறீர்களா? இந்த அவர்களின் திரித்தல்களுக்கு உரமூட்ட ஹிட்லரையும், ஆர்.எஸ்.எஸ். அம்பி பா. ராகவனையும் பயன்படுத்துகிறது உணர்வு கும்பல். இது உங்களுக்கு சம்மதம் தானா? உங்கள் இயக்கத் தலைமைகளை நோக்கி உங்கள் கேள்விக் கணைகளை வீச வேண்டாமா?
அடுத்ததாக, முதலாளித்துவ அறிஞர்கள் கூட மார்க்ஸின் மீது கூறத் துணியாத ஒன்றை இந்த மதவாத மட்டைகள் கூறுகிறார்கள். பொருளாதாரத்தில் மார்க்ஸ் ஒரு பெரிய கூமுட்டை என்கிறார்கள். பாட்டி வடை சுட்ட கதை ஒன்றை கூறி பார்த்தீர்களா வட்டி எவ்வளவு கொடுமையானது என்கிறார்கள். வட்டி சுகமளிப்பது என்று கூறியது யார்? ஆனால் லாபம் கூடும் என்று கூறியிருக்கிறது இஸ்லாம். லாபம் சுகமளிப்பதா?
கூறப்பட்டிருக்கும் அந்த இரண்டு கதைகளிலும் எது உள்ளீடாக இருக்கிறது? இரண்டு எடுத்துக்காட்டுகளிலுமே பண்டத்தின் உற்பத்தி மதிப்பை விட அதிகமாக பரிமாற்ற மதிப்பு இருக்கிறது. இந்த அதிகப்படுத்தப்பட்ட பரிமாற்ற மதிப்பு எங்கிருந்து வந்தது? இந்தக் கதைகளின் மூலம் உணர்வு கும்பல் வட்டியின் கொடுமை குறித்து பேசுகிறதாம். லாபத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியான வட்டி மக்களை துன்புறுத்துகிறது என்றால் ஒட்டுமொத்த லாபமும் மக்களை என்ன செய்கிறது? இதற்கு உணர்வு கும்பல் பதில் கூறுமா?
மூலதனம் படித்து விட்டுத் தான் ஒரு கம்யூனிஸ்ட் செயல்பட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒரு முஸ்லீம் குரான் படிக்காமல் இருக்கக் கூடாது இருக்க முடியாது. கட்டாயமில்லை என்ற நிலையிலும் ஐம்பது விழுக்காடு கம்யூனிஸ்டுகள் மூலதனத்தை படித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்டாயம் படித்திருக்க வேண்டும் எனும் நிலையில் உள்ள முஸ்லீம்களில் எண்பது விழுக்காட்டினர் குரானை முறைப்படி படித்தறியாதவர்கள். படித்த இருபது விழுக்காடினரில் கூட பாதிப்பேர் அதாவது பத்து விழுக்காட்டினர் வெறுமனே குரானை உச்சரிப்பார்களே தவிர அதன் பொருள் என்ன என்பது தெரியாது. பொருள் தெரிந்து குரானைப் படித்த மீதமிருக்கும் பத்து விழுக்காடினரில் கூட வரலாற்று, அறிவியல் பார்வையுடன் குரான் வசனங்களை உரசிப் பார்த்து புரிந்து கொண்டவர்கள் ஒருவர் கூட தேற மாட்டார். இவர்கள் தான் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள்.
உணர்வுள்ள முஸ்லீம்களே! பதில் கூறுங்கள். சாதாரண முஸ்லீமாக இருந்தாலும் சரி, உலகமகா அறிஞராக இருந்தாலும் சரி. இதற்கான பதிலை கூறிப் பாருங்கள். வட்டி கொடூரமானது அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் லாபத்தை, மூலதனத்தை தக்க வைத்துக் கொண்டு வட்டியை ஒழிக்க முடியுமா? வட்டி கொடியது தான். ஆனால் லாபத்தை ஏற்றுக் கொள்கிறேன் வட்டியை மட்டும் ஒழியுங்கள் என ஒருவர் கூறினால் அது முட்டாள்தனமானதா இல்லையா? லாபத்தை ஏற்றுக் கொள்ளும் குரான் வட்டியை ஒழிக்கும்படி கூறுவது கேலிக் கூத்தா இல்லையா? திராணி இருப்பவர்கள் பதில் கூறிப் பார்க்கலாம்.
இத்தொடரின் முந்திய பகுதிகள்:
1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்
2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே
3. பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே
4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்
5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்
6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?
7. ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்
8. உணர்வு கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?
9. மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே
10. டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்
இதுக்கு என்ன சொல்றிங்க.. முஸ்லீம்கள் வங்கி நடைமுறைக்குள் – வட்டி போன்ற விஷயங்களால் வர மறுப்பதால், அவர்களுக்கென்று தனி பிரிவு வங்கிகளில், எதிர்காலத்தில் முஸ்லீம்களுக்கென்று தனி வங்கி – இத்தகைய அரசுகளின் நிலை சரி தானா. மதங்களின் பெயரால் இது மேலும், மேலும் மக்களை பிரிக்க தானே வழி வகுக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் சென்கொடி அவர்களே, சமீபத்தில் ஒரு சகோதரர் மூலம் உன்களின் இந்த சைட்டுக்கு வந்து படித்துப் பார்த்தேன். அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தின் மீது காழ்புணர்ச்சியுடன் சகதியை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறீர்கள். கட்டுக்கதைகள் அவதூரு செய்கின்றீர்கள். நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். உன்களுக்கு தெரியாவிட்டால் உன்களுக்கு எத்தி வைக்க நான் ரெடியாக இருக்கிறேன். இந்த போஸ்டில் கூட வட்டி எவ்வளவு கொடுமை என்பதை விளங்கி வைத்துக் கொண்டே உங்கள் கமுயுனிசப் பாசத்தால் வியாபாரத்தோடு சேர்த்துக் கூறியிருக்கிறீர்கள். இயக்கவாதிகள் பற்றி நான் ஒன்னும் கூறப்போவதில்லை. அவர்களுக்காக இஸ்லாத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். உன்களுக்கு தெரியவில்லை என்றால் எத்தி வைக்க நான் தயார். சீக்கிரம் பதில் சொல்லுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் சென்கொடி இங்கு கமெண்ட் செய்து இரண்டு நாள்களாகி விட்டது. உன்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் உன்களோடு எனக்கு பதில் வேணும். நான்கள் உயிரினும் மேலாக மதிக்கும் மார்க்கத்தைப் பற்றி அவதூரு கூறிவிட்டு இப்படி கள்ளத்தனமாக இருந்தால் என்ன அர்த்தம். உன்களுக்கு அழகிய முறையில் மார்க்கத்தை விளக்குவதற்கு நான்கள் தயாராக இருக்கிறோம். பதில் சொல்லுக்கள் இல்லையென்றால் நீன்கள் எழுதிய போஸ்டை அழித்து விட்டு மன்னிப்பு கேளுக்கள்.
ஐயா நிஜாமுத்தீன்,
உங்களுக்கு என்ன வேண்டும்? இந்தப் பதிவின் கருத்தோடு நீங்கள் முரண்படுகிறீர்கள் என்றால், எப்படி முரண்படுகிறீர்கள் என்பதை விளக்குங்கள். அது சரியா? தவறா? என்று பரிசீலிக்கலாம். மாறாக, நீங்கள் ‘எத்தி’ வைப்பதை வாங்கிக் கொள்ள நான் ஆயத்தமாக இல்லை.
மன்னிப்பு வேறு கேட்க வேண்டுமோ. ஐயய்யோ அடிச்சுப்புடாதீங்கப்பு பயமா இருக்குது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! நீங்கள் அறிந்து கொண்டே மாறு செய்கிறீர்கள் என்று கூறுகிறோம். நாங்கள் எழுதி இருப்பது என்ன என்று தெரிய வில்லையா. அழகிய முறையில் எங்களுடைய மாற்றுக் கருத்தை தெரியப்படுத்தினோம். அதற்கு பதிலாக நீங்கள் கேலி செய்கிறீர்கள். இது தான் உங்களுக்கு கமுயுனிசம் கத்துக் கொடுத்த பழக்கமா? எங்கள் மார்க்கம் எங்களை அழகிய முறையில் பேச சொல்லித் தந்து இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் அதில் இருந்து நாங்கள் என்னைக்கும் மாற மாட்டோம். மீண்டும் கூறுகிறோம் எங்களுக்கு பதில் வேண்டும்.
பின்குறிப்பு முந்திய கமாண்டுகளில் உள்ள எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.
நண்பர் நிஜாமுத்தின்,
நான் சென்ற பின்னூட்டத்திலேயே இப்படி எழுதியிருக்கிறேன், \\\உங்களுக்கு என்ன வேண்டும்? இந்தப் பதிவின் கருத்தோடு நீங்கள் முரண்படுகிறீர்கள் என்றால், எப்படி முரண்படுகிறீர்கள் என்பதை விளக்குங்கள். அது சரியா? தவறா? என்று பரிசீலிக்கலாம்/// முதலில் இதைச் செய்யுங்கள். கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லச் சொன்னால் எப்படி?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! இஸ்லாம் பற்றி நீங்கள் தப்புத் தப்பாய் விளங்கி வைத்திருக்கிறீர்கள் என சொல்கிறோம். உங்களின் பல போஸ்டுகள் படித்துப் பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்துத்துவா ஒரு பக்கம் எங்களை அழிக்க முயல்கிறது என்றால், கமுயூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொண்டு நீங்களும் இஸ்லாம் என்றாலே காழ்ப்புணர்ச்சியோடு தான் பார்க்கின்றீர்கள். நீங்கள் நினைப்பது போல் சில விளங்கிக் கொள்ளாத முஸ்லீம்களின் செய்துக் கொண்டிருப்பது அல்ல இஸ்லாம். 1400 ஆண்டுகளாக எந்த மனிதக் கரங்களாலும் களங்கப்படுத்த முடியாத எல்லாம் வல்ல அல்லாஹ் (ஜல்) வால் பாதுகாக்கப்பட்டு வரும் திருக்குர்ஆனும், எம்பெருமானார் முகம்மது (ஸல்) அவர்களின் வழி முறையும் தான் இஸ்லாம். இதை நீங்கள் விளங்கிக் கொள்ள தயார் என்றால் உங்களுக்கு விளக்கிச் சொல்லித்தர நாங்கள் தயாராக இருக்கிறோம். முதலில் இஸ்லாம் குறித்து நீங்கள் எழுதி இருக்கிற போஸ்டுகள் அத்தனையும் நீக்குங்கள். உங்களுக்கு ஏற்படுகின்ற அத்துனை சந்தேகங்களையும் நாங்கள் தீர்த்து வைக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் நீங்களும் அமைதி மார்க்கமாம் இஸ்லாத்தை வந்து அடைவீர்கள். மாரீஸ் புஹைல் உள்பட எத்துனையோ அறிஞர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்து முஸ்லீம்களாக மாறியிருக்கின்றார்கள். அதற்கு முதல் கட்டமாக உங்கள் மனதில் இருக்கின்ற அழுக்கை நீக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கேட்கிறோம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! நாங்கள் உங்கள் சைட்டில் கமாண்ட் செய்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது. இன்னும் வெளிவரவில்லை. என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள். கமாண்டை வெளியிட முடியவில்லை என்றால் ஏன் வெப்சைட் நடத்த வேண்டும். நாங்கள் அமைதியாக கேள்வி கேட்கிறோம். அதைக் கூட உங்களால் பதில் சொல்ல முடியாமல் பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிந்துக் கொண்டிருக்கின்றீர்கள். இது தான் இஸ்லாம். 1400 ஆண்டுகளாக எத்துனையோ கொம்பன்கள் முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அசைக்கக் கூட முடியவில்லை. நாள் தோறும் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதில் நீங்கள் என்ன செய்து விட முடியும். பாவம்.
ஸ்ஸ்ஸ்ஸ் .. .. .. யப்பா முடியல.
நண்பர் நிஜாமுத்தின், உங்களுக்கு என்ன வேண்டும்? இந்த பதிவில் உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் முதலில் அதை பதிவிடுங்கள். பதிவுகளை நீக்க வேண்டுமா என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
அவ்வாறன்றி மீண்டும் நீங்கள் 1400 ஆண்டுகள், அல்லா, முகம்மது நபி என்று சுற்றி வளைத்து பின்னூட்டினால் .. .. .. மன்னிக்கவும். அது வெளி வராது. எனக்கு நேரமும் இல்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! இந்த போஸ்ட்டில் மட்டும் நாங்கள் குறை காண்கிறோம் என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள். உங்கள் அத்தனை போஸ்டுகளுமே எங்கள் மார்க்கத்தைப் பற்றி அரைகுறை அறிவையே வெட்ட வெளிச்சமாக காட்டிக் கொண்டு இருக்கின்றது. எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக அறிவித்திருக்கின்றோம். இஸ்லாம் பற்றி காழ்ப்புணர்ச்சியுடன் நீங்கள் எழுதியிருக்கும் அத்தனை போஸ்டுகளையும் நீக்குங்கள். உங்களுக்குத் தேவையான அத்துனை விளக்கங்களையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்களை இயக்கவாதிகளைப் போல நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வும் அவனது தூதரும் அருளிச் சென்ற வழியில் மிகப் பொருமையாக உங்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்க நாங்கள் இருக்கிறோம். அப்படி இல்லாமல் நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கின்ற கமுயுனிசம் உங்களுக்கு முக்கியம் என்றால் கண்ணியமான எங்கள் மார்க்கத்துக்காக உங்களுடன் விவாதம் செய்ய நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இயக்கவாதிகளைப் போல் நேரடியாக வா என்று கூப்பாடு போட மாட்டோம். உங்களை இங்கேயே உங்கள் சைட்டிலேயே சந்திக்க நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா? ஓடி ஒளிய வேண்டாம். உடனே பதில் கூறுங்கள்.
எல்லாம் வல்ல அந்த நாயன் உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழியைக் காட்டுவானாக. ஆமீன்!
Hello Mr. Sengodi….Unaku Thirani irunthal Neradi vivatham seiya vanga….ipdi pedi paya mathiri oodathey….Va Neril viviatham seiyalam…athai vitutu idpi kozhaiyattum website la pesura….Dhil irunthal neradi vivatham sei Mr.Sivappu kodi…
அல்லா பக்ஷ் ஐயன்மீர்,
இந்த தைரியம், திராணி இத்யாதி, இத்யாதி எல்லாம் எனக்கு இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் நீங்கள் குறிப்பிடும் டி.என்.டி.ஜே வுக்கும், பிஜே வுக்கும் அவைகளெல்லாம் இருக்கிறதா? இருந்தால் இங்கே வரச் சொல்லுங்கள். ஒரு கை பார்க்கலாம். ரெடி ஜூட் ஒன் டூ திரி.. .. ..
Hello Mr.Sivappu Kodi….unnal neridiyaga TNTJ ku alaipiu vidu, avar varuvargal ne irukum idathuku….Unudan neradi vivatham seivargal…Ne ready ah…? unnudan vivatham seiya naangal ready…unnai epdi thodarbu kolvathau ednru sonnal naangal kandipaga nee irukum idathurku kandipaga varuvom….Ungal Address kidaikuma? Mr.Green Kodi, Yellow Kodi, Sivappu Kodi…
Hello Mr.Sengodi..Ungal Office Address kidathal naangal neridiyaga ungal office ku varukirom…Ungal office address kodukua mudiuma Mr.Sengodi…oru pothuvana idathil naam neridiyaga vivatham seiyalam.Enn Mr.Sengodi…Ungal Office Address Solungal….
This is TNTJ Saval…Unnal Yetka Mudiuma…Mr.Sengodi…
பகிரங்க அழைப்பு
சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.
அல்லா பக்ஷ் ஐயன்மீர்,
இந்த தைரியம், திராணி இத்யாதி, இத்யாதி எல்லாம் எனக்கு இல்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் நீங்கள் குறிப்பிடும் டி.என்.டி.ஜே வுக்கும், பிஜே வுக்கும் அவைகளெல்லாம் இருக்கிறதா? இருந்தால் இங்கே வரச் சொல்லுங்கள். ஒரு கை பார்க்கலாம். ரெடி ஜூட் ஒன் டூ திரி.. .. ..
டேய் மாணம் கெட்ட பரதெசி சென்கொடி உன் அலுவலக முகவரி கொடுடா. அதை கொடுக்க துப்பு இருக்கடா
அல்லா பக்ஷ்,
மரியாதையாக உரையாடுவது எப்படி என்பதை கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே? தலை இருக்க வால் ஆடக்கூடாது. மீறி ஆட்டினால் தலைகள் நசுக்கப்படும். இது தலைப்பிரட்டைக்கள் சலப்பும் குட்டையல்ல, அறியவும்.
நண்பர் நிஜாமுத்தின்.
நீங்கள் மீண்டும் மீண்டும் மின்னஞ்சல் செய்து கொண்டிருக்கத் தேவையில்லை. நான் ஏற்கனவே உங்களுக்கு கூறியதன் அடிப்படையிலேயே உங்கள் பின்னூட்டத்தை தடுத்து வைத்திருந்தேன். இஸ்லாம் குறித்து எனக்கு போதுமான புரிதல் இருக்கிறது. நீங்கள் புதிதாக அதில் எதையும் கற்பித்து விட முடியாது எனக் கருதுகிறேன். நீங்கள் தவறு எனக் கருதும் எந்த இடுகையிலும் உங்கள் மாற்றுக் கருத்தை முன்வைக்கலாம். நான் போதிய விளக்கமளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். மற்றப்படி விவாதம் எல்லாம் வேண்டாம். ஏற்கனவே இத்தளத்தில் பல இஸ்லாமிய விவாதங்கள் நடந்திருக்கின்றன. நேரத்தை வீணாக்கியதத் தவிர வேறெந்த விளைவையும் அவை ஏற்படுத்தவில்லை. பணிகள் அதிகம் இருக்கின்றன. புரிதலுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்பை கோருகிறேன். நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! உங்களுக்கு நேரமில்லை என்று கூறி அவ்வளவு ஈசியாக நீங்கள் சென்றுவிட முடியாது. எங்கள் உயிரினும் மேலான எங்கள் ரஸூல் (ஸல்) அவர்களையும், உலகம் உள்ளவரை வழிகாட்ட வந்த மாமறையாம் திருக்குர்ஆனையும், கண்ணியம் மிக்க எங்கள் மார்க்கத்தையும் பொய்யையும் புழுகையும் எழுதி வைக்க உங்களுக்கு நேரம் இருக்கிறது. அதற்கு எதிராக நாங்கள் பொறுமையாக விவாதிக்க அழைத்தால் உங்களுக்கு நேரமில்லையோ. உங்களுக்கு நிஜமாகவே நேரமில்லை என்றால், நீங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் கிருக்கி வைத்திருக்கும் அத்துனை போஸ்டுகளையும் நீக்குங்கள். உங்களுக்கு எப்போது விவாதம் செய்ய நேரம் இருக்கிறதோ அப்போது எழுதுங்கள். நீங்கள் ததஜ பற்றி எழுதினால் அதில் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்க போவதில்லை. நீங்கள் ததஜ சாக்கு வைத்து இஸ்லாத்தை அவமதிக்கிறீர்கள். ஒரு கமாண்டையே பலமுறை இமெயில் எழுதித்தான் வெளிப்படுத்த செய்ய வேண்டிஇருக்கிறது என்னும் போது, இதுவரை எத்துனை கமாண்டுகளை மறைத்திருக்கிறீர்களோ அல்லாஹ் அறிவான். நாங்கள் உங்கள் எண்ணத்தை மாற்ற விரும்புகின்றோம். இன்ஷா அல்லாஹ் நீங்கள் சம்மதித்தால் உங்களை மீண்டும் ஒரு முஸ்லீமாக மாற்றிக் காட்டுகிறோம். ஆரம்பத்திலேயே பின் வாங்காமல் விவாதத்துக்கு வந்துப் பாருங்கள். காலம் கடந்த கமுயூனிசமா? கண்ணியம் மிக்க இஸ்லாமா? போட்டுப் பார்த்து விடலாம்.
எல்லாம் வல்ல அந்த நாயன் உங்களுக்கும் எங்களுக்கும் நேர்வழியைக் காட்டுவானாக. ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!
ஹல்லொ சென்கொடி நீ உன்மையான ஆண் மகனாக இருந்தால் நீ எங்கள் தலைவருடன் நேரில் விவாதம் செய்ய முன் வர வேன்டும். அதை ஏன் உன்னால் செய்ய முடியவில்லை. நேருக்கு நேர் மோதுவதுதான் வீரனுக்கு அழகு. இப்படி பேடியாக பேசுகிராய். நீ ஒரு பக்கா முட்டாள்.
நீ விவாதம் செய்ய வரமாட்டய் என்று எங்கலுக்கு தெரியும். விவாதம் செய்தால் உன் புலுகு எல்லாம் உலகுக்கு தெரிந்த்து விடும் என்று பயப்படுகிராய். எங்கல் டி.என்டிஜே தலைவருடன் நேரிடையாக விவாதம் செய்து இஷ்லாம் மார்க்கம் ஒரு போலியானது என்று நிருபி பாக்கலாம். நீ தலைகீழ் நின்றாலும் அது உன்னால் முடியாது. இன்று உலகில் இஷ்லாம் வேகமாய் பரவி வரும் மார்க்கம் புரிதா சென்கொடி…?
அல்லா பக்ஷ்,
போய் உன் தலைவனை இங்கு கூட்டிக் கொண்டு வா, உன் தலைவன் போர்வை போர்த்திக் கொண்டு ஒழிந்து கிடந்தால், பக்கத்தில் உட்கார்ந்து வேப்பிலை அடி. இங்கே வந்து பாட்டு படிக்கதே.
நண்பர் நிஜாமுத்தின்,
நாள் ஒன்றுக்கு இரண்டு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இஸ்லாமிய மதவாதிகளுடன் விவாதம் செய்வதினால் பலன் ஒன்றுமில்லை என்பதை பல விவாதங்கள் மூலம் அறிந்து வைத்திருக்கிறேன். நீங்கள் இன்னொரு விவாதத்துக்கு அழைக்கிறீர்கள். மெய்யாகவே எனக்கு உங்களோடு விவாதம் செய்வதில் ஆர்வமில்லை. உங்களோடு விவாதிக்காவிட்டால் நான் பதிவிட்டிருப்பவைகளை நீக்க வேண்டும் என நீங்கள் கோருவதை ஏற்க முடியாது. எங்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையோ அங்கு உங்கள் எதிர்க்கருத்தை பதிவு செய்யுங்கள். நான் தகுந்த விளக்கமளிக்கிறேன். இதுவும் கூட விவாதம் தான். மாறாக, உங்கள் உணர்ச்சிவசப்படல்களை மட்டுப்படுத்த என்னுடைய நேரத்தை செலவிட முடியாது. மன்னிக்கவும்.
என் தலைவன் எங்கும் ஓடி ஒளியவில்லை. உன்னை போல் பேடியும் இல்லை.என் தலைவர் எங்கு வர வேன்டும் என்று சொல். ஒரு பொதுவான இடத்தில் விவாதம் செய்யலாம்.அப்பொழ்துதான் ஒரு தெளிவு பிறக்கும். பொது மக்கள் முன் விவாதம் செய்யாலாம். உன்னை எங்கு சந்திக்கலாம்? உன் முகவரி என்ன? அதை சொல்ல துப்பு இருக்கா உனக்கு? எங்கள் அலுவலக முகவரி :
Head Office Address:
Tamilnadu Tawheed Jama’ath,
30, Armenian St.,
Mannady, Chennai-600001.
Ph: +91 044 25215226 , +91 99520 56555
உன் அலுவலக முகவரி கொடுக்க முடியுமா? செங்கொடி?
அல்லா பக்ஷ்,
நீ என்ன உன் தலைவனுக்கு அடியாளா? உன் தலைவனை இங்கு வந்து எழுதச் சொல். எல்லா இடங்களிலும் வாய் கிழியப் பேசும், எல்லா இடங்களிலும் எழுதிக் கிழிக்கும் உன் தலைவர் இங்கு மட்டும் வரமாட்டாரா? இங்கு வரச்சொல்
நான் அடியாட்களுடன் பேசுவதில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே!
“ஒருவர் பொதுவெளியில் எழுதுகிறார் என்றால்; அவ்வாறு எழுதுவதற்கான உரிமை, அவர் எழுதியதற்கு பொறுப்பேற்று எழும் விமர்சனங்களுக்கு பதில் கூறும் கடமையிலேயே அடங்கியிருக்கிறது. ஏதேதோ காரணம் கூறி பதில் கூறுவதிலிருந்து நழுவுவது, அவரது எழுதும் உரிமையை இழக்கச் செய்யும். செய்ய வேண்டும்”
இந்த வசனங்கள் யார் எழுதியது என நினைவிருக்கிறதா? சாட்சாத் நீங்களே தான். பார்த்தீர்களா நீங்கள் எழுதியது உங்களுக்கே எதிராக திரும்புகிறது. நீங்கள் எங்கள் கண்ணியத்துக்குறிய மார்க்கம் குறித்து பொதுவெளியில் தப்பும் தவறுமாக எழுதி வைத்து இருக்கிறீர்கள். அதை எதிர்த்து நாங்கள் சத்தியத்தை பேச வந்தால் நேரமில்லை என்று உங்களை ரெம்ப பிஸியானவர் போல் காட்டிக் கொள்கிறீர்கள். அப்படிஎன்றால் நாங்களெல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்களா? ஒன்று இரண்டு அல்ல நீங்கள் எழுதிய அத்துனை போஸ்டுகளும் அறியாமையால் எழுதியது என நிரூபித்துக் காட்டுகிறோம். நேரடியாக கூப்பிட்டால் எழுத்து விவாதத்துக்குக் கூப்பிடுகிறீர்கள். எழுத்து விவாதத்துக்கு வந்தால் நேரம் இல்லை என்று சொல்லிகிறீர்கள். இது தான் கமுயூனிசம் உங்களுக்கு சொல்லித்தந்த பழக்கமா? இதற்கு மேலும் ஓடி ஒழிய மாட்டீர்கள் என்று நம்புகிறோம். விவாதத்துக்கு வாருங்கள் அல்லது உங்கள் போஸ்டுகளை அழியுங்கள் இது தான் எங்கள் முடிவு.
இன்ஷா அல்லாஹ் எங்களது முயற்சிகள் தொடரும்.
நண்பர் நிஜாமுத்தின்,
நான் முன்னர் எழுதிய ஒரு வாசகத்தை மேற்கோளாக எடுத்துப் போட்டு நான் அதற்கு மாறாக நடப்பது போல் காட்டியிருக்கிறீர்கள். நான் எழுதியிருப்பதன் மீதான விமர்சனங்களுக்கு பதில் கூறும் கடமையிலிருந்து நான் என்றும் விலகியவனல்லன். குறிப்பாக உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் பதிலளிக்கிறேன் என்று தான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை நீங்கள் குறிப்பாக எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. மாறாக நான் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதுவதாக பொதுவான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கிறீர்கள். அடுத்து, நான் நேரமில்லை என்று உங்களிடம் கூறியதில்லை. என்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று தான் கூறிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் கூறுகிறேன். நீங்கள் விவாதத்துக்கு வந்து தான் ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். உங்கள் மாற்றுக் கருத்தை தொடர்புடைய பதிவுகளில் முன்வைத்தால் தகுந்த விளக்கங்களுடன் நான் வருகிறேன். நேரமில்லை என்று ஒருபோதும் கூற மாட்டேன். அதைச் செய்யுங்கள்.
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! நீங்கள் புத்திசாலியாக நினைத்துக் கொண்டு எழுதிய கமெண்ட் படு முட்டாள்தனமாக இருக்கிறது. விவாதத்துக்கு கூப்பிடாதீர்கள் என்று சொல்கின்றீர்கள், குறிப்பாக விமர்ச்சனம் செய்தால் பதில் கூறுகின்றேன் என்று சொல்கின்றீர்கள்.. அதுவும் விவாதம் தான் என்று சொல்கின்றீர்கள். என்ன தான் உங்கள் முடிவு. உங்களுக்கே இது முட்டாள்தனமாக தெரியவில்லையா?. நாங்கள் ஆரம்பத்திலிருந்து என்ன சொல்லுகின்றோம், உங்கள் அத்துனை போஸ்டுகளுமே இஸ்லாத்தைப் பற்றி முழுமையாக அறியாமல் எழுதியவை தான் என்று சொல்லுகின்றோம். ஒவ்வொரு போஸ்டிலும் சென்று கமாண்ட் போட்டுக் கொண்டிருக்க முடியுமா? இது அறிவார்த்மமான செயலாக இருக்குமா? இதைவிட விவாதம் செய்வதே சிறந்தது. அழகிய முறையில் அழைக்கின்றோம். ஓடி ஒழியாமல் வந்து கலந்து கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் உங்களை செங்கொடியிலிருந்து மீண்டும் —————னாக மாற்றிக் காட்டுகிறோம்.
புகழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே.
நண்பர் நிஜாமுத்தின்,
உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ச்சியாகவும், பிடிவாதமாகவும் நீங்கள் எழுதி வருவதன் பொருட்டு உங்கள் விவாதக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். அதேநேரம் இந்த விவாதத்தால் பலன் ஏதுவும் விளையப்போவதில்லை என்பதை அறிந்தே இருக்கிறேன். சிறிது காலம் விவாதம் செய்து விட்டு எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்து போகும். நீங்கள் புதிதாக இணையப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என்பதற்காக என்னுடைய கணிணிக்கான நேரத்தில் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள். அவ்வளவு தான். இப்படித்தான் இதை நான் புரிந்து கொள்கிறேன்.
விவாதம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிடும் வரை தயவு செய்து எனக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டாம்.
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இது வரை நாங்கள் உங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. கமாண்ட் போடவில்லை. ஆனால் நீங்கள் சம்மதம் என்று சொல்லி இன்றோடு எட்டு நாள்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு மூச்சையே காணோம். ஏன் இப்படி பயந்து நடுங்குகின்றீர்கள். இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் விவாதத்தை தொடங்குவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
நண்பர் நிஜாமுத்தின்,
என்ன தலைப்பில் விவாதம் நடத்துவது என்பதைக் குறிப்பிடுங்கள். கூடவே விவாதம் குறித்த உங்களின் விதிமுறைகளையும் பட்டியலிடுங்கள். நானும் சில விதிமுறைகளைக் கூறுகிறேன். ஒரு முடிவுக்கு வந்த பின் இத்தளத்தில் விவாதம் என்ற தலைப்பில் ஒரு பக்கம் உருவாக்கப்படும் அதில் நாம் விவாதிக்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! உங்களை ஓரளவுக்கு விபரம் தெரிந்தவர் என்று நம்பியிருந்தோம். வரவர சொதப்பிக் கொண்டிருக்கின்றீர்கள். தொடக்கத்திலிருந்து நாங்கள் இஸ்லாமா கமுயூனிசமா என்றுதான் விவாதம் செய்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது வந்து என்ன தலைப்பு என்று கேட்கின்றீர்கள். விடிய விடிய கதை கேட்டுக் கொண்டு இருந்துவிட்டு விடிந்தப்புறம் சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்ன கதையாக இருக்கின்றது. இஸ்லாமா கமுயூனிசமா இது தான் தலைப்பு. நீங்கள் விவாதத்துக்கு வர வேண்டும் இது தான் எங்கள் நிபந்தனை. சீக்கிரம் விவாதத்தை தொடங்குங்கள்.
நண்பர் நிஜாமுத்தின்,
உங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் சொல்லும் விபரத்தை தெரியாதவனாகவே நான் இருந்து விடுகிறேன். ஒருவிதத்தில் அது தான் சரியானது கூட. முதலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள முயலுங்கள். இஸ்லாம் கம்யூனிசம் என்று பொதுவாக விவாதிக்க முடியாது. அதில் குறிப்பாக ஒரு தலைப்பில் இருந்து விவாதிக்க வேண்டும். வறுமை, பொருளாதாரம், குடும்பம், அரசு போன்ற ஏதாவது ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அதில் கம்யூனிசம் இஸ்லாம் ஆகிய நிலைப்பாடுகளில் இருந்து தான் விவாதிக்க முடியும். இதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். முயலுங்கள். முயலாமலேயே கேலி செய்யாதீர்கள்.
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! இதை நீங்கள் முதலிலேயே தெளிவாகச் சொல்லி இருந்திருக்கலாமே.முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டியது. பிறகு அதை மாற்ற வேண்டியது. இது விவாதத்துக்கு அழகில்லையே. நாங்கள் அழகிய முறையில் விவாதம் நடத்த விரும்புகிறோம். மற்றும் நீங்கள் நாள் கடத்துவது போல தெரிகின்றது. ஒரு கமாண்ட் போட்டால் அதை நான்கைந்து நாளுக்குப் பிறகு தான் வெளியிடுக்கின்றீர்கள். அதற்கு பதில் கமாண்ட் போடுவதற்கு மீண்டும் நான்கைந்து நாள் எடுத்துக் கொள்கின்றீர்கள். நாங்கள் இந்த வெப்சைட்டில் கமாண்ட் போட ஆரம்பித்து மாதக்கணக்கில் ஆகின்றது. இன்னும் விவாதம் ஆரம்பிக்கவில்லை. என்ன செய்துக் கொண்டிருக்கின்றீர்கள். சீக்கிரம் விவாதம் ஆரம்பியுங்கள். தலைப்பு இஸ்லாமிய பொருளாதாரம் சிறந்ததா கமுயூனிச பொருளாதாரம் சிறந்ததா? விவாதம் சீக்கிரம் தொடங்க வேண்டும் என்பதைத்தவிர வேறு எந்த நிபந்தனைகள் எங்களுக்கு இல்லை. இன்ஷா அல்லாஹ் உங்களை மீண்டும் நல்ல முஸ்லீமாக மாற்றிக் காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜெல்) எங்களுக்கு அந்த பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
நன்றி நண்பர் நிஜாமுத்தின்,
உங்களுடைய குற்றச்சாட்டுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அதற்கு விளக்கமளித்தால் இன்னும் நீளும். எனவே, விரைந்து நாம் விவாதிப்பதற்கான முனைப்புகளைச் செய்யலாம். இன்னும் ஓரிரு நாட்களில் விதிமுறைகள் குறித்து பதிவிடுகிறேன். உங்களுக்கு அதில் மாற்றம் ஏதும் இருந்தால் கூறலாம். பின் பிப்ரவரி 2ம் தேதி இத்தளத்தில் விவாதம் எனும் தனிப்பகுதி தொடங்கப்படும். அதில் நம்முடைய விவாதத்தை நடத்தலாம்.
நண்பர் நிஜாமுத்தின்,
நம்மால் நடத்தப்படவிருக்கும், “இஸ்லாமிய பொருளாதாரம் சிறந்ததா? கம்யூனிசப் பொருளாதாரம் சிறந்ததா?” எனும் இந்த விவாதத்தில் நான் சில விதிமுறைகளை கொண்டிருக்கிறேன்.
1. இந்த விவாதத்தின் அனைத்து அம்சங்களும் முடிவைக் காணும் விதத்திலேயே பயணப்பட வேண்டும்.
2. நாம் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்கு வெளியே எதையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்படுகிறது எனக் கருதினால் என்ன விதத்தில் இந்த தலைப்புக்கு உதவியாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
3. இந்த விவாதத்தில் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு அதற்கான பதில், விவாதங்கள் இவைகளிலிருந்து ஒரு முடிவை வந்தடைந்த பின்னர் அடுத்த கேள்வியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பலவிதமான கேள்விகளை எடுத்துக் கொண்டு விவாதிக்கக் கூடாது.
4. விவாதத்தில் ஈடுபடும் இருவரும் கேள்வியை முன் வைக்கும் போது எதிர்தரப்பின் நிலைப்பாட்டை எப்படி புரிந்து கொண்டு அந்தக் கேள்வியை முன் வைக்கிறார் என்பதைக் குறிப்பிடுவது சிறந்தது.
5. வைக்கப்படும் வாதங்கள் தகுந்த உள்ளீட்டுடனும் செரிவுடனும் இருக்க வேண்டும்.
6. அவரவர் வைக்கும் வாதங்களுக்கு அவரவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
7. விவாதிக்கும் இருவர் தவிர ஏனையோர் கூறும் கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒருவேளை அப்படி வைக்கப்படும் கருத்து சரியானது எனக் கருதினால் அதனை தன்னுடைய வாதத்தில் எடுத்துக் கூறி முன்வைக்க வேண்டும்.
8. எதிர்த்தரப்பு முன்வைக்கும் வாதங்களை திசைதிருப்புவதோ, கண்டு கொள்ளாமல் நழுவிச் செல்வதோ கூடாது.
9. குறிப்பிட்ட ஒரு அம்சத்துக்கு பதிலளிக்காமல் இருப்பது, சுட்டிக் காட்டிய பிறகும் அது தொடர்ந்தால் அது குறித்த எதிர்தரப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாக பொருள் கொள்ளப்படும்.
10. எதிர்த்தரப்பின் வாதத்துக்கு நான்கு நாட்களுக்குள் பதிலளித்து விட வேண்டும். தவிர்க்கவியலாமல் பதிலளிக்க முடியாதிருந்தால் தகுந்த காரணங்களைக் கூறி எவ்வளவு நாட்களுக்குள் பதிலளிக்க முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும். நழுவல் போக்கில் இதைப் பயன்படுத்தக் கூடாது.
என்னளவில் நான் என்னுடைய வாதங்களை எள்ளலில்லாமலும், உள்ளீட்டுடனும், முடிவு காணும் நோக்கத்துடனும், நட்பு ரீதியாகவும், மேற்கூறப்பட்ட நிபந்தனைகளின்படியும் முன்வைப்பேன் என உறுதி கூறுகிறேன். இதேபோன்ற உறுதி மொழியை எதிர்த்தரப்பிலிருந்து எதிர்பார்க்கிறேன்.
மேற்கண்ட விதிமுறைகளில் மாற்றம் ஏதும் தேவைப்பட்டால் அது குறித்து தெரிவிக்கலாம். அதை சரி செய்து கொண்டு 2ம் தேதி விவாதக் களத்தில் சந்திக்கலாம்.
நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் செங்கொடி அவர்களே! அல்ஹம்துலில்லாஹ், ஒருவாறு முடிவுக்கு வந்து விட்டீர்கள். உங்களின் அத்துனை கண்டிசன்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நீங்கள் எழுதியபடிக்கே நாங்கள் உறுதி மொழியும் செய்துத் தருகின்றோம். பதிலுக்கு நாங்கள் எந்த கண்டிசன்களையும் போட விரும்பவில்லை. அல்லாஹ்வின் சத்திய ஒளி எங்களிடம் இருக்கின்றது. அதில் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது. ஆகையினால் நாங்கள் எந்த கண்டிசன்களையும் போட விரும்பவில்லை. என்றாலும்கூட அந்த கடைசி 10ஆவது கண்டிசன் 4 நாட்கள் என்பதை ஏன் தினசரி என்று மாற்றக் கூடாது. சீக்கிரம் விவாதம் நடந்து முடிக்க வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றோம். மற்றப்படி வேறொன்றுமில்லை. உங்களை மீண்டும் ஸாலிஹான நல்ல முஸ்லீமாக மாற்றும் பாக்கியத்தை அல்லாஹ் எங்களுக்கு வழங்கி அருள்வானாக!
நண்பர் நிஜாமுத்தின்,
உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாததற்காக வருந்துகிறேன். ஒவ்வொரு நாளும் விவாதம் நடத்திக் கொண்டிருப்பது என்பது எனக்கு மிகவும் பழுவானதொன்று. நான்கு நாட்கள் என்பதே என்னுடைய சூழலில் சிக்கலுக்குறியது என்றாலும், உங்களின் நீண்ட விடாப்பிடியான அணுகுமுறையினால் அதை செய்துவிடமுடியும் எனும் நம்பிக்கையில் இறங்குகிறேன். அனைத்து விதிமுறைகளுக்கும் ஏற்பளித்தது குறித்து மகிழ்ச்சி. நாளை விவாதப் பகுதி தொடங்கி விடும். தொடங்கியதும் உங்கள் வாதத்தை முதலில் எடுத்து வைக்கவும். பின்னர் என்னுடைய வாதங்களுடன் நான் வருகிறேன்.
நன்றி.