நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது.
அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் எதிரானது – ஏன்? எனும் பேரா. நா. மணி அவர்கள் தொகுத்த கட்டுரைத் தொகுப்பு நூலை உங்களுக்கு தருகிறோம். படித்துப் பாருங்கள், பகிருங்கள்.
இந்நூல் பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எனவே, உரிமை அவர்களுக்கே. இன்றியமையாத பயன்பாடு கருதியே இது மின்னூலாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஆட்சேபித்தால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்படும்