முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் – 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 8 இந்தக் குடும்ப வடிவம் அமெரிக்க முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இரத்த உறவுகளை மிகவும் துல்லியமாகக் காட்டுகிறது. எனது தாயினுடைய சகோதரிகளின் குழுந்தைகள் அவளுக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அதே போல் என் தகப்பனாருடைய சகோதரின் குழந்தைகளும் அவருக்கும் குழந்தைகளாகவே இருந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாரும் எனக்கு சகோதரர், சகோதரிகள் ஆவர். ஆனால் எனது தாயின் சகோதரர்களுடைய குழந்தைகளோ இப்பொழுது அவளுக்கு மருமான், மருமக்களாக இருக்கிறார்கள். என்னுடைய தகப்பனாரின் … குடும்பம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்

அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை

முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என … ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: வைரசா? லாபவெறியா?

கொரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் சிலர் தங்களிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தார்கள் (அது ஏற்புடையதா இல்லையா என்பது வேறு விதயம்) அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நிகழ்வுகளில் கொரோனா காலத்தில் அரசுகளின் செயல்பாடு சரியில்லை என விமர்சித்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 20 லட்சம் கோடி அறிவிப்புக்குப் பின் அரசு குறித்தான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கூட அரசு ஏன் இப்படி செயல்படுகிறது எனும் கேள்வி கொண்டவர்களாகி … கொரோனா: வைரசா? லாபவெறியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம்: விவாத நேர்மை

விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உடல் எனும் பொதுவுடமை சமூகம்

கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரானா காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு

எல்லா ஊடகங்களின் சின்னங்களிலும் தாம் நடுநிலையான செய்திகளை வழங்குவதான ஒரு குறியீடு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எல்லாக் காலங்களிலும் செய்தி ஊடகங்கள் பக்கச் சார்போடு தான் இருந்தன, இருக்கின்றன, இருக்கும். ஆனால் அந்த பக்கச் சார்பு எந்தப் பக்கம் என்பது தான் பிரச்சனை. ஒருபோதும் அவை மக்கள் பக்கம் நின்றதே இல்லை. அதேநேரம் எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையோடு செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பதாக நம்பவைக்க முயல்கின்றன. இதன் மறுபக்கமாக ஊடகங்கள் எந்தப் பக்கச் சார்போடு இருக்கின்றனவோ, அந்தப் … கொரானா காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?

கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே … கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.