தில்லியில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும், விவசாய அமைப்பினரும், இன்னும் பலரும் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்குவதை தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்று உறுதியுடன் போராடி வருகிறார்கள். அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நாடகங்கள் எடுபடாமல் போய்க் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று அரசு சிந்திப்பதன் அடுத்த கட்டமாக நீதி மன்றம் களத்தில் குதித்திருக்கிறது. போராடும் மக்களை நேரடியாக மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நீதி மன்றங்கள் விவசாயிகள் போராட்டத்தில், விவசாயிகளின் பக்கம் நிற்பதைப் போல் போக்குக் காட்டி, அவர்களை அப்புறப்படுத்துவதற்காக சதி செய்கிறது.
தோழர் மருதையன் இதை மிகத் தெளிவாக விளக்குகிறார்.
பாருங்கள்.. புரிந்து கொள்ளுங்கள்.. பரப்புங்கள்..