சமணர் கழுவேற்றம் – ஒரு வரலாற்றுத் தேடல் – கோ. செங்குட்டுவன்.
சேக்கிழாரால் பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்ட்டிருக்கும் சமணர் கழுவேற்றம் வரலாறா? கற்பனையா? கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாக கூறப்படும் மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றிய நிகழ்வு, அன்றிலிருந்து இன்றுவரை பெரும் விவாதத்தை சுழித்துச் சுழித்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இது குறித்த விரிவான வரலாற்று சான்றுகளை தேடித் தொகுத்திருக்கும் நூல் இது.
வரலாற்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் எந்த ஒரு நிகழ்வையும் அதன் சான்றுகள், தரவுகளுடன் அலசிப் பார்த்தே அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப்படாத எதும் நிலைத்திருப்பதற்கான தகுதி படைத்தவையல்ல என்று ஆசான் ஏங்கல்ஸ் கூறுவதும் இதைத்தான். அதைத் தான் சமணர் கழுவேற்றம் குறித்து இந்த நூல் செய்திருக்கிறது.
படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்