மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: நூல் வெளியீடு
வெகுஜனங்களிடையே கட்சியின் பணி
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. .. .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மொழிப்போர் ஈகியர் வரலாறு
இந்தியாவில் இந்தி மொழித் திணிப்பு, பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட வேண்டாத துணுக்கு போல் உருத்தலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் மொழி குறித்தான ஒவ்வொரு செயலும் உருத்தலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அமித்ஷா மொழி குறித்து பேசும் ஒவ்வொரு பேச்சும் சிக்கலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. பொதுவாக, பாஜக வினர் எவருக்கும் அரசியல் சாசனம், அதன் வாக்குறுதிகள், பல்வேறு மாநிலங்களின் உரிமைகள், அதன் வாழ்வியல் மொழியியல் தனித்தன்மைகள் குறித்தெல்லாம் எந்தக் கவலையும் கட்டுப்பாடும் கிடையாது. … மொழிப்போர் ஈகியர் வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு
இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே விளம்பிக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியத்தின் அறுவெறுப்பான பரப்பல்களை முறியடித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதோ அடுக்கடுக்கான சான்றுகளுடன் புதிது புதிதான விவாதங்களைச் செய்கிறார்கள். அதற்கு உடனடியாக நாம் மறுப்பு தெரிவித்து வெளிக்காட்ட வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் எத்தனை முறை கன்னத்தில் அறைந்தாலும் இளித்துக் கொண்டே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலை பிறழ்ந்தவன் … வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்
பிற்காலச் சோழர்கள் என்று கூறியதும் தற்போது இணையப் பரப்பில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களை ஆதரித்தானா இல்லையா எனும் விவாதம் தான் நினைவில் வருகிறது. மறுபக்கம் பேராசான் மார்க்ஸ் முன்வைத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் எனும் முடிவில் மாற்றங்கள் தேவையா என்பதும் முதன்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் ஆசியபாணி சொத்துடமை வடிவத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ் கூட இறுதியில் … வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்
இஸ்லாத்தில் சாதியப் படிநிலை உண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினால், இரண்டு விதமான பதில்கள் நமக்கு கிடைக்கும். வேத உபநிடதங்களில் இல்லை இஸ்லாமியர்களிடையே இருக்கிறது என்று கொஞ்சம் நேர்மையான பதிலும், இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை எனவே, இஸ்லாத்தில் சாதி இல்லை எனும் மதவாதப் பதிலும் கிடைக்கும். இந்த பதில்கள் கூறுவது போலல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே சாதிய மனோநிலை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே வடிவத்தில் இஸ்லாமிய … இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது … லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாபெரும் விவாதம்
இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போராட்டங்கள், தத்துவ விவதங்கள் பெரிய அளவில் நடந்ததில்லை. நடக்கவே இல்லை என்பது இதன் பொருளல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கையையும் அவை கடந்து வந்த நீண்ட காலத்தையும் சிந்தையில் கொண்டால், நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்கள் மிகமிகக் குறைவே. நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்களில் கூட, சரிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் என்பதைக் கடந்து, குற்றம் சாட்டும் வாதச் சண்டைகளாக முடிந்தவையே அதிகம். அண்மையில் தமிழ்நாட்டில் SOC உடைதல்களுக்குப் பிறகு இந்த வாதச் சண்டைகள், … மாபெரும் விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்
அண்மையில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை ஒரு நிகழ்வில் பேசும் போது, ‘காவியும் ஆன்மீகமும் கலந்தது தான் இந்தியா’ என்று கூறியிருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, ‘சனாதனத்தினால் தான் இந்தியா உருவானது’ என்று கூறியிருந்தார். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான பொய்களையும் வரலாற்றுத் திரிவுகளையும் கூச்சமே இல்லாமல் கூவித் திரிவது பார்ப்பனர்களின் வேலைத் திட்டம். அதேநேரம், இதற்கு எதிராக வரலாற்றுத் தளத்தில் யாரேனும் கேள்வி எழுப்பினால் பக்தி இயக்க காலத்தை புறந்தள்ள … இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காணாமல் போன தேசங்கள்
இந்தியா குறித்து விரிவாக பேசத் தெரிந்த பலரும் - கம்யூனிஸ்டுகளும் கூட - உலக அளவில் எத்தனை நாடுகள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று கேட்டால், அது கேள்விக்குறியாகவே முடியும். உலக அறிவு பெற்றவர்களும் கூட அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு என சில நாடுகளின் வரலாறுகளைத் தான் தெரிந்து வைத்திருப்பார்கள். அண்மைக் காலம் வரை நாடாக இருந்து பின்னர் பெயர் மாற்றம், உடைந்து போவது உள்ளிட்ட காரணங்களால் தற்போது இல்லாமல் போயிருக்கும் நாடுகள் குறித்து பெரும்பாலானோர் … காணாமல் போன தேசங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.