அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30 சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது.  பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 29 மாபெரும் தனித்தனி உதாரணங்களான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய உதாரணங்களிலே குல அமைப்பு கலைந்து மறைந்து போனதை அடையாளங் கண்டு கூறினோம். முடிவாக, அநாகரீக நிலையின் தலைக்கட்டத்தில் ஏற்கனவே சமுதாயத்தின் குல அமைப்பை பலவீனப்படுத்தி வந்த, நாகரீக நிலை தோன்றியதும் முழுமையாக ஒழித்தும் விட்ட பொதுவான பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்போம். இதற்கு மார்கன் எழுதிய நூல் தேவைப்படுகின்ற அளவுக்கு மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலும் தேவைப்படும். குலம் என்பது … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 27 டாசிட்டஸ் கூறுகிறபடி, ஜெர்மானியர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருந்தார்கள். வெவ்வேறு ஜெர்மன் மக்களினங்களின் தொகையைப் பற்றி சீஸர் உத்தேசமான கணக்கைத் தந்திருக்கிறார். ரைன் நதியின் இடது கரையில் தோன்றிய உசிபேதன்கள், தென்க்தெரன்களின் எண்ணிக்கை (பெண்கள், குழந்தைகள் உட்பட) 1,80,000 என்று அவர் கூறுகிறார். ஆக, ஒரே மக்களினத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் [கோல் நாட்டின் கெல்டுகள் குறித்து டியாடோரஸ் நூலில் உள்ள ஒரு பகுதி இந்த … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 26 டாசிட்டஸ் காலத்தைச் சேர்ந்த ஜெர்மானியர்கள் ஏற்கெனவே விளை நிலங்களை முடிவாகப் பங்கீடு செய்திருந்தார்களா, இல்லையா, அது சம்பந்தப்பட்ட நூல் பகுதிகளின் சரியான அர்த்தம் என்ன என்பவற்றைப் பற்றி நடைபெற்ற உணர்ச்சிகரமான, இடைவிடாத சர்ச்சை இப்பொழுது பழைய சங்கதியாகி விட்டது. அநேகமாக எல்லா மக்களினங்களிலும் விளை நிலங்கள் குலங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன, பிற்காலத்தில் பொதுவுடைமைக் குடும்பச் சமூகங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன (இந்த வழக்கம் … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 25 மக்களினங்கள் குடிபெயர்ந்து சென்ற வரைக்கும் ஜெர்மானியர்கள் குலங்களில் அமைக்கப்பட்டிருந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அவர்கள் கிறிஸ்ததுவ சகாப்தம் தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் டான்யூப், ரைன், விஸ்லா ஆகிய நதிகளுக்கு வடக்குக் கடல்களுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் குடியேறினார்கள் என்பது வெளிப்படை. கிம்பிரிகளும் டியூட்டானிகளும், கூட்டமாக இடம் பெயர்ந்து செல்வதில் இன்னும் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், சுயேவிகளோ, சீஸரது காலம் வரை எங்கும் குடியேறவில்லை. அவர்கள் குலங்களாகவும் இரத்த … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 24 பலவகைப்பட்ட காட்டுமிராண்டி மற்றும் அநாகரிக மக்களினங்களிடம் கிட்டதட்ட தூய்மையான வடிவத்தில் இன்னும் இருக்க்கின்ற குல அமைப்புகளைப் பற்றிக் கூறுவதற்கு இங்கே இடமில்லை. ஆசியாவைச் சேர்ந்த நாகரிக மக்களினங்களின் பண்டைக்கால வரலாற்றில் காணப்ப்படுகின்ற இப்படிப்பட்ட அமைப்புகளின் அடையாளங்கள் விஷயத்திலும் அப்படியே. இரண்டையும் எங்குமே காண முடியும். சில உதாரணங்கள் போதுமானவையாக இருக்கும். குலத்தை அடையாளங்கண்டு கொள்ளவதற்கு முன்பே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ள மிகப் பெரிய முயற்சி செய்த … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரோமாபுரியில் குலமும் அரசும் 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 23 ரோமாபுரி நிறுவப்பட்டு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு குலத்தின் பந்தங்கள் இன்னும் அதிக பலமாக இருந்ததனால் ஒரு பட்ரீஷியக் குலம், ஃபேபியன்களின் குலம் செனெட்டின் அனுமதியைப் பெற்று அண்டை நகரமாகிய வெயி மீது தானாகவே ஒரு படையெடுப்பை நடத்த முடிந்தது. அணிவகுத்துச் சென்ற 306 ஃபேபியன்கள் மறைவுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வீட்டில் விட்டு வந்திருந்த ஒரு சிறுவன் குலத்தைப் பெருக்கினான். நாம் கூறியபடி, பத்து … ரோமாபுரியில் குலமும் அரசும் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரோமாபுரியில் குலமும் அரசும் – 1

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 22 ரோமாபுரி நிறுவப்பட்டதைப் பற்றிய கட்டுக்கதையின்படி, பல லத்தீன் குலங்கள் (100 குலங்கள் என்று கட்டுக்கதை கூறுகிறது) ஒரு இனக்குழுவாக ஒன்றுசேர்ந்து முதன்முதலாக குடிபுகுந்தன. நூறு குலங்களைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சபேல்லியன் இனக்குழுவும் விரைவில் அங்கே குடிபுகுந்தது; கடைசியில் நூறு குலங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட, பலவிதமான அம்சங்களைக் கொண்ட மூன்றாவது இனக்குழுவும் வந்து அவற்றுடன் சேர்ந்து கொண்டது. இங்கே குலம் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்துமே இயற்கைப் … ரோமாபுரியில் குலமும் அரசும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதீனிய அரசின் உதயம் – 3

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 21 ஒரு இனக்குழுவில் இப்படிப்பட்ட பத்து அலகுகள் (டேம்கள்) இருந்தன. பழைய குல இனக்குழுவிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இது ஸ்தல இனக்குழு என்று இப்பொழுது சொல்லப்பட்டது. ஸ்தல இனக்குழு என்பது சுயாட்சியுள்ள அரசியல் நிறுவனம் மட்டுமின்றி, ஒரு இராணுவ அமைப்புமாகும். அது ஒரு பிலார்ஹை, அதாவது இனக்குழுவின் தலைவனைத் தேர்ந்தெடுத்தது, அவன் குதிரைப் படைகளுக்குத் தலைமை தாங்கினான்; மேலும், அது காலாட்படைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு டாக்ஸியார்ஹையும் இனக்குழுப் பிரதேசத்தில் … அதீனிய அரசின் உதயம் – 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதீனிய அரசின் உதயம் – 2

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 20 சொலோனுக்கு முன்பு, திட்டவட்டமாகக் கூற முடியாத ஒரு காலத்தில் ஒவ்வொரு இனக்குழுவிலும் பன்னிரண்டு நௌக்ரரிகள் எனப்படும் சிறு பிரதேச மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு நௌக்ரரியும் ஒரு யுத்தக் கப்பலைத் தயாரித்து அதனுடன் சாதனமும் நபர்களும் தர வேண்டியிருந்தது. மேலும், இரண்டு குதிரை வீரர்களையும் அனுப்ப வேண்டும். இந்த ஏற்பாடு குல அமைப்பை இரண்டு முனைகளில் தாக்கியது: முதலாவதாக, அது உருவாக்கிய சமூக அதிகாரம் ஆயுதமேந்திய மக்கள்தொகை மொத்தத்துடன் … அதீனிய அரசின் உதயம் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.