கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!) நடைபெற்றது. இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான். இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு … அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அணு விபத்து
தீர்ப்பும் கருப்பு, சட்டமும் கருப்பு: வெளுக்கப்போவது யார்?
இறந்துவிட்ட ஒருவரைத்தவிர மீதி எழுவருக்கும் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் என்பது ஒரு தீர்ப்பின் மூலம் தரப்பட்ட தண்டனை. தீர்ப்பின் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்களா? பணத்தைக் கட்டி பிணை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி விட்டார்கள். சரி, இவர்கள் செய்த குற்றம் என்ன? உடனடியாக 3000 பேர் தொடந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தாழ 25000 பேரின் மரணத்திற்கும்; உடனடியாக 1.5 லட்சம் பேர் தொடர்ந்து இன்றுவரை ஏராளமானோர் பாதிப்படைந்தும் வருவதற்கு காரணமான, உலகின் மிக மோசமான விசவாயு … தீர்ப்பும் கருப்பு, சட்டமும் கருப்பு: வெளுக்கப்போவது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
முதலாளிகளின் லாபத்திற்கு முன் மக்களின் உயிர் தூசு: பயங்கரவாதிகளின் சட்டம்
ஆபரேசன் கிரீன் ஹன்ட் என்ற பெயரில் காட்டு வேட்டைக்கு புறப்பட்டிருக்கும் அரசு அதற்கு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள், அவர்களை ஒழிக்கவேண்டும் என்பது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே போடப்பட்ட திட்டங்களின்படி அந்தப்பகுதிகளில் கொட்டிக்கிடங்கும் கனிம வளங்களை பன்னாட்டு தரகு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக அங்கு காலம் காலமாய் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களை நாயைப் போல் நரியைப் போல் விரட்டிவிட்டு வசதி செய்து கொடுக்கவேண்டும் என்பது. சுதந்திரமடைந்து விட்டோம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த அறுபத்திச்சொச்சம் ஆண்டுகளில் சாலை … முதலாளிகளின் லாபத்திற்கு முன் மக்களின் உயிர் தூசு: பயங்கரவாதிகளின் சட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.