நான் ஒரு பெண்

இந்த சமூகம் மிக நீண்ட காலமாக ஆணாதிக்க சமூகமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களும் ஆணாதிக்கத்திலேயே வேர் பிடித்து நிற்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பெண்ணியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோரில் சிலர் பெண்ணியம் எனும் சொல்லையே கேலிக்குறியதாக்க்கி, ஆணின் பலதார வேட்கைக்கு பெண்ணை ஆயத்தப்படுத்துவதே பெண்ணியத்தின் உள்ளீடு என விளம்பித் திரிகின்றனர். இந்தப் போக்கிலிருந்து சமூகத்தை திசை மாற்றுவது என்பது இடையறாதும், உறுதியோடும், சமரசமின்றியும் செய்யப்பட வேண்டியதாகும். அதற்கு இந்த … நான் ஒரு பெண்-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் அந்த லூலூ?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண் என்றால் அவ்வளவு இழிவா?

அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்களின் அந்தரங்கம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திகைத்து நிற்கிறோம்

இது எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவு. ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளை தடுப்பதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்த கொடூரத்தில் வெளிப்பட்டிருக்கும் வன்மம் ஆணாதிக்கத்திலும், பார்ப்பனிய ஜாதியப் படிநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஊழல்மய அதிகாரம் இதற்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்தக் குற்றவாளிகளே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நிகழ்த்துவோர்களாகவும், நிகழ்த்தப்படுவதை தடுப்போர்களாகவும். இப்போதும் இந்த கொடூரம் குறித்த புதிய செய்திகள் … திகைத்து நிற்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்நாட்டு me too தொடரட்டும்

சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் … தமிழ்நாட்டு me too தொடரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் மறைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மட்டுமோ, அல்லது பள்ளிகளில் மட்டுமோ அல்ல, சமூகம் முழுவதுமே பெண்ணை தனக்கு கீழானவளாக, பாலியல் பண்டமாக, ஆணாதிக்கத்துடன் பார்க்கும் பார்வை நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஆணாதிக்கப் போக்கு சமூகத்தில் இருக்கும் வரை இது போன்ற … இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உங்கள் மகனிடம் சொல்லுங்கள்

நூல்களில் எனக்கு பிடிக்காத வகை என்றால் அது சுய முன்னேற்ற நூல்கள் எனும் தலைப்பில் வருபவை தாம். ஏனென்றால் அந்த வகை நூல்களைக் கையில் எடுக்கும் போதே நாம் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறோம் எனும் உணர்வைத் தந்து விடுகிறது. மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சூழலின் தாக்கத்தினாலேயே உருவாகிறான் எனும் பொருள்முதவாத பேருண்மைக்கு எதிராக செல்வது தான் சுய முன்னேற்ற நூல்கள். இந்த நூலும் அந்த எல்லையைத் தொட்டு நிற்கும் நூல் தான். என்றாலும், ஒரு … உங்கள் மகனிடம் சொல்லுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நான் ஒரு பெண்

அண்மையில் "The Indian Kitchen" எனும் மலையாளப் படம் வெளிவந்த பின்னிலிருந்து சமூக தளங்களில் பெண்ணியம் சார்ந்து பலரும் பதிவுகள் இட்டு வருகிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், சமையல் குறித்து மட்டுமே பேசுவது, ஒரு விதத்தில் பெண்ணை இழிவுபடுத்துகிறதோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், வரலாற்றில் மிக நீண்ட காலம் மனித குலத்துக்கு தலைமை தாங்கி, சமூகத்தை வழிநடத்தியவள் பெண். மருத்துவம், விவசாயம், கட்டடக்கலை என பல துறைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி சமூகத்தை வளர்த்தெடுத்தவள் பெண். … நான் ஒரு பெண்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.