அண்மையில் நடந்த மூன்று நிகழ்வுகள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. அறிவும், தன்மதிப்பும் கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ளக் கூடாத செய்திகள் அந்த நிகழ்வுகளில் இருக்கின்றன. 1. சிதம்பரம் நடராசர் கோவில் ஆவணங்களை, கணக்குகளை அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழுவுக்கு சரிபார்ப்புக்காக கொடுக்க மறுப்பதுடன் இதை ஒன்றிய பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் என்று இறுமாப்புடன் பேசும் தீச்சிதர்கள். 2. கிட்டத்தட்ட இதே விதயங்களுக்காக கோயில்களிலிருந்து அறநிலையத் துறை விலக … ஆதீனமா? அறிவற்ற ஈனமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஆதீனம்
யார் சொத்துக்கு யார் சண்டை போடுவது?
மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? … யார் சொத்துக்கு யார் சண்டை போடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.