நெடுமாறன் குண்டு நமுத்துப் போன மத்தாப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY

சொல்லுளி டிச 22 இதழ்

டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா

ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல … பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடியின் பாக்ய நகர்

செய்தி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் … மோடியின் பாக்ய நகர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்

அண்மையில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை ஒரு நிகழ்வில் பேசும் போது, ‘காவியும் ஆன்மீகமும் கலந்தது தான் இந்தியா’ என்று கூறியிருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, ‘சனாதனத்தினால் தான் இந்தியா உருவானது’ என்று கூறியிருந்தார். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான பொய்களையும் வரலாற்றுத் திரிவுகளையும் கூச்சமே இல்லாமல் கூவித் திரிவது பார்ப்பனர்களின் வேலைத் திட்டம். அதேநேரம், இதற்கு எதிராக வரலாற்றுத் தளத்தில் யாரேனும் கேள்வி எழுப்பினால் பக்தி இயக்க காலத்தை புறந்தள்ள … இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சனாதனம் எனும் நஞ்சு

ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு … சனாதனம் எனும் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3 மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய - சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை … இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாகிஸ்தானில் நடந்தது என்ன?

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 2 உக்ரைன் போரை அடுத்து ரஷ்யாவின் மீது ஏவப்பட்ட பொருளாதாரத்தடை எனும் நிதிய - அணு ஆயுத ஏவுகணை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க என எல்லா கண்டத்தினரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கோதுமை, எரிபொருள், உரங்கள், உலோகங்கள் உலக வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டால் அது உற்பத்தியை பாதித்து உணவுப்பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வைக் கொண்டுவரும் என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த அமெரிக்காவின் மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு … பாகிஸ்தானில் நடந்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா

எண்ணெயைப் பின்புலமாகக்கொண்டு கட்டப்பட்டதுதான் ‘பெட்ரோ டாலர் மூலதனக் கோட்டை’ என்பதும் அந்த டாலர் நிதி மூலதனம் உலக முழுக்க பாய்வதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்டதுதான் ‘ஒற்றை துருவ உலக ஒழுங்கு விதி’ (Monopoly rules based world order) என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே இந்தக் கோட்டை, விரிசல்களைக் கண்டு வந்திருந்தாலும் 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விரிசல்கள் பெரிதாகி, ஓட்டைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. டாலரைத் தவிர்த்துவிட்டு ஓட்டைகளின் வழியே ஒழுகி … நிலைகுலைக்கப்படும் தெற்காசியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய தேசியத்தின் தோற்றம்

இந்தியா ஒற்றை தேசியமல்ல என்று சமூக அரசியல் ஆர்வமுள்ள பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனிய அரசியல் இந்தியாவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. ஆக, இந்தியாவின் அரசியல் முரண்பாடு என்பது இந்தியா ஒற்றை தேசியமா? பல்தேசியமா? என்று தான் கூர்மைப்படுகிறது. இந்தியா பல்தேசிய நாடு தான் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது தான் இந்தியா எனும் நாடு இருக்கும். இந்த புரிதலை வெகு மக்களிடம் … இந்திய தேசியத்தின் தோற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.