ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்

கடந்த ஜனவரி 3ம் தேதி ஈரானின் இராணுவத் தளபதியான காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டார். இதை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவர் ஒரு பயங்கரவாதி, அமைதிக்கு எதிரானவர், முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர். எனவே, என்னுடைய உத்தரவின் பேரில் அமெரிக்க வீரர்கள் அவரை கொன்றனர் என்று தெரிவித்தார். அதாவது, அமெரிக்காவுக்கு அவரை பிடிக்கவில்லை அல்லது அமெரிக்காவுக்கு எதிராக அவர் செயல்பட்டார், அதனால் நாங்கள் அவரைக் கொன்றோம் இது தான் அமெரிக்கா சொல்வது. இதையே வேறொரு நாடு … ஈரான்: அமெரிக்காவின் அடாவடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பு அதிகரிக்கிறது, நட்டம் என்று காரணங்கள் கூறப்படுகின்றன. இதிலும், தவிர்க்கவியலாத நிலையில் சிறிதளவே உயர்த்தியிருப்பதாகவும், பெட்ரோல் பயன் படுத்துவோர் இதைத் தாங்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் என்றும் சமாதானம் வேறு. அப்படி என்ன தவிர்க்கவியலாத நிலை அரசுக்கு? கடந்த சில ஆண்டுகளாகவே பன்னாட்டளவில் கச்சா எண்ணெயின் விலை … மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.