முகம்மது தேன் குடித்த கதை

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 56 நபியே உம் மனைவியரின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? .. .. .. குரான் 66:1   இப்படி ஒரு வசனம் குரானில் உண்டு. அல்லா அனுமதித்த எதை முகம்மது தம் மனைவிகளின் விருப்பத்திற்காக விலக்கினார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது தான் முகம்மது தேன் குடித்த கதை. அதாவது முகம்மது தன் பல மனைவியர்களின் வீட்டில் முறைவைத்து … முகம்மது தேன் குடித்த கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2 உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; … கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.

நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22 நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை! நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் … நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

நுழைவாயில் செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2 எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.  அம்பலப்படுத்தல் என்றால் என்ன?  எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்?  அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும்.  … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 8 நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை? செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு இது இரண்டாவது சுற்று மறுப்பு. இதில் நண்பர் நேரடி விவாதத்திற்கு நான் ஏன் ஆயத்தமாக இல்லை என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து பலமுறை விளக்கமளித்த பின்பும், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே, காத்திரமான பதில்களோ, மறுப்புகளோ முன்வைக்காத பட்சத்தில் இனி … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௩ இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

  கடந்த ஓராண்டாக "இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே" எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.   இந்நிலையில் … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.