இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்

இஸ்லாத்தில் சாதியப் படிநிலை உண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினால், இரண்டு விதமான பதில்கள் நமக்கு கிடைக்கும். வேத உபநிடதங்களில் இல்லை இஸ்லாமியர்களிடையே இருக்கிறது என்று கொஞ்சம் நேர்மையான பதிலும், இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை எனவே, இஸ்லாத்தில் சாதி இல்லை எனும் மதவாதப் பதிலும் கிடைக்கும். இந்த பதில்கள் கூறுவது போலல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே சாதிய மனோநிலை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே வடிவத்தில் இஸ்லாமிய … இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்

நெருப்புப் பாதை எனும் அக்னிபாத்தை அறிவிக்கும் போது, கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றச் சொன்ன அதே மனநிலையில் தான் மோடி அறிவித்திருப்பார் என எண்ணுகிறேன். எந்த எதிர்ப்பும் இன்றி அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக விளக்கு ஏற்றுவதைப் போல் அக்னிபாத்தும் நடப்பு வந்து விடும் என மோடி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த திட்டம் கடும் எதிர்ப்பை கண்டிருப்பதுடன், ரயில் எரிப்புப் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. காவல் நிலையங்களும், பாஜக அலுவலகமும், ஒன்றிய அரசு … அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய தேசியத்தின் தோற்றம்

இந்தியா ஒற்றை தேசியமல்ல என்று சமூக அரசியல் ஆர்வமுள்ள பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனிய அரசியல் இந்தியாவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. ஆக, இந்தியாவின் அரசியல் முரண்பாடு என்பது இந்தியா ஒற்றை தேசியமா? பல்தேசியமா? என்று தான் கூர்மைப்படுகிறது. இந்தியா பல்தேசிய நாடு தான் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது தான் இந்தியா எனும் நாடு இருக்கும். இந்த புரிதலை வெகு மக்களிடம் … இந்திய தேசியத்தின் தோற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்ற போதும் ஏன் புரட்சியை நோக்கி முகம் திருப்பக் கூட முடியவில்லை? என்றொரு கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் எழுப்பினால் .. .. .. கிடைக்கும் பதிலை இரண்டாக பிரிக்கலாம். ஆசிய பாணி உற்பத்தி முறைசாதி முறை குறித்த போதாமை. இந்த இரண்டையும் குறித்து தத்துவத் தளத்தில் விவாதிக்கிறார் பேராசிரியர் முர்ஸ்பன் ஜல். இவர் புனேவின் இந்திய கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி - ஈ.பி.டபிள்யூ இதழில் - … ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி … மார்க்ஸின்றி அமையாது உலகு-ஐ படிப்பதைத் தொடரவும்.

அழகுபடுத்தும் எங்களை அழிக்கிறது ஜாதி

கொலை செய்யப்பட்ட ஹரிஹரனும், கொலை செய்யப்பட்ட இடமான கரூர் பகவதீஸ்வரர் கோவிலும். செய்தி: கரூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமனுடைய மகன் ஹரிஹரன் (வயது 23). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரின் கடை எதிரேயுள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்த வேலன், தேவி தம்பதியரின் மகள் மீரா. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இளம்பெண்ணின் … அழகுபடுத்தும் எங்களை அழிக்கிறது ஜாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவில் நிலம் சாதி

பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்? நந்தன் வரலாறுஇடங்கை வலங்கை மோதல்கள்களப்பிரர்கள் யார்?பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன? இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் … கோவில் நிலம் சாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.

முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்

சாதி தீண்டாமைக் கொடுமைகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுங் காலமாக மக்களின் தேவையாக இருந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியக் கொடுமைகளுக்கு எதிராக புத்தர் தொடங்கி பூலே, அம்பேத்கர், பெரியார் வரை நெடிய போராட்ட வரலாறும் இருக்கிறது. சம காலத்தில் புதிய போக்குகளும் கிளம்பி இருக்கின்றன. பார்ப்பனிய பெருந் தெய்வ புராணக் கதைகளை வரலாறாக மாற்றுருவாக்கம் செய்து நிருவுவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பார்ப்பனிய பெருந் தெய்வங்களுக்கு எதிராக கிராமத்து குலதெய்வ வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்து நிருவுவதும் … அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நான் இந்து அல்ல, நீங்கள்..?

கொரோனாவின் கோரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவி பாசிசங்களும் அவர்களின் காலாட்படையான சங்கிகளும் தங்களின் வன்மத்தை கைவிடவில்லை, கைவிட மாட்டார்கள் என்பதை தப்லீக் மாநாடு விதயத்தில் பார்த்தோம். வரலாறு நெடுகிலும் அவர்களின் நோக்கம் திட்டம் எல்லாம், சாதியக் கொடுங்கோன்மையை மீண்டும் பழைய விதத்தில் அட்டியின்றி நடப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான். இந்து என்றொரு மதமே இல்லை என்பதும், பார்ப்பன மதத்தின் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வை தான் அது என்பதும் … நான் இந்து அல்ல, நீங்கள்..?-ஐ படிப்பதைத் தொடரவும்.