செய்தி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் … மோடியின் பாக்ய நகர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: செய்தி
ரிமோட்டுக்கு நீதிமன்றமா?
செய்தி: மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பிரசார்பாரதி பொது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் 1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து செயற்கைக்கோள் சேனல்கள் உருவாக்கப்பட்டதன் அடிப்படையில் பொதிகை தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 803 பேர் சமஸ்கிருதம் பேசுபவர்களாக உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7 மணி முதல் 7.15 மணிவரை 15 நிமிடங்கள் சமஸ்கிருத மொழியில் செய்தி அறிக்கை … ரிமோட்டுக்கு நீதிமன்றமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேச துரோக வழக்கு போடவா?
செய்தி: கடந்த திங்கள் அன்று தி மீடியா ஃபவுண்டேசன், பிஜி வர்கீஸ் நினைவு கருத்தரங்கு 2020 என்ற காணொலி நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தது. உச்சநீதி மன்றத்தின் முன்னள் தலைமை நீதிபதி மதன் பி.லோக்கர் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ’பேச்சு மற்றும் கருத்து உரிமை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். ”சட்டத்தை முழுவதுவாக துஷ்பிரயோகம் செய்யாவிட்டலும் கூட, சட்டத்தை திரித்துக் கையாள்வதால் நம்முடைய பேச்சு உரிமை படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேறு … தேச துரோக வழக்கு போடவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?
செய்தி: கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்
செய்தி: மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ … பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)
செய்தி: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பீகாரில் உரையாற்றிய பிரதமர், “பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் விளைப்பொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது” “அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்” குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை … விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்
செய்தி: திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கல்வி அமைச்சகம், “தமிழக அரசு எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. 1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையானது, பின்னா் 1986 மற்றும் 92ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் போதும் தொடா்ந்தது. புதிய … இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?
செய்தி: பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை. தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். … ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?
செய்தி: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் … ‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?
செய்தி: கோவை ஹோப்காலேஜை சேர்தவர் இளவரசன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, தட்டியால் அடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. மாநகராட்சி பேனர் வைத்த பின்னர், இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறி, எங்களை அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பேனர் வைத்திருந்தார். இதையடுத்து இளவரனுக்கு மாநகராட்சி … கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.