சில நாட்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடந்தது. இதில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கு கொண்டன. மொத்த அலைக்கற்றை பயன்பாட்டு உரிமையில் 71 விழுக்காடு கலந்து கொண்ட நான்கு நிறுவனங்களும் பெற்றுக் கொண்டன. மீதமிருக்கும் அலவை எதிர்வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்குள் ஏலம் கோரி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் 4.3 லட்சம் கோடிகள் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்திருப்பதோ 1.5 லட்சம் கோடிகள் தான். கடந்த … இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஜியோ
ஜியோ கட்டண உயர்வு ஏன்?
அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
என்னடா நடக்குது இங்கே .. ..?
செய்தி: ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.அப்துல் நசீர் மற்றும் எம்.ஆர்.ஷா அமர்வு இன்று விசாரித்தது. விசாரணையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையைச் செலுத்த, சுமார் 10 ஆண்டுகள் அவகாசம் அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்டணங்களைச் செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்றும் நீதிமன்ற அவமதிப்பாக அது கருதப்படும் என்றும் நீதிபதிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். செய்தியின் பின்னே: ஏ.ஜி.ஆர் தொகை என்பது தொலைத் … என்னடா நடக்குது இங்கே .. ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை. உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் … பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.