ஊதாரிகளின் அம்மணம் ஊக்கிப் பேசப்படும் நாகரீகமாய். அந்த அம்மணங்களின் கூடுகளில் சுயநலப் புழுக்கள் நெளியும் அறுவெறுப்பாய். அம்மணம் இங்கே பக்தியாக இருக்கும் போது போராட்டமாய் கூடாதா? லட்சக் கணக்கில் விவசாயிகள் உயிர் துறந்த போது செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு, ஆடை துறந்த போதோ உங்கள் வல்லரசுக் கனவு அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள். இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள் ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள். பன்றித் தொழுவத்தின் … அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தண்ணீர்
வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்
சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது. காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.
சில பத்தாண்டுகளுக்கு முன் தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று மக்களிடம் கூறினால் வயிறு வலிக்கச் சிரித்திருப்பார்கள் அல்லது கண் சிவக்க கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று அது தான் யதார்த்தம். இதில் ஒரு அடி மேலே எடுத்து வைத்து ஏழையை மிதித்து இன்னும் கீழே தள்ளுவதற்கு அரசு தயாராகி விட்டது. அதன் அடையாளம் தான் ”தேசிய நீர் கொள்கை 2012” இதன் முதன்மையான ஒரு அம்சம் நிலத்திலிருந்து கிடைக்கும் நீர் அந்த நிலத்தின் … தண்ணீர்: நாசமாக்கினால் பரிசு, குடித்தால் காசு.-ஐ படிப்பதைத் தொடரவும்.
முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்
நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட … முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்
காவிரி மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது. எதை எப்போது கிளப்பிவிட்டு திசை திருப்பி தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் முனைவர் பட்டம் தந்துவிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு குருதி அழுத்தத்தை எகிரவைத்த கணக்குகள் பேரங்கள் முடிந்து ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தமிழகத்தில் வரிசையாக கட்சிமாறிக்கொண்டிருந்த பலவீனத்திலிருந்து மீண்டு அதிமுக கூட்டங்களின் மூலம் பலம் காட்டிக்கொண்டிருந்ததை மறைத்து போக்குக்காட்ட கருணாநிதிக்கு மக்களை பேசவைக்க ஒரு பிரச்சனை தேவைப்பட்டது. அவ்வளவு தான் இவர் வழக்கம்போல் கடிதம் … காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அமெரிக்க ‘கோக்’கை அடித்து விரட்டுவோம்!
கோக் தண்ணீர் தனியார்மயத்தின் குறியீடு. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் அமையவிருக்கும் கோக் ஆலைக்கு, சிப்காட் வளாகத்தில் நிலம் கொடுத்து, தாமிரவருணியிலிருந்து அன்றாடம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீரையும் குழாய் மூலம் கொண்டு வந்து தரவிருக்கிறது தமிழக அரசு. ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒண்ணேகால் பைசா. இதுவன்றி அங்கே ஆழ்துளைக் கிணறுகளை இறக்கி விருப்பம் போல நிலத்தடி நீரைச் சூறையாடவுமிருக்கிறது கொக்கோ கோலா நிறுவனம். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் குடிநீரும் பாசனநீரும் இல்லாமல் … அமெரிக்க ‘கோக்’கை அடித்து விரட்டுவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.