ஒரு தோழரின் கரு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார். செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.  மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர … ஒரு தோழரின் கரு மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?

தமிழச்சி. கடந்த பத்து நாட்களாக தமிழ் இணையப் பரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர். பல ஆண்டுகளாக இணையப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதிலும், இப்போது மட்டும் தோழர் தமிழச்சி மீது அதிக வெளிச்சம் விழுந்திருப்பதன் காரணம் என்ன? இதுவரை அவர் தன்னுடைய நாட்டிலிருந்து, பிரான்சிலிருந்து இவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், விவாதித்துக் கொண்டிருந்தார். தற்போது அதன் அடுத்த கட்டமாக நேரடியாக தமிழ்நாடு வந்து இதுவரை … தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் அந்த லூலூ?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு சம்பவம் நடந்த போது .. ..

முகநூல் நேரலை 1 மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை … ஒரு சம்பவம் நடந்த போது .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?

அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே!   நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.