‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?

செய்தி: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் … ‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்

கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி

2019 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு, இந்திய வம்சாவளி அமெரிக்கரான அபிஜித் பானர்ஜி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ, அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அந்த ஆண்டில் நல்ல மழை பெய்தால் கூட எங்கள் மோடிஜி யால் தான் மழை கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று புழகமடைந்து போகும் பக்தாள்கள் இந்த முறை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். பின் இடதுசாரி என்று தூற்றினார்கள். (இடதுசாரி என்பது வசைச் சொல்லா?) … கேள்விக்கு பதில் சொல்லுங்க அபிஜித் பானர்ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?

  ஊதாரிகளின் அம்மணம் ஊக்கிப் பேசப்படும் நாகரீகமாய். அந்த அம்மணங்களின் கூடுகளில் சுயநலப் புழுக்கள் நெளியும் அறுவெறுப்பாய்.   அம்மணம் இங்கே பக்தியாக இருக்கும் போது போராட்டமாய் கூடாதா?   லட்சக் கணக்கில் விவசாயிகள் உயிர் துறந்த போது செய்தியாக மட்டுமே இருந்தது உங்களுக்கு, ஆடை துறந்த போதோ உங்கள் வல்லரசுக் கனவு அம்மணப்பட்டதாய் அலறுகிறீர்கள்.   இந்திய இராணுவமே எங்களைக் கற்பழி மணிப்பூரில் எங்கள் தாய்மார்கள் ஆயுதமேந்திய கிருஷ்ணன்களை நோக்கி அம்மணமானார்கள்.   பன்றித் தொழுவத்தின் … அம்மணம் உங்கள் கன்னத்தில் அறையவில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம்.   விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய … பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..

அண்மையில் தமிழ் அறிந்த அனைவரும் ஒருமுறையேனும் உச்சரித்த, உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது காஞ்சி தோழர் செங்கொடியின் பெயர். அவரின் தற்கொலை தமிழகத்தை அதிரவைத்தாலும், அந்த ஈகம் கண்களில் நீரையும், அரசின் மீதான கோபத்தையும் வரவழைத்திருந்தது. அதேநேரம், தற்கொலை தீர்வாகுமா? மூன்று உயிருக்காக ஒரு உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் சரியாகும் என்று கேட்டுக் கொண்டு பதிவுலகில் ஒரு கூட்டம் வலம் வந்தது. தற்கொலைகள் தீர்வல்ல, அது ஒரு போராட்ட வழிமுறை அல்ல. என்றாலும் அதன் பின்னிருக்கும் … தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது … பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே-ஐ படிப்பதைத் தொடரவும்.