இந்தியாவில் அடிமைகள்

மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின்  பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில்  இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற … இந்தியாவில் அடிமைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மகாத்மா அய்யன்காளி

பார்ப்பனிய பயங்கரம் எல்லா இடங்களிலும் புகுந்து தன் பொய்களை கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. காடாத்துணியில் வடிகட்டிய பொய்களே ஆர்.எஸ்.எஸ்ஸின் மூலதனம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் வந்த பகிரி (வாட்ஸ்ஆப்) செய்தி ஒன்று, அய்யன்காளி சனாதனம் தழைத்தோங்க பாடுபட்டவர் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை புரட்டுவதிலும் திரிப்பதிலும் ‘சங்கிகள்’ முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான் என்றாலும், சாதிப்படிநிலைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய அய்யன்காளியை அதற்கு நேர்மாறாக சனாதனத்துக்காக பாடுபட்டவர் என்று கூறுவதற்கு எவ்வளவு … மகாத்மா அய்யன்காளி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்

அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?

சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?

சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து

வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ.   பொதுவாக கலை என்பது, … கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?

இந்தியா மூன்றுபுறம் கடலால் சூழப்பட்டிருக்கிறது, நான்கு புறமும் கடனால் சூழப்பட்டிருக்கிறது என்று வேடிக்கையாய் சொலவடை சொல்வார்கள். இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும். இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது. சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, பகுத்தறிவுவாத அறிஞர்களின் படுகொலை என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவைகளுக்கு பலரும், … பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?

மீண்டும் ஒரு முறை பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஒருபக்கம், “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என்று பாட்டுப் பாடி கலை என்ற பெயரில் பார்ப்பனிய நச்சுக் கருத்தை மக்களிடம் பரவ விடுகிறார்கள். மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவங்களுக்குள் நுழைந்து விட்டாலோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு விதத்தில் கொலை செய்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்று ஒரு … ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..

தருமி ஐயா தொடங்கி வால் பையன் ஊடாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உமா சங்கருக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எழுதப்படும் கண்டன இடுகைகள் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளின் ஒரே பதிவில் எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் யோசனை நன்றாக தெரிந்ததனால் செவ்வாய் இரவுவரை காத்திருந்தேன், தருமி ஐயாவோ, வால்பையனோ எந்த பதிவையும் பரிந்துரைத்ததாக தெரியவில்லை. இன்று காலை தருமி ஐயா இட்ட நான்கு வரி பதிவு தேவையான சீற்றத்துடன் இல்லாமல் மென்மையாக இருப்பதாக படுகிறது. … உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..-ஐ படிப்பதைத் தொடரவும்.