ஆதீனமா? அறிவற்ற ஈனமா?

அண்மையில் நடந்த மூன்று நிகழ்வுகள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. அறிவும், தன்மதிப்பும் கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ளக் கூடாத செய்திகள் அந்த நிகழ்வுகளில் இருக்கின்றன. 1. சிதம்பரம் நடராசர் கோவில் ஆவணங்களை, கணக்குகளை அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழுவுக்கு சரிபார்ப்புக்காக கொடுக்க மறுப்பதுடன் இதை ஒன்றிய பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் என்று இறுமாப்புடன் பேசும் தீச்சிதர்கள். 2. கிட்டத்தட்ட இதே விதயங்களுக்காக கோயில்களிலிருந்து அறநிலையத் துறை விலக … ஆதீனமா? அறிவற்ற ஈனமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்

தில்லையில் குடிகொண்டிருக்கும் நடராஜர் பார்க்கும் கண்ணுள்ளவராக இருந்திருந்தால் கோவிலுக்குள்ளேயே தீட்சிதர்கள், செய்யும் கொடூரங்களையும் காமக்களியாட்டங்களையும் கண்டு கண்ணீர் வடிப்பதை பக்தர்கள் காண நேர்ந்திருக்கும். சிதம்பரம் நகரின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் இளங்கோ பெயர் குறிப்பிட்டு தீட்சிதர்கள் நடத்திய கொலை கொள்ளை கொழுப்பெடுத்த விளையாட்டுக்களை புகார் மனுவாக முதல்வர்க்கு அனுப்பியிருக்கிறார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தங்கம் வேய்ந்த கூரைகளையும் சொத்தாகக் கொண்ட தில்லை நடராஜர் கோயிலையும் உண்டியல் வைக்காமல் பக்தர்களிடம் வசூலித்த பணம் நகைகளையும் பல்லாண்டு காலமாக ஆண்டு … வென்றது தில்லைச் சமர்; வீழ்ந்தது தீட்சிதத் திமிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.