ஊரடங்கு எனும் நிதித் தொற்று

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு எனும் கரிய இருட்டு எளிய மக்களின் வாழ்வை கவ்விக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று தொற்றிவிடாதிருக்க ஊரடங்கு தான் ஒரே வழி என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு என்பது, இரண்டு வாரம் ஊரடங்கு இரண்டு நாள் தளர்வு மீண்டும் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது என்ன காரணத்துக்காக ஊரடங்கை நடைமுறைப் படுத்துகிறார்களோ அதற்கு நேர் எதிரான விதத்தில் … ஊரடங்கு எனும் நிதித் தொற்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை

இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. இந்த நாட்களில் இயல்புக்கு மாறான இரண்டு விசயங்கள் காணக் கிடைக்கின்றன. இதை, இருவேறு இடங்களிலிருந்து வெளிப்படும் ஒரே மாதிரியான வெளிப்பாடு என்று கூறினால் அது மிகத் துல்லியமானதாக இருக்கும். முதலில், பாஜக பக்கத்திலிருந்து இந்த நிதிநிலை அறிக்கை குறித்த இறும்பூறெய்தல்களை அடக்கி வாசிக்கிறார்கள். நிர்மலா சீதாராமனை நிதிநிலை அறிக்கையை வெளியிடப் போகும் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்றார்கள். இந்திரா காந்தி இருந்திருக்கிறார் … பட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை-ஐ படிப்பதைத் தொடரவும்.

போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

  போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 7 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் குடும்பத்தினர் போராட்டம், மக்களின் ஆதரவு என தொடர்ந்து விரிவடைந்து கொண்டும், வீரியமடைந்து கொண்டும் இருக்கிறது. இந்தப் போராட்டம் திடீரென நடைபெறவில்லை, தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போராட்ட முயற்சிகளின் தொடரியாகவே இந்த காலவரையற்ற போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், இந்தப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தையும் மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். 7 நாட்களைக் கடந்த பின்பும் மக்கள் எதிர்ப்பு எதையும் பெரிதாக காட்டாதிருப்பத்லிருந்தே இது … போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

நேற்று அரசுப் பேரூந்து நடத்துனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 15ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்கு உவப்பான முடிவை எட்டாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது குறித்து அவருக்கு உளச் சோர்வு இருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோருக்கு இதே எண்ணம் தான் இருக்கக் கூடும். ஒரு போராட்டம் வெற்றியடைவது அல்லது சரியான திசையை நோக்கிச் செல்வது என்பது, போராடும் பிரிவினருக்கு அப்பால் சமூகத்தின் பிற மக்கள் அந்தப் போராட்டம் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. … போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.