கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. ..   .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழிப்போர் ஈகியர் வரலாறு

இந்தியாவில் இந்தி மொழித் திணிப்பு, பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட வேண்டாத துணுக்கு போல் உருத்தலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் மொழி குறித்தான ஒவ்வொரு செயலும் உருத்தலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அமித்ஷா மொழி குறித்து பேசும் ஒவ்வொரு பேச்சும் சிக்கலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. பொதுவாக, பாஜக வினர் எவருக்கும் அரசியல் சாசனம், அதன் வாக்குறுதிகள், பல்வேறு மாநிலங்களின் உரிமைகள், அதன் வாழ்வியல் மொழியியல் தனித்தன்மைகள் குறித்தெல்லாம் எந்தக் கவலையும் கட்டுப்பாடும் கிடையாது. … மொழிப்போர் ஈகியர் வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்

பிற்காலச் சோழர்கள் என்று கூறியதும் தற்போது இணையப் பரப்பில் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வரும் ராஜராஜ சோழன் பார்ப்பனர்களை ஆதரித்தானா இல்லையா எனும் விவாதம் தான் நினைவில் வருகிறது. மறுபக்கம் பேராசான் மார்க்ஸ் முன்வைத்த ஆசியபாணி சொத்துடமை வடிவம் எனும் முடிவில் மாற்றங்கள் தேவையா என்பதும் முதன்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் ஆசியபாணி சொத்துடமை வடிவத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், வரலாற்று ஆய்வாளர்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறார்கள். பேராசான் மார்க்ஸ் கூட இறுதியில் … வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்

இஸ்லாத்தில் சாதியப் படிநிலை உண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினால், இரண்டு விதமான பதில்கள் நமக்கு கிடைக்கும். வேத உபநிடதங்களில் இல்லை இஸ்லாமியர்களிடையே இருக்கிறது என்று கொஞ்சம் நேர்மையான பதிலும், இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை எனவே, இஸ்லாத்தில் சாதி இல்லை எனும் மதவாதப் பதிலும் கிடைக்கும். இந்த பதில்கள் கூறுவது போலல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே சாதிய மனோநிலை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே வடிவத்தில் இஸ்லாமிய … இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது … லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமணர் கழுவேற்றம்

சமணர் கழுவேற்றம் - ஒரு வரலாற்றுத் தேடல் - கோ. செங்குட்டுவன். சேக்கிழாரால் பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்ட்டிருக்கும் சமணர் கழுவேற்றம் வரலாறா? கற்பனையா? கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாக கூறப்படும் மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றிய நிகழ்வு, அன்றிலிருந்து இன்றுவரை பெரும் விவாதத்தை சுழித்துச் சுழித்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இது குறித்த விரிவான வரலாற்று சான்றுகளை தேடித் தொகுத்திருக்கும் நூல் இது. வரலாற்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் எந்த ஒரு நிகழ்வையும் அதன் … சமணர் கழுவேற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு

“அதெல்லாம் இருக்கட்டும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி பற்றி இன்றுவரை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்? …” “அது சரி …புரட்சிக் கட்சிக்கு தேர்தலில் என்ன வேலை? …” “ம்ஹுக்கும் … கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் சங்கங்களில் பிற்போக்கானவர்கள் இருக்கிறார்களே?” “சமரசமில்லாமல் போராட வேண்டாமா?” போகிற போக்கில், இப்படி ஏராளமான ‘புரட்சிகர‘ கேள்விகள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. இவைகளெல்லாம் இங்கு மட்டும்தான் எழுப்பப்படுகின்றனவா?… உலகெங்கிலும் இப்படி வீராவேசம் பேசுவோரால் நடந்தது என்ன? என்ன செய்துவிட முடியும்? என்பதைத்தான் ‘இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு’ புத்தகத்தில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்துகிறார். படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள் மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

பார்ப்பன அரசு

அதிகார மய்யங்களைச் சமரசமின்றி எதிர்த்து துணிவுடன் குரல் கொடுத்து வருகிறார் அருந்ததிராய். அவரது வலிமையான எழுத்துகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையே எதிரொலிக்கின்றன. பார்ப்பன முதலாளித்துவ ஊடகங்களின் வலைக்குள் சிக்கி விடாது, காஷ்மீர் பிரச்சனையிலிருந்து பழங்குடி மக்கள் வரை பாதிக்கப்பட்டோர் பக்கமே நிற்கும் அருந்ததிராயின் உரையே இந்த வெளியீடு. தண்டகரண்யப் பகுதிக்கே துணிவுடன் பயணம் மேற்கொண்டு பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் இராணுவ ஒடுக்குமுறைகளை வெளிச்சப்படுத்தும் அவர் உரையில், “இலங்கை அரசு செய்தது போல் இந்திய அரசு வெளிப்படையாக … பார்ப்பன அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய தேசியத்தின் தோற்றம்

இந்தியா ஒற்றை தேசியமல்ல என்று சமூக அரசியல் ஆர்வமுள்ள பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனிய அரசியல் இந்தியாவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. ஆக, இந்தியாவின் அரசியல் முரண்பாடு என்பது இந்தியா ஒற்றை தேசியமா? பல்தேசியமா? என்று தான் கூர்மைப்படுகிறது. இந்தியா பல்தேசிய நாடு தான் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது தான் இந்தியா எனும் நாடு இருக்கும். இந்த புரிதலை வெகு மக்களிடம் … இந்திய தேசியத்தின் தோற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.