நெல்லையில் சமூக நீதி மாநாடு

அன்புமிக்க நண்பர்களே வணக்கம். தந்தை பெரியார் 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 26 வது மாநாட்டில் முதன்முதலாக சமூகநீதிக்கான குரலை எழுப்பினார். அதிலிருந்து அவரது சமூக நீதிக்கான பயணம் தொடங்குகிறது. 1920-2020 நூற்றாண்டு கால சமூகநீதி வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 2020 டிசம்பர் 27 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் சமூகநீதி மாநாட்டை நெல்லையில் நடத்துகிறோம். கொரோனா பிரச்சனையால் முன்பதிவு செய்த பிரதிநிதிகளை மட்டும் வைத்து … நெல்லையில் சமூக நீதி மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கந்துவட்டி அரசை எரிப்போம், வாருங்கள்.

  கண் முன்னே இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே தீப்பற்றி எரிவதை காண நேர்வது எத்தனை கொடூரமானது? 23.10.2017 திங்கட்கிழமை காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மனதை பதற வைக்கும் அந்த திடுக்கிடும் நிகழ்வு நடந்தது. சுற்றி இருந்த மக்கள் கிடைத்த தண்ணீரையும், மணலையும் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர். ஆனாலும் தீயின் நாக்குகள் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் பெற்றோரையும் தின்று தீர்த்தன. தீயின் நாக்குகளை விட கந்து வட்டியின் கொடுங் கரங்கள் எத்தனை வன்மமான … கந்துவட்டி அரசை எரிப்போம், வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.