போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்

புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம். இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் … போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் … பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே!   "பெண்கள் இந்நாட்டின் கண்கள்" என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா?   அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் … மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்

நண்பர்களே, அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும்,  முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான … மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

போலிகளையும் காலிகளையும் புறந்தள்ளி தொடர்கிறது தில்லை போராட்டம்.

     தில்லைக் கோவிலை அரசு தன்னுடைய பொறுப்பில் எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து விரட்டப்பட்ட தீட்சிதக் கும்பலைப்போலவே வேறுசில கும்பல்களும் வயிற்றில் அமிலமேறிக் கொதிக்கிறார்கள்.ஆனால் அதை தீட்சித ரவுடிகள் போல் வெளிப்படுத்த முடியாமல் சுவரொட்டிகளில் உமிழ்ந்திருக்கிறார்கள் அரசுக்கு நன்றி என்று.           தில்லை நடராஜரின் காதில் தமிழ் ஓதியதும் ஆலயத்திலிருந்து அயோக்கியர்களை வெளியேற்றியதும் வக்கீல் வைத்து வாதாடிப் பெற்ற வெற்றி மட்டுமல்ல, மக்களை ஒன்றினைத்து போராடிப்பெற்ற வெற்றி. எத்தனை தடைகள்? எத்தனை குள்ள … போலிகளையும் காலிகளையும் புறந்தள்ளி தொடர்கிறது தில்லை போராட்டம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.