சிபிஐ எனும் ஸ்டெர்லைட்

பத்திரிக்கை செய்தி: மே.19, 2022: மோடி அரசின் நண்பர் அனில் அகர்வாலின் ஏவல்படையாக செயல்பட்ட காவல்துறையினரைக் காப்பாற்றும் சிபிஐ விசாரணையை கண்டிக்கிறோம்! நிராகரிக்கிறோம்! நீதி வேண்டும்! உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறு விசாரணை வேண்டும்! **************************************************** மே 22, 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின் தனது மூன்றாவது இறுதி குற்றப் பத்திரிகையை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் நிர்வாகம், காவல்துறை வருவாய்த்துறை … சிபிஐ எனும் ஸ்டெர்லைட்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கையும் அதன் பொருளாதாரமும்

கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால … இலங்கையும் அதன் பொருளாதாரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடியும் வக்கிர எண்ணமும்

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. ஏற்கனவே தேனீர் விற்ற பட்டறிவு(!) (அனுபவம் என்பதற்கு ஈடான தமிழ்ச் சொல்) கொண்ட, தேர்தல் காலங்களில் வடை சுடுவதில் வல்லவரான மோடி பஞ்சாப் சென்றிருக்கிறார். பெரோஸ்பூரில் 42,750 கோடிக்கு வடை சுடுவதாக மன்னிக்கவும் 42,750 கோடிக்கு நலத்திட்ட அறிவிப்புகள் செய்வதாக திட்டமிட்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி தில்லியிலிருந்து விமானம் மூலமும் பின்னர் எழுவூர்தி மூலம் பெரோஸ்பூருக்கும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையினால் … மோடியும் வக்கிர எண்ணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக

பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?

செய்தி: பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால், அரசாங்கத்துக்கு சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2731.32 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்ததாக நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுரறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மின்னம்பலம் செய்தியின் வழியே: கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த காலத்தில் 700 க்கும் அதிகமான விவசாயிகள் இறந்து போயிருக்கிறார்கள். … எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு

நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் பாஜக எனும் விலங்கு தற்போது லட்சத் தீவை நோக்கி தன் பார்வையைத் திருப்பி இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ ‘பிரபுல் பட்டேலை பதவி நீக்கம் செய்’ போன்ற முழக்கங்கள் முன்னிலை பெற்று வருகின்றன. கேரள நடிகர்கள் தொடங்கி, சற்றேறக் குறைய பாஜக மற்றும் அதனைச் சார்ந்த கட்சிகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின, வெளிப்படுத்தி வருகின்றன. அந்த விலங்கு தொடர்ந்து இப்படி வேட்டையாடிக் கொண்டிருப்பதை எப்படி … லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெர்லைட்: என்ன செய்யலாம்?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்குதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்களை வைத்து கலவரத்தை தூண்டி சதித்தனமாக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம்பட்ட சிலருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலைகளை ஒதுக்கி உள்ளீர்கள். கைது செய்யப்பட்டு காவல் துறையால் கொடும் தாக்குதலுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் அறிவித்திருக்கிறீர்கள். இதை … ஸ்டெர்லைட்: என்ன செய்யலாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 2 முன் குறிப்பு: இதை தொடராக எழுதலாம் எனும் திட்டத்தில் கடந்த ஆண்டில் இதே நாளில் தொடங்கினேன். ஆனால் பல காரணங்களால் தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். இனி இது தொடர்ந்து வெளிவரும். போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம் போன்றது என்று மார்க்ஸ் கூறியதை சொந்த அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த நாள் அன்று. அன்றைக்கு முன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கருத்தாக மனதில் இருக்குமே … 1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிசத்தின் இந்திய முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய முன்னணி நிலை விரும்பியவாறு இல்லை என்றாலும், திமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், அஸ்ஸாமை பாஜக தக்கவைக்கிறது என்று புதுச்சேரியில் கூட்டணியுடன் முன்னணிக்கு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விதயங்கள். குறிப்பாக, புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் கை நனைப்பது என்பது தமிழ்நாட்டிலும் விரிவதற்கு வழிவகுக்கக் கூடும். போகட்டும். தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அனைத்து இந்திய கட்டமைப்புகளின் … பாசிசத்தின் இந்திய முகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.