உடல் எனும் பொதுவுடமை சமூகம்

கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடக்கின் முரண்கள்

கொரோனா பரவியிருக்கும் நாடுகள் ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. … ஊரடக்கின் முரண்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.