உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மார்ச் 8
மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்
1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910ல் கோபன்ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மார்ச் 8 ஐ உலக உழைக்கும் பெண்கள் … மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்
விவிலியத்தில் ஒரு கதை உண்டு. ஒரு மன்னன் குடிமக்கள் அனைவரும் தனக்கு பணிந்து, தனக்கு அடிமையாக, தினமும் தன் பாதத்தை பூஜித்து வந்தால் மட்டுமே வாழ அனுமதிப்பேன். இல்லாவிட்டால் அவர்கள் பாதங்களைத் தறித்து விடுவேன் என்று சட்டமிட்டு; மீறுபவர்களின் பாதங்களை துண்டித்து நடக்க முடியாமல், வாழவிடாமல் அவர்களை சாகடித்தான். அப்போது மானமும் அறிவும் கொண்ட மக்கள் போராடி இறந்தனர். இன்றைய சமூக சூழல் தன்னுடைய ஆணாதிக்கத் திமிரினால் அந்த மன்னனைப் போல் தனக்கு அடிபணிந்து வாழுங்கள் … பாதமில்லாமல் வாழ்வதை விட போராடி இறப்பதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே ! முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள். டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் … மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே! "பெண்கள் இந்நாட்டின் கண்கள்" என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா? அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் … மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.