நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: முஸ்லீம்
உதைப்பூர் கொலையில் பாஜக
நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சு பெருங் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த நேரத்தில், “பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?” என்றொரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் உள்ள ஒரு பத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன். சிஏஏ சட்ட வரைவு கொண்டு வந்த போது, இஸ்லாமிய மண விலக்கு சட்ட திருத்தத்தின் போது, அடித்துக் கொல்வது தொடர்கதை ஆனபோது, பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு சட்ட அங்கீகரம் பெற்ற போது, முகத்திரை சிக்கலின் போது, கலவரம் செய்த போது, கலவரத்தை எதிர்த்தவர்கள் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு தரை … உதைப்பூர் கொலையில் பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.
கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்
ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?
அரபு நாடுகளில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்கிறார்கள். தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவிக்கிறார்கள், விளக்கம் கோருகிறார்கள். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார்கள். குப்பைத் தொட்டிகளில் செருப்பாலடித்த மோடியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். தோஹா சென்றிருக்கும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் கத்தர் அரசு நடத்தவிருந்த இரவு விருந்து ரத்து செய்யப்படுகிறது. இவைகளெல்லாம் நுபுல் சர்மா எனும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி … பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்
நீதி மன்றங்களின் உத்தரவுகள் எந்தவித திடுக்கிடலையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவை பெயரில் மட்டுமே நீதி மன்றங்கள் எனும் புரிதல் உண்டு. ஊடகங்கள் .. .. இந்தச் சொல்லை உச்சரிக்காமல் இருப்பதே நம்மை தாழ்த்திக் கொள்ளாமல் இருக்கும் வழி. ஆனால், அரசியல் கட்சிகள் ..? இந்தியாவிலிருக்கும் எந்த அரசியல் கட்சியும் இந்த அநீதியான, அராஜகமான, அறுவெறுப்பான, அலட்சியமான இந்த நீதிமன்ற உத்தரவுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்லாமல், முணுமுணுக்கக் கூட இல்லாமல் அசிங்கமான அமைதியைக் காக்கின்றனவே ஏன்? சில … ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ராம நவமி: வன்முறை வெறியாட்டம்
வினாயகர் ஊர்வலங்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் என்று பொருள். கடந்த கால வரலாறு இப்படி பொருள் கொள்ளும் படியான கட்டாயத்தைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ராம நவமியும் இணைந்துள்ளது. வெறுமனே இந்து எனும் மதத்தில் நம்பிக்கையுள்ள அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் உருவகிக்கும் இந்து எனும் சொல்லில் நம்பிக்கையில்லாத பலருக்கு வினாயகர், ராம நவமி போன்ற மதம் தொடர்பான பெயர்களை எதிர்மறையாக உச்சரிப்பது கோபத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அந்தக் கோபம் யார் மீது ஏற்படுகிறது … ராம நவமி: வன்முறை வெறியாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக
பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..
அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
பிய்ந்த செருப்பு இருக்கிறதா?
ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் … பிய்ந்த செருப்பு இருக்கிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?
தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.