அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே! நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ரோஹித் வெமுலா
குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை
கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின் கைகளில் இன்னும் காயவில்லை மலம் அள்ளிய ஈரம். ஒருமுறை கைதட்டிக் கொள்வோம் ஐந்து செயற்கைக் கோளுடன் வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட். வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம் ஆனால் என்ன? தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம். கொஞ்சம் பாராட்டலாம் ஊனமுற்றோர்க்கு மோடி சக்கர நாற்காலி வழங்கினார். இடுகாட்டுக்கு பாதையில்லை போலீசே பிணம் திருடி புதைத்த கொடூரம். பெருமிதம் கொண்டால் என்ன? பன்னாட்டு தரத்தில் எட்டு வழி வழுக்கும் சாலைகள். … குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?
மீண்டும் ஒரு முறை பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஒருபக்கம், “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” என்று பாட்டுப் பாடி கலை என்ற பெயரில் பார்ப்பனிய நச்சுக் கருத்தை மக்களிடம் பரவ விடுகிறார்கள். மறுபக்கம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி நிறுவங்களுக்குள் நுழைந்து விட்டாலோ கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு விதத்தில் கொலை செய்து விடுகிறார்கள். இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்? என்று ஒரு … ரோஹித் வெமுலா: கொலை செய்தவர்களை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.