இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: வாழ்நிலை
பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்
சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு “தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் … பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்
சுவனப்பிரியனுக்கு மறுப்புரை - பகுதி 3 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி” இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் … தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி
மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து … சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி-ஐ படிப்பதைத் தொடரவும்.
கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்
நேற்று கேள்வி பதில் பகுதியில் மணி எனும் நண்பர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதில் சற்று நீளமாக வந்து விட்டதால், பதிவாக இட்டுவிட்டேன். பொருத்தருள்க. நண்பரே, சுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும்? அதேபோல் நாத்திகன் பல … கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்-ஐ படிப்பதைத் தொடரவும்.