மாபெரும் விவாதம்

இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போராட்டங்கள், தத்துவ விவதங்கள் பெரிய அளவில் நடந்ததில்லை. நடக்கவே இல்லை என்பது இதன் பொருளல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கையையும் அவை கடந்து வந்த நீண்ட காலத்தையும் சிந்தையில் கொண்டால், நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்கள் மிகமிகக் குறைவே. நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்களில் கூட, சரிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் என்பதைக் கடந்து, குற்றம் சாட்டும் வாதச் சண்டைகளாக முடிந்தவையே அதிகம். அண்மையில் தமிழ்நாட்டில் SOC உடைதல்களுக்குப் பிறகு இந்த வாதச் சண்டைகள், … மாபெரும் விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எந்தப் பொன்மகள் வரவேண்டும்?

பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

Interstellar: திரைப்படத்தை முன்வைத்து

இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம். இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான் … Interstellar: திரைப்படத்தை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

  .. .. .. காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவி வந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் மேல்ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு பொருளாதாரம் சமூக நீதி உள்ளிட்ட தளங்களில் போராடிக் கொண்டிருந்த மக்களின் மீது அவர் இரக்கம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும், “சகோதரனுக்கு எதிராக அறப் போராட்டமா?” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் … தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?

அண்மையில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது ஜோக்கர் தான். சமூக வலைத் தளங்கள் எழுதப்பட்ட மதிப்புரைகள், பார்த்தவர்களிடம் கேட்ட கருத்துகள் அனைத்துமே சிறப்பான படம், சமகால அரசியலை படம் பிடித்துக் காட்டும் படம் என்பதாகவே இருந்தன. இவையே, படத்தை பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது, கூடவே, ‘வாழ்வது தான் கஷ்டம் என்றால் இப்போது பேலுவதும் கஷ்டமாகி விட்டது’ எனும் அதன் விளம்பர வாசகம். சிறந்த அரசியல் நையாண்டிப் படமாகவே இருக்கிறது. ஆனாலும், … ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து

வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ.   பொதுவாக கலை என்பது, … கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?

‘டிராஃபிக்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் மறுதயாரிப்பு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் வெளிவந்து பரவலான கவனிப்பையும், இணைய உலகில் சமூக அக்கரையுள்ள படம் எனும் அடையையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு இணையப் பரப்பில் செய்யப்படும் விமர்சனங்களைப் படித்தபோது மறைந்த நாகேஷ் பேசிய ஒரு வசனம் தான் நினைவுக்கு வந்தது. “உடம்பை விட்டு விட்டு உயிரை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டாயே, எப்படி?” என்று ஏதோ ஒரு படத்தில் பேசியிருப்பார். அதேபோல் … சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்

  அமெரிக்கவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்னோபில், ஜப்பானின் புக்குஷிமா போன்ற விபத்துகள் அணு உலைகளின் கொடூர முகத்தை வெளிக்காட்டியதுடன் அணு உலைக்கு அதிராக போராடும் உத்வேகத்தையும் மக்களுக்கு தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெகுமக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் மயிரளவுக்கும் கூட மதிக்க மறுக்கின்றன. மறுபுறம் இணைய அறிவுஜீவிகள் தங்கள் மேதமையால் நாராயணசாமிகளாய் மாறிக் … கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள

மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கருவி நெருப்பை உண்டாக்குவது. நெருப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் பண்டைய காலத்தில் ……? நெருப்பு என்பது ஆயுதம், நெருப்பு என்பது ஆற்றல், நெருப்பு என்பது பாதுகாப்பு, நெருப்பு என்பது முன்னேற்றம், நெருப்பு என்பது வல்லமை, நெருப்பு என்பது வாழ்வு. இன்று கருவிகள் இல்லாமல் ஒரு நொடியும் இல்லை என்ற நிலையிலிருக்கும் மனிதன், தொடக்க கால மனிதர்கள் நெருப்போடு கொண்டிருந்த உறவை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா? … Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள-ஐ படிப்பதைத் தொடரவும்.

மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்

  தமிழ் திரைப்படங்கள் நடப்பு யதார்த்தங்களை களமாக கொண்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், இயக்குனர்களும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே. அதனால், சில படங்களில் அவர்கள் அறியாமல் கதைப்போக்கில் அது ஊடுருவி விடுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த மங்காத்தாவில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகளே திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கதை வெளிவந்து பரவலாக வரவேற்பை பெற்றது, இப்போது மௌனகுரு.   மங்காத்தாவுக்கும் மௌனகுருவுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசம் உண்டு. மங்காத்தாவில் அந்த யதார்த்தம் தான் கதைநாயகன், … மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்-ஐ படிப்பதைத் தொடரவும்.