விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது

தில்லியில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும், விவசாய அமைப்பினரும், இன்னும் பலரும் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்குவதை தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்று உறுதியுடன் போராடி வருகிறார்கள். அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நாடகங்கள் எடுபடாமல் போய்க் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று அரசு சிந்திப்பதன் அடுத்த கட்டமாக நீதி மன்றம் களத்தில் குதித்திருக்கிறது. போராடும் மக்களை நேரடியாக மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நீதி … விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்

அடாவடியாக, எந்த பாராளுமன்ற மரபுகளையும் மதிக்காமல், விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட, விவசயிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் அனைவருக்கும் எதிரான, வேளாண் சட்டங்களை நீக்கு எனும் கோரிக்கையோடு பத்து நாட்களைக் கடந்தும் தில்லி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சற்றேறக் குறைய 500க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இப் போராட்டத்தில் ஒருங்கிணைந்து இருக்கின்றன, ஒருங்கிணைத்து வருகின்றன. போராட்டக் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகளெல்லாம் பெரும் உவகையை தருகின்றன. ஒரு லட்சத்துக்கு பக்கத்தில் உழவு வண்டிகள், இரண்டு மாதங்களுக்கு போதுமான உணவுப் … விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.