ஆறாம் கட்டுரை : காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு? காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டுபோய், அதனைச் சர்வதேசப் பிரச்சினையாக மாற்றியதுதான் நேருவின் சாதனை” என்பது பா.ஜ.க.வின் குற்றச்சாட்டு. பிரிவு 370-ஐ செயலற்றதாக்கியதன் மூலம் நேருவின் அச்சாதனையை” முறியடித்துவிட்டார் மோடி. காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தானால் பயிற்றுவித்து அனுப்பப்படும் சில பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று இந்திய அரசு மிகவும் கஷ்டப்பட்டு ஊதி உப்பவைத்திருந்த பலூனைத் தனது தைரியமான நடவடிக்கையின் மூலம் ஒரே நொடியில் … காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஷேக் அப்துல்லா
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல
ஐந்தாம் கட்டுரை : நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவின் முக்கியக் கூறுகளை நீக்கி, அச்சட்டப்பிரிவைச் செயலற்றதாக்கிவிட்ட மோடி அரசின் நடவடிக்கையை ஆதரிக்கும் வலதுசாரிகள் அனைவரும், அச்சட்டப் பிரிவின் காரணமாகத்தான் காஷ்மீரில் தீவிரவாதம் வளர நேரிட்டதாகவும் ஏறத்தாழ 40,000 பேர் இறந்து போனதற்கும் அச்சட்டப் பிரிவுதான் காரணமென்றும்” வாதாடி வருகிறார்கள். காஷ்மீரின் ஒரு பகுதியை இந்தியாவுடன் இணைக்கும் … நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் கொள்கை அறிக்கையான புதிய காஷ்மீர் வெளியீட்டின் முகப்பு அட்டை. (கோப்புப் படம்) நான்காம் கட்டுரை : காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் அதென்ன காஷ்மீருக்கு மட்டும் தனிச் சட்டம்? அவனுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது? இதுதான் சட்டப்பிரிவு 370 பற்றி ஒரு பாமரனின் பார்வை. காஷ்மீரில் வெளியாள் யாரும் சொத்து வாங்க முடியாதாம்” என்று பா.ஜ.க.வினர் பேசினால், சொந்த ஊரில் சென்ட் நிலம் வாங்க … சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்
மூன்றாம் கட்டுரை : காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் ஜம்மு காஷ்மீருக்குத் தனிச் சிறப்புரிமைகள் வழங்குவதாகக் கூறப்படும் அரசியல் சாசனப் பிரிவு 370- செயலற்றதாக்கியதன் மூலம், ஜம்மு காஷ்மீருக்கென பெயரளவில் இருந்துவந்த தனிக் கொடி, தனி அரசியல் சாசனச் சட்டம், கிரிமினல் சட்டங்கள் அனைத்தும் ரத்தாகிவிட்டன. இனி, இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமின்றி, மைய அரசின் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இன்றியும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய … இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்
ஜவஹர்லால் நேருவுடன் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகம்மது அப்துல்லா இரண்டாம் கட்டுரை : காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் நாட்டுப் பிரிவினை என்பது நிகழ்ச்சி நிரலுக்கு வந்தபோது பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தவிர, இங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுள் காஷ்மீரும் ஒன்று. இந்த சமஸ்தானங்கள் எல்லாம் யாரோடு சேர்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக அன்று இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947 (India Independence Act … காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்
காஷ்மீர் எனும் ஒரு தேசம் மூன்று நாடுகளுக்குள் கடந்த வாரத்திலிருந்து காஷ்மீர் ஒரு செயற்கையான கொதிப்பு நிலைக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகளை புதைத்து வைத்திருந்தது என்றார்கள். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடிகளுடன் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்று … காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால்
இந்தியாவில் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு மதிப்பான 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன. அதாவது மோடி பிரதமரானதும் இந்தப்பிரச்சனை திட்டமிட்டு கிளப்பட்டுள்ளது. தெளிவாகச் சொன்னால், ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கும்பலின் திட்டம் எனும் போர்வையில் ஒரு தீப்பொறியைப் போல இந்தப் பிரச்சனை பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்து முஸ்லீம் பிரச்சனை போல மக்களிடையே பரப்படுகிறது. ஆனால் கடலில் மிதக்கும் பனிப்பாறையில் வெளியில் தெரிவதை மட்டும் பார்ப்பது எப்படி ஆபத்தானதோ அதைவிட பலமடங்கு பேராபத்தானது காஷ்மீர் … காஷ்மீர்: இந்தியா, பாகிஸ்தான், சீனா – 370க்கும் அப்பால்-ஐ படிப்பதைத் தொடரவும்.