கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருவெளியின் தூசு

பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4

  கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான  நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள். நண்பர் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்

  Aiya, Thangal pahuththarivu reethiyana Islaththai patri araivathu emakku oru vilippunarvai etpaduththi ainthikka thoondukirathu.. Irunthum sila nerangalil mathangalai kadanthu sinthikka mudiyamal oru achcham ullaththil eluhirathu. Suppose maraniththa pin unmaileye Iraivan vanthu ean enakku valippadavilla enral enna seyvathu? Oruvelai nadanthal ellavatrukkum ayaththamaha irukka vendum thane. ஷான் கேள்வி பதில் பகுதியிலிருந்து.  இங்கே நண்பர் ஷான், ஒரு முறை பெரியாரிடம், நீங்கள் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதின் அல்லா யார்?

 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 58 அல்லா எனும் அரபுச் சொல்லின் பொருள் என்ன? முகம்மது தன் கொள்கையை பரப்புரை செய்வதற்கு முன் அந்தப் பகுதி மக்களின் கருத்தியலில் அல்லா இருந்ததா? முகம்மதுவுக்கு முன் இருந்த அல்லாவுக்கும், தற்போது வழங்கப்படும் அல்லாவுக்கும் இடையில் வித்தியாசம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முழுமையாக புரிந்து கொண்டால் தான் இஸ்லாமியர்கள் கூறும் அல்லாவை புரிந்து கொள்ள முடியும். குரானில் பிரபலமான ஒரு முத்திரை வாக்கியம் உண்டு, … முகம்மதின் அல்லா யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி

அறிவியல் முன்னோக்கி பயணிக்க, பயணிக்க அதன் கடைக்கம்பியை பிடித்து தொத்திக்கொண்டு ஆன்மீகமும் நேர்மையற்று கூடவே வந்துவிடுகிறது. அறிவியலின் வேகத்தைவிட இப்படி 'தொத்திக்கொண்டு' பயணிப்பது ஒரு சாகசமாக பார்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் அடிக்கடி கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடுகின்றன. சாஸ்தா வாழவைப்பார் என்றும், மகர ஜோதி அதிசயம் என்றும் நம்பும் அப்பாவி பக்தர்களின் பாமரத்தனமான நம்பிக்கை அவர்களின் வாழ்வை அவநம்பிக்கையாக்கி விடுகிறது. இதை ஆண்டவனின் அருளில் ஏற்பட்ட பிழை என்பதா? ஆள்பவர்களின் அலட்சியம் என்பதா?   மகரஜோதி தரிசனம்(!) முடிந்து திரும்பியவர்கள் … மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி-ஐ படிப்பதைத் தொடரவும்.