அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

 

பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆனால் உள்ளீட்டில் அனைத்து பிற்போக்குத் தனங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மதம் என்பதையும் மறுக்கவியலாது.

 

பெண்ணை ஆண் அடக்குவது ஆணாதிக்கம் எனும் தட்டையான புரிதலே பொதுவாக நிலவுகிறது. ஆனால் ஆணாதிக்கம் என்பது இன்னும் ஆழமானது. ஆணுக்கு ஆதரவாக பெண் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளும், ஒழுக்கங்களும், சமூகக் கட்டுப்பாடுகளும், நடைமுறை சார்ந்து செய்யப்படும் திணிப்புகளும், பெண்ணின விடுதலைக்கு எதிராக செய்யப்படும் ஆணின அடக்குமுறைகள், கற்புநெறிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது தான் ஆணாதிக்கம். இந்த வகையில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள்.  ஆனால் குடும்பத்தில் கணவனுக்கு கீழாக மனைவி இருப்பதையே ஆணாதிக்கம் என எண்ணிக் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது என்று பசப்புகிறார்கள்.  இஸ்லாத்தின் ஒட்டுமொத்த பார்வை பெண்ணை ஆணின் பதுமையாகவே பாவிக்கிறது. இதை விளக்க அதன் சில வசனங்களை வகை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

 

ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் குரான் 2:282

 

ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் குரான் 4:34

 

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237

 

குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். குரான் 2:233

 

தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆன் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

 

இவைகள் குரானில் காணக் கிடைக்கும் வசனங்கள். இது போல் இன்னும் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன.  ஹதீஸ்களைத் தோண்டினாலோ மிக மட்டமாக, பெண்ணை ஓர் உயிரினமாகக் கூட மதிக்காத வண்ணம் இருக்கின்றன. ஆனால் அவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள், இட்டுக் கட்டப்பட்டவைகள் எனும் குழப்பமான இருட்டுச் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.

 

முதல் வசனத்தில் சாட்சிப் பொறுப்புக்கு ஆண்களையே முதன்மையாக கொள்ளப்பட்டிருக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சிக்கு கிடைக்கவில்லையாயின் ஓர் ஆணும் இரண்டு பெண்களுமாக கொள்ளலாம் என்கிறது. அப்போதும் இரண்டு ஆண்கள் கிடைக்கவில்லையாயின் நான்கு பெண்களுக்கு சாட்சி கூறும் தகுதி வந்துவிடாது. ஒரு மாற்று ஏற்பாடாக ஓர் ஆணுக்கு பதிலாக இரண்டு பெண்கள் என  ஏற்கப்பட்டிருக்கிறது. அதிலும் ஏன் இரண்டு பெண்கள் என்பதற்கு ஒரு காரணத்தையும் குரான் கூறியிருக்கிறது. ஒருத்தி தவறினாலும் மற்றொருவள் நினைவு படுத்துவாளாம். ஏன் ஆண்கள் தவறவே மாட்டார்களா? அது தான் குரானின் மனோநிலை, ஆணும் பெண்ணும் சமமாக மாட்டார்கள்.

 

மனைவியை அடிக்கலாம் எனும் அனுமதி குறித்து மதவாதிகள் வளைத்து வளைத்து உபநிடதங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். இல்லறத்தை இனிதே நடத்திச் செல்வதற்கான ஏற்பாடு என்பதில் தொடங்கி பெண்களுக்கான பாதுகாப்பு என்பது முடிய விதவிதமான வண்ணங்களில் விளக்கங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் எப்படி விளக்கமளித்தாலும் இதன் பொருள் ஆணுக்கு கீழாக பெண்ணை இருத்தி வைப்பது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. தான் இன்னொரு திருமணம் செய்ய மனைவி தடை விதிக்கிறாள் என்று ஐயமெழுப்பும் ஓர் ஆணுக்கு உன் மனைவியை அடித்து விட்டு திருமணம் செய்து கொள் என ஆலோசனை வழங்கும் ஹதீஸ்கள் இருக்கின்றன. மட்டுமல்லாது மனைவியை எப்படி அடிப்பது என்பதற்கும் முகத்தில் அடிக்கக் கூடாது, காயம் ஏற்படும்படி அடிக்கக் கூடாது வழிமுறைகள் வழங்கியிருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது? இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்துகிறது என்றா?

 

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பதை மேலோட்டமாக பார்த்தால் வெகு யதார்த்தமாக தெரியலாம். ஆனால், இஸ்லாம் ஆணுக்கு வழங்கியிருக்கும் கலவிச் சுதந்திரத்தையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தான் இதன் முழுமையான பொருளாக பெண் ஆணுக்கான காமப் பதுமை என்பது விரியும்.  ஆண் நான்கு திருமணம் வரை செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டவன், மட்டுமல்லாது அடிமைப் பெண்கள் இருந்தால் அவர்களை எண்ணிக்கை வரம்பின்றி கையாளவும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றவன். பெண்ணோ ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டவள். அதாவது ஒரு மனைவி மறுத்தாலும் ஆணுக்கு கல்வி இன்பம் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடு இருக்கிறது. மனைவி அதற்காக காத்துக் கிடப்பவளாகிறாள். இந்த நிலையில் யார் அழைத்து யார் மறுக்கக் கூடாது எனும் விதி வந்திருக்க வேண்டும்? மாறாக அல்லா பெண்ணை சபிக்க உத்தரவிட்டிருக்கிறார். என்றால் அவரின் பார்வை பெண் ஆண்களுக்கான காமப் பதுமை என்பதாக இருக்கிறது என்பதல்லவா உண்மை.

 

ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதில் சமூக வயமாகவும் அறிவியல் வயமாகவும் பெண்ணின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு குழந்தையிடன் எந்த உரிமையும் இல்லை. கணவன் மனைவி ஒன்றியிருக்கும் போது பிரச்சனைக்கு இடமில்லை, இங்கு அவர்களின் குழந்தையாக இருப்பது, அவர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பிரியும் நிலை வந்தால் ஆணின் உடமையாகி விடுகிறது. அதன் பிறகு அக்குழந்தை பால் குடிக்கும் பருவத்தில் இருந்தால் தாயிடம் பாலருந்துவதற்கு தகுந்த கூலியை வழங்கி விடுமாறு குரான் ஆணுக்கு உத்திரவிடுகிறது. இதையும் குரான் பெண்ணை பெருமைப்படுத்துவதாக சில மதவாதிகள் இறும்பூறெய்துகிறார்கள். ஆனால் இதை விட பெண்ணை, தாய்மையை வேறு யாரலும் கேவலப்படுத்திவிட முடியாது.

 

இந்த வசனம் ஆண்களை அல்லாவின் பாதையிலிருந்து திசைதிருப்பும் அதாவது நரகத்தில் கொண்டு சேர்க்கும் பொருட்கள் சிலவற்றை பட்டியலிடுகிறது. அந்தப் பட்டியலில் பெண்ணும் இருக்கிறாள், ஆண் குழந்தையும் இருக்கிறது. அதேநேரம் ஆண்குழந்தையையும், பெண்களையும் பட்டியலில் வைத்துவிட்டு மனிதர்களுக்கு என்று பொதுவாக பசப்புகிறது குரான். தங்கம், வெள்ளி, கால்நடைகள் குதிரை போன்ற சொத்துகளின் ஈர்ப்பு ஆணை அல்லா கூறும் நேரான(!) வழியிலிருந்து திசை திருப்பி நரகத்தின் பக்கம் கொண்டு சேர்த்து விடுகிறது என்பது இந்த வசனத்தில் அல்லாவின் அங்கலாய்ப்பு. இந்த பட்டியலில் தான் பெண்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு தான் அல்லா பெண்களுக்கு அளிக்கும் மதிப்பு. இதை ஆணாதிக்கம் என்பதல்லாது வேறு என்னவாக மதிப்பிடுவது?

 

இஸ்லாம் தான் ஆணாதிக்கத்தை தோற்றுவித்தது என்பது இதன் உட்பொருளல்ல. இன்று மட்டுமல்ல இஸ்லாம் தோன்றிய காலத்திலும் அதற்கு முன்னரும் சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஆணாதிக்க சமூகத்தை இஸ்லாமும் அங்கீகரித்திருக்கிறது. சொத்து, விவாகரத்து போன்றவைகளும் இஸ்லாத்துக்கு முன்பிருந்தே சமூகத்தின் நிரவலில் இருந்திருந்தாலும் இஸ்லாம்தான் அதை முதலில் கொண்டுவந்தது என்று முஸ்லீம்கள் வம்படியாய் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆணாதிக்கம் குறித்தும் அதே பார்வையைக் கொள்வார்களா? அல்லது குரானை யாத்தது முகம்மது இல்லை அல்லாதான் என்றால் அல்லாவின் பார்வை ஆணாதிக்கமாக இருப்பதால் இஸ்லாம் தான் ஆணாதிக்கத்தை வடிவமைத்தது என்பதை ஒப்புவார்களா?

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

83 thoughts on “அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

  1. இது தெரிந்தது தானே!,

    இஸ்லாம் என்றாலே ஆணாதிக்கம் தானே!

  2. பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என சாட்சி சொல்வதில் கூட இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லாத நிலை உள்ளதே. ஏன்?

    பதில்:

    இஸ்லாத்தில் எல்லா வேளைகளிலும் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது உண்மையானது அல்ல. ஒரு சில வேளைகளில் மாத்திரம் பெண்கள் எனில் இரண்டு சாட்சிகள் வேண்டும் – அதே சமயம் ஆண்கள் எனில் ஒரு சாட்சி மாத்திரம் போதும் என்பது இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றிய விளக்கமளிக்கிறது. மேற்படி வசனங்களில் சாட்சிகள் பற்றி குறிப்பிடும்பொழுது -ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக சாட்சிகள் என்று மட்டும் குறிப்பிடுகிறது. மேற்படி ஐந்து வசனங்களில் உள்ள ஒரேயொரு வசனம் மாத்திரம் சாட்சிகளில் ஆண் என்றால் ஒருவர் என்றும் பெண் என்றால் இருவர் என்றும் குறிப்பிட்டு காட்டுகின்றது. அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 282வது வசனம் மேற்படி சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் மிக நீண்ட இந்த வசனம் பொருளாதார நடவடிக்கை பற்றி குறிப்பிடுகின்றது.

    ‘(நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களில் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள். (பெண்கள் இருவர் ஏனென்றால்) அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.’ அல்-குர்ஆன்(2:184)

    மேற்படி வசனம் பொருளாதார கொடுக்கல், வாங்கல் பற்றி அறிவிக்கிறது. பொருளாதார கொடுக்கல் வாங்கலின் போது ஒப்பந்தம் இடச் சொல்கிறது. அவ்வாறு ஒப்பந்தம் இடும்போது கொடுப்பவருக்கும் – வாங்குபவருக்கும் இடையில் இரண்டு நபர்களை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள் என் கட்டளையிடுகிறது. இரண்டு சாட்சிகளும் ஆண்களாக இருந்தால் நன்று என்று பரிந்துரைக்கிறது. இரண்டு ஆண்கள் சாட்சியாக கிடைக்கவில்லையெனில், ஒரு ஆண் சாட்சியையும் இரண்டு பெண் சாட்சிகளையும் கொண்டு ஒப்பந்தம் இடுங்கள் என்று மேற்படி வசனம் மனிதர்களுக்கு அறிவுறுத்துகிறது.

    உதாரணத்திற்கு – ஒரு மனிதர் தனது நோய்க்கு ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்கிறார் எனில் – மேற்படி அறுவை சிகிச்சை பற்றி உரப்பித்துக் கொள்வதற்காக அவர் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களை கலந்து ஆலோசிக்கலாம்.. அல்லது அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிடைக்கவில்லையெனில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணரையும், இரண்டு சாதாரண மருத்துவர்களை கலந்து ஆலோசிப்பதில் அவர் திருப்தி அடையலாம்.

    அது போலவே பொருளாதார கொடுக்கல், வாங்கலின் போது இஸ்லாம் இரண்டு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளச் சொல்கிறது. ஏனnனில் ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள். பொருளாதார ரீதியாக ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் பொருளாதார ரீதியாக அதிகம் பொறுப்புடையவர்கள். பொருளாதார ரீதியாக ஆண்கள் அதிகம் பொறுப்புடையவர்கள் என்பதாலும், பெண்கள் மிகக் குறைவான பொறுப்புடையவர்கள் என்பதாலும் ஆண்கள் என்னும் பட்சத்தில் ஒருவரும், பெண்கள் என்னும் பட்சத்தில் இரண்டு பேரும் சாட்சியமாவது அவசியம் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இரண்டு பெண்கள் ஏனெனில் – பெண்களில் ஒருவர் தவறிழைத்து விட்டால், மற்றவர் அதனை சரிசெய்யலாம் என்ற காரணத்தால்தான் இரண்டு பெண்கள் சாட்சிகளாக தேவைப்படுகின்றனர். மேற்படி வசனத்தில் பயன்படுத்தப்பட்டள்ள ‘தஷில்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘குழப்பம்’ அல்லது ‘தவறு’ என்று பொருள். ஆனால் மேற்படி ‘தஷில்’ என்ற அரபி வார்த்தைக்கு ‘மறதி’ என்று தவறான மொழியாக்கம் செய்துள்ளனர் பலர். மேற்படி ஒரு ஆணும் இரண்டு பெண்ணும் சாட்சியாக இருக்க வேண்டும் என்பது பொருளாதார கொடுக்கல் – வாங்கல் சமடபந்தப்பட்டதற்கு மாத்திரமேத் தவிர, மற்ற இடங்களில் அல்ல.

    தவிர, சில மார்க்க அறிஞர்கள் கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் மேற்படி ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் – பயம் என்று வரும்போது, ஆண்களை விட பெண்கள் அதிகம் பயப்படும் தன்மை கொண்டவர்கள். பெண்கள் அதிகமாக பயப்படும் காரணத்தால் சாட்சி சொல்லும்போது, குழப்பமடைய நேரிடலாம். எனவே கொலை சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஆண் எனில் ஒருவரும், பெண் எனில் இரண்டு பேரும் சாட்சியாக இருக்க வேண்டுமென சில மார்க்க அறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேற்படி விவகாரங்கள் தவிர – எஞ்சியுள்ள அனைத்து விவகாரங்களிலும் சாட்சி சொல்வதில் ஆண் – பெண் இருவருக்கும் சமமான நிலையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்து வசனங்கள் சாட்சிகள் பற்றி குறிப்பிடுகின்றது. மேற்படி ஐந்து வசனமும் ஆண் – பெண் என்று வித்தியாசம் குறிப்பிடாமல் – சாட்சிகள் என்று மாத்திரம்தான் குறிப்பிடுகின்றது.

    சொத்துக்கான உயில் எழுதும்போது – இரண்டு நபர்களை சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகின்றது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

    ‘நம்பிக்கை கொண்டவர்களே!. உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரண சாஸணம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்: அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் பொது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடைக்காவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்.’ (அல்-குர்ஆன் 5:106)

    விவாகரத்து செய்ய விரும்பினால் உங்களில் இரண்டு பேர் சாட்சியாக இருக்கட்டும் என்று அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துத் தலாக்கின் இரண்டாவது வசனம் கூறுகின்றது. (அல்-குர்ஆன் 65:2)

    ‘எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீ;ங்கள் எண்பது கசையடி அடியுங்கள்’ என்று அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் நான்காவது வசனம் கூறுகின்றது.

    தவிர, சில மார்க்க அறிஞர்கள் எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள். மேற்படி வாதம் சரியானதன்று. ஏனெனில் அருள்மறை குர்ஆனின் இருபத்து நான்காவது அத்தியாயம் ஸுரத்துந் நூரின் ஆறாவது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

    ‘எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவன் நிச்சயமாக உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் நான்கு முறை சத்தியம் செய்து கூற வேண்டும்.’ (அல்-குர்ஆன் 24:6).

    மேற்படி வசனங்களில் எல்லா இடங்களிலும் சாட்சிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதேத்; தவிர, ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் என்று குறிப்பிடப்படவில்லை. மேற்படி வசனத்திலிருந்து பெண்களையும் தனி நபர் சாட்சியாக ஏற்கலாம் என்பது நமக்குத் தெளிவாவதுடன், எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்போரின் வாதமும் அடிபட்டு போய்விடுகின்றது.

    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி:
    இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்பினை நோற்பதற்காக பிறை பார்த்தல் சம்பந்தமாக ஒரு பெண்மணியின் சாட்சி போதுமானது என்பதை அனைத்து மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். சில மார்க்க அறிஞர்கள் நோன்பினை நோற்பதற்காக பிறை பார்க்கும்போது ஒரு சாட்சியும், நோன்பு நோற்று முடிந்து, பெருநாள் கொண்டாடுவதற்காக பிறை பார்க்கும்போது இரண்டு சாட்சியும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். மேற்படி செய்தியிலும் சாட்சி பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதேத் தவிர, ஆண் சாட்சி அல்லது பெண் சாட்சி என்று குறிபிடப்படவில்லை.

    மேலும் சில விவாகரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளான – இறந்து போன பெண் மையங்களை குளிப்பாட்டுவது – போன்ற விரகாரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி விவகாரங்களில் ஆண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

    கேள்வி கேட்டவர் சொன்னது போன்று பொருளாதார விவகாரங்களில் மாத்திரம் ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை வைத்துள்ளது. மேற்படி நிபந்தனை கூட ஏனெனில் இஸ்லாமிய சமுதாயத்தில் – பெண்களுக்கும் – ஆண்களுக்கும் பொருளாதார ரீதியாக இஸ்லாம் வழங்கியுள்ள பொறுப்புக்களின் காரணமாகத்தானேத் தவிர, ஆண் – பெண் என்கிற பாலியல் வேறுபாடு காரணம் அல்ல. மற்றபடி அனைத்து விவகாரங்களிலும் சாட்சியமளிப்பதில் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமான உரிமையைத்தான் இஸ்லாம் வழங்குகிறது.

  3. 304. ‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி(ஸல்) கூறினார்கள்” என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

    மேலே உள்ள ஹதீசில் பொதுவாக பெண்கள் எப்படி மட்டமானவர்கள் என சொல்கிறது. பெண்களை பற்றி பொதுவாக சொல்லும்போது “ ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;” என்று சொல்கிறது. இது குரானை அறிந்த முஹம்மதுவே சொன்னது. அப்படியிருக்கும்போது எங்கெல்லாம் சாட்சி என்று வந்து ஒரு பெண் சாட்சி சொன்னால் இருவர்தான் சாட்சி சொல்ல வேண்டும் என்று கூறும் மார்க்க அறிஞ்சர்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்கள்.

    கடவுளின் வார்த்தை தெள்ள தெளிவா அர்த்தங்களை புகுத்தமுடியாத எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது கடவுளின் வார்த்தை அல்ல. மனிதனின் உளறல். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்பது மனிதநேயத்திற்கு உகுந்ததைப் போல எறக்கிய வசனத்தை காண்பிக்கும் உத்தியாகும்.

    சம்பாதிக்கும், வியாபாரத்தை அறிந்த அனுபவமுள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் சாட்சியம் ஒன்று போதுமா? இல்லாலத்தில் அவ்வாறு பெண்கள் இருக்கும்போது, அல்லா அவ்வாறு இருக்க முடியாது என்று வசனம் எழுதியது தப்புதானே. பெண்களை பற்றி கீழ்தரமான எண்ணம் கொண்டவரால்தான் அப்படி செய்ய எறக்கமுடியும்.

    எல்லா வகையிலும் சமமாக இல்லாத ஏற்றத் தாழ்வுடன் ஆண்களை ஒன்றாக வைக்கும்போது, பெண்களை ஆண்களுடன் ஒன்றாக வைப்பதில் அல்லாவுக்கு என்ன குறைச்சல். அல்லாவை ஏற்படுத்திய மனிதரின் குறையா????

    வியாபாரத்திற்கு மட்டும்தான் என்று சொல்லுவது ஏற்கதகுந்தது அன்று.

  4. இந்த விவாத்தின் முடிவு தெரிந்ததுதான்.ஆகவே நீங்கள் நேரடி விவாதத்திர்கு வராததினால் தோற்று விட்டிர்கள்.

  5. மாற்றங்கள் விரும்பும் தலைமுறைக்கு மிக்க உறுதுணையாக இந்த தளம் இருக்கும்.

    என்னுடைய தளத்திற்கு வந்து பாருங்கள்.

    http://mahaukran.wordpress.com/

    பேஸ்புக் (முகநூல் ) பக்கம்

    https://www.facebook.com/MakaUkran

  6. அட கொடுமையே!
    அல்லாஹ்வையே முஸ்லீம்களுக்கு அறிமுகப்படுத்திய மொஹம்மது இப்னு அப்தல்லாவுக்கே வேட்டு வைக்கிறாரே இந்த ஹிதாயத்!

    உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்கி ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்கி (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவாpல் ஒருத்தி தவறினால், இருவாpல் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும் (2:282)

    இதிலேர்ந்து என்னா தெரியுதுன்னா ஆணை ஞாபக மறதியில்லாம படைச்ச மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்ன அல்லாஹ் பொன்னுங்களை ஞாபக மறதியோடத்தான் படைச்சிருக்கான்னு அர்த்தம்!

    இது கூட தெரியலையா? மொஹம்மத் இப்னு அப்தல்லா எத்தனை தடவைதான் சொன்னத்யே திருப்பி திருப்பி சொன்னாலும் தெரிய மாட்டேங்குதே

    இபின் கதீர் சொல்கிறார்:

    பெண்கள் பொதுவாக புத்தி இல்லாதவர்களாக இருப்பதினால், இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்துக்கு ஈடாக ஆக்கப்பட்டது. அபு ஹரையா அவர்களின் வழியே வந்த இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்கிறார். “ஓ பெண்களே. நன்றாக பிச்சை போடுங்கள். நிறைய மன்னிப்பு கேளுங்கள். ஏனெனில், நரகத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் பெண்களே என்று பார்த்திருக்கிறேன்.” அந்த கூட்டத்தில் இருந்த ஒரு புத்திசாலி பெண் கேட்டாள், “இறைதூதரே, ஏன் அப்படி? ஏன் நரகத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் பெண்களாகவே இருக்கிறார்கள்?” அவர் சொன்னார்,”ஏனெனில் நீங்கள் நிறைய திட்டுகிறீர்கள். உங்கள் கணவனுக்கு நன்றியில்லாமல் இருக்கிறீர்கள். பொதுப்புத்தியும் உங்களுக்குக் குறைவாக இருக்கிறது. உங்களால் சரிவர மதத்தையும் பின்பற்ற முடியவில்லை. இது தவிர புத்தியுள்ளவர்களின் ஞானத்தையும் காணாமல் அடித்துவிடுகிறீர்கள்” அந்த பெண் கேட்டாள்,” எங்கள் பொதுப்புத்தியில் என்ன குறைபாடு? எங்கள் மத நம்பிக்கையில் என்ன குறைபாடு?”. அவர் சொன்னார், “ஒரு ஆணின் சாட்சியம் இரண்டு பெண்களின் சாட்சியத்துக்கு நிகரானது என்பது உங்களது பொதுப்புத்தியில் உள்ள குறைப்பாட்டுக்கு நிரூபணம். ரமதான் மாதத்திலும் ஒரு சில நாட்களில் (மாதவிடாய் காரணமாக) தொழுமை செய்யமுடியாது என்பது உங்கள் மதத்தில் உள்ள குறைபாடு” என்றார்.

    (Tafseer Ibn Katheer, 1/336) தஃப்ஸீர் இபின் கதீர் 1/336

    ஏனுங்க ஈமாந்தாரி மூமின் இதாயத்து! மொஹம்மத் இப்னு அப்தல்லா ஏற்கெனவேவே முஸ்லிமாக்களுக்கு ஈமானும் கம்மி அறிவும் கம்மினு ஏற்கெனவே சொல்லிட்டு போயிருக்கும்போது அவர் சொல்லவே இல்லைன்னு சாஆஅஆதிக்கிறீயளே? நாயமா?

    போற போக்கை பாத்தா மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற ஒரு லூசுன்னு இந்த மூமுனுங்க பதிவெழுதிடுவானுவ போலருக்கே!

  7. தான் இன்னொரு திருமணம் செய்ய மனைவி தடை விதிக்கிறாள் என்று ஐயமெழுப்பும் ஓர் ஆணுக்கு உன் மனைவியை அடித்து விட்டு திருமணம் செய்து கொள் என ஆலோசனை வழங்கும் ஹதீஸ்கள் இருக்கின்றன.

  8. கணவன் அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பது பொதுவில் வைத்தே பார்க்க வேண்டும் .கணவன் மனைவியை அடிக்கும் உரிமையும் அதுபோன்றதே ஏனெனில் உங்களில் ஆணுக்கும் இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்

  9. உங்களில் ஆணுக்கும் இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் கீழே உள்ள வசனத்தை புரிந்து ஆண்களையும் பெண்களையும் பொதுவாக வைத்து பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் பெண்களும் நான்கு ஆண்களை திருமணம் செய்து ஒரே சமய்த்தில் கணவராக வைத்து கொள்ளலாம். அதற்கு மேல் வேண்டும் என்றால் ஒருவரை திருமண விலக்கு செய்து இன்னொருவரை மணந்து கொள்ளலாம். இஸ்லாம ஆண்களையும் பெண்களையும் சம்மாக நடத்தும் மார்க்கம். பெண்ணடிமை என்பதே இஸ்லாத்தில் கிடையாது. அதற்கு இந்த வசனமே பொதுவாக வைத்து பார்த்தால் ஒரு மாபெரும் அத்தாட்சி.

    4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

  10. தான் இன்னொரு திருமணம் செய்ய மனைவி தடை விதிக்கிறாள் என்று ஐயமெழுப்பும் ஓர் ஆணுக்கு உன் மனைவியை அடித்து விட்டு திருமணம் செய்து கொள் என ஆலோசனை வழங்கும் ஹதீஸ்கள் இருக்கின்றன.
    எங்கு இருக்கின்றன? என்பது விடுபட்டுள்ளது.செங்கொடி அந்த ஹதித்கள் எந்த நூலில் உள்ளது ?

  11. ##இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ##

    இசுலாம் மட்டும்தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, பெண்களுக்கும் ஆன்மா இருக்கு என்று சொன்னது போன்ற பொய்ப் பிரச்சாரங்களைக்கண்டு செங்கொடி மயங்கிவிட்டீர்கள் என்று கருதுகிறேன். முகம்மதுவின் முதல் மனைவி சொத்துடைமையாளராக இருந்து பின்னர் என்னவாக மாறினார்? அபுசுப்யானின் மனைவி பெற்றிருந்த உரிமைகள், போன்றவற்றை இவர்கள் கூறும் வரலாறிலிருந்தே அறிந்து கொள்வீர்களானாலே போதும் இசுலாம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் உரிமைகளை பறித்து வீட்டுக்குள்ளே பூட்டிவைத்த கதையை அறிந்து கொள்ளலாம். மேலும் யூதர்களும் கிறத்தவர்களும் பெண்களுக்கு வழங்கி இருந்த வரலாறுகளை அறிந்து கொள்ள முயற்சியுங்க்ள. அப்பொழுது உங்களின் ‘இதில் பொருள் இல்லாமலும் இல்லை’ இந்த வரிகளின் உண்மை புரியும்.

  12. நண்பர் வால்பையன்(ஈரோடு அருண்) என்ன பாஸ் விவாதத்தில் தொடக்கத்தில் வந்துட்டு அப்புறம் போய்டீங்க?வாங்க பாஸ் உங்க பின்னூட்டங்கள் நகைச்சுவை இழையோடுவதாகவும் கருத்துள்ளதாகவும் இருக்கும்!
    ************************************************************************************
    ஹிதாயத்
    அண்ணா வணகங்க்னா நீங் ஒரு வசனதுக்குதான் பதில் சொல்லியிருக்கீன்க்னா மத்த வசனத்தகும் விளக்கம் கொடுக்க முடியுமா?

  13. இப்ராஹிம்,

    குறிப்பிட்ட அந்த ஹதீஸ் இருக்கிறதா இல்லையா என்று உங்கள் கொள்கை அண்ணன்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாமே. அப்படி ஒரு ஹதீஸ் இல்லை என்று நீங்கள் உறுதியாகக் கூறினால்; அப்படி ஒரு ஹதீஸ் இருந்தால் அதை எந்த முறையில் மீளாய்வுக்கு உட்படுத்துவீர்கள் என்பதையும் விளக்கினால், அதன் பிறகு எந்த நூலில் எந்த எண்ணில் இருக்கிறது என்பதை கூறுகிறேன்.

    அப்புறம் ஒரு குரல் உங்களுக்கு கேட்கிறதா?
    இப்ராஹிம் அண்ணாச்சி,

    விவாதப் பேச்சு என்னாச்சு?

  14. உண்மை எனும் பொய்யரே !பெண்களுக்கென்று பிரத்யோகமாக சொல்லப்பட்டதைத் தவிர மற்ற விசயங்களில் ஆண்களுக்கு சொல்லப்பட்டது பெண்களுக்கும் பொருந்தும்.பெண்கள் இரண்டு திருமணங்கள் செய்ய முடியாது என்பதும் செய்யக் கூடாது என்பதும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதால் இங்கு பலமணம் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
    சிறுநீர் கழிக்குமிடம் என்று பொதுவாக எழுதியிருந்தாலும் ஆண்களும் பெண்களும் அந்த இடத்தில் சிறுநீர்கழிக்க மாட்டார்கள்.ஆண்கள் மட்டுமே சிறுநீர் கழிப்பார்கள்.இது ஆண்கள் உணவு அருந்தும் இடம் என்று எழுதியிருந்தாலும் கூட அங்கெ பெண்களும் உணவு அருந்த தயங்க மாட்டார்கள்

  15. நந்தன் ///முகம்மதுவின் முதல் மனைவி சொத்துடைமையாளராக இருந்து பின்னர் என்னவாக மாறினார்? அபுசுப்யானின் மனைவி பெற்றிருந்த உரிமைகள், போன்றவற்றை இவர்கள் கூறும் வரலாறிலிருந்தே அறிந்து கொள்வீர்களானாலே போதும் இசுலாம் கொஞ்சம் கொஞ்சமாக பெண்களின் உரிமைகளை பறித்து வீட்டுக்குள்ளே பூட்டிவைத்த கதையை அறிந்து கொள்ளலாம்///
    கதிஜா[ரலி] அவர்கட்கு அவரது தந்தைக்கு வேறு வாரிசுகள் இல்லாததால் கிடைத்த சொத்து .
    அபுசுப்யான்[ரலி] அவர்கள் மனைவிக்கு என்ன உரிமைகள் இருந்தது?
    யூதர்களும் கிறிஸ்தவர்களும் பெண்களுக்கு வழங்கிய வரலாற்றில் ஒன்றை சொல்லலாமே
    நந்தன் ,ஆயிஷா [ரலி] அவர்களை பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு நபி [ஸல்]]அவர்கள் கூறினார்கள் .உடன் ஆயிஷா[ரலி] அவர்கள் நான் இப்போது மாதவிடாயில் இருக்கிறேன் என்று பதில் அளிக்கிறார்கள்.அது உன் கையில் இல்லை எடுத்து வா என்கிறார்கள். குரான் வாசிக்க அனுமதிக்கிறார்கள்.பெருநாள் தொழுகை திடலுக்கு ,சந்தோசமான அந்நாளில் ,இயற்கையின் பொருட்டு பெண்ணினம் வருந்தக் கூடாது என்னும் நோக்கத்துடன் அத்திடலுக்கு மற்றவர்களைப் போல் புத்தாடைகள் அணிந்து தொழுகை தவிர மற்ற நிகழ்ச்சிகளில்மாதவிடாய் பெண்களும் கலந்து கொள்ள அழைக்குமாறு அறிவிப்பு செய்கிறார்கள் .மாதவிடாய் ஒரு தீட்டு என்று கடந்த முப்பது ஆண்டுகள் முன்பு வரை இருந்த நடைமுறைகளை ஒழிக்க அப்போதே தனது மனைவியின் மாதவிடாய் காலத்தில் அவருடன் ஒன்றாக இருந்து உண்டு ஒரே இறைச்சியின் துண்டை தனது மனைவியை கடிக்க செய்து அதன் பின்னர் அதேஇடத்தில் தானும் கடித்து உண்டு மாதவிடாய் ஒரு பொருட்டல்ல என்பதை மக்களுக்கு தெளிவாக்கினார்கள்

  16. ///குறிப்பிட்ட அந்த ஹதீஸ் இருக்கிறதா இல்லையா என்று உங்கள் கொள்கை அண்ணன்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாமே. அப்படி ஒரு ஹதீஸ் இல்லை என்று நீங்கள் உறுதியாகக் கூறினால்; அப்படி ஒரு ஹதீஸ் இருந்தால் அதை எந்த முறையில் மீளாய்வுக்கு உட்படுத்துவீர்கள் என்பதையும் விளக்கினால், அதன் பிறகு எந்த நூலில் எந்த எண்ணில் இருக்கிறது என்பதை கூறுகிறேன்.//
    ஒரு மதத்துக்கு எதிராக செய்திகள் தரும் ஒருவர் அதற்கான ஆதாரங்களுடன் வெளியிடுவதே பண்பாடு .அவர் ஆதாரத்தை கொடுத்துவிட்டு விளக்கம் கேட்காமல் ஆதாரத்தை தந்தால் எந்த முறையில் மீளாய்வு செய்வீர்கள் என்பதையும் சொல்ல வேண்டும் என்றால் அதன் பெயர் விதண்டாவாதம் .நான் அறிவுஆயிந்த முறையில் விவாதிக்கிறேன் என்பது சவடால்..ஹதித்களை எந்த முறையில் மீளாய்வுக்கு உட்படுத்துவீர்கள் என்பது வம்புத்தனம்

  17. இப்ராஹிம்,

    வளைந்து, நெளிந்து தப்பிக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்ற உங்களிடம் இப்படி கேள்வி கேட்டுத்தான் விளக்கமளிக்க வேண்டியதிருக்கிறது. மற்றப்படி உங்கள் பண்பாடு குறித்து பலமுறை கண்டாகி விட்டது.

  18. கட்டுரையாளர் இஸ்லாத்தை குறை கூறுவதற்காக, தமக்கு தேவையான வரிகளை மட்டும் எடுத்துகொண்டு, மற்றவற்றை விட்டுவிட்டு – இந்த குறைகளை கூறியுள்ளார்.

    அறிவுள்ளவன் யாரும் சிந்தித்தாலும் இதுதான் சரியானது என்று விளங்கும் வண்ணம் குர்ஆன் தன வசனங்களை இன்றுவரை மெய்ப்பித்து வருகிறது..

    //ஓர் ஆணின் சாட்சிக்கு ஈடாக இரண்டு பெண்களின் சாட்சிகள் குரான் 2:282//

    குர்ஆனில் உள்ளது :
    2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் – அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

  19. இந்த வசனங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்? ஆணுக்கு நினைவூட்ட அவசியமில்லை அதுவே பெண்ணுக்கு நினைவூட்ட இன்னொருத்தி வேண்டும் என்பது என்ன விதமான பார்வை? ஆண் கிடைக்காத போது நான்கு பெண்களை அனுமதிப்பார்களா? பொருளாதார பங்களிப்பு செய்யும் பெண்களின் சாட்சி ஒரு சாட்சியாக ஏற்றுக் கொள்ளப்படுமா? எனபன போன்ற கேள்விகளெல்லாம் இவர்களுக்கு எழாதா?

  20. அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக…

    அடுத்ததாக செங்கொடி கூறும் வசனம் …

    4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

    ஒழுக்கமற்ற பெண்ணுக்கு என்ன தண்டனை அல்லது பெண்ணை எவ்வாறு அவள் தவறைப் புரிந்து திருந்திவாழச் செய்வது என்று மேல் சொன்ன வசனத்தை சொல்லிவிட்டு அதற்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்று குர் ஆன் தொடர்ந்து சொல்வதை மறந்து பேசுவதுதான் உங்கள் வழக்கமோ என்று சந்தேகமாக உள்ளது.

    4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் – நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.

    இந்த மிக சாதாரணமான யாரும் சொல்லிப் புரியவேண்டிய அவசியமில்லாத தொடர் வசனங்கள் இருக்கும் போது வசனத்தில் முன்பகுதியை விட்டுவிட்டு அதன் தொடர் வசனம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை விளக்குவதை தங்களுக்கு எதிராக இருப்பதால் செங்கொடி போன்றவர்கள் வேண்டுமென்றே விட்டு விட்டு உளறுவதாகவே தோன்றுகிறது. கணவன் மனைவி தலா ஒருவர் வீதம் மத்தியஸ்தர்களை ஏற்படுத்தி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சம உரிமை வழங்கிய நன்னெறி கொண்ட மார்க்கம் தான் இஸ்லாம். ஒவ்வொரு வசனத்தின் அல்லது நபிமொழி பற்றிய விளக்கத்தை எடுத்து அதன் உண்மை விளக்கம் என்ன என்று எடுத்துச்சொல்வது முஸ்லிமான எனக்கு கடமை. உங்கள் அனைவருக்கும் அதனை புரிந்து திருந்திவாழச் செய்வது உங்களையும் என்ன்னையும் படைத்த இறைவனின் செயலாகும். தவறான புரிதலை சரிசெய்வது எங்கள் வேலைதவிர விமர்சனங்களை அல்லது மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது நமது நோக்கமல்ல. இன்ஷா அல்லாஹ் இன்னும் விளக்கம் வரும்..

  21. /////வளைந்து, நெளிந்து தப்பிக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்ற உங்களிடம் இப்படி கேள்வி கேட்டுத்தான் விளக்கமளிக்க வேண்டியதிருக்கிறது///
    ஹதீதை கேட்டால் சொல்லுங்கள்.அது விடுத்து வளைவதும் நெளிவதும் யார் ?என்பதை கேட்ட ஹதீதை தராமல் வளைவதும் நெளிவதும் உங்களையே சேரும் .ஹதீதை எப்படி மீளாய்வு செய்வீர்கள் என்று கேட்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது/ஹதித் கலையின் வரைமுறை பற்றி பேச நீங்கள் யார் என்பது புரியவில்லை.அளிசினாவுக்கும் செங்கொடிக்கும் ஏற்றார்போல ஹதித்கள் சறுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

  22. ///ஆணுக்கு நினைவூட்ட அவசியமில்லை அதுவே பெண்ணுக்கு நினைவூட்ட இன்னொருத்தி வேண்டும் என்பது என்ன விதமான பார்வை?////
    உடலியல் ரீதியாகவும் மனவியல் ரீதியாகவும் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்ற உண்மையை மறைக்க நினைப்பது என்ன விதமான பார்வை ?

  23. உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெண் பலவீனமானவளாக இருப்பதாலேயே அவளுக்கு இரண்டு சாட்சி வேண்டும். பலே! இதுவல்லவோ சரியான பார்வை. ஆண்களிலேயே உடலியல் உளவியலில் பலமானவர்களாகவும், பலவீனர்களாகவும் இருக்கிறார்களே அவர்களுக்கு இரட்டைச் சாட்சி அமல் படுத்தப்படுகிறதா? நான்கு பெண்கள் சாட்சிக்கு அனுமதிக்கப்படுவார்களா? இந்த உண்மைகளை மறைப்பது என்ன விதமான பார்வை?

  24. நண்பர் ஹிதாயத்,

    நான் என்ன கேள்வி எழுப்பியிருக்கிறேனோ அதற்கு பதிலளிக்கலாமே

  25. பொய்யின் மறுவடிவமான இபரஹீமே, நான் என்ன பீ.ஜேவா பொய் பேசுவதற்கு.

    //பெண்கள் இரண்டு திருமணங்கள் செய்ய முடியாது என்பதும் செய்யக் கூடாது என்பதும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதால்//

    எந்த குரான் வசனம் அவ்வாறு சொல்கிறது. இட்டுகட்ட வேண்டாம். உங்கள் கதை படி பெண்கள் ஆண்களை போல நான்கு திருமணங்கள் செய்யலாம்.

    இஸ்லாத்தை விளக்க ஏன் சிறுநீர் கழிப்பிடத்தை உதாரணம் சொல்கிறீர். இனம் இனத்தோடத்தான் சேருமோ

    சிறுநீர் கழிப்பிடம் என்று இரண்டுக்கு மேல் அறை இருந்தால், ஆண், பெண் என்று வகைப்படுத்தி இருப்பார்கள். வெறும் சிறுநீர் கழிப்பிடம் என்று ஓர் அறை இருந்தால் தனியாக ஒரு ஆணோ அல்லது பெண்ணோ செல்வார்கள். இருவரும் செல்ல கூடிய இடம்.

    அந்த வசனத்தில் சிறுநீர் கழிப்பிடம் போல வகைப்படுத்தல் செய்யவில்லை என்று நீங்கள் சொன்ன ஆண் என்றால் பெண்ணுக்கும் பொருந்தும் வசனப்படி பார்த்தால் பெண்களும் ஆண்களை போல திருமணம் செய்யலாம்.

    இல்லாததை சொல்லும் பொய்யரே, எந்த இடத்தில் ஆண்கள் மட்டும் உணவ அருந்தாலாம் என்று இருக்கின்றது. ஒருவேளை டாஸ்மாகை சொல்கிறீர்களோ. அந்த மாதிரி தனியான உணவகம் இருப்பதற்கே வாய்ப்பில்லை. இருக்கின்றவற்றை உதாராணமாக காட்டுங்கள்.

  26. கணவன் தன் மனைவியை படுக்க கூப்பிட்டும் அவள் வர வில்லை அதனால் அவன் கோபமாக தூங்கி விட்டான் என்றால் அன்று பொழுது விடியும் வரை மலக்குகள் அவள் மீது சாபம் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் என்றும் இருக்கிறதுஇதன் உண்மையான கருத்து பெண் என்பவள் ஆண்களின் உடல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே படைக்க பட்ட ஜீவன்அதை அவள் சொந்த விருப்பு வெறுப்புகளை பாராட்டாமல் ஒரு இயந்திரம் போல செய்ய வேண்டும் என்பதே ஆகும்இது இஸ்லாத்தின் கருத்துக்கள் அல்ல நபிகளின் கொள்கையும் அல்ல அந்த கோணத்தில் சொல்லப்பட்ட விஷயங்களும் அல்ல என்று இஸ்லாமியர்களும் அவர்களின் விசுவாசிகளும் மறுக்கலாம்அப்படி அவர்கள் மறுப்பது உண்மை என்றால் ஒரு இஸ்லாமிய மத பெரியவர் தான் தொகுத்த நூலில் இதை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?அதை பல இஸ்லாமிய பெண்களை படிக்க வைத்து வருவதின் ரகசியம் என்ன?இதற்கெல்லாம் நிச்சயமாக உறுதியான பதில்களை அவர்களால் தர இயலாது என்றே நான் கருதுகிறேன் .

  27. தல்லாக் தல்லாக் கறிவேப்பிலை….
    இதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத்தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.
    இந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.ஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்
    சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது

  28. ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார். ‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்திற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.ஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும் எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.‘: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாதுஇவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது.

  29. ///வளைந்து, நெளிந்து தப்பிக்கும் கலையில் நிபுணத்துவம் பெற்ற உங்களிடம் இப்படி கேள்வி கேட்டுத்தான் விளக்கமளிக்க வேண்டியதிருக்கிறது///
    நீங்கள் இப்படி கேட்டீர்கள் .நானும் அப்படி பதில் சொல்லிவிட்டேன் ஆனால் தாங்கள் இன்னும் அந்த ஹதீதை சொல்லவில்லை

  30. நண்பர் செங்கொடிக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
    உங்களின் தவறான பதிவுக்கு ஒவ்வொரு வசனத்திற்கும் பதில் சொல்கிறேன். நீங்கள் எடுத்து வைத்துள்ள ஒவ்வொரு வசனத்தஇற்கும் பதில் சொல்கிறேன். பின்னர் அதில் ஏதேனும் கேள்வியிருந்தால் தொகுத்து அனுப்பவும். அதற்கும் இன்ஷா அல்லாஹ் விளக்கம் சொல்கிறேன்.

  31. //கற்புநெறிகள் என அனைத்தையும் உள்ளடக்கியது தான் ஆணாதிக்கம். இந்த வகையில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள். ஆனால் குடும்பத்தில் கணவனுக்கு கீழாக மனைவி இருப்பதையே ஆணாதிக்கம் என எண்ணிக் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியிருக்கிறது என்று பசப்புகிறார்கள். இஸ்லாத்தின் ஒட்டுமொத்த பார்வை பெண்ணை ஆணின் பதுமையாகவே பாவிக்கிறது. இதை விளக்க அதன் சில வசனங்களை வகை மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். // இந்தக் கட்டுரையில் சகோதரர் செங்கொடி எடுத்து வைத்த வசனம் இதற்கு மறுப்பு தெரிவித்ததை நேற்று விளக்கினோம். அதனை மீண்டும் ஒரு முறை சகோதரர் செங்கொடி கேட்டதற்காக பதிவு செய்கிறேன்.

    4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
    ஒழுக்கமற்ற பெண்ணுக்கு என்ன தண்டனை அல்லது பெண்ணை எவ்வாறு அவள் தவறைப் புரிந்து திருந்திவாழச் செய்வது என்று மேல் சொன்ன வசனத்தை சொல்லிவிட்டு அதற்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்று குர் ஆன் தொடர்ந்து சொல்வதை மறந்து பேசுவதுதான் உங்கள் வழக்கமோ என்று சந்தேகமாக உள்ளது.
    4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் – நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
    இந்த மிக சாதாரணமான யாரும் சொல்லிப் புரியவேண்டிய அவசியமில்லாத தொடர் வசனங்கள் இருக்கும் போது வசனத்தில் முன்பகுதியை விட்டுவிட்டு அதன் தொடர் வசனம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை விளக்குவதை தங்களுக்கு எதிராக இருப்பதால் செங்கொடி போன்றவர்கள் வேண்டுமென்றே விட்டு விட்டு உளறுவதாகவே தோன்றுகிறது. கணவன் மனைவி தலா ஒருவர் வீதம் மத்தியஸ்தர்களை ஏற்படுத்தி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சம உரிமை வழங்கிய நன்னெறி கொண்ட மார்க்கம் தான் இஸ்லாம். ஒவ்வொரு வசனத்தின் அல்லது நபிமொழி பற்றிய விளக்கத்தை எடுத்து அதன் உண்மை விளக்கம் என்ன என்று எடுத்துச்சொல்வது முஸ்லிமான எனக்கு கடமை. உங்கள் அனைவருக்கும் அதனை புரிந்து திருந்திவாழச் செய்வது உங்களையும் என்ன்னையும் படைத்த இறைவனின் செயலாகும். தவறான புரிதலை சரிசெய்வது எங்கள் வேலைதவிர விமர்சனங்களை அல்லது மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது நமது நோக்கமல்ல. இன்ஷா அல்லாஹ் இன்னும் விளக்கம் வரும்..

  32. 2:233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    மேலுள்ள குர் ஆன் வசனத்தை சகோதரர் செங்கொடி தனது பாணியில் முழுப்பூசணியை சோற்றில் மறைப்பது எவ்வாறு கடினமோ அவ்வாறு முயன்று தோற்றுப் போயுள்ளார்.

    குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். குரான் 2:233

    யார் விலை கொடுக்க வேண்டும், ஆணா அல்லது பெண்ணா??

    குர் ஆன் விளக்கம் : பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;

    ஆண் கொடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறது. இதில் எங்கே பெண்ணை விலைகொடுக்கச் சொல்கிறது. போகிறபோக்கில் நீங்களாக குர் ஆனை படிக்காமல் சுயவிளக்கம் சொல்லுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அது அனைவருக்கும் நல்லது. இன்ஷா அல்லாஹ் பதில் தொடரும்…

  33. 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

    //ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதில் சமூக வயமாகவும் அறிவியல் வயமாகவும் பெண்ணின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு குழந்தையிடன் எந்த உரிமையும் இல்லை. கணவன் மனைவி ஒன்றியிருக்கும் போது பிரச்சனைக்கு இடமில்லை, இங்கு அவர்களின் குழந்தையாக இருப்பது, அவர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பிரியும் நிலை வந்தால் ஆணின் உடமையாகி விடுகிறது. அதன் பிறகு அக்குழந்தை பால் குடிக்கும் பருவத்தில் இருந்தால் தாயிடம் பாலருந்துவதற்கு தகுந்த கூலியை வழங்கி விடுமாறு குரான் ஆணுக்கு உத்திரவிடுகிறது. இதையும் குரான் பெண்ணை பெருமைப்படுத்துவதாக சில மதவாதிகள் இறும்பூறெய்துகிறார்கள். ஆனால் இதை விட பெண்ணை, தாய்மையை வேறு யாரலும் கேவலப்படுத்திவிட முடியாது.

    இந்த வசனம் ஆண்களை அல்லாவின் பாதையிலிருந்து திசைதிருப்பும் அதாவது நரகத்தில் கொண்டு சேர்க்கும் பொருட்கள் சிலவற்றை பட்டியலிடுகிறது. அந்தப் பட்டியலில் பெண்ணும் இருக்கிறாள், ஆண் குழந்தையும் இருக்கிறது. அதேநேரம் ஆண்குழந்தையையும், பெண்களையும் பட்டியலில் வைத்துவிட்டு மனிதர்களுக்கு என்று பொதுவாக பசப்புகிறது குரான். தங்கம், வெள்ளி, கால்நடைகள் குதிரை போன்ற சொத்துகளின் ஈர்ப்பு ஆணை அல்லா கூறும் நேரான(!) வழியிலிருந்து திசை திருப்பி நரகத்தின் பக்கம் கொண்டு சேர்த்து விடுகிறது என்பது இந்த வசனத்தில் அல்லாவின் அங்கலாய்ப்பு. இந்த பட்டியலில் தான் பெண்களும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு தான் அல்லா பெண்களுக்கு அளிக்கும் மதிப்பு. இதை ஆணாதிக்கம் என்பதல்லாது வேறு என்னவாக மதிப்பிடுவது?//

    46 : 15 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.

    என்னவோ குர் ஆனில் தாய்மையை குறை கூறுவதாக எண்ணி செங்கொடி இறுமாப்புடன் எழுதுகிறார். ஆனால் குர் ஆனோ தாய்மையை எவ்வாறு சொல்கிறது.
    அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.

    இப்படிப்பட்ட தாய் இணைவைப்பவராக இருந்த போதும் அவரிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கான ஹதீஸ் ஒரு உதாரணம்.

    2620. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்.
    என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், ‘என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள்.

    இஸ்லாத்தினை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதே எங்கள் வழிமுறை; இதற்காக நீங்கள் கடினமாக வார்த்தைகளை கொண்டு திட்டினாலும் நாங்கள் பொறுமையை நம்மை படைத்த இறைவனிடம் கேட்போம். நீங்கள் திட்டுகிறோம் என்ற பதிவில் எங்களுக்கான நன்மையைச் சேர்க்கின்றீர்கள் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

  34. அய்யா வணக்கமுங்க!எனக்கு ஒரு சந்தேகம்!
    மனைவி தவறு செய்தால் அவளை (லேசாக) அடியுங்கள்.படுக்கையில் இருந்து விளக்கி வையுங்கள் என்று ஒரு வசனம் உள்ளது(அதே வரிகளில் நான் சொல்லவில்லை!ஆனால் அதே பொருளில் சொல்லப்பட்டுள்ளது).
    எனது சந்தேகம் இதே போல கணவன் தவறு செய்தால் அவரை (லேசாக) அடிக்கவோ படுக்கையில் இருந்து விளக்கி வைக்கவோ மனைவிக்கு ஏன் சொல்லப்படவில்லை?ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டமா?

  35. //உடலியல் ரீதியாகவும் மனவியல் ரீதியாகவும் ஆண்களைவிட பெண்கள் பலவீனமானவர்கள் என்ற உண்மையை மறைக்க நினைப்பது என்ன விதமான பார்வை ?//

    உடல் பலம் ரீதியாக பெண்கள் பலமீனவர்களாக இருக்கலாம். ஆனா, மன ரீதியாக பெண்களே பலமானவர்கள். ஆண்கள், பெண்களை காட்டிலும் மனரீதியாக ‘பலமற்றவர்கள்’.

  36. //இவைகள் குரானில் காணக் கிடைக்கும் வசனங்கள். இது போல் இன்னும் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. ஹதீஸ்களைத் தோண்டினாலோ மிக மட்டமாக, பெண்ணை ஓர் உயிரினமாகக் கூட மதிக்காத வண்ணம் இருக்கின்றன. ஆனால் அவைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள், இட்டுக் கட்டப்பட்டவைகள் எனும் குழப்பமான இருட்டுச் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.//
    அல்ஹம்துலில்லாஹ் … என்ன முரண்பாடு.. இவர் மேற்கோள் காட்டியவை அனைத்தும் இறைவசனங்கள் தான் ஹதீஸ்களை சொல்லவில்லை என்று விளக்கம் வேறு

    //கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237//

    இது ஹதீஸ் இல்லாமல் என்னவென்று சொல்வது ஆறாத தேடலில் அவர் தன்னை முழுமையாக தொலைத்ததற்கு இது ஒரு சிறு உதாரணம், மேலும் kundakka சில கேள்விகளை கேட்கிறார். அதற்கான பதில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுவோம். அதற்கு முன்பு kundakka தனது கேள்விகளை தொகுத்து மீண்டும் ஒருமுறை பதியவும் அல்லது எனது மின்னஞ்சலில் (as.hidayath@gmail.com) என்ற முகவரிக்கு அனுப்பவும் அதற்கான பதிலை இந்த இழையில் நாம் கொடுப்போம்.

    அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள்.
    அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள்.
    அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள்.
    அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.
    இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புஹாரி 5971

    பெண்மையின் மிகச் சிறந்ததாய் மனிதர்கள் நாம் ஒத்துக்கொள்வது தாய்மை அதற்கு இஸ்லாம் கூறும் கண்ணியம் வேறு எந்த சித்தாந்தத்திலும் இல்லை என்பது மேல் சொல்லப்பட்ட ஹதீஸ் போதுமானது.

    உலக நடைமுறையில் எந்த ஒரு செயலுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டால் மூன்று பரிசுகள் வழங்குவது சாதாரணமாக அனைவரும் அறிவோம். இஸ்லாம் மூன்று பரிசையும் பெண்ணான தாய்க்கு வழங்கிவிடுகிறது. பெண்மையை அதன் தாய்மையை தூய்மையாக புரியச் சொல்லும் வாழ்வியல் நெறி இஸ்லாம்.

    நம் அன்னைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகளை விளங்கி அதன் படி நடக்கும் நல்மக்களாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.

  37. உன் மொய் என்னும் பொய்யரே /////எந்த குரான் வசனம் அவ்வாறு சொல்கிறது. இட்டுகட்ட வேண்டாம். உங்கள் கதை படி பெண்கள் ஆண்களை போல நான்கு திருமணங்கள் செய்யலாம்.////
    ஹதித்கள் உள்ளன .மனைவிக்காக மதம் மாறும் கொள்கை காரர்கள் போல் இல்லாமல் மனைவி சொத்துக்களை மக்காவில் இழந்து வந்த முஹாஜிர்களுக்கு மதீனாவாசிகள் தங்களது உடமைகளை வழங்கினார்கள் .அடுத்து திருமணம் செய்ய வசதியற்ற அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்கள் தங்களது மனைவியரை விவாகரத்து செய்து முஹாஜிர்களுக்கு மணமுடித்து வைக்கின்றனர்.ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்ய அனுமதி இருக்குமானால் அவர்கள் விவாக ரத்து செய்திருக்க வேண்டிய அவசியமில்லை,.
    ////இருக்கின்றவற்றை உதாராணமாக காட்டுங்கள்.//////புரிந்து கொள்வதற்காக சொன்ன உதாரணங்களில் தவறு கண்டால் கீழ்காணும் உதாரணத்தை வைத்துக் கொள்ளுங்கள்
    பஸ்ஸில் ஆண்கள் என்று எழுதப்பட்ட சீட்களில் பெண்களும் அமர்ந்திருப்பார்கள்.ஆனால் கழிப்பிடங்களில் ஆண்கள் என்று எழுதிய இடங்களில் பெண்கள் நுழையமாட்டார்கள்.

  38. சீனு ////உடல் பலம் ரீதியாக பெண்கள் பலமீனவர்களாக இருக்கலாம். ஆனா, மன ரீதியாக பெண்களே பலமானவர்கள். ஆண்கள், பெண்களை காட்டிலும் மனரீதியாக ‘பலமற்றவர்கள்’./////
    ஆதாரமற்ற கருத்துக்கள் ஓரிரு குடும்பங்களில் வேண்டுமானால் அவ்வாறு இருக்கலாம் .பொதுவில் அவ்வாறு இருக்கமுடியாது

  39. kundakka கணவன் அழைத்து மனைவி மறுக்கக் கூடாது என்பது பொதுவில் வைத்தே பார்க்க வேண்டும் .கணவன் மனைவியை அடிக்கும் உரிமையும் அதுபோன்றதே ஏனெனில் உங்களில் ஆணுக்கும் இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்.
    .
    சவுதியில் கணவன்களை அடித்த பெண்கள் மீது வழக்குகள் 145 உள்ளதாக பெங்களூரிலிருந்து வெளியாகும் இஸ்லாமிக் வாய்ஸ் என்னும் ஆங்கில நாளிதழ் கூறுகிறது.

  40. சவுதியில் கணவன்களை அடித்த பெண்கள் மீது வழக்குகள் 145 உள்ளதாக பெங்களூரிலிருந்து வெளியாகும் இஸ்லாமிக் வாய்ஸ் என்னும் ஆங்கில நாளிதழ் கூறுகிறது.////…
    .
    .
    அய்யா நீங்க சொல்வது முன்னுக்கு பின் முரணாக உள்ளதே!முதலில் என்ன சொல்றீங்க?
    >>உங்களில் ஆணுக்கும் இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்<<<<
    .
    .
    சரி அப்படி பார்த்தா மனைவியை அடித்த கணவன் மீதான வழக்குகள் எத்தனை?நீங்கள் அரசு வகுக்கும் சட்டப்படியா வாழுரீங்க?இல்லை அல்லவா ஏனெனில் உங்களுக்கு கடவுள் வகுத்த சட்டம் உள்ளதாக சொல்றீங்க!சரி அப்படி பார்த்தா கணவன் மனைவியை அடிக்கலாம் என இறைவன் சொல்றாரு!அதே நேரம் ஆணுக்குன் உள்ள உரிமை பெண்ணுக்கும் உள்ளது எனவும் அவர் சொல்லுகிறார்!சரி அப்படி பாத்தா மனைவி கணவனி அடிப்பதும் உங்கள் வாதப்படி குரான் வாக்குப்படி சரிதானே?அதுக்கு எதுக்கு வழக்கு தொடுக்க வேண்டும்?இது என்ன நியாயம்!

  41. //திருமணம் செய்ய வசதியற்ற அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தவர்கள் தங்களது மனைவியரை விவாகரத்து செய்து முஹாஜிர்களுக்கு மணமுடித்து வைக்கின்றனர்.// இந்த அசிங்கத்தை கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் பெருமையாக சொல்லி கொண்டு திரிகிறாரே!

  42. நான் நாத்திகன் ///கணவன் தன் மனைவியை படுக்க கூப்பிட்டும் அவள் வர வில்லை அதனால் அவன் கோபமாக தூங்கி விட்டான் என்றால் அன்று பொழுது விடியும் வரை மலக்குகள் அவள் மீது சாபம் செய்து கொண்டே இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னார்கள் ////

    ///உண்மை என்றால் ஒரு இஸ்லாமிய மத பெரியவர் தான் தொகுத்த நூலில் இதை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன?அதை பல இஸ்லாமிய பெண்களை படிக்க வைத்து வருவதின் ரகசியம் என்ன?இதற்கெல்லாம் நிச்சயமாக உறுதியான பதில்களை அவர்களால் தர இயலாது என்றே நான் கருதுகிறேன் .///

    தனது மனைவி தான் கூப்பிட்டும் வரமறுக்கிறாள் ஆதலின் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று ஒரு கணவன் தொடர்ந்த வழக்கில் ,கணவன் மனைவி ஆகிய இவர்களும் ஒருவர் கூப்பிட்டு மற்றவர் மறுத்தால் அவர்கள் விவாகரத்து பெறலாம் என்று சமிபத்தில் ஒரு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.குரான் ஏனையோர் விசயத்திலும் நடைமுரையாகுவதை நான் நாத்திகன் கவனிக்க வேண்டும்..குர்ஆனில் ஆண்களுக்கு சொல்லப்பட்டாலும் பெண்கள் கூப்பிட்டு ஆண்கள் வரமறுத்தாலும் அவர்களுக்கும் வானவர்கள் சாபம் உண்டு.

  43. நான் நாத்திகன் ////சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது///

    அக்காலத்தில் போரில் கைதான பெண்கள் இருந்தார்கள் .அவர்களை சிறையில் வைக்க எவ்வித வசதி வாய்ப்புகளும் இல்லை .அந்நிலையில் அவர்களுக்கு உணவு உறைவிடம் ,உணர்வுகளுக்கு வடிகால் என்ற ரீதியில் அங்ஙனம் அனுமதிக்கப்பட்டார்கள்.பாவங்களுக்கு பரிகாரமாக அடிமை விடுதலையை,மற்றும் நன்மையான செயலாக அடிமை விடுதலையை இஸ்லாம் வற்புறுத்துகையில் ,பெண்களுக்கு வாழ்வு கிடைக்க பல வழிகள்,ஆதாரங்கள் உள்ள நிலையில் இஸ்லாத்தில் சட்டபூர்வமாக இப்போது பெண் அடிமைகளுடன் கூடி வாழ எவ்வித சட்டமும் இல்லை.

  44. நான் நாத்திகன் ///பண்டை நாட்களைப் போலவே இன்றும் எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.‘: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.////

    ஆதாரமற்ற அவதூரஆனா குற்றச்சாட்டுகள். நமது நாட்டிலும் எத்தனை பெண்களையும் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளமுடியும் .எத்தனை பெண்களுடனும் லிவ்விங் டூகேதராக வாழ முடியும் .அந்த பெண்களுக்கு எவ்வித சட்ட பாதுகாப்புகளும் கிடையாது. இஸ்லாத்தில் அடிமை பெண்களுக்கு அவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் உள்ளன.

  45. நண்பர் ஹிதாயத்,

    நீங்கள் கூறியிருக்கும் அத்தனைக்கும் “இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே” எனும் விவாதத்தில் விரிவாக பதில் கூறியிருக்கிறேன். செங்கொடி தளத்தின் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பின் கீழ் இருக்கிறது தரவிறக்கி படித்துப் பாருங்கள். அதற்கு மேற்பட்டு புதிதாக ஏதாவது உங்களால் விளக்கமளிக்கவோ, கேள்வியெழுப்பவோ முடியுமென்றால் கூறுங்கள். பிறகு னான் வருகிறேன்.

  46. அல்ஹம்துலில்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும்
    இறைவனின் மாபெரும் கருணையால் இஸ்லாத்தினை கொச்சைப்படுத்த எண்ணிய சகோதரர் செங்கொடியின் முயற்சி தோற்றுப்போயுள்ளார். அதில் நாம் ச்ந்தோசம் அடையவில்லை; இன்ஷா அல்லாஹ் இவரும் இஸ்லத்தினை ஏற்று ந்டைமுறைப்படுத்த நம் அனைவரையும் படைத்த இறைவனிடம் பிரார்த்திதவனாக. சகோதரர் செங்கொடி நீங்கள் கூறும் கட்டுரையின் இணைப்பை தருவிக்கவும். நான் அங்கு சென்று தேடுவதைவிட இணைப்பை தருவது சுலபமான ஒன்று காத்திருக்கிறேன் உங்கள் கட்டுரையின் இணைப்புக்காக….

  47. @S.Ibrahim, //இஸ்லாத்தில் சட்டபூர்வமாக இப்போது பெண் அடிமைகளுடன் கூடி வாழ எவ்வித சட்டமும் இல்லை.//
    எங்கே? உங்களது கற்ப‌னை உலகிலா?

  48. //அல்ஹம்துலில்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும்
    இறைவனின் மாபெரும் கருணையால் இஸ்லாத்தினை கொச்சைப்படுத்த எண்ணிய சகோதரர் செங்கொடியின் முயற்சி தோற்றுப்போயுள்ளார். அதில் நாம் ச்ந்தோசம் அடையவில்லை; இன்ஷா அல்லாஹ் இவரும் இஸ்லத்தினை ஏற்று ந்டைமுறைப்படுத்த நம் அனைவரையும் படைத்த இறைவனிடம் பிரார்த்திதவனாக//

    @செங்கொடி,

    வாழ்த்துக்கள் 😉

  49. நண்பர் ஹிதாயத்,

    உங்களுக்குள் இப்படி சிரிப்பு நடிகரா? இத்தளத்திலேயே அதற்கான இணைப்பு இருக்கிறது என்று தெளிவாக எழுதியிருந்தும் தேடும் வேலைபோல் பொன்மாற்று(பம்மாத்து) ஏன்? இதோ நீங்கள் கேட்ட இணைப்பை நேரடியாகவே தந்திருக்கிறேன். பார்க்கலாம் நீங்கள் தக்குப்பிடிக்கிறீர்களா ஓடிப் போகிறீர்களா என்று.

    இங்கே சொடுக்குங்கள்

  50. தச்சஆளே ,இல்லை உண்மை உலகில், இஸ்லாமியர்கள் நான்கு மனைவியருடனும் அடிமை பெண்களுடனும் வாழுகிறார்கள் என்பது உங்களது கற்பனையே

  51. அல்ஹம்துலில்லாஹ் இப்போது தான் சவூதியில் இருக்கும் நண்பர் செங்கொடி சிரிக்கிறார் போலத்தெரிகிறது. பல நாட்களாய் சிரிக்கமுடியாமல் போனவரின் சொந்தக் கருத்து கேட்க நாம் இங்கு பதியவில்லை. மாறாக இஸ்லாத்தினை மற்றவருக்கு உரிய முறையில் எடுத்துச்சொல்வது மட்டும் தான். இணைப்பைத்தராமல் ziddu.com ல் ஒரு இணைப்பை பதிவு செய்து தருவதே போதுமான சான்று. நீங்கள் உண்மையாளராக இருந்தால் செங்கொடி.worpress.com/archive.. என இணைத்திருக்க முடியும். எதற்காக ziddu.com ஐ இங்கு கொடுக்க வேண்டும். அது விவாதிக்க அல்ல. ”வயிறு பத்திக்கிட்டு எரியுதுன்னா,பைத்துப் பத்தா நூறு ன்னு” சொல்வதுபோலவே செங்கொடி எழுதியுள்ளார். மேலும் செங்கொடியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொன்ன பின்பு புளித்துப்போன பழைய மாவை அரைக்க எண்ணியுள்ளார் என்பது தெளிவு.

  52. ARIVUKETTA MUNDAM IBRAHIM
    QURANIN PADI ADIMAIGALUDAN SEX PANNI VAZHNDHADHU SARIYA?THAVARA?
    IDHUDHAN QUESTION OK.MUHAMMADIN VALIPPU VAARTHAIGALAI NAMBADHEERGAL!

  53. அறி வாளி தமிழன் ,சைக்கிளில் இரண்டு பேர் செல்லுவது சரியா?தவறா?

  54. அரை வாளி தமிழன் ,குறைஷிகள் தந்த வலிகளை பூ என ஊதித்தள்ளி சத்திய கருத்துக்களை மக்கள் மத்தியில் வைத்து அதை இன்று இருநூறு கோடி மக்கள் பின்பற்றும் நிலையில் அதை விமர்சிக்க நேரடியாக வராமலும் கள்ள பெயரிலும் பலர் அநாகரீகமாக விமர்சித்தாலும் முஹம்மது நபி [ஸல்] அவர்களின் சொல்,செயல் அங்கீகாரங்களே,உலகில் வாழ உன்னத வழி.அதை நீங்கள் வலிப்பு என்று எத்தனை வலைப்பூக்களில் எங்கள் உள்ளங்களுக்கு வலிப்பு கொடுக்க நினைத்தாலும் முடியாது .உங்களுக்கு சலிப்பு தான் மிஞ்சும்.

  55. சீனு ,////@செங்கொடி,
    வாழ்த்துக்கள் ////
    செங்கொடியின் முன்னாள் சீடர் இப்போது முஸ்லிமாகிவிட்டார்.

  56. ஹிதாயத்,

    கொஞ்சம் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் நான் எழுதியிருப்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் செங்கொடி தளத்திலுள்ள விவாதத்தை குறிப்பிட்டேன். நேரடியாக சுட்டி தரவேண்டும் என்றீர்கள். நேரடியாக சுட்டி தரவேண்டும் என்றீர்கள் தந்தேன். இப்போது அது ஏன் ஸித்துவில் இருக்கிறது வேர்ட்பிரஸ் ஆர்கேவில் இருக்கவேண்டும் என்கிறீர்கள். அடேயப்பா புல்லரிக்க வைக்கிறது உங்கள் திறன். ஐயா, நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் தகுந்த முறையில் பதிலளித்த விவாதம் ஒன்று மின்னூல் கோப்பாக ஆக்கப்பட்டு ஸித்து தளவித்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. முதலில் அதை தரவிறக்கி படித்துப்பார்த்து முடிந்தால் அதற்கான பதிலைக் கூறுங்கள் அல்லது சத்தமில்லாமல் காணாமல் போய்விடுங்கள் அது தான் வழமையாய் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. மாறாக படம் காட்ட வேண்டாம்.

  57. செங்கொடி
    நன்கு புரிந்த பின்புதான் கேட்டேன். இந்த விவாத தொகுப்பை நீங்கள் ziddu.com பதிவு செய்துள்ளீர்கள். எனது கணினியில் உங்களது தொகுப்பை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. அதனால் தான் நேரடி இணைப்பை கேட்டேன். நீங்கள் அங்கு பதிவுப் புத்தகமாய் வைத்திருப்பது pop up restriction உள்ள எனது கணினியில் பதிவிறக்கம் செய்யமுடியாது. நேரடி சுட்டியில்லாத உங்களின் பதிவுப் புத்தகம் நண்பரின் மூலம் தருவித்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் ஆக்கப்பூர்வமாய் பதில்கள் இருக்கும். படம்போடுவது அல்லது காண்பிப்பது எனது வேலையில்லை. உங்களைப் போன்ற மிரட்டியவர்கள் எத்தனையோ பேரை நான் நன்கு அறிவேன். நம்மை படைத்த ஒரு இறைவன் உங்களையும் என்னையும் நேர்வழிகாட்ட போதுமானவன்.

  58. ஹிதாயத்,

    உங்களால் தரவிறக்க முடியவில்லை என்றால் தெரியப்படுத்தியிருக்கலாமே. நான் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்திருப்பேன். அதை விட்டுவிட்டு \\\இஸ்லாத்தினை கொச்சைப்படுத்த எண்ணிய சகோதரர் செங்கொடியின் முயற்சி தோற்றுப்போயுள்ளார்/// \\\ பல நாட்களாய் சிரிக்கமுடியாமல் போனவரின் சொந்தக் கருத்து கேட்க நாம் இங்கு பதியவில்லை. மாறாக இஸ்லாத்தினை மற்றவருக்கு உரிய முறையில் எடுத்துச்சொல்வது மட்டும் தான். இணைப்பைத்தராமல் ziddu.com ல் ஒரு இணைப்பை பதிவு செய்து தருவதே போதுமான சான்று. நீங்கள் உண்மையாளராக இருந்தால் செங்கொடி.worpress.com/archive.. என இணைத்திருக்க முடியும். எதற்காக ziddu.com ஐ இங்கு கொடுக்க வேண்டும். அது விவாதிக்க அல்ல. ”வயிறு பத்திக்கிட்டு எரியுதுன்னா,பைத்துப் பத்தா நூறு ன்னு” சொல்வதுபோலவே செங்கொடி எழுதியுள்ளார். மேலும் செங்கொடியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொன்ன பின்பு புளித்துப்போன பழைய மாவை அரைக்க எண்ணியுள்ளார் என்பது தெளிவு./// என்றெல்லாம் எழுதியது ஏன்? நான் என்ன வாதங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்பதை அறியாமலேயே ஏதேதோ எழுதுவதற்குப் பெயர் தான் படம் காட்டுதல் என்பது. நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானலும் பார்த்தவராக இருந்துவிட்டுப் போங்கள், நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள் என்பதே நான் எடுத்துக் கொள்ள விரும்புவது. அதைச் செய்யுங்கள்,காத்திருக்கிறேன்.

  59. DEAR HIDAAYATH!
    NAANUM UNGALA MAADHIRI PESINAVANDHAN!
    KEDU KETTA ISLAMIA VARALAARUGALAI PADIKKUM VARAI!
    QURANIN VULARARGALAI PURIYUM VARAI!
    PLEASE READ FULLLY QURAN WITH YOUR OWN MIND.

  60. @TAMILAN,
    If muslims do that, pulla kuttia padikka vechi munneriduvanga.
    Unlike that, now they are fighting for reservations.

    All my muslim bros, please read curriculum text books instead of reading useless koran. Vaalkai la urupada paarunga. Illenna ippadiye thaan irukka poreenga. Savuharyam eppadinnu paathukonga. 🙂

  61. டும்..டும்..டும்..டும்……

    இதனால் சகலமானவர்களுக்கு அறிவிக்கப்படுவது என்னவென்றால், பலபேரை பார்த்தவராக அறியப்படுகிற, எதிராளி என்ன கூறுகிறான் என்பதை அறியுமுன்பே தோற்றுவிடக் கூடியவன் என்பதை முன்னறிந்து கூறும்திறன் வாய்ந்த, தீர்க்கதரிசி திரு ஹிதாயத் அவர்களை கடந்த பத்து நாட்களாக காணவில்லை. கண்டுபிடித்து அழைத்து வருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்குவதற்கு பாண்டிய மன்னன் ஆலோசித்திக் கொண்டிருக்கிறான் என்பதை அறியத் தருகிறோம்.

    டும்..டும்..டும்..டும்……

  62. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
    இன்ஷா அல்லாஹ் சில நாட்களாக உடல் நலமின்மை மற்றும் அதனால் ஏற்பட்ட பணிமுடக்கம் சீர்செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் அதுவரை காத்திருக்கவும் மேலும் உங்கள் விவாதத்தினை pdf அல்லாத MS Word ல் தரவும் அதில் பதில் அளிக்க வேண்டியவற்றை தெரிவு செய்து இங்கு மறுமொழியிட வசதியாக இருக்கும்.

    டும்..டும்..டும்..டும்……
    இதனால் சகலமானவர்களுக்கு அறிவிக்கப்படுவது என்னவென்றால், பலபேரை ஏமாற்றியதாக எண்ணிய செங்கொடி ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளார் //சவூதியில் இருக்கும் நண்பர் செங்கொடி // இன்னும் சவூதியில் தான் பணிபுரிகிறார். ஒரு மணிநேரம் என்ற பதிவுகள் அனைத்தும் பொய். டும்… டும் …. டும்….

  63. இஸ்ரேல்காரன் கைப்பறப்பட்ட காசாப்பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்களின் உணர்வூகளுக்கு வழி காட்டிவிடப் போகிறான் சத்தம் போட்டுச் சொல்லாதீங்க இபுறாகீம்.
    நமது வரலாறு குரான் கதீஸ் இதிலெல்லாம் சேர்ந்துள்ள குப்பைகளை இல்லமல் ஆக்கினால் ஏன்நாம் கேவலப்படப் போகின்றௌம் அதை செய்வோம்.
    இந்த இஸ்லாமிய எதிh;ப்பாளா;கள் எல்லாம் பைபிலில் இருந்து எடுத்த கருத்தைக் கொண்டா போட்டுத் தாக்கிறாங்க. நம்ம கதீஸ் குரான்ல இருந்தல்லவோ எடுத்து தாக்கிறாங்க. உண்மையான குரானைத் தேடும் வரை சும்மா பேத்துவதை விட்டு வைக்கலாமே.
    எல்லா முஸ்லிமும் உங்களை மாதிரி என்று மற்றவர்கள் நினைத்துவிடப் போகின்றார்கள்.

  64. ௃஧ளரு஭ளதளபப் ௃஧ளறுப்புக௅஭ ஆண் கயனித்துக் ௃களள்஭ ௄யண்டும், வீட்டுப் ௃஧ளறுப்புக௅஭ ௃஧ண்கயனித்துக் ௃களள்஭ ௄யண்டும் ஋னும் பிரிவி௅஦௄ன ஆணளதிக்க அடிப்஧௅ையி஬ள஦து தளன். இ௅த இஸ்஬ளம் நட்டுநல்஬ அ௅஦த்து நதங்களும் இப்஧டித்தளன் கூறுகின்஫஦. இஸ்஬ளத்திற்கு முன்பிருந்௄த உ஬கின் நி௅஬
    இது தளன். இன்௅஫ன உ஬கிலும் இஸ்஬ளம் அல்஬ளதயர்களின் நி௅஬யும் இதுதளன். இதன் ௃஧ளருள் உ஬கில் இருந்துயந்திருக்கும் ஆணளதிக்கக் கட்டுநள஦ங்க஭ள஦ ஆண் ௃஧ளருளீட்டுயதற்கும், ௃஧ண் வீட்டிற்கும் ஋னும் பிரிவி௅஦௅ன இஸ்஬ளமும் அப்஧டி௄ன தக்க௅யக்கி஫து. ஆ஦ளல் ௃நய்னளக யளழ்வில் ஆணின் ஧ங்களிப்௅஧விை ௃஧ண்ணின் ஧ங்களிப்௄஧ த௅஬னளனது. அந்த ய௅கயில் ௃஧ண்ணிற்குத்தளன் முதல் நதிப்பு தபப்஧ட்டிருக்க ௄யண்டும். நனித கு஬ம் ௃தளைங்கின ஆதிக் கள஬ங்களில் அந்த நதிப்பு இனல்஧ளக௄ய ௃஧ண்ணிைம் இருந்தது. சமூகத்௅த, குடும்஧த்௅த யழி஥ைத்து஧ய஭ளக ௃஧ண்௄ண இருந்தளள். ௃஧ண் த௅஬௅நயில் சமூகம் இருந்த௄஧ளது ஆ௅ண அது எடுக்கவில்௅஬, சநநளக௄ய ஥ைத்தப்஧ட்ைளன். நள஫ளக ௃஧ண் வீழ்த்தப்஧ட்டு ஆண் த௅஬௅ந௄னற்஫௄஧ளது ௃஧ண் எடுக்கப்஧ட்ைளள். ஋ல்஬ள யழிகளிலும் ஆணுக்கு கீ௄ம ௃஧ண்௅ண இருத்தி ௅யப்஧தற்களக சமூகக் கட்டுப்஧ளடுகளும், சட்ைங்களும் இனற்஫ப்஧ட்ை஦. இ௅தயும் இன்னும் ஧஬யற்௅஫யும் தக்க௅யப்஧தற்களக ஌ற்஧ட்ை௅யகள் தளன் நதங்கள். அந்த நதங்களின் யழியில் நின்று தளன் இஸ்஬ளமும் ஆணளதிக்கத்௅தப் ௄஧ணுகி஫து. இஸ்஬ளம் ௃஧ண்ணின் நி௅஬ குறித்து ௄஧சும் யச஦ங்க௅஭ இந்த அடிப்஧௅ையிலிருந்து தளன் ஧ளர்க்க ௄யண்டும்.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

    சகோதரர் செங்கொடியிடம் நாம் விவாத பதிப்பை MS word ல் கேட்டு ஒருவாரமாகியும் இன்னும் தூங்குகிறார். அவரது பதிவு ziddu.com தரவிரக்கம் செய்து அதனை இங்கு பதிய முடியவில்லை. அதனை நாம் சிரமமாக செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் காத்திருக்கிறேன். உண்மையை சொல்வதற்கு. இவரது கேள்விகளை மறுபதிவு செய்ய வசதியாக அவர் மைக்ரோசாஃப்ட் வேர்ட்ல் தரவும். இன்ஷா அல்லாஹ் விரிவாக பதில் தருவோம்.

    முதல் கேள்வி இவருடையது இரண்டு ஆண் சாட்சிக்குப் பதிலாக நான்கு பெண்களை சாட்சியாக கொள்ளுமா? – இஸ்லாம் இதனை அனுமதிக்கிறது எந்த இடத்தில் அதனை ஏற்கும் என்பதற்கு நாம் முதலில் பதிந்த பதிலில் பதில் இருக்கிறது.

    //எல்லா இடங்களிலும் சாட்சிகள் என்று குறிப்பிடப் பட்டிருக்கிறதேத்; தவிர, ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இரண்டு பேரும் என்று குறிப்பிடப்படவில்லை. மேற்படி வசனத்திலிருந்து பெண்களையும் தனி நபர் சாட்சியாக ஏற்கலாம் என்பது நமக்குத் தெளிவாவதுடன், எல்லா விவகாரங்களிலும் சாட்சி சொல்ல ஆண் என்றால் ஒருவரும் பெண் என்றால் இருவரும் சாட்சியாக இருக்க வேண்டும் என்போரின் வாதமும் அடிபட்டு போய்விடுகின்றது.
    அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி:
    இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான நோன்பினை நோற்பதற்காக பிறை பார்த்தல் சம்பந்தமாக ஒரு பெண்மணியின் சாட்சி போதுமானது என்பதை அனைத்து மார்க்க அறிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். சில மார்க்க அறிஞர்கள் நோன்பினை நோற்பதற்காக பிறை பார்க்கும்போது ஒரு சாட்சியும், நோன்பு நோற்று முடிந்து, பெருநாள் கொண்டாடுவதற்காக பிறை பார்க்கும்போது இரண்டு சாட்சியும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். மேற்படி செய்தியிலும் சாட்சி பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளதேத் தவிர, ஆண் சாட்சி அல்லது பெண் சாட்சி என்று குறிபிடப்படவில்லை.
    மேலும் சில விவாகரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். உதாரணத்திற்கு பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளான – இறந்து போன பெண் மையங்களை குளிப்பாட்டுவது – போன்ற விரகாரங்களில் பெண்களின் சாட்சியம் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும். மேற்படி விவகாரங்களில் ஆண்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.//

    இஸ்லாம் அவரவருக்கு உரிய உரிமையை வழங்கியிருக்கிறது. ஒரு பெண் சாட்சியும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் அந்த பதிலில் இருக்கிறது. எனவே உங்கள் கேள்வியே தவறானது.

  65. நண்பர் ஹிதாயத்,

    தாமதத்திற்கு வருந்துகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் வந்து விடுகிறேன்.

  66. நண்பர் ஹிதாயத்,

    நீங்கள் கோரியதை வேர்ட் வடிவில் தருவதில் சில தயக்கங்கள் இருக்கின்றன. நீங்கள் எந்தப் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதை குறிப்பிட்டு ஓரிரு வார்த்தைகளை தட்ட்ச்சினால் போதுமானது. அல்லது அதன் சுருக்கத்தை நீங்கள் தட்டச்சு செய்து கொள்ளலாம் அல்லது ஸ்க்ரீன் ஷாட்டாக பதிவு செய்யலாம்.

    இந்தப் பதிவில் பின்னூட்டமாக விவாதிப்பதை விட தனி விவாதமாக விவாதப்பகுதி என்று தனியாக பகுதியை ஏற்படுத்தி அதில் விவாதிக்கலாம் என்றும் கருதுகிறேன். அது விரிவாகவும், தெளிவாகவும் நாம் விவாதிப்பதற்கு வழி ஏற்படும். உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

  67. நண்பர் ஹிதாயத்,

    மிக நீண்ட நாட்களாகி விட்டன. என்ன பதில் கூறப் போகிறீர்கள்? இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?

  68. உங்களது விளக்கம் நகைச்சுவை யாக இருக்கிறது. இஸ்லாத்தை யாரோ சொல்லி தந்த வற்றை அரை குறைய விளங்கிக் கொண்டு இருக்கிறீர். சரியான விளக்கம் வேண்டு மாயின் குர் ஆணை எடுத்து முழுவதுமாக படியுங்கள். உங்களுக்கு சரியான தெளிவு வரும். நீர் யோசித்து பாருங்கள் மற்ற மதத்திட்கு யாருமே மதம் மாறாதவர்கள் ஏன் இஸ்லாத்தில் மட்டும் இணைகிறார்கள்.. என்று. இந்த பக்கம் மற்றவர்களுக்கு எந்த பலனும் அளிக்காது என நான் எண்ணுகிறேன்.

  69. 2:233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்; எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது; (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை; ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்; அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    #மேற்கண்ட வசனம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது #

  70. 3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

    ##மேற்கண்ட வசனம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது #

  71. 1.பொதுவாகவே பெண்கள் பலகீனமானவர்கள், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு, பிரசவம் போன்ற காரணங்களால் பலகீனப்படும் பெண்கள் மறப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம், சாட்சி சொல்பவர் எளிதில் வரக்கூடியவர்களாக இருக்கவேண்டும், மேற்கண்ட காரணங்களால் பெண்களால் சில நேரங்களில் வரமுடியாமல் போகும்.

    ஆணும் பெண்ணும் சமமல்ல என்பதற்கு பல விஷயங்கள் சாட்சியாக இருக்கிறது

  72. 2. மனைவி என்பவள் இஸ்லாத்தை பொறுத்தவரை கணவனுக்கு கட்டுப்பட்டவள், ஆனால் அடிமை இல்லை, மனைவியை அடிப்பது குழந்தையை அடிப்பது போல் தானே தவிர தாக்குவது இல்லை, முகத்தில் அடித்தால் எளிதில் மற்றவருக்கு பிரச்சனை விளங்கும், அதன் மூலம் மற்றவர்களுக்கு பிரச்சனை தெரிய வாய்ப்புண்டு , மேலும் காயம்படாமல் அடிப்பது என்பது மென்மையாக அடிப்பதே, இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவை இல்லாத பொது அடிக்கவேண்டிய அவசியம் என்ன?

  73. 3. ஆண் என்பவன் எளிதில் உணர்வுபெறக்கூடியவன், அதனால் தவறு செய்யாமல் இருப்பதற்கு கணவன் அழைக்கும் போது மனைவி வரவேண்டும் ஆனால் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் போனால் கட்டாயப்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை. இரண்டாவது திருமணத்திற்கு பல கட்டுப்பாடுகள் உண்டு அதன் விளக்கம் தெரியாமல் அதை பற்றி பேசுவது அறிவீனம்.

  74. 4. தலாக் கொடுத்தபின் கணவன் மனைவி உறவு அற்று போகிறது, அதனால் மனைவிக்கு செய்யவேண்டிய கடமையை கணவன் செய்யவேண்டியது அவசியம் இல்லை, ஆனால் அந்தப்பெண் பாலூட்டினால் அவளுக்கு தேவையானதை கொடுக்கவேண்டும், அது பாலூட்டுவதற்கான கூலி அல்ல, அந்த பெண்ணுக்கான செலவு , இங்கே கூலி என்று சொல்லப்படவில்லை , அறிவுடன் விவாதிக்கவும்

  75. 5. வசனத்தில் பெண்கள் என்றுதான் உள்ளது, மனைவி என்று இல்லை, இது சரியான வாதம் தான், மனிதன் பெண்ணுக்காக எதையும் செய்யக்கூடியனவான இருக்கிறான் அதைத்தான் குரான் சுட்டிக்காட்டுகிறது, கொஞ்சம் கூட யோசிக்காமல் எதற்க்காக இப்படி அறிவிலிப்போல் கட்டுரை எழுதிக்கிறீரோ

  76. 6. இஸ்லாம் எங்கேயும் ஆணாதிக்கத்தை பறைசாற்றவில்லை, ஒரு குடும்பம் என்று இருந்தால் தலைவன் வேண்டும், நிறுவனம் என்று இருந்தால் தலைவன் வேண்டும், தலைவன் எல்லோரையும் அனுசரித்து ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பாக கொண்டு சென்றால் தான் குடும்பமோ நிறுவனமோ உறுப்புடும், இல்லையென்றால் நாசமாகப்போகும், இஸ்லாம் சொல்வது உறுப்புடுவதற்க்கான வழி , நீங்கள் சொல்வதோ நாசமாகப்போவதற்கான வழி. இதில் முக்கியம் குடும்ப தலைவன் சரியானவனாக இருக்கவேண்டும் , பெண்ணுக்கு சொத்துரிமை , மஹர் கொடுத்து மணம் முடிப்பது என்று இஸ்லாம் என்றுமே பெருமைப்படுத்துகிறது.

  77. ஒரு முட்டாள்தனமான வலைப்பக்கம்.. பதிவிடுபவனும் ஒரு முட்டாள், பதில் பதிவை இடுபவனும் ஒரு முட்டாள். இதை வாசிக்கும் போது ஒரு கணம் நான் என்னையே முட்டாளாக உணர்ந்துவிட்டேன். அவ்வளவு அற்புத வலைப்பக்கம். ஒரு விடயம் பற்றிய தெளிவு இல்லாவிடில், வாயையும் கையையும் அடக்கி ஒரு முடம் போல அமைதியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டுமே ஒழிய குறை அறிவுடன் குதிப்பதை தவிர்ந்துக் கொள்ள வேண்டும். சகோதரரே.. இஸ்லாம் பற்றியும் ஓரிறைவன் அல்லாஹுத்தஆலா பற்றியும், இறைதூதர் முஹம்மத் (ஸல்) பற்றியும் உங்களுக்கு அறவே அறிவு போதவில்லை. தயவுசெய்து கீழைத்தேய பார்வையை தவிர்த்து, உள்ளதை உள்ளபடியே, உண்மையை உண்மையாகவே கூற்றுக்கள் முயற்சியுங்கள். அல்லாஹ்வின் அருள் உங்களை அடைய வாழ்த்துக்கள்

  78. யாருப்பா இந்த கௌரிக்கு பின்னால நிக்குறது?

    முழு அறிவு இருக்கின்ற,
    இஸ்லாம் பற்றி முழுதும் அறிந்த,
    உள்ளதை உள்ளபடி கூறுகின்ற நீங்கள், இந்த பதிவில் என்ன முட்டாள் தனமாக எழுதப்பட்டிருக்கிறது என்று அறியத் தரலாமே, ஒருவரைப்பற்றி ஒன்றும் அறியாமலேயே, குறை அறிவு என்று குதிப்பதற்கு அந்த \\அல்லாஹுத்தஆலா// உங்களுக்கு கற்றுத் தந்ததாகவே இருக்கட்டும்.

    உங்களால் முடிந்தால் இந்தக் கட்டுரையில் என்ன குறை இருக்கிறது என்று சுட்டிக் காட்டுங்கள். நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்ற உங்கள் அறிவில் கொஞ்சம் நானும் பருகிக் கொள்கிறேன்.

    ஓடிவிட மாட்டீர்களே.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்