அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 2

அல்லாவின் ஆற்றல்களாக ஆண்டவனின் சக்தியாக குரான் குறிப்பிடுபவற்றை எல்லாம் குரானிலிருந்து நீக்கிவிட்டால் குரான் பாதியாக குறைந்துவிடும். அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது. அவற்றிலிருந்து சிலவற்றை தருகிறேன், சோர்வடையவேண்டாம்.

அவனைத்தவிர வேறு இறைவனில்லை, அவனுக்குத் தூக்கமில்லை, சோர்வில்லை, மரணமில்லை, அவன் உண்பதில்லை, மறப்பதில்லை, யாரும், எதுவும் அல்லாவுக்கு நிகரில்லை, அவனுக்கு உதவியாளன் யாரும் தேவையில்லை, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் இல்லை, எங்கும் இருப்பவன், இறைவன் அமர்ந்திருக்கும் இருக்கை வானம் பூமியைவிட பெரியது, மன்னிப்பவன், கருணையுள்ளவன், யாவரையும் மிகைத்தவன், அனைவரும் அனைத்தும் அடிமை அவன் ஒருவனே ஆண்டை, அவனே அறிவை வழங்குகிறான், அவனே அறிவீனத்தையும் வழங்குகிறான், குழந்தையை தருவதும் அதை இல்லாததாக்குவதும் அவனே, செல்வத்தை வழங்குவதும், ஏழ்மையை தருவதும் அவனே, நோயும் அதன் நிவாரணமும் அவன் புறத்திலிருந்தே, அவன் எதையும் படைக்க நாடி ஆகுக என்றால் உடனே அது ஆகிவிடுகிறது, அவன் ஒருவனே படைத்தவன் ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை. இன்னும் ஏராளம் ஏராளம்.

இப்படி அனைத்து சக்திகளையும் ஒருங்கே வைத்திருப்பதால் தான் பூமியில் மனிதரை படைப்பதற்காக மொத்த பிரபஞ்சத்தையும் படைத்து அதில் வசதிகளுடன் பூமியை அமைத்து மனிதனை வாழச்செய்ய முடிந்திருக்கிறது. இப்படி ஆண்டவன் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பதன் நோக்கம் என்ன? மனிதர்கள் அவனை வணங்கவேண்டும் என்பதே. ஆக முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் மனிதனுக்காக, மனிதன் தன்னை படைத்தவனை வணங்குவதற்க்காக.

குரானில் அனேக இடங்களில் தன் சக்தியையும் பெருமைகளையும் கூறிவிட்டு அவர்கள் (அதாவது மனிதர்கள்) சிந்திக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்புகிறது. இந்த இடத்தில் நாமும் ஒரு கேள்வியை எழுப்புவோம். மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?

அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது. எனவே முஸ்லீம்களே (இதையே தலைவிதியாக பார்ப்பனீய மதமும், தேவனின் தீர்க்கதரிசனமாக கிருஸ்துவ மதமும் இன்னும் ஏதேதோ வகைகளில் அனைத்து மதங்களும் சொல்கின்றன எனவே ஏனைய மத நம்பிக்கையுள்ளவர்களையும் கூட) உங்களிடம் பகுத்து உணரும் அறிவு இருப்பதாக, சிந்திக்கும் திறனிருப்பதாக, வளர்ச்சியடையும் மூளை வாய்க்கப்பட்ட பிறப்பாக நீங்கள் இருப்பதாக ஏற்கிறீர்களா? ஆம் என்றால் எழுதிவைக்கப்பட்ட அந்த ஏட்டில் இருக்கும் படியே அனைத்தும் நடைபெறும் என்பதற்கான உங்கள் விளக்கம் என்ன?

முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். மனிதர்களை நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று குரானில் அல்லா கேள்வி எழுப்புகிறான் என்றால் அதன் பொருள் மனிதனுக்கு சிந்திக்கும் திறனை அல்லா வழங்கியிருக்கிறான் என்பது தான். அதாவது தனக்கிருக்கும் மொத்த ஆற்றலிலிருந்து மனிதனுக்கு சுயமான சிந்தனையை வழங்கியிருப்பதாக கூறும் அல்லா, தன்னிடமிருக்கும் ஏட்டில் உள்ளபடியே எல்லாம் நடக்கும் என முரண்படுவதேன்? ஆனால் மனிதர்களுக்கு (அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும்) சிந்திக்கும் திறன் இருப்பதை நாம் சந்தேகிக்க முடியாது ஏனென்றால் நேரடியாக நாம் அதை பார்க்கிறோம் உணர்கிறோம். என்றால் அந்த ஏட்டில் இருப்பதை மீறி எதுவும் நடக்கமுடியாது என்பது சாத்தியமில்லையல்லவா? எனவே பதிவுசெய்யப்பட்ட அந்த ஏட்டில் உடைப்பு இருப்பது உறுதியாகிறது, அதுவும் முதல் மனிதனை அல்லா உண்டாக்கியது முதலே. இது ஆண்டவனின் முழுமையான ஆற்றலின் முதல் இடர்பாடு. அடுத்ததொரு இடர்பாடும் இருக்கிறது, அது என்ன?

அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு? தற்போது அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் ஆண்டவன் இருக்கிறான், ஆனால் இந்த பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன் என்கிருந்து படைத்தான் என்பதே நம் கேள்வி. ஒரு பொருளைப் படைப்பதற்கான முக்கியமான நிபந்தனையே படைப்பவன் படைக்கப்படும் பொருளுக்கு வெளியில் இருந்தாக வேண்டும் என்பது. இங்கு அல்லாவின் படைப்புத்திறனில் கேள்விகள் எழுப்பப்படவில்லை, வாதத்திற்காக பிரபஞ்சத்தை படைக்கும் திறன் அல்லாவுக்கு இருந்ததாகவே கொள்வோம். கேள்வியெல்லாம் எங்கிருந்து படைத்தான் என்பது தான். இங்கு அல்லா இருக்கும் இடத்தின் முழுமையான முகவரியை தாருங்கள் எனக்கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அர்ஷ் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது, ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் இருப்பதாக ஒரு கருதல். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்குமுன் எங்கு இருந்திருக்க முடியும் என்பதுதான் கேள்வியின் மையம். மாறாக நம்பர் 24 படைத்தோன் வீதி, நியூரோபிக்டஸ், ஆண்ரோமீடா. என முகவரி கேட்பதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அல்லா மட்டும் தான் சுயம்பு, அல்லா இருக்கும் இடமும் சுயம்புவல்லவே. அல்லா எப்போதும் இருக்கிறான் என்றால் அவனிருக்கும் இடமும் என்றுதான் கொள்ள முடியும். இடமில்லாத பொருள் இருக்கமுடியாது. ஆக தன்னைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை எனும் அல்லாவின் கூற்றில் உடைப்பு இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. அல்லாவின் ஆற்றலிலுள்ள முக்கியமான இடர்பாடாகும் இது.

இந்த இரண்டு இடர்பாடுகளும் இல்லாமல் அல்லாவின் ஆற்றல் செயல்படமுடியாது. அல்லாவின் ஐயத்திற்கிடமற்ற ஆற்றலில் நம்பிக்கை கொண்டவர்களே, உங்களின் நம்பிக்கைக்குள்ளிருந்து இவைகளுக்கொரு பதில் கூறுமாறு உங்களை அழைக்கிறேன். தொடர்ந்து நாம் இந்த கற்பனைக்கோட்டையை சுற்றிவருவோம்.

67 thoughts on “அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்.

  1. நீங்கள் எங்கிருந்து இவைகளை பிரித்தெடுத்தீர்கள் என்று தெரியவில்லை.மனிதனுக்கு சிந்த்திக்கும் திறன் இல்லை என்று குரானில் எங்கும் சொல்லப்படவில்லை இதை சிந்திக்கும் திறன் உள்ள அனைவரும் நன்றாக விளங்கி கொள்வர்.ஒருவனை அல்லாஹ் படைக்கும் போதே அவன் சொர்க்க வாசியா இல்லை நரக வாசியா என்பதை தீர்மானிக்கிறான் இருந்தாலும் அவன் மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் சிந்திக்கும் திறனை கொண்டு அவன் எது நல்லது கெட்டது என்பதை சிந்தித்து தான் எங்கே செல்ல வேண்டும் என்பதை அவனே தேர்ந்தெடுத்து கொள்ளட்டும் என்று சொல்கிறான்.இதை உங்கள் பதிவு தாங்கி வர மறந்து விட்டதே இதில் என்ன ஒரு பக்க சார்பு ஒரு பதிவனுக்கு.

    அவனின் வேதம் இஸ்லாம் அவனின் பேச்சு குரான் இப்படியிருக்கும் போது தன்னை பற்றி சொல்லாமல் வேறு எவரையும் குரானில் சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கிருக்காது.மனிதர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரே சமயத்தில் பல்வேறு கடவுள்கள் இருக்கும் மதங்களில் ஒரே கடவுள் ஒரே தெரிவு என்பது தான் உண்மையும் யதார்த்தமும்.சிந்திக்கும் ஆற்றல் மிகுந்த மனிதா ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தை அம்மா அப்ப பிடிக்கவில்லை வேறு ஒருவர் தான் அம்மா அப்பா என்றால் அது என்றும் உண்மையாகாது.

    நீங்கள் மேலோட்டமாய் பார்க்காமல் விரிவாய் பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன்.எதையும் ஆராயும் போது அதன் பலம் பலவீனங்களையும் சேர்த்து தான் ஆராயவேண்டும் என்பதை தாங்கள் புரிந்திராமல் தங்கள் சிந்தனையை திணிக்க விரும்புவதென்பது தவறான கருத்தை பதிவதாகும்.

  2. //அந்த அளவுக்கு ஆண்டவனின் பெருமைகளை மிக விரிவாக விளக்குகிறது//
    அது பெருமைகள் இல்லை, அது அல்லாஹ்வின் தனித்தன்மைகள். அந்த தனித்தன்மைகள் இந்த உலகத்தில் எவரிடமும் இல்லை. எவரிடமும் இல்லாத ஒரு பண்பை தன்னிடம் இருப்பதாக சொல்வது ஒன்றும் பெருமை அல்ல.

    தெரியாத ஒன்றை (இஸ்லாம்) தெரிந்த மாதிரி காட்டி கொண்டு எழுத கிளம்பிய உம்மை என்ன சொல்வது.

    //அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். //

    //ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை.//

    “அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.” (6:59) ]

    அய்யா, இது ஓர் சிம்பிள் லாஜிக் தான்.

    ஒரு சிறு இலையே அல்லாஹ்வின் கட்டளைப்படி உதிரும் பொழுது, உம்முடைய சிந்தனை ஓட்டத்தை அல்லாஹ்வால் அறிய முடியாத என்ன?

    ஒரு உதாரணம்

    அந்த ஏட்டில் செங்கொடி இந்த கட்டுரை முடிவில் இஸ்லாத்தை ஏற்று கொள்வார் என்று “”எழுதி இருந்தால்”” அதுதான் நடக்கும். அதற்கு அல்லாஹ் சொல்லும் “”அந்த சிந்தனை”” தான் காரணமாக இருக்கலாம்.

    //அல்லாவைத்தவிர ஏனைய அனைத்தும் படைக்கப்பட்டவை என குரானில் அனேக இடங்களில் அல்லா குறிப்பிடுகிறான். அப்படி என்றால் எதுவும் படைக்கப்படாத காலம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா. அந்த காலத்தில் அதாவது அல்லாவைத்தவிர வேறு எதுவுமே இல்லாத காலத்தில் அல்லா இருந்தது எங்கு?//

    “அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார்.

    “”எவரும் அறியார்”” சென்கொடிக்கு இரண்டு கொம்பா முளைத்து இருக்கிறது.

    //இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே//

    கற்பனைக்கோட்டையின் விரிசல் வழியே வேவு பார்க்காதீர் அய்யா. உண்மைகோட்டையின் வாசல் வழியே வந்து பாரும், இஸ்லாத்தின் முழு வடிவை. முழுதும் அறிந்து கொண்டு எழுதும்.

  3. All,

    Please do not waste every body’s time by discussing this All relegions are man-made and there is nothing but NATURE and humans were worshipping as GOD.

    Common man

  4. தன்னைப் பற்றி ஒருவர் பிறந்தது முதல் மரணிக்கும் வரை உள்ள வாழ்க்கையை சிந்தித்தாலே அல்லாஹ்வின் ஆற்றல் அனைத்தும் விளங்கிவிடும். மனிதனை ஆராச்சி செய்தாலே போதும். வேறு எதுவும் நெருங்க முடியாது. திருக்குர்ஆன், கண்ணை மூடிக்கொண்டு ஒருபோதும் பின்பற்றச் சொல்லவே இல்லை. இறைப் படைப்புகளான மனிதன், விலங்குகள், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்கள். உயிறற்ற வானம், பூமி, கடல் இன்னும் பலவற்றையும் பார்த்து சிந்தித்துதான் முடிவு எடுக்கச் சொல்கிறது. தமிழில் அழகான விரிவான விளக்கத்திற்கு http://www.onlinepj.com விஜயம் செய்து உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

  5. மனிதனுக்கு சுயமான சிந்தனையை அல்லாஹ் அளித்தபடியினால்தான், மனிதன் சிந்தித்துச் செயலாற்றுகிறான்.

    மனிதன் சிந்திப்பது பலவிதம். அதற்கும் பூரண சுதந்திரம் மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிந்தித்தபடியால்தான் செங்கொடியும் மாக்ஸிசத்தில் மூழ்கி, நெறி தவறியிருக்கிறார். அதேபோல் பலதரப்பட்ட மனிதர்களும் பலவிதமான சிந்தனைகளுக்கு உட்பட்டு பல கொள்கைகள், பல மதங்கள் என உருவாகிவிட்டன, இவ்வையகத்தில்!

    இதற்குக் காரணம், இறைவன் மனிதனுக்கு வழங்கிய சுயமான சிந்தனையை முறைப்படி சிந்தித்து செயலாற்றாமல், தான் தோன்றித்தனமான முறையில் சிந்தித்ததின் விளைவு!

    ஒருவன் தனது சிந்தனையை, தான் தோன்றித்தனமான சிந்தனையாக மாற்றிக்கொள்ளும்போது, அவனின் வாழ்வு நேரியதாக இருக்காது!

    எத்தனையோ இறைதூதர்கள் நேரிய வெற்றிக்காண வாழ்வுமுறையை மக்கள்முன் போதித்தும், பெரும்பாலோர் தங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சுய சிந்தனையின்படி சிந்திக்கவில்லை. செயலாற்றவில்லை.

    சிலர், இறையியல்ரீதியாக தங்களது சுய சிந்தனையைப் பாவித்து, செயலாற்றி, பின் தன் மனம்போனபோக்கில் தடம்புரண்டவர்களும் இருக்கிறார்கள்.

    சிந்தித்துச் செயலாற்றி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களுமிருக்கிறார்கள்.

    இவையெல்லாம் அல்லாஹ், மனிதனுக்கு அளித்த சுயமாக சிந்திக்கும் ஆற்றல்.

    மனிதன், தனக்களிக்கப்பட்ட சுய சிந்தனையை இறைவன் விரும்பும் வழியில் சிந்திக்கலாம். சிந்திக்காமலும் இருக்கலாம்.

    ஆக, பூரண சுய சிந்தனைச் சுதந்திரம் மனிதனுக்கிருக்கிறது.

    இஸ்லாத்திலுள்ள விதிக்கோட்பாட்டை, நீட்டி எழுதி உளறியிருக்கிறார்! இப்படி எழுதுவாரென்று நாம் எதிர்பார்த்ததுதான்!

    இப்படிப்பட்ட கேள்விகளை அடுக்கியபடி எமக்கும் கேட்டுக்கொண்டே போகலாம். வானத்தை நோக்கி எமது பார்வையை சிறிது நேரத்திற்கு பார்த்துக்கொண்டிருந்தால், எமது கண்கள் களைத்துப்போய், எமது பார்வைகள் மீண்டும் தம்மையே வந்தடையும். இதுபோல்தான் இவர் கேட்ட கேள்விகளும்!

    இவர் கேட்ட உளறல் வினாக்கள், நமக்கு ஏற்கனவே கேட்டுக் கேட்டு புளித்துப் போன செய்திகள்தான். புதிதாக ஒன்றும் இல்லை.

    செங்கொடியின் விதிக்கோட்பாட்டு வினாக்க‌ளை நிச்ச‌ய‌ம் ப‌குத்த‌றிவாள‌ர்க‌ள் (??) ந‌ம்மிட‌ம் கேட்பார்க‌ள், இன்னும் சில‌ நாள்க‌ளில் ந‌ட‌க்கும் சினேகித‌மான‌ விவாத‌த்தின்போது!

    நபித்தோழர்கள் விதியைப்பற்றி ஒருமுறை வாக்குவாதப்பட்டிருந்தபோது, முஹம்மது (ஸல்) அவர்கள் அத்தோழர்களை அணுகி, எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதித்துக்கொள்ளுங்கள். விதியைப்பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம். விதியை விவாதித்ததினால்தான், முன்வாழ்ந்த சமூகத்தினர் அழிந்து போனார்கள் என்று அறிவுரை பகன்றார்கள்.

    செங்கொடியார் அவர்களே! அல்குர்ஆனிலுள்ள விதிபற்றிய வசனங்களை ஆராய்ந்து பாருங்கள், தங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சுய அறிவின்படி!

    அல்லாஹ்வும் இறுதித்தூதரும் எப்படி விதியை சிந்தித்து அணுகவேண்டும் என்று பணித்தார்களோ அம்முறைப்படி சிந்தித்தால், அதில் முரண் இருக்காது! இறைநம்பிக்கையாளர்களுக்குத் தெளிவு ஏற்படும்.

    இறைவன் வழங்கிய சுய சிந்தனையை உதாசீனம் செய்தால், மனப்பிரள்மை, முரண்பாடுகள், தெளிவற்ற தன்மைகளைத்தான் நாம் எதிர்பார்க்கலாம்.

    அப்படி சிந்தித்தபடியால்தான், செங்கொடியார் கொண்ட கொள்கை, கற்பனைக் கோட்டையாக அகிலத்தார் முன்னிலையில் சுக்குநூறாகியது. சுக்குநூறான கற்பனைக் கோட்டையைச் சுற்றி வருவதற்குக்கூட யாரும் விரும்புவதில்லை.

    அல்லாஹ்வின் ஆற்றலில் இடர்ப்பாடு என்று உளறுவது, அவனின் ஆற்றலை, வல்லமையை தன் சுய அறிவின்மூலம் இறையியல் கூறும் விதத்தில் சிந்தனையாற்றாமல் இருப்பதனால்தான்!

    உண்மைகள் எப்போதும் உறங்காது!

  6. இவர்களுக்கு எப்படி கோபம் வருகிறது எப்படி கொதித்தெழுகிறார்கள்.
    மதவாதிகளை உங்கள் எழுத்து சுட்டுப்பொசுக்கட்டும் தோழர்.

  7. ஹலோ சர்வதேசவாதிகள்(???)

    செங்கொடியின் அறியாமையால் எழுதும் கிறுக்கல்களைக் கண்டு, ஈங்கு யாரும் கோபப்படவோ கொதிப்படைவதோ இல்லை.

    அவரின் அறியாமையை ‍- இல்லையில்லை காழ்ப்புணர்ச்சியை களைய முற்படுகின்றனர். அவ்வளவுதான்!

    செங்கொடியின் கிறுக்கல்கள், எந்த மதவாதிகளையும் சுட்டுப்பொசுக்காது! கானல் நீர்தான்!

    மதவாதிகளை சுட்டுப்பொசுக்க நினைப்பவர்கள், சுட்டுப்பொசுங்கிய பிற்போக்கான சடத்துவ சிந்தனைகளை, சிறிது சீர்தூக்கிப் பார்த்தல் நலம்!

  8. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

    அன்புச்சகோதரர்களுக்கு :

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

    முஸ்லிம் பெயர் தாங்கியாக இவ்வளவு காலமும் இருந்து விட்டு செங்கொடியாக மாறிப்போன சல்மான் ருஷ்டி, தஸ்லீமா இன்னும் இது போன்ற ஏராளமான நிராகரிப்போரின் பட்டியலில் சேர்ந்து விட்ட இந்த கட்டுரையாளரின் கேள்விக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட இன்றுவரை நிராகரிப்போர் பட்டியலில் உள்ள சகோதரர்களுக்கு சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும் பணியை செய்தால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

    ”நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்;!. (அல்குர்ஆன் : 6:68)

    ”அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒரு போதும் நேர் வழி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் : 18:57)

    நமது சான்றுகளில் வீண் தர்க்கம் செய்வோர் தமக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்பதை (அப்போது) அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 42:35)

    அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க இயலாத நாள் வருவதற்கு முன் உங்கள் இறைவனின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள்! அந்நாளில் உங்களுக்கு எந்தப்புகலிடமும் இல்லை. உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை. (அல்குர்ஆன் : 42:47)

    என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்’ என்று அவர்(முஹம்மத்) கூறுவதை (அறிவோம்). அவர்களை அலட்சியப்டுத்துவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் : 43:89)

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  9. நண்பர் செங்கொடி அவர்களுக்கு

    இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே என்ற தலைப்பை விட‌
    செங்கொடி: மூளை கசிந்ததன் வழியே! என்ற இந்த தலைப்பு மிக பொருத்தமாக இருந்திருக்கும்.

    நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் (ம.க.இ.க) சமநிலைச்சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்
    என்று கூறுவது கற்ப்பனைக்கோட்டையல்லவா?

    /மனிதர்களை சிந்திக்கச்சொல்லும் குரான் அதாவது அல்லா, மனிதனுக்கு சுயமான சிந்தனை இருப்பதாக ஏற்கிறதா?
    அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும்/

    இது இஸ்லாத்தில் விதி சம்பந்தமானது.
    நபித்தோழர்கள் விதியைப்பற்றி ஒருமுறை வாக்குவாதப்பட்டிருந்தபோது, முஹம்மது (ஸல்) அவர்கள் அத்தோழர்களை அணுகி, எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதித்துக்கொள்ளுங்கள். விதியைப்பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம். விதியை விவாதித்ததினால்தான், முன்வாழ்ந்த சமூகத்தினர் அழிந்து போனார்கள் என்று அறிவுரை பகன்றார்கள்.

    எங்களுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதால்தான் நாங்கள் செங்கொடியின் மூளை கசிவதை புரிந்துகொள்கிறோம்.

    முஸ்லிம் பெயர் தாங்கியாக இவ்வளவு காலமும் இருந்து விட்டு செங்கொடியாக மாறிப்போன சல்மான் ருஷ்டி, தஸ்லீமா இன்னும் இது போன்ற ஏராளமான நிராகரிப்போரின் பட்டியலில் சேர்ந்து விட்ட இந்த கட்டுரையாளரின் கேள்விக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட இன்றுவரை நிராகரிப்போர் பட்டியலில் உள்ள சகோதரர்களுக்கு சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும் பணியை செய்தால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

    உண்மையிலும் உண்மை.

    /என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார்./

    எழுதுவது என்பது உங்களைப் பொருத்தவரையில் வெட்டிவேலையாக இருக்கலாம். 2 அல்லது 3 நாட்களில் விவாதிப்பதே சிறந்தது.
    அல்லது விவாதத்தில் தோற்று விடுவோம் என்ற பயமா?
    1988 ஆம் ஆண்டு ‘கேடயம்’ இதழ் வெளியிட்ட ஒரு வெளியீட்டின் தலைப்பு என்ன தெரியுமா? ‘முட்டிப் பார்த்து விட்டு எட்டி ஓடும் புதிய கலாச்சாரம்’. 1988 ஆம் ஆண்டு ‘கேடயம்’ இதழிடம் ம.க.இ.க.வின் ‘புதிய ஜனநாயகம்’ ஏடு, ‘விவாதத்திற்குத் தயாரா?’ என்று வீரவசனம் பேசி ‘முட்டி’ பார்த்துவிட்டு, ‘எட்டி’ ஒடினர். அப்பொழுது ‘கேடயம்’ வெளியிட்ட நூலுக்கு இவ்வாறு தலைப்பிட்டதைப் பார்க்கும்பொழுது 1988லிருந்து இன்றுவரை இப்படித்தான் இவர்களது விவாத நேர்மை மாறாமல் இருக்கிறது என்பதைத்தான் இது உணர்த்துகின்றது.

    எனவே தாங்களோ அல்லது தங்கள் இயக்கம் சார்பாகவோ அதில் கலந்து விவாதிக்க விரும்பினால் ஏற்பாடு செய்து தருவேன்.
    vijidon lathif- kadayanallur

  10. விதியை எவ்வாறு எப்படி நம்ப வேண்டும் என்று குரானில் கூறியிருப்பதை தாங்கள் படித்துவிட்டு எழுதுவது சிறந்தது.

  11. ////////////ஹலோ சர்வதேசவாதிகள்(???)

    செங்கொடியின் அறியாமையால் எழுதும் கிறுக்கல்களைக் கண்டு, ஈங்கு யாரும் கோபப்படவோ கொதிப்படைவதோ இல்லை.

    அவரின் அறியாமையை ‍- இல்லையில்லை காழ்ப்புணர்ச்சியை களைய முற்படுகின்றனர். அவ்வளவுதான்!

    செங்கொடியின் கிறுக்கல்கள், எந்த மதவாதிகளையும் சுட்டுப்பொசுக்காது! கானல் நீர்தான்!

    மதவாதிகளை சுட்டுப்பொசுக்க நினைப்பவர்கள், சுட்டுப்பொசுங்கிய பிற்போக்கான சடத்துவ சிந்தனைகளை, சிறிது சீர்தூக்கிப் பார்த்தல் நலம்!/////////

    உங்களுடைய பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் தான் வினவில் பார்த்தோமே. http://www.vinavu.com/2009/08/24/ahmadiyya/ எந்த மதவாதிக்கும் சகிப்புத்தன்மை கிடையாது அல்லாவை பற்றி பேசினால் சகிக்க முடியாமல் எல்லோரையும் ஒழித்துக்கட்டிவிடுவீர்கள்.

  12. நண்பர் அப்துல் லத்தீப்,

    “எழுதுவது என்பது உங்களைப் பொருத்தவரையில் வெட்டிவேலையாக இருக்கலாம். 2 அல்லது 3 நாட்களில் விவாதிப்பதே சிறந்தது.
    அல்லது விவாதத்தில் தோற்று விடுவோம் என்ற பயமா?”

    ஆச்சரியம் தான் பலமுறை மத ரீதியாகவும், சமூக ரீதியாகவும் என் விளக்கங்களை எதிர்கொள்ள முடியாமல், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிப்போன நீங்களா இப்படி எழுதுவது? ஆச்சரியம் தான்.

    எழுத்து விவாதத்திற்கு நான் எப்போதும் தயார் எனக்கூறியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று சென்னையில் நடக்கும் விவாதத்தில் பங்கேற்க முடியாத தூரத்தில் இருக்கிறேன் (இது உங்களுக்கும் தெரியும்) இரண்டு, நேரடி விவாதத்தைவிட எழுத்து விவாதம் சிறந்தது. ஏனென்றால், மாறுபட்ட தளத்திலுள்ளவர்களின் விவாதத்தில் சரிபார்க்கும் அவகாசம் கிடைக்காது. மகரிப்பிற்கு முன் சுன்னத் உண்டா? இல்லையா? என்பது போன்ற அறிவுபூர்வமான(!) விவாதத்தில் நேரடி விவாதம் சிறந்தது. இருவருமே ஒரே தளத்தில் நின்று விவாதிப்பார்கள் என்பதினால். நானும் நீங்கள் கூறியவரும் விவாதித்தால்; அவர் புகாரியில் இப்படி ஒரு ஹதீஸ் இருக்கிறது என்பார், அப்படி இருக்கிறதா என நான் சரிபார்க்கவேண்டும். நான் மூலதனத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டினால் அப்படி இருக்கிறதா என்று அவர் சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் இருவரும் வேறு வேறு தளம். இதற்கு நேரடி விவாதத்தில் அவகாசம் கிடையாது என்பதால் தான் எழுத்து விவாதத்திற்கு எப்போதும் தயார் என்றேன். ஆனாலும் நேரடி விவாதத்தில் எனக்கு பயம் ஒன்றுமில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள், பெரிய தாடிவைத்தவர்களையெல்லாம் விவாதத்திற்கு அழைத்துவருகிறேன் என்று முன்பு நீங்கள் கூறிய போதெல்லாம் தயங்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது நீங்கள் நான் பயப்படுகிறேன் என்று கூறுவது உங்கள் இயலாமையை நீங்களே சொரிந்துவிட்டுக்கொள்வதன் வெளிப்பாடு. முடிந்தால் கட்டுரைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முயலுங்கள், ஓடிவிட வேண்டாம் இன்னும் இருக்கிறது.

    தோழமையுடன்
    செங்கொடி

  13. எழுத்தில்தான் விவாதம் என்று அடித்துச் சொல்லுகிறார். ஆனாலும், நேரடி விவாதத்திற்கும் பயம் இல்லையாம். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. சென்னையிலிருந்து தூர இடத்தில் இருப்பதால், நேரடி விவாதத்திற்கு தயாரில்லை.

    விவாதம் என்றால் இப்படித்தான் என்று எமக்கு வியாக்கியானம் வேறு!
    புகாரியில் ஒரு ஹதீஸ், மஃரிபுக்குமுன் சுன்னத் என்று ஓர் இழுப்பு!

    தாடிக்காரர்கள் எல்லாரையும் கூட்டி வருகிறேன் என்று யாரும் சொல்லியிருக்கமாட்டார்கள். ஏனய்யா உமக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி! பெரியார், லெனின், கால்மார்க்ஸ் போன்றோர் தாடி வைக்கவில்லையா?

    இவர் கட்டுரையில் கிறுக்குவாராம். முடிந்தால் பதில் எழுதட்டாம். ஓடவேண்டாமாம்!

    இவர் கிறுக்கிய இலட்சணம் யாவரும் தெரிந்ததுதான்!

    இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்களில், உள்ள இட்டுக்கட்டிய கருத்துக்கள் ஏராளமாக உலாவி வருகின்றன. இவைகளில் உள்ளவையை அப்படியே கொப்பி பண்ணி, தாராளமாக எழுதுங்கோ!

    மாக்சிச மதவாதிகள் இப்படித்தான் எழுதுவார்கள் என்று எல்லாரும் தெரிந்ததுதான்!

  14. சகிப்புத்தன்மையைப்பற்றி எமக்கு பாடம் நடத்துவதை தவிரும்! பல தசாப்தங்களாக மாக்சிச மதவாதிகளிடம், மக்கள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

    நல்லவேளை, மாக்சிச மதவாதிகள் இந்தியாவில் பெரும்பான்மையாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில எச்சங்கள்.

    அப்படி இருந்திருந்தால், அம்மதவாதிகளின் சகிப்புத்தன்மை எப்போதோ நாறியிருக்கும்!

  15. நண்பர் செங்கொடி அவர்களுக்கு

    //ஆச்சரியம் தான் பலமுறை மத ரீதியாகவும், சமூக ரீதியாகவும் என் விளக்கங்களை எதிர்கொள்ள முடியாமல், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிப்போன நீங்களா இப்படி எழுதுவது? .//

    நாம் இருவரும் இந்த நாளில்தான் விவாதிக்க வேண்டும் என்று நாள் குறிப்பிட்டு அதற்காக தயார் செய்து விவாதிக்கவில்லை.

    //எழுத்து விவாதத்திற்கு நான் எப்போதும் தயார் எனக்கூறியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று சென்னையில் நடக்கும் விவாதத்தில் பங்கேற்க முடியாத தூரத்தில் இருக்கிறேன் (இது உங்களுக்கும் தெரியும்) இரண்டு, நேரடி விவாதத்தைவிட எழுத்து விவாதம் சிறந்தது. ஏனென்றால், மாறுபட்ட தளத்திலுள்ளவர்களின் விவாதத்தில் சரிபார்க்கும் அவகாசம் கிடைக்காது. இதற்கு நேரடி விவாதத்தில் அவகாசம் கிடையாது என்பதால் தான் எழுத்து விவாதத்திற்கு எப்போதும் தயார் என்றேன்.//

    நீங்கள் சென்னையில் வசிக்கவில்லை, சவுதில்தான் வேலை செய்கிறீர்கள், அதனால் உங்களால் கலந்து கொள்ள இயலாது என்பது எனக்கும் தெரிந்ததுதான். நான் குறிப்பிட்டது நீங்களோ அல்லது உங்கள் இயக்கத்தில் உள்ளவர்களோ எங்கள் சார்பில் T.N.T.J.ன் நிர்வாகிகளோ கலந்து கொள்வார்கள். உங்கள் தலைவர்கள் தற்போது சென்னையில் தான் வசிக்கிறார்கள் என்பதை தாங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது வரமாட்டார்களா? நாங்கள் தான் உண்மையான் கம்யூனிஸ்ட் அவர்களெல்லாம் போலி கம்யூனிஸ்ட் என்று கூறிவருகிறீர்களே, தற்போது போலி கம்யூனிஸ்ட்களே விவாதத்திற்கு தயார்நிலையில் இருக்கும்போது தாங்கள் யோசிப்பது ஏனோ? உங்கள் தலைவர்களை கேட்டுச்சொல்கிறேன் என்று சொன்னீர்களே. எப்போது?

    1988 ஆம் ஆண்டு ‘கேடயம்’ இதழ் வெளியிட்ட ஒரு வெளியீட்டின் தலைப்பு என்ன தெரியுமா? ‘முட்டிப் பார்த்து விட்டு எட்டி ஓடும் புதிய கலாச்சாரம்’. 1988 ஆம் ஆண்டு ‘கேடயம்’ இதழிடம் ம.க.இ.க.வின் ‘புதிய ஜனநாயகம்’ ஏடு, ‘விவாதத்திற்குத் தயாரா?’ என்று வீரவசனம் பேசி ‘முட்டி’ பார்த்துவிட்டு, ‘எட்டி’ ஒடினர். அப்பொழுது ‘கேடயம்’ வெளியிட்ட நூலுக்கு இவ்வாறு தலைப்பிட்டதைப் பார்க்கும்பொழுது 1988லிருந்து இன்றுவரை இப்படித்தான் இவர்களது விவாத நேர்மை மாறாமல் இருக்கிறது என்பதைத்தான் இது உணர்த்துகின்றது.

    //நானும் நீங்கள் கூறியவரும் விவாதித்தால்; அவர் புகாரியில் இப்படி ஒரு ஹதீஸ் இருக்கிறது என்பார், அப்படி இருக்கிறதா என நான் சரிபார்க்கவேண்டும். நான் மூலத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டினால் அப்படி இருக்கிறதா என்று அவர் சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் இருவரும் வேறு வேறு தளம். இதற்கு நேரடி விவாதத்தில் அவகாசம் கிடையாது என்பதால் தான் எழுத்து விவாதத்திற்கு எப்போதும் தயார் என்றேன்//

    முதலில் குரானை முழுமையாக படியுங்கள்.ஒரு வசனம் எப்போது இறங்கியது. அதன் அறிவிப்பாளர் யார். அது தொடர்பான நபி(ஸல்)அவர்களின் விளக்கம் என்ன? அனைத்தையும் படித்துவிட்டு அதன் பிறகு விவாதத்தை வைத்துக்கொண்டு பின்பு எழுதுங்கள். அறைகுறை ஞானத்தோடு எழுதினால் செங்கொடி மூளை கசிந்ததன் வழியேதான் கற்பனைக்கோட்டையைக் கட்டமுடியும்.

    Vijidon Abudl lathif
    Kadayanallur.

  16. //அல்லாவிடத்தினில் ஒரு ஏடு இருக்கிறது, அதில் குறிப்பிடப்படாத விசயமே இல்லை. நடந்த, நடக்கின்ற, இனி நடக்கவிருக்கும் அத்தனையும் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த ஏட்டில் இருக்கும்படியே உலகமும், பிரபஞ்சமும் இயங்கிவருகிறது. முதல் மனிதனிலிருந்து இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதகுலம் வாழ்ந்தாலும் பிறக்கும் மனிதர்கள் அனைவரும் அந்த ஏட்டில் இருப்பதன் படியே நடந்து கொள்கின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் விளக்கமாக சொல்வதென்றால், எடுத்துக்காட்டாக இருவர் சந்தித்துக்கொள்வதாக கொள்வோம். அவர்கள் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கிக்கொள்ளலாம் அல்லது கோபத்தில் ஒருவரை ஒருவர் அறைந்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்களில் எது நடந்தாலும் அது அல்லாவிடம் இருக்கும் அந்த ஏட்டில் உள்ளபடிதான் நடக்கும். அல்லா அறைந்து கொள்வார்கள் என எழுதிவைத்திருந்தால் ஒருக்காலும் அவர்களால் கைகுலுக்கிக்கொள்ளமுடியாது. இப்படி இருக்கும் நிலையில் எதை மனிதன் சிந்தித்து செய்வது? அதாவது ஒரு மனிதன் சிந்தித்து செயல் படுகிறான் என்றால் அந்த ஏட்டில் இருக்கும்படியே செயல் படுகிறான் என்பதை மறுக்கவேண்டும், அல்லது ஏட்டில் இருக்கும் படியே எல்லாம் நடக்கிறது என்றால் மனிதன் சிந்தித்து செயல்படுகிறான் என்பதை மறுக்கவேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரிடையானவை. சிந்தனை என்பது அந்தக்கணத்தில் நிகழ்வது அது ஏற்கனவே எழுதி வைத்ததோடு இணங்கிச்செல்வது என்பது எப்போதும் நடைபெற முடியாது.//

    செங்கொடி….ம்ம் ..நல்லா தான் லாஜிக் பேசுரீங்க….
    அப்படி நீங்க சொல்ரத பாத்தா,ஒரு விஞ்ஞானி,(artificial intelligence)உள்ள ஒரு ரோபாட்டை உருவாக்குகிரார் என்று வைத்துக்கொள்வோம்….அதை நீங்கள் விலை கொடுத்து வாங்குகிரீர்கள்…அதனுடன் ஒரு புத்தகம் இணைக்கப் பட்டு இருக்கும்…
    இது இது எல்லாம்,இந்த ரோபாட்டை சிறப்பாக செயல்பட செய்யும்….இவ்வாறு பயன்படுத்தினால்,இது செயல் இழந்துவிடும்…
    இந்த ரோபாட் இந்த நேரத்தில் இப்படி செய்யும்,இந்த சூழ்நிலையில் இப்படி செயல்படும் என அது குறித்த அனைத்தும் அதில் குற்ப்பிட்டு இருப்பார் அந்த விஞ்ஞானி,அல்லவா?….
    ஆனால் ரோபாட்டுக்கு,சுய சிந்தனை திறன் உண்டு,…

    சரி இப்போ ஒங்க லாஜிக் படி,நீங்க அந்த விஞ்ஞானி கிட்ட கேக்குரீங்க……

    இந்த ரோபாட் சுயமா சிந்திக்குதா? அல்லது உங்க புத்தகத்துல உள்ளது மாதிரி செயல் படுதான்னு?…..

    அதற்கு அந்த விஞ்ஞானி சொல்லுவாறு,அடப் பைத்தியக்காரா,…அது சுயமாதான் சிந்திக்குது,

    அதோட அந்த சிந்தனையை புரோக்கிராம் செய்த எனக்கு தெரியாதா? அது என்ன செய்யும்னு….அதுக்கு அந்த திறன கொடுத்ததே நான் தானேடா?…..

    அத தயாரிச்ச எனக்கு தானடா அத பத்தி முழுமையா தெரியும்….

    [ஒரு ரோபாட்டின்(மனிதன்) சிந்தனை எக்காலத்திலும் அதை உருவாக்கிய விஞ்ஞானியின்(அல்லாஹ்) அறிவை எட்டி பிடிக்க முடியாது….]

    சாதாரண விஞ்ஞானி,உங்கள பாத்து இப்படி கேட்டா?…என்ன சொல்வீங்க….
    ஆமாங்க…நீங்க சொல்ரது சரிதான்னு தானே…

    அப்ப்டி இருக்கும் போது….எல்லாம் வல்ல இறைவன் சொல்கிறான்…நான் தான் உன்னை படச்சேன்…நான் தான் ஒனக்கு அறிவ கொடுத்தேன்னு…..அப்படி இருக்கும் பொது அந்த அறிவக்கொண்டு…நீ என்னல்லாம் சிந்திப்பன்னு எனக்கு முன் கூட்டியே தெரியாதா?….அவன் கேட்டா? அதுக்கு நீங்க என்ன சொல்வீங்க…….

    இறைவன் கொடுத்த அறிவு இருக்குல…..சிந்தித்து பாருங்க…..
    அல்லாஹ்வும் அததான் செய்ய சொல்ரான்…..

    சிந்திக்கவும்…….

    அன்புடன்
    ரஜின்
    http://sunmarkam.blogspot.com/

  17. செங்கொடியார் அவர்களே,
    ஒரு மனிதனை கடவுள் படைக்கும்போதே அவன் சொர்க்கவாசியா நரகவாசியா என தன் ஏட்டில் எழுதி வைத்துருந்தாலும், மனிதனுக்கு சுயமாக சிந்திக்கும் அறிவைக் கொடுத்திருக்கிறானென்றாலும், அந்த அறிவையும் இறைவனை மீறி சிந்திக்கமுடியாதென்றாலும், சுயமாக சிந்தித்தாலும் இறைவன் நாடியதே நடக்குமென்றாலும், அந்த அறிவைக்கொண்டு சுவர்க்கவாசியாக எழுதபட்டவன் நல்லதையே சிந்தித்து நல்லதே செய்வானென்றாலும், நரகவாசியாக எழுதபட்டவன் தீமையையே சிந்தித்து பாவத்தைமட்டுமே செய்வானென்றாலும், அவனுக்கு நல்லுபதேசம் கூறப்பட்டாலும் இறைவனின் நாட்டப்படியே முகத்தை திருப்பிக் கொள்வானென்றாலும், அதன்படியே சொர்க்கத்திற்குச் செல்பவன் சொர்க்கத்திற்குத்தான் செல்வானென்றாலும், நரகத்திற்குச் செல்பவன் நரகத்திற்குத்தான் செல்வானென்றாலும், பூமியில் குழப்பம் விளைவிக்கவே மனிதன் படைக்கப்பட்டவன் என்றாலும், இறைவன் மட்டுமே அறிந்த இதனை தான் சொல்லிக்கொடுத்ததை தவிர வேறெதையும் அறியாத மலக்குகள் எப்படி அறிந்துகொண்டார்கள் என்ற வியப்பிருந்தாலும், பூமியில் குழப்பங்கள் அதிகமாவது இறுதிநாளுக்கான அறிகுறியாக இறைவன் நாடியிருக்கின்றானென்றாலும், அப்படியாயின் குழப்பம் விளைவிக்கும் மனிதன் அதிகரிப்பது இறைவன் நாட்டமென்றாலும், தன் நாட்டப்படியே மனிதன் பாவம் செய்கிறானென்றாலும் ஷைத்தான் வழிகெடுப்பதாலேயே மனிதன் வழிகெட்டு பாவம் செய்கிறான் என ஒரு நாடகம் நடத்தி பழியை ஷைத்தான் மீது சுமத்தினான் என்றாலும், எல்லாவற்றையும் இறைவனே நாடுகிறான் என்றாலும், தண்டனயை மனிதனுக்கு மட்டுமே கொடுப்பது அநியாயமான தீர்ப்பு என்றாலும், நம்புங்கள்! நம்புங்கள்! நம்புங்கள்! செங்கொடியாரே, பூமியில் இருந்து பார்ப்பதற்கு சூரியன் பெரியதாக தெரிவதாலேயே அது சுருட்டப்படும் என்ற‌ இறைவனின் அறிவின் மீது சத்தியமாக, பூமியில் இருந்து பார்ப்பதற்கு நட்சத்திரங்கள் சிறியதாக தெரிவதாலேயே அவை உதிர்ந்துவிடும் என்ற இறைவனின் அறிவின் மீது சத்தியமாக, இவ்வுலகின் ஒரே சத்தியமார்க்கம் இஸ்லாம் இஸ்லாம் இஸ்லாம் ஒன்றேதான்.

  18. நெனச்சேன், கமலின் பயங்கரவாதம் பற்றிய வமர்சனம் படித்தவுடனே , இந்த மாதிரி ஆளுங்களாத்தான் இருக்கனும்னு….

  19. நண்பர் அப்துல் லத்தீப்,

    “நாம் இருவரும் இந்த நாளில்தான் விவாதிக்க வேண்டும் என்று நாள் குறிப்பிட்டு அதற்காக தயார் செய்து விவாதிக்கவில்லை.”
    நாள் குறிப்பிட்டு தயார் செய்து விவாதிப்பதற்கு தடையாய் இருந்தது எது? அல்லது அப்படி ஒரு சூழல் நேர்ந்துவிடக்கூடாது என்று கவனமாக தவிர்த்தது யார்?

    எங்கள் தோழர்களை விவாதத்தில் கண்டிப்பாக பங்கேற்கவேண்டும் என்றெல்லாம் நிர்ப்பந்திக்க முடியாது, அது அவர்களின் வாய்ப்பையும் வசதியையும் பொருத்தது. நீங்கள் திராவிடர் கழகத்துடன் நடத்தும் விவாதத்தில் நாங்கள் பங்கேற்றே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் கூறுங்கள் இலக்கம் தருகிறேன் நீங்களே நேராக பேசிக்கொள்ளலாம்.

    எனது முந்தைய கட்டுரைகளை நீங்கள்தான் உங்கள் இயக்க இணையத்திற்கு அனுப்பிவைத்தீர்கள் இதுவரை பதிலோ, மறுப்போ இல்லையே ஏன்? மேடை போட்டால் தான் பேசுவோம் என்று ஏதும் கட்டுப்பாடு வத்திருக்கிறார்களா?

    கேடயம் இதழைப்பற்றி இரண்டாவது முறை வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்லவருவதென்ன? உங்களுக்கு மேல் விபரம் வேண்டுமென்றால் அந்த நேரத்து புஜ, புக இதழ்களை பாருங்கள். பல்வேறு தளங்களில் தலைப்புகளில் விவாதங்கள் அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்றூக்கொண்டே இருக்கின்றன. எங்களின் விவாத நேர்மையை அங்கு வந்து பாருங்கள் யாரோ என்றோ எழுதிய ஒரு தலைப்பை பிடித்துக்கொண்டு எங்களை மதிப்பிட வேண்டாம்.

    “முதலில் குரானை முழுமையாக படியுங்கள்.ஒரு வசனம் எப்போது இறங்கியது. அதன் அறிவிப்பாளர் யார். அது தொடர்பான நபி(ஸல்)அவர்களின் விளக்கம் என்ன? அனைத்தையும் படித்துவிட்டு அதன் பிறகு விவாதத்தை வைத்துக்கொண்டு பின்பு எழுதுங்கள். அறைகுறை ஞானத்தோடு எழுதினால் செங்கொடி மூளை கசிந்ததன் வழியேதான் கற்பனைக்கோட்டையைக் கட்டமுடியும்”
    படித்து புரிந்து கொண்டு தான் எழுதத்தொடங்கியிருக்கிறேன். அதற்காக உங்களைப்போல் மனப்பாடம் செய்து நம்பர் சொல்லவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. உங்களுக்கோ, உங்கள் இயக்கத்தவர்களுக்கோ நேர்மை இருந்தால் நம்பிக்கைகளின் பின்னே ஒழிந்து கொள்ளாமல் பதில் கூற முயலுங்கள், ஏனென்றால் இதுவும் விவாதக்களம் தான். அதைவிடுத்து மூளை கசிவு, அறைகுறை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவேண்டாம்.

    தோழமையுடன்
    செங்கொடி

  20. நல்லது அஸ்கர்.நல்லாவே,எழுதி இருக்கீங்க..
    இது எல்லாமே,நான் முன்னர் பதிந்த லாஜிக்ல ஒன்னுமில்லாம போகிடும்…ஆமா.நீங்க ஏன் அத பத்தி ஒரு வார்த்த கூட பேசல….
    சரி,நீங்க சொன்ன விஷயம் எல்லாம் தெரிந்தவன் தானே கடவுளா இருக்க முடியும்…அது தெரியாதவன்…என்னை,உங்களை பொல சாமான்ய மனிதனாகத்தானே இருக்க முடியும்…

    நீங்க சொல்ர மாதிரி…சுய சிந்தனை உடைய மனிதன்,சிந்தித்து செயல்பட்டு,அதன்படி தான் சொர்க்கம், நரகம்,அடையவேண்டும்…அவன் அதை அடையும் போது தான் அல்லாஹ்வுக்கே தெரியவேண்டும்.அப்படி இருந்தால் தான் அது நியாயம்.இது ஒங்க லாஜிக்….
    ஒங்க லாஜிக் படி வந்தா…கடவுள் கொள்கையில எங்கயோ இடிக்கல?…
    எங்கயும் இல்ல….இங்க தான்…

    தான் படைத்த படைப்பின் பிற்காலம் அறியாத கடவுள், பலகீனமானவர்.ஆனா எந்தவித பலகீனமும் இல்லாதவன் தானே,கடவுளாக இருக்க தகுதியுடயவன்?….
    அப்படிப்பட்ட கடவுள் தான் வல்ல அல்லாஹ்…

    இத சொன்னா/எல்லாமெ..கடவுள் தெரிஞ்சுதானே செய்ரான்,அப்போ அதுக்கு நான் பொருப்பா?ன்னு நீங்க கேக்கனும்னா,

    அதுக்கு நீங்க சுயசிந்தனையற்ற ஆடு மாடாதான் இருக்கனும்.ஆடு மாடா நீங்க இருந்தா,அப்படிப்பட்ட படைப்பிற்கு,அறிவு இல்ல,சிந்தனை இல்ல,நன்மை இல்ல,தீமை இல்ல,கடமை இல்ல,கண்ணியம் இல்ல,கட்டுப்பாடு இல்ல,நீதி இல்ல,நேர்மை இல்ல,நியாயம் இல்ல,மறுமை இல்ல,கேள்விகணக்கு இல்ல,சொர்க்கம் இல்ல,நரகமும் இல்ல….

    இத அந்த ஆடு மாடும் கேக்காது,என்னா அதுக்கு அதயும் சிந்திக்க தெரியாது…நீங்க அப்படியா?

    பிறக்கும் போது,நீங்களும் நானும் ஒன்னுதானே….
    என்னுடைய அறிவு,இஸ்லாம் சரி,அதன் படி நடன்னு சொல்லுது…
    இன்னக்கி ஒங்களுக்கு,ஒங்க அறிவு சொல்லிதானே,இஸ்லாத்தை விட்டு விலகி போறீங்க….

    அஸ்கர்/செங்கொடி…
    நாம வாழும் போதே,நாம பாரக்காத பல விஷயங்கள, அடுத்தவன் சொல்லிதான்,நம்பி வாழ்ந்துட்டு இருக்கோம்..அப்பா உள்பட…

    சரி அஸ்கர்,நீங்க ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி.
    நெரய விஷயம் எழுதுரீங்க…
    நீங்க கடவுள் இருக்கான்னுரீங்களா?அல்லது இல்ல்னுரீங்களா?
    இல்ல கடவுள்னா எப்படி இருக்கனும் ஒங்க கருத்துபடி? கொஞ்சம் சொன்னீங்கன்னா..நாங்களும் தெரிஞ்சுப்போம்ல….

    தனிப்பட்ட முறையில் விவாதிக்க எனது வளைப்பூவை பார்வையிடவும்….

    அன்புடன்
    ரஜின்
    http://sunmarkam.blogspot.com/

  21. நண்பர் ரஜின்,
    ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட ரோபோ சுயமாக சிந்திப்பதாகக் கொண்டாலும் அது அவ்விஞ்ஞானியால் புரோக்கிராம் செய்யப்பட்டதிற்கு மீறி அது இயங்காது. விஞ்ஞானி உங்களிடம் இந்த ரோபோ காலை 5 மணிக்கு உங்களை எழுப்புவதுபோல் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது என விற்கிறார், ஆனால் அது உங்களை 7 மணிக்கு எழுப்புகிறது என்றால் உங்களது கோபம் யாரை நோக்கி பாயும்? நரகவாசியாக தீர்ப்பு எழுதப்பட்ட ஒரு மனிதனிடம் நீ ஏன் பூமியில் நல்ல அமல்களை செய்யவில்லை என் கேட்பதை என்னவென்று கொள்வது? தன்னையே நினைத்து தன்னை புகழ்கிறானா அல்லது ஷைத்தானினால் வழிகெடுக்கப்பட்டு கெடுகிறானா என்பதை சோதனையின் மூலம் அறிய வேண்டுமானால் படைப்பின் பிற்காலம் அறியாதவனாகத்தான் இருக்கவேண்டும். இதனால் இறைவன் பலஹீனமானவானாக அறியப்பட்டுவிடுவான் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இம்மனிதன் என்னை புகழ்வான் இம்மனிதன் என்னை இகழ்வான் என்று முன்னரே இறைவனுக்கு தெரியுமென்றால் சோதனை எதற்கு? கேள்விகள் எதற்கு? தூதர்கள் எதற்கு?ஷைத்தான் எதற்கு?வேதங்கள் எதற்கு?
    உங்களுடைய அறிவு இஸ்லாம் சரின்னு சொல்வதுகூட நீங்கள் படைக்கும்போதே தீர்மானிக்கப்பட்ட ஒன்று! என்னுடைய அறிவு என்னை விலகிபோ எனத் தூண்டுவதும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று! அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

  22. நண்பர் ரஜின்,

    முதலில் உங்களுக்கு நன்றி. இது விதிக்கோட்பாடு அதை விவாதிக்க தடை இருக்கிறது என்று ஹதீஸை இழுத்து நிருத்தியவர்களின் மத்தியில் நீங்கள் பதில் சொல்ல முனைந்ததற்காக.

    உங்கள் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். நான் ஒரு இயந்திரனை (ரோபாட்) வாங்குகிறேன், அதனை உருவாக்கிய அறிவியலாளரின் கையேட்டோடு. அந்த அறிவியலாலர் என்னிடம் இப்படி விளக்குவார். இது சுய சிந்தனை கொண்டது, இதன் சிந்தனை, நினைவாற்றல் பகுதி இருமடி (பைனரி)முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. (மின்னணுவியல் பொருட்கள் இருமடி அடிப்படியிலேயே இயங்குகின்றன. அவ்வளவு ஏன் நம்முடைய மூளையும் இருமடி அடிப்படையிலேயே இயங்குகிறது) இதில் இந்த முறையில் உள்ளீடு செய்தால் இப்படியெல்லாம் இயங்கும். இதன் நிரல்கள் (ப்ரோக்ராம்) சூழலை கவனித்து அதற்க்கு தகுந்தது போல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் உணரிகள் (சென்சர்) தட்பவெப்பம் முதல் அனைத்தையும் உள்வாங்கும் திறன் கொண்டவை. இதை இன்னின்ன வழிகளில் நீங்கள் செயல்பட வைக்கலாம், இன்னின்ன வழிகளில் கட்டுப்படுத்தலாம். என்றவாறெல்லாம் நான் கேட்பதை பொருத்து விளக்குவார். இப்போது நான் அதை வீட்டுக்கு எடுத்துவந்துவிட்டேன். வீட்டில் இயந்திரன் அமர்வதற்கு தோதாக நாற்காலி இருக்கிறது. தரையில் அமர்வதற்கு தோதாக விரிப்பு இருக்கிறது. ஓய்வெடுப்பதற்கு தோதாக சாய்வு நாற்காலி இருக்கிறது. அல்லது இவைகளை ஒதுக்கிவிட்டு தரையில் அமரவும் தரை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது சுய சிந்தனை வாய்க்கப்பட்ட இயந்திரன் அது வேலை செய்த களைப்பு, அந்த அறையின் வெப்பம், அதன் தேவை இவைகளை கணக்கிலெடுத்து இருக்கும் நான்கில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமரும். இப்போது அந்த அறிவியலாளரைக் கேட்டால் எதில் அமரவேண்டும் என்பதை அதுதான் முடிவு செய்யும் ஆனால் அது நான் அமைத்திருக்கும் நிரல்களின் அடிப்படையில் இருக்கும், என்றுதான் கூறமுடியுமே தவிர இந்தப்பொழுதில் இப்படி அமரும், இந்தக்கணத்தில் இங்கு நகரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம் அதற்கு இருப்பது சுய சிந்தனை.

    இப்போது நோக்கத்திற்கு வருவோம். இங்கு பின்னூட்டமிட்ட எல்லோரும் விதிக்கோட்பாடு என்கின்றனர். இல்லை கேள்வி விதி தொடர்பானதில்லை. விதி என்பது நடந்த நடக்கவிருக்கும் செயல்களை அடிப்படியாகக்கொண்டது. நான் கேட்பது செயல்களை இயக்கும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது, அதை விளக்குவதற்கு செயலை பயன்படுத்தியிருக்கிறேன். மனிதன் எந்தக்கணத்தில் என்ன செய்வான் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கிறது என்றால் சிந்தனை என்பதன் பொருளென்ன? சிந்தனை என்றால் அந்தக்கணத்தின் சூழலுக்கு உட்பட்டு நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது என்றால் சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்டபடியே நீங்கள் நடந்து கொள்வதை குறிக்கும். இரண்டும் வேறுவேறு நிலை. ஏதாவது ஒன்றுதான் சரியானதாக இருக்க முடியும். அந்த சரியானது எது என்பதே உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.

    பதில் கூறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

  23. 1997 மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை…
    இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது!
    மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்.
    இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.
    இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே ‘வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனும் ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?
    குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.
    குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.
    இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.
    ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, “முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்” என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.
    என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். “முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்” என்று (கூறினர்).
    நான் அவர்களிடம் கூறினேன் “உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.
    நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும்.
    நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.
    ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. “நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?” என்று.
    நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.
    அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: “நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா?” என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.
    நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், ‘இஸ்லாம்’ என்றால் என்ன ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.
    சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் ‘இஸ்லாம்’ என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது “இறைவன் ஒருவனே” என்று. “இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்” என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர்.
    இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்?
    இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும்.
    இன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.
    இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.
    நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால்,
    இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் – இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.
    ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.
    முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.
    டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).
    நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.
    மொழியாக்கம்: இப்னு ஆதம்

  24. அன்புள்ள சகோதரர் செங்கொடி

    பிஜே போன்றோர் இப்படிப்பட்ட சிக்கலான கேள்வி கேட்கப்படும்போது “இதனை நபி(ஸல்) விவாதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்” என்று சொல்லி தப்பித்துவிடுவார்கள்.

    ஏன் என்று சிந்தித்து பார்த்தீர்களா?

    இந்த கேள்வியை நபியும் சிந்தித்து பார்த்திருப்பார். இதற்கு விடை ”அல்லாஹ் என்று யாரும் இல்லை” என்பதில்தான் நிற்கும். அதனால்தான் இதனைப்பற்றியே பேசாதே என்று அவர் அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

    எப்போதும் இன்ஷா அல்லாஹ் என்று சொல்கிறார்கள். அதாவது அல்லாவின் விருப்பப்படிதான் எல்லாம் நடக்கும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

    உதாரணமாக ஒரு விஷயத்தை பார்ப்போம்.
    ஒருவர் காபிராக இருக்கிறான். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். இப்போது அல்குரான் என்ன சொல்கிறது?

    63.3: That is because they believe, then disbelieve, so a seal is set upon their hearts so that they do not understand.

    ஒருவன் முகம்மதுவை நம்புவதோ நம்பாததோ அவனுக்கு புரிபடாது. ஏனெனில் அவனது இதயம் பூட்டப்பட்டுவிட்டது. அல்லது முத்திரையிடப்பட்டுவிட்டது.

    “God has sealed their hearts” (repeated throughout Quran),
    காபிர்களின் இதயத்தை அல்லாஹ் பூட்டிவிட்டான்.

    முகம்மது பலமுறை எடுத்துசொல்லியும் ஏன் அவர்கள் இஸ்லாத்தை தழுவவில்லை என்பதன் காரணத்தை அல்லாஹ் முகம்மதுவின் சீடர்களுக்கு சொல்லுகிறான். (அல்லாஹ் முகம்மதுவிடம் கூறவில்லை என்று நீங்கள் நம்பினால், முகம்மதுவின் வார்த்தைகள் அல்லாஹ்வின் வார்த்தைகளாக இருக்கும் பட்சத்தில், அவற்றை கேட்ட உடனேயே ஏன் காபிர்கள் நம்பவில்லை என்று முகம்மதுவின் சீடர்கள் கேட்டதற்கு முகம்மது இப்படி சமாளித்தார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)

    சரி அல்லாஹ்வே முகம்மதுவிடம் சொன்னதாக வைத்துக்கொள்வோம்.

    அப்படியென்றால் ஒருவன் காபிராக இருப்பதற்கும் அவன் முஸ்லீமாக மதம் மாறுவதற்கும் காரணம் அல்லாஹ்வே என்பது தெளிவு. காபிரின் இதயத்தை அல்லாஹ் மூடிவிட்டபிறகு யாரால் திறக்கமுடியும்? ஆகையால், குரான் பிரச்சாரமே வீண் என்பதும் தெளிவு.

    அல்லாஹ் ஏற்கெனவே எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்டான்.
    Note that what is meant by belief in al-qada’ (the Divine will) is: certain belief that everything that happens in this universe happens by the will and decree of Allaah.

    Belief in al-qadar (the Divine decree) is the sixth pillar of faith, and no one’s faith is complete without it. In Saheeh Muslim (8) it is narrated that Ibn ‘Umar (may Allaah be pleased with him) heard that some people were denying al-qadar. He said: “If I meet these people I will tell them that I have nothing to do with them and they have nothing to do with me. By the One by Whom ‘Abd-Allaah ibn ‘Umar swore, if one of them had gold equivalent to Mount Uhud and he spent it, Allaah would not accept it from him unless he believed in al-qadar.”

    ஆகையால், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் விருப்பத்தாலேயே. அதே போல உலகத்தில் முஸ்லீம்களின் மீது கொடுமைகள் நடப்பதாக புலம்புவதும் அர்த்தமற்றது. ஏனெனில் அவை யாவையும் அல்லாஹ்வின் விருப்பத்தினாலேயே நடைபெறுகின்றன. அல்லாஹ்வின் விருப்பமின்றி இவை எதுவும் நடக்காது.

    அப்படி அல்லாஹ்வின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவது எப்படி பொருத்தமானதாகும்?

    இங்கே நீங்கள் இஸ்லாம் என்பது ஒரு பொய் மார்க்கம் என்று எழுதினால், அதுவும் அல்லாஹ்வின் விருப்பதாலேயே என்றுதான் முஸ்லீம்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படி நீங்கள் எழுதுவதை எதிர்த்து எழுதுவது அல்லாஹ்வின் விருப்பத்துக்கு எதிராக நடப்பதாகும்.

    இந்த முரண்பாட்டை முகம்மதால் தீர்க்க முடியாது. ஆகையால்தான் அவர் இதனைப்பற்றி பேசாதே என்று அறிவுறுத்தியிருக்கிறார்.


    ஆனால், சிக்கல் அதுமட்டுமில்லை. மேலும் இருக்கிறது.

    காபிர்கள் இஸ்லாத்தை தழுவவில்லை என்றால், அவர்கள் இஸ்லாத்தை தழுவும் வரையிலோ அல்லது முஸ்லீம்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டும் வரையிலோ போர் புரியவேண்டும் என்றும் கூறுகிறது.
    அவர்கள கண்ட இடத்தில் கொல்லவும் சொல்லுகிறது.

    காபிர்களின் மனங்களை பூட்டிவிடுவதும் அல்லாஹ்வின் வேலைதான். பிறகு காபிர்கள் முஸ்லீமாகவில்லை என்றால் கொல்லச்சொல்வதும் அல்லாஹ்வின் வேலைதான்.

    காபிர்கள் முஸ்லீமாகவில்லை என்றால், அவர்களை நெருப்பிலிட்டு வாட்டுவதும் அல்லாஹ்வின் வேலைதான். ஆனால், காபிர்களின் இதயத்தில் முத்திரையிட்டு அவர்களை காபிர்களாக ஆக்குவதும் அல்லாஹ்தான்.

    ஆனால், காபிர்கள் முஸ்லீமாகவில்லை என்றால், குற்றம் அல்லாவின் மீது அல்ல. காபிர்கள் மீதுதான். ஏனெனில் அவர்களை அல்குரானை படித்து சிந்திக்க சொல்கிறான். ஆனால், படித்தும் முஸ்லீமாகவில்லை என்றால் காரணம் அல்லாஹ் அவர்களது இதயங்களை முத்திரையிட்டு பூட்டிவிட்டான். ஆனால், அவர்கள் காபிர்களாக இருப்பதால் அவர்களை நெருப்பிலிட்டு வாட்டுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளி ஆகமாட்டான். ஏனெனில் அவர்களை அல்குரானை படித்து சிந்திக்க சொல்கிறான். ஆனால், படித்தும் முஸ்லீமாகவில்லை என்றால் காரணம் அல்லாஹ் அவர்களது இதயங்களை முத்திரையிட்டு பூட்டிவிட்டான். ஆனால், அவர்கள் காபிர்களாக இருப்பதால் அவர்களை நெருப்பிலிட்டு வாட்டுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளி ஆகமாட்டான். ஏனெனில் அவர்களை அல்குரானை படித்து சிந்திக்க சொல்கிறான். ஆனால், படித்தும் முஸ்லீமாகவில்லை என்றால் காரணம் அல்லாஹ் அவர்களது இதயங்களை முத்திரையிட்டு பூட்டிவிட்டான். ஆனால், அவர்கள் காபிர்களாக இருப்பதால் அவர்களை நெருப்பிலிட்டு வாட்டுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளி ஆகமாட்டான். ஏனெனில் அவர்களை அல்குரானை படித்து சிந்திக்க சொல்கிறான். ஆனால், படித்தும் முஸ்லீமாகவில்லை என்றால் காரணம் அல்லாஹ் அவர்களது இதயங்களை முத்திரையிட்டு பூட்டிவிட்டான். ஆனால், அவர்கள் காபிர்களாக இருப்பதால் அவர்களை நெருப்பிலிட்டு வாட்டுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளி ஆகமாட்டான்.

    இந்த முரண்பாட்டை முகம்மதால் தீர்க்க முடியாது. ஆகையால்தான் அவர் இதனைப்பற்றி பேசாதே என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

    ஏனெனில், இப்படி பேசியவுடனேயே அல்லாஹ்வாவது ஒன்றாவது. குரான் என்பது முகம்மது உருவாக்கிய புத்தகம் என்று தெரிந்துவிடும். அதனால்தான் இதனை பற்றி பேசக்கூடாது என்று முகம்மது கூறியுள்ளார்

  25. மட்டையடி சொல்வதுபோல், அல்லாஹ் ஏற்கனவே காபிர்களின் இதயத்தை முத்திரையிட்டு பூட்டிவிட்டான் என்றால், திரும்பி அதைத் திறக்க முடியாது!

    அப்படியாயின், ஏன் அப்படிப்பட்ட காபிர்கள் புனித இஸ்லாத்தை தினமும் ஆயிரக்கணக்கில் உலகம் முழுவதும் அரவணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

  26. சிறப்பான தொரு கட்டுரை, இதே போன்ற கேள்விகள் பலருக்கும் எழுவது உண்டு, இங்கே அல்லா என்கிற பெயர் சொல்லுக்குப் பதிலாக இறைவன் என்று போட்டாலும், குரான் என்பதற்குப் பதிலாக அந்தந்த மத நூல்களில் பெயர்களை எழுதினாலும் பொருத்தமாகவே இருக்கும்.

    இங்கே அல்லாவின் விருப்பம் என்பதற்கு பதிலாக இந்து மதத்தில் ‘விதி’ என்று சொல்லுவார்கள்.

    இதை இஸ்லாம் தொடர்புடைய பதிவாகப் பார்க்காமல் அனைத்து மதவாதத்தைப் பற்றிய கேள்விக்கான பதிவாகவே பார்க்கிறேன்.

  27. அன்பு சகோதரர்களே
    அஸ்ஸலாமு அலைக்கும்

    அல்லாஹ் காபிர்களின் உள்ளத்தை பூட்டி விட்டான் என்ற தங்கள் கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றாலும், அல்லாஹ்வினால பூட்டப்பட்ட இதயத்தை அல்லாஹ்வினால் திறக்க இயலாது என்பது எப்படி சரியாகும்.

    மேலும் ….

    குர் ஆன் 29 : 69 ல்
    எவர் அவனது வழியில் வர முயற்சிக்கின்றாரோ அவருக்கு அவனது வழியை எளிதாக்குவதாக அல்லாஹ் கூறுகிறான் என்பதையும் கவனிக்கவும்.

    குர் ஆன் 4 : 115 , 116 ல் நேர்வழி எது என்று அறிந்தும் தவறான வழியில் செல்பவர்களை அவர் வழியில் விட்ட்டு நரகத்தில் சேர்ப்பதாக கூறுவதையும்.

    39 :53 பாவமன்னிப்பு கோரி நேர்வழியில் வாழ நாடியவர்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவதாகவும் கூறுகின்றான்.

    அதே போல் ……

    7-179 நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.

    இந்த வசனமும் இன்னும் இதயத்தில் முத்திரை சம்பந்தமான அனைத்து வசனங்களும், எவர் அலட்சியமாக இறைவனையும் அவனது கட்டளைகளயும் பொய்ப்பித்து அக்கிரமக்காரர்களாக வாழ்கிறார்களோ அவர்களை அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக வழிகேடில் விட்டு விடுவதாகவும், முத்திரை வைக்கப் படுவதாகவும் விளங்கினால் சிறிதும் முரண்பாடில்லை என்பதிஅ உணரவும்.

    உதாரணத்திற்கு …. அதிகமாக அல்லது என்ன்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்ப்வர்களை ” சாப்பிடுவதற்கென்றே பிறந்தவன் ” எனப்து போல தான், அதாவது அவன் அளவு கடந்து கட்டுபாடின்றி சாப்பிடும் காரணமாக இவ்வாறு கூறப்படுகிறது என்று விளங்குவோம் மாறாக சாப்பிடுவதற்கு என்றே பிறந்தவன் என்று விளங்க மாட்டோம்.

    இந்த அடிப்படையை உணர்ந்தால் மேலே பல்ரும் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் முரண்பாடுகளுக்கும் விடை கிடைக்கும், அதை விட்டு அல்லாஹ்வே முத்திரை வைத்து பின்னர் அவனை ஏன் தண்டிக்கிறான் என்பது சிறு பிள்ளை தனமான வாதம்….

    பார்க்கவும் 67 : 2 மனிதனுக்கு தேர்வுரிமை அளிக்கப்பட்டு அவன் சோதிக்கப் படுகிறான் என்பதை அறியலாம்.

    மேலும் குர் ஆன் 3 : 85 முதல் 3 : 91 வரை பார்வையிடவும் தேவையெனில் அதையும் மேலும் விளங்கிட பின்னூட்டமும் அளிப்பேன்… இன்ஷா அல்லாஹ்

  28. //அப்படியாயின், ஏன் அப்படிப்பட்ட காபிர்கள் புனித இஸ்லாத்தை தினமும் ஆயிரக்கணக்கில் உலகம் முழுவதும் அரவணைத்துக்கொண்டிருக்கின்றனர்.//

    முஸ்லீம்களுக்கு இந்த விவாதம் புரியவே புரியாது என்பதற்கு இந்த கமெண்ட் ஒரு உதாரணம்.

    ஜெர்மனி, அதற்குக்காரணம் அல்லாஹ் அவர்களது மனத்தை திறப்பதால்தான். நீங்கள் பிரச்சாரம் பண்ணுவதால் அல்ல. அப்படித்தான் அல்லாஹ் கூறுகிறான்.

    ஆனால், அதே வேளையில் காபிர்கள் மீது போர்தொடுத்து அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது கப்பம் கட்டவேண்டும் வரையில் அவர்களோடு போர் புரியவேண்டும் என்று “அறிவுரை” வழங்குவதும் இதே அல்லாஹ்தான். இதில் உள்ள முரண் உங்களுக்கு புரிகிறதா ஜெர்மனி?

    மனத்தினை அல்லாஹ் சீல் செய்துவிட்டபின்னால் எதற்கு போர்? மனத்தின் சீலை அல்லாஹ் உடைத்துவிட்டபின்னால் எதற்கு போர்?

    இது முகம்மதின் வரிகளே என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?

  29. //ஜேர்மனி, அதற்குக்காரணம் அல்லாஹ் அவர்களின் மனத்தைத் திறப்பதால்தான்..//

    நன்றி மட்டையடி. உண்மை இப்பொழுது கசிகிறது.

  30. மாக்சிசவாதிகள் ஏன் நாளாந்தம் இஸ்லாத்தை நோக்கியும் கிறிஸ்தவத்தை நோக்கியும் பிற மதங்களை நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்து, கிறிஸ்தவ குருமார்களின் ஆசிகளையும் பெற்றுக்கொள்கின்றனர்.

    எல்லா மதங்களிலும் விதியைப் பற்றி பிரஸ்தாபிக்கின்றனர். மாக்சிச சிந்தனையாளர்கள் விதியைப்பற்றி ஏற்றுக்கொள்ளாமல் ஏற்றுக்கொள்கின்றனரா?

  31. மட்டையடியின் விதிக்கோட்பாட்டுப் பிரகாரம்,

    கால்மாக்ஸ் என்பவரால் புனையப்பட்ட சடத்துவ சிந்தனையும் ஈசன் விருப்பப்படி!

    அந்த சடத்துவ சிந்தனையை இரும்புப்பிடியில் அப்பாவி மக்களிடம் திணித்ததும் இறைவன் விதி.

    அக்கொள்கை சில தசாப்தங்களில் தள்ளாடி குப்புற விழுந்ததும் அவன் விதி.

    தற்கால மாக்சிசவாத பிரசங்கிகள், கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி என அடிக்கடி முழங்குவதும் பின் மதக்குருக்களிடம் ஒட்டி உறவாடுவதும் ஆசி பெறுவதும் பராபரத்தின் விதி.

    பகுத்தறிவு பேசிக்கொண்டு, மாற்று மதங்களின் சிலைகளை உடைத்தெறிய வேண்டும் என பெரியார் முழங்கியதும் கடவுள் விதிப்படி.

    அந்த சிலைகளை செருப்பால் அடித்ததும் கடவுள் விதிப்படி.

    பகுத்தறிவு பேசும் பெரியார் சீடர்கள், பெரியாரின் சிலைகளைச் செய்து, பொருளீட்டியதும் இறைவனின் விதிப்படி.

    பகுத்தறிவுச் சிந்தனைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுவதும் கடவுள் விதியே!

    மாக்சிச மனக்கோட்டைகள் சருகுகள் ஆனதும், மேலிருப்பவன் செயல்!

    செத்த பாம்பை அடிப்பதுபோல், அதைச் சுற்றிச் சற்றி வருவதும், மாக்சிச எச்சங்களின் தலைவிதி!

    மாக்சிசவாதிகளே, கடவுள் தன் வல்லமைகளை எப்படி எப்படி நமக்கு சூட்சுமமாக தெரிவிக்கிறார் என்று பாருங்கள்!

    எனவே, மாக்சிசவாதிகளே, ஈசனை வணங்குவோம்! வழிபடுவோம், இறைவரம்புகளை ஏற்றுக்கொண்டு!

  32. செங்கொடி

    நீங்கள் குறிப்பிட்ட பல வசனங்களை நானும் சிந்தித்து கவலை அடைந்திருக்கிறேன். எனக்கென்னமோ, குரான் புத்தகமே முகம்மது நபி எழுதியது போலத்தான் தோன்றுகிறதே அன்றி, அல்லாஹ் இறக்கியதாக தோன்றவில்லை.

    எல்லாம் வல்ல கடவுள் அல்குரானில் சித்தரிக்கப்படுவது போல கையலாகாதவராகவும், தன்னை பின்பற்றுபவர்களைக்கொண்டு தன்னை பின்பற்றாதவர்களை அழிக்க முனைபவராகவும், குரூரமானவராகவும், முகம்மதுவுக்கு கையாள் போலவும் இருப்பது கஷ்டமாக இருக்கிறது.

    இது முகம்மதுவின் உருவாக்கமே அன்றி வேறல்ல என்று திடமாக நம்புகிறேன்.

    அதனால் கிறிஸ்துவத்தையும் சந்தேகத்துடந்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. நான் முழு நாத்திகனாகிக்கொண்டிருக்கிறேனோ என்று அஞ்சுகிறேன்.

    ஆனால் கடவுள் என்று உண்டு என்று தோன்றுகிறது. ஆனால் அது நிச்சயம் அல்லாஹ் இல்லை என்று உறுதியாகிவிட்டது எனக்கு.

    உங்கள் பணி சிறக்கட்டும்.

  33. செய்யது பஷீர், இப்னு பஷீர், இப்னு பஷீர் (2) என்னும் பெயர்களில் உலாவிவரும் மனிதரை யாமறியோம் பராபரமே!

    எல்லாம் வல்ல கடவுள், அல்குர்ஆனில் கையாகாலாதவர் ஆக சித்தரிக்கப்படவில்லை.

    தன்னைப் பின்பற்றியவர்களைக்கொண்டு பின்பற்றாதவர்களை அழிக்க முனைபவராகவும் இல்லை.

    முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கையாள்
    போலவும் இல்லை. இது சிறுபிள்ளைக்கும் தெரிந்ததுதான்!

    மேற்படி கடவுளுக்கு இல்லாத தன்மைகளை இருப்பதாகக் காட்டினால், பலபெயர்களில் உலாவி வருபவருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

    நாத்திகத்தில் ஊறிக்கொண்டே, முழு நாத்திகனாகப் போய்விடுவேனோ என அஞ்சுகிறாராம்!

    தான் எங்கிருக்கிறார் என்பதுகூட, தெரியாமலிருக்கிறார்.
    என்ன செய்ய? நாத்திகத்தில் உழலும் அநேகம்பேர் இப்படித்தான்!

    அல்குர்ஆனை ஆழமாகக் கற்றுணர்ந்தால், இது முஹம்மது (ஸல்) அவர்களின் உருவாக்கம் அல்ல என்று எளிதாக திடமாக நம்பலாம். இதுதான் யதார்த்தம்.

    முஹம்மது (ஸல்) அவர்களால் அல்குர்ஆன் எழுதப்பட்டதுபோலத் தோற்றமளிக்கும் இவருக்கு, அவர்கள் எழுத, வாசிக்க அறியாதவர்கள் என்ற பேருண்மை, தோற்றமளிக்கவில்லைபோலும்!

    முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட புனித மறை அல்குர்ஆன் என்பது, உலக முஸ்லிம்களின் ஆணித்தரமான, உறுதியான, அசைக்கமுடியாத நம்பிக்கை.

    நேர்வழியை குறைகூறியே பழக்கப்பட்ட மனிதர்களுக்கு, கடவுள் என்ற சொல்லுக்கும் அல்லாஹ் என்ற சொல்லுக்கும் அர்த்தம் தெரியாமல்போனது, நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது!

    கிருஸ்துவத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பதால், நிச்சயம் கர்த்தர் இல்லை என்றும் உறுதியாகிவிட்டது இவருக்கு!

    ஏதோ இவர் விரும்பும் பாஷையில் கடவுளை ஏற்றிருக்கிறார் என்பது, நமக்கு மகிழ்ச்சியே!

  34. செய்யது பஷீர், இப்னு பஷீர், இப்னு பஷீர் (2) என்னும் பெயர்களில் உலாவிவரும் மனிதரை யாமறியோம் பராபரமே!

    எல்லாம் வல்ல கடவுள், அல்குர்ஆனில் கையாகாலாதவர் ஆக சித்தரிக்கப்படவில்லை.

    தன்னைப் பின்பற்றியவர்களைக்கொண்டு பின்பற்றாதவர்களை அழிக்க முனைபவராகவும் இல்லை.

    முஹம்மது (ஸல்) அவர்களுக்கு கையாள்
    போலவும் இல்லை. இது சிறுபிள்ளைக்கும் தெரிந்ததுதான்!

    மேற்படி கடவுளுக்கு இல்லாத தன்மைகளை இருப்பதாகக் காட்டினால், பலபெயர்களில் உலாவி வருபவருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

    நாத்திகத்தில் ஊறிக்கொண்டே, முழு நாத்திகனாகப் போய்விடுவேனோ என அஞ்சுகிறாராம்!

    தான் எங்கிருக்கிறார் என்பதுகூட, தெரியாமலிருக்கிறார்.
    என்ன செய்ய? நாத்திகத்தில் உழலும் அநேகம்பேர் இப்படித்தான்!

    அல்குர்ஆனை ஆழமாகக் கற்றுணர்ந்தால், இது முஹம்மது (ஸல்) அவர்களின் உருவாக்கம் அல்ல என்று எளிதாக திடமாக நம்பலாம். இதுதான் யதார்த்தம்.

    முஹம்மது (ஸல்) அவர்களால் அல்குர்ஆன் எழுதப்பட்டதுபோலத் தோற்றமளிக்கும் இவருக்கு, அவர்கள் எழுத, வாசிக்க அறியாதவர்கள் என்ற பேருண்மை, தோற்றமளிக்கவில்லைபோலும்!

    முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட புனித மறை அல்குர்ஆன் என்பது, உலக முஸ்லிம்களின் ஆணித்தரமான, உறுதியான, அசைக்கமுடியாத நம்பிக்கை.

    நேர்வழியை குறைகூறியே பழக்கப்பட்ட மனிதர்களுக்கு, கடவுள் என்ற சொல்லுக்கும் அல்லாஹ் என்ற சொல்லுக்கும் அர்த்தம் தெரியாமல்போனது, நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது!

    கிருஸ்துவத்தையும் சந்தேகத்துடன் பார்ப்பதால், நிச்சயம் கர்த்தர் இல்லை என்றும் உறுதியாகிவிட்டது இவருக்கு!

    ஏதோ இவர் விரும்பும் பாஷையில் கடவுளை ஏற்றிருக்கிறார் என்பது, நமக்கு மகிழ்ச்சியே!

  35. அன்புள்ள செங்கொடி,

    செய்யது பஷீர் எழுதியுள்ளதை நான் ஆமோதிக்கிறேன். நான் வெகுகாலத்துக்கு முன்னர் இஸ்லாமே இறைவனின் ஒரே வழி என்ற கருத்தில் இருந்தேன். முகம்மதுவே இறைதூதர். அவர் தவறே செய்யாதவர். உலக மக்களுக்கு எடுத்துக்காட்டு என்று நம்பினேன். ஆனால், என் (முஸ்லீம்) நண்பர்களுடன் பேசி பிறகு விவாதமாகி, இறுதியில் இறைநம்பிக்கையை இழந்தேன்.

    இறைதூதர் என்று தன்னை அழைத்துக்கொண்ட முகம்மது கற்பழித்தது மட்டுமின்றி தன் சகாக்களையும் கற்பழிக்க தூண்டியிருக்கிறார். (அபுதாவுது 2150)
    அதுமட்டுமல்ல, கைப்பற்றப்பட்ட பெண்களின் கணவர்கள் முன்னிலையிலேயே தன் சகாக்களை அந்த பெண்களை கற்பழிக்க தூண்டியிருக்கிறார்.

    நிராயுதபாணியான 13 வயது நிறையாத பாலகர்களை கொன்றிருக்கிறார்.

    “We went out with Allah’s Messenger (may peace be upon him) on the expedition to the Bi’l-Mustaliq and took captive some excellent Arab women; and we desired them, for we were suffering from the absence of our wives, (but at the same time) we also desired ransom for them. So we decided to have sexual intercourse with them but by observing ‘azl (Withdrawing the male sexual organ before emission of semen to avoid-conception). But we said: We are doing an act whereas Allah’s Messenger is amongst us; why not ask him? So we asked Allah’s Messenger (may peace be upon him), and he said: It does not matter” (Sahih Muslim 3371)

    The Apostle of Allah (may peace be upon him) sent a military expedition to Awtas on the occasion of the battle of Hunain. They met their enemy and fought with them. They defeated them and took them captives.
    Some of the Companions of the Apostle of Allah (may peace be upon him) were reluctant to have intercourse with the female captives in the presence of their husbands who were unbelievers. So Allah, the Exalted, sent down the Qur’anic verse: (Sura 4:24) “And all married women (are forbidden) unto you save those (captives) whom your right hands possess.” (Abu Dawud 2150)

    இப்படிப்பட்ட ஒரு ஆளை மனிதனாகக்கூட மதிக்கமாட்டார்கள். எப்படி இறைதூதராக மதிக்கமுடியும்?

    குரான் முகம்மது உருவாக்கியதே.
    The scribes of Muhammad were 42 in number. `Abdallah Ibn Sarh al-`Amiri was one of them, and he was the first Quraishite among those who wrote in Mecca before he turned away from Islam. He started saying, “I used to direct Muhammad wherever I willed. He would dictate to me ‘Most High, All-Wise’, and I would write down ‘All-Wise’ only. Then he would say, ‘Yes it is all the same’. On a certain occasion he said, ‘Write such and such’, but I wrote ‘Write’ only, and he said, ‘Write whatever you like.'” So when this scribe exposed Muhammad, he wrote in the Qur’an, “And who does greater evil than he who forges against God a lie, or says, ‘To me it has been revealed’, when naught has been revealed to him.” So on the day Muhammad conquered Mecca, he commanded his scribe to be killed. But the scribe fled to `Uthman Ibn `Affan, because `Uthman was his foster brother (his mother suckled `Uthman). `Uthman, therefore, kept him away from Muhammad. After the people calmed down, `Uthman brought the scribe to Muhammad and sought protection for him. Muhammad kept silent for a long time, after which he said yes. When `Uthman had left, Muhammad said “I only kept silent so that you (the people) should kill him.”[2]

    முன்னாள் முஸ்லீம்கள் அமைப்பை உருவாக்கினால், நம் இளைஞர்களுக்கு அது நலன் பயக்கும்.

    நட்புடன்
    ஷாஜி

  36. செங்கொடி…!

    உங்கள் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம். நான் ஒரு இயந்திரனை ///மனிதன்/// (ரோபாட்) வாங்குகிறேன், அதனை உருவாக்கிய அறிவியலாளரின் ///அல்லாஹ்/// கையேட்டோடு ///குரான் & ஹதீஸ் ///. அந்த அறிவியலாலர் என்னிடம் இப்படி விளக்குவார். இது சுய சிந்தனை கொண்டது, இதன் சிந்தனை, நினைவாற்றல் பகுதி இருமடி (பைனரி)முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. (மின்னணுவியல் பொருட்கள் இருமடி அடிப்படியிலேயே இயங்குகின்றன. அவ்வளவு ஏன் நம்முடைய மூளையும் இருமடி அடிப்படையிலேயே இயங்குகிறது) இதில் இந்த முறையில் உள்ளீடு செய்தால் இப்படியெல்லாம் இயங்கும். இதன் நிரல்கள் (ப்ரோக்ராம்) சூழலை கவனித்து அதற்க்கு தகுந்தது போல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் உணரிகள் (சென்சர்) தட்பவெப்பம் முதல் அனைத்தையும் உள்வாங்கும் திறன் கொண்டவை. இதை இன்னின்ன வழிகளில் நீங்கள் செயல்பட வைக்கலாம், இன்னின்ன வழிகளில் கட்டுப்படுத்தலாம். என்றவாறெல்லாம் நான் கேட்பதை பொருத்து விளக்குவார். இப்போது நான் அதை வீட்டுக்கு எடுத்துவந்துவிட்டேன். வீட்டில் இயந்திரன் அமர்வதற்கு தோதாக நாற்காலி ///குரான் அல்லது ஹதீஸ் வழி -ஹலால் /// இருக்கிறது. தரையில் அமர்வதற்கு தோதாக விரிப்பு ///மனோஇச்சை/// இருக்கிறது. ஓய்வெடுப்பதற்கு தோதாக சாய்வு நாற்காலி ///ஷைத்தானின் தூண்டல்/// இருக்கிறது. அல்லது இவைகளை ஒதுக்கிவிட்டு தரையில் ///ஹராம்/// அமரவும் தரை சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இப்போது சுய சிந்தனை வாய்க்கப்பட்ட இயந்திரன் அது வேலை செய்த களைப்பு, அந்த அறையின் வெப்பம், அதன் தேவை இவைகளை கணக்கிலெடுத்து இருக்கும் நான்கில் ஒன்றை தேர்ந்தெடுத்து அமரும். இப்போது அந்த அறிவியலாளரைக் கேட்டால் எதில் அமரவேண்டும் என்பதை அதுதான் முடிவு செய்யும் ஆனால் அது நான் அமைத்திருக்கும் நிரல்களின் அடிப்படையில் இருக்கும், என்றுதான் கூறமுடியுமே தவிர /////அறிவியலாரை பொறுத்தவரை உண்மைதான். ஆனால் அல்லாஹ்வின் தன்மைகள் அந்த அறிவியலாளரின் தன்மைகள் அல்லவே. அவன், நம் சிந்தனை என்ன சிந்தித்தது, சிந்திக்கிறது, சிந்திக்கும் என்பதனை அறிவான், இந்தப்பொழுதில் இப்படி அமரும், இந்தக்கணத்தில் இங்கு நகரும் என்றெல்லாம் சொல்ல முடியும். காரணம் அவன் அல்லாஹ்…!///

    அப்படிஎன்றால் நான் வாங்கி வந்திருக்கும் ரோபோ முஸ்லிமா அல்லது செங்க்கொடியா? எப்படி அறிவது. குரானையும் ஹதீசையும் பின்பற்றினால் முஸ்லிம். மீறினால் செங்கொடி வகையறா. அப்படிஎன்றால் இரு சாராரும் தீர்மானிக்கப்பட்டு விட்டார்களா? அப்படித்தான் தெரிகிறது. ஒருவேளை முஸ்லிம் செங்கோடியாகவும் செங்கொடி முஸ்லிமாகவும் மாற வாய்ப்பிலையா ? என் இல்லை? இருக்கிறதே! ஒவ்வொரு தீய செயலையும் செய்யும்போது ஒரு உள்ளுணர்வு எச்சரிக்கிறதே அது என்ன? அதனை எட்டி மிதித்து அடித்து காலில் போட்டு மிதித்து புதைத்துவிட்டு மனம் நாடியபடி செயல் படுகிறோமே? அப்படி தொடர்ந்து செயல் படும்போது ஒருநாள் அந்த உள்ளுணர்வு சொல்வதை கேட்போமே? அன்று நம் செய்கை வேறு வழியில் திரும்புமே? அன்று யாராவது நம்மை பார்க்கிறார்களா; என்று சுற்று முற்றும் பார்வியிடாமல் முழுமன அமைதியுடன் காரியத்தை செய்வோமே?

    எவ்வளவோ பேர் உலகில் இருக்க அல்லாஹ் ஏன் முஹம்மது என்ற ஒரு மனிதரை நபியாக தேர்ந்தெடுக்க வேண்டும்? யாராவது சிந்தித்ததுண்டா? தம்மை சுற்றி இருப்பவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, பொய்யே சொல்லாமலும், சிலை வணக்கம் புரியாமலும், மற்ற எந்த வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மது, ஏமாற்றுதல், ஆபாச அநாச்சாரங்களிலும் இல்லாமல் இருந்ததுதானே? அதாவது உங்கள் பாஷையில் சொன்னால் ‘போட்டுவைத்த ப்ரோகிராம் படி செவ்வனே வாழ்ந்ததால்” தானே? இப்படி ஒரு ரோபோ எந்த ஜாஹிலியாவில் இருந்தாலும் அல்லாஹ் நினைத்தால் முஸ்லிம் ரோபோவாக்க முடியும்.

    இதேபோன்ற எனக்குத்தெரிந்த ஒரு ரோபோ பிராமண குடும்பத்தில் இருந்து முஸ்லிம் ரோபோவாக மாறியது. அந்த ரோபோ மாறுவதற்கு முன் “அட என்ன இவன் முஸ்லிம் போல் வாழ்கிறானே!”என்றுஆச்சர்யப்பட்டு இருக்கிறேன். வேலையில் சேர்ந்த புதிதில் ட்ரைனிங் காலத்தில் நாங்களெல்லாம் சினிமா பார்ப்போம். அவன் மாட்டான். மற்ற நண்பர்கள் எல்லாம் சைட் அடிக்கும் பொது அவன் முகம் வேறு பக்கம் திரும்பி இருக்கும். மற்ற மத நண்பர்கள் எல்லாம் -ஸ்டேட் ஃபஸ்ட் வந்தவனெல்லாம்- அலுவலக பார்ட்டியில் தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும் பொது பெப்ஸியுடன் ஒதுங்குவது நானும் அவனும்தான். வாக்கு மாறியது இல்லை. பொய் சொல்வது இல்லை. பிறரை இழிவு செய்யுமாரோ அல்லது மனம் நோகும்படியோ பேசியது இல்லை.கேட்ட வார்த்தை -நெவர். அதிகாரியை சோப்பு போடுவது இல்லை.அவர் பார்க்கும் நேரம் வேலை செய்வது போல் பாவ்லா செய்வது இல்லை. நம்பர் ஒன் அறிவு.

    என் ஆச்சர்யம் பல மடங்கானது அன்று, அந்த கணேசனை ஒரு மஸ்ஜிதில் சந்தித்தபோது- தன்னை இப்ராஹீம் என்றபோது.! அல்ஹம்துலில்லஹ். அல்லாஹ் தான் தேர்ந்தெடுக்கிறான்.

  37. Mr Shaji,

    The events you quoted are fabricated false stories (laeef) , taken from mostly from anti-Islam propaganda machines. Those are not true events.

    Please study deeply art of Hathees and Quran with the help of Muslim Scholars. Allah will enlighten you.

    நாம் இரு தசாப்தங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்கள்.

    விரல்விட்டு என்னும் சில நம்மவர்கள், Ex-Muslims என்ற பெயரில் தொடங்கி, அதற்கான Associations களையும் உருவாக்கி, முஸ்லிமல்லாதவர்களின் பணபலத்தோடு ஆசீர்வதிக்கப்பட்டு, பிறகு கைவிடப்பட்டு, பிறகு தள்ளாடி விழுந்து, மீண்டும் தாய் மார்க்கத்திற்கே திரும்பி விட்டனர், பெரும்பாலான முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன்! Alhamdulillah!

    This happened in Germany.

  38. Goraka,

    இந்த ஹதீஸ்களின் எண்கள் கொடுத்திருக்கிறேன்.
    நீங்களே இந்த எண்களின் ஹதீஸ்களை கொண்டு உங்களது புத்தகத்தில் உள்ள ஹதீஸை எனக்கு சொல்லுங்கள்.
    அதனை அரபி மூலத்திலும் தமிழிலிலும் சொல்லுங்கள்.
    இவை பொய்யான ஹதீஸ்களா இல்லையா என்ற உண்மை தெரிந்துவிடும்.
    (Abu Dawud 2150)
    (Sahih Muslim 3371)

    இந்த எண்கள் உள்ள ஹதீஸ்களை மட்டு்மாவது எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    உங்கள் உதவிக்கு மிக்க நன்றி

  39. இங்கே செங்கொடி கேட்டிருக்கும் கேள்வியை எளிமையாக இப்படி கூறலாம்.

    சாத்தான் சொல்வதனால், ஆதாம் ஏவாள் மரத்திலுள்ள கனியை சாப்பிடுவார்கள் என்று அல்லாவுக்கு தெரியுமா தெரியாதா?

    தெரிந்திருந்தால், அளவற்ற அன்பாளன் அருளாளன் என்று சொல்லப்படும் அல்லா அந்த மரத்தை அங்கிருந்து எடுத்து ஆதாம் ஏவாளை ஏன் காப்பாற்றவில்லை? அப்படி காப்பாற்றாத அல்லாவை எப்படி அளவற்ற அன்பாளன் அளவற்ற அருளாளன் என்று கூறமுடியும்?

    தெரியாது என்றால், முக்காலமும் உணராத அல்லா எப்படி கடவுளாக இருக்க முடியும்?

  40. அக்டோபர் 11,12 ஆகிய தேதிகளில் TNTJ வினர் நாத்திகர்களுடன் நடத்திய விவாதத்தில் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்துக் கொண்டுள்ளனர்.
    குறிப்பாக விவாதம் செய்ய வந்த நாத்திகர்களில் எவருக்கும் இஸ்லாத்தைப் பற்றியோ குரானைப் பற்றியோ சிறிதேனும் அறியாதவர்கள் என்பதனை அவர்களின் விவாதங்களில் இருந்து அறியலாம். இருப்பினும் இறைவன் இருக்கிறானா என்ற தலைப்பிலான‌ விவாத்தில் டாக்டர்.எழிலன் அவர்களால் மிகவும் தெளிவாக பெருவெடிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றி விளக்கப்பட்டது. இது இறைவன் இல்லை என்பதற்குண்டான ஆதாரமான அறிவியல் வாதங்களாகும். ஆனால் இதனுடனான எதிர் விவாதத்தில் ஜெயினுல் ஆபிதீன் அவர்கள், “இதுவரையில் இவர்கள் இறைவன் இருக்கிறானா என்ற தலைப்பிலேயே பேசவில்லை” என்கிறார். இது எப்படியிருக்கு!
    மேலும் டாக்டர்.எழிலன் அவர்கள் விளக்கிய பெருவெடிப்பையே மீண்டும் விளக்கிய TNTJ, அந்த பெருவெடிப்பு எப்படி நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் அதை வெடிக்கச் செய்தவன் இறைவன்தான் என நம்பவேன்டும் என்கின்றனர். சரி அப்படி இறைவன்தான் வெடிக்கச் செய்தான் என்றால் பூமியில் ஏன் இவ்வாறெல்லாம் நடைபெறுகின்றதென கேட்டால் அதை பற்றி இப்பொழுது பேசக்கூடாது பிறகு பேசலாம் என்கின்றனர். ஆனால் பெருவெடிப்பு பற்றி எங்கள் குரானில் கூறப்பட்டுள்ளது என்று எந்த ஒரு வசனத்தையும் ஆதாரமாகக் கூறி விவாதிக்கவில்லை. பரிணாம வளர்ச்சியை பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டதாக கூசாமல் புளுகினார் PJ. ஒரு பொருள் தானாக வராது என்று கூறும் இவர்கள் இறைவன் எப்படி வந்தான் என்பதை மட்டும் கேட்க்கக்கூடாதாம். அதில் பிரயோஜனமில்லை என்று கூறுகிறார் அப்துல் ரகுமான். பிரயோஜனமில்லாத கடவுளை ஏன் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதானே நாங்களும் கேட்கின்றோம்?
    வந்திருந்த நாத்திகர்களுக்கு குரானைப் பற்றி தெரியாததினால் அவர்கள் இந்துமத மூடநம்பிக்கையைப் பற்றியே கூறிக்கொண்டிருக்க‌ இது TNTJ வினருக்கு வசதியாகப் போனது. நாத்திகர்களின் இஸ்லாமிய அறியாமையை பயன்படுத்தி TNTJ வினர் சுலபமாக மல்லுகட்டினாலும் அறிவியல்ரீதியான எதற்கும் இவர்கள் குரானிலிருந்து ஆதாரங்கள் காட்டவில்லை.

  41. Goraka,

    மறுபடியும் கேட்கிறேன்.

    அதனை அரபி மூலத்திலும் தமிழிலிலும் சொல்லுங்கள்.
    இவை பொய்யான ஹதீஸ்களா இல்லையா என்ற உண்மை தெரிந்துவிடும்.
    (Abu Dawud 2150)
    (Sahih Muslim 3371)

    இந்த ஹதீஸ்களை இங்கே பகிர்ந்துகொள்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

  42. ரஜினியையும் காணோம் கஜினியையும் காணோம். எல்லோரும் என்ன ஆனார்கள்!

  43. முரன்பாடுகள்.
    தொற்று நோய் கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது.ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஸபர் மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளிடமிருந்து வெருண்டோடு. அறிப்பவர்: அபூஹூரைரா. ஆதாரம்: புஹாரி. .
    அப்போது கிராமவாசி ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.
    இதற்கு விளக்கமளிக்கும் ஆலீம்கள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்றும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. தொற்றுவதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது என்பதைத் தான் மறுக்கின்றார்கள். முதல் ஒட்டகத்துக்கு நோயைக் கொடுத்தவன் யார் என்று கேள்வி எழுப்பியதன் மூலம் முதன் முதலில் ஒருவருக்கோ சிலருக்கோ இறைவன் நோயை ஏற்படுத்துகிறான். அதன் மூலம் மற்றும் சிலருக்கு பரவச் செய்கிறான் என்று தெளிவுபடுத்துகிறார்கள். என்று கூறுகிறார்கள்.
    இறைவனின் நாட்டமின்றி எதுவும் நடவாது என்பது விதி. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நோய் பரவிச் செல்வது என்பதுதான் தொற்றுநோய். இத்தொற்றுநோயும் இறைவனின் நாட்டப்படியே பரவுகிறது என்றாலும் தொற்றுநோய் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அப்படியிருக்க ஏன் தொற்றுநோய் கிடையாது என்று கூறவேன்டும்? துவக்கத்தில் தொற்றுநோய் கிடையாது என்று கூறிய நபி இறுதியில் தொழுநோயாளிடமிருந்து வெருண்டோடச் சொல்கிறார். இறைவன் நாடினால்தான் ஒருநோய் தொற்றுகிறது என்றால் ஏன் தொழுநோயாளிடமிருந்து விலகச் சொல்கிறார். மேலும் பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறியவர் அடுத்ததாக ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்கிறார். ஆந்தை பறவையினமில்லையா?
    வரும் ஆனா வராது என்ற நகைச்சுவைபோல் உள்ளது இந்த ஹதீஸ்.
    PJ அவர்கள் தனது வலைத்தளத்தில் தொற்றுநோய் கிடையாது என்ற ஆய்வில் மேற்காணும் ஹதீசில் உள்ள பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் கிடையாது.சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளிடமிருந்து வெருண்டோடு. என்ற இரு வாக்கியங்களை குறிப்பிடவில்லை. சிந்திக்கும் மனிதர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

  44. இஸ்லாம் என்பது முகம்மதின் கட்டுக்கதை.

    அல்லாஹ் என்பது இறைவனல்ல. அது முகம்மதின் split personality.

    இஸ்லாம்- அல்லாஹ்- இறைதூதர் என்று நம்புபவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்வது மட்டுமல்ல, அதன் மூலம் வன்முறையையும் கையிலெடுக்கின்றனர்.

    இஸ்லாமிலிருந்து விடுதலை பெறுவதே இன்று மானுடனின் முதல் நோக்கம். அது முஸ்லீம்களுக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கும் பொதுவான நோக்கம்.

  45. //ஒவ்வொரு தீய செயலையும் செய்யும்போது ஒரு உள்ளுணர்வு எச்சரிக்கிறதே அது என்ன? அதனை எட்டி மிதித்து அடித்து காலில் போட்டு மிதித்து புதைத்துவிட்டு மனம் நாடியபடி செயல் படுகிறோமே? அப்படி தொடர்ந்து செயல் படும்போது ஒருநாள் அந்த உள்ளுணர்வு சொல்வதை கேட்போமே? அன்று நம் செய்கை வேறு வழியில் திரும்புமே? அன்று யாராவது நம்மை பார்க்கிறார்களா; என்று சுற்று முற்றும் பார்வியிடாமல் முழுமன அமைதியுடன் காரியத்தை செய்வோமே?//
    ஓ! முகம்மதே. உங்களின் முகம்மது செய்த மனசாட்சிபடியான செயல்களை எனது அடிமை அது அல்லாவின் ஆணை என்ற புத்தகத்தைப் படியுங்கள். எந்த வழியில் நாம் திரும்பவேண்டும் என்பது உங்களுக்கும் புரியும்.

  46. ஐயா ரியாஸ் அவர்களே!
    உங்கள் pjonline-ல் மறுமொழிகளை உடனுக்குடன் வெளியிடும் தைரியத்துடன் நடத்தும் இணையத்தளமா நடத்தச் சொல்லுங்கள். பிறகு link கொடுங்கள். புழுகுகளை அம்பலப்படுத்துவோம்.

  47. ஐயோ சாகித்,

    புளுகுகளை அம்பலப்படுத்த உமக்கு விருப்பமிருக்கிறது.

    தயங்காமல், நேரடி விவாதத்திற்குப் போகலாமே!

    அவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

  48. @செங்கொடி…
    மனிதன் சுயமாக சிந்தித்தே செயலாற்றுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் பைத்தியம் ஒன்றின் சிந்தனைகளும், அவனது உடல் அசைவுகளும் அவனது ஆட்சிக்கு உட்பட்டனவையா? ஆம்! என்றால், அவன் சிந்திக்கின்றானா? இல்லையெனில் அவனின் எண்ண எழுச்சிகளின் தொடக்கம் எவ்வாறு?

  49. விதியை நம்ப வேண்டுமா?

    விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகûளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

    ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

    ”நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்” என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

    நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை.
    நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.

    நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
    எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.

    நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.

    அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.
    அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.

    இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.

    இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே” என்று கூறியுள்ளார்கள்.
    (நூல்: அஹ்மத் 6381)

    இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.
    அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.

    அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

    அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.

    ”எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே” என்று இஸ்லாம் கூறவில்லை.

    மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.

    எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.

    எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.

    அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.

    ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

    விதியை நம்புகின்றவன் ”நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?” எனக் கூறி மறு நாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான்.

    அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம்.

    இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகா விட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

    உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
    (திருக்குர்ஆன் 57:23)

    விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

    நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.
    விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம்.
    ”இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல” என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

    அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.

    ”நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்” என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான்.
    இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

    தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.

    எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

    see ஆன்லைன் பீஜே

  50. //அந்த ஏட்டில் செங்கொடி இந்த கட்டுரை முடிவில் இஸ்லாத்தை ஏற்று கொள்வார் என்று “”எழுதி இருந்தால்”” அதுதான் நடக்கும். அதற்கு அல்லாஹ் சொல்லும் “”அந்த சிந்தனை”” தான் காரணமாக இருக்கலாம்.//

    அந்த ஏட்டில் செங்கொடி இஸ்லாத்தை எதிர்ப்பார் என்று “”எழுதி இருந்தால்”” அதுதான் நடக்கும். அதற்கு அல்லாஹ் சொல்லும் “”அந்த சிந்தனை”” தான் காரணமாக இருக்கலாம்.

    அப்போ செங்கொடி இப்படி பேசுவதற்குக் காரணம் “எழுதி வைக்கப்பட்டதால்தான்”.

    பாவம், அவர் என்னதான் செய்ய முடியும்– அல்லாவே முடிவு பண்ணிட்டாரே!

  51. ஒவ்வுருவருக்கும் சிந்திக்கும் திறனை வழங்கியிருப்பதாக சொல்லும் அல்லா பெண்களும் தாங்களே சிந்தித்து தமகேற்ற உடையை அணிய ஏன் உங்கள் அனுமதிக்க மறுக்கிறது?இந்த உடையை தான் அணிய வேண்டும் என சொல்வது சிந்திக்காதேஇதைமட்டுமே அணி என்று கூறுவதாக அர்த்தமாகிறதல்லவா?ஒரே கேலி கூத்துதான் அனைத்து மதங்களும்..

  52. மனிதர்கள் இறைவனின் நாட்டப்படிதான் செயல்படுகிறார்களா! அல்லது தங்களது சுய விருப்பப்படிதான் செயல்படுகிறார்களா? இஸ்லாம் என்னதான் சொல்கிறது. முன்பே பலகையில் எழுதப்பட்டதுதான் நடக்கும் என கீழ்க்காணும் ஹதீதில் ஆதம் விள்க்குகிறார். அப்பேற்பட்ட ஆதமுக்கே அதுதான் கதின்னா!

    ஹதீஸ்.3409. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    (தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட) ஆதமும் மூஸாவும் தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, ‘உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், ‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிககிறீர்களே!” என்று கேட்டார்கள். ‘இதை கூறிய பின் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை கூறினார்கள்” என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

  53. விதிப்படிதான் நடக்கும் என்றால், ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்ததும், இஸ்ரேல் முஸ்லீம்களை தோற்கடித்ததும் அல்லாவின் ஆணைப்படிதானே நடந்தது? தாலிபானை பதினைந்தே நாட்களில் அமெரிக்கா தோற்கடித்து ஆப்கானிஸ்தானில் வெற்றி கொண்டதும் அல்லாவின் ஆணைப்படிதானே நடந்தது? பிறகேன் அல்லாவின் ஆணையை எதிர்த்து முஸ்லீம்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் திட்டுகிறார்கள்?

  54. இஸ்லாமின் விதி கொள்கை
    ________________________________

    6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

    13:39. (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் – அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.

    54:52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

    78:29. நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.

    83:7. ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

    83:18. நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.

    ________________________________________________________________________

    அதாவது மனிதர்கள் உருவாக்கப் படும் முன்பே இரண்டு பதிவேடுகளில்
    (ந்ல்ல முஸ்லிம்கள, மற்றவர்கள் பெயர்க்ள் குறிக்கப் பட்டு உள்ளது.

    அப்போது இறைவனுக்கு யார் நல்ல முஸ்லிமாக இருந்து சொர்க்கத்திற்கு வருவார்கள் ,நரகத்திற்கு செல்வார்கள் என்று படைபதற்கு முன்பே தெரியும்.

    நல்ல முஸ்லிம்கள் என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் சிலரை நீங்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள் என்று குறிப்பிடுகின்றீர்கள் அல்லவா,அவர்களை தவிர்தத முஸ்லிம்கள்.

    மற்றவர்கள் என்ன செய்தாலும் அவர்களால் நல்ல முஸ்லிம்கள் ஆக முடியாது நரகத்திற்கு மட்டுமே செல்வார்கள்.

    ஒவ்வொருவருடைய வாழ்வு அனைத்தும் முன்பே நிச்சயிக்கப் பட்டு விட்டது.
    இது இஸ்லாமில் விதி என்ற கருத்தாகம் இருப்பதற்கான குரானில் சாட்சியாகும்.

    13:39 ன் படி விதியை அல்ல நாடினால் மாற்றுவார் என்று கூறப்பட்டு உள்ளது.
    அல்லா நாடுவதுதான் விதியாக பதிவேட்டில் குறிப்பிடப் பட்டு உள்ளதா?

    அல்லாவின் விருப்பங்களுகக்கேட்ப பதிவேட்டின் குறிபிடப்பட்டுள்ளவை மாறுமா?

    ஒருவனை படைக்கும் முன்னரே இப்படி ஒரு திருந்த முடியாத வாய்ப்பை ஏற்படுத்திவிட்டு அவனஈ நரகத்தில் போடுவது என்பது மேட்ச் ஃபிக்ஸ்சிங் மாதிரி இல்லையா?.

  55. விதி,தலைவிதி போன்ற சொற்களை அகராதியிலிருந்தே அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கையாலாகாதவன் கையாளவும்,சோம்பேரியின் காலவிரயமும்,சுயசிந்தனையற்றவன் தன் தவறை உணராத உணர்ச்சியற்றவனும் உபயோகப்படுத்த‌ ஓர் உதவாக்கறை உருவாக்கிய சொல் விதி. இன்றைய மனிதன் தலைவிதியை நம்பி வாழவில்லை தடுப்பூசியை நம்பியே வாழ்கிறான். இறைபக்தி முற்றிப்போனவர்களும் தடுப்பூசியை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது என்ன விதியோ? சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதற்குறிய மருந்தை உண்ணாதிருந்தால் அவர்களின் விதி அன்றோடு முடிந்து விடும், மருந்தை தொடர்ந்தால் விதியும் தொடரும். இங்கு விதி என்பது யாருடைய பிடியில் இருக்கிறது? மருந்தா…பக்தியா..?

  56. பூமியைப் படைக்க இரண்டு நாள்கள். ஏழு சொர்க்கங்களைப் படைக்க இரண்டு நாள்கள். அனைவருக்கும் அனைத்து வகை உணவுகளையும் ஏற்பாடு செய்ய நான்கு நாள்கள். ஆக, எட்டு நாள்களில் அல்லா தன் படைப்புப் பணியை முடித்ததாக குர்ஆர் வசனங்கள்(சூரா 41) கூறினாலும் வேறொரு இடத்தில் (சூரா 50) ஆறே நாள்களில் அத்தனையும் முடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கணக்கை நம்புவது என்பது குழப்பத்தில் இருக்கிறது.ஆனாலும் நிறைய பேர் சலாம் சொல்லிக் கொண்டு உள்ளனர். நெற்றி வடு, தழும்பு யாருக்கு அகலமாக, அதிகமாக உள்ளது என்பதில் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்

  57. குர்ஆனை தங்கள் மனம் தேடும் பைத்தியக்காரத்தனத்துக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளக் கூடாது .பீஜேயின் தமிழாக்கம் விளக்க குறிப்பு எண் 179 ஐ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

  58. இரவில் பல்ப் வெளிச்சத்தில் சுற்றி வரும் பூச்சை பிடிக்க வரும் பல்லிக்கு அந்த பல்பின் வெளிச்சத்தை பார்த்தால் என்ன தெரியும்? அது பொருத்த வரைக்கும் ஒரு வெளிச்சம் வரும் போகும். அது போல் நீ மேலே சிந்திக்க முடியாது

  59. nightu balb velichathirku varum palliku atha pathi onnum theriyathu athu poruththa varaikkum oru velicham varum pogum athukku karentu wire nu ethum theriyathu athupola maraivana vatrai ummal yosika mudiyathu maraivana vatrai iraivan mattume arivan kadantha 1400 varusama yaarum kandupidikkatha tha neenga kandupudicheteengala. nilavil thanni irukkaanu theriyuma irunthalum illanalum ummala nera poi nirubikka mudiyama yosichu seyal padunga

  60. டேய் பொட்டை எங்கடா என் பின்னூட்டம், ஆண்மை இருந்தால் அதை முதலில் வெளியிடு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்