இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் மீள் குடியேற்றம் நிறைவடைந்துவிடுமென்றும் அரசு அறிக்கை … இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: அசை படங்கள்
பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை
அண்மையில் உச்ச நீதி(!) மன்றம் உண்மையை வரவழைக்க நார்கோடிக் சோதனைகள் செய்யக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதை விட எளிய ஒரு சோதனைமுறை இருக்கிறது. இந்து வானரப் படைகளிடம் காமிராவை மறைத்து கொண்டு போய்விட்டால் போதும் உண்மைகள் வெளிவந்துவிடும். பங்காரு லட்சுமணன் தொடங்கி குஜராத் தாக்குதல் வரை இதற்கு அனேக எடுத்துக்காட்டுகள் உண்டு. காமிராவை திறந்து தன்னுடைய லீலைகளை காற்றுவாங்க அனுப்பிவைத்த நித்யானந்தாவின் வாசம் அடங்குவதற்கு முன் முத்தாலிக் கலவரம் நடத்த 60 லட்ச … பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை-ஐ படிப்பதைத் தொடரவும்.
உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது
போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான ஒரிசா மக்களின் போராட்டம் எஃகுறுதியுடன் முன்னேறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய அன்னிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத்திட்டத்திற்கு எதிஎராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி பி எஸ் எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிஸ்ஸாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர். தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக் டெல்லியில் கடந்த … உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது-ஐ படிப்பதைத் தொடரவும்.
புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.
இன்று ஜனவரி 26. குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்? 90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை … புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
காக்கையும் கடவுளும்
பகுத்தறிவு, சிந்தனை என்பன போன்ற சிக்கலான செயல்களெல்லாம் மனிதனுக்கு கடவுள் தந்த கொடை. எத்தனை கோடி ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதனைப்போல் விலங்குகளால் சிந்திக்க முடியவில்லையே ஏன்? மனிதனின் இருப்பு சில லட்சம் ஆண்டுகள் தான் ஆனால் டினோசரஸ் போன்றவைகள் 300 கோடி ஆண்டுகள் பூமியில் இருந்தன. ஆனால் அவைகளால் சிந்தனைத்திறன் பெறமுடியவில்லை. என்றெல்லாம் கடவுட்கோட்பாட்டுவாதிகள் கேள்விகள் எழுப்புவதுண்டு. எத்தனை முறை அவற்றிற்கு அறிவியல் ரீதியில் விடையளித்தாலும், மீண்டும் மீண்டும் புறியாததுபோல் அதேகேள்வியை வேறு சொற்களில் கேட்டுக்கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு, … காக்கையும் கடவுளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அணு ஆயுதம் போடப்பட்டால் எப்படி இருக்கும்?
இந்த அசைபடத்தை பாருங்கள் இதில் நீங்கள் பார்ப்பது கொஞ்சம் தான் மீதி உங்கள் சிந்தனைக்கு. பூமியின் மடியில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன இந்த ஆயுதங்கள் மனித இனத்தையே மொத்தமாக அழிக்கும் திறன் பெற்ற இவைகளை உருவாக்கவும் பாதுகாக்கவும் கொட்டப்படும் பணம் மக்கள் பசி தீர்க்க பயன்பட்டால்...... அசை படத்தை பார்க்க இங்கு சொடுக்கவும்